உறக்கமற்ற இரவு

This entry is part 31 of 53 in the series 6 நவம்பர் 2011

நம் சந்திப்புகளின் கோர்வையை எளிதாக சொல்லிவிட முடிகிறது இந்த காலத்திருக்கு . உன் புன்னகையின் உலா வீற்றிருப்பதை இந்த மாலையும் மயங்கி கிடக்கிறது . நம் இரவினையும் விட்டு வைக்கவில்லை நினைவுகள் மவுன மன ஒலிகளை கடத்துகிறது உன்னிடமாகவும் என்னிடமாகவும் இரவு ஓய்ந்து விட்டிருக்கிறது . உன்னிடம் சொல்வதற்காக விட்டு வைத்திருக்கிறது விடியல் அவை ஒவ்வொன்றாக பட்டியலிட்டிருக்கிறது உறக்கமற்ற இரவுவின் நம் கனவின் மீதங்களை . இதற்காகவே அன்றும் பிரபஞ்சம் இருந்திருகின்றது . -வளத்தூர் தி .ராஜேஷ் […]

நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்

This entry is part 30 of 53 in the series 6 நவம்பர் 2011

எனது தேவைக்கென பிரதிகள் எடுத்துக்கொள்ள வசதியாய் நெகட்டிவ்கள் சேமித்து வைக்கிறேன் பிறர் அவ்வளவு விரைவில் அறியாவண்ணம் அவற்றைப் பெட்டகத்தினுள் சேமித்து வைக்கிறேன். அந்த நெகடிவ்வின் அருகில் புதிதாக எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்வை வைத்து நோக்கும் போது இன்னும் பொலிவுடன் நெகட்டிவ்வே பரிமளிக்கிறது எத்தனை பாஸிட்டிவ்கள் உண்டாக்கப்படினும் நெகட்டிவ்வில் உள்ள பூதம் போன்ற பிம்பமே மனதில் பாசி போல் படிந்து கிடக்கிறது. நாட்கள் கடந்து போவதால் நெகட்டிவ்களின் மேல் உண்டாகும் சிறு கறைகள் மேலும் அதன் மீதான ஞாபகங்களை வலிய […]

இயலாமை

This entry is part 29 of 53 in the series 6 நவம்பர் 2011

தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின் பின்னிரவு பொழுதில் மூன்றாம் வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம் ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால் யாருக்கோ மோசமான உடல்நிலை திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர ஜன்னலை சாத்தி போர்வையை இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம் ரெண்டு நாளாச்சு அவருக்கு என்ன ஆச்சு யாரவது சொன்னால் தேவலை. ********** அ.லெட்சுமணன்

நிலத்தடி நெருடல்கள்

This entry is part 28 of 53 in the series 6 நவம்பர் 2011

புதை குழி புகுந்த பின்னரும் உயிர்த்தலின் பாவனைகள் நெஞ்சு தேக்கி வைத்திருந்த தாத்தாவின் ஆவலாதிகளை யார் தீர்ப்பார்கள் எனும் தீர்மானத்துள் மூழ்கித் தவிக்கும் வேர்களிடம் தொடங்குகிறது அவரின் முதல் குற்றச்சுமை அனுபவித்த உலகின் பொக்கைவாய் பொய் பூசிய வெற்றிலை பாக்கு மென்று துப்பியிருந்ததென்று உவகையின் கைக்கோல் இடரும் களமாகத்தான் உலவிக் கொண்டிருக்கும் ஊமை நிழல்கள் என்று வயோதிகக் கனவுகள் வன்மை உபாதைகள் சுமக்கச் செய்தனவென்று பார்வையின் மாயை புரைவிழுந்து நவீனங்களின் காட்சி மங்கலாய் புராதானத்திரையில் மெழுகியிருந்ததென்று ஒன்று, […]

நீவிய பாதை

This entry is part 23 of 53 in the series 6 நவம்பர் 2011

பிறர் நிர்ப்பந்தித்த பாதையில் பலவீனமாய் பாதம் பதிக்கையில் முளைத்தது முதல் கோணல். அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும் தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக… முற்றும் கோணலாகும் துற்சம்பவம் தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்.. பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக. ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த நீவி நேராகிறது புதிய பாதைகள்.. -சித்ரா (k_chithra@yahoo.com)

