ஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. இன்னொன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள். இருவரின் அரசியல் தளமும் வெவ்வேறானவை. ஒருவர் கலை இலக்கிய விமர்சகங்களின் ஊடாக தன் கருத்துகளை முன்வைக்கும் எழுத்தாளர். இன்னொருவர் கலை இலக்கிய விமர்சக வட்டங்களைத் தாண்டி இன்றைய சமகால அரசியல் சமூக தளத்தில் ஊடகங்களின் மிகுந்தக் கவனத்திற்கு உரியவர். முன்னவர் இந்திரன். பின்னவர் அருந்ததிராய். கட்டுரை உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் கவிதை புனைவுக்கு நெருக்கமாகவும் இருப்பதாகவே நம்பப் படுகிறது. கவிதைக்குப் பொய்யழகு என்று கூட சொல்லி […]
. கோவிந்த் கோச்சா இந்த கட்டிடம் சென்னை, திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தின் கிழக்குப் புரம்… பின்னாடி இருக்கும் சாக்கடையைப் பார்த்து முகத்தைச் சுழிக்க வேண்டாம்… இது நாமே மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் கதை… இது பக்ஹிங்காம் கால்வாயாக அகண்டு இருந்த , மாமல்லபுரத்தில் இருந்து இதன் வழியாக மூங்கில்களும் இன்ன பிற சாமன்களும் நீர்தடமாய் வந்த வழி தான்… பெரும்பகுதி ரயில் நிலையத்திற்காக கட்டிட அடித்தளம் ஆன பின் மிஞ்சியது இந்த சாக்கடை….. நாகரீகமற்று […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். […]
மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள் வரிசையில் இருப்பதைக் காண நேர்ந்தது. நாம் ஒருவரின் வாழ்நாட்களில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளுபவற்றில் பலவற்றின் முழு விவரங்களைக் கேட்டு அறிவதில்லை. அவர் நம்மிடம் உதவி கேட்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியாகப் […]
சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் ” நான் நாகேஷ்” என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி. நாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். பொதுவாய் அதிகம் பேட்டி தராத. தன் திரை உலக வாழ்க்கை பற்றி பேசாத இவர் வாழ்க்கை குறித்து புத்தகம் என்பது ஆச்சரியமான விஷயம் தான். புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் […]
“இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.” ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.உதுல் பிரேமரத்னவுக்கு கிளிநொச்சி இராணுவ உயரதிகாரியால் மேற்குறிப்பிடப்பட்டவாறு சொல்லப்பட்டிருந்தது. அதற்கு அடுத்ததாக யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட மைதானத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளதாக நாம் கேள்வியுற்றோம். சற்குணராஜா எனும் இளைஞனுக்கு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்கையுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்தே அவருக்கு இம் மாதிரியான துயரமான சம்பவத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்திருப்பதாக சற்குணராஜாவின் தந்தை ஊடகங்களுக்கு […]
இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. ரசூலுக்குப் பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோஷியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர்விலக்கம் செய்தது சட்டப்படி ஏற்கப்படக்கூடியதாக இல்லையென்று முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கூறியிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் இலக்கியவுலகம் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் மத்தியில் தக்கலை அபீமுஅ ஜமாத் உண்டாக்கிய அதிர்வலைகள் இப்போது வெறும் நுரைகளாகப் படிந்துவிட்டன. ஊர்விலக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தில் […]
போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி…. மத்த நாட்டில் நடக்குமா தெரியாது. இதோ, தேவராஜ முதலி தெரு, சென்னையில், அங்கு ரொம்ப நேரமா லோடு அடித்துக் கொண்டிருந்த டிரக்கை எடுக்க சொல்ல, அந்த டிரைவர் முறைத்து பேசியது தொடர்ந்த டிராபிக் காவல் அதிகாரி, லைசன்ஸ் விவரம் பெற்று உடனடியாக தானியங்கி பில் போடும் முறையில் உடனே அபராதம் தயார் செய்ய, அங்கு வந்த கடை முதலாளி, சிங் ஒருவர், காவல் அதிகாரியிடம் அபராதம் […]
கோவிந்த் கோச்சா இன்று இந்தியா முழுக்க பெருமாபலான பெற்றோர்களை பிடித்து ஆட்டுவது, தன் பிள்ளைகளை ஐ ஐ டி-யில் சேர்க்க வேண்டும் என்று. அதனால் எங்கெங்கு காணினும் கோச்சிங் செண்டர்களடா எனும் படியாக, பல பல செண்டர்கள்…. ஐ ஐ டி மாணவர்கள் பலர் இதில் மிக அதிக சம்பளமுடன் வாத்தியார் வேலைகளில்… அவைகள் பல விதத்திலும் மார்கெட்டிங் யுக்திகளால் நிரம்பி வழிகின்றன. அவர்களே ஒரு நுழைவுத் தேர்வு […]
குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது. தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை இரண்டாவது: […]