உலகம் முழுவதும் நீக்கப்பட்டாலும், போலியோ பாகிஸ்தானில் மறையவில்லை நான்கு மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் ஒரு வருடம் எந்த போலியோ தாக்குதலும் இல்லாமல், ஒரு முழு வருடம் கடந்தது என்பதை அறிந்து உலகம் மகிழ்வடைந்தது. இந்த சாதனை, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நைஜீரியா என்ற மூன்று நாடுகளே போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க ஏதுவானது. போலியோவிற்கு எதிரான போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உலக சுகாதார நிறுவனம் பதற்றத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் போலியோவால் […]
நெல் க்ரீன்ஃபீல்ட்பாய்ஸ் (An Alien View Of Earth by Nell Greenfieldboyce February 12, 2010) இந்த வாரம் ஒரு புகைப்படத்தின் 20ஆம் ஆண்டுவிழா. அது மிகவும் ஆழமான பொருள் பொதிந்த புகைப்படம். இருப்பினும் அந்த புகைப்படம் இருட்டாகவும், ஏறத்தாழ ஒன்றுமே இல்லாததாகவும் தோற்றம் கொண்டது. 1990ல் நாசா வின் வாயேஜர் 1 விண்வெளிக் கலம் எடுக்த புகைப்படம் இது. 4 பில்லியன் மைல்களுக்கு அப்பால் நம் பூமி எப்படி தோற்றமளிக்கும் என்று காட்டும் […]
ரொறொன்ரோ சுயாதீன கலைத் திரைப்படச் சங்கத்தின் பத்தாவது குறுந்திரைப்பட விழா கடந்த சனிக்கிழமை (23-06-2012) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான விழாவின் முதல் அங்கமாக, இரு விசேட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘பாலை’ ஒரு அரங்கிலும், கனடிய தயாரிப்பான ‘ஸ்ரார் 67’ பிறிதொரு அரங்கிலும் காண்பிக்கப்பட்டன. முடிவில் இவ்விரு திரைப்படங்களையும் பார்வையிட்ட இரசிகர்கள் […]
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்குப் பணிவு வணக்கம் வரும் சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ், கையேடு இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. வர இயலாதவர்கள் வாழ்த்து அனுப்பின் பெரிதும் மகிழ்வோம். இவற்றைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நனி நன்றியன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைவர் தமிழிலக்கிய உலக மாநாடு பிரான்சு. இணையதள முகவரி http://tamlitworldconf.wordpress.com/
இரா. குணசேகரன். நடவு வெளியீடு, 269 காமராஜ் நகர், ஆலடி ரோடு, விருத்தாசலம் – 606 001 நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும். நவீன எழுத்தில் அழுத்தமான ஒரு திருப்பம் உண்டு. மனிதன் சுயம்பு ஆனவன் இல்லை.அவனுக்குப்பின்னால் நீளும் நிழல் உண்டு. கானல்காடு ஆறுமுகம் என்ற தனித்த ஆளுமையை மட்டும் கூறவில்லை, அந்த ஆளுமைக்கு பின்னால் நிழலான மனிதர்கள் மூலம் சமூகத்தைப் பற்றி விமர்சிக்கும் […]
கஜாலா ஜாவேத் அவர்களது கொலை தாவூத் கட்டக் ஜூன் 18 ஆம் தேதி பிரபலமான பஷ்தோ பாடகி கஜாலா ஜாவேத் சுட்டுக்கொல்லப்பட்டார். அமைதியான சட்டத்தை மதிக்கும் குடிமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அரசாங்கம் சட்டத்தை மதிக்காத தீவிரவாதிகள், கடத்தல் கொள்ளையர்கள் முன்னால் கையாலாகாத அரசாங்கமாக இருக்கிறது என்பதைத்தான் இசையையும் கலைகளையும் விரும்பும் மக்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக காட்டுகிறது. கஜாலாவின் வயது 24. பெஷாவரின் தாப்காரி கார்டன் பகுதியில் உள்ள அழகு நிலையத்திலிருந்து ஒரு கச்சேரிக்கு செல்லும் […]
ரேவதி வர்மா இயல் வெளியீடு 34/ 98 நாட்டு 1 சுப்பராயன் தெரு, மயிலாப்பூர் சென்னை.4 இவ்வுலகையும், அதன் மனித மனங்களையும் சொற்களின் ஆழங்கள் பெயர்ச்சிகளும் சொற்களிலே பிரித்துப் பகுத்து வெளிப்படுகின்றன. சுதந்திரங்களும், ஆழங்களும் வெளிமுழுவது அர்த்தங்களைத் தேடியலைகின்றன. பாரவிக்கு தன் படைப்புகளின் வழியே நிகழும் அகம் சார்ந்த அல்லது சுயம் சார்ந்த இடப்பெயர்ச்சி தான் பிடித்த மானதாயிருக்கிறது. நீட்சி அவரது நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்வின் தொகுப்பு என்னும் அர்த்தங்களின் நீட்சியையும், தனிமையின் நெருக்கடிகளையும்,மௌனங்களின் ஆழங்களையும் […]
-முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன் ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய் சடா – ரென உன் முகத்தில் வீசினேன் கதறித் துடித்தாய் ஆ இவ்வளவு வல்லமை வாய்ந்தனவோ என் சொற்கள்..? பொறுக்கிச் சேர்க்கலானேன் செதுக்கிச் செதுக்கிக் கூர் செய்தேன் சொற்கள் விஷமேறின வலிமை கொண்டன ஆயுதமாயின கவசமாயின ஆளுமையில் நிலை கொண்டன வீசி வீசி எறியலானேன் அலறினான் அவன்.. நொண்டி ஓடினான் இவன்.. […]
தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை! தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார். அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் […]
நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும். தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய். எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான். வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் . சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன குடும்பமா வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான். காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் . நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும், குரூரமான […]