மீண்டும் முத்தத்திலிருந்து

This entry is part 22 of 53 in the series 6 நவம்பர் 2011

நீ யாராக மாற விருப்பம் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். நான் புலியாக வீரத்தின் சின்னமாக ஆணின் ஆகுருதியாக… நான் தென்றலாக பூவாக எங்கும் உலாவி… ஆடை களைந்து ஆடிய ஆட்டத்தில் உடம்பு சோர்ந்து விடவில்லை என் பிரிய மீனே என்று கொஞ்சினான் என் பிரிய காற்றே என்றாள் அவள். உடம்புகள் பிரிந்து தனித்தனியாக்க் கிடந்த போது புலியாக இருந்த்தாக அவன் சொன்னான். இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட. நானும் தென்றலாக உலவி வந்தேன் அப்புறம் புறாவாகவும், காடையாகவும் […]

சிலர்

This entry is part 21 of 53 in the series 6 நவம்பர் 2011

சிறிய நைலான் கயிறு போதும் வாழ்விலிருந்து விடுபட யாரோ வாங்கிக் கொடுத்த சேலையிலா விதி முடிய வேண்டும் வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்காது தப்பிப்போவது விடுதலையாகாது குரல்வளை நெரியும் போது நினைத்துப் பார்த்தாயல்லவா வாழ்ந்திருக்கலாமே என்று மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கவே வேண்டாம் உன்னைப் போன்றவர்களுக்காகத்தானே கடவுள் இருக்கிறார் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சமமாய் பாவிக்க கற்றுத்தரவில்லையா உனக்கு வரவிருக்கும் வசந்தகாலத்தை நினைத்து இலையுதிர்க்கும் மரத்திடம் கற்றிருக்கலாமே வாழ்க்கைப் பாடத்தை தற்கொலையின் மூலம் எந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க […]

என் பாட்டி

This entry is part 20 of 53 in the series 6 நவம்பர் 2011

சித்தி சித்தப்பா அத்தை மாமா எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள் எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார் சர்க்கரை அளவு கேட்டபின் அவர்களுக்குக் காப்பி சீடை தருவார் பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள் காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பார் ஓமவல்லி, துளசி வேம்பு கீழாநெல்லி எல்லாம் கொல்லையில் வளரும் பாட்டியின் பிள்ளைகள் ஈரம் அறிந்து தண்ணீர் விடுவார் தலைவலி காய்ச்சல் என்றால் ஒருகையில் கசாயம் மறுகையில் அரிசியுடன் பாட்டிதான் வருவார் பாட்டியின் சேலைத் துண்டில்தான் இட்டலி வேகும். […]

நிரந்தரமாய்…

This entry is part 19 of 53 in the series 6 நவம்பர் 2011

வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு வீதியில் நிற்கும் ஒருவன்.. கரையான் புற்றில் கருநாகமாய் ஒருவன்.. கல்லை அரிசியில் கலப்பவன் ஒருவன்.. வாங்கிக் கடித்து பல்லை உடைப்பவன் ஒருவன்.. ஏழுகோடி பரிசென எஸ்எம்எஸ் அனுப்ப ஒருவன்.. ஏமாந்து இருப்புப் பணத்தையும் இழப்பவன் ஓருவன்.. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்பவன் ஒருவன்.. வாங்கி ஒன்றுமே இல்லாமல் போய்விடும் ஒருவன்.. இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை…! ஏமாற்றுபவன்.. ஏமாறுபவன்.. இரண்டும் மனிதன்தான், இரண்டும் நிரந்தரம்தான்…! -செண்பக ஜெகதீசன்…

நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்

This entry is part 17 of 53 in the series 6 நவம்பர் 2011

– எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது வறண்ட பொட்டல்வெளிதான் நாளைகளில் மாற்றங்கொள்ளுமென்றதும் வணங்கிவிட்டு திரும்பினீர்கள் குறைச்சலான காலத்திற்குப் பின் மீண்டும் பொய்களோடு வருவோம் நீங்களும் ஆசைகளோடு பின்தொடர்வீர்கள்…