சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

This entry is part 8 of 28 in the series 27 ஜனவரி 2013

நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லை. அதில் சிறுகதைகள் உண்டு படிக்க வேண்டும் என்றும் அதை நான் கையிலெடுக்கவில்லை. எதாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தால் படிக்கத் தொடங்கிவிடும் ஆர்வமும் சுபாவமும் ஐந்தாறு வருடங்களாகவே இருந்து வந்தது. அனேகமாக அது தான் நான் படிக்கும் முதல் சிறு கதைத் […]

கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்

This entry is part 7 of 28 in the series 27 ஜனவரி 2013

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வியலைக் கூறும் இலக்கியங்களாக மட்டுமல்லாது அறநெறி புகட்டும் அறவிலக்கியங்களாகவும் திகழ்கின்றன. அதனால்தான் அவை இன்றும் வாழுகின்ற இலக்கியங்களாக மிளிர்கின்றன. இச்சங்க இலக்கியங்களுள் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று கலித்தொகை அனைவராலும் போற்றப்படுகின்றது. இக்கலித்தொகை அக இலக்கியமாக இருந்தாலும் இதில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் அறங்கள் புலவர்களால் மொழியப்பட்டுள்ளன. மனித வாழ்வில் முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்களைப் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’

This entry is part 5 of 28 in the series 27 ஜனவரி 2013

சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், ‘இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது’ என்று தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, ‘இவனும் ஏதோ சொல்லுகிறானே’ என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப்போயிருக்கிறது எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள் தான். மனிதர்களுக்கு அன்பு எனகிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக் கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதுக்கும் ஏதாவது இருந்து கொண்டே தான் […]

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

This entry is part 24 of 30 in the series 20 ஜனவரி 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன். மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் ஒரு பதிவுடன் தொடரை முடிக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 60 களில் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆசை இருக்கும் விகடனில் எழுத வேண்டும் என்று. இணைய இதழ்களில் திண்ணையில் எழுத வேண்டும் என்று ஆசை வரும். “சில சந்திப்புகளூம் சில நிகழ்வுகளும் “ இது ஓர் அரசியல் தொடர். குமுதம் பால்யூ முதல் அண்ணா கண்ணன் […]

வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்

This entry is part 22 of 30 in the series 20 ஜனவரி 2013

கோவிந்த் கருப் விமர்சனம் அல்ல.. படிக்க வேண்டிய சில புத்தகங்களின் அறிமுகமே… புத்தகம் 1: திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும்.. முதலில் மலர்மன்னனின் நிர்பந்தமற்ற, எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற எழுதும் முறைக்கு வந்தனம். கடந்தகால பக்கங்களை புரட்டிப்பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவற்றை எழுத்தில் வடிப்பவர்கள் மிக மிகச் சிலரே.. அதிலும், பாப்புலர் சிண்ட்ரோம் ஆட்டிப் படைக்காமல் எழுதுபவர்கள் மிக மிக மிக சிலரே.. அதில் ஒருவர் மலர்மன்னன்… காலத்தில் தான் கடந்து வந்த பாதையின் […]

கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்

This entry is part 18 of 30 in the series 20 ஜனவரி 2013

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தொடக்ககால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவினை மட்டுமல்லாது தானே உணவினை உற்பத்தி செய்யும் முறையினையும் மேற்கொண்டான். கால ஓட்டத்தில் தேவைக்கேற்ப பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்றனர். இவ்வாறு  பழங்காலத்தில் […]

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1

This entry is part 13 of 30 in the series 20 ஜனவரி 2013

எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’

This entry is part 3 of 30 in the series 20 ஜனவரி 2013

ஒரு கலந்துரையாடலின்போது ஒருத்தர் என்னிடம் கேட்டார்., “உங்க புத்தகங்களின் தலைப்புகள் ‘க’ எழுத்து வரிசையைக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஒரு ‘சென்டிமென்ட் உண்டா?” என்று! பெயர்கள் சில வேளைகளில் இப்படித் தானாக வந்து அமைந்து கொள்கிறது எனபதுதான் சுவாரஸ்யம். இந்தக் கட்டுரைகளில் கற்பனை இல்லை, இவைகளில் சிலது மட்டும், பரிமளிக்கம் பண்ணுவதற்காக எழுதப் பட்டவைகளில் கொஞ்சம் ‘கதை’ உண்டு, மற்றபடி அனைத்தும் நடப்புத்தான். கட்டுரை என்றால் ஞாயப்படி ஒரு மாற்றமும் செய்யாம நூத்துக்கு நூறு – பெயர்கள் […]

தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு

This entry is part 2 of 30 in the series 20 ஜனவரி 2013

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தமிழிலக்கிய மரபுகளுக்கும், நெறிகளுக்கும் தொடக்க மூலமாக அமைவது தொல்காப்பியம் ஆகும். இத்தொல்காப்பியத்தின் கருத்துகளை, கோட்பாடுகளை அறிவிக்கின்ற மூலங்களாக மூல நூல்களும், திறனாய்வு நூல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இணையப் பரவலால் தொல்காப்பியம் சார்ந்த கருத்துகள், மூலங்கள் இணையம் வழியாக  பரவி வருகின்றன. அவை பற்றிய தகவல்களையும் மதிப்பீடுகளையும் அளிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களை, உரைகளுடன் படிக்க  வாய்ப்பாக தமிழ் […]

இன்னொரு வால்டனைத் தேடி…..

This entry is part 27 of 32 in the series 13 ஜனவரி 2013

எஸ்.எம்.ஏ.ராம்   தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிய காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே சக மனிதர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக மனிதனை நான் தீண்டுவது? உடலாலா? மனத்தாலா? அரூபமான மனம் எப்படி இன்னொரு அரூபத்தை ஸ்பரிசிக்கும்?   முதலில் இந்தத் தொடர்பு நிகழ்ந்தாக வேண்டிய அவசியமே தான் என்ன? தொடர்பே இல்லாமல் போனால் தான் என்ன கெட்டு விடும்? என்னைச் சுற்றி […]