கண்ணீருக்கு விலை

This entry is part 9 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உண்டென்றால் விளங்கிக் கொள்ளுங்கள் அது சாரதா வீட்டில் தீர்க்கப்படு மென்று. வாழையூரில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அதிசயப் பெண்மணிதான் சாரதாம்மாள். வீட்டில் விறகடுப்புதான். அதில் நெருப்பு அணைந்ததே யில்லை. யாரிந்த சாரதாம்மாள். இவரின் கடந்த காலக் கதையை கால் நிமிடத்தில் சொல்லிவிடலாம். கேட்கத் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7

This entry is part 5 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழு பாப மரணத் தேவைகள் என்று குறிப்பிடப்படுபவை : உணவு, உடை, எரிபொருள், வரி அடைப்பு, சுய மதிப்பு, குழந்தைகள்.  இந்த ஏழு மைல் கற்களை மனிதன் சுமைதாங்கி மேம்படுத்த பணத்தை தவிர வேறெதுவும் உதவாது.  இவற்றைச் சீராக்காது மனித ஆன்மா உன்னதம் அடைய முடியாது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : […]

பூரணச் சந்திர சாமியார்

This entry is part 4 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை அவர் ஏறாத கோயிலில்லை! பார்க்காத மதாச்சாரியார்களில்லை! செய்யாத் தத்துவ விசாரணையில்லை! எதற்காக? சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக! ‘சொர்க்கம், சொர்க்கம்’ என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, அது எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறது? அதற்குப் போகும் வழி தான் என்ன? யாராவது […]

இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!

This entry is part 1 of 33 in the series 11 செப்டம்பர் 2011

“எல்லாம் ரெடியா? வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, வெற்றிலை தெளிக்க வெளிவந்தது. ஆம், மித்துவுக்கு திருமணம்! ஜிதாமித்ரனுக்கு வீட்டில் செல்லப் பெயர், மித்து. ஜிதாமித்திரன், மித்ரனாகி, மித்ரன், மித்துவாகியதற்கான முழு பொறுப்பு அவன் அக்கா அர்ச்சனாவையே சாரும். சிறுவயது முதல் படிப்பையே குறியாக வைத்து வளர்ந்த மித்து, CA முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. […]

பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்

This entry is part 53 of 54 in the series 4 செப்டம்பர் 2011

தேவசர்மாவும் ஆஷாடபூதியும்   ஒரு காட்டில் தனியே ஓரிடத்தில் மடாலயம் ஒன்று இருந்தது. அதில் தேவ சர்மா என்னும் சந்நியாசி யொருவன் இருந்தான். அவன் பல யக்ஞங்கன் நடத்தியதற்குப் பிரதியாக பக்தர்கள் பலர் அவனுக்குப் பல நேர்த்தியான ஆடைகள் அளித்திருந்தனர்.   அவற்றை விற்று அவன் நாளடைவில் பெருஞ்செல்வம் திரட்டினான். பணம் சேரவே, அவன் யாரையும் நம்பவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பணப்பையைத் தனது அக்குளில் வைத்துக் கொண்டபடியே திரிந்தான். இரவும் பகலும் அது அவனைவிட்டு நீங்கவே நீங்காது. […]

முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்

This entry is part 52 of 54 in the series 4 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 3 >>> ஜீவிதத்தில் ஒவ்வொருத்தனுக்கும் பொதுவான சிக்கல் ஒன்று உண்டு. ஒருகாலத்தில் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி, நீ இல்லாமல் நான் இல்லை, என்கிற தினுசில் ஒட்டி உறவாடிய நட்பு, காலாவட்டத்தில் தீயமர்ந்து விடுகிறது. இந்த நட்பை என்ன செய்ய வேண்டும். வலியப்போய் திரும்ப மூட்டறதா, அல்லது அப்பிடியே விட்டுர்றதா என்பது பிரச்னை. இருவருமே ஒரே ஸ்திதியைக் கடைப்பிடிப்பதாய் இருந்தால், அந்தப் பிரிவு இயல்பாய் தண்ணிக்குள் மீனாய் அடங்கிவிடும். ஆனால் ரெண்டில் ஒருத்தர் கிச்னு பிரகாசமாக […]

ஜ்வெல்லோன்

This entry is part 37 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி.. “என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?” “ஆமாம். நீங்க நலமா..” பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார். “அப்புறம் சாப்பிட்டியா., பசங்க., வீட்டுக்காரர் நலமா ..?” “ ம் அதுக்கென்ன கொறைச்சல்.. “ “ ஏதும் கோவமா இருக்கியோ..” “ஒண்ணுமில்லையே. சும்மாதான்” “சொல்றதுன்னா சொல்லு. பழைய உற்சாகத்தைக் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6

This entry is part 21 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது சகப் பிறவிகளுக்கு நாமிழைக்கும் கொடும் தீங்கு, அவரை வெறுப்பதில் இல்லை.  அறவே புறக்கணிப்பதில் உள்ளது !  அதுதான் மனித ஒருமைப்பாட்டுக்கு முக்கிய இடையூறாய் இருந்து வருகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Devil’s Disciple) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் […]

குரூரமான சொர்க்கம்

This entry is part 8 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கிலத்தில்:ஜெய் நிம்கர் [மராத்தி மொழி எழுத்தாளர்] தமிழில்: முனைவர் தி.இரா.மீனா வேர்வை கூந்தலின் ஊடே கோடாய் வழிய ,சேலையை இடுப்பில் செருகியபடி நீலம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தான். “நீலம் எங்கே இருக்கிறாய்” “ஏன் சஞ்சுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னவாம் ” “முடித்து விட்டாயா? கேட்டவனின் குரலில் அத்தனை பதட்டம் தெரியாவிட்டாலும் ஏதோ சிக்கல் என்று புரிந்தது. “குழந்தைக்கு டிரஸ் போட்டு விடு ” வேலைக்காரப் பெண்ணிடம் […]

காயகல்பம்

This entry is part 6 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  அவன் ஒரு இளம் விஞ்ஞானி. இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம். குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்! அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன? பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம் என்ற மருந்து இருந்ததாம்! அதைச் சாப்பிட்டால் வயோதிகர்கள் இளைஞர்களாக மாறிவிடுவார்கள்! இத்தகைய அரிய மருந்தைச் செய்யும் முறை இரகசியமாகவே வைக்கப்பட்டு, முன்னோர்கள் மறைந்த போது அதுவும் மறைந்துவிட்டதாம்! அவர்கள் மட்டும் கொஞ்சம் பரந்த மனப்பான்மை […]