மரம் என்னும் விதை

மரம் என்னும் விதை
This entry is part 10 of 15 in the series 26 பெப்ருவரி 2023

ஸ்ரீ சரண் கு

சீர்த்தெழுந்து புவி பிளந்து
விதை சற்றே உயிர் பெற்றெழுந்து
முதல் சுவாசம் கண்டு
முதல் மழை உண்டு
துளிர் விட்டு தன் வருகை அறிவித்து
நாலாபுறமும் விரோதம் சம்பாதித்து
கரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்
துணையால் ஒருவேளை உணவுண்டு
துளிர் வளர்ந்து கிளையாக
கிளை வளர்ந்து இலையாக
சுற்றத்து மாந்தர் சுற்றி வேலி கட்டி சிறையிட
சில வருடம் சிறைக்குள் கழித்து
நெகிழியுடன் நெருடி அவ்வப்போது
வான் தந்த பால் வருடி
ஆண்டுகளின் வேகத்தால் அசுர வளர்ச்சி பெற்று
தண்டெனும் தங்கத்தால் பச்சை மேகம் தாங்கி
இடர் தந்த இம்சைக்கெல்லாம்
இனிமையாய் நிழல் தந்து
என் சுவாசம் ஈந்து உனை வாழ வைத்தால்
கூரான கோடாரி கொண்டு
தாயான எனை நெருங்கி
நெஞ்சாங்கூட்டை பிளந்து கொண்டிருக்கிறாய்
இருக்கட்டும் நான் வீழும் வரை
நீ வாழ் மகனே!!
இப்படிக்கு,
மரம் எனும் விதை

எழுத்து : ஸ்ரீ சரண் கு
பொறியியல் நான்காம் ஆண்டு மாணவன்

Series Navigationபிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]வெயிலில்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *