கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )

This entry is part 42 of 43 in the series 24 ஜூன் 2012

இரா. குணசேகரன். நடவு வெளியீடு, 269 காமராஜ் நகர், ஆலடி ரோடு, விருத்தாசலம் – 606 001 நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும். நவீன எழுத்தில் அழுத்தமான ஒரு திருப்பம் உண்டு. மனிதன் சுயம்பு ஆனவன் இல்லை.அவனுக்குப்பின்னால் நீளும் நிழல் உண்டு. கானல்காடு ஆறுமுகம் என்ற தனித்த ஆளுமையை மட்டும் கூறவில்லை, அந்த ஆளுமைக்கு பின்னால் நிழலான மனிதர்கள் மூலம் சமூகத்தைப் பற்றி விமர்சிக்கும் […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58

This entry is part 41 of 43 in the series 24 ஜூன் 2012

Samaksritam kaRRukkoLvOm 58   சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58 இந்த வாரம் यत्र – तत्र (yatra – tatra) அதாவது ’எங்கு – அங்கு’ என்ற உருமாற்றம் பெறாத சொற்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் यत्र என்ற சொல்லை உபயோகித்தால் அதே வாக்கியத்தில் तत्र என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும். यत्र इति शब्दः यत्र प्रयुज्यते तत्र तत्र इत्यस्य अपि प्रयोगः भवेत् एव।(yatra iti śabdaḥ yatra prayujyate tatra tatra […]

நிதர்சனம் – ஒரு மாயை?

This entry is part 36 of 43 in the series 24 ஜூன் 2012

பொ.மனோ   கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில்,   “நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் சார்பானது. ஒவ்வொரு பரிமாணத்திலும் அது வெவ்வேறு தளங்களை எடுக்கின்றது. எமது முப்பரிமாணத்திற்குட்பட்ட பிரக்ஞையூடாக நாம் கருதும் ‘நிதர்சனம்’ வேற்றுப் பரிமாணங்களில் தன் பிரக்ஞையை வியாபித்திருக்கும் ஒரு மனிதனுக்கு போலியானதாவே தோற்றம்பெறும். அம்மனிதன் கருதும் நிசர்சனம் அவனது பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணத்துடன் மாறுபடக்கூடியது. எனவே பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணப்படிநிலைகள் […]

இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை

This entry is part 26 of 43 in the series 24 ஜூன் 2012

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள், தற்போது இனவரைவியல் அடையாளம் சார்ந்து நுண்கதையாடல்கள், நுண் அரசியல் தளங்கிலும் இயங்குவதை பரிசீலிக்க வேண்டும். அடித்தள இஸ்லாமிய மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் விடுகதைகள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள், கதை சொல்லல்கள், புராணீகங்கள், புனைவுகள், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18

This entry is part 23 of 43 in the series 24 ஜூன் 2012

  இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு     முதுமை  ஒரு சுமையா? ஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. பயனுள்ள பயணமாக இருத்தல் வேண்டும். உடல் வலி மறக்க வாசிப்பு, எழுத்து, தியானம் உதவிக்கரம் நீட்டும். வாடிப்பட்டியில் இருந்த ஐந்தாண்டு காலம் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்த உணர்வும் நிறைவும் இப்பொழுதும் இருக்கின்றது. எத்தனை மாறுதல்கள்?! அரசியல் பாடம் நேரடியாகப் பெற்றதும் இங்கேதான். […]

துருக்கி பயணம்-7

This entry is part 20 of 43 in the series 24 ஜூன் 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா ஏப்ரல் – 1 மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன. அண்டல்யாவில் எப்போதும்போல […]

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்

This entry is part 18 of 43 in the series 24 ஜூன் 2012

நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.  என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான புதுவயலுக்கு ஒரு முறை நாங்கள் வந்திருந்தபொழுது ‘‘என்னையும் என் தங்கையையும் கவிஞர் அழ. வள்ளியப்பாவைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள்’’என்றார். அந்தச் சில நாள் இடைவெளியில் நானும் என் தங்கையும் எங்களுக்குத் தெரிந்த சில மழலைப்பாடல்களை அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னிலையில் பாடுவதற்குத் தயார்படுத்திக்கொண்டோம். குறிப்பாக […]

திருக்குறள் விளம்பரக்கட்டுரை

This entry is part 16 of 43 in the series 24 ஜூன் 2012

ஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’  புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் ஆபிசுக்கு வந்து  அவற்றை என்னுடைய இல்லை. . . இல்லை. . .  என்னுடைய மகளுடைய இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாயிற்று. இவற்றை எவ்விதம் விற்கப்போகிறேன் என மலைத்து மோட்டுவளையை இல்லை . . . . இல்லை. . . கூரையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். . டெலி ஃபோன் ஒலித்தது. […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)

This entry is part 9 of 43 in the series 24 ஜூன் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்மையைப் போற்றிய கவிஞர்கள்      பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. ஆனாலும் பெண்விடுதலைக்குக் குரல் கொடுத்த உன்னதக் கவிஞராகப் பாரதியார் விளங்குகிறார். தாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பாடல்கள் பாடினார். பெண்கள் அடிமைகள்  அல்லர். அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவர்கள் மனிதரில் ஒரு கூறு. அவர்கள் உயர்ந்தால் தான் நாடு உயரும் என்று உணர்ந்து அதனைச் சமுதாயத்திற்கு உணர்த்தியவர் […]

சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

This entry is part 6 of 43 in the series 24 ஜூன் 2012

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் 75 வயதை எட்டியுள்ளார். அவருடைய வாழ்வை நினைவு கூரும் கட்டுரை) தலைமுறைகள்தோறும் தமிழே வாழ்வு என்று தனித்து நிற்கும் இலட்சியப் புதல்வர்களைப் பெற்ற தமிழன்னையின் ஆயிரமாயிரம் தமிழ்ப்புதல்வர்களில் ஒருவர் என்று, மலேசியாவில் பெருமையோடு சொல்ல வேண்டியவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள். எளிய குடும்பத்தில் தோன்றி, எளிமையான வாழ்க்கையை வகுத்துக் கொண்டு தமிழுக்கும் தமிழர்க்கும் […]