முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்

This entry is part 13 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின் அழகு கண்டு அதிலே மொய்க்கும் வண்டின், மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும் ஆம்பலின் நிலை கண்டு கவிதை வரைவதற்கு நான் நீ நினைக்கும் கவிஞன் அல்ல. […]

எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.

This entry is part 15 of 32 in the series 15 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன் உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார்கலைக்கல்லூரி,கடலூர். தமிழ் இலக்கியப்படைப்புகளில் கதைஇலக்கியங்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்;றன. புதினங்களில் கதைப்பின்னல் வடிவமைப்பு உட்பொருள் படைப்பாளுமை இவைகளைப் பொருந்து பல நிலைகளில் அமைகின்றன.சிறுகதை புதினங்களைவிட அதிகமாக வெளிவருவதைப்போன்றத் தோற்றங்கள் தென்பட்டாலும் புதினங்;கள் எண்ணிக்கை அளவினைக் கடந்து உணர்த்தும் உட்பொருளும் உத்தியும் நடையும்வரவேற்பைப் பெற்றுள்ளன.அவ்வகையில் எஸ்ஸார்சியின் கனவுமெய்ப்படும் என்னும் புதினம் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கும் உகந்ததாக காணப்படுகிறது.எஸ்ஸார்சி நவீனஇலக்கியத்தளத்தில் இயங்கிவருபவர்.வாசிப்பு அனுபவத்திலும் படைப்பு அனுபவத்திலும் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார.;கவிதைஇ சிறுகதை புதினம் கட்டுரை மொழிபெயர்ப்பு என்னும் பன்முகங்களில் […]

சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]

This entry is part 21 of 26 in the series 8 டிசம்பர் 2013

’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும்          உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள   […]

வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )

This entry is part 12 of 26 in the series 8 டிசம்பர் 2013

வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புதைந்து புல்மண்டிக்கிடந்த ஒரு சமூகத்தின் கல்லரையை கண்களுக்குப் புலப்பட வழி செய்திருக்கிறது . மதராசப்பட்டின வரலாற்றுச் சுவடுகளில் எழுதமறந்த தலித்துகளுக்கான இடத்தை தொட்டுக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை. அழுத்தமான தரவுகளற்ற புனைவு என்றாலும் இந்த வரலாறு இப்படித்தான் இருந்திருக்கக்கூடுமென்ற உணர்வை ஒரு கோட்டுச்சித்திரமாக இன்றைய தலைமுறைக்கு வெள்ளையானை விதைத்திருக்கிறது. சென்னை கடற்கரைச்சாலையில் விவேகாநந்தர் இல்ல நிறுத்தத்தில் இறங்க பேரூந்துகளில் இன்னும் ஐஸ் […]

பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு

This entry is part 10 of 26 in the series 8 டிசம்பர் 2013

பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் […]

ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்

This entry is part 11 of 26 in the series 8 டிசம்பர் 2013

தன்க்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த, ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாத வற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் […]

ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)

This entry is part 2 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஷைன்சன்        அன்னா ஹஸாரே எப்படி சில நாட்களுக்குள்ளாக இந்தியாவின் மிக முக்கியமான நபராக மாறி, அதே வேகத்திலேயே மறக்கப்பட்டும் போனார்? பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்திய நாட்டில் நிர்பயாவின் மீதான வன்முறை மட்டும் எப்படி நாட்டின் மனசாட்சியை உலுக்கும் ஒரு சம்பவமாய் மாறிப்போனது? நாடெங்கும் பல கொலைக்குற்றங்கள் நடக்கின்ற போது நொய்டா இரட்டைக் கொலை மட்டும் எப்படி நாடு முழுக்க பிரபலமானது? பத்து வருடங்களுக்கு முன்பு நாட்டின் மனசாட்சியை உலுக்கிய குஜராத் […]

நத்தை ஓட்டுத் தண்ணீர்

This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன், சங்கு சிற்றிதழின் ஆசிரியர் ஒரு நாள்; இந்நூலுக்கு ஓர் அறிமுகம் எழுதுங்கள் என்று என்னிடம் கொடுத்தார்.வழக்கம் போல் தவிர்த்தும், அவர் வழக்கம் போல் திணித்தும் சென்று விட்டார். இரண்டு தினங்கள் கழித்து அப்புத்தகத்தை எடுத்தேன். படித்தேன். படித்துக்கொண்டே இருந்தேன். மிக விருவிருப்பாக நகர்ந்தது. ஹரணியின் கவிதைகளைக் கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுதுதான் அவரது உரைநடையைப் படிக்கின்றேன். அவரது உரைநடையின் வீச்சு என்னை வெகுவாகப் பாதித்தது. அவரது உரைநடை என்னுள் நடந்தது என்பதைவிட நாட்டியமாடியது என்றுதான் […]

கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்

This entry is part 2 of 29 in the series 1 டிசம்பர் 2013

  சி. ஆரோக்கிய தனராஜ் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி – 620 002. தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் முழுமையான இலக்கிய வளர்ச்சி அடைந்த இலக்கிய வகை வாழ்க்கை வரலாற்று இலக்கியமாகும். இது மேலை நாட்டினரின் வருகைக்குப் பிறகு உரைநடை வடிவில் சிறுதை, புதினம், உரைநடை, வசன கவிதை, உரைவீச்சு ஆகியன வகைமையில் வளர்ச்சி பெற்றன. 2004ஆம் ஆண்டு கவிஞர் வ. ஈசுவரமூர்த்தி தமது வாழ்வியல் […]

ஜெயமோகனின் “வெண்கடல்” – வாழ்வின் வெளிச்சங்கள்

This entry is part 26 of 29 in the series 1 டிசம்பர் 2013

                                 நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013–ஆம்-ஆண்டுவெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு.              முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில் உள்ள 11 சிறுகதைகளும் வெவ்வேறு தளத்திலியங்கும் பல்சுவைத் தன்மை கொண்டவை. . பொதுவாகவே ஜெயமோகனின் கதைகளில் உரையாடல்கள் நேர்த்தியாக இருக்கும். கதைகளுக்கேற்ப அவை ஆழமாகவும் இருக்கக் கூடும். “குருதி” சிறுகதையின் இறுதியில் சேத்துக்காட்டார் கூறும் ”மனுசனா வாழணும்ல—-நாயா, பன்னியா வாழாதே; மனுஷனா […]