United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED

This entry is part 12 of 24 in the series 24 நவம்பர் 2013

United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED Von Sri Lanka Jetzt Petition von Sri unterschreiben! BACKGROUND: Shanmugampillai Jayapalan, famously known as VIS Jayapalan in the Tamil literary world, was born in Uduvil, Jaffna in north of Sri Lanka. He began his writing in the 70s while studying at the University of […]

காசேதான் கடவுளடா

This entry is part 10 of 24 in the series 24 நவம்பர் 2013

                             பல வருடங்களுக்கு முன்பு நான் ஹவாய்யி ( Hawaii ) என்ற ஒரு அருமையான ஆங்கில நாவல் படித்தேன். பெஸிஃபிக் மகா சமுத்திரத்தில் உள்ள அந்த பீஜித் தீவுகளில் ( Fiji Islands )ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து கரும்புத் தோட்டங்கள் நிறுவிய காலனித்துவ காலத்தின் பின்னணியில் அது எழுதப்பட்டிருந்தது. அப்போது அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய தென் சீனாவிலிருந்து சீனர்கள் கொண்டுவரப்பட்டனர் அந்த சீனர்களைப் பற்றி எழுதியுள்ள நாவல் ஆசிரியர், அவர்களிடம் ஊறிப்போன மூன்று குணாதிசயங்களைக் […]

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு

This entry is part 11 of 24 in the series 24 நவம்பர் 2013

– கே.சஞ்சீவ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம். வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன.  அம் மக்களின் முகங்களில் […]

சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8

This entry is part 21 of 24 in the series 24 நவம்பர் 2013

      [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்     படம் : 14 & படம் : 15 [இணைக்கப் பட்டுள்ளன] ++++++++++++++++++ படம் : 1 காட்சி ஐந்து லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு   இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை. பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், […]

கரிக்கட்டை

This entry is part 19 of 24 in the series 24 நவம்பர் 2013

  ’ மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி. நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள் மற்றும் வாயுக்களை உறிஞ்சிக் கொள்ள முடியும்’   சரிகா, பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வீட்டிற்கு பொடி நடையாக நடந்து வந்துகொண்டிருந்தாள். மனசெல்லாம் ஒரே பாரம் அழுத்தியபடி இருந்தது. ‘கரிக்கட்டை’ என்ற வார்த்தையை எத்தனை […]

நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்

This entry is part 24 of 24 in the series 24 நவம்பர் 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   (NASA’s GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon) (September 18, 2013) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A (Moon Images from NASA’s GRAIL Space Probes Mission)   நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் இதுவரை அறிந்தது ! கவிஞர் புகழ்ந்தது ஒன்றைத்தான். கலிலியோவின் கண் கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்தது  ஒரு நிலவைத் தான்! இருபத்தி ஒன்றாம் […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26

This entry is part 9 of 24 in the series 24 நவம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன கள்ளம் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? கட்டி வெச்ச கோட்டை இடிஞ்சுத் தரை மட்டமா விழுந்தாலும் பரவாயில்லை…ஆனா…. அவன் இப்படி ஒரு சாக்கடேல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டானே..நெனைக்க நெனைக்க ஆறாமல், சாட்சிக்காரன் கால்ல போய் விழறதுக்கு பதிலா சண்டைக்காரன் கால்லயே விழலாம்னு நினைச்சாளாம். நல்லவன் மனசுக்குள்ள கயவன் உட்கார்ந்துண்டு […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்

This entry is part 7 of 24 in the series 24 நவம்பர் 2013

அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு ஆடவன் தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வதற்காக அவளை கவர்ந்து செல்வதற்கு ஹரணம் என்று பெயர். ராக்ஷச மணம் என்பது இவ்வாறு விருப்பப்பட்ட பெண்ணை ஹரணத்தில் கவர்ந்து சென்று செய்து கொள்ளும் திருமணமாகும். தேசங்கள் தோறும் சமூக சட்டங்கள் மாறுகின்றன. இவற்றைக் கடந்து மனித […]

மருமகளின் மர்மம் – 4

This entry is part 2 of 24 in the series 24 நவம்பர் 2013

திடீரென்று தோன்றிய  அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள். ‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் நமக்கு உதவுவாங்க.  அவங்க அக்கா குடும்பம் மெட்ராஸ்லதான் இருக்கு.’ –  அப்போது கருணாகரனின் முகமும் மலர்ந்தது. ‘ரொம்ப நல்ல யோசனை, சகுந்தலா! மத வித்தியாசத்தால தாமோதரன் சாரைக் கட்ட முடியாம கன்னியாவே இருந்துட்டவங்க.  நம்ம விஷயத்தில அவங்க அனுதாபம் காட்டல்லேன்னா வேற யார் காட்டுவாங்க? வருஷா வருஷம் பெரிய லீவுக்கு மெட்ராஸ¤க்குப் போயிடுவாங்களே? இப்ப […]