ஆணவசர்ப்பம் ___________________ தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று... அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என் கையில்தான்.... ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது... எனக்குள்ளே இருந்த சர்ப்பமும்…
கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும்…
கோவிந்த் பகவான் மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கண்டிருக்கிறது…
ஆர் வத்ஸலா அலுத்து தான் போய் விட்டது எனக்கு ஆண்டுகள் ஆகியும் தினமும் ஞாபகக் குப்பையை கிளறி என் மனம் அவன் தொடர்பான ஏதாவது ஒரு சோக சம்பவத்தை நினைவு கூறுவது என் செய்வேன்?…
ஆர் வத்ஸலா பல்லியை நம்பி வாழ்கிறான் அவன் ஏதோ ஒரு நப்பாசையில் முன்பு அப்படி இல்லை காத்துக் கொண்டிருக்கிறான் என்றாவது அது தன் தலையில் விழும் என்று உச்சந்தலையில் விழுவது அசாத்தியம் ஆகவே…
வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத் தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும் இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண். கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது.…
வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும் சுருள் புகையும் எப்படிச் சுற்றிச் சுற்றி அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில் என் காலை மிதிப்பது தெரியாமல்…
கோவிந்த் பகவான் பொம்மைகளைக் கொண்டாடி மகிழும் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது நாம் நம்மீது கொண்டது அழுக்கடர்ந்து சட்டை கிழிந்தலையும் பைத்தியத் தனமாய் இருக்கிறது காலம் நம்மீது கொண்டது நான் உன்னை அன்பு செய்கிறேன் என…
கோவிந்த் பகவான் நீங்கள் யாரென்றே தெரியாத என்னிடம் தானாய் வந்து கைக்குலுக்கி உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர் சுய புராணத்தை புகழ விட்டீர் தோள்மீது கை போட்டு உடன் வந்தீர் சூடாய் தேநீர்ப்பருக கூட்டிச்சென்றீர் கோப்பையின் வெதுவெதுப்பாய்ப்…
ஆதியோகி நிழல்களைப்பாதிப்பதேயில்லை,நிஜங்களின்உணர்வுகள்...!***நிர்வாணம் என்கிறஒற்றை நிஜத்தைமறைப்பதற்குத்தான்விதவிதமாய்எத்தனை ஒப்பனைகள்...!***என்னதான் கடந்துவந்துவிட்ட போதிலும்அவ்வப்போதுஉணர்வுகளின் ஊடாய்முகம் காட்டி விட்டுத்தான்போகின்றன,முந்தைய பல பரிமாணங்கள்...! - ஆதியோகி +++++++++++++++++++++++
கோவிந்த் பகவான் வேலி சலசலக்க முன் விரைந்தோடுகிறது ஓர் அணில் அதன் அடியொற்றி பின் துரத்துகிறது மற்றொன்று வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும் படர்ந்திருக்கிறது அன்றலர்ந்த பூக்கள். -கோவிந்த் பகவான்