author

மக்களே! 

This entry is part 1 of 7 in the series 11 மே 2025

ஓடும் நதியில்தான்  எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி  எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில்.  யோனிக்கழுவ  ஒரு கை  நீர் போதும்  கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான்  யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட.  பூத்துக் குலுங்கும்  மலர்ச்சோலை  வருணப்பாக்களில்  கவிதை படுவதில்லை.  பாடும் வண்டும்  பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும்  அருவிகளும்  காலடிச்சுவடுகளில்  ஜாதகம் தேடுவதில்லை.  ஆணோ பெண்ணோ  அனைத்து மகிழ  காமதேவன் பாடலில்  கறுப்பு வெண்மை  நிறங்கள் இல்லை.  மனோரத தேரில் ஏறி  பயணம் […]

இதற்குத்தானா?

This entry is part 9 of 9 in the series 30 மார்ச் 2025

    ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி,  ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின்,  காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள்.  தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது . ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே.  இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை […]

ஓலைச்சுவடி

This entry is part 7 of 9 in the series 30 மார்ச் 2025

கைத்தவறி விழுந்த  காலத்தை தேடுகின்றேன்.  உங்களின் லாந்தரில்  இன்னும் கொஞ்சம்  வெளிச்சம் தெரிகின்றது  வீடோ காடோ எனக்கு வேண்டியது  கவிதை எழுத  கொஞ்சம் வெளிச்சம் ஒரு துண்டு நிலம்.  நான்  மில்டன் இல்லை, இழந்த சுவர்க்கத்தை மீட்க.  என்னிடம் கண்களில்  இன்னமும் பார்வை இருக்கின்றது  உதிக்கும் சூரியனைப்பார்க்க  மேகத்தோடு மோகம் கொள்ளும்  நிலவைப்பார்க்க.  நுனிப்புல்லில்  மிளிரும் பனித்துளிப்பார்க்க  வசந்தக்காலத்தின்  பரவசத்தைப்பார்க்க  உங்களின்  ஓலைச்சுவடி கவிதையும் வாசிக்க.   ஜெயானந்தன். 

இருட்டு 

This entry is part 6 of 6 in the series 23 மார்ச் 2025

இரா. ஜெயானந்தன் அவள்  அவனின் இருட்டை  சுமந்து சென்றாள்  பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா  வலி  இதயம் முழுதும்  ஊர்ந்து செல்ல  நான்கு கால்கள்  மிருகத்தை விட  கேவலமாக  பார்க்கப்பட்டாள்  சமூகப்பார்வையில்.  இருட்டில் மறைந்த  ஆணை பார்க்க  மீண்டும் அவள்  முயலவில்லை.  ஏனோ எல்லா  ஆண்களின் முகங்களிலும் காம விலாசம் பார்த்து  பயந்தாள் சிறுமி.  இருட்டைக்கண்டு  அலறினாள் அலறினாள்.  மசூதிக்கு சென்றார்கள்.  மாரியம்மன் கோயில்  பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள் பெண்ணை பெற்றவர்கள்.  சிறுமியின் கண்கள்  இருட்டைக்கண்டால்  […]

ஆடுகளம்

This entry is part 2 of 3 in the series 9 மார்ச் 2025

கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக  அசைத்துக்கொண்டு  உற்சாகத்தில்  துள்ளி குதித்தான்.  ம்…ம்…ஓடுங்கள். .ஓடுங்கள் என்று  விசில் அடித்தான்.  கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள் மேய்க்கவந்த  மலைச்சி  யாருமற்ற  மைதானத்தைப் பார்த்தாள்  கையசைத்து துள்ளிக்குதிக்கும் இவனைப்பார்த்தாள்.  அவளும் அவன் உற்சாகத்தில்  கலந்துக்கொண்டு  துள்ளிக்குதித்தாள்.  வறண்டுப்போன  மலச்சிக்கும்  மகிழ்ச்சி வந்தது.  கொஞ்ச நேரத்தில்  மனநல காப்பக வேனில்  அவனை ஏற்றினார்கள்  அவளையும் தான்.  மலச்சி  சத்தோஷமாக ஏறிக்கொண்டாள்.  எங்கிருந்தாலும்  […]

