இவள் பாரதி நான் கொலையுண்ட நேற்றிலிருந்து மழை முகிழ்க்கும் கார் மேகங்கள் கலைந்துவிட்டிருந்தன.. நான் மண் சரிந்த கணத்திலிருந்து பூமித்தாயின் ஓலம் வானமெங்கும் எதிரொலிக்கிறது நான் வெட்டப்பட்ட மாலையிலிருந்து காற்றிலிருக்கும் பிராணவாயு நின்றுவிட்டது.. என் உறுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபோது என்னைக் கடந்து சென்றோருக்கு எந்த குற்றவுணர்வோ இரக்கமோ கூட இருக்கவில்லை.. இதற்கு மேல் ஒரு இனத்தின் மரணம் குறித்து பேச ஒன்றுமில்லை
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா The Greek Sun God in His Chariot முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் […]
ஆதாம் ஏவாள் பிறந்த மேனியில் காதலர் தின வாழ்த்து ஓலையில் எழுதிய முதலிரு காதலர் ! காதல் என்பது கனவு, களவு, உறவு, பிரிவு, துறவு ! இரகசியத் தேடல் ! முரசத்தில் அடித்து அதை முத்திரை செய்வது முறை ஆகுமா ? காதற் புறாக்கள் தூது போய்ப் பாதிக்கப் படும் வேதனை விழா இது ! நீதியும் போதனையும் வேதமும் மருந் தில்லை காதலர் புண்ணுக்கு ! நீயும் நானும் ஓயாக் கடல் மேல் பாய்மரப் […]
உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ ======== செந்தமிழும் “பன்”தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க ========== தமிழின் “ஓங்கு வெள்ளருவி” ஓட வைத்தது “கல்கி”எனும் தேனாறு. வ.உ.சி ======= சுதந்திரம் எனும் கனல் எழுத்து நடுவேயும் “தொல்காப்பியம்” தந்தவர். பரிதிமாற்கலைஞர் ================= நரியை பரியாக்கினர். பரியை நரியாக்கினர்…இவர் தான் தமிழை “பரிதி” ஆக்கினார். மகாகவி பாரதி ============= தமிழ் நாட்டின் இமய மலையும் இவன் தான். எரிமலையும் இவன் தான். […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
கு.அழகர்சாமி கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவது போலும் உடலுக்குள் உயிர் செலுத்துவது போல் அழுது கொண்டிருக்கும் அவளைக் கண்டதும் கைகளைச் சேர்த்தழுத்தியது தான். எங்கே இழுத்துப் போகிறாள் என்னை? எந்தக் கடலுக்குள்? எந்த ஆழத்துக்குள்? கனவு மீளாது போய்க் கொண்டே இருக்கிறேனா? காலம் நழுவியதில் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறேனா? என்னுள் பெருகும் வெள்ளத்தில் நெக்குருகிக் கரைகின்றேனா? ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு கரையேறுகிறாளே அவள் இன்னொரு காலத்தில்? அவள் மருவலில் என் மரணமா? கண்ணாடிப் பேழைக்குள் எவர் […]
டிக்கெட் எடுத்திட்டியா டிபன் எடுத்திட்டியா தண்ணி எடுத்திட்டியா தலகாணி எடுத்திட்டியா பூட்டு செயின் எடுத்திட்டியா போர்வை எடுத்திட்டியா போன் எடுத்திட்டியா ஐபாட் எடுத்திட்டியா… அலாரம் வெச்சுட்டியா…. கேள்விகளால் நிரம்பி வழிகின்றன தொலைதூரம் செல்லவிருக்கும் தொடர்வண்டியின் சன்னலோரங்கள் பார்த்துப் பத்திரமா போ யாருகிட்டேயும் எதும் வாங்காதே மறக்காம போன் பண்ணு நல்லா சாப்பிடு ரொம்ப அலையாதே மனித சமுத்திரத்தின் காலடியில் நசுங்கும் நடைமேடை விளிம்புகள் அக்கறையிலும் அன்பிலும் மிதக்கின்றன பிரியும் நேரம் நெருங்க விடுபடப்போகும் விரல்களினூடே நிலநடுக்கத்திற்கு நிகராக […]
ஐயன்மீர்! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட வரவு செலவு கணக்கு பற்றியோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ நாங்கள் சொல்ல விரும்புவதும் ஏதுமில்லை. விடைபெறுவதற்கு முன் விருந்தோம்பல் சகிதம் திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம். எங்களைப் போலவே உங்களின் வாகனங்களின் வருகைக்கும் காத்திருக்கும் எதிர்பார்ப்பின் கண்களுக்கு என்னவிதமான உத்திரவாதத்தை தரப் போகிறோம் நாம்.
பிறந்ததிலிருந்தும் பிறந்தகம் துறந்த பின்னாலும் செல்லாயியின் பொழுதுகள் எப்போதும் ஆடுகளோடுதான். கோடையும் மழையும் ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும் பருவத்தின் பின்சுழற்சியில் கருகிப்போயிருக்கும் மரங்களின் இலைகள் ஆடுகளுக்கெனத் தழைக்க, ” கொஞ்சம் பொறுங்கடா சிவராத்திரி வரைக்கும் ” எனப் பனிபோகவே அன்று விரதமிருப்பாள். எதிர் வீட்டுத் தோட்டத்தில் புகுந்து விட்ட வெள்ளையோ கருப்போ கால்கள் ஒடிந்தால் செல்லாயியின் வசவுத்தமிழில் விஷம் கலந்திருக்கும். மோட்டார்ச் சக்கரங்களிலும் வியாதி வெக்கையிலும் சிலதை இழந்திருந்தாலும் ஆடுகளை ஒருபோதும் விற்றதில்லை செல்லாயி என்றாலும், இப்போதெல்லாம் […]
அதோ ஒரு புயல் மையம் கருக்கொண்டு விட்டது. தினசரி காலண்டர் தாள்களின் இந்த இலையுதிர் காலத்தின் நடுவே பெப்ரவரி பதினாலாம் தேதி….. பொன் வசந்தம். மலர் மழை. தேன் மின்னல். குமுழிக்கோட்டம். நுரைவனங்கள். பனிச்சொற்கள். வண்ணாத்திப்பூச்சி சிறகுகளுக்குள் வாழ்க்கைப்பாடங்கள். முள் மீது கழுவேறும் ரோஜாக்கள். இதயத்தை இன்னொரு இதயம் கத்தியாகி கசாப்பு செய்தல். ஜிகினா தடவிக்கொண்டு பொன் எழுத்துக்களை கூரிய பற்களாக்கி உயிரை உறிஞ்சும் வேலன்டைன் அட்டைகள். அந்த பெப்ரவரி இனிமேல் கொலவெரி. மாதங்களை திருத்துங்கள். கிடார் […]