எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் (மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்தவுடன் அடுத்தடுத்த வாரங்களில் இக்கட்டுரைக்கு எதிரான வாதங்களையும் மொழிபெயர்ப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேள்விகளை எழுப்பவே விரும்புகிறேன். பதிலளிப்பது அவரவரது தனிப்பட்ட பார்வையையும், நோக்கங்களையும் பொறுத்தது. மதிப்பு மிக்க கருத்துகளைப் பதிந்த நண்பர்களுக்கு […]
சந்திப்பும் இருநோக்கும்…. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் […]
சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. […]
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி = 60 நிமிடங்கள் 24 மணி =1440 நிமிடங்கள் இப்படியே கணக்கு போட்டு 60 வருடங்கள் வாழ்ந்தால் ஏறத்தாழ 31 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் வருகின்றது இதில் எத்தனை நிமிடங்கள் பிறருக்கு உபயோகமாக நாம் வாழ்கின்றோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்கள் கணக்குக் கூட வேண்டாம். ஒரு நாள் மட்டும் […]
எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த […]
ஃபெர்யல் அலி கவ்ஹர் முன்பொரு காலத்தில், அச்சம் நம் கண் இமைகளில் புண்களாக அழுத்தாதிருந்தபோது, இந்த சாலையில் சாக்கலேட் ஹீரோக்கள், சர்க்கரை பாகு ஹீரோயின்களிடம் காதலுக்காக இறைஞ்சி கொண்டிருந்தார்கள். ஸ்வாத்துக்கு போகும் சாலை மருங்கில் இருக்கும் கம்பீரமான பைன் மரங்களின் நடுவேயும், போப்லார் மரங்களின் நடங்கேயும் ஓடிப்பிடித்து, தங்களது அழியாத காதல்களை பாடல்களாக கூவிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில், சமவெளியின் கடுமையான வெயிலிடமிருந்து தப்ப முயன்ற ஏராளமான பயணிகளை இந்த சாலை தாங்கியிருந்திருக்கிறது. பள்ளத்தாக்கை ஆக்கிரமித்து வெற்றிகொள்ள விரும்பியவர்களது பயணத்தையும் […]
பொதுவாக நவராத்திரி தீபாவாளிக்கு முன்னம் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச் சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல வாழ்வையும் அருளச் செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது. நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும் கொண்டாட்டமும் தான். வித விதமாக பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு […]
இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் த்மிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை ஒரு புதிய ரயில் நிலையம்தான் பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், […]
எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்? எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று. […]
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி கிடைத்த பொழுது தன்னிலை மறந்ததில்லை. எடுத்துவைக்கும் அடிகளை எச்சரிக்கையுடன் கவனச் சிதறல்களின்றி எடுத்துவைப்பேன். தவறுகளும் செய்வதுண்டு. அதனைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு என்னைத் திருத்திக் கொள்வேன். இப்பகுதியில் நான் எழுதப் போகும் விஷயங்கள் இப்பொழுதே என் மனத்தை வருத்துகின்றது. ஆனால் என் […]