This entry is part 7 of 31 in the series 16 செப்டம்பர் 2012

க.சோதிதாசன்.

 

உயிரெங்கும் இனிய நினைவுகளால்

நிறைகிறாய்.

நிஜம் தேடி

பிரபஞசம் எங்கும்

அலைகிறது மனசு

காற்றின் இடைவெளிகளிலும்

முகம் தேடும் கண்.

காதல் நினைவுகளில்

கானல் நிறைத்து

சென்று விழுகிறது பொழுது

சில நாட்களில்

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும்

எழுதியிருக்கிறது காலம்.

 

 

க.சோதிதாசன்.

 

 

யாழ்ப்பாணம்

Series Navigationவிவசாயிஅக்னிப்பிரவேசம் -1