இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்

author
177
0 minutes, 12 seconds Read
This entry is part 38 of 43 in the series 24 ஜூன் 2012

கஜாலா ஜாவேத் அவர்களது கொலை
தாவூத் கட்டக்

 

ஜூன் 18 ஆம் தேதி பிரபலமான பஷ்தோ பாடகி கஜாலா ஜாவேத் சுட்டுக்கொல்லப்பட்டார். அமைதியான சட்டத்தை மதிக்கும் குடிமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அரசாங்கம் சட்டத்தை மதிக்காத தீவிரவாதிகள்,  கடத்தல் கொள்ளையர்கள் முன்னால் கையாலாகாத அரசாங்கமாக இருக்கிறது என்பதைத்தான் இசையையும் கலைகளையும் விரும்பும் மக்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக காட்டுகிறது.

 

கஜாலாவின் வயது 24.
பெஷாவரின் தாப்காரி கார்டன் பகுதியில் உள்ள அழகு நிலையத்திலிருந்து ஒரு கச்சேரிக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கி ஏந்தியவர்கள்  அவரையும் அவரது தந்தையாரையும் சுட்டுகொன்றார்கள்
இந்த தாப்காரி கார்டன் பகுதிதான் கலைஞர்களுக்கும், நடனமாடுபவர்களுக்கும் இசைவாணர்களுக்கும் ஓவியர்களுக்கும் பாதுகாப்பான பகுதியாக அறியப்பட்டு வந்தது.

 

இவை எல்லாமே முத்தாஹிதா மஜ்லிஸ்-ஈ-அமால்(Muttahidda Majlis-e-Amal (MMA)) என்ற ஐந்து இஸ்லாமிய தீவிரவாதகட்சிகள் கூட்டணி கைபர் பக்தூன்க்வா மாநிலத்தில் 2002இல் ஆட்சிக்கு வந்த போது முடிவுக்கு வந்தது.

இந்த மதவாத கட்சி அரசாங்கம் அங்கிருந்த பாடகர்களையும், நர்த்தகிகளையும், இசைவாணர்களையும் அங்கிருந்த நிஷ்டர் ஹால் என்னும் புகழ்பெற்ற அரங்கில் பாடுவதற்கு தடை விதித்தார்கள். பிறகு அந்த தாப்காரி கார்டன் பகுதியிலிருந்த கலைஞர்களை அங்கிருந்து போகவேண்டும் அல்லது இந்த கலைகளை தொடரக்கூடாது என்று ஆணையிட்டார்கள். சரியான முஸ்லிம் ஆக வேண்டும் என்பது அவர்கள் நிபந்தனை.

அதே நேரத்தில்,  முஸ்லீம் தீவிரவாத இளைஞர்கள் அங்கிருந்த கடைகளையும், உடைகளை காட்டுவதற்காக வைத்திருந்த பெண் உருவங்களையும் உடைத்து எரிந்தார்கள். அப்படிப்பட்ட பெண் உருவங்களை வைத்திருக்கும் கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி,  சமூகத்தில் ஆபாசத்தை பரப்புவதாக கடும் எச்சரிக்கை விடுத்தார்கள்.

அது வெறும் ஆரம்பம்தான்.

தாலிபன் காட்டுமிராண்டித் தனம்

 

அங்கே இருந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு 2007-2009இல் தாலிபானால் ஆக்கிரமிக்கப்பட்டு, தாலிபான் காட்டுமிராண்டித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக ஆனது. தீவிரவாதிகள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், வீட்டுக்குள்ளேயே திருமணம் போன்ற சடங்குகளில் பாடல்களை பாடுவதற்கும் தடை விதித்தார்கள்.

ஸ்வாத் பள்ளத்தாக்கில் இருந்த பான்ர் தெருவில் வாழ்ந்து வந்த இசைவாணர்களை, இசை மற்றும் கலைகளை நிறுத்த வேண்டும் இல்லையேல் அங்கிருந்து ஓடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.

 

இந்த காலகட்டத்தில், அங்கிருந்து பல இசைவாணர்கள் கலைஞர்கள் வெளியேறி பெஷாவர், லாகூர், கராச்சி போன்ற பெரிய நகரங்களுக்கு ஓடினார்கள். அப்படி வெளியேறிவர்களில் ஒருவர்தான் கஜாலா ஜாவேத்.
கஜாலா போன்றவர்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி பெஷாவர் போன்ற நகரங்களுக்கு சென்று தப்பித்தது போல, மற்ற கலைஞர்கள் அப்படி அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.
அப்படிப்பட்ட பெண் நர்த்தகிகளில் ஒருவர் ஷபானா.

 

அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு, பான்ர் பஜாரின் நெருக்கமான தெருக்களில் தரதரவென்று இழுத்து வரப்பட்டு க்ரீன் ஸ்குயர் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த க்ரீன் ஸ்குயரை அங்கிருந்தவர்கள் ரத்த ஸ்குயர் என்று அழைத்தார்கள். காரணம் இங்கேதான் போலீஸ்காரர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க ஊழியர்கள், மற்றும் தாலிபான் கருத்துக்களை ஒப்புகொள்ளாதவர்களை தாலிபான் சுட்டுக்கொல்லும் இடமாக இருந்தது.

 

இந்த காலத்தில் பல ஆண் பாடகர்கள் தங்கள் பாதுகாப்புக்காக, தப்லீகி என்ற இஸ்லாமிய பிரச்சார அமைப்பில் சேர்ந்துகொண்டார்கள், பலர் பாடுவதை நிறுத்தினார்கள். பலர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஆரம்பித்தார்கள்
இவர்களில் பிரபலமானவர் பஷ்தோ பாடகர் குல்ஜார் ஆலம். இவர் இப்போது தாடி வளர்த்துகொண்டு பாகிஸ்தானின் மெகாசிட்டியான கராச்சியில் டாக்ஸி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றுகிறார்.

2008இல் பெஷாவர் பிரஸ் கிளப்பில், பாடகர் குல்ரெஸ் டபாஸம் தன் கண்களில் கண்ணீர் பொங்க தான் இனிமேல் பாடப்போவதில்லை என்று அறிவித்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

 

பஷ்தூன் இளைஞர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நாயகர் அலம்ஜெப் முஜாஹித் அவர்களை கடத்திச் சென்று பல நாட்கள் லஷ்கர் ஈ இஸ்லாம் அமைப்பு கைதியாக வைத்திருந்து விடுவித்தபின்னால், தனது தொழிலையே விட்டுவிட்டதும் அனைவருக்கும் தெரியும்.

முஜாஹித் பிறகு பாகிஸ்தானை விட்டு வெளியேறி தற்போது மலேசியாவில் வாழ்கிறார். தனது முன்னாள் தொழிலுக்கு அவர் திரும்பவில்லை.

 

ஆனாலும், 2008 பொது தேர்தலின் போது இந்த இஸ்லாமிய மதவாத கட்சி கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டு, அவாமி தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தது.

 

அன்றிலிருந்து, பல மாறுதல்கள் நடந்துவருகின்றன. பாடகர்களுக்கும் கலைஞர்களுக்கும், பண உதவி அளிப்பதும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஒரு அரசாங்க அமைப்பும், நிஷ்டார் ஹாலை மீண்டும் நாடகங்கள் நடத்த அனுமதித்ததும் இதில் அடங்கும்.

 

இருந்தாலும், கலைஞர்களுக்கும் இசைவாணர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத பயங்கரமான நிலையே தொடர்ந்து நிலவுகிறது.
இன்னும் கஜலா ஜாவேத்தை கொன்றவர் யார் என்று துல்லியமாக தெரியவில்லை.

அவர் பாடுவதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், கஜாலா  விவாகரத்து பெற்றுகொண்ட முன்னாள் கணவரே காரணம்  என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

போலீஸ் சொல்லுவதை அப்படியே ஏற்றுகொண்டாலும், இந்த சூழ்நிலையில் பாடகர்களுக்கு, அதுவும் பெண் பாடகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

 

சில மாதங்களுக்கு முன்புதான் ஐமான் உதாஸ் என்ற பாடகர் இதே போல  பெஷாவரில் அவரது வீட்டு தட்டப் பட்ட போது,  யார் தட்டுவது என்று பார்க்க திறந்தபோது, அவரது சகோதரரே பல முறை துப்பாக்கியால் சுட்டு ஐமான் உதாஸைக் கொலை செய்தார்.

 

உதாஸின் கொலைக்கு பின்னால், அரசாங்க அதிகாரிகள் தொலைக்காட்சிகளில் வந்து எல்லா கலைஞர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், உதாசின் கொலைகாரர்கள் பிடிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.

 

கஜாலா பெஷாவரில் ஓரளவுக்கு பாதுகாப்பாகவே இருப்பதாக நம்பி இருந்தார். முந்தைய அரசாங்கத்தை போலல்லாமல், இந்த அரசாங்கம் சகிப்புத்தன்மை கொண்டதாக இருந்தது என்று நம்பினார்.

 

இருந்தாலும், அவரது கொலை நடந்த இடத்துக்கு 500 மீட்டர் தொலைவிலேயே போலீஸ் தடையிருப்பு இருந்தாலும், கொலைகாரர்கள் எளிதில் தப்பித்து சென்றுவிட்டனர் என்பதை பார்க்கும்போது கஜாலாவின் நம்பிக்கை பயனற்றது என்றே தெரிகிறது.

 

கைபர் பக்தூன்வா அரசாங்கம் இனிமேலாவது கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப கலைஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா? கொலையாளர்களை கண்டுபிடித்து தண்டிக்குமா?

எனக்கு நம்பிக்கை இல்லை. கலைஞர்களுக்கும், நர்த்தகிகளுக்கும், பெண் பாடகர்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமென்றும் தோன்றவில்லை.

— Daud Khattak

http://tribune.com.pk/story/395969/ghazala-javed-a-nightingale-plunged-into-silence/
http://www.rferl.org/content/ghazala-javed-murder-further-erodes-trust-in-government/24619399.html

 

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்துஅவனுடைய காதலி
author

Similar Posts

177 Comments

  1. Avatar
    punai peyaril says:

    இசையை பொறுக்க முடியாதவர்களை உருவாக்கும் தத்துவங்கள் என்ன தத்துவமோ…?

  2. Avatar
    paandiyan says:

    இது இஸ்லாமிய கோட்பாடு இல்லை. ஒரு சில முஸ்லிம்களின் (பழைய வரலாற்றை படித்தால் இசை கலைஞ்சர்களை துவம்சபடுதி அது இஸ்லாமுக்கு எதிரானது என்று சொன்னவை எல்லாம் நாம் வரலாறில் இருந்து அழித்துவிடவேண்டும்..) செயல் என்று ஒரு சப்பை கட்டுகட்டிவிட்டால் இங்கஊள்ள மதசார்பற்ற வியாபாரிகளுக்கு பெரிய உபயோகமாக இறுக்கும்.

  3. Avatar
    Kavya says:

    ‘ஏற்கனவே பிரசுரமாகியிருந்தால் அனுப்ப வேண்டாம்’ என்று திண்ணைத் தன்னைப்பற்றி அறிவிக்கிறது. ஆனால் பல இணையதளஙகள் பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகள் உள்ளோக்கத்துடன் போடப்படுகின்றன. ஆங்கிலக்கட்டுரை, அதைத்தமிழில் பெயர்த்து திண்ணை வாசகர்கள் கவனத்துக்குக்கொண்டுபோகவேண்டுமென்பது நல்லெண்ணம்தான். ஆனால் ஏன் மொழிபெயர்த்தவர் தன் பெயரைக்காட்டிக்கொள்ளவில்லை. காட்டினால், உள்ளோக்கம் அமபலமாகிவிடுமோ என்ற அச்சமாகவிருக்கலாம்.

    மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்கள் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். பொதுவாக பாகிஸ்தான், அல்லது அரேபிய நாடுகளில் விடயங்கள் திண்ணையில் போடப்படுவதன் காரணம் அதை ஒரு சாக்காக வைத்து இசுலாமியரையும் இசுலாத்தையும் போட்டுத்தாக்கலாமென்றுதானோ என நினைக்கவேண்டியதிருக்கிறது. ஏற்கனவே பல கட்டுரைகளில் பின்னூட்டங்கள் அப்படித்தான்.

    விமர்சனம் வேண்டும். ஆனால் விமர்சிப்பவரின் நோக்கமும் முக்கியம். டிவி ப்ரோக்ராமில் விவாதமேடையில் தோன்றுபவர்கள் என்னன்ன நிலையெடுப்பார்கள் எனப்து முன்பே தெரிந்தால் அது ஒரு ந்ல‌ல விவாதமாக இருக்குமா? அதைப்போல திண்ணையில் கட்டுரை போட்டவர் ஆர் என்பதை வைத்து கணிக்கலாம். இந்த்த்வாவினர் தேடிக்கண்டுபிடித்து மொழிபெயர்க்கிறார்கள். டி குரூசின் பேச்சு திண்ணை தொடர்ந்து மூன்று நிர்கிறது. நோக்கமென்ன?

    திண்ணை கிட்டத்தட்ட அவர்களில் பிரச்சார மேடைகளாகி விட்டதெனலாம். இந்துமதம் அவர்களை வைத்து இல்லையென்பது அய்யோ பாவம் அவர்களுக்குத் தெரிவதேயில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அம்மதத்துக்கு இழிவே தவிர பலனில்லை.

    திண்ணை தன்னை ஒரு சாராருக்குத்தான் என்று முன்பே பிரக்டனப்படுத்திக்கொண்டால், தமிழ் ஹிந்து. காம் போல, இங்கே மற்றவர் வரமாட்டார். செய்வார்களா?

    போகட்டும். மொழிபெயர்தவர் இடையே ஏன் ஆங்கில வாசகங்களை அப்படியே போட்டுவிட்டார்? எளிய சொற்கள்தானே அவை?

  4. Avatar
    admin says:

    ஆங்கில வாசகங்கள் சரி செய்யப் பட்டுவிட்டன. சுட்டிக் காட்டிய வாசகர் காவ்யாவிற்கு நன்றி.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////அதே நேரத்தில், முஸ்லீம் தீவிரவாத இளைஞர்கள் அங்கிருந்த கடைகளையும், உடைகளை காட்டுவதற்காக வைத்திருந்த பெண் உருவங்களையும் உடைத்து எரிந்தார்கள். அப்படிப்பட்ட பெண் உருவங்களை வைத்திருக்கும் கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி, சமூகத்தில் ஆபாசத்தை பரப்புவதாக கடும் எச்சரிக்கை விடுத்தார்கள்.

    அது வெறும் ஆரம்பம்தான். தாலிபன் காட்டுமிராண்டித் தனம் /////

    பாகிஸ்தான் நாடு தாலிபான் பாம்புப் புற்றுகள் வளர்க்கும் காலித்தன நாடு. கீழிருக்கும் யூடியூபில் பாடகியின் பாட்டை மெய்யாகக் கேட்கும் ஆடவர் முகங்கள் ரசிப்பு ஏதுவும் தெரிய வில்லை. வெறுப்புதான் தெரிகிறது. கழுக்கண் பார்வை அனைத்தும்.

    அத்துடன் அந்த ஆணாதிக்க அரங்கில் பெண் பாட்டைக் கேட்க ஒரு பெண் கூட அமர அனுமதிக்கப்பட வில்லை.

    21 ஆம் நூற்றாண்டில் படிக்கப் போகும் அப்பாவிப் பெண்கள் முகத்தில் ஆணாதிக்க வெறியர்கள் அமிலத்தை ஊற்றிய இருபெரும் இஸ்லாமிய நாடுகள் ஆஃப்கானிஸ்தானும், பாகிஸ்தானும். கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டிய வேதனைச் செய்திகள் இவை.

    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    Kavya says:

    இனி கட்டுரை பற்றி. கட்டுரையாளர் பாடகியைக்கொன்றது ஆர் எனத் தெரியாதது போல எழுதுகிறார். ஆனால் பத்திரிக்கைகள் தாலிபான்களே என்று சொல்லிவிட்டன.

    போகட்டும். பாடகி என்பவர் ஒரு பொதுவாழ்வில் ஈடுபடுப்வர். கலைஞர்கள் அனைவரும் அப்படியே. தாலிபான், மற்றும் தீவிர முசுலீகள்கள் நிறைந்த பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் பொதுவில் வருவது தடுக்க்ப்படுகிறது. பாகிஸ்தானின் நிலை எப்போதுமே – தீவிர முசுலீம்களும், மேற்கத்திய கலாச்சாரத்தை உள்ளூர விரும்பும் முசுலீகளும் நிறைந்த நாடு. பதவியில்ருப்போர் எப்போதுமே இரட்டைவேடம் போடுபவர்கள். ஒன்று, உள்ளூர் தீவிரவாதிகளைத் திருப்திபடுத்த; இன்னொன்று அன்னிய மேற்கத்திய நாடிகளைத் திருப்திபடுத்த. இஃது எல்லாருக்கும் தெரியும். தாலிபான்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒன்றாக வாழும் நாடு. அங்கு பெண்கள் இப்படித்தான் நடாத்தப்படுவார்.

    இதிலென்ன விசேடம்? 500 ஆண்டுகளுக்கு அப்பால் இந்தியாவில் பெண்கள் எப்படி நடாத்தப்பட்டார்கள்? கொழுநன் தொழுதெழு, பெய்யென்றால் பெய்யும் மழை என்றுதானே சொன்னார்கள்? பாலிய விவாகம்தானே? கல்வி ஆணுக்குத்தானே? இளம் விதவைகள் ஆயுள் முழுக்க விதவைதானே? இன்றும் போலிசு அதிகாரி பொதுக்கூட்டத்திலே நிருபர்களிடம் பெண்தான் தன் பாலியல் பலாத்காரத்துக்குக் காரணம் என்று சொல்கிறார். நீயா நானா நிகழ்ச்சியில் பெண்களை நாங்கள் கிண்டலடிப்பது எங்கள் உரிமையென்றுதானே பேசப்படுகிறது.? பெண்ணை எப்படி நடாத்தவேண்டும் என்று வெள்ளைக்காரன் சொல்லித்தான் நாம் மாறிவ்ருகிறோம்.

    ஆனால் தாலிபான்கள் மாறவில்லை. மாறவும் மாட்டார்கள். இங்கு பாடகி கொல்லப்பட்டது வியப்பே அன்று. நான் ஏற்கனவே சொன்னது போல, உன்னைச்சுற்றியுள்ள உலகம் எதுவோ அதன் விருப்பப்படிதான் வாழவேண்டும். இல்லை என்னால் முடியாதென்றால், எங்கு உங்கள் விருப்ப்படி வாழ முடியுமோ அங்கு சென்றுவிட வேண்டியதுதான்.

    மேலே சொல்லியிருப்பதிலிருந்து ஒன்று தட்டுப்படும். அதாவது, நமக்குள்ளே பல நாற்றங்கள் பெண் ஆண் பொதுவாழ்க்கை மற்றும் தனிவாழ்க்கை. அதனைப்பற்றி எழுத எவரும் வருவதில்லை.

    நீயா நானா நிகழ்ச்சியொன்றில், தாலி கட்ட்வது சரியா?என்பதில் பல எதிர்கருத்துக்களை பெண்கள் பேசியதால், இந்து அமைப்புக்கள் கோபிநாத்துக்கும் விஜய் தொலைகாட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின்னர்தான், அந்த தொலைக்காட்சி, அந்த நிகழ்ச்சிக்குமுன், எங்கள் நோக்கம் எவரையும் புண்படுத்துவதன்று என்று போட ஆரம்பித்தார்கள்.

    ஆக, நமக்குள்ளே பெண் தன் கருத்துக்களை சமூகத்தில் காலங்காலமாக ஆணால் வைக்கப்பட்ட கருத்தையோ செயலையோ எதிர்த்து வைத்தால், அவள் தண்டிக்கப்படுகிறாள்.

    உங்கள் வீடே துர்நாற்றம். அடுத்த வீட்டைப்பற்றிப்பேச உங்களுக்கென்ன யோக்கியதை?

    டி கே பட்டம்மாள் இறந்த பின் அவருக்கு சூட்டப்பட்ட புகழாரங்களில் ஒன்று இது:

    பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடாது. மேடைகளிலேறி பாடக்கூடாதென்ற காலத்தில் பிறந்த இவர் அதனை உடைத்துக்காட்டினார்.

    நாம் கொல்லவில்லை. ஆனால் தடுத்தோம். பெண்களைக்கட்டிச் சிறை வைத்தோம். எவராலும் மறுக்கவியலுமா?
    அவர்கள் கொல்கிறார். நாம் தடுக்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு.!

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “உன்னைச்சுற்றியுள்ள உலகம் எதுவோ அதன் விருப்பப்படிதான் வாழவேண்டும். இல்லை என்னால் முடியாதென்றால், எங்கு உங்கள் விருப்ப்படி வாழ முடியுமோ அங்கு சென்றுவிட வேண்டியதுதான்.”

      தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பூமியிலிருந்து ஒருவரை தன் விருப்பத்துக்கு மாறாய் வெளியேறச்சொல்வது வன்மையான கண்டனத்துக்குரிய அப்பட்டமான தாலிபானிஸ பார்வை.

      1. Avatar
        Kavya says:

        தாலிபானியப்பார்வைத்தான் இங்கே எடுத்துக்காட்டுகிறேன். என் பார்வையன்று. நுங்கள் பார்வையுமன்று. இங்கு என்ன குழப்பம் உங்களுக்கு ?

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “உங்கள் வீடே துர்நாற்றம். அடுத்த வீட்டைப்பற்றிப்பேச உங்களுக்கென்ன யோக்கியதை?”

      என் வீடு துர்நாற்றமாக இருக்கிறது என்பதை உணரும் மூக்கு எனக்கு இருப்பதும், அப்படி துர்நாற்றமாக இருப்பது உடலுக்கும் மனதுக்கும் அண்டை அயலார்க்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடாய் முடியும் என்ற சிந்தை வாய்க்கும் மூளை இருப்பதும், இந்த துர்நாற்றம் ஏற்படும்போதெல்லாம் அதை நீக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பக்குவப்பட்ட புரிதலோடு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளுமே அந்த யோக்கியதையை தருகிறது.

      1. Avatar
        Kavya says:

        அதை நாம் தாலிபான்களிடம் சொல்லமுடியாது. அவர்கள் செய்வதைக்கண்டித்து திண்ணையில் குமுறத்தான் செய்யமுடியும். பாரதியின் சொல்லின்படி, அது, பெட்டைப்புலம்பல், பிறருக்குதவாது. அதாவது தாலிபான்கள் திருந்தப்போவதில்லை. மாறாக நாம் ஏன் நம் குறைகளை உய்த்துணர்ந்து நிவிர்த்திபண்ணக்கூடாதென்பதே என் முன்னால் சொல்லப்பட்ட கருத்து. எ.கா. சங்கராச்சாரியார் (ஜெயேந்திரர்) பெண்கள் வேலைக்குச்செல்லக்கூடாதென்றார். அதை புனைப்பெயரில் என்பவர் ஆதரிக்கிறார். மற்றவர்கள் அமைதி காக்கிறார்கள். இசுலாத்தைத் தாக்குவதற்கு படையெடுத்துவரும் இவர்கள் தம் மதத்துக்குள்ளே நடக்கும் கேடுகளைக்கண்டு அமைதி காக்கிறார்கள்!

        கல்வி இருபாலாருக்கும் பொது. கல்வி என்றால் வேலையும் கூட. நாம் ஏன் இன்னும் பழையபஞ்சாங்கம் பாடுகிறோம்?

  7. Avatar
    suvanappiriyan says:

    //அவர் பாடுவதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், கஜாலா விவாகரத்து பெற்றுகொண்ட முன்னாள் கணவரே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.//

    மற்றொருவனை திருமணம் செய்து கொண்ட விரக்தியில் நடந்த கொலையாகக் கூட இது இருக்கலாம். பொதுவாக இவ்வாறு சட்டத்தை கையில் எடுப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. எவருக்கும் தண்டனை கொடுப்பது அரசாங்கமே. தனி மனிதர்களுக்கு எக்காலத்திலும் அனுமதி கிடையாது.

    அடுத்து இசையைப் பொறுத்த வரை குர்ஆனில் நேரிடையான தடைகள் எதுவும் இல்லை. முகமது நபியின் ஒரு நபிமொழி இசையை தடுக்கிறது: வேறொரு நபி மொழி அனுமதிக்கிறது. எனவே அறிஞர்கள் மத்தியிலும் இசையைப் பற்றி குழப்பமான ஒரு நிலையே உள்ளது. இசையையிலேயே மெய்மறந்து அடிமையாக மாறுவதைத்தான் முகமது நபி தடுத்துள்ளார் என்று அறிய முடிகிறது. ஆபாச மில்லாது மனதை அமைதி கொள்ளச் செய்யும் இசைகளை கேட்பதில் தவறிருக்காது என்பது எனது நிலை. இறைவனே அறிந்தவன்.

  8. Avatar
    தங்கமணி says:

    //இறைவனே அறிந்தவன்.// அப்படியென்றால் என்ன?

    1. Avatar
      Kavya says:

      நீங்கள் அறியவில்லை. உங்களுக்கு அறியவியலாதவற்றை இறைவனே அறிவான். நீங்கள் இறைவனுக்கு நிகரானவர் இல்லை என்றெல்லாம் பொருள்.

      1. Avatar
        தங்கமணி says:

        அன்புள்ள காவ்யா,
        சுவனப்பிரியனிடம் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் கூறுவதும், உங்களிடம் கேட்கும் கேள்விக்கு சுவனப்பிரியன் பதில் தருவதும் வினோதமாக இருக்கிறது.

        உங்களுக்கு இஸ்லாமை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டு, “இறைவனே அறிந்தவன்” என்று ஒரு இஸ்லாமியர் சொல்வதற்கு என்ன பொருள் ஒரு இஸ்லாமியரிடம் கேட்டதற்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுகிறீர்கள்?

        அமைதி. அமைதி.

        1. Avatar
          Kavya says:

          மணி!

          இசுலாமைப்பற்றி ஒரு அன்னிய இன்டலக்சுவலுக்கு என்ன தெரிய வேண்டுமோ, அல்லது இசுலாமியரிடம் நல்லிணக்கமாயிருக்க‌ எதுவரை தெரியவேண்டுமோ, அது வரை எனக்குத் தெரியும். இசுலாமின் அடிப்படைக்கொள்கைகள் (5) எனக்குத்தெரியும். அவை 5 தூண்கள் என்று அன்னிய இன்டல்க்சுவல்களால் அழைக்கப்படுகின்றன.

          பிறமதங்களைப்பற்றித் தெரிந்து கொள்வது அம்மக்களோடு சமூகஒற்றுமைக்கு வழிவகுக்கும். நமக்கொவ்வாக்கொள்கையாயிருப்பினும், அவர்கள் வழி அவர்களுக்கு என்று விட்டுவிட்டு நம்வழி போகும் நல்வாழ்க்கை நமக்குக்கிட்டும்.

  9. Avatar
    தங்கமணி says:

    //தாலிபான்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒன்றாக வாழும் நாடு. அங்கு பெண்கள் இப்படித்தான் நடாத்தப்படுவார்.
    //
    காவ்யா, இதனை நகைச்சுவையாகவோ, sarcastic ஆகவோ சொன்னீர்களா? அல்லது சீரியஸாக சொன்னீர்களா?

    1. Avatar
      Kavya says:

      உண்மை. அதாவது உண்மையாக நிகழ்வதை எடுத்துச்சொல்வது.

      காகம் கரையும். குயில் கூவும் என்பவை உண்மைகள். கண்ணால் பார்த்து காதால் கேட்டுச்சொல்லப்படுபவை. இங்கு எங்கே நகைச்சுவை, அங்கதம் எல்லாம் வந்தன? தாலிபானகள் பெண்களை பள்ளி செல்லவிடுவதில்லை; பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிடுவதில்லை. ஆணுக்குச் சமம் என்ற் பேச்சே அங்கில்லையென்பதெல்லாம் நாம் பத்திரிக்கைகளிலும் உலக ஊடகங்களிலும் படிப்பது; கேட்பது. இங்கு எங்கே வந்தது நகைச்சுவை மணி?.

  10. Avatar
    முனாவர் says:

    “தாலிபான், மற்றும் தீவிர முசுலீகள்கள் நிறைந்த பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் பொதுவில் வருவது தடுக்க்ப்படுகிறது.”
    என்று காவ்யா குற்றச்சாட்டு போல கூறுகிறார். இதில் என்ன தவறு? அல்குரான் கூறுகிறது
    ”33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; ”
    ஆகவே பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணானது. இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மனிதர்களுமே அல்லாஹ்வின் கட்டளையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆகவே, எந்த பெண்ணாக இருந்தாலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது சரியா என்று சிந்தியுங்கள்.

    நன்றி

    1. Avatar
      punai peyaril says:

      ஆகவே, எந்த பெண்ணாக இருந்தாலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது சரியா என்று சிந்தியுங்கள். –> பெண்கள், ஓட்கா, அபின், சிகரெட் போன்ற போதை பொருள்கள் அல்ல… பெண்கள் தான் வேரின் அடிமூலம், அன்னையெனும் நிலை கொண்டதால் வெளிவந்தவர்கள் அந்த கருவறையையே சிதைப்பது மன்நோயின் உச்சம். பெனாசீர், கோல்டாமேயர், ஹிலாரி,என்று ஆரம்பித்து ஆஸி வரை ஆழும் பெண்கள் என்றாவது துப்பாக்கி ஏந்தி உலகை நாசம் செய்ய தூண்டியதில்லை…

      1. Avatar
        Kavya says:

        நீங்கள் வாழவேண்டிய நாடு ஆஃப்கானிஸ்தான். உங்கள் தோழர்கள் தாலிபான்கள். வழி தவறி வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மனிதர்களுமே அல்லாஹ்வின் கட்டளையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆகவே, எந்த பெண்ணாக இருந்தாலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது சரியா என்று சிந்தியுங்கள்”

      அல்லாவின் கட்டளை அல்லா மேல் நம்பிக்கை இல்லாத, அல்லாவை வணங்காத மாற்று மத பெண்களை கட்டுப்படுத்துமா ? குறிப்பாக இஸ்லாமிய அரசாட்சி நடக்கும் தேசங்களில் உள்ள இஸ்லாமியரல்லாத மாற்று மத பெண்களை ?

  11. Avatar
    suvanappiriyan says:

    திரு முனாவர்!

    //”33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; ”
    ஆகவே பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணானது. இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மனிதர்களுமே அல்லாஹ்வின் கட்டளையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆகவே, எந்த பெண்ணாக இருந்தாலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது சரியா என்று சிந்தியுங்கள்.//

    அதற்கு முன்னால் உள்ள வசனத்தை விட்டு விட்டு பாதியை மட்டும் குறிப்பிடுகிறீர்களே! அந்த வசனம் முகமது நபியின் மனைவியர்களைப் பார்த்து சொல்லப்பட்ட வசனத்தை ஏன் பொதுவில் வைக்கிறீர்கள்? பெண்கள் படிப்பதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ இஸ்லாம் தடை சொல்லவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடங்கள் என்றும் சொல்லவில்லை. பல போர்க்களங்களில் பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். முகமது நபி காலத்திலேயே பள்ளியில் தொழுதிருக்கிறார்கள். கல்வியை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். ‘ஒட்டகப் போர்’ கேள்விப்பட்டிருப்பீர்களே! முகமது நபியின் மனைவி அன்னை ஆயிஷா தலைமையேற்று நடத்திய போரல்லவா அது. ஒரு போருக்கே பெண்கள் தலைமை தாங்கியிருக்கும் போது பெண்களை வீட்டில் அடைந்து கிடக்க எப்படி சொல்கிறீர்கள்?

  12. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //இறைவனே அறிந்தவன்.// அப்படியென்றால் என்ன?//

    இஸ்லாத்தில் ஒரு சந்தேகமான விஷயத்தில் நான் ஒரு முடிவை எடுப்பதாக கொள்வோம். நான் சிந்தித்து எடுத்த முடிவு தவறாகவும் இருக்கலாம். சரியாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை என்ன என்பதை உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அறிவான். எனவே தான் இசை என்று வரும்பொது ஒரு நபிமொழி ஆதரிக்கிறது: மற்றொரு நபிமொழி தடுக்கிறது. இதில் நம் சிந்தையை மயக்காமல் அதற்கு அடிமையாக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கும் ஒருவன் இசையை ஆபாசமில்லாமல் அளவோடு ரசிக்கலாம். அதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒருகால் என் முடிவு தவறாகவும் இருக்கலாம். உண்மையை இறைவனே அறிந்தவன் என்பதற்காகவே அவ்வாறு சொன்னேன்.

  13. Avatar
    suvanappiriyan says:

    திரு பொன் முத்துக் குமார்!

    //தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பூமியிலிருந்து ஒருவரை தன் விருப்பத்துக்கு மாறாய் வெளியேறச்சொல்வது வன்மையான கண்டனத்துக்குரிய அப்பட்டமான தாலிபானிஸ பார்வை.//

    நான் ஒரு இஸ்லாமியன் என்று சொன்னால் குர்ஆனை விளங்கியிருக்க வேண்டும். முகமது நபியின் கட்டளைகளை முடிந்த வரை எனது வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டும். இதை எல்லாம் நான் விரும்பாவிட்டால் எனக்கு குர்ஆன் மீது அது இறை வாக்குதான் என்பதில் நம்பிக்கை இல்லா விட்டால் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதுதான் முறை. அதாவது பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை. கொள்கையை மாற்றி கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடலாம்.

    ஆனால் பாகிஸ்தானில் நடப்பதோ அது போன்ற ஒரு நிகழ்வு அல்ல. முதலில் இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதா என்பதே விவாதத்திற்குரிய விஷயம். அடுத்து அப்படியே அது தடுக்கப்பட்டிருந்தாலும் அதை ஒரு இஸ்லாமிய அரசாங்கம்தான் சட்டப்படி தடை செய்ய முடியும்.

    தாலிபான்களைப் போன்ற ஒரு சில குழுக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு கண்டபடி ஆட்களை தீர்த்துக் கட்டுவது வன்மையான கண்டனத்தக்குரியது. இஸ்லாமும் இதைச் சொல்லவில்லை. அரபு மதரஸாக்களில் சில பொய்யான நபி மொழிகளை உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது. இதற்கு சில இளைஞர்களும் பலியாகிவிடுகின்றனர். முதலில் குர்ஆன் ஆதாரபூர்வமான நபி மொழிகளைத் தவிர மற்றவர்கள் எழுதியதை பாடமாக வைக்க அரசு தடை போட வேண்டும். இந்தியாவிலும் மத்ரஸாக்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்தக்கள் பாடமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. தற்பொது தமிழகத்தில் அதுபோன்ற பாடங்களை எல்லாம் நீக்கச் சொல்லி போராடி வருகிறோம். சில மதரஸாக்களில் தவறை உணர்ந்து நீக்கியும் இருக்கிறார்கள். எனவே தவறு முல்லாக்களிடம்தானே யொழிய குர்ஆனில் இல்லை. தவறு தாலிபான்களிடம்தானே யொழிய முகமது நபியிடம் இல்லை.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      சுவனப்பிரியன்,

      நீங்களும் ‘காவ்யா’-வும் ஒன்றா என்று தெரியவில்லை. ஆனால் ‘பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை’ என்று எதிர்வினை அளித்ததன் மூலம் ஒன்றுதான் என்று புரிகிறது.

      “உன்னைச்சுற்றியுள்ள உலகம் எதுவோ அதன் விருப்பப்படிதான் வாழவேண்டும். இல்லை என்னால் முடியாதென்றால், எங்கு உங்கள் விருப்ப்படி வாழ முடியுமோ அங்கு சென்றுவிட வேண்டியதுதான்” என்று நீங்கள் குறிப்பிட்டது இடத்தைத்தான் மதத்தை அல்ல என்றுதான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும், இஸ்லாத்தை விட்டு பெண்கள் சுதந்தரமாக முடிவெடுத்து வெளியேற அனுமதி உண்டா ?

      1. Avatar
        Kavya says:

        சுவனப்பிரியனுக்கு என்னிடமிருக்கும் ஆழ்வார்களைப்பற்றியப்படிப்பு கிடையாது. அவர் இந்துமத்ததை தன் வாதத்திற்ககாகத்தான் அறிந்திருக்கிறார். அவர் இந்துவன்று. அவரொரு இசுலாமியர்.

        நானோ ஆழ்வார்கள் வழிவந்த இந்துமதத்தவன். அது எப்படிப்பட்டது எனச்சான்றோனுக்கு எழதிய பதிலில் இருக்கிறது. படிக்கவும். எனக்கு இசுலாத்தின் அடிப்படைக் கொள்கைகள் மட்டுமே தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்குமே அப்படித்தான்.

        ஆள் மாறாட்ட தீமை சினிமாவில் அரைப்பதையே விட்டு பல்லாண்டுகளாக, இங்கே நீங்கள் அரைத்துக்கொண்டிருக்கிறீர்கள். பல வேலைகளுக்கிடையில் நகைச்சுவையும் எனக்கு வேண்டுமென நினைத்துவீட்டீர்களோ? அப்படியானால் நன்றி.

        ஜூலையில் சந்திப்போம்.

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          காவ்யா,

          தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. நான் எதையும் அரைக்கவில்லை கரைக்கவுமில்லை அன்பரே, எனக்கு அது தேவையுமில்லை. கொஞ்சம் சரியாக படியுங்கள் : ‘பிடிக்கவில்லை என்றால் வெளியேறிவிடவேண்டும்’ என்று சொன்னது நீங்கள். அதை விமர்சித்து நான் பின்னூட்டமிட்டது உங்களுக்கு. ஆனால் ‘பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை’ என்று சுவனப்பிரியன் சொல்கிறார். அதாவது ‘பிடிக்கவில்லை என்றால் வெளியேறிவிடவேண்டும்’ என்று நீங்கள் சொன்னதை அப்படி தான் சொல்லவில்லை என்று அவராகவே சொல்லிக்கொள்கிறார். இதை படிக்கும் ஒருவனுக்கு என்ன தோன்றும் என்று நீங்களே விளக்கவும்.

