ஏ. ஹெச். ஜாபர் உல்லா The curse of Hila marriage By A. H. Jaffor Ullah ஒரு சமூகத்தை ஆராயவேண்டுமென்றால், அதன் உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கையை நுணுகிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களது சமூக பழக்க வழக்கங்களை பார்க்க வேண்டும் என்று யாரோ ஒரு ஞானி சொன்னார். சமீப காலங்களில், கிராமப்புற பங்களாதேஷின் கிராமப்புறங்களில் நடக்கின்றவற்றை பார்த்தபின்னால், நமது சமூகத்தில் இருக்கும் தீய சமூகப்பழக்க வழக்கங்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாதே என்று வெட்கப்படுகிறேன். வெட்கத்தால் என் முகத்தை […]
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இயற்கையான இயல்புகளும் இடையில் மனிதனே விதித்த சில விதிகளூம் ஒன்றிணைந்து இயங்குவது வாழ்வியல் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்புடைத்தே என்ற இலக்கணக்கோடும் வரைந்து கொண்டோம். மனிதன் உணர்வுகளால் ஆன ஓர் பிண்டம். யானையை அடக்க முடிந்தவனுக்கு அவன் மனத்தை தனக்குள் ஆளுமைப் படுத்துவது கடினமான செயலாக இருக்கின்றது. மனிதனின் அமைதிக்கு அறியாமை தேவையா அல்லது அறிவு சிறந்ததா? அறிவினால் ஒவ்வொன்றையும் கூறுபோட்டு பார்த்துக் கொண்டே போகையில், […]
அது 1964-ஓ அல்லது 1965-வது வருடமாகவோ இருக்கவேண்டும். சரியாக நினைவில் இல்லை. உயர் அதிகாரிகளுடன் எனக்கு எப்போதும் ஒரு உரசல், ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்கும். அது எனக்கோ அதிகாரிகளுக்கோ பொறுத்துக் கொள்ளும் அளவில் இருந்தால் சரி. பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் எனக்கு அந்த இடத்தை விட்டு மாற்றல் கட்டளை பிறந்து விடும். மாற்றல் தான் நிகழுமே தவிர அலுவலக வாழ்க்கைக்கு உலை வைக்கும் தீவிர நடவடிக்கை ஏதும் இராது. இருந்ததில்லை. என் […]
தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது. “பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்” மற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய “கலிங்கத்துப் பரணி”யில் காணப்படுகிறது. “செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச் சிமய […]
[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது] பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும், எந்த அளவிலும் உண்டாகலாம். பார்வையின்மையின் அளவையும், வாழ்வில் அது உண்டாகும் காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதனை நான்கு பெருங்கூறுகளாகப் பகுக்கலாம். அவையாவன: 1] பிறப்பிலேயே உண்டாகும் முழு பார்வையின்மை, 2] பிறப்பிலேயே உண்டாகும் பகுதி பார்வையின்மை 3] வளர்ந்த […]
புனைப் பெயரில்… மேரி மாதா ஆஸ்பத்திரியானாலும் சரி, குப்புசாமி நினைவு ஆஸ்பத்திரி ஆனாலும் சரி, அப்போலோ, கே ஜி ஆஸ்பத்திரிகள் ஆனாலும் சரி, அங்கு பணி புரியும் நிறைய பேர், அரசு ஆஸ்பத்திரிகளிலும் வேலை பார்ப்பார்கள். இது சட்டப்படி குற்றம்… தண்டனைக்குறியது… ஆனால், எல்லா மருத்துவ கல்லூரி இணைந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலைமை மருத்துவராக இருப்பவர்கள் கூட வெளியே தனியே பிராக்டிஸ்… அரசு மருத்துவமனைகளின் தரக் குறைவுக்கு டாக்டர்கள் காரணமில்லை… பின்..? அங்கு அந்த மருத்துவ மனைகளின் […]
நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி […]
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் ஒரு பெண்ணின் கதை அவள் ஓர் அழகான விதவை அவளுக்கு ஒரு மகன் மட்டும் உண்டு. அரசில் பணி கிடைத்ததால் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் அழகும் தனிமையும் பலருக்கு சபலத்தை ஏற்படுத்தியது. அதிலும் சிலர் வேட்டை நாயைப் போல் சுற்றிச் சுற்றி வந்தனர். அவள் கண்ணியமாக வாழ்ந்தும் வீண்பழி சுமத்தி அவளை வேதனைப் படுத்தினர். அவளுடைய நேர் மேலதிகாரி ஓர் பெண். நிலைமையைப் […]
முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புகளில் பல கவித்துவக்குறியீடுகளாகவும், யதார்த்த மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் திகழ்கிற இடி (அர்ரஃது), அந்த ஒளி (அந்நூர்), மலை (அத்தூர்), புழுதிக்காற்று (அத்தாரியாத்), நட்சத்திரம் (அந்நஜ்மு), சந்திரன் (அல்கமர்), கிரகங்கள்(அல்புரூஜ்), விடிவெள்ளி (அத்தாரிக்), வைகறை(அல்பஜ்ர்), இரவு(அல்லைல்), முற்பகல் (அல்லுஹா) காலைப்பொழுது(அல்பலக்) என்பதாக இவை அமைந்துள்ளன. உயிரினங்களின் அடையாளங்களைக் கொண்ட பெயர்கள் பிறிதொருவகை. பசுமாடு(அல்பகறா), கால்நடைகள்(அல்அன்ஆம்), தேனீ(அந்நஹல்), எறும்பு(அந்நமல்), சிலந்தி(அல் அன்கபூத்), யானை (அல்பீல்) என […]
நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை 13.05.1934 – 25-09.2012 * அதிராத குரல், நிதானம் தவறாத அணுகுமுறை, எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் பாங்கு, பார்வையற்றவர்களுடைய உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் ஓயாமல் உழைக்கும் ஆர்வம், மன உறுதி, பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களுக்கு எதிரி என்று பாவிக்காத மனத்தெளிவும், புரிதலும் கொண்ட பண்பு, அறிவைப் பெருக்கிக்கொள்வதில் சலிக்காத தேடலும் ஆர்வமும், எல்லோரிடத்தும் அன்பு […]