அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 319ஆம் இதழ், 26 மே , 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக […]
ஆர் வத்ஸலா முன்பும் இருந்துள்ளன திட்டமிடப்படா மௌனங்கள் நம்மிடையே – எவ்வளவோ முறை – நமது நெஞ்சங்களை அண்டாமல் நீ கேட்காத ஒரு கேள்வியும் நான் கூறாத ஒரு பதிலும் இப்போதைய மௌனங்களை விஷமாக்கி நிற்கின்றன நமது நெஞ்சங்களின் மேலேறி மிதித்துக் கொண்டு
ஜெயானந்தன். நீயும் நானுமாய் கைகோர்த்து, வாழ்வின் கடல் நீந்தி வெகுதூரம் வந்துவிட்டோம்! நாற்பதாண்டில், “நீ” நானுமாய், “நான்” நீயுமாய் மாறிமாறி உருமாறி அர்த்தநாரியாய் உலாவந்தோம். காமம் உடல்வரை காதல் உள்ளம்வரை கரைபுரண்டு ஓடி, கால்கடுத்து, வாழ்வை தவமாய் மாற்றினாய். இன்று, முதுமையில் நீயும் நானுமாய் கோணல் பாதங்களுடன் நுரைத்தள்ளும் கடல்புரத்தில் கானும் தொடுவானம் , தொலைதூரம்! என் அன்பே என் சுயம் அழிக்க உன் முத்தம் ஒன்றே போதும்…., நம் இளமை முக்தி பெற்று முதுமையில் […]
ஆர். சீனிவாசன் 11.12.3123 அன்று வெளிவந்த நாளிதழ்களின் சில முக்கிய செய்திகளின் தொகுப்பு. தமிழ்நாட்டு செய்திகள்: நாட்டின் செய்திகள்: சர்வதேச செய்திகள் : விளையாட்டு செய்திகள்: வணிக செய்திகள்: சமையல் பொழுதுபோக்கு மற்றும் சினிமா செய்திகள்: ஞால செய்திகள் :**அரை மணிநேரம் அன்றய தலைப்பு செய்திகளை கைபேசியில் தூக்கம் கலையா கண்களுடன் படித்த சக்திவடிவேலிற்கு அடுத்தது என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஞால பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருடங்கள் ஆனா பிறகு, போன மாதம்தான் அவன் வேலையும் […]
. சுலோச்சனா அருண் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்களால் தொகுக்கப் பெற்ற ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘சாக்லட் பெண்ணும் பண்ணைவீடும்,’ ‘யாதுமாகி நின்றவள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனை இணையாசிரியராகக் கொண்ட ‘தமிழ் ஆரம் – 2024’ சிறுவர்களுக்கான சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப் பெற்றன. கனடா தமிழ் எழுத்தாளர் […]
குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை […]
சசிகலா விஸ்வநாதன் பூத்துச் சொரியும் பவளமல்லி; மெல்லனே, மெல்லனே, முயங்கி மாரி பொழி கார் மேகம்; தடதடக்கும் இடியும்,மின் மினுக்கும் மின்னலும், நிகர்த்ததே மணவாழ்வு… மலர் படுக்கையல்ல… தெரிந்தோ,தெரியாமலோ; அறிந்தோ, அறியாமலோ; உன் வாழ்க்கை நான் புகுந்தேன். உன்னை வேண்டுவது ஒன்றே; என்னில் புகு; என் குறை களைய. என் தலை பாரம் சுமக்கும், சும்மாடாகி; நெடு வாழ்வின் நுகத்தடி சோடியாய்; நீ இரு! ஒரு கோடி வரப்போக இருப்பினும்; கண்ணன் கோயில் துலாமுள்ளாய்; ஏதும் எதிர்பாராகோபிகையாய் […]
ஹிந்தியில் : ரவீந்த்ர ப்ரபாத் தமிழில் : வசந்ததீபன் ________________________________________ இன்றும்_ ரொட்டி மற்றும் கவிதையின் செயற்கை வெற்றிடத்தில்நின்று சில அதிருப்தி _ அனுபவமற்ற மனிதன் பேசுகிறான் மக்கள் போராட்டத்தின் எப்போதும் முற்போக்குவாதம் , எப்போதும் ஜனநாயகம் எப்போதும் சோசலிசம் என்பது எப்போதும் கலாச்சாரத்தோடு இணைத்து ….! எவர்களிடம் _ இல்லை நாகரிகம்_நாகரீகம் இல்லாததின் புரிதல் மற்றும் இல்லை சுய மரியாதையின் மென்மையான உணர்வு எவரைச் சுற்றி வியாபிக்கிறது குரூரமும் நெறிமுறையற்ற மனிதாபிமானமும் ஆறுதல்களின் உலகம் மற்றும் […]
ஹிந்தியில் : உதய் பிரகாஷ்தமிழில் : வசந்ததீபன் ஆவணியில் மேகங்கள் திரும்பிப் போவதைப் போலவெயில் திரும்பிப் போவதைப் போல ஆடியில்பனித்துளி திரும்பிப் போகிறது அந்த மாதிரி விண்வெளியில் அமைதிஇருள் திரும்பிப் போகிறது ஏதாவது தலைமறைவு வாழ்க்கை ( அஞ்ஞாத வாசம் ) யில் தனது துக்கமடைந்த உடலைபோர்வையில் மறைத்துகொஞ்சம் போல மகிழ்ச்சியும் சிட்டிகை நிறைய ஆறுதலின் பேராசையிலும் எல்லாவற்றை மறைத்து வந்திருந்ததுவிபச்சாரி போல திரும்பிப் போகிறது திரும்ப தனது குகையில் பயம் கொண்டுமரங்கள் திரும்பிப் போகின்றன விதைகளில் […]