          இருப்பினும், அவரை விளித்து “நீங்களும் ‘காவ்யா’-வும் ஒன்றா என்று தெரியவில்லை” என்று சொல்லியே பின்னூட்டமிட்டிருக்கிறேன். எனவே அதற்கு அவர்தான் விளக்கமளிக்கவேண்டும். உங்கள் தரப்பெனில் ‘நான் சுவனப்பிரியனல்ல’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு தேவையற்ற கடைசீ பாரா உங்களது பின்னூட்டத்தில் ?

  14. Avatar
    punai peyaril says:

    நான் ஒரு இஸ்லாமியன் என்று சொன்னால் குர்ஆனை விளங்கியிருக்க வேண்டும்–> அப்படியா…? திருக்குறளை படித்ததுண்டா… எந்தவிதமான தீவிரவாதமுமின்றி வாழ்வுமுறை தத்துவம் சொல்லும் நூல். நீங்கள் ஏன் திருக்குறளை பின்பற்றவில்லை…? படிக்கலையா..? இல்லை பிடிக்கலையா…?

      1. Avatar
        chelvam says:

        அப்படியா?,இருக்கலாம்,ஏன் மற்றநூல்கள் எல்லாம் குறைபாடியில்லா முழுமையான நூல்களா?,பலர் இறைவே(வா)தம் என்று சொல்ல,சிலர் மறுத்து சொல்கிறார்களே? விளக்கவும்.

        1. Avatar
          chelvam says:

          தோழா,கருத்தை எடிட் செய்தது சரியா?, உண்மையான விவாதமே மேண்மைக்கு வழி…. நன்றி…

  15. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    //இசையை பொறுக்க முடியாதவர்களை உருவாக்கும் தத்துவங்கள் என்ன தத்துவமோ…?//

    அன்புச் சகோதரர் புனைபெயரில்,

    ஒரு சமூகத்தினர் மீது கொண்டுள்ள அதிருப்தியோ, வெறுப்புணர்வோ உங்களை நடுநிலைமையில் இருந்து வழுவச்செய்துவிட வேண்டாம் என்று தயவாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

    எல்லாச் சமூகக் குழுமங்களிலும் காட்டுமிராண்டித்தனமுள்ள குழுக்கள் இருக்கவே செய்கின்றன. அதற்கு அவர்கள் சார்ந்துள்ளதாய் அடையாளம் காணப்படும் சமூகத்தின் தத்துவமோ, மத அடையாளமோதான் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

    நல்ல உதாரணம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள். அங்கே நடந்த அராஜகங்களுக்கு, அத்தரப்பினர் சார்ந்திருப்பதாய் அடையாளப்படுத்தப்படும் பௌத்த தத்துவமோ, புத்தபெருமானோ தான் பொறுப்பு என்றோ, அத்தகைய மனிதத்தனம் மறந்தவர்களைத்தான் அவரும் அவருடைய தத்துவமும் உருவாக்கின என்றோ யாரும் சொல்லிவிட முடியாதல்லவா?

    அவ்வாறே, குஜராத்தில் நடந்த அராஜகங்கள் தொடர்பில் இந்துமதத் தத்துவம்தான் நடந்த படுகொலைகளுக்குப் பொறுப்பு என்று இசுலாமியர்கள் சொல்லிவிடவில்லை.

    பொஸ்னியாவில் சேர்பியர்கள் செய்தவற்றுக்கும், பலஸ்தீனில் யூதர்கள் செய்து வருபவற்றுக்கும் அவரவர் சார்ந்த தத்துவங்களைப் பொறுப்பேற்க யாரும் கோரிவிட முடியாது.

    ஆக, பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவந்த சமூகத்தில் பெண்ணுக்கு உரிமை அளித்த ஒரு தத்துவத்தை, யாரோ ஒரு தீவிரப்போக்குடைய குழுவின் மடத்தனத்துக்குப் பொறுப்பாக்கிவிட வேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    எங்கள் இலங்கையில், இசுலாமியப் பெண்ணான நானும் இசையோடு பாடல்கள் பாடியுள்ளேன். அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளன. இங்கே என்னை யாரும் குற்றம் சுமத்தவோ, கொன்றுவிடவோ இல்லை என்பதை, திண்ணையின் தீவிர வாசகியான நான் இங்கே பதிவுசெய்ய விழைகின்றேன்.

    சகோதரர் புனைபெயரில் அவர்களின் கருத்து, என்னைப் புண்படச் செய்ததாலேயே இந்த நீண்ட பின்னூட்டத்தை இடுகின்றேன். நன்றி.

  16. Avatar
    சான்றோன் says:

    காது குடைவது எப்படி? என்று கட்டுரை வந்தாலும் காவ்யா அதற்கு கருத்து பதிவு செய்யும்போது ஹிந்து மதத்தை இழுத்து அவதூறு செய்தால்தான் தூக்கம் வரும் போலும்….. தின்னை எப்படிப்பட்ட கட்டுரைகளை பிரசுரம் செய்ய வேண்டும் என்ற காவ்யாவின் கருத்தை பரிசீலிக்கும் முன் ஹிந்து மதத்தை இழிவு செய்து மகிழும் [ மாற்று மதத்தை சேர்ந்த] இந்த பேர்வழியின் கருத்துக்களை அனுமதிப்பது பற்றி ஆசிரியர் குழு பரிசீலிக்க வேண்டும்…….

    1. Avatar
      Kavya says:

      இந்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ள விழைவோர் அம்மதத்தைப்பற்றி அடிப்படை ஞானம் வளர்த்துக்கொள்வது நல்லது. இல்லயென்றால், பொல்லாப்பழிக்காளாவோர். என்ன அஞ்ஞானம்?

      இம்மதம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதன் நீண்ட பயணத்தில் பல பரிமாணங்களை இழந்தும் பெற்றும், பெற்றும் இழந்தும் ஆகிக்கொண்டே வருவது. அவற்றைச் செய்வோர் பற்பல ஞானிகள். அவர்கள் வழி செல்வர்; செல்லார் என்றெல்லாம் உண்டு. எவருக்கு எவ்வழி சரியெனத்தோன்றுகிறதோ அவ்வழியைப்பின்பற்றி வாழ்வார். இதுதான் காலங்காலமாக நடப்பது. ஒரு வழியைப்பின்பற்றுவோர், இன்னொன்றைப்பின்பற்றுவோரை இகழ்வதோ, அழிப்பதோ இல்லை. அவ்வப்போது சில தீவிரவாதக்கொலைகளும் கொடுமைகளும் நிகழ்ந்தாலும். (எகா கூரேசரின் கண்கள் பிடுங்கப்பட்டது).

      இப்படியிருக்க தற்போது திண்ணையில் ஒரு குழு கிளம்பியிருக்கிறது. தாங்கள் நினைப்பதே இந்துமதம் என்றும்; அதை ஏற்காதோர் வெள்ளைக்காரனிடம் கையூட்டு பெற்று தம் மதத்தை இழிவுபடுத்துவதாகவும், அன்னாரை கடுமையாக ஏசியும் அன்னாரின் சொற்களை எப்பாடுபட்டாவது நிறுத்தத் துடிப்பதும் காண்கிறோம். இவையெல்லாம் தாலிபாலித்தனங்களாகும். இந்துமதத்தில் இதற்கெல்லாம் இடமில்லையென்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

      சான்றோன் சொன்னதைச்சரியென்று எடுத்தால், நான் அவர் மதமில்லை. அவர் சொல்லை வைத்தே அவருக்குப்ப்பதில் சொல்லலாம். இந்துமதத்தை இழிவுபடுத்தும் உன்னோக்கத்துடன் வெள்ளையனிடமும் கிருத்துவ மிசுநோர்களிடம் கையூட்டுப்பெற்றுக்கொண்டு இச்செயல் இவரால் நடாத்தப்படுகின்றது என்று சொல்லலாமே நான்? சொல்ல மாட்டேன். ஏன்? அவரவர் இந்துமதம் அவரவருக்கு. சான்றோனுக்கும் தங்கமணிக்கும் பாண்டியனுக்கும் ஒரு இந்து மதம். எங்களுக்கு எங்கள் இந்துமதம். நாங்கள் ஆழ்வார் தொண்டர்கள். நம்மாழ்வார் முதற்பத்திலேயே பிறமதத்தவர் அவரவர் தெய்வத்தை வழிபட்டாலும் அவர்களுக்கு நன்மையுண்டாகும் என நல்லிணக்கம் காட்டினார். திருவாய்மொழியில் முதற்பாடலைப்பாருங்கள்”:

      உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
      மயர்வற மதிநலம் அருளியவன் எவனவன்
      அமரருள் அதி;பதி எவனவன்
      துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே!”

      என்று அரக்கபரக்க சொல்லிவிட்டார் சான்றோன். இப்பாடலை எம்மதத்தினரின் கடவுளுக்குப்போடலாம். ஏன் முதற்ப்பாடல் இப்படியென்றால், ஆழ்வார் சொல்கிறார்: இதைப்படித்து ஏற்காதோர் திருவாய்மொழியில் உள்ளுழையாதீர் என்றுதான் பொருள்.

      எனவே பிறமத‌த்தின்மேல் எங்களுக்கு காண்டு இல்லை.

      1. Avatar
        punai peyaril says:

        இந்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ள விழைவோர் அம்மதத்தைப்பற்றி அடிப்படை ஞானம் வளர்த்துக்கொள்வது நல்லது.–> அடிப்படையாக இந்துமதத்தில் எனக்கு கிடைத்த ஞானத்தில், “பிற நம்பிக்கையாளர்களை குண்டு வைத்து கொல் என்றோ, பிற மதத்தினரை வன்புணர்ச்சி செய் என்றோ… அதிகமாக பிள்ளை பெற்று நாம் அதிமாகலாம்..” என்றோ சொல்லாத ஒரு அற்புத ஞான நிலை கிடைத்தது…

  17. Avatar
    சான்றோன் says:

    காவ்யாவுக்கு படியளந்து , ஹிந்து மதத்தை தூற்றச்சொல்லும் வெள்ளையர்கள் , சென்ற நூற்றாண்டு வரை வயதான பெண்மணிகளை சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டி ,உயிரோடு எரித்து கொன்றதை மறந்ததன் மர்மம் என்ன?

    1. Avatar
      Kavya says:

      ஆனால் அவன் திருந்தி விட்டான். நீங்கள இன்னும் விதவைகளுக்கு மொட்டையடித்து வெள்ளைச்சீலையுடுத்தி பொட்டு வைக்கக்கூடாது; பூ வைக்கக்கூடாதென்றல்லாம் கட்டிப்போடுகிறீர்கள். நீங்கள் திருந்துவது எப்போது?

        1. Avatar
          Kavya says:

          நீங்கள் என்றால் அப்படிச்செய்பவர்கள் என்று பொருள். இன்னும் இந்து விதவைகள் வெள்ளைச்சீலையில் பொட்டு பூவைக்காமல்தானே இருக்கிறார்கள்? அப்படி வைத்தால் விமர்சிக்கப்படுகிறார்களே? பிருந்தாவன் விதவைகளைப்பற்றி குறும்படம் உலகையே கலக்கிவிட்டதே!

          பெண்ணடிமைத்தனம் இந்துமதத்திலும் இன்று வரை இருக்கிறது. மாதவிலக்கான பெண்கள் பூஜையறைக்குள் நுழையமாட்டார்கள் ஏன்? மதம் தடுக்கிறது.

          விதவைகளுக்கும் மாதவிலக்கானவர்களுக்கும் இந்துமதம் பலகட்டுப்பாடுகளை விதிக்கிறது இல்லையா?

          வெள்ளைக்காரன் மாதவிலக்கான பெண்களைத் தீண்டத்தகாதவர்களைப்போல நடாத்துவதில்லை. அவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.

  18. Avatar
    க்ருஷணகுமார் says:

    \நான் ஒரு இஸ்லாமியன் என்று சொன்னால் குர்ஆனை விளங்கியிருக்க வேண்டும். முகமது நபியின் கட்டளைகளை முடிந்த வரை எனது வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டும். இதை எல்லாம் நான் விரும்பாவிட்டால் எனக்கு குர்ஆன் மீது அது இறை வாக்குதான் என்பதில் நம்பிக்கை இல்லா விட்டால் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்.\

    ஜெனாப் சுவனப்ரியன், தங்களது மேற்கண்ட கூற்று ஒரு தனிமனிதனின் சுய புரிதலின் பாற்பட்டதாக உள்ளது. அது வரை சரியே. ஆனால் பாக்கி ஸ்தானிலும் துரத்ருஷ்டவசமாய் ஹிந்துஸ்தானத்திலும் குரான்-ஏ-ஷெரீஃப் படி ஒருவர் நடக்கிறாரா இல்லையா என்பதை அவரவரின் தாலீம் படி இல்லாது தப்லீக்குகள் முடிவு செய்யும் நிலையே உள்ளது. கிட்டத்தட்ட தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை. வாயைத் திறந்து பாடக்கூடாது என்று ஒரு பாடகனை ஒரு சர்க்கார் ஷரியத் படி தடுக்க இயலும் என்ற நிலை மோசமானது இழிவானது.

    இது போன்ற நிலைப்பாடுகள் தான் பாமியான் புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்க்கும் இழிநிலைக்கு காந்தார முஸல்மான்களைத் தள்ளியது.

    காய்தேஆஜமின் மதவெறி வேண்டுமானால் ஹிந்துஸ்தானத்தை கூறு பிளந்திருக்கலாம். கலாசாரத்தின் அடிப்படையில் ஹிந்துஸ்தானம் ஒன்றே. ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீத் என்று பெயர் வேண்டுமானால் மேற்கு பஞ்சாப் மற்றும் சிந்த் மற்றும் பஷ்டூன் பகுதியினர் சொல்லாது இருக்கலாம். அப்ராந்தியங்களில் இருக்கும் கயால் காயகியின் மூலம் ஒரே வேரை உடையது. படியாலா கரானா மற்றும் ஷாம் சௌராசியா கரானா இப்பகுதிகளில் ப்ரசித்தம். இதன் வேர் மியா தான்ஸேன் மற்றும் பைஜு பாவ்ராவின் குருவான ஸ்வாமி ஹரிதாஸிடம் செல்லுகிறது.

    நேற்று தான் உஸ்தாத் ஷஃப்கத் அலிகான் சாஹேபின் பஹாடி துன் (ஷாம் சௌராஸி கரானா) டி டி பாரதியில் கருப்பு வெள்ளையில் ஒலி பரப்பப்பட்டது. இவர் உஸ்தாத் சலாமத் அலியின் புதல்வர்.

    ஜெய்பூர் அத்ரௌலி கரானாவில் உஸ்தாத் அல்லாதியாகான் சாஹேப் என்ற பெருமகனார் இருந்தார். இவர் தன் வாழ்நாள் முழுதும் பூணூல் அணிந்திருந்தார். தன் வாழ்நாளில் ஒரு பொழுதும் நிமாஸ் ஓதுவதில் தவறியதில்லை. இவர் பரமசிவன் (மஹாதேவ்) பேரிலும் அல்லாஹ்வின் பேரிலும் பல பந்திஷ் (பாடல்கள்) இயற்றியுள்ளார். இன்றைய திகதியில் இப்பெருமகனார் மதவெறி தேவ்பந்தி வஹாபியினர் தண்டல் செய்யும் பாக்கி ஸ்தானிலோ காந்தாரத்திலோ இருந்தால் இவரது காலத்தை வெல்லும் பந்திஷ்கள் உலகிற்கு கிடைக்காமல் இருந்திருக்கும்.

  19. Avatar
    suvanappiriyan says:

    திரு க்ருஷ்ணகுமார்!

    //ஜெனாப் சுவனப்ரியன்,

    தங்களது மேற்கண்ட கூற்று ஒரு தனிமனிதனின் சுய புரிதலின் பாற்பட்டதாக உள்ளது. அது வரை சரியே. ஆனால் பாக்கி ஸ்தானிலும் துரத்ருஷ்டவசமாய் ஹிந்துஸ்தானத்திலும் குரான்-ஏ-ஷெரீஃப் படி ஒருவர் நடக்கிறாரா இல்லையா என்பதை அவரவரின் தாலீம் படி இல்லாது தப்லீக்குகள் முடிவு செய்யும் நிலையே உள்ளது. கிட்டத்தட்ட தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை. வாயைத் திறந்து பாடக்கூடாது என்று ஒரு பாடகனை ஒரு சர்க்கார் ஷரியத் படி தடுக்க இயலும் என்ற நிலை மோசமானது இழிவானது.//

    இந்தியாவில் அப்படி ஒரு நிலை எங்குமே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பல இஸ்லாமிய கீதங்களை பாடி அது உலகப்புகழும் பெற்றுள்ளது. விரும்பியவர்கள் கேட்பார்கள். விரும்பாதவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை உண்மையான இஸ்லாம் அவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. மொகலாயர் ஆட்சியில் அரசர்களை குஷிப்படுத்த சில கள்ள அறிஞர்கள் எழுதிய சட்ட புத்தகங்களைத்தான் இஸ்லாமாக சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மூளை சலவை செய்யப்பட்ட சில இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். இதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும். சவுதி அரேபியாவும் ஷரீயத்தின்படிதான் ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு இந்து நண்பர்கள் பலர் குடும்பத்தோடு 10 வருடம் 20 வருடம் என்று பொருளீட்டுகின்றனரே! அவர்களை யாரும் தடுத்தனரா? ஏனெனில் சவுதியில் இஸ்லாமிய சட்டம் ஓரளவு முறையாக பேணப்படுகிறது.

    பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பொறுத்த வரை அந்த மக்களுக்கு கல்வியறிவு சரியாக கொடுக்கப்படவில்லை. உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆட்சியாளர்கள் போதிக்கவில்லை. இது இரண்டும் சரியானால் அமைதி திரும்பும்.

    //இது போன்ற நிலைப்பாடுகள் தான் பாமியான் புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்க்கும் இழிநிலைக்கு காந்தார முஸல்மான்களைத் தள்ளியது.//

    அதற்கு தாலிபான்கள் வேறு ஒரு காரணம் சொல்கிறார்கள். புத்தர் சிலைகளை புணரமைக்க ஐநா பல மில்லியன் டாலர்களை தர முன் வந்தது. தாலிபான்கள் அவர்களிடம் ‘போரினால் எங்கள் நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பொருளாதார வசதி எங்களிடம் இல்லை. எனவே அந்த பணத்தை கொடுத்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள். சிலைகளை நாங்கள் பிறகு சரி செய்து கொள்கிறோம்’ என்றனர். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ‘எங்கள் குழந்தைகளுக்கு தராத பணம் சிலைகளை சரி செய்யவா தருகிறீர்கள்?’ என்ற வேகத்தில் அந்த சிலைகளை தரை மட்டமாக்கினர். அவர்கள் தரப்பு சொல்லும் வாதமும் நியாயமாகத்தானே இருக்கிறது.

    நம் நாட்டிலும் சாலையோரம் குடிசைகளில் மக்கள் ஒண்டிக் கொண்டிருக்கும் போது காயிதே மில்லத்துக்கும் காமராஜருக்கும் மணி மண்டபம் கட்ட பல கோடிகளை நமது அரசு அழிப்பதில்லையா? அதுபோல்தான் இதுவும்.

    //காய்தேஆஜமின் மதவெறி வேண்டுமானால் ஹிந்துஸ்தானத்தை கூறு பிளந்திருக்கலாம். கலாசாரத்தின் அடிப்படையில் ஹிந்துஸ்தானம் ஒன்றே.//

    காயிதே ஆஜம் மட்டுமல்ல. நேரு, ராஜாஜி, வல்லபாய் பட்டேல், ஜின்னா போன்ற அனைத்து தலைவர்களும் நாடு பிரிய ஆசைப்பட்டனர். இதற்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் வாழ்க்கையை நடத்தக் கூடிய கலாசாரங்களில் ஒன்றாக இருக்கின்றனர். இறைவனை வணங்குவதில்தான் மாறுபடுகிறோம்.

  20. Avatar
    முனாவர் says:

    சுவனப்பிரியன்,

    உங்களுக்கு குரான் பற்றியோ இஸ்லாம் பற்றியோ எதுவும் தெரியவில்லை என்றால், கேட்டு தெரிந்துகொள்வதில் தவறில்லை.
    //அந்த வசனம் முகமது நபியின் மனைவியர்களைப் பார்த்து சொல்லப்பட்ட வசனத்தை ஏன் பொதுவில் வைக்கிறீர்கள்? //
    எல்லா அல்குரான் வசனங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்டவருக்கு பதிலாக சொல்லப்பட்டதுதான். அவை இறைவசனங்களாக இறங்கியதால், அவை அல்குரானில் இருக்கின்றன. மனைவியருக்கு சொன்னாலும் அவை எல்லா பெண்களுக்குமான அறிவுரை என்பதால்தான் அது குரானில் இடம்பெற்றுள்ளது. அப்படி இந்த வசனம் இவருக்கு சொல்லப்பட்டது, அந்த வசனம் அவருக்கு சொல்லப்பட்டது என்று நீட்டி, அல்குரானில் சுவனப்பிரியனுக்கு என்று சொன்னது எதுவும் இல்லாததால் இஷ்டப்படி ஆடலாம் என்று நினைத்துகொள்ளுங்கள். மனைவியருக்கு மட்டும்தான் என்றால் ஏன் அது அல்குரானில் இடம்பெற்றுள்ளது என்று உங்கள் மவுலவிகளிடம் போய் கேளுங்கள்.

    //பெண்கள் படிப்பதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ இஸ்லாம் தடை சொல்லவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடங்கள் என்றும் சொல்லவில்லை.//
    33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; ”
    அப்படித்தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.
    // பல போர்க்களங்களில் பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். முகமது நபி காலத்திலேயே பள்ளியில் தொழுதிருக்கிறார்கள். கல்வியை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.//
    இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில்.
    // ‘ஒட்டகப் போர்’ கேள்விப்பட்டிருப்பீர்களே! முகமது நபியின் மனைவி அன்னை ஆயிஷா தலைமையேற்று நடத்திய போரல்லவா அது. ஒரு போருக்கே பெண்கள் தலைமை தாங்கியிருக்கும் போது பெண்களை வீட்டில் அடைந்து கிடக்க எப்படி சொல்கிறீர்கள்?//
    ஹதீஸ்களிலும் வரலாற்றிலும் ஒரு விஷயம் நடநதிருந்தால், அது அல்குரானை எப்படி பொய்ப்படுத்தும்?
    ஹதீஸ் மாறாக சொல்கிறது என்று அல்குரானை தவறு என்று சொல்லக்கூடாது. அல்குரானுக்கு மாற்றாக ஹதீஸ் இருந்தால் ஹதீஸ்தான் தவறே தவிர, அல்குரான் தவறு அல்ல.

  21. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள சுவனப்பிரியன்
    //ஒருகால் என் முடிவு தவறாகவும் இருக்கலாம். உண்மையை இறைவனே அறிந்தவன் என்பதற்காகவே அவ்வாறு சொன்னேன்.//

    நீங்கள் மட்டுமல்ல, பொதுவாக எல்லா இஸ்லாமிய இமாம்களும் மனிதநெறிக்கு புறம்பான கருத்துக்களையும் கூறிவிட்டு இது போல Allah knows best என்று எழுதுகிறார்கள்.

    அப்படியென்றால், மனிதர்களை அவரவர் இஷ்டம் போல இருக்க விட வேண்டியதுதானே? முஸ்லீம்களையும் அவரவர் இஷ்டம் போல இருக்க விட வேண்டியதுதானே?
    கொடுக்க வேண்டிய அறிவுரையை கொடுத்தாயிற்று, மற்றபடி அவரவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று இருக்கலாமே?

  22. Avatar
    suvanappiriyan says:

    திரு பொன் முத்துக் குமார்!

    //நீங்களும் ‘காவ்யா’-வும் ஒன்றா என்று தெரியவில்லை. ஆனால் ‘பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை’ என்று எதிர்வினை அளித்ததன் மூலம் ஒன்றுதான் என்று புரிகிறது.//

    ஹா..ஹா..இடையில் நகைச்சுவையாகவும் எழுதுகிறீர்கள். காவ்யா எழுதுவது மதுரையில் இருந்து. நான் எழுதுவதோ சவுதியில் இருந்து. அவர் இந்து. நான் முஸ்லிம். அவர் அறிந்த அளவு ஆழ்வர்களைப் பற்றியோ இந்து மத புராணங்களைப் பற்றியோ அதிகம் அறிந்தவன் அல்ல. எப்படி சார் ஒன்றாக முடியும்? எழுதும் முறையை வைத்துக் கூட கண்டுபிடிக்க முடியாதா? கஷ்டம்.

    சகோ முனாவர்!

    //உங்களுக்கு குரான் பற்றியோ இஸ்லாம் பற்றியோ எதுவும் தெரியவில்லை என்றால், கேட்டு தெரிந்துகொள்வதில் தவறில்லை.//

    அரபி பெயரை வைத்துக் கொண்டதால் இஸ்லாமிய தோற்றத்தை கொண்டு வந்து விட முடியாது. உங்கள் பெயரை எழுதிய விதமும் முகமது நபியின் மனைவியருக்கு சொன்ன கட்டளையை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற உளறலையும் பார்த்தே தெரிகிறது உங்களின் இஸ்லாமிய அறிவு. பெண்களை வீட்டிலேயே அடைக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறப் போவதில்லை. இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரி. மறந்து விட வேண்டாம். ஒட்டக போரையே மறுக்கும் உங்களின் உள்ளத்தின் ஓட்டம் நன்றாக தெரிகிறது. இனி வேறு பெயரில் எழுத முயற்ச்சிக்கவும். :-)

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அன்புள்ள சுவனப்பிரியன்,

      எனக்கு நகைச்சுவை உணர்வு இருப்பதாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. வாழ்வில் நகைச்சுவை உணர்வும் முக்கியம்தானே, என்ன சொல்கிறீர்கள் ?

      உங்களையும் சற்று பொறுமையாக படிக்க வேண்டிக்கொள்கிறேன் :

      “உன்னைச்சுற்றியுள்ள உலகம் எதுவோ அதன் விருப்பப்படிதான் வாழவேண்டும். இல்லை என்னால் முடியாதென்றால், எங்கு உங்கள் விருப்ப்படி வாழ முடியுமோ அங்கு சென்றுவிட வேண்டியதுதான்.” – இதை சொன்னது காவ்யா.
      இது தாலிபானிஸ பார்வை என்று நான் விமர்சித்தது காவ்யா-வை நோக்கி.

      ஆனால் என் மேற்கண்ட விமர்சனத்தை முன்னிறுத்தி விளக்கமளித்து “பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை” என்று சொன்னது ‘சுவனப்பிரியன்’ என்ற நீங்கள்.

      நீங்கள் அப்படி சொன்னதாக நான் எங்கும் சொல்லவில்லை. காவ்யா சொன்னதை ‘நான் அப்படி சொல்லவில்லை’ என்று எதற்கு தேவையேயின்றி நீங்களாகவே சொல்லிக்கொள்கிறீர்கள் ஐயன்மீர் ? குழப்பத்தை விளைவித்துவிட்டு நக்கலடித்தால் எப்படி ஐயன்மீர் ?

  23. Avatar
    முனாவர் says:

    சுவனப்பிரியன்,
    //முகமது நபியின் // இப்படி ஒரு முஸ்லீமும் எழுதமாட்டார். ரஸூலுல்லாஹி ( ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) என்றோ அல்லது முகம்மது (ஸல்) என்றோதான் எழுதுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாமல் ஹதீஸையும், வரலாற்றையும் வைத்து அல்குரானை மறுக்கும் நீங்கள் ஒன்று பெயர்தாங்கி முஸ்லீமாக இருக்க வேண்டும் அல்லது முஸ்லீம் போல எழுதி முஸ்லீம்களை வழிகேட்டுக்கு அழைத்துசெல்பவராக இருக்க வேண்டும்.
    யார் ஒட்டகப்போரை மறுத்தது? ஒட்டகப்போரில் யார் பங்கு பெற்றார்கள் அல்லது இல்லை என்பது அல்குரானை தவறாக்குமா? அன்னை அயீஷா (ரலி) அவர்கள் ரஸூலுல்லாஹி ( ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களின் மனைவிதானே? அவர் ஏன் அல்குரானின் கட்டளையை கேட்கவில்லை? அவர் கேட்கவில்லை என்பதால், அல்குரான் தவறாகுமா?

  24. Avatar
    முனாவர் says:

    சுவனப்பிரியன் என்ற பெயர்தாங்கி முஸ்லீமுக்கு,

    33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

    இந்த வசனம், நபிகளின் மனைவிகளே! என்றுதான் அழைக்கிறது. ஆகையால் நபிகளின் மனைவிகள் தவிர மற்ற முஸ்லீம் பெண்கள் அந்நியருடன் பேசும் பேச்சில் நளினம் காட்டலாமா? நல்ல பேச்சு பேசாமல், அசிங்கமாக பேசலாமா?

    நபிகளின் மனைவிகளே என்று அழைத்து கூறினாலும், அவர்கள் உதாரண பெண்கள். அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள கேட்டுகொள்ளப்பட்டார்களோ அவற்றை பின்பற்றுவதுதான் நல்ல முஸ்லீம் பெண்ணுக்கு அடையாளம்.
    ஆகவே
    33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்;

    என்பது எல்லா பெண்களுக்கும் கூறப்பட்டதுதான்.

    33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

  25. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //அப்படியென்றால், மனிதர்களை அவரவர் இஷ்டம் போல இருக்க விட வேண்டியதுதானே? முஸ்லீம்களையும் அவரவர் இஷ்டம் போல இருக்க விட வேண்டியதுதானே?
    கொடுக்க வேண்டிய அறிவுரையை கொடுத்தாயிற்று, மற்றபடி அவரவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று இருக்கலாமே?//

    ‘முஹம்மதே! மனிதர்களின் அரசனும் மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடும் சாத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறுவீராக! சாத்தான் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
    -குர்ஆன் 114:1,2,3,4,5

    இங்கு முகமது நபியையே சைத்தானிடமிருந்து பாதுகாவல் தேட பிரார்த்திக்குமாறு இறைவன் பணிக்கிறான். சைத்தான் என்ற ஒரு படைப்பு இல்லாவிட்டால் எல்லா மனிதர்களும் தேவர்களைப் போல் தவறே செய்யாமல் இருந்து விடுவர். இறைவனிடமிருந்து வழிகாட்டியும் வரும்: அதிலிருந்து மனிதர்களை ஆசை காட்டி மோசம் செய்யும் சைத்தானின் எண்ணங்களும் வரும். இந்த இரண்டையும் சீர்தூக்கி பார்த்து எது நேரான வழி என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    சைத்தானின் வலையில் வீழ்பவர் நிரந்தர வாழ்வின் சுகத்தை இழக்கிறார். இறை வேதங்களின் படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் நிரந்தர வாழ்வின் சுகத்தை அனுபவிக்கிறார். அதை விளக்கி மக்களுக்கு எடுத்துச் சொல்லவே ஆதாமிலிருந்து நோவா, ஆப்ரஹாம், மோசே, ஏசு, மற்றும் முகமது நபி வரை இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி வைத்தான். இதில் கடைசியாக அனுப்பப்பட்டவரே முகமது நபி. இவ்வளவு பிரசாரம் பண்ணியும் தர்ஹாக்கள் கட்டக் கூடாது என்று முகமது நபி தடுத்தும் இன்று பல நாடுகளில் தர்ஹாக்கள் வழிபாடு நடத்தப்படுகிறதா இல்லையா? அவர்களுக்கு இதனை அழகாக்கி காட்டி தவறான வழிக்கு இழுத்துச் சென்றது சைத்தானல்லவா? ஒரு உயிரை அநியாயமாக கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடுத்திருக்க அந்த குர்ஆனின் பெயரால் அப்பாவி மக்களின் கழுத்தறுக்கும் கூட்டம் உலகில் உள்ளதா இல்லையா? இப்பொழுது சொல்லுங்கள் பிரசாரம் தேவையா? தேவையில்லையா?

  26. Avatar
    சான்றோன் says:

    ஹிந்து மதத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்திருக்கும் காவ்யா அவர்களே……

    கொல்லன் பட்டறையில் ஊசி விற்க வேண்டாம்……

    ஹிந்து மதம் என்றுமே விமர்சனங்களுக்கு இடம் அளித்து வந்திருக்கிறது……எல்லா விதமான நம்பிக்கைகளுக்கும் இங்கு இடம் உண்டு……இது போன்ற யாருமே அறியாத விஷயங்களை தங்கள் வாய்மொழி மூலம் அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி…..

    உங்கள் கருத்தை தொடர்ந்து கவனித்து வரும் நானோ, நண்பர்கள் தங்கமணி , பாண்டியன் போன்றோர் உங்கள் உள் நோக்கத்தை நன்கு அறிவோம்…அதுதான் பிரச்சினை….. நாங்கள் மட்டுமல்ல …உங்கள் கருத்துக்களை தொடர்ந்து கவனித்து வரும் எவரும் உங்கள் நோக்கம் ஹிந்து மதத்தை திருத்துவதல்ல…..இழிவுபடுத்துவதுதான்….என்பதை எளிதாக உணர முடியும்…. இந்த கட்டுரையையே எடுத்துக்கொள்வோம்……இது பாகிஸ்தானில் நடக்கும் ஒரு அராஜகத்தை பற்றிய கட்டுரை…….இஸ்லாமில் உள்ள ,அல்லது இஸ்லாத்தை தவறாகப்புரிந்து கொண்டவர்கள் செய்யும் பயங்கரவாதம் பற்றிய இஸ்லாமியர் [அனேகமாக பாகிஸ்தானியர்] ஒருவரின் கட்டுரை…..அதற்கு சுவனப்பிரியன் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் விளக்கமளிக்கிறார்கள்….. இதில் ஹிந்து மதத்தை நீங்கள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முன் ஹிந்து மதத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் தின்னையில் வெளிவந்ததே இல்லையா? நீங்களே வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை விமர்சித்து எழுதிய கட்டுரையை தின்னை வெளியிடவில்லையா? ஹிந்து மதம் மட்டும்தான் விமர்சிக்கப்பட வேண்டியதா? மற்ற மதங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையா?

    கட்டுரை எதுவாக இருந்தாலும் நீங்கள் ஹிந்து மதத்தை இழுத்து வந்து அவமதிப்பீர்கள் …..ஆதாரங்களே இல்லாமல் புழுதி வாரி தூற்றுவீர்கள்……யாராவது எதிர்த்தாலோ ,ஆதார‌ங்கள் கேட்டாலோ ந‌ழுவுவீர்கள்……அல்லது நானும் ஹிந்து தான் என்பீர்கள்…… நாங்கள் பிரபந்தத்தையோ , அல்லது திருவாசகத்தையோ இறைவனை வழிபட படிப்போம்…… உங்களைப்போல் அதில் உள்ளவற்றை வைத்தே ஹிந்து மதத்தை இழிவு செய்வதே நோக்கமாக‌ படிக்க மாட்டோம்……

    ஹிந்து மதம் என்றுமே காலத்துக்கு ஏற்ப மாறித்தான் வந்திருக்கிறது….. ஒரே ஒரு புனித நூலைமட்டுமே எங்கள் வழிகாட்டியாக நாங்கள் கொள்வதில்லை……எங்களுக்கென்று எந்த தலைமை பீடமும் இல்லை…….

    1. Avatar
      Kavya says:

      //நாங்கள் பிரபந்தத்தையோ , அல்லது திருவாசகத்தையோ இறைவனை வழிபட படிப்போம்…//

      திருவாசகத்தை எப்படியாகினும் படித்துக்கொள்ளுங்கள். அஃது உங்கள் நூல்.

      பிரபந்தம் படிப்பவன் என்று மட்டும் சொல்லாதீர்கள். பிரபந்தம் படிப்பவன் திருவாசகம் படிக்கக்கூடாது அவன் வைணவனாக இருப்பின்.. அது கிடக்க.

      பிரபந்தத்திலேதான் நம்மாழ்வார் சொல்கிறார்: ஏழ் பிறப்புகளிலும் தான் தலித்துகளுக்கு அடிமை அவர்கள் திருமாலடியார்களாயிருப்பின்.

      பிரபந்ததிலேதான் தொண்டரிப்பபொடியாழ்வார் சொல்கிறார்: ஊனகரேயாயினும் தொழுமின் என்றும்,
      தலித்துகளின் எச்சிலை தான் புனிதமாகக் கொள்வேன் அவர்கள் திருமாலடியார்களாயிருப்பின் என்றும்,
      பிராமணத்துவத்தை தூக்கியெறியத்தயார்; த‌எனக்கு வேண்டியது அரங்கனின் திருவருள் மட்டுமே என்றும்
      பேசுகிறார். சொர்க்கமே வேண்டாமென்றவர் குடுமியா வேண்டுமென்பார்?

      பச்சை மாமலை போல மேனி
      பவளவாய் கமல்ச்செங்கண்
      அச்சுதா அமரேறே என்னும் இச்சுவை தவிர
      அச்சுவை தரினும் வேண்டாம் அரங்கமாநகரிலுள்ளானே!

      இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் பிரபந்தத்திலிருந்து.

      பிரபந்தத்தை ஓதலாம். படிக்கவும் செய்யலாம். சிந்தித்து வேதனையும் அடையலாம். நான் மூன்றையும் செய்கிறேன்.

      திருவாசகம், தேவாரமெல்லாம் எப்படி உங்களுக்கு விவிலியமும் திருக்குரானுமோ அப்படி எங்களுக்கு அன்னியரின் நூல்கள்; அவைகளின் பக்கத்தில் செல்ல மாட்டோம்.

