This entry is part 1 of 22 in the series 18 மே 2014

 

 

இருட்டுப் போர்வையைத்

தரை போர்த்திக் கொள்கிறது

 

எம்மை அணைக்க

யாரும் இல்லையென

இலைகள் கேவின

 

வியர்வை ஆறுகள்

மறையும் மந்திரம்

தேடினர் மாந்தர்கள்.

 

அணு அனல் நீரால்

வரும் சக்தி வாசல்களும்

அனல்கள் கக்கின

 

ஒரே ஓர் அசைவு

போதுமென உச்சிக் கழியில்

கொடி கூக்குரலிட்டது

 

புகை போக்கிகளோடு

நேர்க்கோடொன்றாய்

புகையும் நிற்கிறது

 

கடைசியில் வந்த காற்று

கவிதையில் அடங்காத

சொல்லெனத் தனியே போனது

Series Navigation