ஜனநேசன் அழைப்புமணி கூவியது. ‘ இந்தக் கொரொனா ஊரடங்கும் தளர்வு ஆகிவிட்டது. பத்து .மாசமா தள்ளிப்போன கல்யாணம் எல்லாம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க . கொரோனா பயம் முழுசா தீர்ந்தபாடில்லை ; நித்தம் ரெண்டுபேரு கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து விடுகிறார்கள். இன்னைக்கு யாரு வராகளோ, போகமுடியுதோ இல்லையோ, கொடுக்கிற பத்திரிகையை வாங்கித்தானே ஆகணும். ‘ என்று மனைவி முனு முனுத்தபடி ஜன்னலினூடே பார்த்தாள். “பக்கத்து வீட்டுக்காரர் […]
அழகர்சாமி சக்திவேல் வடக்கிருந்த காதல் சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் – ஆயர் டேனியல் – திண்டுக்கல். சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி திரி யேக நாதனுக்குச் சுபமங்களம். பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு, நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு. சுருட்டி ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்து இருந்த அந்த இனிமையான பாடலை, தேவாலயத்திற்குள், அந்தப் பகல் வேளையில், நிறையப் பேர், கோரஸாகப் பாடிக்கொண்டிருப்பதை, வீட்டிற்குள் இருந்த, என்னால், […]
ஜோதிர்லதா கிரிஜா (1.7.1975 மங்கை-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) அந்தப் பெரிய வீடு தனது இயல்பான கலகலப்பை இழந்து சந்தடியற்று விளங்கிற்று. ‘சங்கு வாத்தியார்’ என்று ஊராரால் அழைக்கப்படும் சங்கர சாஸ்திரிகள் மாடியில் தம்மறையில் கண்களை மூடுவதும் திறப்பதுமாய்ப் பெருமூச்செறிந்த வண்ணம் குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக்கொண்டிருந்தர்ர். ‘பாவி! சண்டாளி! இப்படிப் பண்ணிப்பிட்டாளே கடைசியிலே! இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமாங்கிறாப் போல குனிஞ்ச தலை […]
பத்மகுமாரி போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்த பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டு சிரிப்போடு செவி மடுத்து கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்த சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படி சிரிக்ரீங்க??’ ‘ஒன்னுமில்ல’ ‘சரி […]
யூசுப் ராவுத்தார் ரஜித் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெயர்ந்த இடத்தில் வாழ்வதா? அல்லது பிறந்த இடம் மீள்வதா? இங்கே ஒரு குடும்பம் பதில் சொல்கிறது இன்று என் 73வது பிறந்தநாள். எனக்கடுத்த இரண்டு தலைமுறை இப்போது வீட்டில்.என் மகன் யங்ராஜா. வளர்ந்துவரும் ஒரு ‘ராப்’ பாடகர். உலக அளவில் பேசப்படுகிறார். கூடத்துக்கும் அடுப்படிக்கும் அவர் அறைக்குமாக வேகமாக நடந்து இல்லை ஆடி நாளை ஒலி ஒளியில் ஏறவிருக்கும் தன் அடுத்த பாட்டுக்கு பயிற்சி எடுக்கிறார். […]
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல் நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடித் துதி மனமே; பரனைக் கொண் டாடித் துதி தினமே காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு இருந்த அந்தத் திருச்சபைப் பாடலை, தேவாலயத்துக்குள், ஓரத்தில் இருந்த இசைக்குழு, மனமுருகிப் பாடியது. திருச்சபையை வழிநடத்தும் தலைமை ஆயராகிய நானும் மனமுருகிப் பாடிக்கொண்டே, வந்திருந்த கூட்டத்தைக் கவனித்தேன். கூட்டத்தில் இருந்த எல்லோரும், இசைக்குழு பாடியதற்கு […]
ஜோதிர்லதா கிரிஜா (தீபம் இதழில் 1987 இல் வந்த சிறுகதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் ‘உடன் பிறவாத போதிலும்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) எழுத்தாளர் துரையரசன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, சுவரை வெறித்துப் பார்த்தபடி கையுடைந்த தமது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். தமது அறை என்று சொல்லிக்கொள்ள ஒரு மரத் தட்டியால் மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரும் அதைத் தட்டாமல் […]
குணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் வருமானத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வது நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வழக்கம். அடிப்படைத் தேவைக்குள் வீடும் அடங்கியது ஒரு அசாதாரணம். வாழ்நாளுக்குள் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி […]
மஹ்மூது நெய்னா . எஸ் – கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி…. ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, […]
பநியான் எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும் ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன் வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன செய்வார் ? எப்படிப் பார்த்தாலும் அவர் பூகோள வாத்தியார்தானே ? .அவர் போட்ட நாலைந்து கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான் பிரச்சினையே. அதுவும் அவர் ஓய்வு பெற்ற காலகட்டத்தில் . தன் பையன்கள் இரண்டு பேருக்கும் அடலேறு , ஆடலழகன் என்று பெயர் வைத்திருந்தார். தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பது பற்றின் வெளிப்பாடு […]