      எனவேதான் சொல்கிறேன் சிரிவைணவத்தை அறிந்த பின் என்னுடன் வாதாட வரவும்.

      நன்றி.

      1. Avatar
        Kavya says:

        The exact version of Thondarippodiyaazhvaar’s paasuram is as under. Sorry for misquoting.

        “பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
        அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
        இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
        அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!”

      2. Avatar
        சான்றோன் says:

        // சிரிவைணவத்தைப்பற்றி நன்கு தெரிந்தபின் எழுதலாம். //

        உங்கள் பார்வையிலான சிரிவைணவம் எப்படியும் இருந்து விட்டுப்போகட்டும்…….அதைப்பற்றி எங்களுக்கு அக்கறையில்லை……எனக்கு எல்லா ஹிந்துக்கடவுளும் வேண்டும்….. நான் ஆழ்வார்க்கடியான் அல்ல…..சராசரி ஹிந்து….எனக்கு விஷ்ணு என்ற கடவுள் அறிமுகமானதே எங்கள் ஊர் பெருமாள் கோயிலில்தான்……அங்கு சைவன் , வைணவன் என்ற பிரிவினை இல்லை……எங்கள் கிராமத்தில் மாரியம்மனையும் கும்பிடுவோம்…..பங்குனி உத்திரத்தின் போது கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து பழ்னிவரை நடந்தே சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வோம்…..புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமியை வழிபட்ட பின்பே விரதம் முடிப்போம்…..விஷ்ணுவை வழிபடுபவன் சிவனை வழிபடக்கூடாது என்ற குறுகிய நோக்கங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லை……..பகவான் எந்த இடத்திலும் அப்படி சொன்னதாகவும் இல்லை…..”ஆறுகள் பலவாக இருந்தாலும் அவை சேர்வது கடலில்தான்…அதுபோல நீ எந்த முறையில் வழிபட்டாலும் இறுதியில் என்னையே வந்தடைவாய் ” என்ற கீதாச்சர்யனின் உபதேசம் எனக்குப்போதும்….. ஹிந்துக்களே மறந்து விட்ட சைவ – வைணவ சண்டையை நீங்கள் உயர்த்திப்பிடிப்பது உங்கள் மீதான எனது சந்தேகத்தை மென்மேலும் உறுதிப்படுத்துகிறது…….

  27. Avatar
    சான்றோன் says:

    காவ்யா அவர்களே….

    அதிகம் வேண்டாம்…..கடந்த இரண்டு மாதங்களில் தின்னையில் வெளியான உங்கள் பின்னூட்டங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்….அவற்றில் ஒரே ஒரு இடத்திலாவது , ஹிந்து மதத்தை திருத்தும் நோக்கிலோ, குறைந்த பட்சம் குறைகளை சுட்டிக்காட்டும் நோக்கிலோ வெளியான ஒரே ஒரு கருத்தை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம்…… எல்லாமே அவதூறுகள் அல்லது வசைமொழிகள்……வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் [அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு ] ஹிந்து மதத்தை இழிவு செய்து மகிழும் சாடிஸ்ட் நீங்கள்….இதில் வடிவேல் நானும் ரவுடிதான்
    என்பது போல் நானும் ஹிந்துதான் என்றுவேறு சொல்லிக்கொள்கிறீர்கள்…. இதை சுட்டிக்காட்டினால் எங்கள் மீது பாய்கிறீர்கள்……

    மேலும் ஒரு விஷயம்…….ஜோ .அமலன் ரேயன் பெர்ணான்டோ என்று ஹிந்துக்கள் பெயர் வைத்துக்கொள்வதில்லை….

    1. Avatar
      Kavya says:

      ஒன்று நீங்கள் செய்யலாம். சிரிவைணவத்தைப்பற்றி நன்கு தெரிந்தபின் எழுதலாம். அது உங்கள் இறுதி வரிகளுக்குப் பதில்கள் தரும்.

      இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்யும் நோக்கம் மற்ற மதங்களைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவற்றைத் தெரிந்து கொள்ளும் அவசியம் தங்கமணி போன்றோருக்கு மட்டுமே உதவும் சுவனப்பிரியனுக்குப்பதில் போட. மற்றபடி நோ யூஸ்.

      இந்து மதத்தை வைத்து அரசியல் நடாத்துவோரால் இந்து மதம் சீரழிக்கப்படுகிறது என்பதே என் குற்றச்சாட்டு. நீங்கள் குறிப்பிடும் தோழர்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.

      விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் நட்ப்பது பக்தி ஊர்வலமன்று.

      நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

      1. Avatar
        punai peyaril says:

        விநாயக ஊர்வலம் இந்த மண்ணின் மைந்தர்கள் அந்த மண்ணையெடுத்து மண்ணில் வாழும் மனித,மிருக இனக்களின் வடிவொன்றாக்கி சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். தவறல்ல… ஆனால், சௌதிஅரேபியாவிற்கு அடிமையான பின்னரும், இல்லாத ஒன்றான தேர் இழுப்பு, பூக்கூடு என்பது தவறு. தங்கள் பலம் காண்பிக்க மட்டுமே ரோட்டில் திரளாக மண்டியிடுதல் என்ன விடயத்தில் நியாயம்.. உலகம் பூரா இந்துக்களும், கிறிஸ்துவ, பௌத்தர்களும் ரோட்டில் இறங்காமல் இருப்பதன் பெயரே சகிப்புத் தன்மை… வேறு நாட்டு கடவுள் வேண்டாம்… வேறு நாட்டு உடையை மட்டும் தடையின்றி அணிந்து கொள்ளலாம் என்று சொல்லிப்பாருங்கள்….. மிடில் ஈஸ்டே , வெஸ்டர்னாக மாறும்…

      2. Avatar
        சான்றோன் says:

        //விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் நட்ப்பது பக்தி ஊர்வலமன்று. //

        எப்படி சார் கண்டு பிடிச்சீங்க….?

        பால கங்காதர திலகர் வினாயகர் ஊர்வலத்தை ஆரம்பித்ததே ஹிந்துக்க‌ளை ஒற்றுமைப்படுத்தி அன்னியரை எதிர்க்க வைக்கத்தான்…….இங்கும் அதற்கான தேவை உண்டு………மதச்சார்பின்மை என்ற பெயரால் ஹிந்துக்கள் ஏமாற்றப்படுகின்றனர்……ஹிந்துவாக இருப்பதே இழிவு என்ற பிரச்சாரம் தூள் பறக்கிறது…..எனவே ஹிந்துக்களை ஒரு பொதுப்புள்ளியில் ஒற்றுமைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது……

        1. Avatar
          Kavya says:

          உங்கள் பதிலைப்படித்தால் நான் சொன்ன கருத்தே வரும். திலகர் இந்துக்களை ஒருமைப்படுத்த, அன்னியரை எதிர்க்க விநாயகர் ஊர்வலம் ஆரம்பித்தார். சிவசேனா அதை இன்றும் செய்துவருகிறது. இஃது எப்படி பக்தி ஊர்வலமாகும் ?

          பக்தி ஊர்வலம் என்பது பெருமாள் கோயிலைச்சுற்றி பிரபந்தம் முன்னால் ஓதிச்செல்லப்பட ஊர்வலமாகச்செய்வதே பக்தி ஊர்வலமாகும். நல்லவேளை இன்றும் அஃது அப்படியே தொடர்கிறது. இந்துக்களை ஒரே சக்தியாக்கி அன்னியர்களை எதிர்க்கவன்று.

          விநாயகர் ஊர்வலத்தை அப்படி நடாத்துங்கள், பக்தி ஊர்வலம் எனத் தாராளமாகச் சொல்லலாம்.

    2. Avatar
      Kavya says:

      //நானும் ஹிந்துதான் என்றுவேறு சொல்லிக்கொள்கிறீர்கள்//

      நானும் நீங்களும் (மற்றும் இங்கு நீங்கள் குறிப்பிடும் சகாக்களும்) ஒரே குட்டையில் ஊறிய இந்துக்களல்ல. வெவ்வேறு குட்டைகள். அதைப்புரிந்து கொண்டால் உங்கள் குழப்பங்கள் தெளியும். நான் வேறு; நீங்கள் வேறு இந்துக்கள். இந்து என்ற சொல்லே எனக்குப் பொருந்தாது. அது ஒரு பொதுப்படையான சொல். திருவாசகத்தையும் திவ்யபிரபந்தத்தையும் ஒரே தராசில் வைத்த்ப்பார்ப்பவனும் சேர்ந்து படிப்பவனும் மட்டுமே நீங்கள் சொன்ன இந்து. நீங்கள் அப்படிப்பட்ட இந்து. போதுமா?

  28. Avatar
    jayashree shankar says:

    அன்பின் திரு.தாவூத் கட்டக் அவர்களுக்கு,
    மனதைப் பிழிந்த நிகழ்வு….!
    கஜாலா ஜாவேத்…!குரலின் நளினத்தில் இசையைக் கட்டிப் போட்டவரைச் சுட்டுக் கொன்று இவர்கள் எதை சாதித்து எதை நிலை நிறுத்தினார்களோ..? பாடுபவர்களைக் கொன்று போடுவதால் இசை என்ன அழிந்தா போகும்…?
    பெண்ணின் குரலொலி இல்லாத இசையுலகம்….காற்றில்லாத பாலைவனம்…!
    அந்தக் குயிலின் ஆன்மா சாந்தி அடையட்டும்…. இந்தியாவில் வந்து பிறந்து மீண்டும் இசையாய் வாழட்டும்.
    படித்ததும் நெஞ்சம் பதைத்தது…..பாடல்களைக் கேட்டதும்….கண்கள் பனித்தது.
    பெண்ணைப் பெற்றதால் தந்தைக்கும் மரண அடி….இது கொடுமையிலும் கொடுமை.
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=1_muiuzC-tk
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BoXemtSfrd4

  29. Avatar
    க்ருஷணகுமார் says:

    \ இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ‘எங்கள் குழந்தைகளுக்கு தராத பணம் சிலைகளை சரி செய்யவா தருகிறீர்கள்?’ என்ற வேகத்தில் அந்த சிலைகளை தரை மட்டமாக்கினர். அவர்கள் தரப்பு சொல்லும் வாதமும் நியாயமாகத்தானே இருக்கிறது.
    நம் நாட்டிலும் சாலையோரம் குடிசைகளில் மக்கள் ஒண்டிக் கொண்டிருக்கும் போது காயிதே மில்லத்துக்கும் காமராஜருக்கும் மணி மண்டபம் கட்ட பல கோடிகளை நமது அரசு அழிப்பதில்லையா? அதுபோல்தான் இதுவும்.\

    ஜெனாப் சுவனப்ரியன், மிக மிகத் தவறான ஒப்புமை. காயிதே மில்லத் மற்றும் காமராஜர் மணிமண்டபம் எல்லாம் புதியதாகக் கட்டப்பட்டவை. பாமியான் புத்தர் சிலைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக காந்தாரத்தின் கலாசாரச் சின்னங்களாக அங்கிருந்தவை. சிலை பராமரிப்புக்கு அமேரிக்கா பணம் தர இசைந்தார்களா என எனக்குத் தெரியாது. நீங்கள் சம்பந்தமான தரவு தராத பக்ஷத்தில் இது வெறும் செவிவழிச்செய்தி எனவே கொள்வேன். பணம் கிடைக்காவிட்டால் சிலைகளை பராமரிக்காது இருக்கும் படியே இருக்க விட்டிருக்கலாமே மதவெறித் தாலிபான்கள். அவற்றை குண்டு வைத்து தகர்ப்பது அரக்கத் தனம். மாற்று மதத்து கலைச்செல்வங்களை குண்டு வைத்துத் தகர்க்க குரான்-ஏ-ஷெரீஃப் சொல்லுகிறதா?? அவர்களின் அக்ரமத்திற்கு நீங்கள் எப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள். க்ஷமிக்கவும் “நுணலும் தன் வாயாற் கெடும்” என்ற வசனமே நினைவுக்கு வருகிறது.

    இங்கு பேசப்படும் விஷயம் பாகிஸ்தானில் கலைஞர்களுக்கு தங்கள் கலையை பேண ஸ்வதந்த்ரம் இல்லை என்பது. அதன் நீட்சி இஸ்லாம் என்ற மதம் எந்த இடத்திலாவது தலையெடுக்குமானால் அங்குள்ள கலை கலாசாரம் முழுவதுமாக அழித்தொழிக்கப்படும் என்பது.

    இங்கு நீங்கள் குரான்-ஏ-ஷெரீஃப் பின் மஹிமை பற்றியும் ஒட்டகப்போர் பற்றியும் பேசுவது சலிப்பைத்தருகிறது. இவ்விஷயங்களை பேச வேண்டாம் என நான் சொல்லவில்லை. குரான்-ஏ-ஷெரீஃப் பற்றி தாங்கள் விவாதிக்க விரும்பினால் தனியொரு வ்யாசம் சமர்ப்பிக்கலாமே திண்ணைக்கு. போதாதுக்கு தங்களுக்கும் ஜெனாப் முனாவருக்கும் இடையே தங்கள் மதநூல் பற்றிய சம்பாஷணம்.

    \இந்தியாவில் அப்படி ஒரு நிலை எங்குமே இல்லை.\

    நன்றே. ஆனால் அப்படி ஒரு நிலை வரும் என அஞ்ச முகாந்திரம் இருக்கிறது. ஸூஃபியானா கலாம், கவ்வாலி, கஜல் என்பவை பெரும்பாலும் இஸ்லாமியர்களால் கையாளப்படும் இசை வடிவங்கள். வட்லா சஹோதரர்கள், கைலாஷ் கேர், தலேர் மெஹந்தி, ஜக்ஜீத்,அனூப் ஜலோடா, பங்கஜ் உதாஸ் போன்று சில ஹிந்து கலைஞர்களும் இவற்றுக்கு பங்களிக்கிறார்கள் இவை பேணப்படும் முக்யமான இடங்கள் ஹிந்துஸ்தானத்தில் உள்ள அவுலியாக்கள் உறையும் தர்காஹ். இந்த வழிபாட்டிடங்கள் தேவ்பந்தி வஹாபி மதவெறியர்களின் கண்ணை உறுத்தும் இடங்களாயிற்றே.

  30. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    //இங்கு முகமது நபியையே சைத்தானிடமிருந்து பாதுகாவல் தேட பிரார்த்திக்குமாறு இறைவன் பணிக்கிறான்.//
    ஊர்ல ஒரு ரவுடியை உருவாக்கிவிட்டுவிட்டு, நான் சொல்றதை கேட்கவில்லை என்றால், அவனை விட்டு அடிக்கிறமாதிரியா?

    // சைத்தான் என்ற ஒரு படைப்பு இல்லாவிட்டால் எல்லா மனிதர்களும் தேவர்களைப் போல் தவறே செய்யாமல் இருந்து விடுவர்.//
    மனிதர்கள் தவறு செய்யாமல் இருக்க வேண்டியதுதான் இந்த ”இறைவனின்” ஆசை என்றால் சைத்தானை உருவாக்காமல் இருந்திருக்கலாமே?

    // இறைவனிடமிருந்து வழிகாட்டியும் வரும்: அதிலிருந்து மனிதர்களை ஆசை காட்டி மோசம் செய்யும் சைத்தானின் எண்ணங்களும் வரும். இந்த இரண்டையும் சீர்தூக்கி பார்த்து எது நேரான வழி என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.//

    சில சமயங்களில் நீங்கள் சொல்லும் இரண்டும் ஒன்றே போல இருப்பதால் குழப்பம் வருவது இயல்புதான்.

    //சைத்தானின் வலையில் வீழ்பவர் நிரந்தர வாழ்வின் சுகத்தை இழக்கிறார்.//
    அதெப்படி உங்களுக்கு தெரியும? குரான் சொல்வதை நீங்கள் நம்புவதாலா?
    // இறை வேதங்களின் படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் நிரந்தர வாழ்வின் சுகத்தை அனுபவிக்கிறார். அதை விளக்கி மக்களுக்கு எடுத்துச் சொல்லவே ஆதாமிலிருந்து நோவா, ஆப்ரஹாம், மோசே, ஏசு, மற்றும் முகமது நபி வரை இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி வைத்தான். இதில் கடைசியாக அனுப்பப்பட்டவரே முகமது நபி.//

    ஏன் ஒரு குறிப்பாக ஒரு முடிவு எடுக்கமுடியாமல் “இந்த இறைவன் திணறுகிறார்?

    // இவ்வளவு பிரசாரம் பண்ணியும் தர்ஹாக்கள் கட்டக் கூடாது என்று முகமது நபி தடுத்தும் இன்று பல நாடுகளில் தர்ஹாக்கள் வழிபாடு நடத்தப்படுகிறதா இல்லையா? அவர்களுக்கு இதனை அழகாக்கி காட்டி தவறான வழிக்கு இழுத்துச் சென்றது சைத்தானல்லவா?//
    மெக்காவே ஒரு தர்ஹாதான் என்ரு சொல்கிறார்களே? அது இஸ்மாயிலின் கல்லறை என்று சொல்கிறார்களே?
    // ஒரு உயிரை அநியாயமாக கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடுத்திருக்க அந்த குர்ஆனின் பெயரால் அப்பாவி மக்களின் கழுத்தறுக்கும் கூட்டம் உலகில் உள்ளதா இல்லையா?//

    அநியாயமாக கொல்லக்கூடாது என்று யூதர்களுக்குச் சொன்னதாகத்தானே குரான் சொல்கிறது? முஸ்லீம்களிடம் கழுத்தை அறு என்றும் குரான் சொல்வதாலா?

    // இப்பொழுது சொல்லுங்கள் பிரசாரம் தேவையா? தேவையில்லையா?
    //
    தேவையில்லை. குரானை கொடுத்தாயிற்று. அவரவருக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுத்து அவரவர் குரானை படித்து புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுவதுதானே சரியான பரிட்சை? பிட்டு கொடுத்து பாஸ் பண்ண வைப்பது மாதிரி இத்தனை இமாம்கள் என்னோட பிட்டை யூஸ் பண்ணு என்னோட பிட்டை யூஸ் பண்ணு என்று அலைவது தவறுதானே?

  31. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //மெக்காவே ஒரு தர்ஹாதான் என்ரு சொல்கிறார்களே? அது இஸ்மாயிலின் கல்லறை என்று சொல்கிறார்களே?//

    “நபி அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஃபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழையமறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளை கையில் தாங்கியவாறு நபி இப்றாஹீம் நபி இஸ்மாயீல் ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். (இவ்விரு நபிமார்களுக்கும் சிலை கட்டியதற்காக) அல்லாஹ் இவர்களை அழிப்பானாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்”, என்று கூறிவிட்டு நபியவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அதன் ஓரங்ளில் நின்று தக்பீர் சொன்னார்கள். அதில் தொழவில்லை.
    அறிவிப்பவர்: நபித் தோழர் இப்னு அப்பாஸ் – நூல் புகாரி(1601)

    இந்த நபி மொழி மூலம் கஃபாவுக்குள் நபி ஆப்ரஹாம் மற்றும் நபி இஸ்மாயீல் போன்றவர்களின் சிலைகள்தான் இருந்தது. அதை வைத்து வழி பட்டு வந்தனர். அந்த சிலைகளை அப்புறப்படுத்தி அதை இறைவனை மட்டுமே வணங்கும் இடமாக மாற்றியது நபிகள் நாயகம் ஆவார்கள். உங்களுக்கு தவறாக யாரோ சொல்லியிருக்கின்றனர். அங்கு தர்ஹா எதுவும் முன்பு கிடையாது.

    //அநியாயமாக கொல்லக்கூடாது என்று யூதர்களுக்குச் சொன்னதாகத்தானே குரான் சொல்கிறது? முஸ்லீம்களிடம் கழுத்தை அறு என்றும் குரான் சொல்வதாலா?//

    ‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்’ என்று முஹம்மதே கூறுவீராக! அது ‘நீங்கள் இறைவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது’ என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள். வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக் கேடான காரியங்களில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நெருங்காதீர்கள்.இறைவன் தடை செய்துள்ளதால் எவரையும் அதற்கான உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

    -குர்ஆன் 6:151

    இந்த வசனத்தில் நேரிடையாக முகமது நபியிடமே மக்களுக்கு கூறுமாறு இறைவன் சொல்வதை பார்க்கவில்லையா? அநியாயமாக கொலை செய்வதை இறைவன் தடுத்துள்ளதாக இந்த வசனம் கூறுகிறது. இதை விட சிறப்பாக வேறு வசனங்கள் இருந்தாலும் அது யூதர்களுக்கு சொல்லப்பட்டது என்று நீங்கள் சொல்வதால்தான் இந்த வசனத்தை தருகிறேன்.

    //குரானை கொடுத்தாயிற்று. அவரவருக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுத்து அவரவர் குரானை படித்து புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுவதுதானே சரியான பரிட்சை? பிட்டு கொடுத்து பாஸ் பண்ண வைப்பது மாதிரி இத்தனை இமாம்கள் என்னோட பிட்டை யூஸ் பண்ணு என்னோட பிட்டை யூஸ் பண்ணு என்று அலைவது தவறுதானே?//

    கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்தாகி விட்டது. விளங்காத சில சப்ஜெட்டுகளை விளக்க கல்லூரியில் பேராசிரியர்கள் அவரவர் திறமைக்கு ஏற்ப பாடங்களை எடுக்கின்றனர். சில மாணவர்கள் லெக்சர்களைக் கேட்காமலேயே பரீட்சை எழுதி விடுவதும் உண்டு. சில மாணவர்களுக்கு பேராசியர்கள் பாடம் எடுத்தால்தான் விளங்கும். அப்படி பட்டவர்களுக்கு லெக்சர் தேவைதானே! அதைத்தான் மார்க்க அறிஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    பிட் அடிப்பது என்பது உலகில் நடக்கலாம். நித்தியானந்தா, மீர்ஸா குலாம் அஹமது, சாய்பாபா மாதிரி போலி ஆன்மீக வாதிகள் மக்களை பிட் அடித்து ஏமாற்றலாம். படைத்த இறைவனுக்கு யார் படித்து பரிட்சை எழுதுகிறார்கள். யார் பிட் அடித்து பரிட்சை எழுதுகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். எனவே இறைவனை ஏமாற்ற முடியாது.

    1. Avatar
      punai peyaril says:

      ஏதோ ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒண்ணுக்கு போக ஒதுங்குமிடத்தில் காமராஜருக்கு மணிமண்டபம் என்று அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. கோடி கோடியாய் கொட்டி மணி மண்டபங்கள் அண்ணாவிற்கு தான்.. அண்ணா பெயரைச் சொல்லாதது கழகம் காட்டிக் கொடுத்ததிற்கு கைமாறா..?

  32. Avatar
    suvanappiriyan says:

    திரு க்ருஷ்ணகுமார்!

    //ஜெனாப் சுவனப்ரியன், மிக மிகத் தவறான ஒப்புமை. காயிதே மில்லத் மற்றும் காமராஜர் மணிமண்டபம் எல்லாம் புதியதாகக் கட்டப்பட்டவை. பாமியான் புத்தர் சிலைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக காந்தாரத்தின் கலாசாரச் சின்னங்களாக அங்கிருந்தவை.//

    எந்த கலாசார சின்னமும் மனித நேயத்துக்கு பிறகுதான். ரஷ்யாவோடு பல ஆண்டுகள் போர்நடத்தி உருக்குலைந்து ஒரு நாடு பரிதவிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை அளிக்காமல் சிலைகளை காக்க பல மில்லியன் தருகிறோம் என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது? மேலும் ஆப்கானிஸ்தானத்தில் பவுத்தர்கள் எவருமே இல்லை. அங்கு சிதிலமடைந்த பவுத்த சிலைகள் இருப்பதால் யாருக்கு நன்மை?

    http://www.greenspun.com/bboard/q-and-a-fetch-msg.tcl?msg_id=005AZw

    பொருளாதார தடைகளால் அடிப்படை வசதிகள் சீர்குலைந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவினால் மரணித்துக்கொண்டிருக்கும் தேசத்தில் பாமியான் புத்தச்சிலையை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் ஐ.நாவின் யுனெஸ்கோ முயற்சி மேற்கொண்டது.குழந்தைகள் பட்டினியால் வாடும் பொழுது தங்களது தேசம் வறுமையில் உழலும் போது அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் உயிரற்ற சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்களா? என்ற ஆதங்கமும், ஆத்திரமும் ஆப்கான் மக்களை புத்தர் சிலை உடைக்க காரணமானது.ஆனால், சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி ஆப்கானுக்கு நேரடியாக சென்று சிலைகளை உடைக்க வேண்டாம்.அருங்காட்சியகத்தில் கொண்டு செல்லுங்கள் என்று உபதேசித்தார்.

    கண்ணதாசன் பாடினார் ‘ தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான் ‘. பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது. இன்னும் நான் பாமியான் புத்தச் சிலைகள் உலகத்தின் பாரம்பரியச் சொத்து என்று கூறுவதைக் கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவை ஆப்கானியச் சொத்துக்கள். அவ்வளவுதான். பல கிராமங்களில் அய்யனார் சிலைகள் இருக்கின்றன. பெரிய குதிரை சிலைக்குப் பக்கத்தில் அய்யனார் வீரமாக சிமிண்டினால் செய்யப்பட்டு நின்று கொண்டிருக்கிறார். அவைகள் கிராமத்துச் சொத்து. அவைகளை உருவாக்குவதோ, உடைப்பதோ, மீண்டும் உருவாக்குவதோ, எல்லாம் அந்த கிராமத்தவரின் உரிமை. உலகச்சொத்து உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் அவர்கள் ஊரில் வந்து அவர்களைத் தடுப்பதை விரும்பமாட்டோம். தாலிபான் உடைக்கும் சிலைகள் பெரியவையாக இருக்கலாம், மிகப்பழமையானவையாக இருக்கலாம். இருந்தால் என்ன ? பல கிராமங்களில் அய்யனார் சிலைகள் கவனிப்பாரற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதுபோல் பவுத்தர்களே இல்லாது கவனிப்பாரற்று பழுதடைந்த சிலைகளை இடிப்பதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் பொகிறது. வேண்டுமானால் அதை விட பெரிய சிலைகளை சீனாவிலோ, ஜப்பானிலோ, தாய்லாந்திலோ கட்டிக் கொள்ளட்டுமே? யார் தடுத்தது?
    ஆகவே தாலிபானைத் திட்டவேண்டிய அவசியம் என்ன ? நான் அவர்களது கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கொள்கைகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவை அவர்களது கொள்கைகள். அவர்களது சிலைகள். அவர்களது கலாச்சாரம். அவர்களது வரலாறு. உங்களுக்கு அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களைப்போல ஆகாமலிருங்கள் என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

    //க்ஷமிக்கவும் “நுணலும் தன் வாயாற் கெடும்” என்ற வசனமே நினைவுக்கு வருகிறது.//

    இப்பொழுது இந்த பழமொழி யாருக்கு பொருந்தும் என்பதை படிப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவோம். :-)

  33. Avatar
    suvanappiriyan says:

    திரு பொன் முத்துக்குமார்!

    ‘பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை’ என்று சொன்னால் வேறு யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்ற அர்த்தம் அதில் மறைந்துள்ளதை மறந்ததும் ஏனோ ஐயன்மீர்?

  34. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,

    //உங்களுக்கு தவறாக யாரோ சொல்லியிருக்கின்றனர். அங்கு தர்ஹா எதுவும் முன்பு கிடையாது//

    http://researchislam.com/?page_id=99
    The graves of Ismael(Ishmael) and his mother Hajera(Hagar) are within this semi circular wall.

    http://www.ezsoftech.com/hajj/hajj_article1.asp
    he graves of Ishmael (p.b.u.h.) and his mother Hager (p.b.u.h.) are within this semi circular wall (Hateem).

    http://www.muslimphilosophy.com/ik/Muqaddimah/Chapter4/Ch_4_06.htm
    We know from the two Sahihs that the most excellent places on earth 33 are the three mosques of Mecca, Medina, and Jerusalem. Mecca is the house of Abraham. God commanded Abraham to build it and to exhort the people to make the pilgrimage thither. He and his son Ishmael built it, as is stated in the Qur’an.34 He fulfilled God’s commandment in this respect. Ishmael dwelt there with Hagar and the Jurhum (tribe) who lived with them, until they both died and were buried in the hijr 35 of (the Ka’bah).

    இது மாதிரி நிறைய இருக்கின்றன. அங்கே இஸ்மாயீலையும் அவரது தாயார் ஹாகரையும் அடக்கம் செய்துள்ளதாகத்தான் பல இஸ்லாமிய தளங்கள் சொல்லுகின்றன.

    //இறைவன் தடை செய்துள்ளதால் எவரையும் அதற்கான உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்.//

    அது என்ன உரிமை? அடிமைக்கு அடிமை, பெண்ணுக்கு பெண், ஆணுக்கு ஆண் என்று முன்னால் முகம்மது சொன்னாரே.. அந்த உரிமையா? அந்த கேள்விக்கே இன்னும் பதில் சொல்லலையே!

    //கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்தாகி விட்டது. விளங்காத சில சப்ஜெட்டுகளை விளக்க கல்லூரியில் பேராசிரியர்கள் அவரவர் திறமைக்கு ஏற்ப பாடங்களை எடுக்கின்றனர். சில மாணவர்கள் லெக்சர்களைக் கேட்காமலேயே பரீட்சை எழுதி விடுவதும் உண்டு. சில மாணவர்களுக்கு பேராசியர்கள் பாடம் எடுத்தால்தான் விளங்கும். அப்படி பட்டவர்களுக்கு லெக்சர் தேவைதானே! அதைத்தான் மார்க்க அறிஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.//

    நான் சொன்ன உவமை தவறு என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். கல்லூரியில் யார் பாடம் சொல்லித்தர முடியும்? வாழ்க்கை ஒரு பரிட்சை, அதற்கு கோனார் நோட்ஸ் இதுதான் என்று குரானை நீங்கள் காட்டுவதால், ஏற்கெனவே அந்த பரிட்சையை பாஸ் செய்தவர்கள்தான் சொல்லித்தர முடியும். இன்றைக்கு உயிரோடு இருக்கும் எவரும் மற்றவருக்கு இதுதான் சரியான வழி என்று சொல்லித்தர முடியாது. அப்படி சொல்லித்தருபவர்கள் நிச்சயமாக ஏமாற்றுக்காரர்களாகத்தான் இருக்கமுடியும். இந்த லட்சணத்தில், ஷியா கொள்கைதான் சரி என்று சுன்னிகளை கொல்வதும், சுன்னி கொள்கைதான் சரி என்று ஷியாக்களை கொல்வதும், அஹ்மதியா கொள்கை தவறு என்று அவர்களை இருவரும் கொல்வதும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து கிறிஸ்துவர்களை கொல்வதும் சரியா? ஏனென்றால், எந்த கொள்கையுமே உறுதியாக சரியான கொள்கை என்று உயிரோடு இருக்கும் யாராலும் நிச்சயமாக சொல்லமுடியாது. எல்லோருமே யூகத்தின் அடிப்படையில்தானே சொல்கிறார்கள்? வெற்று யூகத்தின் அடிப்படையில் இப்படி வன்முறையும் பிரச்சாரமும் தேவையா?

  35. Avatar
    தங்கமணி says:

    //சில மாணவர்கள் லெக்சர்களைக் கேட்காமலேயே பரீட்சை எழுதி விடுவதும் உண்டு. சில மாணவர்களுக்கு பேராசியர்கள் பாடம் எடுத்தால்தான் விளங்கும்.//
    அப்படியென்றால் ”இந்த இறைவன்” எல்லோரையும் சமமாக படைக்கவில்லையா?

  36. Avatar
    punai peyaril says:

    தங்கமணி, சௌதி ஏர்லைன்ஸில் ஒரே வகுப்பு தான்… ஒரே மீல்ஸ் தான் வேறுபாடே கிடையாது. சௌதியில் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விலை தான் வேறுபாடே கிடையாது… சௌதி பெண்களைப் போல் தான் பிலிப்பினோ, பாக்கி, இந்திய பெண்கள் நடத்தப்படுகிறார்கள். சௌதியில் கரன்சியில் ஒரே டினாமினேஷன் தான். பணக்காரன் ஏழை என்ற பாகுபாடே கிடையாது… கம்யூனிஷம் சாதிக்க முடியாததை அங்கு சாதித்துள்ளார்கள். இவ்வளவு ஏன், மன்னர் குடும்பத்துடன் சாமான்யனும் சமமாக பஸ்ஸில் தான் போகிறார்கள்.. காரே கிடையாது.. மெய்யாலுமுலே….

  37. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //ஷியா கொள்கைதான் சரி என்று சுன்னிகளை கொல்வதும், சுன்னி கொள்கைதான் சரி என்று ஷியாக்களை கொல்வதும், அஹ்மதியா கொள்கை தவறு என்று அவர்களை இருவரும் கொல்வதும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து கிறிஸ்துவர்களை கொல்வதும் சரியா? ஏனென்றால், எந்த கொள்கையுமே உறுதியாக சரியான கொள்கை என்று உயிரோடு இருக்கும் யாராலும் நிச்சயமாக சொல்லமுடியாது. எல்லோருமே யூகத்தின் அடிப்படையில்தானே சொல்கிறார்கள்? வெற்று யூகத்தின் அடிப்படையில் இப்படி வன்முறையும் பிரச்சாரமும் தேவையா?//

    ‘இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தையை செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக! அவர்கள் அறியாதக் கூட்டமாக இருப்பதே காரணம்.’
    -குர்ஆன் 9:6

    இங்கு மாற்று மதத்தவர்களைக் கூட சிரமப்படுத்தாமல் அவர்களை பத்திரமான இடங்களில் அபயமளிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான். அவர்கள் விளங்காமல் இருக்கிறார்கள் என்று பரிதாபமும் படுகிறான்.

    ‘முஹம்மதே! உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
    -குர்ஆன் 10:99

    இங்கு சிலரை இஸ்லாத்தை ஏற்க வற்புறுத்தியமைக்காக முஹமது நபியை இறைவன் கடிந்து கொள்வதை பாருங்கள். எனவே இஸ்லாத்தில் இணைய எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்று விளங்குகிறோம்.

    ‘நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்: தீமையைத் தடுப்பார்கள்.’
    -குர்ஆன் 9:71.

    இந்த வசனத்தின் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை என்பதை விளங்குகிறோம்.

    ////சில மாணவர்கள் லெக்சர்களைக் கேட்காமலேயே பரீட்சை எழுதி விடுவதும் உண்டு. சில மாணவர்களுக்கு பேராசியர்கள் பாடம்////
    //அப்படியென்றால் ”இந்த இறைவன்” எல்லோரையும் சமமாக படைக்கவில்லையா?//

    ‘அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்’
    -குர்ஆன் 39:9

    ‘உங்களில் நம்பிக்கைக் கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் இறைவன் பல தகுதிகளை உயர்த்துவான்’
    -குர்ஆன் 58:11

    இந்த வசனங்களின் மூலம் மனிதன் தனது அறிவை மேம்படுத்தி நேர் வழியில் சென்றால் அவர்களின் தகுதியை உயர்த்துவதாக இறைவன் கூறுகிறான். நான் சவுதி வந்த புதிதில் சினிமா பைத்தியமாக இருந்தேன். எதேச்சையாக இணையத்தில் நேசகுமார் என்ற ஒருவர் இஸ்லாத்தை தாறுமாறாக விமரிசித்து பதிவு எழுதியிருந்ததை படித்தேன். அவர் சொல்வது உண்மையா? நாம் பின்பற்றும் மார்க்கம் இப்படித்தான் இருக்கிறதா? என்று தேடலில் இறங்கினேன். நான் மதரஸா சென்று அரபி மற்றும் இஸ்லாத்தை படித்தவன் கிடையாது. ஓய்வு நேரங்களை குர்ஆனை ஆராய்வதில் செலவிட்டேன். பி.ஜெய்னுல்லாபுதீன் என்ற அறிஞரின் அறிமுகமும் கிடைத்தது. பிறகு எனது ஆர்வங்கள் அனைத்தும் சினிமாவில் இருந்து குர்ஆனை நோக்கி பரிணமித்தது. நானாக ஆர்வத்தில் இவற்றை கற்றுக் கொண்டேன். இன்று ஓரளவு விளக்கம் தரும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளதற்கு எனது ஆர்வத்தை திருப்பி விட்டதே காரணம். இல்லை என்றால் நானும் சினிமா மோகத்தில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன்.

    சிறந்த குடும்பம்: சிறந்த மனைவி: சிறந்த குழந்தைகள்: சிறந்த வேலை: யாரிடமும் கையேந்தாத அளவுக்கு ஓரளவு பொருளாதாரம்: சொந்த ஊரிலும், வேலை செய்யும் இடத்திலும் சிறந்த மதிப்பு: என்று அமைதியாக வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தேர்ந்தெடுத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. மனிதர்களை இறைவன் படைக்கும் போது சகலரையும் சமமாகவே படைக்கிறான். நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுவது நமது கையில்தான் உள்ளது.

  38. Avatar
    suvanappiriyan says:

    திரு புனை பெயரில்!

    //சௌதி பெண்களைப் போல் தான் பிலிப்பினோ, பாக்கி, இந்திய பெண்கள் நடத்தப்படுகிறார்கள். சௌதியில் கரன்சியில் ஒரே டினாமினேஷன் தான். பணக்காரன் ஏழை என்ற பாகுபாடே கிடையாது… கம்யூனிஷம் சாதிக்க முடியாததை அங்கு சாதித்துள்ளார்கள். இவ்வளவு ஏன், மன்னர் குடும்பத்துடன் சாமான்யனும் சமமாக பஸ்ஸில் தான் போகிறார்கள்.. காரே கிடையாது.. மெய்யாலுமுலே….//

    ஜனநாயக நாடான நம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நீங்கள் சமமாக அமர்ந்து பயணித்து விட்டு இந்த கேள்வியைக் கேட்டால் நலமாயிருக்கும். அமைச்சர்களே மேடையில் கை கட்டி நின்றதை தினமும் பார்க்கிறோமே. தடாலடியாக அவர் காலில் அவரை விட மூத்தவர்கள் விழுந்து சுய மரியாதையை அடகு வைப்பதை தினமும் பார்க்கிறோமே!

    இங்கு மன்னர் ஆட்சிதான். அவர் காலில் எவரும் விழுவது இல்லை. பள்ளிக்கு தொழுக வந்தால் எல்லோரோடும் வரிசையில்தான் நிற்க வைக்கப்படுவார். சில நாட்களுக்கு முன்பு இறந்த மன்னரின் தம்பி இளவரசர் நாயிஃப் எல்லோரும் அடக்கம் பண்ணும் பொது மைய வாடியில்தான் அடக்கம் செய்யப்பட்டார். அந்த சமாதிக்கு மேல் பளிங்கு கற்கலால் அலங்காரம் செய்யப்படவில்லை. உலக பணக்காரர்களில் ஒருவரான அவரின் உடல் மண் தரையில் கிடத்தப்பட்டு சாதாரண கூழாங்கற்களும் மண்ணையும் கொண்டு மூடப்பட்டது. ஒரு மழை பெய்தால் அந்த மண்ணும் கரைந்து சமாதி தரையோடு தரையாகி விடும். அண்ணா, எம்ஜிஆர், ராஜாஜி, காமராஜரின் அடக்க ஸ்தலங்கள் மற்றவர்களை விட எவ்வளவு கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது. எத்தனை லட்சங்கள் இன்று வரை செலவழிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் நம்மைப் போன்ற ஒரு ஏழை நாட்டுக்கு இந்த செலவுகள் தேவையா? அதையும் மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் நிலைதானே நம் தமிழ்நாட்டுக்கு.

    எனவே சவுதியை பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டு டாஸ்மார்க் கடையில் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் 60 சதவீதமான உடன்பிறப்புகளையும் ரத்தத்தின் ரத்தங்களையும் கரை சேர்க்க முயற்சி எடுங்கள். புண்ணியமாகப் போகும்.

  39. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்
    கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அரைத்த மாவையே அரைத்திருக்கிறீர்கள். இது என்ன உங்களிடம் புதுசா?
    //இந்த வசனங்களின் மூலம் மனிதன் தனது அறிவை மேம்படுத்தி நேர் வழியில் சென்றால் அவர்களின் தகுதியை உயர்த்துவதாக இறைவன் கூறுகிறான்.//

    அது சரிங்க.ஏன் ஒருத்தரை முட்டாளாகவும் மற்றொருவரை புத்திசாலியாகவும் படைக்க வேண்டும்? கல்வி வழங்கப்பட்டோர் என்பது யார்? கல்வியை தானாக பெற்றுகொண்டார்களா, அல்லது ”இந்த இறைவனால்” வழங்கப்பட்டார்களா? அதனைத்தான் கேட்டேன். புரிந்தாலும் புரியாதது மாதிரி அரைத்த மாவையே அரைப்பது ஏன்?

    //‘முஹம்மதே! உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
    -குர்ஆன் 10:99//
    அப்புறம் ஏன் அத்தியாயம் 9, எல்லோரையும் மதம் மாற்றும்படி கோருகிறது? ஏன் முன்னுக்குப் பின் முரணானவாசகங்கள் குரானில் இருக்கின்றன?
    நாஸிக் மன்சூக் என்று நீக்கப்பட்ட வசனங்கள், நீக்கிய வசனங்கள் என்று வைத்துகொள்கிறீர்களே என்று முன்னரே கேட்டேன். அதற்கும் பதில் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துகொண்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் சொல்லும் “அமைதி வசனங்கள்” மெக்கா வசனங்களை எல்லாம் மெதீனா வசனங்கள் நீக்கிவிட்டன என்று எல்லா இஸ்லாமிய “அறிஞர்களும்” கூறுகிறார்கள். நீங்கள் வழக்கம் போல “அமைதி வசனங்களை” போட்டு ஊரை ஏமாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள்.

  40. Avatar
    punai peyaril says:

    ஆமா, பகைவனுக்கு அருள்வாய் என்று சொல்லும் இந்துமதம் எங்கே…. கொலையை நியாயப்படுத்தும் மனநிலையை உருவாக்கும் நிலை எங்கே….

  41. Avatar
    முனாவர் says:

    பெயர்தாங்கி முஸ்லீமான சுவனப்பிரியன் என்பவர் சொல்லுவதை இஸ்லாமின் நிலைப்பாடாக எடுத்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். அவர் தப்பும் தவறுமாக குரானை பொய் என்று ஹதீஸ்கள் அடிப்படையில் எழுதுகிறார்.

  42. Avatar
    தங்கமணி says:

    இதுவரை கேட்ட கேள்விகளுக்கு சுவனப்பிரியன் அளிக்காத பதில்கள்
    1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.

    2) மெக்கா தர்ஹா அல்ல என்று அவர் சொன்னதற்கு, மெக்காவில் இஸ்மாயீலும் அவரது தாயாரும அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமிய பக்கங்களே சொல்கின்றன என்றால், மெக்கா தர்ஹா தானே? அதற்கு பதில் எங்கே?

    3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; என்று குரானே சொல்லும்போது, முனாவர் அவர்கள் சொல்வது போல ஹதீஸை வைத்து குரானை பொய் என்று சொல்லுவது ஏன்?

    4) நாஸிக் மன்சூக் வசனங்களை லிஸ்டு போட்டு எவை நீக்கப்பட்ட வசனங்கள் என்று சுவனப்பிரியன் விளக்குவாரா?

  43. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!
    //இதுவரை கேட்ட கேள்விகளுக்கு சுவனப்பிரியன் அளிக்காத பதில்கள்//
    1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.//
    சபாஷ்! முனாவர் வழியிலேயே நீங்களுமா :-) ஏற்கெனவே விளக்கம் கொடுக்கப்பட்ட கேள்வியை திரும்பவும் முதலில் இருந்தா! ஓகே…

    2:178: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப் பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண், இருப்பினும், (கொலை செய்த) அவனுக்கு, அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும். இது உங்கள் இறைவனிடம் இருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும். ஆகவே இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

    2:179: நல்லறிவாளர்களே! கொலைக்காக பழிதீர்க்கும் இவ்விதியின் மூலம் உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை (த் தீமைகள் இன்று) காத்துக் கொள்ளலாம்.

    இப்போது இந்த வசனத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்.
    அதாவது சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன்,அடிமைக்கு அடிமை, பெண்ணுக்கு பெண், என இவ்வசனம் பழிவாங்கல் குறித்துப் பேசுகிறது.இது பற்றிய இவர்களது புரிதலாகப்பட்டது சுருக்கமாக….

    ஒருவன் இன்னொருவனின் மனைவியை கொலை செய்துவிட்டால்,(அதாவது பெண்ணை) அதற்கு பகரமாக எதிர் தரப்பில் உள்ள பெண்ணை பழிவாங்கச் சொல்கிறது இஸ்லாம்,என விமர்சிக்கின்றனர்..

    ஓக்கே.. இவர்களின் நேரடிப் புரிதல் எல்லை அவ்வளவுதான் என்றாலும்.இந்த இடத்தில் இஸ்லாம் நீதி குறித்து பேசுகிறது…இல்லையா..ஆனால் வசனக்கருத்து மாற்றமாக நமக்குத் தெரிகிறதேன்னு கொஞ்சமாவது இவங்க யோசிக்கலாம்… அடுத்து…இவர்களின் சிந்தனைப்படி இப்படிப்பட்ட (அதாவது கொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கு, பகரமாக எதிர்தரப்பு பெண் என்று….) பழிவாங்கல் சட்டம் இருந்தால்.. இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் வசனம் இவ்விதியால் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது எனச் சொல்கிறதே… முஸ்லிம்களுக்கான இந்தச் சட்டத்தில் இப்படி (இவர்கள் கூற்றுப்படியான) ஒரு விதி இருந்தால், எப்படி வாழ்வு இருக்கமுடியும்? ஒருவரை ஒருவர் அநீதியாக கொலை செய்து கொண்டு மாண்டல்லவா போவர் என்றாவது யோசித்திருக்கலாம்..இல்லை…

    சரி…அந்த வசனத்தை பார்ப்போம்.முதலில் –
    //கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது//
    பழி தீர்ப்பது குறித்து ஆரம்பிக்கும் இந்த வசனம் கொலை செய்தவன் குறித்து பேசுகிறது. முதல் தரப்பு கொலை செய்யப்பட்டவர். கொல்லப்பட்டுவிட்டார்.இனி அவர் வரப்போவதில்லை. தண்டிக்கவோ மன்னிக்கவோ அவரால் முடியாது.ஆனால் கொலை செய்தவர்? தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது நியதி.

    அதனால்தான் இந்த வசனம் இரண்டாம் தரப்பை ”பழிதீர்ப்பது” குறித்து ”கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது” என ஆரம்பிக்கிறது.

    சரி எப்படி பழிதீர்ப்பது? பாரபட்சம் இன்றி,யார் கொலை செய்தாரோ அவரே கொல்லப்பட வேண்டும். இல்லையா? இதுதானே நீதி.

    ஆம்!!!
    ஆனால் இஸ்லாத்திற்கு முந்தைய அக்காலத்தில் நடந்தது அதுவல்ல. பெண்களின் மற்றும் அடிமைகளின் உயிரானது மதிப்பற்றதாக கருத்தப்பட்டது. ஒரு எஜமான் ஒருவனை கொலை செய்துவிட்டால்,பழிதீர்க்க அவன் தனது அடிமையை முன்னிருத்துவதும். பெண்களை ஆண் கொலை செய்தால் அவனை கொல்லாமல் விடுவதும். சுதந்திரமானவன் அடிமையை கொன்றால் அதற்கு பகரமாக நஷ்டஈடு தருவதும் பெண்ணை பெண் கொன்றால் கொன்றவளது உயிர் அத்தனை மதிப்பில்லாதது என அவர்கள் கருதியதால் கொன்றவள் ஈட்டுத்தொகையுடன் விடுதலை பெருவதுமான பாரபட்ச அநீதிகளை உடைக்கவே மேற்கண்ட வசனம் இறங்கியது.

    முன்னமே சொன்னது போல் இரண்டாம் தரப்பான, அதாவது கொலை செய்தவன் குறித்து இவ்வசனங்கள் பேசுகிறது. கொலை செய்த சுதந்திரமானவனுக்கு பகரமாக அடிமையை பழிகொடுக்கும் வழக்கம் உடைக்கப்பட்டு அதே சுதந்திரமானவன் எவனாக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்.அவன் அடிமையையோ, பெண்ணையோ கொன்றால் ஈட்டுத்தொகை கொடுத்து தப்பிக்கும் வழக்கம் ஆகாது.ஆக சுதந்திரமான அந்த கொலையாளிக்கு எதுவும் ஈடாகாமல் அந்த சுதந்திரமானவனே பழிதீர்க்கப்படவேண்டும் என்றும்

    அடிமைக்கு அடிமை – அதாவது அடிமை இன்னொரு அடிமையை கொன்றால் ஈட்டுத்தொகை, ஏனெனில் கொல்லப்பட்டவனும் அடிமை.அவனது உயிர் மதிப்பில்லாது கருதப்பட்டதால். ஆனால் இனி அது நடக்காது.கொலைசெய்த அடிமைக்கு பகரமாக ஈட்டுத் தொகை இல்லை,அதே அடிமையே பழிதீர்க்கப்பட வேண்டும்.

    இதே போல் பெண்ணுக்கு பெண் என்பது, கொலை செய்த பெண்ணுக்கு ஈட்டுத்தொகை பகரம் இன்றி அவளே பழிதீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்த வசனத்தின் சாராம்சம்.

    ஆக! இறுதியாக, கொலை செய்த யாராக இருந்தாலும் அவரவருக்கு தக்க பகரங்களை கொடுத்து தப்பித்துக்கொள்வது ஆகாது.யாராக இருந்தாலும் அதாவது சுதந்திரமானவனுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)சுதந்திரமானவனும்,அடிமைக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)அடிமையும், பெண்ணுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)பெண்ணும் பழிவாங்கப்படவேண்டும்.எனும் நீதியை இந்த வசனம் எடுத்துரைக்கிறது.

    இவ்வளவு தெளிவாக அன்றைய காட்டுமிராண்டித் தனத்தை துடைந்தெறிந்த வசனம் உங்களுக்கு வித்தியாசமாகபடுகிறதா?

    1. Avatar
      punai peyaril says:

      கண்ணை மூடிக்கொண்டு, ”காட்டு மிராண்டித் தனமாக நடந்து மக்களை பயமுறுத்துகிறார்களே இவர்கள்”- என்று சொல்லுங்கள்… எந்த இன முகம் உங்கள் மனக்கண்ணில் தோன்றுகிறது என்று மக்களே சொல்லுங்கள்….

  44. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //2) மெக்கா தர்ஹா அல்ல என்று அவர் சொன்னதற்கு, மெக்காவில் இஸ்மாயீலும் அவரது தாயாரும அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமிய பக்கங்களே சொல்கின்றன என்றால், மெக்கா தர்ஹா தானே? அதற்கு பதில் எங்கே?//

    இஸ்லாமிய பக்கங்கள் எல்லாம் இஸ்லாமிய வரலாறு ஆகி விடாது. ஒன்று குர்ஆன் சொல்லியிருக்க வேண்டும். அல்லது நபியின் ஹதீதுகள் ஆதாரபூர்வமானது நமக்கு கிடைக்க வேண்டும். இவைதான் இஸ்லாமிய வரலாறுகள் ஆக முடியும்.

    உங்கள் வாதப்படி அது நபி இஸ்மாயில் அவர்களின் தர்ஹாவாகவே இருக்கட்டுமே! அதற்கென்ன இப்போ! முகமது நபிக்கே தர்ஹா கட்டியாலும் அதை இடிக்க சொல்கிறது இஸ்லாம். எந்த நபிக்கும் தர்ஹா கட்ட சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. நபிகளை கண்ணியப்படுத்தவது அவர்கள் சொன்ன நல்லவைகளை கடைபிடிப்பதால் மட்டுமே! அவருக்கு தர்ஹா எடுத்து அவர் சொன்னதுக்கு மாற்றமாக வணக்க வழிபாடுகள் அமைத்துக் கொள்வது அல்ல.

    //3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; என்று குரானே சொல்லும்போது, முனாவர் அவர்கள் சொல்வது போல ஹதீஸை வைத்து குரானை பொய் என்று சொல்லுவது ஏன்?//

    யார் பொய் என்று சொன்னது? முனாவர் என்ற இஸ்லாமிய பெயரில் உளறும் ஒருவரின் கூற்றை நீங்கள் எப்படி ஆதாரமாக்குகிறீர்கள்?
    ‘நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்” ‘
    என்ற வசனத்தை இருவரும் வசதியாக மறைத்து விட்டு பேசுவது ஏன்? அதே போல் மற்ற பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். நபிகளின் மனைவியர் முஸ்லிம்களான அனைவருக்கும் அன்னை ஆதலால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள முடியாது. இப்படி விசேஷ கட்டளைகள் அவர்களுக்கு உண்டு..

    அந்த வசனத்தை தொடர்ந்து பொதுவாக முஸ்லிமான ஆண் பெண்களுக்கு இறைவன் கூறும் கட்டளையையும் பாருங்கள்.
    ‘”முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இறைவனை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும், ஆகிய அவர்களுக்கு இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்”.’
    -குர்ஆன் 33:35

    இந்த வசனத்தில் உலகில் உள்ள அனைத்து முஸ்லிமான ஆண் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்: எப்படி நடந்து கொண்டால் சொர்க்கத்தை அடையலாம் என்று அழகாக சொல்லியிருக்கிறான் இறைவன். வசனம் 33:32 ல் சொன்ன கட்டளை நபி அவர்களின் மனைவிக்கு: வசனம் 33:35 ல் இறைவன் விடும் கட்டளை உலக முஸ்லிம் ஆண் பெண் அனைவருக்குமானது. எனவே இதில் குழப்பமோ பொய்யோ எதுவும் இல்லை.

    எனவே முனாவர் என்ற போலி பெயரில் எழுதுபவரே இறைவனுக்கு பயந்து உண்மையான பெயரில் எழுதவும்..

    அடுத்து பெண்களுக்கு எந்த உரிமை இருக்கிறது என்பதை விளக்கும் குர்ஆன் வசனங்களையும் பார்ப்போம்…

    ‘அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை’
    -குர்ஆன் 2:187

    ‘பெண்களுக்கு கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.’
    -குர்ஆன் 2:228

    ‘சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு: பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
    குர்ஆன் 4:32

    இந்த வசனங்களெல்லாம் பெண்கள் அடிமைகள் அல்ல.அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை விளக்குகின்றன.

  45. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=264
    Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female.)

    Allah’s statement:

    ﴿الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالاٍّنثَى بِالاٍّنْثَى﴾
    (the free for the free, the slave for the slave, and the female for the female.) was abrogated by the statement life for life (5:45). However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills. Al- Bukhari reported that `Ali narrated that Allah’s Messenger said:

    «وَلَا يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِر»
    (The Muslim is not killed for the disbeliever (whom he kills).)

    ஆகவே நீங்களாக சொன்ன பொருள் தவறு.
    சுதந்திரமானவன் கொன்றால் அந்த சுதந்திரமானவனே கொல்லப்பட வேண்டும். அடிமை கொன்றால் அந்த அடிமையே கொல்லப்பட வேண்டும். பெண் கொன்றால், அந்த பெண்ணே கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் விளங்கிகொள்கிறீர்கள்.

    சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன் என்றால், சுதந்திரமானவன் கொல்லப்பட்டால் சுதந்திரமானவே கொல்லப்படவேண்டும் என்று பொருள். இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

    நீங்களாக வாய்க்கு வந்தாற்போல விளக்கம் அளிக்கிறீர்கள். உங்கள் விளக்கத்தை பார்த்து “தெளிவான” குரானா என்று முஸ்லீம்களே வியப்பார்கள்!

    இதுவும் ஏற்கெனவே நான் எழுதியதுதான். அடுத்த முறை கேட்கும்போது பழைய படி அரைத்த மாவையே அரையுங்கள். தன்னெஞ்சறிவது பொய்யற்க!

  46. Avatar
    தங்கமணி says:

    //33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; //

    முனாவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நீங்கள்தான் இது நபியின் மனைவியர் தவிர மற்றவர்களுக்கு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்.

    //33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; //

    எவ்வளவு கடுமையாக அஞ்ஞான கால பழக்கத்தையும் அந்த கால பெண்கள் தவறு செய்தார்கள் என்று குறிப்பிட்டு அறிவுரை வழங்குகிறது!

    அதாவது அஞ்ஞான காலத்தில்தான் பெண்கள் வெளியே சென்று புழங்கினார்கள். அது போல இருக்காதீர்கள் என்று நபிகளின் மனைவிகளுக்கு சொல்கிறது.

    இது மற்ற பெண்களுக்கு பொருந்தாது என்றால், இப்படி படிப்போம்.

    முகம்மது மனைவியர் அல்லாத மற்ற பெண்களே, நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டாம்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியுங்கள்; நீங்கள் அஞ்ஞான காலத்து பெண்கள் போலத்தான்.

    நன்றாகவா இருக்கிறது? இப்படி சொல்வதாகத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்.

    இங்கே வசனம் எவருக்கும் தெளிவாக புரியும்.
    இங்கே முகம்மதின் மனைவிகள் மற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஒரு சிறநத எடுத்துக்காட்டான ஒழுக்கத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வெளியில் திரியக்கூடாது. நல்ல வார்த்தை பேச வேண்டும் ஆகியவை.

    மீண்டும். தன்னனெஞ்சறிவது பொய்யற்க!

  47. Avatar
    தங்கமணி says:

    மீண்டும் தஃப்ஸீர்
    http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1860&Itemid=89
    These are the good manners which Allah enjoined upon the wives of the Prophet so that they would be an example for the women of the Ummah to follow. Allah said, addressing the wives of the Prophet that they should fear Allah as He commanded them, and that no other woman is like them or can be their equal in virtue and status. Then Allah says:

    ﴿فَلاَ تَخْضَعْنَ بِالْقَوْلِ﴾
    (then be not soft in speech,) As-Suddi and others said, this means, do not be gentle in speech when addressing men. Allah says:

    ﴿فَيَطْمَعَ الَّذِى فِى قَلْبِهِ مَرَضٌ﴾
    (lest he in whose heart is a disease should be moved with desire,) means, something unclean.

    ﴿وَقُلْنَ قَوْلاً مَّعْرُوفاً﴾
    (but speak in an honorable manner.) Ibn Zayd said: “Decent and honorable talk that is known to be good.” This means that she should address non-Mahram men in a manner in which there is no softness, i.e., a woman should not address a non-Mahram man in the same way that she addresses her husband.

    ﴿وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ﴾
    (And stay in your houses,) means, stay in your houses and do not come out except for a purpose. One of the purposes mentioned in Shari`ah is prayer in the Masjid, so long as the conditions are fulfilled, as the Messenger of Allah said:

    «لَا تَمْنَعُوا إِمَاءَ اللهِ مَسَاجِدَ اللهِ وَلْيَخْرُجْنَ وَهُنَّ تَفِلَات»
    (Do not prevent the female servants of Allah from the Masjids of Allah, but have them go out without wearing fragrance.) According to another report:

    «وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُن»
    (even though their houses are better for them.)

    ﴿وَلاَ تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَـهِلِيَّةِ الاٍّولَى﴾
    (and do not Tabarruj yourselves like the Tabarruj of the times of ignorance,) Mujahid said: “Women used to go out walking in front of men, and this was the Tabarruj of Jahiliyyah.” Qatadah said:

    ﴿وَلاَ تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَـهِلِيَّةِ الاٍّولَى﴾
    (and do not Tabarruj yourselves like the Taburruj of the times of ignorance,) “When they go out of their homes walking in a shameless and flirtatious manner, and Allah, may He be exalted, forbade that.” Muqatil bin Hayyan said:

    ﴿وَلاَ تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَـهِلِيَّةِ الاٍّولَى﴾
    (and do not Tabarruj yourselves like the Tabarruj of the times of ignorance,) “Tabarruj is when a woman puts a Khimar on her head but does not tie it properly.” So her necklaces, earrings and neck, and all of that can be seen. This is Tabarruj, and Allah addresses all the women of the believers with regard to Tabarruj.

    ﴿وَأَقِمْنَ الصَّلَوةَ وَءَاتِينَ الزَّكَـوةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ﴾
    (and perform the Salah, and give Zakah and obey Allah and His Messenger.) Allah first forbids them from evil, then He enjoins them to do good by establishing regular prayer, which means worshipping Allah alone with no partner or associate, and paying Zakah, which means doing good to other people.

    ﴿وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ﴾
    (and obey Allah and His Messenger.) This is an instance of something specific being followed by something general.

  48. Avatar
    Truth says:

    இங்கு காவ்யாவின் கீ போர்டிலிருந்து உதிர்ந்த முத்துக்களில் ஒன்று “வெள்ளைக்காரனைப் பார்த்துத் தான் நாம் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை மாற்றியிருக்கிறோம்” என்ற பாணியில்…அவர் தன்னை மேலும் ஹிந்து தான் நானும் என்பதைப் ஒரு வாசகர் சொல்வது போல “நானும் ரவுடி தான்” என்றிருக்கிறார். இவர் ஹிந்துவாக இருக்கும் பட்சத்தில் சாவித்திரியும், மைத்ரேயியும், அனுசூயையும், நம் வாசுகியும், ஒளவையாரும், அருந்ததியும், சீதையும் வாழ்ந்த இப்பாரத நாட்டில் எந்த ஆங்கிலேயனைப் பெண்ணினைப் பார்த்து இப்பெண்டிர் அவ்வாறு மேன்மையாக வாழ்ந்தார்கள், எந்த ஆங்கிலேயனைப் பார்த்து நம் ஆண்கள் அவர்களை அப்படி நடத்தினார்கள் என்று தெளிவித்தால் தேவலை.

    மேலும், பாகிஸ்தான் போன்ற நாடு இந்தியாவை எதிர்ப்பதற்கென்றே முனைந்து ஒவ்வொன்றையும் செய்யும் நாடு. குருமூர்த்தி அவர்களின் துக்ளக் கட்டுரையைப் படித்தாலே தெரியும். அதிலும் இஸ்லாம் என்பது இப்படித்தான் என்று புரிந்து கொள்பவர்கள் அஃபிஷியலாக ஒரு 72 பிரிவு, அனஃபிஷியலாக எத்தனையோ. அதிலும் மூளை குழம்பிப் போய் அனைத்திற்கும் இஸ்லாத்தை வம்பிழுத்து அல்லா தான் எங்களை இப்படி செய்ய சொல்கிறார் என்று கூவும் முட்டாள்கள் இந்த தாலிபன் மற்றும் தீவிரவாதிகள். இவர்களை உண்மையான இஸ்லாமிய அன்பர்கள் எவரும் விரும்புவதில்லை. இதெல்லாம் ஒரு புறமிருக்க, காவ்யாவிற்கு இங்கே ஹிந்து மதத்தை இழுப்பதற்கான காரணம் புரியவில்லை, ஒருவேளை அவர் அப்படித்தான் போல

    1. Avatar
      Kavya says:

      தாலிபான்களை விலாசியதற்கு நன்றி.

      இந்துமததத்தில் சொல்லப்பட்ட பெண்டிர்கள் நாம் காணவில்லை. காணவும் முடியாது. அவை வெறும் நம்பிக்கைகள். நாம் கண்டவை இந்துப்பெண்டிர்கள் அல்லது இந்தியப்பெண்கள் நடாத்தப்பட்ட, நடாத்தப்பட்டுவரும் முறைகளே. அனுராரதா ரமணன் பொட்டு வைத்ததனால் பொது மேடையில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டார். சங்கராச்சாரியார் (ஜெயேந்திரர்) பெண்கள் வேலைக்குப்போகக்கூடாதென்றார். கணவனே கண்கண்ட தெய்வம்; புல்லானாலும் புருசன் என்று அவன் செய்த எக்குற்றத்தையும் பொறுத்துக்கொள்பவளே தர்மப்த்தினி; கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப்பெய்யும் மழை என்று சொல்லி தமிழ்ப்பெண்டிரை மூளைச்சலவை செய்யும் பணியில் இறங்கியவரை அய்யன் என்றழைத்த்ப்போற்றுகிறார்கள். இன்னும் விதவைத்திருமணத்துக்கு எதிர்ப்பு; இராஜஸ்தானில் 8 வயதுப்பெண்ணுக்கு மணம்; பொட்டுக்கட்டுதல் சித்தூர் மாவட்டத்தில் இன்றும். பாடகி எம் எஸ் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்டிர் குலத்தில் வந்தவர். இன்றும் அம்மக்கள் மதுரையில் வாழ்கின்றனர் வார்சுகளாக; தாசி கலாச்சாரம் இன்றும் ஆந்திராவில்; தாலியைப்பற்றி விமர்சனம் பெண்களால் வைக்கப்படும்போது இந்து முண்ணனி எதிர்க்கிறது.

      இப்படி ஏராளம் ஏராளம்.

      இவைகளெல்லாம் ஒவ்வொன்றாகப்போக வெள்ளைக்காரனின் கலாச்சாரம் ஊடுருவும் போது நடக்கும். எல்லாவற்றையும் ஏற்பது மடமை. நல்ல எண்ணங்கள் எங்கிருந்தாலும் வரவேற்பது நல்லது என்பது ரிக்வேதம்.

      1. Avatar
        punai peyaril says:

        சங்கராச்சாரியார் (ஜெயேந்திரர்) பெண்கள் வேலைக்குப்போகக்கூடாதென்றார். –> அவர் ஒன்றும் , ஆண்களின் போகப் பொருளாக ஒன்றுக்கும் மேல் உறவு காண்பதை பொறுத்து அடிமையாக இருங்கள் என்று சொல்லவில்லையே… இப்போது தான் தெரியுது ஏன் கட் பண்ணுறாங்கன்னு.. ஒரு பயம் இருக்குமுல்ல…

  49. Avatar
    suvanappiriyan says:

    //கண்ணை மூடிக்கொண்டு, ”காட்டு மிராண்டித் தனமாக நடந்து மக்களை பயமுறுத்துகிறார்களே இவர்கள்”- என்று சொல்லுங்கள்… எந்த இன முகம் உங்கள் மனக்கண்ணில் தோன்றுகிறது என்று மக்களே சொல்லுங்கள்….//

    சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவிலேற்றி ரத்த ஆறு ஓட விட்டு தமிழகத்தில் ஓரிறைக் கொள்கையை குழி தோண்டி புதைத்த இனம் எந்த இனமோ அந்த இனம் ஞாபகம் வருகிறது. :-)

  50. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்
    பௌத்த மதமும் சமண மதமும் ஓரிறைகொள்கையா! எங்கு அப்படி எழுதியிருக்கிறது?

    /சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவிலேற்றி ரத்த ஆறு ஓட விட்டு தமிழகத்தில் ஓரிறைக் கொள்கையை குழி தோண்டி புதைத்த இனம் எந்த இனமோ அந்த இனம் ஞாபகம் வருகிறது //

    பௌத்த விகாரங்களையும் பல்கலைக்கழகங்களையும் அழித்து ரத்த ஆறு ஓட விட்டது முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.
    http://en.wikipedia.org/wiki/Nalanda

    In 1193, the Nalanda University was sacked by[12] the fanatic Bakhtiyar Khilji, a Turk;[13] this event is seen by scholars as a late milestone in the decline of Buddhism in India. The Persian historian Minhaj-i-Siraj, in his chronicle the Tabaqat-I-Nasiri, reported that thousands of monks were burned alive and thousands beheaded as Khilji tried his best to uproot Buddhism and plant Islam by the sword[14] the burning of the library continued for several months and “smoke from the burning manuscripts hung for days like a dark pall over the low hills.”[15]

    Nalanda was ransacked and destroyed by Turkic Muslim invaders under Bakhtiyar Khilji in 1193.[6] The great library of Nalanda University was so vast that it is reported to have burned for three months after the invaders set fire to it, ransacked and destroyed the monasteries, and drove the monks from the site.

    வேறெதோ மனதில் வைத்திருந்தால் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட பதிலையும் பார்த்துகொள்ளுங்கள்
    http://puthu.thinnai.com/?p=6639#comment-2276

  51. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //பௌத்த விகாரங்களையும் பல்கலைக்கழகங்களையும் அழித்து ரத்த ஆறு ஓட விட்டது முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.//

    சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

    பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச்சரம்’ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
    -Page 275, பல்லவர் வரலாறு,

    இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
    -South Arcot District, Gazetter, Page 369.

    பெரிய புராணம் தரும் செய்தி!

    ‘வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
    -தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
    -திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

    திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

    ‘மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.’
    -கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

    கழுவிலேறிய சமணர்கள்!

    ‘பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.’
    -சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
    1925, page 18

    ‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்….. திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.’
    ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
    1948, Page 18

    ‘அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.’
    க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
    1972, Page 144

    சமணர்கள் அனுபவித்த கொடுமை!

    ‘மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
    -அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
    1983, Page 28

    ‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.’
    ‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’
    -பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
    1925, Page 494.

    நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

    விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

    ‘கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.’

    ‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’

    பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
    1937, Page 1195.

    குலசேகர நல்லூர் சிவன் கோவில!

    இராமநாதபுரத்திலிருந்து வட மேற்கேயும், நல்லூர் திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கேயும் உள்ள குல சேகர நல்லூரில் சிவன் கோவில் இருக்கிறது.

    குலசேகர பாண்டியன் இந்தக் கிராமத்திலிருந்த சமணர்களைத் துரத்தி விட்டு சமணக் கொவிலை சைவக் கோவிலாக மாற்றினான்.
    -சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பத்தி ஏழு

    பஸ்தீபுரம்!

    கொள்ளேகால் தாலுகாவில் பஸ்தீபுரத்தில் இருந்த சமணக் கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.
    -சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தி ஆறு.

    விசயமங்கலம்!

    ஈரோடு தாலுகாவில் விசய மங்கலத்துக்கருகில் அரசண்ணாமலை என்ற குன்றில் சமணக் கோவில் இருந்தது. இப்போது அக் கோவில் சிவன் கோவிலாக மாற்றப் பட்டிருக்கிறது.
    -சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தேழு

    கும்பகோணம் விநாயகர் ஆலயம்!

    கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
    -மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.

    காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் ‘கணிகிலுப்பை’ என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
    -மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.

    -http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html

  52. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //பௌத்த விகாரங்களையும் பல்கலைக்கழகங்களையும் அழித்து ரத்த ஆறு ஓட விட்டது முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.//

    காஞ்சிபுரம்!

    காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.

    ‘காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.’
    -மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.

    ‘ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது ‘சத்தி’ மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.’
    -எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.

    காஞ்சிபுரத்திலுள்ள ‘புத்தர் கோவில் தெரு’ இப்போது ‘காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
    -சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

    காஞ்சி காமாட்சி!

    “scholars have for long opined that the idol now worshipped as Sankaracharya in the present Kamatchi Temple, originally represented the Buddha.”
    ‘காமாட்சியம்மன் ஆலயமே பௌத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள்.’
    -k.r.venkatraman, Devi Kamatchi in kanchi, Tirunelveli, 1973, Page 39.
    -எம் ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழ் வளர்த்த கோவில்கள், சென்னை,
    1989, Page 50,51.

    கச்சீஸ்வரர் கோவில்!

    காஞ்சிபுரத்தில் உள்ள கச்சீஸ்வரர் கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்களும் உள் மண்டபத்திலும் சில கல் தூண்களிலும் புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இவைகளால் இந்த ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவிலெனத் தெரிகிறது.
    -பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்கு.

    ஏகாம்பரேஸ்வரர் கோவில்!

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளி மதில் சுவர்களில் சில புத்த உருவங்கள் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும் என்பர் மயிலை சீனி வேங்கடசாமி.
    -பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து நான்கு.

    ஐயப்பன் கோவில்!

    மலையாள நாட்டில் ஐயப்பன் கோவில் என்று வழங்கப்படுவது முற்காலத்தில் பௌத்தக் கோவிலாக இருந்தது.
    சாத்தன் என்பது சாஸ்தா என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்கு மற்றொரு பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். சாத்தான் காவு என்றால் புத்தரது தோட்டம் என்பது பொருள்.
    -பௌத்தமும் தமிழும், பக்கம் எழுபத்து மூன்று.

    ‘புகழ் பெற்ற சாஸ்தா (புத்தமத) கோயிலே அய்யப்பன் கோவிலாக மாற்றப் பட்டது. தர்மசாஸ்தா என்கிற பெயரும், சரணம் என்கிற முழக்கமும் இதனை உறுதி செய்கின்றன.’
    -அ.மார்க்ஸ், மசூதிக்குப் பிறகு மாதா கோவிலா?, புதுவை, 1994, பக்கம் இருபத்தைந்து.

    புத்தர் ஆலயங்களில் கொள்ளை!

    ஈழ நாட்டில் முதல்சேனன் (கி.பி.831-851) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் படையெடுத்துச் சென்றான்.பல நகரங்களைக் கொள்ளையிட்டான். அத்தோடு நின்று விடவில்லை. ஈழத்திலிருந்த பொன்னாலான புத்தர் சிலைகளையும் புத்த விகாரங்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என்று மகா வம்சம் என்ற இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.
    -K.V.Subramaniya Iyer, Historical Sketches Of Ancient Deccan, 1917,Page 140-141

    “The Tamils now ravaged the country Anuradhapura, the beautiful city, was plundered and left desolate. The jewels in the kings place. The golden images which the piety of Kings and Princes had placed in Buddhist Vibaras, the golden statue of Buddha that Mihindu 2.
    -L.F.Blaze, A History of Ceylon,clombo,1903,Page 54.

    ஈழ நாட்டில் மன்னன் முதல்சேனன் சீமாறன் சீவல்லபனின் தாக்குதலைத் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் மலேயாவுக்கு ஓடியபோது பாண்டிய நாட்டுப் படையோடு போர் புரிந்த இளவரசன் மகீந்தன் மடிந்தான். பாண்டிய மன்ன்ன் புத்தர் ஆலயங்களிலுள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டதோடு பொன்னாலான புத்தர் சிலைகளையும் கவர்ந்து சென்றான் என்பதனை இலங்கை வரலாற்று நூலும் தெரிவிக்கிறது.

  53. Avatar
    த்ங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    தாலிபான் பாமியான் சிலை உடைப்புக்கு என்ன சொன்னீர்கள் என்று பார்த்துவிட்டு லிஸ்டு போட்டிருக்கலாம்.
    பல பௌத்த கோவில்கள் இந்து கோவில்களாககப்பட்டிருக்கின்றன என்று அந்தோணிசாமி மார்க்ஸ் சொல்லுவதிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுகிறீர்கள். ஓக்கே. என்ன பிரச்னை?

    சமணர் தற்கொலைகள் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன. அதனைத்தான பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம் காட்டுகிறது. அது தற்கொலைதான். கொலையல்ல.

    நீங்கள் எழுதியதை நீங்களே படித்து பாருங்கள்.

