கன்னியம் அ.சதீஷ் உதவிப் பேராசிரியர் ஆசான் மெம்மோரியல் கல்லூரி பள்ளிக்கரணை சங்க இலக்கியப் பாடல்கள் எழுத்து வடிவம் பெற்ற காலமும் நூல்-தொகுப்பு வடிவம் பெற்ற காலமும் வெவ்வேறானவை. இப்பாடல்கள் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை அல்ல. இப்பாடல்களைத் தொகுத்த புலவர்கள் தொடங்கி உரையாசிரியர்கள் (சங்கப் பிரதிகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், இலக்கணப் பிரதிகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள்) பதிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என இவர்கள் அனைவரும் வெவ்வேறு வாசிப்பு முறையியல்களைச் சங்கப் பாடல்கள் மீது நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வாசிப்பு முறைமைகள் நிகழ்த்தப்பெற்ற காலச் சூழல்களும் […]
மு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சங்க இலக்கிய வாசிப்பு பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் பத்துப்பாட்டு இலக்கியத்தை அகம், புறம் என்ற பொருண்மை அடிப்படையிலும் ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைமையிலும் கால ஆராய்ச்சி நிலையிலும் இதுவரை ஆராய்ந்துள்ளனர். ஆய்வுநிலையில் வடிவம் சார்ந்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. பத்துப்பாட்டைப் பின்வரும் நிலைகளில் ஆராய்ந்து அது குறித்த விரிவான பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. – பத்துப்பாட்டு அறிமுகமும் வைப்புமுறையும் – பத்துப்பாட்டில் அகப்புற நெகிழ்வும் இணைவும் – […]
ச.பச்சைநிலா உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி பெரம்பலூர் வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபத்திரிகைகள் என்கிற சிறுபத்திரிகைகள் பற்றிய நூல் தொகுப்பு தந்த புரிதலும், சமீபத்தில் கங்கு வரிசையில் வெளிவந்த பேரா. வீ.அரசுவின் சிறுபத்திரிகை அரசியல் என்கிற குறுநூல் கொடுத்த சிந்தனை கணமும் என்னை மேலும் சிறுபத்திரிகைகள் குறித்த வாசிக்கவும் பேசவும் செய்தன. அந்தவகையில் தமிழில் பன்முகப்பட்ட சிந்தனை ஓட்டங்களை வாசக மனங்களில் விதைத்து, அவ்விதைப்பின் ஆகப் பயனாக அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பிய சாதனை தமிழில் சிறுபத்திரிகை வழி […]
கரிகாலன் விருது : “புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது” — மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து… சுப்ரபாரதிமணியன் — தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம் வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான ”கரிகாலன் விருது “ பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி ” நீர் மேல் எழுத்து “ கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் “ஊசி இலை மரம்” பரிசு பெற்றபோது […]
வித்துவான் க.கதிரேசன், M.A., B.Ed [குன்றக்குடி ஆதீனப்புலவர், சைவத்தமிழ்மணி, சித்தாந்தச்செல்வர், அலுவலகத்தில் பணிசெய்த நாட்களிலும் சரி, விருப்ப ஓய்வில் வெளிவந்து இன்று எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும் சரி, ஏதாவது சமூகப் பணி செய்யும் ஆர்வத்தில் நிதியுதவி கேட்கும்போதெல்லாம் உதவ முன்வரும் முதல் நபராக இருப்பவர் என் மதிப்பிற்குரிய அலுவலகத்தோழி குமாரி. அவ ரும், அவருடைய கணவர் சுந்தரேசனும் அடிக்கடி திரு.கதிரேசன் என்ற தமிழறி ஞரைப் பற்றி மிகுந்த மதிப்போடு பேசக்கேட்டிருக்கிறேன். தமிழாசிரியராக திரு.கதிரேசன் அர்ப்பணிப்போடு […]
தேமொழி உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர். அவர் எழுத்துக்களைப் படித்து விமரிசிப்வர்களே சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும், ஆங்கில அறிஞர்களாகவும் இன்றும் கொண்டாடப் படுவார்கள். அவரது “Et tu, Brute?” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்?” என்று கேட்டு உயிர் விடும் முன் சொல்லிய கடைசி உரையாடல் அது. இப்பொழுது ஷேக்ஸ்பியரின் அன்பு […]
கவிஞர் கருணாகரன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் என்னும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெறவுள்ளது. அந்த புத்தகத்திற்கு கவிஞர் கருணாகரன் எழுதிய முன்னுரை. — இது எஸ். கிருஷ்ணமூர்த்தியின் பல வகை எழுத்துகளைக் கொண்ட ஒரு தொகுப்பு. அனுபவங்களின் பதிவு. திரைப்படங்களைக் குறித்த பார்வை. நேர்காணல்இ புத்தக விமர்சனம், ஆளுமைகளைப் பற்றிய வெளிப்பாடு எனப் பல வகையில் அமைந்த எழுத்துகள் இதிலுண்டு. ஆறு […]
– யாழினி முனுசாமி நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவரது படைப்புகள் காலத்தால் அழியாத் தன்மை கொண்டவையாகும். அவரது வேள்வித் தீ எனும் புதினம் தமிழின் தலைசிறந்த புதினங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கான காரணம் அப்புதினம் ஒரு சமூக வரலாறாகவும் இருப்பதுதான். தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரர்களைப் பற்றிய இனவரைவியலாக இப்புதினம் அமைந்திருக்கிறது. அப்புதினத்தின்வழி சௌராஷ்டிரர்களின் வாழ்வியலையும் அச்சமூகத்தையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக் குறிப்பு : […]
க. புவனேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை (SFC) தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி – 1. முன்னுரை ஒரு மனிதனின் முழுவாழ்வையும் வெளியிடும் ஆற்றல் மிக்க இலக்கிய வகையாகத் திகழ்வது புதின இலக்கியமாகும். மனிதனின் அகவுணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் புதினத்திற்கு மட்டுமே உண்டு. கூர்ந்த அறிவும், கடின உழைப்பும் மிக்க மனிதர்கள் யாவரும் விரும்பும் இலக்கியமாகத் திகழ்வது புதினமாகும். நாம் வாழும் கலாச்சாரம், பண்பாடு இக்காலத்தியச் சூழலை நாமே உணரும்படி முழுமையான வார்ப்பாகக் கண் முன்னே சமுதாயத்தைக் […]
மு. இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் பெண்ணியம் தொடர்பான சித்தாந்தங்கள் பேசும் இக்காலச்சூழலில் உருப்பெறும் தமிழிலக்கிய வரலாற்றில் பெண்கவிஞர்கள் இன்னும் சரியாகப் பதிவாகாத நிலையில், எந்தச் சித்தாந்தங்களும் […]