இந்த கிளிக்கு கூண்டில்லை

  மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. மிதமாக.. இதமாக.. தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்த மழை தனது அடையாளத்தை சரிவர பதித்து விட்ட திருப்தியில் சற்று…

பிரசவ வெளி

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு புறங்கை நரம்பின் வழியே குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட…

அவனும் அவளும் இடைவெளிகளும்

கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு வராந்தா.. இரண்டு படுக்கையறை.. ஒரு சமையலறை என்ற அளவிலான கச்சிதமான வீட்டின்…

கடவுளும் வெங்கடேசனும்

அமுதசுரபி – மே 2013 “வெங்கடேசா... வெங்கடேசா...” “இதோ வந்துட்டேன்ப்பா...” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா...” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு…

நீர் வழிப்பாதை

(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த அளவுக்கு மனதை நெருடியதில்லை. எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த பதவிக்கு சாதி.. மதம்.. இனம்.. மொழி.. மாநிலம்.. என்ற…

கிழவியும், டெலிபோனும்

காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில திடீர்ன்னு செத்து போயிடுச்சு..” “அலோ.. கலாத்தே.. அப்பாயி காலைல செத்துடுச்சு...” பட்டணத்துல இருக்குற மூத்தவளுக்கும் பக்கத்து டவுன்ல இருக்குற…

மயிரிழையில்…

கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய விஷயமா..? பருப்பும் நெய்யுமாக ஆரம்பித்திருந்த விருந்தின்…

வலி

(தினமணி – நெய்வேலி புத்தக்கண்காட்சி – முதல்; பரிசுக் கதை – 14.07.2013_ சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு வெளியே போடப்பட்டிருந்த…

நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள்…

கடவுளும் வெங்கடேசனும்

கலைச்செல்வி “வெங்கடேசா... வெங்கடேசா...” “இதோ வந்துட்டேன்ப்பா...” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா...” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா...” வீட்டுக்கு பக்கத்திலேயே…