    இதுதான் முஸ்லீம்கள் பௌத்தர்களை கொன்ற ஆதாரப்பூர்வமான வரலாறு
    http://en.wikipedia.org/wiki/Nalanda

    In 1193, the Nalanda University was sacked by[12] the fanatic Bakhtiyar Khilji, a Turk;[13] this event is seen by scholars as a late milestone in the decline of Buddhism in India. The Persian historian Minhaj-i-Siraj, in his chronicle the Tabaqat-I-Nasiri, reported that thousands of monks were burned alive and thousands beheaded as Khilji tried his best to uproot Buddhism and plant Islam by the sword[14] the burning of the library continued for several months and “smoke from the burning manuscripts hung for days like a dark pall over the low hills.”[15]

    Nalanda was ransacked and destroyed by Turkic Muslim invaders under Bakhtiyar Khilji in 1193.[6] The great library of Nalanda University was so vast that it is reported to have burned for three months after the invaders set fire to it, ransacked and destroyed the monasteries, and drove the monks from the site.

    தட்சசீலம் taxila அழிக்கப்பட்டதும் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களாலேயே. இன்றைய ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பின்போது ப்ல லட்சக்கணக்கான பௌத்த துறவிகளும், பௌத்தர்களும் கொன்று குவிக்கப்பட்டனர்.

    சமண துறவிகளின் தற்கொலையை பற்றி விவரிக்கும் தமிழ் இலக்கியங்களை பேசுவதை விட முஸ்லீம் வரலாற்றாசிரியர்களே எழுதிய பௌத்தர்கள் இன அழிப்பை பற்றியும் நீங்கள் எழுதலாமே?

  54. Avatar
    paandiyan says:

    பொய்யும் புரட்டும் கலந்து முஸ்லிம்கள இஸ்லாமை பரப்ப வேண்டாம் அதற்கு மதசார்பின்மை என்ற லேபல் வைத்து ஒரு சில ஹிந்துகள் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மேலாக உதவுவார்கள்

  55. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //பல பௌத்த கோவில்கள் இந்து கோவில்களாககப்பட்டிருக்கின்றன என்று அந்தோணிசாமி மார்க்ஸ் சொல்லுவதிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுகிறீர்கள். ஓக்கே. என்ன பிரச்னை?//

    கிறித்துவ பெயர்தான் உங்களுக்கு பிரச்னையா? பொதுவுடமைவாதியான மார்க்ஸூக்கு பெயரைத் தவிர கிறித்தவத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் அறியாதவரா? மேலும் 10க்கு மேற்பட்ட மேற்கோள்களை காட்டியுள்ளேன். அவை அனைத்தையும் எழுதியது இந்துப் பெரியவர்கள் என்பதை நீங்கள் அறியாதவரா?

    //சமண துறவிகளின் தற்கொலையை பற்றி விவரிக்கும் தமிழ் இலக்கியங்களை பேசுவதை விட முஸ்லீம் வரலாற்றாசிரியர்களே எழுதிய பௌத்தர்கள் இன அழிப்பை பற்றியும் நீங்கள் எழுதலாமே?//

    ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முஸ்லிம்களும் தங்களுக்கு எதிரியானவர்களை தீர்த்துக் கட்டியதை நான் மறுக்கவில்லை. இதை ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே செய்தார்கள் என்ற பரப்புரையை உடைப்பதற்காகவே மேலே நான் சில ஆதாரங்களைக் கொடுத்தது. இன்னும் ஆதாரங்களை கேட்டாலும் வண்டி வண்டியாக இருக்கிறது. தரட்டுமா!

  56. Avatar
    சான்றோன் says:

    சுவனப்பிரியன் அவர்களே…..

    பல்லாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட ஹிந்துமதத்தில் , ஹிந்துக்களை மத வெறியர்களாக சித்தரிக்க சமனர் கழுவேற்றம் என்ற ஒரே ஒரு சம்பவத்தை மட்டும்தான் ஹிந்து மத விரோதிகளால் சுட்டிக்காட்ட முடிகிறது…இது ஒன்றே போதும் ஹிந்து மதத்தின் மேன்மையைக்காட்ட……

    நிற்க…ச‌மனர் கழுவேற்றம் என்பது , கிறிஸ்தவரான ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்ததை போலவோ., ஸ்டாலின் , மாவோகும்பல் கம்யூனிசத்தின் பெயரால் சொந்த தேசமக்களை கொன்று குவித்ததை போலவோ, இஸ்லாமியர்களான குர்திஷ் மக்களை சதாம் ஹுசேன் கொன்றொழித்ததை போன்ற‌தோ அல்ல…… நடந்தது ஒரு போட்டி……சம்பந்தப்பெருமானை போட்டிக்கு அழைத்தவர்கள் சமனர்கள்……அனல்வாதம் ,புனல்வாதம் இவற்றில் தோற்பவர்கள் கழுவிலேற வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தவர்களும் சமனர்களே……ஒரு வேளை போட்டியில் சம்பந்த்தப்பெருமான் தோற்றிருந்தால் அவரும் அவரோடு சேர்ந்த சைவர்களும் கழுவிலேற்றப்பட்டிருப்பர்……பிற மதத்தினரை நடத்துவதை பற்றி ஹிந்துக்களுக்கு உபதேசிக்கும் தகுதி வேறு எந்த மதத்துக்கும் இல்லை..

    ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம்……சுதந்திரத்தின் போது இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் ஹிந்து ,முஸ்லீம் இரண்டு மத‌த்தவரும் இருந்தனர்…..தற்போது இரண்டு தேசங்களிலும் நிலை என்ன? இந்தியாவில் இஸ்லாமியர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்? பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்? இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு உள்ள வழிபாட்டு சுதந்திரம் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களுக்கு வழங்க‌ப்படுகிறதா? இந்தியாவில் முஸ்லீம்களின் வழிபாடு தலங்களுக்கு உள்ள பாதுகாப்பு , பாகிஸ்தானில் ஹிந்துக்களின் கோயில்களுக்கு உள்ளதா? பாகிஸ்தானை விடுங்கள்… ந‌ம் தயவில் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்…… அரபு நாடுகளுக்கு செல்லும் ஹிந்துக்கள் சுவாமி படங்களை கூட எடுத்து செல்ல முடியாது….. இதுதான் இஸ்லாம் பிற மதத்தவரை மதிக்கும் லட்சணம்…..இந்த அழகில் ஹிந்துக்களை குறை சொல்ல வந்து விட்டீர்கள்……

  57. Avatar
    சான்றோன் says:

    சுவனப்பிரியன் அவர்களே….

    நியாயமாக வாதம் செய்ய முடியாமல் ,ஹிந்து மதத்தின் மீது புழுதி வாரித்தூற்றுவது என்று முடிவு செய்துவிட்டால், அதற்கு சீருடை அணியாத பாதிரியான அந்தோனிசாமி மார்க்ஸின் உளறல்கள் மட்டும் போதாது….வீரமணி , கொளத்தூர் மணி போன்ற அக்மார்க் பகுத்தறிவு வியாதிகளையும் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள்…….

  58. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    அன்புள்ள தங்கமணி,

    நீங்கள் ரொம்பவும் அவசரப்படுகிறீக்ர்கள். விக்கி பீடியாவை மேற்கோள் காட்டும் முன் இதையெல்லாம் எழுதக் காரணமானவர் யார் என்று விசாரித்திருக்கவேண்டும். உங்களுக்குத் தெரியும் பார்ப்பன சதி எங்கும் நிறைந்திருப்பது. சரித்திரத்தின் தொடக்கத்திலிருந்தே இதைக் காணலாம். சாணக்கியனைத் தெரியாதா? நந்த வம்சத்தையே கூண்டோடு ஒழிக்கச் சதி செய்த அந்தப் பார்ப்பன சதிகாரர்கள் இன்று வரை தொடர்வதைக் காணலாம். விக்கி பீடியாவையும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு வரலாற்றை இப்படியெல்லாம் திரித்து எழுதுகிறார்கள் என்று நானும், சுவனப் பிரியரும், காவ்யாவும் இன்னும் அனேக அமைத்மார்க்கத்தாரும் எண்ணுகிறோம். இன்றும் பாருங்கள் ப்ரனாப் என்ற ஒரு பார்ப்பான் எப்படியெல்லாம் சதி செய்து குடியரசு தலைவராகப் போகிறான். அன்னை சோனையாவை, கலைஞரின் சொக்கத் தங்கம் அதை கவிழ்க்க சுப்பிரமணியம் சாமி, ஜெயலலிதா என்றெ3ல்லாம் பாப்பர்னர்கள் கிளம்பி விட்டார்கள். அன்னை சோனிய வாஜ்பாயி என்ற ப்பார்ப்பனரை வெற்றி கொண்டபின்னும் இன்னொரு பார்ப்பனன் முளைத்துவிட்டான் பாருங்கள்.

    நீங்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். இருந்து அமைதி மார்க்கத்தில் சென்றால், ஜன்னத்தில் உங்களுக்கு 72 இளம் கன்னியர்கள் மதுக்குடமும் மஸ்லின் உடையுமாக உங்கள் வரவை புன்னகையோடு எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்கள்.

  59. Avatar
    suvanappiriyan says:

    திரு வெங்கட் சாமிநாதன்!

    //நீங்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். இருந்து அமைதி மார்க்கத்தில் சென்றால், ஜன்னத்தில் உங்களுக்கு 72 இளம் கன்னியர்கள் மதுக்குடமும் மஸ்லின் உடையுமாக உங்கள் வரவை புன்னகையோடு எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்கள்.//

    நான் வட்டி வாங்குவதில்லை. விபசாரம் செய்வதில்லை. திருடுவதில்லை. முடிந்த வரை பொய் பேசுவதில்லை. வகை வகையான உணவுகள் கண்ணெதிரே இருக்க ஒரு மாதம் முழுவதும் நோன்கிருக்கிறேன். தாய் தந்தையரை கண்ணியமாக நடத்துகிறேன். மனைவி குழந்தைகளோடு பாசத்தோடு நடக்கிறேன். மதுவை தொடுவது கூட இல்லை. இன்னும் ஒரு தனி மனித நல்லொழுக்கத்தின்படி கூடியவரை வாழ முயற்ச்சிக்கிறேன். இவை எல்லாம் எதற்காக? என்னை படைத்த இறைவன் இவ்வாறு என்னை இந்த பூமியில் வாழ சொல்லியிருப்பதால் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

    இவ்வளவு தியாகம் செய்து நான் வாழ்வதால் இதற்கு பகரமாக இறைவன் எனக்கு மறுமையில் சில சந்தோஷங்களை தந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு?

  60. Avatar
    தங்கமணி says:

    //தாலிபான் பாமியான் சிலை உடைப்புக்கு என்ன சொன்னீர்கள் என்று பார்த்துவிட்டு லிஸ்டு போட்டிருக்கலாம்.//
    அந்தோணிசாமி மார்க்ஸுக்கு பொதுவுடமைவாதி என்பது வேஷம். அது எனக்கு பிரச்னை அல்ல. நீங்கள் தாலிபான் பாமியான் சிலை உடைப்புக்கு என்ன சொன்னீர்கள் என்பதை திருப்பி பாருங்கள். இங்கே சிலைகளோ கோவில்களோ உடைக்கப்படவில்லை. அவை இந்து கோவில்களாக்கப்பட்டு வணங்கப்பட்டுவிட்டன. சமணரும்பௌத்தரும் அருகிபோய்விட்டபிறகு அங்கே இருந்த இந்துக்கள் அதனை இந்து கோவிலாக வழிபட்டுவிட்டார்கள். அதில் என்ன பிரச்னை என்று கேட்டேன்.
    நீங்கள் காட்டிய ஒரே சமணர்கள் அழிப்பு சமணர்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு. வாதில் தோற்ற சமணர்கள் அரசர் தடுத்தும், சைவமத்த்தினர் தடுத்தும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதனை சமணர் படுகொலையாக சித்தரிக்கிறார்கள் அந்தோணிசாமி மார்க்சு போன்றோர்கள்.

    இதனை வைத்து, நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தும், தட்சசீலம் பல்கலைக்கழகத்தை அழித்தும், அதிலிருந்து பல கோடிக்கணக்கான நூல்களை கொளுத்தியும், பல்லாயிரக்கணக்கான பௌத்த கல்விமான்களை உயிரோடு கொளுத்தியதும், கொன்றதும் உங்களுக்கு “தங்களது ஆட்சியை நிலைநிறுத்த” செய்த கொலைகளாக நியாயப்படுத்த முடிகிறது.

    1. Avatar
      Kavya says:

      ஒரு சின்ன டவுட் மணி.

      சமணர்கள் கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் என்பது உங்கள் வாதம்.

      அதைச்சரியென்று ஏற்றுக்கொள்வோம். தற்கொலை செய்தவர்கள் ஓரிரு நபர்களல்ல. பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் மதுரையில்.

      இதை ஒரு மன்னன் எப்படிப்பார்த்துக்கொண்டிருந்தான்? இதை மதுரை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?

      இது நியாயமா? நீதியா? நேர்மையா? சமணர்கள் எல்லாம் ரவுடிகளா? பலரைக்கொன்றழித்தவர்களா? வெறும் மதவாதிகள்தானே?

      இவர்கள் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் கழுமரமேறி தற்கொலைபண்ணியதை மதுரைப்பாண்டியன் வேடிக்கப்பார்த்துக்கொண்டிருக்க, மதுரை மக்கள் கைகொட்டிச்சிரிக்க, சம்பந்தரும், பரஞ்சோதியும் மங்கையர்க்கரசியாரும் நகைத்தனரா? தமிழர்கள் அவ்வளவு கொடிய மனத்தினரா?

      எங்கோயோ உதைக்கிறதே மணி?

  61. Avatar
    Indian says:

    @suvanappiriyan
    It is amusing to see Islamist like you justifying death and destruction of millions of Hindus caused by your murderous sect.Don’t you realize that only in majority Hindu India you still are able to denigrate our religion and get away with it? That is called tolerance on our part something which you will never understand. For peace to prevail, the most important thing for Muslims like you is to acknowledge the atrocities committed by your cult. That is the least you can do. After all your forefathers were Hindus. At least own up to your cult’s infamous past.
    By the way Allah must be having sadistic sense of humor. He denies the earthly pleasures to His followers now but happy to grant them the same with interest in afterlife!
    What happens to Muslim ladies who end up in heaven? What are their rewards?

  62. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //தாலிபான் பாமியான் சிலை உடைப்புக்கு என்ன சொன்னீர்கள் என்று பார்த்துவிட்டு லிஸ்டு போட்டிருக்கலாம்.//

    தாலிபான்களின் சிலை உடைப்பும் பவுத்தர்கள், சமணர்கள் ஆரியர்களால் துடைக்கப்பட்டதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தாலிபான்கள் சிலைகளை உடைக்கும் போது அங்கு வழிபட ஒரு பவுத்தரும் இல்லை. நான் தாலிபான்களின் அனைத்து செயல்களையும் நியாயப்படுத்தவில்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

    ஆனால் தமிழகத்தில் சமணர்களும் பவுத்தர்களும் தங்களின் வழிபாடுகளை சிறந்த முறையில் நடத்தி வரும் போதே ஆரியர்களால் வதை செய்யப் பட்டனர். இதற்கான ஆதாரங்களை விக்கி பீடியாவிலிருந்து கொடுக்கவில்லை. நம் முன்னோர்கள் எழுதிய வரலாற்று ஆதாரங்களையே சமர்ப்பித்துள்ளேன்.

    //Apologists explain Khalji sacked the University, torched its famous library, and slaughtered its monks in a case of mistaken identity. They allegedly mistook Nalanda University for a fort, and its monks for soldiers[3][4]. It does seem unlikely that a university full of ordained monks, and books could be mistaken for a military fort however. Indeed the alleged sacking of a Buddhist institution such as Nalanda would be characteristic of the regime’s reported iconoclasm[5].//

    படை எடுத்து வந்த மன்னன் நாலாந்தா பல்கலைக் கழகத்தை கோட்டை என்றும் மற்றும் அங்குள்ள துறவிகளை படை வீரர்கள் என்றும் தன்னுடைய படை வீரர்களால் தவறாக விளங்கி தவறு நடந்தை உணர்ந்த அரசன் பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதையும் அஙகு குறிப்பாக வைக்கப்படுவதை நீங்கள் பார்க்கவில்லையா? ஏனெனில் போர்க்களங்களில் கூட மதகுருமார்கள், பெண்கள், குழந்தைகளை கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

    http://en.wikipedia.org/wiki/Bakhtiyar_Khilji

    //Buddhism was in decline all over India during this time due to various reasons. The continuous rise of the Brahmins’ power and caste system in everyday life was a direct threat to Buddhist philosophy, which displaced its political and social base.[16] The Bhakti movement resulted construction of many Hindu temples which undermined Buddhist philosophy.[//

    http://en.wikipedia.org/wiki/Nalanda

    புத்த மதத்தின் அழிவு பிராமணர்களின் வரவு அதிகரித்ததாலும் சாதி முறை அதி வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டதாலும் என்ற குறிப்பும் நீங்கள் கொடுத்த சுட்டியிலேயே உள்ளதை வசதியாக மறந்து விட்டீர்களே தங்கமணி! ஒரு முஸ்லிம் அரசன் பல்கலைக் கழகத்தை அரச கோட்டை என்று தவறாக படை வீரர்களால் புரிந்து கொள்ளப்பட்டு அழிக்கப்பட்டதற்காக பிறகு மன்னிப்பும் கேட்கிறான். அதே சமயம் புத்தமதம் அழிந்ததற்கான காரணமாக பிராமணர்களின் வரவும் சாதி வித்தியாசம் புகுத்தப்பட்டதும் முக்கிய காரணமாக விவரிக்கப்படுவது நான் கொடுத்த ஆதாரங்களை மேலும் வலுவாக்குகிறது.

  63. Avatar
    தங்கமணி says:

    என்ன இவ்வளவுதானா சுவனப்பிரியன்?
    இடதுசாரி அறிவுஜீவிகளெல்லாம் பக்தியார் கில்ஜி படைக்குள் இந்துக்கள் புகுந்து நாலந்தாவை அழித்தார்கள். அந்த பழியை முஸ்லீம்கள் மீது போட்டுவிட்டார்கள் என்றெல்லாம் எழுதி போட்டிருக்கலாமே? முஸ்லீம்கள் முட்டாள்கள், அவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகத்துக்கும் ராணுவ கோட்டைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பது போல எழுதி முஸ்லீம்களை முட்டாள்கள் என்று காட்ட வேண்டுமா?
    கொடுக்கிற காசுக்கு உருப்படியாகக் கூட கூவவில்லை என்றால், இந்த ஆசாமிகளுக்கு காசு கொடுப்பதை பற்றி முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டுமே.

  64. Avatar
    suvanappiriyan says:

    திரு இந்தியன்!

    What happens to Muslim ladies who end up in heaven? What are their rewards?////

    ‘”முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இறைவனை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும், ஆகிய அவர்களுக்கு இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்”.’
    -குர்ஆன் 33:35

    ‘அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.’
    -குர்ஆன் 13:23

    இங்கு இறைவன் நல்லறம் புரிந்து தனது குடும்பத்தவரையும் நல் வழியில் கொண்டு சென்ற ஒரு மனிதன் தனது குடும்பத்தாரோடு சொர்க்கத்தில் நுழைவதாக கூறுகிறான். எனவே ஹூருல் ஈன்கள் என்ற படைப்பு எப்படி பட்டது? அந்த படைப்பின் சேவை சொர்க்கவாசிகளுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை இறைவனே அறிவான். அல்லது சொர்க்கத்துக்கு சென்றவர்கள்தான் நம்மிடம் வநது சொல்ல முடியும். அதுவும் தற்போதைக்கு முடியாத ஒன்று. ஒரே வழி ஹூருல் ஈன்கள் என்றால் அரபி அகராதியில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

    Mates – தோழமையானவர்கள் அல்லது துணையானவர்கள்

    Modest Gaze – அடக்கமான பார்வையுடையவர்கள்

    Most Beautiful of Eye – அழகிய கண்களையுடைவர்கள்

    Well-matched – மிகவும் பொருத்தமான துணையாளர்கள்

    Neither man nor invisible being will have touched ere then – களங்கமற்றவர்கள்

    வெறும் பாலியல் நோக்கிலேயே நாம் பார்ப்பதால் இந்த வசனங்கள் நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. ‘ஹூருல் ஈன்கள்’ என்ற அரபி பதத்துக்கு அரபி அகராதியும், குர்ஆன் விரிவுரையாளர்களும் தரும் விளக்கமே மேலே நாம் பார்ப்பது. அவர்கள் எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அது பெண்ணாகவும் இருக்கலாம், சொர்க்கத்துக்கென்றே பிரத்தியேகமாக படைக்கப்பட்ட (தேவதைகள்) படைப்பாகவும் இருக்கலாம். அவர்கள் யாரென்று அறியும் ஆவல் அதிகரித்தால் சொர்க்கத்துக்கு செல்ல என்ன அமல்களை செய்ய வேண்டுமோ அதை செய்து அதனை பெற்று ‘ஹூருல்ஈன்களை’ நமது கண்களால் பார்ப்போம். பலரது கேள்விக்கு அன்றுதான் விடை கிட்டும்.

    என்ன இந்தியன்? இந்த உலகில் நற்காரியங்கள் செய்து சொர்க்கத்தை அடைய நான் ரெடி! நீங்க ரெடியா? :-)

  65. Avatar
    Indian says:

    @suvanappiriyan
    Your apologetic explanation is the usual mumbo jumbo Taqiyya.I am sure YOU even in the heart of heart don’t believe this lengthy bull crap of yours. You have also not apologized for the death and destruction of Hindus and their temples by your Islamic mob. Conveniently you have ignored the earlier part of my comment.
    I believe in Islam there is no place for Muslim ladies in heaven.

  66. Avatar
    punai peyaril says:

    Most Beautiful of Eye – அழகிய கண்களையுடைவர்கள் –> அழகின் அடிப்படை இங்கு ஏன் வருகிறது…? அனைத்தும் ஊழ்வினை பயனின்றி , ஆண்டவன் எல்லாம் ஒருவன் ஒருவன் செயலென்றால், ஏன் அழகில்லாத கண்களுக்கும் அழகற்ற கண்களுக்கும் வேறுபாடு. அதுவும் போக ஒரு கண் அழகானது என்பதன் கண்டிஷன்கள் என்ன…? சூக்கா சூக்கா என்பது போல் ஆண்டவன் படைத்தானென்றால் அதில் ஏன் இத்தனை வித்தியாசம்…? உலகமனைத்தும் ஒரே ஆண்டவன் என்றால் அவன் ஏன் ஒரு ஊரில் மட்டும் வணக்கப்பட செல்ல வேண்டும்..? பூலோக படைப்பின் தெய்வமென பலரால் வணங்கப்படும் அன்னை தனது குழந்தைகளை தேடித் தேடி நல்ம் கொள்ள செல்வாள்.. ஆனால், இங்கு மட்டும் ஏன் இப்படி… அது சரி, அந்த காலத்தில் சமணர் கதை விடுங்கள்.. இந்த காலத்தில் கடத்தல் ஹவாலா… தாவூத்பாய் வகையறாக்களை இஸ்லாம் இயக்கங்கள் ஏன் கண்டிப்பதில்லை..?

  67. Avatar
    suvanappiriyan says:

    திரு இந்தியன்!

    //You have also not apologized for the death and destruction of Hindus and their temples by your Islamic mob.//

    தமிழகத்தில், சேர, சோழ,பாண்டியர் என மூவேந்தர்கள் ஆண்டனர். அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய குளங்கள், செதுக்கிய சிற்பங்கள், பொறித்த கல்வெட்டுகளைப் பார்க்கின்றோம். அவர்களைப் பற்றிய புறநானூற்றுப் பாடல்களைக் கேட்கின்றோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த வீடுகள் எங்கே? தடயமே இல்லையே? ஏன்? தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜன், தனக்காக ஒரு சிறு மாளிகையையாவது கட்டி இருக்க மாட்டானா? அந்த மாளிகை எங்கே?

    இந்தக் கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளைத் தேடியபோது கிடைத்த செய்திகள் வருத்தத்தை அளித்தன. ஆம்; பண்டைக்காலத்தில், ஒரு மன்னன் போரில் வெற்றி பெற்றால், தோற்றவருடைய வீட்டைத் தரைமட்டமாக இடித்துத் தகர்த்து, கழுதைகளைக் கொண்டு உழுது, எள் மற்றும் ஆமணக்குச் செடிகளை அங்கே நட்டு விடுவார்களாம். அதாவது, போரில் தோற்றவர் இவ்விதம் இழிவுபடுத்தப்படுகின்றார். அதற்குப் பிறகு அந்த இடத்தில் வேறு யாரும் குடியிருக்க மாட்டார்கள்.

    தோற்றவர்கள் கட்டிய கோவில்கள் ஊர்களை அழிப்பதும் அந்த கால வழக்கம். இதற்காக இன்று யார் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்பது? இது அன்றைய கால அரச முறை. தவறு இருதரப்பிலுமே நடந்தள்ளது.மாலேகானில் குண்டு வைத்த சாது பிரக்யாசிங் சார்பாக இந்தியன் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது சரியான வாதமாகுமா? குஜராத்தில் நடந்த கலவரம் சில வருடங்கள் முன் நடந்தது. இதற்காக முஸ்லிம்களிடம் இந்தியன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது சிறு பிள்ளைத் தனம் இல்லையா?.

    எனவே இந்துவோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் அது ஒரு உயிர். அதை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. போர்க்களங்களில் கூட மாற்று மத மதகுருமார்கள், பெண்கள், சிறுவர்களைக் கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுவதைப் பார்க்கிறோம். எனவே அநியாயம் எங்கு நடந்தாலும் அதை முதலில் எதிர்ப்பவன் நானாகத்தான் இருக்கும்.

    //I believe in Islam there is no place for Muslim ladies in heaven.//

    நீங்கள் நம்புவதெல்லாம் இஸ்லாம் ஆகாது. குர்ஆனின் கட்டளைகள்தான் இஸ்லாமாக முடியும்.

    ‘அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.’
    -குர்ஆன் 13:23

    இந்த வசனம் அழகிய முறையில் தனது மனைவி குழந்தைகளோடு சொர்க்கம் புகுவதாக சொல்லியும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. இப்பொழுது தக்கியா பிரசாரம் பண்ணுவது இந்தியனாகிய நீங்களே!

  68. Avatar
    Indian says:

    This is a typical response one would expect from Taqiyya expert Mr suvanappiriyan.Please,I do not not want Chola, Pandya stories here. Germans apologized for the treatment of Jews during second world war.It is a crime in Germany to deny holocaust. Australian government officially apologized for it’s treatment of aborigines in the past. Now it is Muslims turn in India.
    To move forward for a peaceful co existence, present day
    Muslims need to at least owe up the crimes committed in the past against Hindus in the name of Islam. For the destruction of temples, for forced conversion at the point of sword,for raping and enslaving of Hindu women.
    A simple yes or no will suffice for the following questions. A yes answer obviously will help to heal the wound. It will be a big step forward in restoring harmonious relationship between the two communities.
    Mr suvanappiriyan
    1) Do you accept that Islamists of the past caused death and and destruction of Hindus and their place of worship?
    2) Do you accept Hindus in the past were converted to Islam at the point of sword and their women were raped and enslaved?
    I repeat, please don’t drown us in monotonous Taqyya bs. We are sick this rubbish. A Yes or No is sufficient.

  69. Avatar
    smitha says:

    Piriyan,

    A muslim girl was raped by her father-in-law a few years back in UP. The clergy gave the verdict that the girl has to be kept away from the house for a few months & then she should return & serve her father-in-law as a husband.

    Ur justifcation for this?

  70. Avatar
    Tamilan says:

    Both sides shd apologise for the crimes committed in the past:

    The Brahmins for the creation of caste system and treatment of Dalits and Bhakti saints
    The upper caste Hindus for the atrocities on Dalits.
    The Hindutavaists for the destructions of Babri Masji

    The Muslims for the treatment of Hindus by Moghal emperors.

  71. Avatar
    suvanappiriyan says:

    திரு இந்தியன்!

    //1) Do you accept that Islamists of the past caused death and and destruction of Hindus and their place of worship?//

    முதலில் பாபரி மசூதியை இடித்ததையும், குஜராத்தில் முஸ்லிம்களை உயிரோடு கொளுத்தியதையும் ஒத்துக் கொள்ளுங்கள். இது நமது காலத்திலேயே நம் கண் எதிரிலேயே நடந்தது. அனைத்துக்கும் ஐ விட்னஸூம் உண்டு.

    மொகலாயர் காலத்துக்கும் சேர சோழ பாண்டியர்கள் காலத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் சார்.

    //2) Do you accept Hindus in the past were converted to Islam at the point of sword and their women were raped and enslaved?//

    வாளால் இஸ்லாம் அந்த காலத்தில் வளர்ந்திரந்தால் இந்த காலத்தில் தங்களது தாய் மதத்துக்கு திரும்புவதற்கு என்ன தடையாக இருக்கிறது? இந்துவாக இருப்பதுதான் இந்தியாவில் பாதுகாப்பு என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே! அதிகார வர்க்கத்தில் அனைத்திலும் நீங்கள்தானே உள்ளீர்கள்? தாய் மதத்துக்கு அவர்களை திருப்ப வேண்டியதுதானே!

    திலீப்குமாராக இருந்த ஏ.ஆர் ரஹ்மானை மாற்றியது எந்த வாய்? பெரியார்தாசனை அப்துல்லாவாக மாற்றியது எந்த வாள்?

    their women were raped and enslaved?////

    வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்

    வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் ‘பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்’என்று கோரிக்கை வைத்தனர்.

    ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.

    அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.

    இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)

    பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

    அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

    நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.

    அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

    ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, ‘இஸ்லாமும் இந்திய கலாசாரமும்’
    Page : 70,71

    இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

    P.N.Pande

    “Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

    P.N.Pande, Islam And Indian Culture, Page 55

  72. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    நீங்கள் சொல்வது ஆதாரமற்ற கதை. அது எந்த ஒரு அவுரங்கசீப் வரலாற்றிலும் கிடையாது. முஸ்லீம்கள் மனம் கோணக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் விட்ட உட்டாலக்கடி..


    காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
    எஸ் அரவிந்தன் நீலகண்டன்

    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20602034&format=html

    ஆனால் அவுரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை அழிக்க அளித்த பிரகடனம் இன்றும் உள்ளது. அது தெள்ளத்தெளிவாக தனது காரணங்களை ஐயமற முன்வைக்கிறது:

    ‘இறைநம்பிக்கையை விரும்பி பாதுகாப்பவரான பேரரச பிரபு, தத்தா முல்தான் மற்றும் குறிப்பாக வாரணாசி ஆகிய பிரதேசங்களில் இறைநம்பிக்கையில்லாத பிராமணர்கள் தமது மையங்களில் தமது பொய் நூல்களின் மூலம் பிரச்சாரம் செய்து வருவதையும், அதனைக் கேட்க ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வெகுதொலைவுகளிலிருந்து வந்து இந்த பிரசங்கங்களைக் கேட்டு அதனால் மார்க்கப்பாதையிலிருந்து மாற்றப்படுவதையும் அறிந்தார். மேன்மைதங்கிய அரசர் இதனை அறிந்ததும் இஸ்லாமினை நிலைநிறுத்த ஆவலுண்டானவராக, இப்பிரதேச ஆளுநர்களுக்கு இப்பகுதிகளிலுள்ள இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்களின் கல்வி நிறுவனங்களையும், ஆலயங்களையும் இடித்தொழிக்கும் படி உத்தரவிட்டார். தலையாயக்கடமைகளாக இஸ்லாமியரல்லாதவர்களின் மதப்பிரசங்கங்களையும், அவர்கள் பகிரங்கமாக தமது மதங்களை பின்பற்றுவதையும் இல்லாமலாக்க உத்தரவிட்டார். ‘ (முகியுத்தீன் முகமது அவுரங்கசீப் ஆலம்கீர் பாதுஷா காஸியின் பொதுப்பிரகடனம், மாஸிர்-இ-ஆலம்கிரி பக்.51-52)

    திண்ணையில்தான் இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

  73. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //நீங்கள் சொல்வது ஆதாரமற்ற கதை. அது எந்த ஒரு அவுரங்கசீப் வரலாற்றிலும் கிடையாது. முஸ்லீம்கள் மனம் கோணக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் விட்ட உட்டாலக்கடி..//

    கம்யூனிஸ்டுகள் ஏன் சார் முஸ்லிம்களை குஷிப்படுத்த வேண்டும்? இஸ்லாத்துக்கு நேர் எதிர் கொள்கை உடையவர்களல்லவா கம்யூனிஸ்டுகள். உங்களுக்கு ஆதரவாக இருந்தால் அவர் சிறந்த வரலாற்று பேராசிரியர். உங்களுக்கு எதிராக இருந்தால் உட்டாலக்கடி :-) நல்ல நியாயம் சார்.

    ஒருவர் அல்ல. மொத்தம் மூன்று வரலாற்றாய்வாளர்கள் ஆராய்ந்து எழுதிய ஒரு சம்பவம் உங்களுக்கு உட்டாலக்கடி!? அரவிந்தன் நீலகண்டன் இஸ்லாத்தைப் பற்றிய பார்வை நாம் அறிந்ததே! ஆர்எஸ்ஸால்தான் இந்தியாவுக்கு விமோசனம் கிடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஊறியவரிடம் வேறு எப்படிப்பட்ட பதிவுகளை எதிர்பார்க்க முடியும்? ஒளரங்கசீப் பல கோவில்களுக்கு தானம் கொடுத்ததும் ஆதாரமாக உள்ளது. ஒரு அரசன் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாத்தை ஏற்பதாக சொன்ன போது அதை தடுத்தவர் ஒளரங்கசீப்.
    ஒளரங்கசீப் தனது ஆட்சியில் நீக்கிய வரிகள்:
    கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.

    சதி’யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

    ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். ‘உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

    விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

    ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
    Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

    பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

    ‘நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.’
    இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

    பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
    1987, Page 61.

    அரசியல் வேறு மதம் வேறு!

    ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். ‘அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.’ என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

    டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
    1950, Page 80

    ‘உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்த நாம் சலிக்காமல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் செயல்படுத்தப் பட வேண்டும். நமது புனிதமான சட்டத்தின் படி புராதனக் கொவில்கள் எதையும் அழிக்கக் கூடாது. ‘ – ஒளரங்கஜேப்

    P.N.Pande, Islam And Indian Culture, Page 45

  74. Avatar
    தங்கமணி says:

    //கம்யூனிஸ்டுகள் ஏன் சார் முஸ்லிம்களை குஷிப்படுத்த வேண்டும்? இஸ்லாத்துக்கு நேர் எதிர் கொள்கை உடையவர்களல்லவா கம்யூனிஸ்டுகள். உங்களுக்கு ஆதரவாக இருந்தால் அவர் சிறந்த வரலாற்று பேராசிரியர். உங்களுக்கு எதிராக இருந்தால் உட்டாலக்கடி :-) நல்ல நியாயம் சார்.
    //
    இவ்வளவு பச்சப்புள்ளையா இருக்கீங்களே..

    அவுரங்க சீப்பை காப்பாற்ற ஜோஸப் ஏன் அலைகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால் அவுரங்கசீப்பே அல்லவா அவரை கவிழ்த்து விடுகிறார்!

    எதுக்கும் அரவிந்தன் கொடுத்த கட்டுரையை படிச்சிடுங்க. நீங்கள் எழுதுவதை நாங்கள் படிக்கிறோம்ல?
    சரி அவர் எழுதுவதைத்தான் படிக்க மாட்டீர்கள்.
    அவுரங்கசீப்பின் காலத்திலேயே முஸ்லீம்களால் எழுதப்பட்டதையாவது படிப்பீர்களா?

    காசியில் இருந்த கோவில்களை இடித்தது.
    7. “Ganj-i-Arshadi”

    It is a contemporary account of the destruction of Hindu temples at Varanasi in the reign of Aurangzeb.

    Excerpts:

    Muhiyu’d-Din Muhammad Aurangzeb ‘Alamgir Padshah Ghazi (AD 1658-1707)

    Varanasi (Uttar Pradesh)

    “… The infidels demolished a mosque that was under construction and wounded the artisans. When the news reached Shah Yasin, he came to Banaras from Mandyawa and collecting the Muslim weavers, DEMOLISHED THE BIG TEMPLE. A Sayyid who was an artisan by profession agreed with one Abdul Rasul to build a mosque at Banaras and accordingly the foundation was laid. Near the place there was a temple and many houses belonging to it were in the occupation of the Rajputs. The infidels decided that the construction of a mosque in the locality was not proper and that it should be razed to the ground. At night the walls of the mosque were found demolished. next day the wall was rebuilt but it was again destroyed. This happened three or four times. At last the Sayyid his himself in the corner. With the advent of night the infidels came to achieve their nefarious purpose. When Abdul Rasul gave the alarm, the infidels began to fight and the Sayyid was wounded by the Rajputs. In the meantime, the Musalman residents of the neighborhood arrived at the spot and the infidels took to their heels. The wounded muslims were taken to Shah Yasin who determined to vindicate the cause of Islam. When he came to the mosque, people collected from the neighborhood. the civil officers were outwardly inclined to side with the saint, but in reality they were afraid of the Royal displeasure on the account of the Raja, who was a courtier of the Emperor and had built the temple (near which the mosque was under construction). Shah Yasin, however, took up the sword and started for Jihad. The civil officers sent him a message that such a grave step should not be taken without the Emperor’s permission. Shah Yasin, paying no heed, sallied forth till he reached Bazar Chau Khamba through a fusillade of stones …… THE DOORS (OF TEMPLES) WERE FORCED OPEN AND THE IDOLS THROWN DOWN. THE WEAVERS AND OTHER MUSALMANS DEMOLISHED ABOUT 500 TEMPLES. They desired to destroy the temple of Beni Madho, but as lanes were barricaded, they desisted from going further….”

    சோமநாத் ஆலயத்தை இடித்தது பற்றி அவுரங்கசீப்பே எழுதியது.

    6. “Kalimat-i-Tayyibat” by ‘Inayatullah

    This is a collection of letters and orders of Aurangzeb compiled by ‘Inayatullah in AD 1719 and covers the years 1699-1704 of Aurangzeb’s reign.

    Muhiyu’d-Din Muhammad Aurangzeb ‘Alamgir Padshah Ghazi (AD 1658-1707)

    Somnath (Gujarat)

    “… The TEMPLE OF SOMNATH WAS DEMOLISHED early in my reign and idol worship (there) put down. It is not known what the state of things there is at present. If the idolators have again taken to the worship of images at the place, THEN DESTROY THE TEMPLE IN SUCH A WAY THAT NO TRACE OF THE BUILDING MAY BE LEFT, and also expel them (the worshippers) from the place. …”

    Satara (Maharashtra)

    “… The village of Sattara near Aurangabad was my hunting ground. Here on the top of the hill, STOOD A TEMPLE WITH AN IMAGE OF KHANDE RAI. BY GOD’S GRACE I DEMOLISHED IT …”

    General Observation “… THE DEMOLITION OF A TEMPLE IS POSSIBLE AT ANY TIME, as it cannot walk away from its place. …”

    Sirhind (Punjab)

    “… In a small village in the sarkar of Sirhind, A SIKH TEMPLE WAS DEMOLISHED AND CONVERTED INTO A MOSQUE. An imam was appointed who was subsequently killed. …”


    மஹாராஷ்ட்ராவிலிருக்கும் கோவில்களை இடிக்கவைத்தது
    இதுவும் அவரே எழுதிய கடிதம்
    “Kalimat-i-Aurangzeb” by ‘Inayatullah

    This is another compilation of letters and orders by ‘Inayatu’llah covering the years 1703-06 of Aurangzeb’s reign.

    Muhiyu’d-Din Muhammad Aurangzeb ‘Alamgir Padshah Ghazi (AD 1658-1707) Maharashtra

    “…The houses of this country (Maharashtra) are exceedingly strong and built solely of stone and iron. The hatchet-men of the Govt. in the course of my marching do not get sufficient strength and power (i.e. time) TO DESTROY AND RAZE THE TEMPLES OF THE INFIDELS that meet the eye on the way. You should appoint an orthodox inspector (darogha) who may afterwards DESTROY THEM AT LEISURE AND DIG UP THEIR FOUNDATIONS…”

    4. “Akhbarat”

    These were reports from different provinces compiled in the reign of Aurangzeb.

    Excerpts:

    Muhiyu’d-Din Muhammad Aurangzeb ‘Alamgir Padshah Ghazi (1658-1707)

    Mathura (Uttar Pradesh)

    ” … The emporer learning that in the temple of Keshav Rai at Mathura there was a stone railing presented by Dara Shikoh, remarked, ‘In the Muslim faith it is a sin even to look at a temple, and this Dara Shikoh had restored a railing in a temple. This fact is not creditable to the Muhammadans. REMOVE THE RAILING.’ By his order Abdun Nabi Khan (the faujdar of Mathura) REMOVED IT…”

    Ujjain (Madhya Pradesh)

    ” … News came from Malwa that Wazir Khan had sent Gada Beg, a slave, with 400 troopers, TO DESTROY ALL TEMPLES AROUND UJJAIN… A Rawat of the place resisted and slew Gada Beg with 121 of his men…”

    Aurangabad (Maharashtra)

    “…… The Emperor learnt from a secret news writer of Delhi that in Jaisinghpura Bairagis used to worship idols, and that the Censor on hearing of it had gone there, arrested Sri Krishna Bairagis and taken him with 15 idols away to his house; then the Rajputs had assembled, flocked to the Censor’s house, wounded three footmen of the Censor and tried to seize the Censor himself; so that the latter set the Bairagis free and sent the copper idols to the local subahdar …”

    Pandharpur (Maharashtra)

    “… The Emperor, summoning Muhammad Khalil and Khidmat Rai, the darogha of hatchet-men …. ORDERED THEM TO DEMOLISH THE TEMPLE OF PANDHARPUR, and to take the butchers of the camp there AND SLAUGHTER COWS IN THE TEMPLE … It was done…”

    On Way to the Deccan

    ” … When the war with the Rajputs was over, Aurangzeb decided to leave for the Deccan. His march seems to have been marked with A DESTRUCTION TO MANY TEMPLES on the way. On May 21, 1681, the superintendent of the labourers WAS ORDERED TO DESTROY ALL THE TEMPLES on the route…”

    Lakheri ( ? – means the place is not traceable today )

    ” … On 27 Sept., 1681, the emperor issued orders FOR THE DESTRUCTION OF THE TEMPLES at Lakheri…”

    Rasulpur( ? )

    “… About this time, April 14, 1692, orders were issued to the provincial governor and the district faujdar TO DEMOLISH THE TEMPLES at Rasulpur…”

    Sheogaon ( ? )

    ” … Sankar, a messenger, was sent TO DEMOLISH A TEMPLE near Sheogaon..”

    Ajmer (Rajasthan)

    “… Bijai Singh and several other Hindus were reported to be carrying on public worship of idols in a temple in the neighborhood of Ajmer. On 23 June, 1694, THE GOVERNER OF AJMER WAS ORDERED TO DESTROY THE TEMPLE and stop the public adoration of idol worship there…”

    Wakenkhera ( ? )

    ” … The TEMPLE OF WAKENKHERA IN THE FORT WAS DEMOLISHED ON 2 MARCH, 1705. …”

    Bhagwant Garh (Rajasthan)

    “… The newswriter of Ranthambore REPORTED THE DESTRUCTION OF A TEMPLE IN PARGANAH BHAGWANT GARH. Gaj Singh Gor had repaired the temple and made some additions thereto…”

    Malpura (Rajasthan)

    ” … Royal orders FOR THE DESTRUCTION OF TEMPLES IN MALPURA TODA were received and the officers were assigned for this work…”

    இப்ப உங்களுக்கு குஷி தாங்காதே!

    பரவாயில்லை. அவுரங்கசீப் என்ற முச்லீம் செய்ததற்கு இஸ்லாம் பொறுப்பாகாது என்று உங்களது வழக்கமான பல்லவி இருக்குமே.

  75. Avatar
    தங்கமணி says:

    20ஆம் நூற்றாண்டு பாண்டே விடும் கதையெல்லாம் எந்த 1700 காலத்து ஆவணத்தில் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.

    பாகிஸ்தான் பத்திரிக்கைகளிலிருந்து உங்களுக்கு நிறைய செய்திகள் சொல்லுகிறேன்.

    1) 10-year-old girl raped in Gowalmandi mosque

    http://www.dailytimes.com.pk/default.asp?page=2008%5C06%5C03%5Cstory_3-6-2008_pg7_36

    கோவல்மண்டி மசூதியோட இமாமோட மகன் அந்த மசூதிக்கு வந்த 10 வயது சிறுமியை கற்பழிச்சிட்டிராராம்.

    நீங்கள் சொல்ற லாஜிக் படி, இந்த அட்டூழியத்துக்காக அந்த மசூதியை இடிச்சிட்டு கோவில் கட்டிடலாமா?

    2) சிறுவன் கற்பழிக்கப்பட ஒத்துக்கலை என்று இமாம் அந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டார்.
    இந்த மசூதியையும் இடித்து கோவில் கட்டிவிடுவோமா?

    Imam knifes boy on resisting rape

    http://www.dailytimes.com.pk/default.asp?page=2006%5C08%5C22%5Cstory_22-8-2006_pg7_47

    3) லண்டன் மசூதிக்கு வந்த பெண்ணை இமாம் கற்பழித்துவிட்டார்.
    லண்டன் மசூதியை இடித்து கோவில் கட்டிவிடுவோமா?
    http://www.dailytimes.com.pk/default.asp?page=2008%5C03%5C19%5Cstory_19-3-2008_pg7_57

    அடுத்து அரபுநியூஸிலிருந்து
    4) ஜெட்டாவில் இருக்கும் மசூதியில் இமாம் அடிக்கும் கூத்து.
    http://www.arabnews.com/node/334381
    Imam held for sodomy in Thuwal

    ஜெட்டா மசூதியை இடித்து கோவில் கட்டிவிடுவோமா?

    இதுமாதிரி நெறைய நியூஸ் இருக்கு. வேணுமா?

  76. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //பரவாயில்லை. அவுரங்கசீப் என்ற முச்லீம் செய்ததற்கு இஸ்லாம் பொறுப்பாகாது என்று உங்களது வழக்கமான பல்லவி இருக்குமே.//

    நான் கொடுத்த ஆதாரங்கள் ஒளரங்கசீப் அனைத்து மதத்தவரையும் சிறப்புடன் நடத்தினார் என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஒளரங்கசீப் கோவில்களை இடித்து இந்து மதத்தை அழிக்க முற்பட்டார் என்ற ரீதியில் செல்கிறது. இதில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும்.

    ஐம்பது வருடங்களுக்கு மேல் தனது ஆட்சியால் இந்தியாவை செம்மையாக வழி நடத்தி சென்ற ஒரு அரசரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது உள்ளது போன்று தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத காலம். பெரும்பான்மையானவர்கள் இந்து மக்கள். அவரை சுற்றி சத்ரபதி சிவாஜியிலிருந்து பல இந்து மன்னர்கள் ஒளரங்கசீப்பை கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது சொந்தங்களும் அவரை கவிழ்க்க பல சதித் திட்டங்களை தீட்டிய வண்ணமே இருந்தனர். இந்த நேரத்தில் ஒரு மன்னன் பெரும்பான்மை சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களை சகட்டு மேனிக்கு இடித்து தள்ளிக் கொண்டிருந்தால் பெரும்பான்மையான இந்து வெகுண்டெழ மாட்டார்களா? சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு வெளி நாட்டு அரசனை வழிக்கு கொண்டு வருவது அந்த காலத்தில் மிக சுலபம். ஆனால் இந்து மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரை ஐம்பது வருடங்கள் ஆட்சி செய்த வைத்ததை சாதாரண செயல் என்றா நினைக்கிறீர்கள். மற்ற மொகலாய மன்னர்களை விட நமது தமிழகம் வரை ஒளரங்கசீப்பின் ஆட்சி நீண்டிருந்தது. ஒளரங்கசீப்பக்கு எதிராக இந்து மக்கள் கிளர்ந்தெழுந்ததாகவோ புரட்சி வெடித்ததாகவோ எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்புகளை எழுதவில்லை. கடைசியில் நோய் வாய்ப்பட்டே சக்கரவர்த்தியாக இருக்கும் போதே மரணிக்கிறார் ஒளரங்கசீப். இதற்கு முன்னால் ஆணட் இந்து மன்னர்களை விட ஒளரங்கசீப்பின் ஆட்சி சிறப்பாக இருந்ததாலேயே இது சாத்தியமானது. 1100 வருடங்கள் நமது நாட்டை முகலாயர்கள் ஆண்டது சாதாரண காரியம் அல்ல.

    நீங்கள் தரும் ஆதாரங்கள் வெள்ளையர்களால் பின்னால் புனையப்பட்டதாகவும் இருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன்.

  77. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //நீங்கள் சொல்ற லாஜிக் படி, இந்த அட்டூழியத்துக்காக அந்த மசூதியை இடிச்சிட்டு கோவில் கட்டிடலாமா?//

    இந்துக்களின் கோவில்களின் உள்ளே உள்ள சிலை இந்து மத நம்பிக்கை படி கடவுளாக மதிக்கப்படகிறது. அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். இதை இந்து மத புரோகிதர்கள் கேட்டுக் கொண்டதாலேயே அந்த கோவிலை இடித்து விட்டு பக்கத்தில் அந்த சிலையை வைத்து வேறொரு கோவில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்து மக்களின் வேண்டுகோள்தான் அங்கு நிறைவேற்றப்படுகிறது.

    ஆனால் பள்ளிவாசலின் நிலை அப்படி அல்ல.

    நாங்கள் ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் இருந்த போது கிராமத்து அரபி ஒருவர் வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்க துவங்கி விட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தோழர்கள் “தடுத்துக்கொள்” “தடுத்துக்கொள்” எனக்கூறினர். அவரைத் நிறுத்தி (தடுத்து) விடாது விட்டு விடுங்கள் என, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற அந்நபரை அவர்கள் (சிறுநீர் கழித்து முடியும் வரை) விட்டு விட்டனர். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவரை அழைத்து “இந்தப்பள்ளிகள் இது போன்ற சிறுநீர் கழிக்கவோ, அல்லது அசுத்தங்களை போடவோ உரியதல்ல. ஆயினும் அவை கண்ணியமும் மேன்மையும் பொருந்திய அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கும், இன்னும் திருமறையை ஓதுவதற்கும் மட்டுமே சரியான (உரிய)தாகும். கூட்டத்திலிருந்த ஒரு மனிதரை ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டனர். (அவர் கொண்டுவந்து) அதன்மீது பரவலாக ஊற்றினார்.

    அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு
    ஆதார நூல்: புகாரி 186

    இந்த நபி மொழியிலிருந்து பள்ளி அசுத்தப்பட்டாலும் கழுவினால் அந்த அசுத்தம் சென்று விடும் என்பது கட்டளை. எனவே பள்ளியை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலைகள் இருக்கும் இடம் அசுத்தப்பட்டால் அதற்கு தீட்டு கழித்து வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை. அதைத்தானே இந்துக்களின் விருப்பமறிந்து ஒளரங்கசீப் செயல்படுத்தினார். இதில் சக்கரவர்த்தியை எவ்வாறு குறை காண முடியும்?
    கலைஞர் எழுதிய பராசக்தி வசனமான ‘கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்பதற்காக’ என்று சொன்னால் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். அதையே ஒளரங்கசீப் செய்தால் மதவெறி என்கிறீர்கள்.

  78. Avatar
    தங்கமணி says:

    /நான் கொடுத்த ஆதாரங்கள் ஒளரங்கசீப் அனைத்து மதத்தவரையும் சிறப்புடன் நடத்தினார் என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஒளரங்கசீப் கோவில்களை இடித்து இந்து மதத்தை அழிக்க முற்பட்டார் என்ற ரீதியில் செல்கிறது. இதில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும்./

    ஆமாம்.
    நான் கொடுக்கும் ஆதாரங்கள் ஆங்கிலேயர்களுக்கு பின்னால் வந்தவை அல்ல. அவுரங்கசீப்பாலும், அவுரங்கசீப்போடு வாழ்ந்தவர்களாலும் எழுதப்பட்ட முஸ்லீம் ஆவணங்கள். இவை அருங்காட்சியகத்திலும் முஸ்லீம் ஆவணங்களிலும், பாதுஷாக்களாலும், பெர்ஷிய நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டவை.

    நீங்கள் சொல்லும் புத்தகங்கள் நாவல்கள் போல, 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

    ஆகவே நீங்கள் சொல்லுவது உண்மையல்ல.

  79. Avatar
    தங்கமணி says:

    //அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம்.//
    உங்களுக்கு இந்து மதம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
    அப்படியெல்லாம் ஒரு பழக்கமும் இல்லை. அந்த இடத்தில் சில சடங்குகளை செய்து கழுவுவார்களே தவிர, கோவிலை இடிப்பதோ அதன் இடத்தில் மசூதி கட்டுவதோ ஒரு பழக்கமும் இல்லை.
    அவுரங்கசீப்புதான் ரொம்ப சீப்பான ஆளாக இருப்பாரென்றால், அவரை சப்பைக்கட்டுக்கட்டும் நீங்கள் அவனைவிட சீப்பான ஆளாக இருப்பீர்கள் போலிருக்கிறது.இந்து மக்கள் அப்படி வேண்டியதாக ஜோஸப் போன்றவர்கள் கதை விடுகிறார்கள். நீங்கள் நம்புகிறீர்கள்.
    //ஐம்பது வருடங்களுக்கு மேல் தனது ஆட்சியால் இந்தியாவை செம்மையாக வழி நடத்தி சென்ற ஒரு அரசரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். //
    கிளிஞ்சிது கிருஷ்ணகிரி.
    அவுரங்கசீப்பின் ஆட்சியே மொகலாயர்களின் முடிவாக இருந்ததற்கு காரணமே அவனது இந்த கிறுக்குத்தனம்தான். அந்த மதவாத கிறுக்குத்தனத்துக்கு எதிராக சிவாஜி போன்றவர்கள் வெகுண்டெழுந்து இந்துக்களை ஒருங்கிணைத்து மொகலாயர் ஆட்சியை கவிழ்த்தார்கள். சிவாஜியும் சிவாஜிக்கு பின்னால் வந்தவர்களும் மொகலாயர் ஆட்சியின் இடத்தில் மராத்தா கான்படரஸியை உருவாக்கினார்கள். பெயரளவுக்கு டெல்லி அரசு இருந்தது. டெல்லி மொகலாய அரசர் மராத்தா கான்படரஸிக்கு கட்டுப்பட்டவராக இருந்தார்.

  80. Avatar
    vedamgopal says:

    Egypt to bring in law allowing man to have sex with dead wife :-
    Egypt’s new Islamist-dominated parliament is preparing to introduce a controversial law that would allow husbands to have sex with her deceased wives up to six hours after death. Known as the “farewell intercourse” law, the measure is being championed as part of a raft of reforms introduced by the parliament that will also see that minimum age of marriage lowered to 14 for girls. (Ref : Hindu voice June 2012 page 37)

    1. Avatar
      punai peyaril says:

      அதற்கும் ஏதாவது மேற்கோளுடன் 12:653 என்று எழுத ஆட்கள் உண்டு…

  81. Avatar
    paandiyan says:

    ஸ்ரீ வைஷ்ணவம் பற்றி காவ்யா விடும் புருடாக்களை எப்படி அட்மின் புப்ளிஷ் பண்ணுகின்றார் என்று புரியவில்லை ஒரு வேலை மதசார்பின்மை வியாதி அட்மின் க்கு ஜாஸ்தியோ என்னவோ ? அதாவது யாரும் இங்க கற்பனையாக எழுதிவிடலாம் அதை அப்ப்டிய போடுவது என்று அட்மின் முடிவு பண்ணிவிட்டார் போல . அது சரி ஆதராம் கேட்டால் வெளிநாடு போகின்றன் என்று புறமுதுகு காட்டும் மனிதர்கள் இறுக்கும்போது அவருக்கு எதற்கு வம்பு………

    1. Avatar
      Kavya says:

      அதைப்புருடாக்கள் என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.

  82. Avatar
    மலர்மன்னன் says:

    இந்தக் கட்டுரை பாகிஸ்தானில் நிகழ்ந்த ஒரு மத வெறியின் விளைவைப் பேசுகிறது. இதையொட்டித் தொடங்கிய எதிர்வினைகள் எங்கே ஆரம்பித்து எப்படி நீண்டு கொண்டே போய் எங்கே வந்து நிற்கிறது என்பதைத் திண்ணை ஆசிரியர் குழு கவனிக்க வேண்டுகிறேன். திசை திருப்பும் உள் நோக்கம் தவிர இதற்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டுகிறேன். இந்த வெட்டி விவாதங்களால் கால விரையம் தவிர வேறு என்ன பயன் இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. இதனால் எல்லாம் வெளியாகும் கட்டுரை தொடர்பாக அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் வாய்ப்பிழக்கும் நிலை உருவாவதை ஆசிரியர் குழு நினைத்துப் பார்க்க வேண்டாமா?
    இந்தக் கட்டுரை பாகிஸ்தானில் கலைஞர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் எவ்வாறு உள்ளன என்று பதிவு செய்வதால் இக்கட்டுரைக் குரிய எதிர்வினைகள் அவ்வாறு இல்லை இது ஏதோ ஒரு அசம்பாவிதம் என மறுப்பதாக இருந்தால் நியாயமாக இருக்கும். அதேபோல் பிற நாடுகளில் உள்ள கலைஞர்களுக்குரிய சுதந்திரம் பற்றிய பொதுவாக ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் ஜனநாயக நாடுகளிலும் முகமதிய நாடுகளிலும், ஸ்ரீ லங்கா போன்ற பேரினவாத ஆதிக்கம் மிக்க நாடுகளிலும் உள்ள கலைஞர்களின் உரிமைகள் குறித்த ஒப்பாய்வுகளாகவும் அவை இருந்தால் எவ்வளவு பயன் மிக்கதாக இருக்கும்?
    திசை திருப்பபுவதற்கென்றே வரும் கோமாளித் தனமான விதண்டா விவாதங்களுக்கெல்லாம் அறிவு பூர்வமான பதில்கள் தரும் பலர் இருக்கிறார்கள்தான். அந்த பதில்கள் உண்மையில் விதண்டா வாதத்திற்கானவை அல்ல, மற்ற வாசகர்களின் புரிதலுக்காகத்தான் என்பதையும் அறிந்துள்ளேன். ஆனால் இந்த அறிவு பூர்வமான பதில்கள் தனிக் கட்டுரைகளாக அமைவதை விட்டு எதிர்வினைகள் கூட்டத்தில் கலந்து காணாமல் போக வேண்டுமா? அது வெறும் கால, சக்தி விரையங்களும் ஆகும் அல்லவா?
    ஒரு பேச்சுக்குச் சொன்னால் ஐரோப்பாவிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்த ஒரு மத மாற்றி சிவனடியார் போல வேடமிட்டு திருநீறு கொடுத்தவாறு மதமாற்ற வேலையில் இறங்கினான். உயர் சாதியினர் என்று தம்மைக் கருதிக் கொண்டவர்களை மதம் மாற்றுவதற்காக ஒரு பிரிவினரும், பிற்படுத்தப்பட்டோரை மாற்றுவதற்காக ஒரு பிரிவினருமாக முறை வைத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் முகாலோபனம் கூடச் செய்துகொள்ளாமல் மத மாற்ற வேலையில் இறங்கினார்கள். அப்போதுதான் இருதரப்பு ஹிந்துக்களையுமே எளிதாக மதம் மாற்றிவிடலாம் என்கிற பேராசை! இதெல்லாம் ஒரு செயல்திட்டம்தான். ஆகையால் வேறு யாரும் அரைகுறையாக எதையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு நெற்றி நிறையத் திருமண் இட்டுக்கொண்டு சபை நடுவே வந்து நின்றால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்களைப் போன்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த அந்த போலி சிவனடியாரை நினைத்துக்கொண்டால் போதும்.
    கட்டுரை தொடர்பான எதிர்வினைகளை மட்டுமே இட்டு கருத்துப் பரிமாற்றம் செய்வதன்றி கவனம் பிசக வேண்டாம் என வேண்டுகிறேன்.
    ஸ்ரீ சான்றோன் பதிவுகளைப் படித்து வருகிறேன். சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறார், விவரம் தெரிந்தவராகவும் இருக்கிறார். இவர் எதிர்வினை செய்வதில் கால விரையம் பண்ணாமல் தனி கட்டுரைகளே எழுத ஆரம்பித்துவிடலாம்.
    ஏதோ, எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      திசை திருப்பி இசுலாத்தின் மீது வசைமாறி பொழியவே இக்கட்டுரை என தொடக்கத்திலேயே சொல்லிவிட்டேன்.

      அதை வழிமொழிந்த மலர் மன்னனுக்கு என் நன்றிகள்

      1. Avatar
        punai peyaril says:

        இஸ்லாத்தின் மீது யாரும் வசைபாடுவது இல்லை…இந்துக்கள் அப்படி செய்ய மாட்டார்கள்…
        படித்திருப்பீர்கள், இரண்டு முஸ்லீகள் தங்களின் தவறை மறைக்க அடல்ட்ரி என்று ஒரு பெண்ணை பொது இடத்தில் ஒன்பது முறை சுட்டதை… ஆண்களின் அரஜாக வடிகால இன்று xx:666 என்று சப்போர்ட்டுடன் ஆட்கள் கிளம்பி விட்டார்கள்…

  83. Avatar
    மலர்மன்னன் says:

    ஹிந்துஸ்தானம் தன் சிரசில் வைத்துக் கொண்டாடிய இசைவாணி நூர்ஜஹான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானைத் தமது தேசமாகத் தேர்ந்துகொண்டார். அங்கு ஒருமுறை இசைதான் எனது வழிபாட்டுமுறை என்று சொன்னார். அதனால் மத விலக்கம் செய்யப்பட்டார். அவர் எதிர்கொள்ள நேர்ந்த பின் விளைவுகள் மோசமாக இருந்தன. அரசியல் அதிகாரம் பெற்றோர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து, அவர் மன்னிப்புக் கேட்ட பிறகே அவரால் நிம்மதியாக வாழ முடிந்தது என்று படித்திருக்கிறேன். இதேபோல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்ட நஸாகத், ஸலாமத் அலி சகோதரர்கள் ஒருமுறை கல்கத்தாவுக்குக் கச்சேரி செய்ய வந்தபோது, தங்கள் இசையை காளி மாதாவுக்கு அர்ப்பணம் செய்வதாக அறிவித்தார்கள். இப்படிச் சொன்னதற்காக அவர்கள் பாகிஸ்தான் திரும்பியபோது மிகவும் அவதிப்பட நேர்ந்தது.
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      மலர்மன்னன்!

      இசுலாமியர்கள் அல்லாவைத்தவிர வேறெவரையும் இறைவன் எனச்சொல்லக்கூடாது; வணங்கக்கூடாது. மோனோதீயிசம் எனபதே இசுலாம். அதை எடுத்தாலோ, சிதைத்தாலோ இசுலாம் தொபுக்கடீர் என்று விழுந்து விடும்.

      இசுலாமில் 99.9% முசுலீம் என்றெல்லாம் கிடையாது. இருந்தால் 100/100 இல்லையென்றால் இசுலாமியன் இல்லை.

      இப்படியிருக்க, ஒரு இசுலாமிய இசைப்பாடகர் இசையே என் தெய்வமென்றும், கலைவாணியைத் தெய்வமாகத் தொழுகிறேன் காளிமாதாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்பதெல்லாம் தவறு. ஒரு கணவனோடு வாழ்ந்து கொண்டு இன்னொருவனை மோஹிப்பதைப்போன்று. அவர் இசுலாத்தைவிட்டு விலகிவிட்டு எதையும் எவரையும் ஏற்று என்ன வேண்டுமனாலும் செய்துகொள்ளலாம். டிவோர்ஸ் வாங்கிக்கொண்டு மற்றவனோடு சென்றுகொள்ளலாமில்லையா? அதைப்போல.

      இசுலாமியர் என்று சொல்லிக்கொண்டே செய்தால், அவரை பஹிஷ்காரம் மற்ற இசுலாமியர்கள் செய்வதில் தவறேயில்லை.

      மதங்கள் வெவ்வேறு கொள்கைகளை உடையன. இவ்வுண்மையை நாம் உணர்ந்து கொண்டால் மதச்சண்டைகளுக்கிடமில்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். உங்களை ஆரும் அல்லாவை ஏற்றுக்கொள்ளச்செய்யவில்லை. ஆனால் அவர்கள் கொள்கையை அவர்கள் பின்பற்றுவதை ஏளனம் செய்யாதீர்கள்.

      1. Avatar
        punai peyaril says:

        ஆனால், ஷியா, சுன்னி என்று இஸ்லாமில் வித்தியாசம் இருக்கலாம்… என்ன கொடுமை அப்துல்லா இது… இந்தியா முஸ்லீம், பாக்கி முஸ்லீம், மஸ்கட் முஸ்லீம்… என்று இருக்கலாம். காவ்யா இது இண்டர்நெட் யுகம்.. இங்கு புருடாக்கள் செல்லுபடியாகாது… உடனே பிரவுஸ் பண்ணி பார்க்குறாங்க…

    2. Avatar
      Kavya says:

      ஹிந்துஸ்தானம் சிரசில் வைத்துக்கொண்டாடியிருக்கலாம் நூர்ஜஹானை. ஆனால் அவர் ஒரு இசுலாமியப்பெண்ணன்றோ?

  84. Avatar
    Indian says:

    I am wondering why my comments are not published. I know, I am anything but politically correct. I say what I feel without fear or favour,without any frills and trimmings.

  85. Avatar
    suvanappiriyan says:

    திரு மலர் மன்னன்!

    //ஹிந்துஸ்தானம் தன் சிரசில் வைத்துக் கொண்டாடிய இசைவாணி நூர்ஜஹான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானைத் தமது தேசமாகத் தேர்ந்துகொண்டார். அங்கு ஒருமுறை இசைதான் எனது வழிபாட்டுமுறை என்று சொன்னார். அதனால் மத விலக்கம் செய்யப்பட்டார்.//

    //இதேபோல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்ட நஸாகத், ஸலாமத் அலி சகோதரர்கள் ஒருமுறை கல்கத்தாவுக்குக் கச்சேரி செய்ய வந்தபோது, தங்கள் இசையை காளி மாதாவுக்கு அர்ப்பணம் செய்வதாக அறிவித்தார்கள். இப்படிச் சொன்னதற்காக அவர்கள் பாகிஸ்தான் திரும்பியபோது மிகவும் அவதிப்பட நேர்ந்தது.//

    ‘அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்’
    -குர்ஆன் 36:78

    ‘தனக்கு இணை கற்பிப்பதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான்’
    -குர்ஆன் 4:48

    ‘எதையும் படைக்காதவற்றையா அவர்கள் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அவர்களே படைக்கப்படுகின்றனர்’
    -குர்ஆன் 7:191

    இது போன்று எண்ணற்ற வசனங்கள் இறைவனுக்கு நிகராக எவரையும் எந்த பொருளையும் வணங்குவதை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது. ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு குர்ஆனின் வார்த்தையை மதிக்கமாட்டேன் என்று சொல்வது எந்த வகை நியாயம் சார். பிடித்தமில்லை என்றால் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட வேண்டியதுதானே. உள்ளே இருந்து கொண்டே நான் இசையை தெய்வமாக மதிக்கிறேன் என்றால் அவர்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அதை ஒரு பொழுது போக்காக ஒரு ஓரத்தில் வைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. இசைதான் உலகம். இசைதான் கடவுள் என்றெல்லாம் பிதற்றுவதற்கு நமது அறிவும் இடம் கொடுக்காது. இஸ்லாமும் அனுமதிக்காது.

  86. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்

    // பிடித்தமில்லை என்றால் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட வேண்டியதுதானே. //

    பாராட்டுக்குரிய வார்த்தை!

    இதே போல தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்ய வாழ்த்துக்கள். இஸலாத்தில் இருக்க பிடிக்காதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்பதை தமிழ் முஸ்லீம்கள் அறியச்செய்யுங்கள். பல முஸ்லீம்கள் இஸ்லாம் ஒரு ஒருவழிபபாதை என்று தவறாக நினைத்து மருகிக்கொண்டிருக்கிறார்கள்.

  87. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    சுவனப் பிரியனுக்கு என்று தனி வாழ் நெறிமுறைகள் இருக்கின்றன போலும். அது இஸ்லாத்திலிருந்து பெற்றது, குரான் சொல்வது. அவர் தன்க்கென யோசித்து தனதாகப் பெற்றது அல்ல. என்ன கொடுமை நடந்தாலும் அதை நியாய்ப் படுத்துவதற்கு அவர் குரானிலிருந்து மேற்கோள்கள் காட்ட முடிகிறது. கொடுமை தான். அவர் இந்தியாவில் வாழ்கிறார் சுகமாக உயிருக்கு பயந்து அல்ல என்றால் அதற்குக் காரணம், இது இந்து சமுதாயமாக இருப்பதும் , முஸ்லீம்கள் வோட்டுக்காக முஸ்லீம்களின் ஒவ்வொரு பயமுறுத்தல்களுக்கும்பணிந்து செல்லும் ஒரு அரசாகவும் இது இருப்பதால் தான்.

    இது போகட்டும். இஸ்லாத்தில் இருக்கபிடிக்காவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு போகட்டும் என்று இங்கு அவர் பிரசாரம் செய்யச் சொல்கிறார் தங்கமணி. சுவனப் ப்ரியன் சொல்வது வெற்று வீர வசனம். அவர் அதை வெளியே பிரசாரம் செய்ய மாட்டார். அவரது வாசம் முஸ்லீம் மொஹல்லாவாக இருந்தால் அவர் வீட்டுக்கு வெளியே வந்து சொல்ல முடியாது. அவர் உயிருக்கு ஆபத்து. இரண்டாவது அவர் சொல்படி இஸ்லாம் எனக்கு ஒத்து வரவில்லை என்று எவரும் வெளியே போய் உயிருடன் வாழமுடியாது. அப்படி வாழ்ந்தவர் எவரும் இருப்பதாக எனக்குத் தெரியாது. இருந்தால் அவர் சொல்லட்டும். அவர்கள் உயிருக்கு ஆபத்து வராது என்றும் சுவரப்பிரியன் உத்திரவாதம் தர முடியாது.

    சுவனப் பிரியனின் மன அமைப்பும், சிந்தனை ஓட்டங்களும் விசித்திரமானவை. மனித நேயமே அற்று சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும், அவர் தயக்கம் காட்டுவதே இல்லை. வெட்கப் படுவதும் இல்லை.

  88. Avatar
    Kavya says:

    சிரிவைணவத்தைப்பற்றிச்சான்றோன் எழதியவற்றுக்குப்பதில் நாளை.

  89. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //இதே போல தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்ய வாழ்த்துக்கள். இஸலாத்தில் இருக்க பிடிக்காதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்பதை தமிழ் முஸ்லீம்கள் அறியச்செய்யுங்கள். பல முஸ்லீம்கள் இஸ்லாம் ஒரு ஒருவழிபபாதை என்று தவறாக நினைத்து மருகிக்கொண்டிருக்கிறார்கள்.//

    இணையத்தில் எழுதும் பல இஸ்லாமியர்கள் பெயரளவில்தான் முஸ்லிம்களாக உள்ளார்கள். அவர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு இட்டிருந்தேன். போன மாதம் மட்டும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களின் பட்டியல் அது. அதில் பிஹெச்டி முடித்த கல்லூரி பேராசியரும் ஒருவர். ஒரு அமைப்புக்கு கீழ் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கையே இது. இது அல்லாமல் வெளியில் கணக்கில் வராமல் மாறியவர்கள் அனேகம் பேர். இவர்கள் யாரும் வலுக்கட்டாயமாகவோ பண ஆசை காட்டியோ மாற்றப்பட்டவர்கள் அல்ல. தாங்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/07/blog-post_02.html

    அடுத்து நான் முன்பே கூறியது போல் பெரியார்தாசனையோ, ஏ.ஆர்.ரஹ்மானையோ தற்போது பழைய மதத்துக்கு அழைத்து பாருங்களேன். அவரது தொழிலான இசையை இஸ்லாத்தில் ஒரு சாரார் வெறுக்கின்றனர். இசையை மூலதனமாக வைத்து இஸ்லாத்தில் பெயர் பெற முடியாது. ஆனால் இந்து மதத்தில் இசையை வைத்தே பெரிய ஆளாக ஆகி விட முடியும். கோவில்களில் பாடுவதற்கும் எந்த தடையும் ரஹ்மானுக்கு இல்லை.

    சில வருடங்களுக்கு முன்பு ஹஜ் பயணத்துக்காக வந்த ரஹ்மான், புனித பூமியான மெக்கா அமைநதுள்ள சவுதி அரேபியாவின் ஏதாவது ஒரு இடத்தில் தான் கச்சேரி பண்ண விரும்புவதாக சவுதி அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தான் இஸ்லாமில் இசைக்குள்ள முக்கியத்துவம். தங்கமணி ரஹ்மானை சந்தித்து பழைய இந்து மதத்துக்கே திரும்பி விட கோரிக்கை வைக்க வேண்டியதுதானே!

    அப்படி ரஹ்மான் திரும்பி விட்டால் நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன். :-)

    நேற்று கூட பாப்பாரபட்டி கிராம அரிஜனங்களை கோவிலில் நுழைய விடாமல், திருவிழாவுக்கு பணம் வசூலிக்காமல் ஒதுக்கியதால் கோவிலையே பூட்டியிருக்கிறது அரசு.கண்டதேவி விவகாரம் வருடா வருடம் உங்களுக்கும் தெரிந்ததே! இதுதான் இந்து மதத்தின் நிலை. தவறு உங்களிடம் வைத்துக் கொண்டு ‘மதம் மாறிட்டான்! மதம் மாறிட்டான்’ என்று கூப்பாடு போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. போனவர்கள் திரும்ப உங்களிடம் வருவதற்கு சான்சே இல்லை. உண்மை நிலவரம் இதுதான்.

    திரு வெங்கட் சாமிநாதன்!

    //சுவனப் பிரியனின் மன அமைப்பும், சிந்தனை ஓட்டங்களும் விசித்திரமானவை. மனித நேயமே அற்று சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும், அவர் தயக்கம் காட்டுவதே இல்லை. வெட்கப் படுவதும் இல்லை//

    மனித நேயமே அற்று இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்டவர்களை இன்று வரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் அதை நியாயப்படுத்தியும் பேசுகிறீர்களே! அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சத்துணவு ஆயா தாழ்த்தப்பட்டவராக இருந்தால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்லி மாற்ற வைத்தீர்களே! இன்று வரை மதுரை பக்கங்களில் தனி குவளை கொடுத்து அந்த மக்களை ஒதுக்குகிறீர்களே நீங்கள் அல்லவா வெட்கப்பட வேண்டும்! வேதனை பட வேண்டும்…

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “இசையை மூலதனமாக வைத்து இஸ்லாத்தில் பெயர் பெற முடியாது. ஆனால் இந்து மதத்தில் இசையை வைத்தே பெரிய ஆளாக ஆகி விட முடியும்.”

      ஆமாம், இதிலென்ன பிழை கண்டீர் ? திறமை உள்ளவன் பெரிய ஆள் ஆவதுதானே இயல்பு ? ‘இந்து மதத்தில் கலையை வைத்தே / அறிவியலை வைத்தே ஒருவன் பெரிய ஆளாக ஆகிவிட முடியும்’ என்பது போலல்லவா இருக்கிறது நீவிர் சொல்வது ?

