author

உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை

This entry is part 6 of 26 in the series 13 ஜூலை 2014

தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை சேர்க்கும் நல்லதொரு படைப்பு முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை, 630562 9442913985     படைப்பு மனம் வேறுபட்டது. மற்ற மனங்களை விட அது மிகவும் மாறுபட்டது. நுழையாத வாசல்களிலும் அது நுழைந்து பிரிக்கமுடியாத இழைகளையும் அது பிரித்து சேர்க்க முடியாத சேர்மானங்களைச் சேர்த்து, தொடர்பற்றவற்றை தொடர்புபடுத்தி, தொடர்புடையவற்றைத் தொடர்பிலாததாக்கி படைப்பு மனம் செய்யும் புதுமை  காலகாலத்திற்கும் விரிந்து கொண்டே போகின்றது. முழுவதும் எழுதிவிட்ட வள்ளவருக்குப் பின் […]

மறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடு

This entry is part 6 of 19 in the series 6 ஜூலை 2014

  மறைமலையடிகளார் தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். சைவ சித்தாந்தக் கொள்கைகைளைப் பரப்ப இவர் சைவ சித்தாந்த மகா சமாசத்தை நிறுவினார். தன் வாழ்வில் நாற்பது ஆண்டுகள் துறவியாகக் கழித்த இவர் தமிழின்பால் கொண்டிருந்த பற்றைத் துறக்காதவர். இவர் இலங்கைக்குச் சென்று தமிழறிவு வளர்த்த பேரறிஞர் இவர் அறுபத்துநான்கு நூல்களுக்குமேல் படைத்தவர். இவர் முல்லைப்பாட்டிற்கும் பட்டிப்பாலைக்கும் ஆராய்ச்சி உரைகளை வரைந்துள்ளார். இவ்விரு உரைகளின் வழி  இவர் கைக்கொண்ட உரைமரபுகளை அறிந்துகொள்ள முடிகின்றது. […]

பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி., தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் ஊற்றுக்கண்கள். நம்பிக்கை வறட்சி ஏற்பட்டுவிடுகின்றபோது அனுபவ எழுத்து ஊற்றுகளே வாழ்க்கையை வளமாக்கும் அட்சயப் பாத்திரங்களாகி விடுகின்றன. அனுபவங்கள் மட்டும் வழிநடத்தினால் ஏராளமாய் எழுதலாம். […]

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. சிலப்பதிகாரம் முதன் முதலாக எழுந்தக் காப்பியம். இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கை அறங்கள் பற்றியும் சுவைபட காட்சி அடிப்படையில் படைக்கப்பெற்றுள்ளன. கண்ணகி, கோவலன் போன்ற தலைமைப் பாத்திரங்களின் வழியாகவும், ஐயை, மாதரி […]

முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப் பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை […]

காயா? பழமா?

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன். தமிழாய்வுத்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை. காயா? பழமா? …… விளையாட்டு விளையாடி இருக்கிறீர்களா. மிக அருமையான விளையாட்டு அது. காலால் கோடு கிழித்து மூன்றும் மூன்றும் ஆறு கட்டங்களை உருவாக்கி நொண்டி என்ற ஆட்டத்தைச் சிறுவயதில் ஆடியிருப்போம். அந்த ஆட்டத்தின் நிறைவில் தலையில் சில்லு என்ற உடைந்த பானையோட்டைத் தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டங்களைத் தாண்டவேண்டும். கட்டங்களைத் தாண்டும்போது கோட்டினைத் தொட்டுவிட்டால் காய். தொடாமல் கடந்துவிட்டால் பழம். எப்படியிருக்கிறது […]

புன்னகை எனும் பூ மொட்டு

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  தமிழர்தம் பண்பாட்டுப் பெருமை என்பது குடும்பவாழ்வில்தான் நிலைத்து நிற்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தமிழர் வாழ்வில் நிகழ்த்தி வருகின்றன அற்புதங்கள் பலப்பல. குடும்பம் என்பது கூடிவாழும் நடைமுறை. இது கணவன், மனைவி, மக்கள் அனைவரும் கொண்டும் கொடுத்தும் இன்புற்று வாழும் செயல்முறை. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. வாழ்க்கையின் எழுபத்தைந்து விழுக்காடு இந்தக் கற்பு சார்ந்த வாழ்க்கை முறையில் நடக்கின்றது. கணவன் மனைவியிடம் […]

சங்க இலக்கியங்களில் சமூக மதிப்புகள்

  தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தற்கால ஆய்வுகளில் குறிக்கத்தகுந்தது சமூகவியல் ஆய்வாகும். சமூகவியல் ஆய்வு என்பது அறிவியல் சார்ந்த அணுகுமுறையை உடையது. ‘‘சமூகவியல் என்பது அறிவியல்களின் தரவரிசை அடுக்கமைவில் கடைசியாக வருவதாகும். அறிவியல்களின் தரவரிசை என்பது கணிதத்திலிருந்து தொடங்கி, வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று அடுக்கடுக்காக உயர்ந்து இறுதியில் சமுகவியலில் முடிவதாக கோம்த் என்ற சமூகவியல் அறிஞர் கருதுகின்றார்’’.[1]சமூகவியல் என்பது அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஒழுக்கவியல் ஆகிய சமுக அறிவியல்களையும் […]

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

This entry is part 5 of 24 in the series 24 நவம்பர் 2013

தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் […]

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

This entry is part 23 of 34 in the series 10 நவம்பர் 2013

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை     மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம். இந்த உலகம் பூமி என்றழைக்கப்படுவதால் பூவுலகம் எனப்படுகின்றது. மக்கள் நிரம்பி வாழ்வதால் இதனை மக்கள் உலகம் என்று அழைக்கிறோம். ,மக்கள் உலகம், பூவுலகம் இவற்றையெல்லாம் விட மண்ணுலகம் என்று சொல்லுவதில்தான் பொருள் ஆழம் அதிகம். மண் தனக்குள் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது. […]