ரவி அல்லது.
ஏதோவொன்றை தேடிவனுக்கு
ஏற்காதபொழுதும்
கிடைத்ததென்னவோ
அறியாப் புறத்தின் நன்மைதான்.
தருணச் சறுக்கலின்
கைசேதக் கவலையால்
ஏற்பின் இயலாமை
ரணத்தில் துடிக்கிறது
பொழுதுகளைக் கெஞ்சி.
சூழ்ந்திருக்கும் காற்றை
சுவாசிக்க முடியாமல்
பொத்தென்று
வீழ்கிறது வாழ்க்கை
அதன் போக்கில்
வாய்ப்புகளற்று.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com