      ஏன் இசையை மட்டுமே வைத்து ஒருவன் பெரிய ஆள் ஆவதை இஸ்லாம் தடுக்கிறதா ?

      எங்களுக்கு அப்படி இல்லை ஐயன்மீர். தனது இசைத்திறமையால் ‘பெரிய ஆள்’ ஆன ஒருவர் அதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வாராயின் – அந்த திறமை மூலம் இறை சேவை செய்ய விரும்புவாராயின் அது இறைக்கு ஏற்புடையதே. “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை” என்றுதான் எங்களுக்கு பாடம்.

      1. Avatar
        Kavya says:

        சரியாக எழுதியிருக்கிறீர்கள் எப்படி மதங்கள் வேறுபடுகின்றன என்று. இசையைத்தெய்வமாகவும் வழிபடுவர் இந்துக்கள் கலைவாணியாக. இசைக்கு உருகுபவர் இறைவன் என்பது இம்மதம். இசையினால் இறைவனைத்தொழுவதும் உண்டு. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைப்பாடலகளே எழுதினார்கள். இசை பலவிடங்களில் தெய்வமாகவும் கொள்ளப்படுகிறது. இறுதியில் நீங்கள் தலைக்கட்டிய வரி கம்பரிடமிருந்து. அதில் கலைகளைக் கற்பிக்கும் தெய்வம் என்றுமட்டுமே சொல்லப்படுகிறது. கலையே தெய்வமெனவில்லை. ஆனால் அப்படிச்சொல்லும் வரிகள் உண்டு. தேடிப்பாருங்கள்.

        இசுலாமிய இசை உண்டு. இசைப்பாடலகளும் இலக்கியமும் இறைவனைப்புகழும். அதேசமயம் இசை தெய்வமாகாது. ‘அல்லா அல்லா நீயில்லாத இடமே இல்லை; நீதானே உலகின் எல்லை” என்று பாடலாம். நாகூர் அனிபாவும் பாடலாம். அதே சமயம். அப்பாடல்களைப்பிரேம் போட்டு சாமியாக்க முடியாது. அதற்கு உருவமும் கொடுக்கமுடியாது. இந்துமதம் செய்யும்; இசுலாம் செய்யாது.

        ஆக, இந்துமதமும் இசுலாமும் வேறுபடுகின்றன. இந்த வேறுபாட்டை ஏன் தடுக்கவேண்டும்? அல்லது விமர்சிக்கவேண்டும் ?

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          மறுபடியும் வேறு கோணத்துக்கு என் பதிலை இழுத்துச்செல்கிறீர்களே, நான் சொல்ல வந்தது “இசையை மூலதனமாக வைத்து இஸ்லாத்தில் பெயர் பெற முடியாது. ஆனால் இந்து மதத்தில் இசையை வைத்தே பெரிய ஆளாக ஆகி விட முடியும்.” என்று சொல்லப்பட்டதற்கு எதிர்வினையாக மட்டுமே.

          இசையை வைத்து மட்டுமே இந்து மதத்தில் பெரிய ஆளாக ஆவது என்னவோ கொலைபாதக குற்றம் என்பது போலவும் ‘இசையை மட்டுமே வைத்து’ என்பது கீழ்த்தரமானது என்பது போலவும் ‘அந்த கதையெல்லாம் எங்க கிட்ட நடக்காது’ என்பது போலவும் தொனித்த விமர்சனத்துக்கு பதிலாகவே நான் அதை சொன்னேன்.

          இசை தெய்வமாகாதா ? ஏன் ? பார்க்கும் அனைத்திலும் தெய்வத்தைக்காணும் – பார்க்கும் அனைத்தையும் இறைவடிவமாக காணும் ஒரு மனதால் இசையையும் தெய்வவடிவாகவே காணுவதா சிரமம் ?

          1. Avatar
            Kavya says:

            இசை தெய்வமாகும் மற்ற மதங்களில் குறிப்பாக இந்துமதத்தில். இசுலாமில் ஆகாது. அல்லா மட்டுமே இறைவன்.

            எல்லாவற்றையும் தெய்வவடிவங்களாக கும்பிடுவது இந்துமதம். ஏன் இசுலாமும் அதைச்செய்ய வேண்டும்?

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “மனித நேயமே அற்று இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்டவர்களை இன்று வரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் அதை நியாயப்படுத்தியும் பேசுகிறீர்களே! ….. நீங்கள் அல்லவா வெட்கப்பட வேண்டும்! வேதனை பட வேண்டும்…”

      வெகு நிச்சயமாக வெட்கமும் வேதனையும் படுகிறோம் அன்பரே. இந்து மதத்தில் என்ன ஒரு வித்தியாசமெனில் இது போன்ற பிழைகளை மூர்க்கமான மத வன்முறையின்றி தொடர்ச்சியான உரையாடல் மூலம் களைந்துகொண்டு உண்மையான புரிதல் மூலம் மனமாற்றமும் இணக்கமும் கொண்டுவர அதற்குள்ளேயே ஒரு Framework இருக்கிறது. அந்த தொடர் உரையாடல் மூலமான செயல்பாட்டால் இதுபோன்ற இறுக்கமான நம்பிக்கைகள் காலப்போக்கில் நெகிழ்வடைந்து பலவீனப்பட்டும் போயுள்ளன இந்து மதத்தில். பல உதாரணங்களை சுட்டலாம். வெகு சமீபத்திய உதாரணம் உத்தபுரம் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டு முத்தாலம்மன் கோயிலில் தலித்துகள் வழிபாடு செய்துள்ள நிகழ்வு.

      இதே போல நீங்கள் வெட்கமும் வேதனையும் அடைகிறீர்களா ? (எதற்கு என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்) ஒரு தாலிபான் குழுவினரை இதுபோல உங்களால் மாற்ற இயலுமா என்பதே கேள்வி. அவ்வளவெல்லாம் வேண்டாம், கஜாலாக்கள் கொல்லப்படுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று குரானை மேற்கோள் காட்டி கொலைகாரர்களை திருத்தவாவது ?

      1. Avatar
        Kavya says:

        பொன் முத்துக்குமார்!

        நீங்கள் சொன்னவந்த கருத்து சரி; ஆனால் எடுத்துக்காட்டு தவறு.

        உத்தபுரத்தில் ஜாதிப்பிரச்சினையே அடிப்படை. அது கோயில் மூலமாக வெடித்தது. ஜாதிப்பிரச்சினைக்கு பல காரணிகள். கோயில் வழிபாடு அக்காரணிகளை உந்துவிப்பது மட்டுமே. (எ.கா தலித்து வளர்க்கும் கோழியும் ஆடுமாடுகளும் பன்றிகளும் எப்படி எங்கள் வீட்டருகே வரலாம்? எனவே சுவரைக்கட்டினோம் என்றார்கள்! இங்கே சாமி வந்ததா?)

        முத்தாலம்மன் கோயில் வழிபாடு தலித்துக்களுக்குத் தடுக்கப்பட்ட போது எந்த இந்துச்சாமியாரும் போய் அதற்கு வழிகாணவில்லை. எந்த இந்துமத அமைப்புக்களும் அங்கு சென்று தலித்துகளுக்குச்சார்ப்பாக பேசவில்லை; செயல்படவில்லை (அப்படியிருந்தால் சொல்லுங்கள்; திருத்திக்கொள்கிறேன்). ஒரு விவாதமேடையில் இது பேசப்பட்ட போது நான் இந்துமத அமைப்புக்களின் ஓரவஞ்சகத்தை (அதாவது தலித்துக்களுக்குச் சார்ப்பாக வராமை)ச் சுட்டிக்காட்டியபோது, அங்கிருந்து ஒரு தீவிர ஜாதியாளர் சொன்னது: எங்கள் சாமியார்கள் ஏன் வரவேண்டும்? அங்கு நடப்பதற்கு தீர்வு காணவேண்டியது கருநாநிதியே (அப்போது மு.க முதலமைச்சர்).

        கம்யூனிஸ்டுகளும், மற்றும் பல என் ஜி ஓக்களும் தொடர் போராட்டம் செய்து, உத்தபுரத்தை உலகவரங்கில் ஏற்றிச் சிரிக்கவைத்தார்கள். அமெரிக்க ஊடகங்கள். பிரிட்டன் பி பி சி வெளிக்காட்டியது. இந்தியா முழுவதும் ஊடகங்கள் உத்தபுர மேற்சாதியை இகழும்படி எழுதினார்கள். தமிழக அரசும் உத்தபுர ஊரையே புறக்கணித்த மாதிரி நடந்துகொண்டது. கிட்டத்தட்ட யு என் சாக்ஸன்ஸ் மாதிரி.

        தங்களை உலகமே இகழ்வதைப் பார்க்கபார்க்க மனம்நொந்து பிள்ளைமார்கள் இறங்கி வந்தார்கள்.

        இதில் இந்துமதவாதிகளோ தலைவர்களோ எந்த கிரடிட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. கம்யூனிஸ்டுகளையும் என். ஜி. ஓக்களுக்கு மட்டுமே நாம் நன்றி சொல்லமுடியும்.

        1. Avatar
          சான்றோன் says:

          //இதில் இந்துமதவாதிகளோ தலைவர்களோ எந்த கிரடிட்டும் டுத்துக்கொள்ளமுடியாது.//
          காவ்யா அவர்களே…..

          காழ்ப்புணர்ச்சியின் எல்லையை தொட்டு விட்டீர்கள்…..உங்களது மறைமுக செயல்திட்டங்களை அம்மபலப்படுத்தும் ஹிந்து இயக்கங்கள் மீதான கோபம் எங்களுக்கு புரிகிறது…அதற்காக முழு பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்க முயற்சிக்காதீர்கள்…… ந‌டந்த எல்லா சம்பவங்களுக்கும் ஆதாரம் உள்ளது [ ஆதாரம் காட்டினால் வெளி நாடுசெல்கிறேன் என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள் ]

          உத்தப்புரம் பிரச்சினை தீர முழுமூச்சுடன் செயல் பட்டவர்கள் ஹிந்து இயக்கங்களே…..இடது சாரிகள் இந்த பிரச்சினையை தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர்……கட்சியின் வட இந்திய தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து பிரிவினை நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டனர்……ஆரம்பத்தில் மார்க்சிஸ்டுகளை நம்பிய தலித்கள் பின்பு உஷாராகிவிட்டனர்…..அவர்கள் விரும்பியது பிள்ளைமார்களோடு சமாதான சகவாழ்வையே….. நகரம் போல அல்ல கிராம வாழ்க்கை…….அங்கு இரு தரப்பாரும் ஒருவரை ஒருவர் அணுசரித்தே செல்ல வேண்டும் …..இல்லாவிட்டால் இரண்டு தரப்புமே வாழ முடியாது…..

          இந்த உண்மையை இரண்டு தரப்புக்கும் புரிய வைத்து பிரச்சினையை தீர்த்தவர்கள் வி.எச்.பி அமைப்பினர்…..இந்த முயற்சிக்கு இடதுசாரிகள் தரப்பில் இருந்தும் ,இந்த பிரச்சினையை பயன்படுத்தி ,மதமாற்ற அறுவடை செய்ய நினைத்த மத மாற்ற சக்திகள் தரப்பில் இருந்தும் பல இடையூறுகள் வந்தன….. மதுரை [மறை] மாவட்ட கலெக்டர் சகாயம் ஹிந்து இயக்கங்களை வெளிப்படையாகவே மிரட்டினார்……[ அதன் காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டார்] ஒரு கட்டத்தில் இடது சாரிகளை தலித்கள் அருகிலேயே சேர்க்க மறுத்தனர்….. மதுரை வி.எச்.பி பிரமுகர் சின்மயா சோமசுந்தரம் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால் சமாதானம் ஏற்பட்டு ,முத்தாலம்ம‌ன் கோவிலில் வழிபட வந்த தலித்களை பிள்ளைமார்கள் எதிர்கொண்டு வரவேற்று அழைத்து சென்ற‌னர்….இந்த மாற்றத்தை சாதித்தவர்கள் ஹிந்து இயக்கத்தினர்……. உலகம் முழுக்க கிறித்தவ மிஷனரிகளின் முன்னோடி படைகளாக செயல்படும் கம்யூனிஸ்டுகள் [ தெற்கு சூடான் சமீபத்திய உதாரணம் ]மூக்குடைந்து நின்றனர்….இதுதான் நடந்தது…..

          1. Avatar
            Kavya says:

            தெரிந்தால் சொல்லுங்கள்; திருத்திக்கொள்ளலாமென்றேன். படிக்கவில்லை போலிருக்கிறது. அது கிடக்க. நீங்கள் சொன்னவைக்கு ஆதாரங்களைக்காட்டினால் நல்லது. படித்துத்தெரிந்து கொள்ளலாம். அட்வான்ஸ் நன்றிகள்.

        2. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          காவ்யா, உத்தபுரத்தில் கோயில் பிரச்சினையே அடிப்படை என்று நானும் சொல்லவில்லை. தீண்டாமை சுவர் என்றுதான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேனே. அதே தீண்டாமை பிரச்சினையால்தான் அவர்கள் வழிபாடு தடுக்கப்பட்டிருந்தது என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்பதால் அப்படியான பொருள்மயக்கம் ஏற்பட்டுவிட்டது போலும்.

          நீங்கள் குறிப்பிட்டதுபோல இதுபோன்ற பிரச்சினைகளில் இந்து ஆன்மீக மற்றும் சமூக நல இயக்கங்கள் முன்வந்து ஆதிக்க ஜாதியினரை வன்மையாக கண்டித்து தீண்டாமை சுவரை இடிக்க ஏதுவாக இருந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணமும். எவரும் அப்படி முன்வராதபோது எனக்கும் வெறுப்பும் வேதனையுமே ஏற்பட்டது. அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். அதேபோல தீண்டாமையை காத்துக்கொள்ள இந்து மதம் திரும்பிய ஒரு கும்பலையும் எந்த இந்து அமைப்புகளும் கண்டிக்கவில்லை, அர்ஜூன் சம்பத்தைத் தவிர.

          1. Avatar
            Kavya says:

            தீண்டாமை ஒழிய சாதிகளே இருக்கக்கூடாதென்பவர் இந்துக்களில் ஒரு சாரார். சாதிகள் அவசியம் என்று சொல்பவர் இன்னொரு சாரார். நீங்கள் எப்படிப்பட்ட இந்து?

  90. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு போகும் மக்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்களை திருத்தவும் எனக்கு ஆசையில்லை. அதே போல இஸ்லாமில் உள்ளவர்களிடம் இந்து மதத்தை பிரச்சாரம் பண்ணவும் ஆசையில்லை.

    ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இஸ்லாமுக்கு சென்றவர்கள் திரும்பி இந்துவானால் முஸ்லீம்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதை பார்த்திருக்கிறேன்.

    பொதுக்கூட்ட மேடையிலும், தொலைக்காட்சியிலும் உங்கள் பிரியமான ஜாகிர் நாயக், இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை வழங்கவேண்டும் என்று பேசுகிறார்.இந்தியாவில் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் இந்து அரசியல்வாதியும், கம்யூனிஸ்டுகளும், கண்டித்ததாகவோ அல்லது அவரை நீங்களோ அல்லது தமிழ்நாட்டு ”உண்மையான இஸ்லாத்தை” பரப்பும் வீரர்களோ கண்டித்ததாக தெரியவில்லை.

    காவ்யா போன்றவர்கள், அதுதான் இஸ்லாம. அதனை ஒப்புகொண்டு, எந்த முஸ்லீம் மதம் மாறினாலும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதுதான், சிறுபான்மையினர் உரிமையை மதிப்பது என்றும் சொல்லுவார்கள் என்று கருதுகிறேன்.

    இந்தோனேஷிய நாத்திகர் கடவுள் இல்லை என்று சொன்னதற்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

    சவுதி அரேபியாவில் இஸ்லாத்தை விட்டு ஒருவர் மதம் மாற முடியுமா?

    ஏன் மலேசியாவில் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடியுமா?

    ஒரு இந்து பெண்னை கட்டாயமாக மதம் மாற்றியதை கொண்டாடும் வகையில், கையில் துப்பாக்கியை வைத்துகொண்டு ஊர்வலம் போகும் ஒரு நாட்டில் ஒரு பாடகி இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று அறிவிக்க முடியுமா?

    1. Avatar
      Kavya says:

      நான் சொல்லிய கருத்தைச்சிதைக்க வேண்டாம்.

      என் கருத்து: இசுலாமியர் என்றால் இசுலாம் சொல்லியபடி வாழ்பவர் மட்டுமே. அல்லா ஒருவரே இறைவன்; அல்லாவத்தவிர வேறு இறைவனில்லை என்பதே இசுலாம்.

      ஒரு இசுலாமியர் என்பவர் “காளிக்கு அர்ப்பணம்; கலைவாணியைத்தொழுகிறேன்” என்பது இசுலாத்தில் அடிப்படைக்கொள்கையை எதிர்ப்பதாகும். அக்கொள்கை பிடிக்கவில்லையென்றால் வெளியேறி மற்ற மதத்தில் சேர்ந்து கொள்ளலாம். உள்ளேயிருந்து குழிதோண்டுவது தவறு என்பதே நான் சொன்னது.

      1. Avatar
        தங்கமணி says:

        // பிடித்தமில்லை என்றால் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட வேண்டியதுதானே. //
        என்று உரத்த குரல் எழுப்பிய காவ்யாவும் சுவனப்பிரியனும் இப்படிப்பட்ட பாடகிகள், கலைஞர்கள், அல்லது இஸ்லாம் தவறான மார்க்கம் என்று சிந்திப்பவர்கள் மேற்கண்ட நாடுகளில் எப்படி “இஸ்லாத்தை விட்டே விலகிவிடவேண்டியதுதானே” என்ற குரலுக்கு செவி சாய்ப்பார்கள் என்று இன்னமும் நீங்கள் விளக்கவில்லையே.

  91. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //பொதுக்கூட்ட மேடையிலும், தொலைக்காட்சியிலும் உங்கள் பிரியமான ஜாகிர் நாயக், இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை வழங்கவேண்டும் என்று பேசுகிறார்.இந்தியாவில் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் இந்து அரசியல்வாதியும், கம்யூனிஸ்டுகளும், கண்டித்ததாகவோ அல்லது அவரை நீங்களோ அல்லது தமிழ்நாட்டு ”உண்மையான இஸ்லாத்தை” பரப்பும் வீரர்களோ கண்டித்ததாக தெரியவில்லை.//

    இப்படி ஜாகிர் நாயக் பேசியதாக எங்கும் கேள்விப்படவில்லை. தவறான தகவலை தர வேண்டாம். குர்ஆன் கூறும் கட்டளையைப் பார்ப்போம்.

    இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும், அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும். உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணிக்கவில்லை. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.

    நபியே!) நீர் கூறுவீராக “இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது” ஆகவே, *விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்.* அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம்
    சித்தப்படுத்தியுள்ளோம்;

    (அல் குர்ஆன் 18:29)

    இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக்
    கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..
    ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்த வர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய
    சட்டமாக இருக்க முடியும்?

    *எவர்கள் நிராகரித்து,* *நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும்
    விட்டார்களோ,*அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை) அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க
    மாட்டார்கள். (3:91)

    நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான். இதன் மூலம் இஸ்லாத்திலிருந்து அதன் பின்னர் நிராகரிப்புக்குள் சென்று விட்டவர்களுக்கு இந்த உலகில் அல்லாமல் மறு உலகில் தண்டனை அளிப்பதாகத்தான் இறைவன் கூறுகிறான். அதற்கு பகரமாக உலகில் எவ்வளவு பொருட்களை கொடுத்தாலும் அது ஈடாகாது என்பதுதான் கட்டளை.

    (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது
    (அல்குர்ஆன் 2:256)

    எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
    (அல்குர்ஆன் 4:137)

    இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்……… இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். எனவே மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மறுப்பாக இந்த வசனங்கள் நம்மை தெளிவுபடுத்துகின்றன.

    எனவே இந்த குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக எவருடைய கருத்து இருந்தாலும் அது ஜாகிர் நாயக்காகவே இருந்தாலும் அந்த கருத்து புறந்தள்ளப்பட வேண்டியதே!

  92. Avatar
    தங்கமணி says:

    //இப்படி ஜாகிர் நாயக் பேசியதாக எங்கும் கேள்விப்படவில்லை. தவறான தகவலை தர வேண்டாம்//
    http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI

    ரொம்ப நல்லது சுவனப்பிரியன்.
    புறந்தள்ளுவது என்பது பெரிய பிரச்னை இல்லை. புறந்தள்ளிவிட்டு அந்த பாடகியோ அல்லது மலேசிய, சவுதி முஸ்லீம்களோ உயிரோடு இருக்க வேண்டுமே.

    http://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_Saudi_Arabia
    Apostasy[the apostate is however given three days to repent and return to Islaam. If he does not return then he is beheaded]

    http://en.wikipedia.org/wiki/Apostasy
    Iran – illegal (death penalty)[7][8][9]
    Egypt – illegal (death penalty)[9]
    Pakistan – illegal (death penalty[9] since 2007)
    United Arab Emirates – illegal (death penalty)[10]
    Somalia – illegal (death penalty)[11]
    Afghanistan – illegal (death penalty, although the U.S. and other coalition members have put pressure that has prevented recent executions[12][13])
    Saudi Arabia – illegal (death penalty, although there have been no recently reported executions)[9][14]
    Sudan – illegal (death penalty, although there have only been recent reports of torture, and not of execution[15] [16])
    Qatar – illegal (death penalty)[17]
    Yemen – illegal (death penalty)[17]
    Malaysia – illegal in five of 13 states (fine, imprisonment, and flogging)[18][19]
    Mauritania – illegal (death penalty)[citation needed]
    Syria – possibly illegal (death penalty) although there is evidence to the contrary[20]
    Morocco – illegal to proselytise conversion (15 years jail, flogging)[21]
    Jordan – possibly illegal (fine, jail, child custody loss, marriage annulment) although officials claim otherwise, convictions are recorded for apostasy.[22][23][24]

    சட்டம் இருக்கின்றது. ஆகவே இந்த நாட்டு முஸ்லீம் தலைவர்கள் அனைவரது கருத்துக்களையும் நீங்கள் புறந்தள்ளுகிறீர்கள் என்பது அவரகளுக்கு தெரியுமா? இத்தனை நாட்டு தலைவர்களும் மாங்க மடையர்கள் என்பத்யும் உங்களுக்கு ஒருவருக்கு மட்டுமே இஸ்லாம் சரியாக புரிந்திருக்கிறது என்பதை அறிந்து ரொம்ப சந்தோஷம்.

  93. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI
    ரொம்ப நல்லது சுவனப்பிரியன்.
    புறந்தள்ளுவது என்பது பெரிய பிரச்னை இல்லை. புறந்தள்ளிவிட்டு அந்த பாடகியோ அல்லது மலேசிய, சவுதி முஸ்லீம்களோ உயிரோடு இருக்க வேண்டுமே.//

    பலர் ஒரு ஹதீதை தவறாக விளங்கியதால் வந்த குளறுபடி இது.

    நீங்கள் கொடுத்த யுட்யூபிலும் மதம் மாறியதற்காக அல்ல இவைனை மட்டுமே வணங்கி வரும் ஒற்றுமையாக உள்ள ஒரு சமூகத்தில் இடையில் புகுந்து இஸ்லாத்தில் பிரிவுகளை உண்டாக்கி குழப்பத்தை உண்டு பண்ணும் நயவஞசர்களையே கொலை செய்ய அந்த ஹதீத் கூறுகிறது. ஜாகிர் நாயக்கும் அதைத்தான் சொல்கிறார். நஸயீயில் வரும் நபிமொழி மேலதிக விபரமாக தெளிவாகவும் குழப்பம் விளைவிப்பவர்களையே கொலை செய்யச் சொல்கிறது. மதம் மாறியவர்களை அல்ல. கீழே வரும் ஹதீதுகளை கவனமாக படித்தால் உண்மை விளங்கும்.

    அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

    ”அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
    1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
    2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.
    3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (அப்தல்லாஹ் – முஸ்லிம்)

    ‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض

    ”மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)

    மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.

    புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.

    //இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//.

    இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும். இதை தெளிவாக்கும் விதமாகவே “அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்” என்று நபி குறிப்பிடுகிறார்கள்.

    நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி.

    இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.

    மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி) என்று நபி கூறி இருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான்.

    நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். “நாடுகடத்தப்பட வேண்டும்” என்று நபி குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது.
    நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை – பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி குறிப்பிட்டுள்ளார்கள்.

    //இத்தனை நாட்டு தலைவர்களும் மாங்க மடையர்கள் என்பத்யும் உங்களுக்கு ஒருவருக்கு மட்டுமே இஸ்லாம் சரியாக புரிந்திருக்கிறது என்பதை அறிந்து ரொம்ப சந்தோஷம்.//
    இந்தியாவிலும் மற்றும் ஐரோப்பிய ஆப்ரிக்க கண்டங்களில் மதத்தின் பெயரால் நடந்த கொலைகளின் பட்டியலை இதை விட அதிகமாக என்னாலும் தர முடியும். இஸ்லாத்தை சரிவர விளங்காது சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளும் யாருமே மாங்கா மடையர்கள்தான். அதில் என்ன சந்தேகம்.

    1. Avatar
      தங்கமணி says:

      சவுதி அரேபிய அரசர்களும்,சவுதி அரேபிய அரசும் மாங்காமடையர்கள், இஸ்லாம் என்றாலே என்னவென்று தெரியாதவர்கள் என்று ஓங்கி ஒலித்திருக்கிறீர்கள்.
      பாராட்டுகள்.

  94. Avatar
    தங்கமணி says:

    // பிடித்தமில்லை என்றால் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட வேண்டியதுதானே. //
    என்று உரத்த குரல் எழுப்பிய காவ்யாவும் சுவனப்பிரியனும் இப்படிப்பட்ட பாடகிகள், கலைஞர்கள், அல்லது இஸ்லாம் தவறான மார்க்கம் என்று சிந்திப்பவர்கள் மேற்கண்ட நாடுகளில் எப்படி “இஸ்லாத்தை விட்டே விலகிவிடவேண்டியதுதானே” என்ற குரலுக்கு செவி சாய்ப்பார்கள் என்று இன்னமும் விளக்கவில்லையே.

  95. Avatar
    suvanappiriyan says:

    திரு பொன் முத்துக்குமார்!

    //ஒரு தாலிபான் குழுவினரை இதுபோல உங்களால் மாற்ற இயலுமா என்பதே கேள்வி. அவ்வளவெல்லாம் வேண்டாம், கஜாலாக்கள் கொல்லப்படுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று குரானை மேற்கோள் காட்டி கொலைகாரர்களை திருத்தவாவது//

    எங்கும் போக வேண்டாம் தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும் சிறையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களை அடைப்பதுமாகவே காவல் துறை இருந்தது. கல்வியில் பின் தங்கி இருந்தனர். தர்ஹா போன்ற மூடப் பழக்கங்களில் மூழ்கியிருந்தனர். குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பு இளைஞர்களை சென்றடையாமல் இருந்தது.

    இந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு முஸ்லிம்கள் மத்தியில் உண்மையான இஸ்லாத்தை எடுத்து சொல்ல ஆரம்பித்தது. வழக்கமான எதிர்ப்புகள். என்னைக் கூட பள்ளியில் தொழுக வரக் கூடாது என்று சிலர் தடுத்தனர். இது வெல்லாம் கடந்த இருபது வருடத்துக்கு முந்தய நிலை. தற்போதய நிலை என்ன?

    குர்ஆனை பட்டி தொட்டிகளெல்லாம் பிரசாரம் பண்ணியதால் சிறந்த இளைஞர் சமுதாயத்தை தற்போது உருவாக்கியிருக்கிறோம். வீட்டுக்கு ஒரு பட்டதாரி சர்வ சாதாரணமாக வருடா வருடம் வெளி வருகின்றனர். பெண்களும் கல்லூரியை தொடுகின்றனர். வரதட்சணை வாங்காமல் சவுதியை போல் பெண்ணுக்கு பணம்(மஹர்) கொடுத்து திருமணம் முடிக்கின்றனர். தவறுதலாக ஏற்கெனவே வாங்கியவர்கள் தற்போது பெண்ணின் தகப்பனிடத்தில் திரும்ப கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாற்று மதத்தவரின் கசப்பான எண்ணங்களையும் சந்தேகங்களையும் ஒவ்வொரு ஊராக சென்று தீர்த்து வருகிறோம். ஒரு சில தீவிர எண்ணம் உடைய இளைஞர்களை இஸ்லாத்தின் உண்மை நிலையை விளக்கி இன்று அவர்களும் மற்ற சமூகத்தோடு சேர்ந்து வாழ பழக்கியுள்ளோம்.

    முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு போராடி பெற்றதனால் இன்று அரசு வேலைகளில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தங்களின் பங்கை ஆற்றுகின்றனர். இவை எல்லாம் குர்ஆனை சிறப்பாக விளங்கிய மக்களாலேயே சாத்தியப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வன்மையாக நானும் பல பதிவுகளில் கண்டித்து வந்துள்ளேன். பாடகர்களை கொலை செய்த செயல் காட்டுமிராண்டித் தனமானது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். தாலிபான்கள் செய்யும் எந்த செயலுக்கும் இஸ்லாம் பொறுப்பாகாது. போதைப் பொருள்களை தனது முக்கிய வியாபாரமாக கொண்டிருக்கும் ஒரு கூட்டம் எப்படி முகமது நபி கூட்டமாக முடியும்?

    எனவே மாற்று மதத்தவர்களோடு சந்தோஷமாகவும் சுமூகமாகவும் வாழ்க்கையை நகர்த்தி செல்லவே இஸ்லாம் கட்டளையிடுகிறது. இது தொடரும்.

  96. Avatar
    smitha says:

    Piriyan,

    You are dodging the questions.

    What have the right thinking muslims (forget the muslims) done in the shah bhano episode?

    When a fatwa was issued to a dutch cartoonist by a UP minister, where did U guys go?

    As per your religion, issuing fatwas is legitimate?

    U guys raised a hue & cry when painter M.F Hussain was not allowed to return to India.

    Why did U keep quiet when ur muslim friends protested & prevented Riushdie to even particpate in a video conference in a recent book fair?

    Why not a single religious leader protested when the verdict in the rape case of a girl by her father-inlaw (I have stated the details in my post above) was out?

    Rules are different for different people?

    Repeatedly you keep saying Koran does not say this, that blah blah.

    But your own religious leaders interpret koran in differenb ways & act against the very interests of mankind.

    Please do not post a rosy picture of muslims tolerating other religions, exisyting in harmony etc.,

    This is far from the truth.

    Hindus made the mistake during partition – we are paying now – with our lives.

    1. Avatar
      Kavya says:

      About Hussain, it is prevarication of truth in your mge. Because, it was not muslims who raised a hue and cry for his return. Indeed, they either sympathised with the offended Hindus or kept silent.

      The chorus of protest came from the cross sections of the artists and others who are interested in the freedom of artists. Muslims generally were of the opinion (from reading their views in newspapers) that religious sentiments of any ppl shd not be offended. The reason is obvious: if they support Hussain who offended Hindus, they forfeit any moral highground for asking for support if their own religious sentiments are offended.

      On the contrary, the behaviour of Hindus, (not all) in the matter of Hussain is despicable, I mean, exactly like that of Taliban, – many even baying for his blood reminding one of the Varanasi Saamiyaar asking for the head of Karunanithi for calling Ram ‘a drunkard’!

      So much for your tolerance, as well !

      1. Avatar
        தங்கமணி says:

        வெத்துவேட்டு இந்துக்களுக்காக ஓடினாரா, அல்லது இஸ்லாமிய மிரட்டல்களுக்கு பயந்து ஓடினாரா என்பது உசேனுக்குத்தான் வெளிச்சம்.
        ஓடுவது ஓடிவிட்டு இந்துக்கள் மீது பழிபோட்டிருக்கிறார்கள் என்றுதான் கருதுகிறேன்.
        http://en.wikipedia.org/wiki/M._F._Husain

        Meenaxi: A Tale of Three CitiesHusain’s film Meenaxi: A Tale of Three Cities[31] was pulled out of cinemas a day after some Muslim organisations raised objections to one of the songs in it.[32] The All-India Ulema Council complained that the Qawwali song Noor-un-Ala-Noor was blasphemous. It argued that the song contained words directly taken from the Quran. The council was supported by Muslim organisations like the Milli Council, All-India Muslim Council, Raza Academy, Jamiat-ul-Ulema-e-Hind and Jamat-e-Islami. Husain’s son stated that the words were a phrase referring to divine beauty that were being sung by the central character played by Tabu. He said there was no intention to offend. Following the wave of protests the enraged artist withdrew his movie from cinemas.

        1. Avatar
          Kavya says:

          ஹூசேனின் சரசுவதி ஓவியம்தான் பிரச்சினையாக இந்துக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு விமர்சனத்துக்கும், மிரட்டலுக்கும் உள்ளானது. சரசுவதையை நிர்வாணமாக அவர் வரைந்தார். அவர் அதற்காகத்தான் பயந்து ஓடி அரபு நாடொன்றில் அடைக்கலமடைந்து இறுதியில் பிரிட்டனில் மரணமடைந்தார்.இந்தப் பிரச்சினையைக்குறிப்பிட்டுத்தானே ஸ்மீதா எழுதுகிறார்?

          முசுலீம்களின் விசயத்திலும் அவர் உண்டு என்பது தங்கமணியின் கழுகுக்கண் பார்வையிலிருந்து அறிந்தேன். அதற்காக அவருக்கு நன்றி.

          சரசுவதி ஓவியத்தினால் அவருக்கு இந்து அமைப்புக்களிடமிருந்து மிரட்டல் வந்ததா இல்லையா? சரசுவதி ஓவியத்தையும் இந்துக்கள் பார்த்து அவரின் உயிரைக்கேட்கவில்லையென்று எழுதுகிறார் ஸூமீதா. அல்லது அவரை மிரட்டவில்லை என்று சொல்கிறார். அதைப்பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்குமே? சொல்லலாமே?

          இன்னொன்றும் கவனிக்க வேண்டும். நான் சொன்ன கருத்து சரசுவதி ஓவியத்தால் இந்துக்கள் மனமுடைந்தனர். அப்படி மனமுடையவேண்டுமென்று முசுலீம்கள் விரும்பி ஹுசேனுக்கு ஆதரவு தெரிவித்தனரா? நானறிந்தவரை, அவர்கள் இந்துக்கள் பக்கம்தான் இருந்து ஹீசேன் அப்படி வரையக்கூடாதென்றனர் என்றறிகிறேன்.

  97. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //U guys raised a hue & cry when painter M.F Hussain was not allowed to return to India.//

    யார் ஆர்ப்பரித்தது? இஸ்லாத்தை முறையாக உணர்ந்த ஒருவன் ஹூசைனை எதிர்க்கவே செய்வான். மதிப்பு மிக்க உருவப்படங்களை வரைவது இஸ்லாமிய சட்டத்துக்கு முரணானது. அதிலும் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த கிறுக்கன் ஹூசைன். அதிலும் இந்த தள்ளாத வயதில் மாதுரி தீட்சித்தின் ரசிகையாகி அந்த நடிகையை விதம் விதமாக வரைந்து ரசித்தவன். எனவே இவனுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த வொரு சம்பந்தமும் இல்லை. இவனுக்காக எந்த உண்மையான முஸ்லிமும் போராடவும் இல்லை.

    //What have the right thinking muslims (forget the muslims) done in the shah bhano episode?//

    ஷாபானு வழக்கில் அந்த பெண்ணின் திருமணம் பல லட்சம் மஹர் பெண்ணுக்கு கொடுத்து இஸ்லாமிய முறையில் முறையாக நடந்திருந்தால் இந்த வழக்குக்கே அவசியம் இல்லாமல் போயிருக்கும். அட்வான்ஸ் ஜீவனாம்சம்தான் மஹர் என்பது. அதை திருமணத்துக்கு முன்பே கேட்டு வாங்காதது ஷாபானுவின் குற்றம். இதற்காக இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எப்படி அனுமதிக்க முடியும்? மஹர் தராத மணமகனை சிறையில் அடைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வாருங்கள். அது வரவேற்கப்பட வேண்டியது.

    //Hindus made the mistake during partition – we are paying now – with our lives.//

    ஜின்னா ராஜாஜி பட்டேல் நேரு போன்ற சுயநலமிகளால் பாகிஸ்தான் என்ற நாடு பிரிந்தது முஸ்லிம்களை பொறுத்த வரை பெரும் இழப்பே! பாகிஸ்தானை நமது நாட்டோடு தற்போது இணைத்தால் அதற்கு முதல் ஆதரவு குரல் என்னிடமிருந்தே வரும்.

    உங்களின் மற்ற கேள்விகளுக்கு ஒரு சில முஸ்லிம்கள் ஆதரவளித்தாலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிராகவே இருக்கின்றனர். இஸ்லாமும் எதிர்க்கவே செய்கிறது.

  98. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன் செய்யும் குரூர காமெடிக்கு அளவே இல்லை.
    மெஹர் கொடுப்பது அட்வான்ஸ் ஜீவனாம்சமாம்! மூன்று நான்கு திராட்சைகளை மெஹராக கொடுத்து கூட நிக்காஹ் செய்யலாம். அதனை வைத்துகொண்டு எதிர்காலத்தில் என்ன செய்வார் விவாகரத்து செய்யப்பட்டவர்? மனமொத்து விவாகரத்து செய்யும்போது அந்த மெஹரையும் கணவனிடமே திருப்பி தரவேண்டும். கணவன் கேட்டு மனைவி மறுத்தால் மட்டுமே மெஹர் மனைவியிடம் தங்கும். மூன்று நான்கு பேரீச்சை பழத்தை வைத்துகொண்டு என்ன செய்வார் ஷாபானு?
    திருமணத்துக்கு முன்னரே கேட்டு வாங்க வேண்டுமாம். திருமணமானபின்னால், அது குடும்ப செலவுக்கு ஆகிவிட்டால் என்ன செய்வார்? விவாகரத்தின் போது மெஹரை திருப்பி தரவேண்டுமே என்ன செய்வார்? மெஹரையும் திருப்பி தந்து அதற்கும் காசு இல்லாமல் கடனாளியாக தெருவில் பிச்சை எடுப்பாரா?