நன்றி

This entry is part 7 of 7 in the series 23 பிப்ரவரி 2025

உங்களிடமிருந்து  நான்  நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த  அன்பைத்தருகின்றீர்கள்.  மற்றவர்களின்  இதயத்தை திறக்க  சாவியைத்தருகின்றீர்கள்.  கள்ளத்தனங்களின்  கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள்  அறிவுப்பாதைகளின்  ரேகைகளில் ஒளிந்துள்ள  ஒளியை காண்பித்தீர்கள்.  தில்லுமுல்லு நிறைந்த  உலகைக்காண்பித்து  ஏமாந்த  எழுத்தாளர்களின்  கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள்.  பதிவிரதா தர்மத்தை காண்பித்து  கூடவே  பரத்தையர் தெருக்களில்  நுழைந்த  சீமான்களின் கதைகளையும் சொல்கின்றீர்கள்.  நாலு வர்ண தெருக்களை சொல்லி  நந்தன் கதையையும் சொன்னீர்கள்.  மிட்டு மிராசுகளின்  ஜல்லிக்கட்டு வண்டிகளையும் காட்டி  தாசிகள் சதைகளின்  சரித்திரத்தை சொல்லி  அழிந்து […]

துணை

புத்தகக்கடைக்கு  மனைவியையும்  அழைத்துச்சென்றேன்  வயோதிகத்தில்.  கோயில்,குளமோ போகாமல்  புதுமைப்பித்தனையும்  கி.ரா.வையும், பிரமீளையும்,  ஜெயகாந்தனையும் காட்டியவுடன்  மிரண்டுப்போய்,  மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு  வழிக்கேட்டாள்.  அந்த தெய்வம்  இங்கும் இருக்கின்றது  வா, வாங்கிப்படிக்கலாம்.  இனி  படியேறி, முருகனை அடையமுடியாது.  முட்டிவலி, முதுகுவலி,  கைக்கால் குடைச்சல்.  டிவி சீரியல் ஒருபக்கம்,  யுடியூப் மறுப்பக்கம்  பார்த்தது போதும்  படி  இந்த புத்தகங்களையும்  படி.  கடற்கரை காற்று  வீணாகப்போகின்றது  நட்சத்திரங்கள்  நடைக்கட்டி ஆடுகின்றது.  குடிசையில்  கோலமயில் பாடுகின்றது.  வண்ணமயமான வாழ்க்கை  இந்த  புத்தகங்களில் விரிகின்றது.  […]

வசந்தம் வரும்

This entry is part 1 of 11 in the series 16 பிப்ரவரி 2025

அப்போதுதான் வந்தமர்ந்த  புதுப்பறவையை பார்த்தேன்.  இணைக் காண சோகம்  பாடும் தேடலில் கண்டேன்.  எங்கிருந்தோ  வந்த  வண்ணத்துப்பூச்சி  பறவையின்  முகத்தில் அமர்ந்து சென்றது.  அது கொடுத்த  மகரந்த யாழின்  பாடலில்  பல்லாங்குழி வாசித்தது  புதிய பறவை.  தேடி  நிதம் சோறு தின்னும்  எறும்பின் உரசலில்  ஒய்யாரமாக ஆடியது பறவை.  கூடு விட்டு, கிளை வந்த காக்கையாரும்  ஒரு பிடி  அமாவாசை பருக்கைப்போட்டது.  கண்ணீரோடு  தின்ற  புதிய பறவை  தன்  பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டது.  வந்தமர்ந்த காகம்  […]

துணை

This entry is part 1 of 3 in the series 2 பிப்ரவரி 2025

எங்கோ  தலைசாய்த்து பார்க்கின்றது  சிட்டுக்குருவி.  துணையை தேடுகின்ற காலத்தில்  வேதனையை  முழுங்கிவிடுகின்றது.  ஒற்றைக்குருவியாய்  சுள்ளிகள் பொறுக்கி  கூடும் கட்ட  உடல் வேதனை.  மனம்  இன்னும்  துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில்  கொஞ்சி குலாவி  மகிழ்ந்து  உயிரோடு உயிர் கலந்து  சில்லிட்டுப்பறந்தன  ஜோடிக்குருவிகள்.  சிட்டுக்குருவியின்  ஏக்கத்தில்  என்  அக்கா  தடவிய  ஜன்னல் கம்பிகள்  தேய்ந்தே போயின  பல வருடங்கள்  துணைக்காக  காத்திருப்பு  வாழ்வின் பெரும் சோகம்.  ஜாதகக்கட்டில்  பல்லாங்குழி விளையாடினார்  புரோகிதர் சிகாமணி.  சர்ப்ப தோஷம்  செவ்வாய் […]

இலக்கியம் என்ன செய்யும். 

This entry is part 3 of 8 in the series 19 ஜனவரி 2025

ஜெயானந்தன்  வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம்.  இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும்.  ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள். நடுச்சாமத்தில் பாலுக்காக அழும் குழந்தையின் வாயில், காய்ந்த  முலையின் காம்புகள்.  கதவே இல்லாத வீட்டில், எதற்காக சாவி  தேடி அலைகின்றான் குடிகாரன்.  அநாதையாக விட்டுச்சென்றவனின்  கையில் கபால ஓடும், காவியும் எதற்கு? தப்பித்துக்கொள்ள, புத்த மடத்தையா தேடுவது.  சாமியார்தனங்களில், […]