This entry is part 3 of 8 in the series 24 மே 2026

   

—–வளவ. துரையன்

கைகாட்டும் பொம்மையை 

வாங்கித்தந்தால்தான் 

கிளம்புவேன் என்று 

அடம்பிடிக்கிறது குழந்தை;

இன்னும் கொஞ்ச நேரம் 

அந்த அலைகளில் 

கால் நனைத்து வருவேன் 

எனச் சொல்லிச் செல்கிறான் சிறுவன்;

ஏக்கக் குரலாய் 

ஏங்க ஏங்க என்கிறான் 

சுண்டல் விற்பவன்;

வீட்டுக்குப் போனால் 

அலுப்புங்க நேரமாகட்டும் 

என்கிறாள் மனைவி;

இவ்வளவு பேர் சொல்லும்போது 

இருந்துவிட்டுப் போயேன் 

என்கிறது கடற்கரை;

பாதி எழுதி மேசை மீது 

வைத்துவிட்டு வந்த 

அந்தச் சிறுகதை வலிந்து

      அழைக்கும் ஓசை 

      அதோ காதில் சத்தமாய்

      ஒலித்துக் கொண்டிருக்கிறதே!

Series Navigation    நிம்மதி கன்னித்தெய்வங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்