வெலிகம ரிம்ஸா முஹம்மத் உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த […]
ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கில், இரண்டு அமர்வுகளுடன் நடைபெற்றது மேற்சொன்ன விழா. காலை பத்து மணிக்கு க.நா.சுவின் மாப்பிள்ளையான பாரதி மணி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். மெல்லிய நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கட்டுரையை வாசித்தார் மணி. இந்திரா பார்த்தசாரதி தில்லி நினைவலைகளில் மூழ்கினார். முதல் அமர்வில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் பணி புரியும் தமிழவன் மற்றும் முனைவர் பஞ்சாங்கம் கலந்து கொண்டனர். தமிழவனின் உரை பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. […]
பாஸ்கர் லக்ஷ்மன் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி […]
எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும் எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும். ஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை […]
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாதீர் வையக்கு அணி இரு செய்திகளைப் பதிவு செய்யவே இத்தொடர் தொடங்கப்பட்டது வெறும் செய்திகளை மட்டும் கூறுதல் அந்தச் செயல்பாடுகளின் வலிமை தெரியாமல் போகும். அரசு எடுக்கும் எந்தத் திட்டமும் மக்களுக்காகத்தான்.. அதாவது நமக்காக. செலவழிக்கப்படும் நிதியும் நம்முடையது. எனவே முழுமையான பலன் கிடைக்க நம்முடைய பொறுப்புகளையும் எழுத வேண்டி வந்தது. சில எடுத்துக் காட்டுகளுடன் விளக்கம் தரப்பட்டது. இப்பொழுது தொடரைத் தொடரலாம். குழந்தைகள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைப் […]
மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது. சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை. வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களும் பறவைகளும் மனித வாழவியலில் வேரூன்றி, சமுதாயச் சூழலில் செல்வாக்குக் கொண்டு, பயனுடைய பாடல்கள் பலவற்றை மகா கவியும், மக்கள் கவியும் படைத்தார்கள். தனக்காக மட்டுமே எழுதிக் கொண்ட தன்மைக் கவிஞர்களாகாது, தம் கவிதைகள் அனைத்தையும் பிறருக்காகப் படைத்தவர்கள் இக்கவிஞர்கள். வோழும் உயிர் அனைததையும் தானாகக் கருதிய உயிரொருமைப்பாட்டு உணர்வினர் கவிஞர்கள் என்பர். இத்தகைய உணர்வால் பாரதியும் பட்டுக்கோட்டையும், மனித வாழ்வின் ஏற்றங்களைப் பற்றி சிந்தித்த […]
படிக்கிறோம் என்று எழுதுபவர் பலருண்டு… படிப்பார்கள் வேறுவழியில்லை என்று எழுதுபவரும் பலருண்டு… எழுதுவோம் , படிப்பார்கள் என்ற நிலையிலும் பலர் உண்டு. ஆனால், எழுத்தை தங்களது எண்ணங்களின் ஊற்றாய், காட்டாறாய், நதியாய், ஆறாய், வாய்க்காலாய் கொண்டு மனங்களில் பெரும் உணர்ச்சி பிரவாகத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு இலக்குகூட இன்றி … ஆனால் அப்பேற்பட்ட அற்புத மனநிலையை பலருக்கு தரக்கூடய எழுத்துக்களை மிக மிக சிலரே எழுதுகிறார்கள். தமிழில், கதைக்களம், கதாபாத்திரங்கள் , வர்ணனை, வசனம் தாண்டி மனோத்த்துவ, […]
மரபுக்கவிதைகள் 1950களில் அமோகமாக வளர்ச்சியுற்றது. பாரதியின் தாசனான பாவேந்தர் தனது விருத்தப் பாக்களால் தனது குருநாதரைவிட சொல்லாட்சி, கவிநயம் காரணமாய் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தார். அவரைப் பின்பற்றி ஒரு இளைஞர் பட்டாளமே அவரது பாணியில் எழுதிக் குவித்தார்கள். அவர்களை ‘பொன்னி’ இலக்கிய இதழ் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்று தலைப்பிட்டு அறிமுப்படுத்தியது. கவிஞர் வாணிதாசனும், மு.அண்ணாமலையும், பொன்னடியானும், பெரி.சிவனடியானும் மற்றும் பலரும் அதன்மூலம் பிரபலமானார்கள். அந்த பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர்களில் இன்னும் சிலர் அதே பாணியில் […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது. யுத்தம் விழுங்கிய அத்தனை அப்பாவி உயிர்களுக்காகவுமே இந்த நூலைக் கவிஞர் சமர்ப்பணம் செய்துள்ளார். […]