ஸிந்துஜா சார்லஸ் எட்டாங் கிளாசுக்கு வந்த போது சாரா டீச்சரைப் பார்த்தான். அவள்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியை என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற பின் அவள் லீவிலிருந்து வந்த போது தெரிந்தது. சாரா டீச்சர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போதே லீவில் இருந்ததற்குக் காரணம் பள்ளி திறக்கப் பத்து நாள்கள் முன்பு அவளுக்குத் திருமணம் ஆயிற்று. பைரதி கிராஸில் இருந்த சி எஸ் ஐ சர்ச்சில்தான் திருமணம் நடந்தது என்று அவனுடன் படிக்கும் மைக்கேல் சொன்னான். அவனுடைய சித்தி […]
ஸிந்துஜா சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா, தேவமைந்தன், மெலட்டூர் நடராஜன் (யார் இவர்?) என்று பலர் (tamilhelp.wordpress.com) ! துப்பறியும் சாம்பு இன்னும் கண்டு பிடிக்காதது எப்போதும் குழப்பம் நிறைந்த இந்தக் கதை எழுதும் விவகாரம் ஒன்றுதான். ஆக ஒரு சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்கலாம் என்று […]
தமிழில் :ஸிந்துஜா முன்னோட்டம்: இருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக் கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைத்தார்.. 1960களில் நாடறிந்த மனிதராக எழுச்சி பெற்று நடமாடினார். அவர் காலத்துக்கு முன்னால் கண்டிராததும், மேதைமை மிகுந்ததுமான படைப்புகளை உருவாக்கினார். எழுத்தை நம்பி வாழ்க்கையை நடத்திய மிகச் சில கறுப்பினக் கவிஞர்களில் அவரும் ஒருவர். நாவல்கள். நாடகங்கள்.சிறுகதைகள்.திரைப்படங்கள், இசை, மழலையர் பாடல்கள், மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள் […]
ஸிந்துஜா பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும் மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில் மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி. கம்பனியில் சூப்பர்வைசராகச் சேர்ந்து கடந்த பத்து வருஷத்தில் அவன் இந்த இடத்தை அடைந்திருந்தான். இன்று நடக்கப் போகும் நேர்காணலில் ஐந்து இடங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். வெளியே ஏழு பேர் காத்திருந்தார்கள். அவன் தேர்வுக் குறிப்புகள் அடங்கிய முதல் கோப்பை […]
மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித மனத்தைச் சீண்டுகிறது. இதன் செல்வாக்கு ஆண் பெண் உறவுகளின் நிலைப்பாட்டில் தீவிரம் கொள்ளும் போது ஏற்படும் காயங்கள், வலிகள் உறவின் உன்னதத்தைச் சீரழிக்க முனைகின்றன. குறிப்பாகக் குடும்ப உறவுகளில் இயங்கும் கணவன் மனைவியிடையே அவர்களது அன்னியோன்னியம் அல்லது பிளவுபடுதலில் முக்கியத் துவம் பெறுகிறது. நான் […]
ஸிந்துஜா சாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. நாலு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப், ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு ஸ்தாபன ஹாப்காம்ஸ், ஒரு நர்சரி, மங்களூர் பட்டர் நடத்தும் ஸ்நாக் பார், ஒரு டெய்லரிங் ஷாப், இரண்டு மருந்துக் கடைகள், மினி பல்பொருள் அங்காடி ஒன்று, டாக்டர் லலிதா என்று பெயர்ப் பலகை தொங்கிய விஷ்வாஸ் கிளினிக், மேலே கணினி நிலையம், கீழே ஜெராக்ஸ் கடை, ஒரு மட்டன் […]
ஸிந்துஜா நான் பொதுவாக யாரையும் போய்க் கட்டிக் கொள்ள மாட்டேன். அதே சமயம் கைகுலுக்க வருபவரின் கைகளைக் குலுக்குவதில் எந்தவிதத் தயக்கமும் ஏற்பட்டதில்லை. எனக்குப் பிடித்தவர்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும், என்னைத் தேடி வருபவர் களிடத்திலும்தான் நட்பு தோன்றியிருக்கிறது. எண்ணிக்கையில் இது குறைவாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. எதற்காக இந்தப் பீடிகை? இன்று அழகியசிங்கரின் ஒரு கதையைப் படித்தேன். மிகவும் உற்சாகமடைந்தேன். அழகியசிங்கர் என் சிறிய நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர். அலட்டல் இல்லாத மனிதர். அவருடைய கட்டுரைகளில் ‘தெரியாது’ […]
தமிழில்: ட்டி.ஆர். நடராஜன் இரக்கம் பால் லாரன்ஸ் டன்பர் அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் காயமுற்ற அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு – கதவுக் கம்பிகளில் அதன் படபடப்பு – எக்களிப்போ மகிழ்சியோ அல்ல வெளிவருவது . இதயத்தின் ஆழத்திலிருந்து அது இறைஞ்சுகிறது : சொர்க்கத்தை நோக்கி மேலே என்னைப் பறக்க விடு. அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வருகையில் பில்லிஸ் வீட்லி கருணை என்னை அந்தக் காட்டிலிருந்து கூட்டி வந்தது. வெளிச்சம் […]
ஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஒரங்கள் விமர்சகர்களின் வரைபடக் கோடுகளை ஒட்டி வராமல் துரத்திக் கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அதுவே வடிவமாகி விடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்… வாசகனை நிமிர்த்தி உட்கார வைக்கும் அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது” என்று “இலக்கிய வட்டம்” ஜூலை 1964 இதழில் எம் .வி. வெங்கட்ராம் பற்றி தி. ஜானகிராமன் எழுதுகிறார். இந்த வரிகளில் காணப்படும் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வெங்கட்ராம் தன் எழுத்தில் நிதானமாகவும் அழுத்தமாகவும் ஸ்தாபித்திருக்கிறார், அவரது அறுபது வருஷ இலக்கிய வாழ்வின் பரிபூரணத்தை அவரது கதைகளில் நாம் காணமுடிகிறது. இதற்கு முன்பு “நிதானம்” என்று ஒரு […]
பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும் ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம். விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். ரசமெல்லாம் கச்சிதமாகத்தான் இருந்தது. அவர்கள் காணவிரும்பிய தோற்றத்தைத்தான் அது காண்பிக்கவில்லை. (நி)தரிசனம் ஜில்லென்ற புல்வெளியில் காலை அழுத்தித் தேய்த்து நடந்தான். ‘ஆஹா, என்ன சுகம்’ […]
பின்னூட்டங்கள்