ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு கதைச்சொல்லும் அதில் ஆனந்தமும் வரும் அழுகையும் வரும் எங்கோ தூரத்தில் தெரியும் வெளிச்சம் சிலருக்கு. அருகே வரும் சிலருக்கு. தினம்தினம் எழுந்து தினம்தினம் விழுந்து பயிரிட வந்துள்ளோம். காத்துக்கிடக்கும் காடும் மலையும் வனமும். நீ சம்சாரியாகவும் போகலாம் சந்நியாசியாகவும் மாறலாம் எல்லாம் ஒரு பெண் கையில் சக்தியாக காத்துக்கிடக்கும் வாழ்க்கை. […]
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த மொழியில் பேசின. காலாற நடந்து சென்று காட்டைக்காண முடியவில்லை. தொலைந்துப்போன வில்லைத்தேடி அர்ச்சுனர்களும் அழவில்லை. ஆகாயத்தை அண்ணாந்துப்பார்க்க அடுப்பங்கரை விடவில்லை. பெருங்காய டப்பாவில் எந்த கவிதையை தேட. ஒளவைக்கு என்னமோ அதியமான் கிடைத்தான். நெல்லிக்கனி கொடுத்தவள் முருகனிடம் முறையிட்டாள் திரும்பி வா! தமிழுக்கு உயிர் கொடு. கேட்டான் வேலவன் கிடைத்தது அருந்தமிழ் தவம். முருக்கப்ப […]
ஓடும் நதியில்தான் எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். யோனிக்கழுவ ஒரு கை நீர் போதும் கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான் யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட. பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை வருணப்பாக்களில் கவிதை படுவதில்லை. பாடும் வண்டும் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும் அருவிகளும் காலடிச்சுவடுகளில் ஜாதகம் தேடுவதில்லை. ஆணோ பெண்ணோ அனைத்து மகிழ காமதேவன் பாடலில் கறுப்பு வெண்மை நிறங்கள் இல்லை. மனோரத தேரில் ஏறி பயணம் […]
ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி, ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின், காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள். தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது . ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே. இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை […]
கைத்தவறி விழுந்த காலத்தை தேடுகின்றேன். உங்களின் லாந்தரில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தெரிகின்றது வீடோ காடோ எனக்கு வேண்டியது கவிதை எழுத கொஞ்சம் வெளிச்சம் ஒரு துண்டு நிலம். நான் மில்டன் இல்லை, இழந்த சுவர்க்கத்தை மீட்க. என்னிடம் கண்களில் இன்னமும் பார்வை இருக்கின்றது உதிக்கும் சூரியனைப்பார்க்க மேகத்தோடு மோகம் கொள்ளும் நிலவைப்பார்க்க. நுனிப்புல்லில் மிளிரும் பனித்துளிப்பார்க்க வசந்தக்காலத்தின் பரவசத்தைப்பார்க்க உங்களின் ஓலைச்சுவடி கவிதையும் வாசிக்க. ஜெயானந்தன்.
இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து செல்ல நான்கு கால்கள் மிருகத்தை விட கேவலமாக பார்க்கப்பட்டாள் சமூகப்பார்வையில். இருட்டில் மறைந்த ஆணை பார்க்க மீண்டும் அவள் முயலவில்லை. ஏனோ எல்லா ஆண்களின் முகங்களிலும் காம விலாசம் பார்த்து பயந்தாள் சிறுமி. இருட்டைக்கண்டு அலறினாள் அலறினாள். மசூதிக்கு சென்றார்கள். மாரியம்மன் கோயில் பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள் பெண்ணை பெற்றவர்கள். சிறுமியின் கண்கள் இருட்டைக்கண்டால் […]
கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக அசைத்துக்கொண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்தான். ம்…ம்…ஓடுங்கள். .ஓடுங்கள் என்று விசில் அடித்தான். கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள் மேய்க்கவந்த மலைச்சி யாருமற்ற மைதானத்தைப் பார்த்தாள் கையசைத்து துள்ளிக்குதிக்கும் இவனைப்பார்த்தாள். அவளும் அவன் உற்சாகத்தில் கலந்துக்கொண்டு துள்ளிக்குதித்தாள். வறண்டுப்போன மலச்சிக்கும் மகிழ்ச்சி வந்தது. கொஞ்ச நேரத்தில் மனநல காப்பக வேனில் அவனை ஏற்றினார்கள் அவளையும் தான். மலச்சி சத்தோஷமாக ஏறிக்கொண்டாள். எங்கிருந்தாலும் […]
உங்களிடமிருந்து நான் நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த அன்பைத்தருகின்றீர்கள். மற்றவர்களின் இதயத்தை திறக்க சாவியைத்தருகின்றீர்கள். கள்ளத்தனங்களின் கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள் அறிவுப்பாதைகளின் ரேகைகளில் ஒளிந்துள்ள ஒளியை காண்பித்தீர்கள். தில்லுமுல்லு நிறைந்த உலகைக்காண்பித்து ஏமாந்த எழுத்தாளர்களின் கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள். பதிவிரதா தர்மத்தை காண்பித்து கூடவே பரத்தையர் தெருக்களில் நுழைந்த சீமான்களின் கதைகளையும் சொல்கின்றீர்கள். நாலு வர்ண தெருக்களை சொல்லி நந்தன் கதையையும் சொன்னீர்கள். மிட்டு மிராசுகளின் ஜல்லிக்கட்டு வண்டிகளையும் காட்டி தாசிகள் சதைகளின் சரித்திரத்தை சொல்லி அழிந்து […]
புத்தகக்கடைக்கு மனைவியையும் அழைத்துச்சென்றேன் வயோதிகத்தில். கோயில்,குளமோ போகாமல் புதுமைப்பித்தனையும் கி.ரா.வையும், பிரமீளையும், ஜெயகாந்தனையும் காட்டியவுடன் மிரண்டுப்போய், மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிக்கேட்டாள். அந்த தெய்வம் இங்கும் இருக்கின்றது வா, வாங்கிப்படிக்கலாம். இனி படியேறி, முருகனை அடையமுடியாது. முட்டிவலி, முதுகுவலி, கைக்கால் குடைச்சல். டிவி சீரியல் ஒருபக்கம், யுடியூப் மறுப்பக்கம் பார்த்தது போதும் படி இந்த புத்தகங்களையும் படி. கடற்கரை காற்று வீணாகப்போகின்றது நட்சத்திரங்கள் நடைக்கட்டி ஆடுகின்றது. குடிசையில் கோலமயில் பாடுகின்றது. வண்ணமயமான வாழ்க்கை இந்த புத்தகங்களில் விரிகின்றது. […]
அப்போதுதான் வந்தமர்ந்த புதுப்பறவையை பார்த்தேன். இணைக் காண சோகம் பாடும் தேடலில் கண்டேன். எங்கிருந்தோ வந்த வண்ணத்துப்பூச்சி பறவையின் முகத்தில் அமர்ந்து சென்றது. அது கொடுத்த மகரந்த யாழின் பாடலில் பல்லாங்குழி வாசித்தது புதிய பறவை. தேடி நிதம் சோறு தின்னும் எறும்பின் உரசலில் ஒய்யாரமாக ஆடியது பறவை. கூடு விட்டு, கிளை வந்த காக்கையாரும் ஒரு பிடி அமாவாசை பருக்கைப்போட்டது. கண்ணீரோடு தின்ற புதிய பறவை தன் பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டது. வந்தமர்ந்த காகம் […]