நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்

This entry is part 6 of 9 in the series 18 ஜூன் 2023

துயர் பகிர்வோம்: நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன். இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது. கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன்,  மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை […]

ஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்

This entry is part 5 of 9 in the series 18 ஜூன் 2023

தேனிசீருடையான் சொல்லப்படாத கதைகள். ஜனநேசன். பாரதி புத்தகாலயம். பக்கம் 92. விலை 110/ முதல் பதிப்பு டிசம்பர் 2022 நூல் அறிமுகம்.  எளிய மனிதர்களைப்பற்றிய எளிமையான கதைகள். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடு ரத்தமும் சதையுமாய் எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. எல்லாமே சின்னஞ்சிறு கதைகள். 1980களில் ஆனந்தவிகடன் வார இதழ் சின்னஞ்சிறு கதைகளுக்கான போட்டியை நடத்தியது. முக்கியப் படைப்பாளிகள் பலரும் இரண்டு அல்லது மூன்று பக்க அளவில் சின்ன வடிவில் கதைகள் எழுதினார்கள். போன்சாய்த் தாவரங்கள் போல அவை சின்ன […]

ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள் 

This entry is part 11 of 11 in the series 11 ஜூன் 2023

கோபால் ராஜாராம்  ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது. ‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த […]

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா

This entry is part 9 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஆரம்பகால உறுப்பினரும், தற்போதைய செயலாளருமான எழுத்தாளர்; அ. முத்துலிங்கம் அவர்கள் நேரடியாக இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அமைப்புத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த நிகழ்வுக்காக எனக்கு அவர் வருடாவருடம் அழைப்பிதழ் அனுப்பிவிட்டுத் தொலைபேசியிலும் அழைத்துச் சொல்லுவார். இம்முறை அவர் அழைத்த போது நான் குறோசியாவில் இருந்தேன், […]

பாவண்ணனின்  நயனக்கொள்ளை

This entry is part 3 of 14 in the series 28 மே 2023

எஸ்ஸார்சி  பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின் சிறுகதை குறித்து பதிப்பகத்தார் தரும் சில செய்திகள்.’கைவிடப்பட்ட எளிய மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இணைக்கப்பட்டவர்களே. அந்த இணைப்பின் கண்ணிகளைத்தேடித்தேடி காட்சிப்படுத்துவதில் பாவண்ணனின் சிறுகதைகள் முன்னிலைபெறுகின்றன.’ ‘கடுமையான துயரங்கள் மிகுந்த சூழல்களிலும்கூட ஒரு துளி […]

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

This entry is part 11 of 12 in the series 21 மே 2023

கவிஞர்.திரு.அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும் நுட்பங்களை நூல்கள் தான் செய்கின்றன. கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், ரூசோ, ரஸ்கின் போன்றவர்களின் நூல்களை அந்த வரிசையில் வைக்கலாம்.இருப்பதற்காக வருகிறோம் இல்லாமலேயே போகிறோம் என்பதை உடைக்கும் வகையில் தங்களின் படைப்புகளால், காலத்தை பின்னுக்கு […]

வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

This entry is part 3 of 12 in the series 21 மே 2023

“நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள் ஆவுது. கல்யாணம் ஆனப்போ… எனக்கு முதல் மனைவி தமிழ்தான். அப்புறம்தான் எல்லாமும்னு சொன்னார். அப்ப ஏன் என்ன கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்டேன். என் தமிழ்ப்பணிக்கு நீ எப்பவும் துணையா இருக்கணும்னு சொன்னார். அதிலிருந்து நான் அப்படித்தான் இருந்துகிட்டு வர்றேன்.”வளவ. துரையன் அய்யாவின் தமிழ்ப்பணிக்கு, இதைவிட ஒரு நற்சான்றிதழை யாரும் தந்துவிட முடியாது.நடப்புக் காலத்தில் […]

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

This entry is part 11 of 12 in the series 14 மே 2023

முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா (சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை) குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். ‘அணையா தீபம்’ என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், […]

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

This entry is part 7 of 12 in the series 14 மே 2023

22.04.2023 அன்று கடலூரில் நடைபெற்ற திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய அயல்வெளிப் பயணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இப்புத்தகம் திறனாய்வு செய்யப்பட்டது. அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும் நுட்பங்களை நூல்கள் தான் செய்கின்றன. கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், […]

வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….   

This entry is part 3 of 9 in the series 7 மே 2023

எஸ்ஸார்சி வளவதுரையன் என்றும்  மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள்  சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர். கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள்.பதிப்பகத்தார் வளவதுரையன் பற்றித்தரும் குறிப்பு நிறைவாக வந்திருக்கிறது. கடலூர் கவிஞர் அன்பன் சிவா.  கவிஞர் அவருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பித்து இருக்கிறார். என்னுரையில்  வளவதுரையன் கம்பனின்  ‘ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப்பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் […]