தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை

This entry is part 17 of 37 in the series 22 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பிரிவுக் கவலை இனிப்பாய் மாறலாம்
தேனான இந்த மாலையில் !
கானம் ஆழ்மனதில் எழலாம்
சோக மோடு
நெடிய வேதனைக்குள்
உன்னைக் காணாத இழப்பு
உண்டாக்கும்
துன்பத் தவிப்பு !
முழுமதி பூத்த இரவு நேரத்தில்
எழுந்திடும் மோகம் !
கனிவான கானல் நீர் கண்களில்
மாய வித்தை செய்யும்.
தூரத்தி லிருந்து
காற்று நறுமணப் படர்வைத்
தூக்கி வரும்.
என் இதயம் பாதை இழக்கும்.
இங்கு மங்கும்
அலை மோதித் திரியும்.
எந்தத் தாள இசையுடன்
எந்தத் தொனியொடு
எவள் ஒருத்தியின் வாய்ச்சொல்
முணு முணுக்குது
இலைகள் அடர்ந்த காட்டில்
எனது கால் சலங்கை
ஒலி மணிகள்
குலுங்கிடும் போது ?

+++++++++++++++++++++++++
பாட்டு : 262 தாகூர் தன் 49 ஆம் வயதில் எழுதியது (டிசம்பர் 1910).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] July 16, 2012

Series Navigationகுற்றம்சிற்றிதழ் வானில் புதுப்புனல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *