விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 37 of 37 in the series 22 ஜூலை 2012

இரா.முருகன்   1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]

அப்படியோர் ஆசை!

This entry is part 36 of 37 in the series 22 ஜூலை 2012

  எழுதியவர்: ‘கோமதி’   அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள். மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு சமையலறை நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருந்தது.   என் கணவருக்கு தங்கசாலைத்தெரு ’கவர்ன்மெண்ட் பிரஸ்’ஸில் வேலை. போக வர டிராம் வண்டி இருந்தது. பக்கத்திலேயே […]

பஞ்சதந்திரம் தொடர் 53

This entry is part 35 of 37 in the series 22 ஜூலை 2012

பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள் புகழ்பெற்ற பலமும் வீரமும் பெற்றவனும், அநேக அரசர்களின் கூட்டத்தினர் வணங்குவதால் அவர்களுடைய கிரீடங்களின் ரத்தினங்களின் காந்திக் கிரணங்களால் ஜ்வலிக்கும் பாதபீடத்தையுடையவனும், சரத்காலத்துச் சந்திரனின் நிர்மலமான கிரணங்களைப் போன்ற கீர்த்தியுடையவனும், சமுத்திரம் வரையிலுள்ள பூமிக்கு அதிபதியுமான நந்தன் என்ற அரசனிருந்தான். அவனுக்கு எல்லா சாஸ்திரங்களின் தத்துவங்களை நன்கு அறிந்தவனான வரருசி என்ற மந்திரி ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியும்  காதல்  சண்டையால் கோபித்துக் கொண்டாள். மிகவும் பிரியமான அவள் அநேக விதமாக திருப்திப்படுத்தப்பட்டும் கூட சந்தோஷமடையவில்லை. […]

திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

This entry is part 34 of 37 in the series 22 ஜூலை 2012

தமிழில்: சுப்ரபாரதிமணியன் 1. அரசியல்வாதியும் புறாவும் ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும் அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர் வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது. அரசியல்வாதி சொன்னார்: “ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ அது என் அரசியல்” புறா மீண்டும் சொன்னது: “நான் என் இறக்கைகளை அடித்தபடி வானில் பறப்பேன்”” அரசியல்வாதி ஒரு  துப்பாக்கியைக் காட்டினான். புறா பறக்க இயலாமல் மெளனமானது. இப்போது வெள்ளைப்புறா அரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது. ரகு லைசாங்கதம் (மணிப்பூரி) […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)

This entry is part 33 of 37 in the series 22 ஜூலை 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள்        இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் பல பெரியார்களின் பெயர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருபெருங் கவிஞர்களின் வாழ்வில் பங்கு கொண்ட அத்தகைய பெரியார்களின் வாழ்வு வாராற்றுச் சுவடுகளாக அமைந்து அவ்வக் கால வரலாற்றை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளன. மகாகவியின் வரலாற்றோடு பல பெரியார்களுடைய பெயர்கள் இணைந்துள்ளன. அவர்கள் பல துறைசார்ந்த பெருமக்களாவர். அவர்களுள் சிலர் பாரதியின் கவிதையாக்கத்திற்கு ஊக்கம் நல்கினர். சலர் […]

கற்பித்தல் – கலீல் கிப்ரான்

This entry is part 32 of 37 in the series 22 ஜூலை 2012

உம்முடைய அறிவெனும் உதயமதில், முன்னமே அரை உறக்க நிலையில் இருப்பதையன்றி வேறொன்றும் உமக்கு எவரும் வெளியிடப்போவதில்லை. ஆலய நிழலில் நடைபயிலும் அந்த ஆசிரியர், தம் மாணாக்கர்களுக்கு, ஓரளவிற்கு தம் நம்பிக்கை மற்றும்  அன்பினாலும் வழங்குவாரேயன்றி, தம் ஆத்ம ஞானத்தினாலன்று. உண்மையிலேயே அவர் மதிநுட்பமுடையவராயின், அவர்தம் ஆத்ம ஞானமெனும் வீட்டில் நீவிர் நுழைவதற்கு ஆணையிடமாட்டார். ஆயின், உம்மை உம் சுயமனமதின் நுழைவாயிலினுள் வழிநடத்துவார். அவர் வானியல் அறிஞராயின், விண்வெளி குறித்த தம்முடைய புரிதலை உம்மிடம் பகிரலாம். ஆயினும் அவர்தம் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)

This entry is part 31 of 37 in the series 22 ஜூலை 2012

காதல் வெல்லும் எல்லாம் ! மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.

This entry is part 30 of 37 in the series 22 ஜூலை 2012

அனைவருக்கும் வணக்கம், தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்’‘ என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.  நீங்களும் பகுத்தறிவாளர்களாகப் பதிவுலகில் வலம் வருவீர்களானால், உங்களின் வலைத்தளத்தையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த முயற்சி மத நம்பிக்கையாளர்களுக்கு எதிரான எந்த முகாந்திரமும் இல்லை. விரைவில் அனைத்து Genre-களிலும் சில தளங்களை நிறுவ முயன்று வருகின்றோம் … !!! இணைப்புக்கான விதிமுறைகளை இங்கு சென்று காணலாம் … தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ! அன்புடன் இக்பால் […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

This entry is part 29 of 37 in the series 22 ஜூலை 2012

____________________________________________________________________________ ____________________________________________________________________________ PERSATUAN   PENULIS   PENULIS  TAMIL   MALAYSIA   தமிழ் நாவல் கருத்தரங்கம் =========================== 28/7/12 , 29/7/12  சனி, ஞாயிறு Hotel Grand Pacific, Kuala Lumpur, Malaysia நாவல் அனுபவம்: உரை சுப்ரபாரதிமணியன் பிற உரைகள்: முனைவர் ரெ.கார்த்திகேசு முனைவர் சபாபதி முனைவர் கிருஸ்ணன் நிறைவுரை: பி.ராஜேந்திரன் ( தலைவர், மலேசியா தமிழ்  எழுத்தாளர்கள் சங்கம் ) தொடர்புக்கு: rajlaavan__83@yahoo.com ______________________________________________

உலராத மலம்

This entry is part 28 of 37 in the series 22 ஜூலை 2012

மலஜலம் கழிக்க வயல் வெளிப்பக்கமும் ஊர் ஒதுக்குப் புறமும் ஜனங்கள் போகும் ஊர். கங்குலில் தெருவோரம் உட்கார்ந்து எழும் அடையாளம் தெரியாத உருவங்கள். என் பால்ய காலத்தில் பழகிய வழி ஊரில் பள்ளிக்கூடம் போய் வரும் வழி. போய் வரும் வழியோரமெல்லாம் மலங்கள் நிறைந்து கிடக்கும். தினம் தினம் பள்ளி செல்லும் போது மலத்துப்புரவு செய்யும் ஒரு பெருந் துயரப் பெண்ணைக் கண்டு போவதுண்டு. என் அம்மா மோர் விற்கிறாள் இவள் மலம் அள்ளுகிறாள்- இப்படித்தான் சின்னப்பயலான […]