    மெஹர் என்றால் என்ன என்று ஒருவர் விளக்குகிறார்
    http://pagadu.blog.com/2011/12/02/%e0%ae%ae%e0%af%86%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/

  99. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //சுவனப்பிரியன் செய்யும் குரூர காமெடிக்கு அளவே இல்லை.//

    நீங்கள் பண்ணும் காமெடியை விடவா? :-)

    //விவாகரத்தின் போது மெஹரை திருப்பி தரவேண்டுமே என்ன செய்வார்? மெஹரையும் திருப்பி தந்து அதற்கும் காசு இல்லாமல் கடனாளியாக தெருவில் பிச்சை எடுப்பாரா?//

    எந்த ஆதாரத்தை வைத்து இப்படி சொல்கிறீர்கள்? குர்ஆன் என்ன அழகாக இதற்கு தீர்ப்பு தருகிறது என்று பாருங்கள்.

    ‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

    ‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

    <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/It9_av06B9s?rel=0&quot; frameborder="0" </iframe

    விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.

    விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (அல்குர்ஆன் 2:241)

    இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

    ஆயினும் முஸ்லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே இந்த வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.

    இதை ''இத்தா காலத்தில்'' என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் ''அழகிய முறையில் நியாயமான முறையில்'' என்று கூறுகிறான்.

    ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

    தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.

    வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (அல்குர்ஆன் 2:236)

    இந்த வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும்.

    விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப, பெரும் தொகையைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

    தங்கமணி சொல்வது போல் திருமணத்துக்கு பிறகு ஒரு கணவனிடம் சொத்தே இல்லாமல் வறுமையில் இருந்தால் அவனால் எங்கிருந்து ஜீவனாம்சம் கொடுக்க முடியும். எனவேதான் திருமணத்துக்கு முன்பே அட்வான்ஸாக மஹர் தொகையை வாங்கிக் கொள்ளச் சொல்லி இஸ்லாம் பணிக்கிறது. இந்த மஹர் தொகையை நிர்ணயிப்பது கூட மணப்பெண்ணின் விருப்பத்துக்கு விடுகிறது இஸ்லாம்.

  100. Avatar
    தங்கமணி says:

    //அதை திருமணத்துக்கு முன்பே கேட்டு வாங்காதது ஷாபானுவின் குற்றம். இதற்காக இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எப்படி அனுமதிக்க முடியும்? //

    என்ன திருத்தம் செய்தார்கள்?

    தலாக செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்கலாம் என்று தீர்ப்பளித்தார்கள்.

    //விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (அல்குர்ஆன் 2:241)//

    இந்த வசனத்தை ஜீவனாம்சம் என்று எடுத்துகொள்ளலாமே? ஏன் எதிர்க்க வேண்டும்?
    சுப்ரீம் கோர்ட்டே இதனைத்தான் குறிப்பிட்டது.

    http://en.wikipedia.org/wiki/Shah_Bano_case

  101. Avatar
    தங்கமணி says:

    இதுவரை கேட்ட கேள்விகளுக்கு சுவனப்பிரியன் அளிக்காத பதில்கள்
    1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.

    2) மெக்கா தர்ஹா அல்ல என்று அவர் சொன்னதற்கு, மெக்காவில் இஸ்மாயீலும் அவரது தாயாரும அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமிய பக்கங்களே சொல்கின்றன என்றால், மெக்கா தர்ஹா தானே? மெக்காவை இடிக்க வேண்டுமா?

    3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; என்று குரானே சொல்லும்போது, முனாவர் அவர்கள் சொல்வது போல ஹதீஸை வைத்து குரானை பொய் என்று சொல்லுவது ஏன்?

    4) நாஸிக் மன்சூக் வசனங்களை லிஸ்டு போட்டு எவை நீக்கப்பட்ட வசனங்கள் என்று சுவனப்பிரியன் விளக்குவாரா?

    5) இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை என்று சொல்லும் நாடுகளில் உள்ள பாடகிகள், இஸ்லாம் தவறு என்று சொல்பவர்கள் எப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுவது

    6) சமண மதமும் பௌத்தமதமும் ஓரிறைகொள்கைகள் என்பதற்கு நிரூபணம்.

    7) அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று இந்துமத விளக்கத்துக்கு ஆதாரம் எங்கே?

    8) 20ஆம் நூற்றாண்டு பாண்டே விடும் அவுரங்கசீப்பு கதை 17ஆம் நூற்றாண்டு ஆவணத்தில் எங்கே இருக்கிறது?

    1. Avatar
      சான்றோன் says:

      தங்கமணி அவர்களே……

      நீங்கள் குறிப்பிட்ட கேள்விகள் மட்டுமல்ல……இதே விவாதத்தில் நான் கேட்ட கீழ்க்காணும் கேள்விகளுக்கும் பதில் இல்லை….

      // ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம்……சுதந்திரத்தின் போது இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் ஹிந்து ,முஸ்லீம் இரண்டு மத‌த்தவரும் இருந்தனர்…..தற்போது இரண்டு தேசங்களிலும் நிலை என்ன? இந்தியாவில் இஸ்லாமியர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்? பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்? இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு உள்ள வழிபாட்டு சுதந்திரம் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களுக்கு வழங்க‌ப்படுகிறதா? இந்தியாவில் முஸ்லீம்களின் வழிபாடு தலங்களுக்கு உள்ள பாதுகாப்பு , பாகிஸ்தானில் ஹிந்துக்களின் கோயில்களுக்கு உள்ளதா? பாகிஸ்தானை விடுங்கள்… ந‌ம் தயவில் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்…… அரபு நாடுகளுக்கு செல்லும் ஹிந்துக்கள் சுவாமி படங்களை கூட எடுத்து செல்ல முடியாது….. இதுதான் இஸ்லாம் பிற மதத்தவரை மதிக்கும் லட்சணம்…..இந்த அழகில் ஹிந்துக்களை குறை சொல்ல வந்து விட்டீர்கள்……//

      இந்த கேள்விகளுக்கு சுவனப்பிரியன் பதில் சொன்னாலும் சரி……ஹிந்து விரோதிகளின் பிரச்சார பீரங்கி காவ்யா பதில் சொன்னாலும் சரி…..

      1. Avatar
        Kavya says:

        கண்டிப்பாக பதில் அவசியமாகிறது ஒரு அறியாமையைப்போக்க.

        இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே இறையாண்மையைக்கொண்ட நாடுகளல்ல. முன்னது மதச்சார்பற்ற குடியரசு. பின்னது இசுலாமிய குடியரசு. இசுலாமியக்குடியரசு இசுலாம்யருக்குத்தானே; பிறர் அங்கு வாழ்ந்தாலும், அவர்கள் இசுலாமியருக்குப்போகத்தான் மற்றவை.ஜன்நாயகமும் இராணுவ ஆட்சியும் மாறிமாறி வர, அவ்வப்போது தீவிரவாதத்தை இசுலாமாக கருதும் அமைப்புக்களும் கோலோச்சுகின்றன. எனவே அங்கு இந்துக்கள் நடாத்தப்படும் விதத்தில் என்ன வியப்பு? மேலும், அங்கு நடாத்தப்படுவ்தையும் இந்தியாவில் இசுலாமியர் நல்லவிதமாக நடாத்தப்படுவ்தையும் இணைப்பது எங்ங்னம்?

        இதைப்போல மற்ற நாடுகளான அதாவது அரபு நாடுகளும். அங்கு இசுலாமே பிரதானம். மற்றவர்கள் வாழப்போனால், அடக்கித்தான் வாசிக்கனும், அங்கு பிழைத்து பணம் ஈட்டத்தான் போனீர்களே தவிர ஹரே ராம ஹரே கிருஸ்ண இயக்கத்தை பரப்பன்று.

        இந்தியாவை இந்து ராஷ்டரமாக்கிவிடுங்கள். பின்னர் இங்கு எப்படி இசுலாமியர் நடாத்தப்படுகிறார்கள் என்று பாருங்கள். அதன்பின்னர் இந்தியாவில் இசுலாமியர் நடாத்தப்படுவ்தையும், பாகிஸ்தானில் இந்துக்கள் நடாத்தப்படுவ்தையும் ஒப்பீடு செய்க; உவமை செய்க என்று தேர்வில் கேள்வி கேட்டு பதில் சொல்லலாம். அதுவரை ஒப்பீடும் உவமையும் தவறு. தவறு.

        எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்குச் செய்ய வேண்டும். இடம் மாறிச்செய்யின் துயரம் வரும். அடம்பிடித்து அழுது பிரயோஜனம் லேதண்டி.

        1. Avatar
          சான்றோன் says:

          காவ்யா…..
          வழக்கம்போல் திசை திருப்புகிறீர்கள்……..இஸ்லாமியர்கள் மத நல்லிணக்க வாதிகள்…….பிற மதத்தவரை மதிப்பவர்கள், அமைதியே உருவானவர்கள் என்றெல்லாம் அளந்து விடுகிறார் சுவனப்பிரியன்…….அதை இல்லை என்று மறுப்பதற்காகவே இந்த ஒப்பீடு……இஸ்லாமிய நாடுகளில் இப்படித்தான் நடக்கும் என்றால் இவர்கள் சொல்லும் மத நல்லிணக்கம் எங்கிருந்து வரும்?

          மேலும் இவர்களெல்லாம் வருவதற்கு முன்பாக இந்த நாடு ஹிந்து நாடாகத்தான் இருந்தது…ஹிந்துக்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் இவர்களெல்லம் எப்படி பெருகினார்களாம்?

  102. Avatar
    punai peyaril says:

    செம காமடி… இந்தியாவில் பழக்கத்தில் உள்ள
    வர-தட்சணை, தன் பெண் போகும் இடத்தில் ஒரு பொருளாதார சுமையாக இருக்க கூடாது என்று பெண்வீட்டார் தருவது. ஆணும் வரும் பெண் தனது குடும்பத்திற்கு வரும் ஒரு அங்கம், அவள் தனக்கும் பிறக்கும் குழந்தைகளை பெற்றுத் தரும் ஒரு கருவறை என்றும் உணர்ந்து ஒரு இனிய இருவர் சேரும் மன நிலையில் பேதம் பொருளாதாரத்தால் வந்து விடக்கூடாது எனும் பலநிலை விடயம். ஆனால், முஸ்லீகள் , அடிமைகளை போலவே பெண்களையும் பார்ப்பதால், ஆண்கள் பணம் கொடுத்து பெண்களை ஓட்டி வருகின்றனர். ஒவ்வொரு மணத்திற்கும் ஒரு தொகை… ஒரே சமயம் நாலு.. துட்டிருந்தால் ஜாலி எனும் நிலை…அங்கு பெண்ணிற்கு மனதே கிடையாது… இதில் புதிதாய் ஒன்றை பார்த்துவிட்டால் நாலில் ஒன்று காலி.. துட்டு தந்து தலாக் தலாக் தான்… மனசு மனிதாபிமானம் ஒன்றும் கிடையாது… அதனால், பிற சிந்தனைகளை அறிந்த முஸ்லீம் பெண்கள் மாறுகிறார்கள்… இந்த லட்சணத்தில் மொராக்கோ போன்ற நாட்களுக்கு போய் சிறுசுகளுடன் புது திருமணம்… யார்…. 60+ கிழவன்கள்…. 20வயது அடையாத பெண்களுடன்…. இது தான் மதம் சொன்னதா… இது தான் நடக்கிறது… பஹ்ரைன, துபாயில் கொடி கட்டி பறக்கிறது விபச்சாரம்… மது, காசிருந்தால் சௌதியிலேயே கிடைக்கிறது… இங்கிருக்கும், மரியாதை கிடைக்கும் என்று மாறியவர்கள் தான் புதுக் கதை விடுகிறார்கள்….. இந்தியாவில் முஸ்லீம் இயக்கங்கள் இந்த தேசத்திற்கு என்ன நல்லது செய்துள்ளன….? அதனால் தான் மாரியும் மேரியும் ஒன்றாகும் அளவிற்கு இவர்கள் கிடையாது… மதராஸாவில் உன்னைச் சேர்த்துவிடுவேன் என்பது முஸ்லீம் வீடுகளில் ராமநாதபுரம் பக்கம் பயமுறுத்துவதற்காக சொல்லும் அளவிற்கு இன்று வாழ்வு… சரி தங்க்ள் இறைவன் தந்த செல்வத்தில் இவர்கள் என்ன செய்தார்கள்… மதுக்குடிக்கவும், அரைகுறை ஆடைகளை உள்ளூள் அணியவும் மொராக்கோ, பாங்காக்கு ( சௌதிகள் போககூடாது எனும் தடையிருப்பினும், துபாய் போய் பின் பிஸினஸ் போல் போகிறார்கள் பணக்கார சௌதிகள் ) என்று பெண்சுகம் தேடி அலைவது ஏன்…? ஒன் வே ஆக இருப்பது எதுவும் சரியாகாது…

  103. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திருவிளையாடல் தருமியைப் போல ‘எனக்கு கேள்விகள் கேட்க மட்டும்தான் தெரியும்’ என்ற கொள்கை உடையவர் போல் தெரிகிறது. :-) நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தெளிவுபட பதில் அளித்தும் திரும்பவும் முதல்லேருந்து ஆரம்பிக்கணும் என்றால் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டி விடும்.

    //1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.//

    குர்ஆனை மனிதர்களுக்கு விளக்கி அதை செயல் முறை படுத்தவே முகமது நபி வந்தார். எனவே ஆதாரபூர்வமான ஹதீஸ்களே குர்ஆனின் விளக்கம். ஏற்கெனவே விளக்கியாகி விட்டது.

    //2) மெக்கா தர்ஹா அல்ல என்று அவர் சொன்னதற்கு, மெக்காவில் இஸ்மாயீலும் அவரது தாயாரும அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமிய பக்கங்களே சொல்கின்றன என்றால், மெக்கா தர்ஹா தானே? மெக்காவை இடிக்க வேண்டுமா?//

    மெக்கா என்பது ஒரு ஊர். கஃபா என்பது இறைவனை வணங்க உலகில் முதலில் ஏற்படுத்தப்பட்ட ஆலயம். இந்த இரண்டுக்குமே வித்தியாசம் தெரியாமல் கேள்வி கேட்டால் அரிச்சுவடி பாடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.
    //3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;//

    ஏற்கெனவே பதில் சொல்லப்பட்டது.

    //4) நாஸிக் மன்சூக் வசனங்களை லிஸ்டு போட்டு எவை நீக்கப்பட்ட வசனங்கள் என்று சுவனப்பிரியன் விளக்குவாரா?//

    இப்படி நீக்கப்பட்ட எந்த வசனங்களும் இல்லை. இறைவன் அருளிய குர்ஆன் முழுமைபடுத்தப்பட்டது.

    //5) இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை என்று சொல்லும் நாடுகளில் உள்ள பாடகிகள், இஸ்லாம் தவறு என்று சொல்பவர்கள் எப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுவது//

    வெளியேறுவதற்கு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இல்லை. குர்ஆனின் கட்டளையை மதிக்காமல் தனது மனோ இச்சை படி வாழ ஆரம்பித்தாலே அந்த நபர் தானாகவே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார். இதற்காக கூட்டம் கூட்டி மைக் போட்டா கூற முடியும்?

    //6) சமண மதமும் பௌத்தமதமும் ஓரிறைகொள்கைகள் என்பதற்கு நிரூபணம்.//

    திருக்குறளும் திருமந்திரமும் சமணர்களின் பொக்கிஷங்கள் என்றும் பின்னால் வந்த ஆரியர்கள் அந்த நூல்களில் பல தெய்வ வணக்கங்களை சேர்த்து விட்டதாகவும் ஒரு கருத்து அறிஞர்கள் மத்தியில் உள்ளது. சித்தர்கள் சூஃபிகளின் கருத்துக்களை உள் வாங்கியவர்களாக இருந்துள்ளனர். ஆரியர்களுக்கு அரசர்கள் பக்க பலமாக இருந்ததால் இந்த திருத்தல் வேலைகள் மிக ஜரூராக அன்றைய காலத்தில் நடந்தது.

    //7) அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று இந்துமத விளக்கத்துக்கு ஆதாரம் எங்கே?//
    செவி வழி செய்தியே! ஆதாரங்கள் இருந்தால் நண்பர் காவ்யா தருவார் என்று நம்புகிறேன்!

    //8) 20ஆம் நூற்றாண்டு பாண்டே விடும் அவுரங்கசீப்பு கதை 17ஆம் நூற்றாண்டு ஆவணத்தில் எங்கே இருக்கிறது?//

    பல கோப்புகளை சாமர்த்தியமாக வெள்ளையனின் உதவி கொண்டு அழித்து விட்டீர்களே! பிறகு எங்கிருந்து கிடைக்கும்?

  104. Avatar
    smitha says:

    Piriyan,
    ஜின்னா ராஜாஜி பட்டேல் நேரு போன்ற சுயநலமிகளால் பாகிஸ்தான் என்ற நாடு பிரிந்தது முஸ்லிம்களை பொறுத்த வரை பெரும் இழப்பே! பாகிஸ்தானை நமது நாட்டோடு தற்போது இணைத்தால் அதற்கு முதல் ஆதரவு குரல் என்னிடமிருந்தே வரும்.

    Get your history right. It was Jinnah who was adamant in forming Pakistan. Rajaji warned Gandhi in 1942 itself that JInnah would want to go seperately, but he was branded anti national for saying so.

    If Indians had reconciled to this fact, then the partition would not have been such a bloody affair.

    I will tell u one more thing. There was a plebicite held at that time. 75% of the muslims wanted a seperate nation.

    Now U want pakistan to merge with india? Are U say dreaming?

    Do U know the plight of hindus in pakistan? Do U know how many hindu women are abducted, forced to convert to islam & then marry muslim men?

    Do you know that the percentage of hindus has declined drastically in pakistan?

    India is having the 2nd largest muslim population in the world. U guys will not agree to a common civil code, will covertly or overtly support terrorism & still expect hindus to pamper them?

    Please post after knowing all the facts.

  105. Avatar
    தங்கமணி says:

    //1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.//
    ஏற்கெனவே விளக்கியாகி விட்டது.//
    இல்லை

    //மெக்கா என்பது ஒரு ஊர். கஃபா என்பது இறைவனை வணங்க உலகில் முதலில் ஏற்படுத்தப்பட்ட ஆலயம். இந்த இரண்டுக்குமே வித்தியாசம் தெரியாமல் கேள்வி கேட்டால் அரிச்சுவடி பாடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.//
    சரி காபா.
    காபாவில்தான் இஸ்மாயீலும் அவரது தாயாரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. காபாவை இடிக்க வேண்டுமா?

    //3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;//
    ஏற்கெனவே பதில் சொல்லப்பட்டது.//
    இல்லை.

    //4) நாஸிக் மன்சூக் வசனங்களை லிஸ்டு போட்டு எவை நீக்கப்பட்ட வசனங்கள் என்று சுவனப்பிரியன் விளக்குவாரா?//
    இப்படி நீக்கப்பட்ட எந்த வசனங்களும் இல்லை. இறைவன் அருளிய குர்ஆன் முழுமைபடுத்தப்பட்டது.//

    நீக்கப்பட்ட வசனங்கள் எதுவும் இல்லை என்று சொல்லும் ஒரே இஸ்லாமிய பிரிவு காதியானி பிரிவு மட்டுமே.
    மற்ற எல்லா பிரிவுகளும் நீக்கும் வசனங்களும், நீக்கப்பட்ட வசனங்களும் உண்டு என்று கூறுகின்றன. குரானே இதற்கு ஆதாரம் தருகிறது. நீங்கள் குரானை மறுக்கிறீர்களா?

    //5) இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை என்று சொல்லும் நாடுகளில் உள்ள பாடகிகள், இஸ்லாம் தவறு என்று சொல்பவர்கள் எப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுவது//
    வெளியேறுவதற்கு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இல்லை. குர்ஆனின் கட்டளையை மதிக்காமல் தனது மனோ இச்சை படி வாழ ஆரம்பித்தாலே அந்த நபர் தானாகவே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார். இதற்காக கூட்டம் கூட்டி மைக் போட்டா கூற முடியும்?

    ஆமாம். கூட்டம் கூட்டி மைக் போட்டுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது நீங்கள்தான்.
    நீங்கள்தான் பாடகி இசையே எனக்கு தெய்வம் என்று சொன்னால் அவர் இஸ்லாத்தை விட்டு போகவேண்டியதுதானே என்று அறிவுரை வழ்ங்கினீர்கள். காவ்யாவும் அப்படியே சொன்னார். அதற்குத்தான் கேட்டேன் மரணதண்டனை இருக்கும் நாட்டில் அப்படி ஒருவர் இஸ்லாத்தை விட்டு போவது எப்படி என்று. அதற்கு இப்படி ஒரு பதில்! ஆப்கானிஸ்தானில் இஸலாமை விட்டு கிறிஸ்துவத்துக்கு சென்றவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மரணதண்ட்னை இருக்கிறது. இசையே என் தெய்வம் என்று சொல்லுபவர் சரி நான் இஸ்லாத்தை விட்டு போகிறேன் என்று அறிவிக்க முடியுமா? பிறகு ஏன் “இஸ்லாத்தை விட்டு போகிறேன்” என்று சொல்லவேண்டியதுதானே என்று அறிவுரை வழங்கினீர்கள்?

    //6) சமண மதமும் பௌத்தமதமும் ஓரிறைகொள்கைகள் என்பதற்கு நிரூபணம்.//
    திருக்குறளும் திருமந்திரமும் சமணர்களின் பொக்கிஷங்கள் என்றும் பின்னால் வந்த ஆரியர்கள் அந்த நூல்களில் பல தெய்வ வணக்கங்களை சேர்த்து விட்டதாகவும் ஒரு கருத்து அறிஞர்கள் மத்தியில் உள்ளது. சித்தர்கள் சூஃபிகளின் கருத்துக்களை உள் வாங்கியவர்களாக இருந்துள்ளனர். ஆரியர்களுக்கு அரசர்கள் பக்க பலமாக இருந்ததால் இந்த திருத்தல் வேலைகள் மிக ஜரூராக அன்றைய காலத்தில் நடந்தது.
    //
    உங்கள் பாணியிலேயே நானும் பதில் தருகிறேன். இஸ்லாம் ஒரு பல தெய்வ வணக்கங்களையும் நாத்திக வாதத்தையும் உடைய மதம். அதில் முகம்மது நபி, பிறகு வந்த அரசர்கள் ஆகியோர் இதில் ஒரு தெய்வ வணக்கத்தை புகுத்தி கெடுத்துவிட்டார்கள். இந்த கேடு கெட்டவர்களுக்கு பல அரசர்கள் பக்கபலமாக இருந்ததால், இந்த திருத்தல் வேலைகள் மிக ஜரூராக அன்றைய காலத்தில் நடந்தது.

    //7) அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று இந்துமத விளக்கத்துக்கு ஆதாரம் எங்கே?//
    செவி வழி செய்தியே! ஆதாரங்கள் இருந்தால் நண்பர் காவ்யா தருவார் என்று நம்புகிறேன்!//

    சுவனப்பிரியனின் அல்டர் ஈகோ, காவ்யா..
    தாருங்கள்.

    //8) 20ஆம் நூற்றாண்டு பாண்டே விடும் அவுரங்கசீப்பு கதை 17ஆம் நூற்றாண்டு ஆவணத்தில் எங்கே இருக்கிறது?//
    பல கோப்புகளை சாமர்த்தியமாக வெள்ளையனின் உதவி கொண்டு அழித்து விட்டீர்களே! பிறகு எங்கிருந்து கிடைக்கும்?//

    20 ஆம் நூற்றாண்டு பாண்டே எங்கிருந்து எடுத்தாரோ அதே ஆவணத்திலிருந்து எடுத்து தர வேண்டியதுதானே?

  106. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //Get your history right. It was Jinnah who was adamant in forming Pakistan. Rajaji warned Gandhi in 1942 itself that JInnah would want to go seperately, but he was branded anti national for saying so.//

    “ராஜாஜியின் வக்கீல் மூளை, தேசம் என்பது ஏதோ ஸ்தவர ஜங்கம சொத்து என்பதுபோல, சகோதரர்களுக்கிடையே மனவேற்றுமை வந்து விட்டால் பாகப் பிரிவினை செய்துகொள்வதுதான் உத்தமம் என்று அதன் பங்கிற்கு அனைவரையும் முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துவிட்டது! பாகப்பிரிவினை செய்துகொண்டு விட்டால் பங்காளிகளுக்கிடையே பகைமை மறைந்துவிடும், நல்லது கெட்டதுக்கு ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பது ராஜாஜியின் வாதம். அதற்குப் பரிசாக வரப் போகும் பாகிஸ்தானில் அவருக்கு ஓர் உயர் பதவி கொடுக்க ஜின்னாவும் தயாராக இருந்தார்! ராஜாஜிக்கும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கும் உருவாகப் போகும் பாகிஸ்தானில் ஜின்னா பதவி நாற்காலிகளைத் தயாராகப் போட்டு வைத்திரு ந்தார்! அய்யருக்கு நாற்காலி போடக் காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானத்துடன் இணைப்பேன் என்று அவர் மிரட்டியதற்காக! அய்யரின் முதுகெலும்பை முறித்துப் போட்டார், வல்லபாய் பட்டேல்!”
    மலர் மன்னன் இதே திண்ணையில் முன்பு எழுதிய கட்டுரையில் தேசப்பிரிவினையில் ராஜாஜியின் பங்கு எந்த அளவு என்பதை அழகாக கொடுத்துள்ளார் பார்த்துக் கொள்ளுங்கள்..
    http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html
    http://urpudathathu.blogspot.com/2006/01/blog-post_16.html

    “இந்துஸ்தானத்தில் இந்துக்களே ஒரு தேசமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மையினரே. ஒரே மண்ணில் வாழ்வதனாலேயே அவர்கள் அந்த தேசத்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள். முகம்மதியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இந்தியாவை தங்களின் புனித பூமியாக கருதுவதில்லை. அவர்களது புனிதபூமி அரேபியா, பாலஸ்தீனம் என்று தொலைதூரத்தில் உள்ளது… அவர்களது பெயர்களும் கண்ணோட்டமும் அந்நிய மூலத்தினைக் கொண்டுள்ளது…. இந்த சூரிய மண்டலத்தில் இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்”

    -ஆர்.எஸ்.எஸ்ஸின் பிதாமகரான சாவர்க்கார்

    இப்படி இந்த நாடு துண்டாடப்படுவதில் பலரும் அங்கம் வகித்து விட்டு பழிகளை முஸ்லிம்களின் மேல் மட்டும் போடுவது நியாயமா?

    //I will tell u one more thing. There was a plebicite held at that time. 75% of the muslims wanted a seperate nation.//

    தவறான வாதம். பிரிவினையின் போது வங்காளம் பஞ்சாப் போன்ற மாநிலங்கள்தன் பிரிந்ததே தவிர தமிழகத்திலோ அல்லது கர்நாடகா உபி டெல்லி என்று எந்த பிரதேசத்திலிருந்தும் மக்கள் பாகிஸ்தான் செல்லவில்லை. தங்களின் சொந்த மண்ணை விட்டு அவர்கள் எப்படி போவார்கள்? போனது பார்டரில் இருந்த மக்கள் மட்டுமே அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் சென்றனர். எனவே வரலாறை நீங்கள் நன்கு தெரிந்து கொண்டு பேசுவது நல்லது.

    தியாகி திலகர் செய்த செயற்கரிய செயல்:

    புனேயும் கோயம்புத்தூரும் இந்தியாவில் பிளேக் எனும் கொள்ளை நோய்க்குப் பேர் போனவை. எலிகளால்தான் இந்நோய் பரப்பப்படுகிறது என்பதால் எலிகளைக் கொல்ல 1918-இல் அரசு நடவடிக்கைகளை எடுத்தது. எலி விநாயகனின் வாகனம் என்று இந்து மதக் கதையைக் காட்டி மக்களைத் தூண்டி, அந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்ய வைத்தவர் திலக். கொலைகாரர்கள் சபேக்கர் சகோதரர்கள். இதற்காகத் தண்டனை பெற்றவர் திலக்.

    திலகருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவரங்களை துர்காதாஸ் என்ற எழுத்தாளர் / ஆய்வாளர் from curzon to nehru and others என்ற தம் நூலின் 62-ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

  107. Avatar
    smitha says:

    Piriyan,

    The reason why rajaji proposed was not for hunger for any post. He said that if indians reconcile themselves to the fact that the muslims would be leaving them soon, it would be better.

    Regarding the plebicite, 75% of the muslims indeed were in favour & also there were many muslims from the south who went to pakistan but were turned back.

    When there was oppposition to this, nehru put his foot down & allowed them to come back.

    We are praying the price now.

    U have only been saying that Islam does not allow this, that blha, blah – but who cares? Muslims continue to carry out atrocities in the name of islam & interpret in their own way.

    That is because U have been pampared to such a large extent. When Syed abdul imam bukhari says openly that he will complain to the OIC that muslims in india are not treated properly, we can understand your audacity.

    Even for a moment admitting that islam is a “perfect” religion, why do right thinking muslims not say a word against fatwas, against the treatment meted out to salman rushdie, taslima nasreen & the islam terrorists who indulge in senseless killing?

    We have seen recently in the papers how a muslim divorced hi wife over the internet & this divorce was upheld by the deoband clergy. Another muslim divorced his wife over phone by uttering talaq thrice & this too was approved.

    Islam sure keeps change with the times.

  108. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //Even for a moment admitting that islam is a “perfect” religion, why do right thinking muslims not say a word against fatwas, against the treatment meted out to salman rushdie, taslima nasreen & the islam terrorists who indulge in senseless killing?//

    எதிர்ப்பை எவ்வாறு தெரிவிப்பது? முஸ்லிம்களிடம் சிறந்த ஊடகங்கள் இல்லாதது ஒரு குறை. பத்திரிக்கை துறை, சினிமா, தொலைக்காட்சி என்று எந்த இடத்திலும் முஸ்லிம்களின் உள்ள குமுறல் சரியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படவதில்லை. ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி குண்டு வைத்தால் அவனது பெயர் அவனது மதம் முதற்கொண்டு பிரபல்யபடுத்தி அதற்கு கண் காது மூக்கு வைத்து ஒரு கதையை செட் செய்து விடுகின்றனர். இதுதான் தொடர்கதை.

    டெல்லி இமாம் புகாரியின் பேச்சை 5 சதவீத இஸ்லாமியர் கூட கேட்பதில்லை. கடைசியில் அவர் காமெடி பீஸாகப் போனது வேறு கதை. 

    //We have seen recently in the papers how a muslim divorced hi wife over the internet & this divorce was upheld by the deoband clergy. Another muslim divorced his wife over phone by uttering talaq thrice & this too was approved.
    Islam sure keeps change with the times.//

    இவை எல்லாம தவறு என்று எடுத்து சொல்லி வருகிறோம். மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. ‘தலாக்..தலாக்..தலாக்’ என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்வது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாகும். ஒரு தலாக் சொன்னால் பிறகு விருப்பப்பட்டால் கணவன் மனைவியாகவே வாழலாம். இரண்டு சொன்னாலும் வாழலாம். இதற்கிடையில் நான்கு மாதங்கள் உள்ளன. மூன்றாவது முறையும் அவன் தலாக் சொன்னால் அதன்பிறகுதான் உறவு முறியும். அந்த ம்களுக்கு இஸ்லாமிய சட்டத்தை விளக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் குர்ஆனை சரியாக விளங்காததுதான்.

    ‘அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.’
    -குர்ஆன் 4:35

    உடன் தலாக் சொல்லிவிடுங்கள் என்று கட்டளை இல்லை. அடுத்து விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் புரிவதை தடுக்கவும் கூடாது.

    ‘பெண்களை விவாகரத்து செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தமக்கு பிடித்த கணவனை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதை தடுக்காதீர்கள்’
    -குர்ஆன் 2;232

    தற்காலங்களில் இந்து மதம் கிறித்தவ மதங்களிலும் விவாகரத்து மிக அதிகரித்து விட்டதை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். இந்து, கிறித்தவ மதங்களை விட இஸ்லாத்தில் விவாகரத்து குறைவாகவே நடக்கிறது.

  109. Avatar
    smitha says:

    Piriyan,

    U say muslim do not have the media to air their views. What are the rich muslims like the nawab of Arcot doing? They can help.

    Do you see the channels WIN TV, thamizhan & a few others everyday?. It is full of muslim ‘scholars” preaching islam. They also have have a dig at other religions.

    You have the internet & the newspaper media. What prevents you from making use of that?

    U say the media projects only muslims as terrorists. U are totally wrong. The media is totally biased towards hindu religion. They always keep projecting BJP as a communal party. If it is true, what is muslim league – is it secular?

    Chidamabaram’s remark on saffron terrorism was widely publicised.

    Talking of divorce rates being low among muslims, it is a generalised statement. Most muslim women put up with the atrocities committed on them & are afraid to come out openly.

    Even the muslim woman (in UP) who was raped by her FIL requested the women’s organisations supporting her, to leave her alone since she was being harassed.

    Muslims must come out openly & clear the air about such malpractices. Till they do that, they will have to live with the negative opinion that exists about them.

  110. Avatar
    suvanappiriyan says:

    புனை பெயரில்!

    //Divorce is not a criminal offence, ONLY having more wives IS. I pity for you Su Pi//

    More wives is not a criminal offence, only having “sinna veedu” is. I pity for you punai peyaril. I pity for the sisters also. :-(

  111. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //Piriyan,
    U say muslim do not have the media to air their views. What are the rich muslims like the nawab of Arcot doing? They can help. //
    ஆற்காடு நவாபே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தாலும் பெரும்பான்மையினரை பகைத்துக் கொண்டு பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தி விட முடியாது. விளம்பரங்களை வைத்தேதான் தினமணி, தினமலர், தினகரன் போன்ற பத்திரிக்கைகள் ஓட்டப்படுகின்றன. தினசரி ஆரம்பித்த அப்துல் சமதின் ‘மணிச்சுடர்’ தற்போது மூடும் தருவாயில் உள்ளது. இதுதான் இன்றைய நிலைமை. ஆனால் வருங்காலம் சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்.

    //Talking of divorce rates being low among muslims, it is a generalised statement. Most muslim women put up with the atrocities committed on them & are afraid to come out openly.//

    தமிழகத்தில் எங்கள் கிராமத்தில் ஐயாயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறோம். எனக்கு கருத்து தெரிந்த நாள் முதலாக எங்கள் கிராமத்தில் நடந்த விவாகரத்து என்பது ஒன்றே ஒன்றுதான். அதுவும் அந்த பெண் கள்ள தொடர்பு வைத்தது நிரூபிக்கப்பட்டதால் ஜமாத் முன்னிலையில் விவாகரத்து பெறப்பட்டது. மற்ற எந்த விவாகரத்தும் எனக்கு கருத்து தெரிந்து நடைபெறவில்லை. இதுதான் தமிழகம் முழுவதும். தற்போதய சூழ்நிலையில் பிடிக்காத கணவனோடு வாழ்வது சாத்தியமே இல்லை. யாரும் எந்த பெண்ணையும் மிரட்டுவதும் இல்லை.

    அடுத்து உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் விவாகரத்தில் முதல் 10 இடங்களை பெற்ற நாடுகள் பட்டியலை கொடுத்துள்ளேன். அதில் ஒரு முஸ்லிம் நாடு கூட வரவில்லை என்பதை எனது பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை.

    http://suvanappiriyan.blogspot.com/2012/05/10.html
    http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html

  112. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //Talking of divorce rates being low among muslims, it is a generalised statement. Most muslim women put up with the atrocities committed on them & are afraid to come out openly.//

    மிரட்டப்படுவதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் சமர்ப்பிக்கவில்லை.
    கணவண் / மனைவி விவாகரத்தில்… தமிழகத்திற்கே முதலிடம்….

    தமிழகம்… இந்தியாவில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், அது பெருமமைப்படக்கூடிய விஷயமல்ல.. ஏனெனில் 8.2 சதவீதம் கணவன் மனைவியர் விவாகரத்துப் பெற்று முதலிடம், 4 சதவீதம் பெற்று டெல்லி கடைசி இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடங்களை கேரளா, ஆந்திரா, கர்நாடாக மாநிலங்கள் பெற்றுள்ளது.

    விதவை/மனைவியை இழந்தவர்/விவாகரத்து பெற்றவர்/தனித்து வாழ்பவர்களின் ஆண்களின் தொகையில் 14.5 சதவீதம் தமிழகம், 14.2 சதவீதம் கர்நாகடமும் பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் மேற்கண்ட புள்ளிவிபரங்களில் பெண்கள் 6 மடங்கு ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளனர்.

    .. நன்றி. டைம்ஸ்ஆப்இந்தியா, 5.4.2012
    இதற்கெல்லாம் காரணமாக அலசப்படுவது:
    1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
    2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
    3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
    4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
    5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
    6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
    7 ) நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
    8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.
    இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.
    ஆனால் இத்தகைய அநியாய சட்டங்கள் அரங்கேருவதற்க்கு யார் காரணம் ? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? யார் ?
    நிச்சயமாக வர்த்தக நோக்கம் கொண்ட திருடர்களான பன்னாட்டு நிறுவனங்களும் , ஊழல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தான்.

Leave a Reply to Truth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *