சந்திரா மனோகரன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டில் இருந்து வரும் இதழ். மூன்று வரிக் கவிதையோடு பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட அட்டை ஒரு ரிச் லுக்கைக் கொடுக்கிறது. கல்லூரி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள், பள்ளி ஆசிரியர்கள் எழுதிய போட்டியில் பரிசு பெற்ற கதைகள் எனபயணிக்கிறது இதழ். கவிஞர் அமரன் எழுதியுள்ள ஹைக்கூ ஒப்பியல் ஒரு பயனுள்ள பகுதி. இந்தப் பகுதியின் விசேசமே, இது அமரன் எழுதிய ஹைக்கூக்களால் நிரம்பி விடாமல் பாஷோ போன்றோர் எழுதிய ஹைக்கூகளால் […]
1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? மாமியார் இறந்து ஒரு வருடம் ஆயிற்று. வருஷாப்தீகத்துக்காக மனைவியுடன் தில்லியிலிருந்து திருமுல்லைவாயிலுக்கு வந்திருந்தேன். திரும்பி தில்லி போக வேண்டும். சென்னையில் மனைவியின் அக்கா பெண் வீட்டில் சில நாட்கள். எனக்கு ஏதோ தூரத்து உறவினர் என்பதை விட சினேகிதம் தரும் நெருக்கம் அதிகம் அவர்களுடன். கொஞ்ச நாட்களாக தனக்கு ஒரு வீட்டு மனை இருப்பதாகவும் […]
ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன […]
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?! சுற்றி நின்றவர் சிரித்தனர். மகிழ்ச்சியாலா அல்லது அவர்கள் போராட்டத்திற்கு ஓர் கூட்டாளி வந்துவிட்டான் என்பதாலா?! நாம் இலக்கியம் படைக்கும் பொழுதே வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்திருக்கின்றோம். மனிதனின் வளர்ச்சியையும் அப்படியே பிரித்துப் பார்ப்பதே சிறந்தது. குழந்தையின் […]
பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள் இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் பல பெரியார்களின் பெயர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருபெருங் கவிஞர்களின் வாழ்வில் பங்கு கொண்ட அத்தகைய பெரியார்களின் வாழ்வு வாராற்றுச் சுவடுகளாக அமைந்து அவ்வக் கால வரலாற்றை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளன. மகாகவியின் வரலாற்றோடு பல பெரியார்களுடைய பெயர்கள் இணைந்துள்ளன. அவர்கள் பல துறைசார்ந்த பெருமக்களாவர். அவர்களுள் சிலர் பாரதியின் கவிதையாக்கத்திற்கு ஊக்கம் நல்கினர். சலர் […]
என் செல்ல செல்வங்கள் – பதிவர் துளசி கோபால் அவர்களின் புத்தகம். எழுதுவதற்கு விஷயங்கள் எத்தனை எத்தனை உள்ளன ! தான் வளர்த்த செல்ல பிராணிகள் குறித்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணத்துக்கு முதல் வணக்கம் ! சிறு வயதில் வளர்த்த மணி வாத்து நீரில் மூழ்கி இறந்ததில் துவங்குகிறது பயணம். கிட்ட தட்ட 19 வளர்ப்பு பிராணிகள். நாய்கள், புறாக்கள், பூனைகள் என.. ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு புத்தகத்தில் முதல் […]
புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும். மனிதனின் வாழ்க்கையில் பல பருவங்கள் அவன் உருவாகும் காலத்தில் பிள்ளைப் பருவம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. உடல் மற்றும் மனம் வலிமை பெறுவது இக்காலத்தில்தான். மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இப்பருவத்தினைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கும் விளையாடு வதற்கும் மட்டுமல்ல. மனிதன் பொறுப்புடனும் அக்கறையுடனும் பாதுகாக்கப்பபட வேண்டியது , குழந்தைப் பருவம், சிறுவர்களாக இருக்கும் காலம். இவைகளில் கவனம் செலுத்தும் […]
அன்று 1949 = வருடத்திய ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தின் ஒரு நாள் முற்பகல். தேதி 27 அல்லது 28 ஆக இருக்கவேண்டும். எது என்று நிச்சயமாக நினைவில் இல்லை. ஜெம்ஷெட்பூருக்குப் போகவேண்டும். வழியில் சென்னையில் கழித்த முதல் முற்பகல் அது. ஜெம்ஷெட்பூரில் இருக்கும் மாமா எழுதியபடி சாயந்திரம் செண்டிரலில் இருந்து புறப்படும் கல்கத்தா மெயில் ஏறவேண்டும். காரக்பூர் வரை. ஒரு நாள் விட்டு மறு நால் காலை கார்க்பூர் போகும். பின் அங்கிருந்து பம்பாய் மெயிலில் […]
அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான் அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி […]