தரிசனம்

This entry is part 40 of 46 in the series 5 ஜூன் 2011

  மலைக்கு இந்த வருஷம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று மணி சொன்னதும் சேஷு ஒப்புக் கொண்டு விட்டார்.   கடந்த நாலைந்து வருஷமாகவே மணி சேஷுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஒழியவில்லை. இந்தத் தடவை  மணி மலைக்குப் போவது இருபத்தி ஐந்தாவது வருஷமாம் . ஆபிஸில் அவரை ஏற்கனவே வெள்ளி விழா மணி என்று   கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.மணி சேஷுவின் அலுவலகத்தில் மற்றொரு  பிரிவில் இருந்தார். சேஷு அங்கே சேர்ந்து  பதினைந்து வருஷ மாகப் போகிறது, இந்த டிசம்பர் வந்தால். மணி […]

தண்டனை !

This entry is part 36 of 46 in the series 5 ஜூன் 2011

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல […]

கருப்புக்கொடி

This entry is part 35 of 46 in the series 5 ஜூன் 2011

-சாமக்கோடாங்கி ரவி   காலை 10.30 மணி. நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கறிஞர்கள் இறக்கை ஒடிந்த காக்கையைப் போல ஒவ்வொரு நீதிமன்றமாக கைகளில் கட்டுடன் தாவிக்கொண்டிருந்தனர். சில காக்கைகளின் இறக்கைகள் அங்கே தாறுமாறாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் சிக்கியதில் கெட்ட வார்த்தைகளால் மொனமொனத்தபடி ஓடிக் கொண்டிருந்தனர்.   பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் போல அவசர அவசரமாக காலை சிற்றுண்டி முடித்து சீருடை அணிந்து காலணியின் கையிற்றை இழுத்துக் கட்டி அலுவலகம் வந்து, […]

ஆனியன் தோசை

This entry is part 34 of 46 in the series 5 ஜூன் 2011

மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய இடமாகும்.” Global warming caused by increased industrial pollution; privatization of ‘public’ resources such as water; the clearing of land or marshes to make way for farmers trying to eke out more profits on the international markets or for multinational […]

மெய்ப்பொருள் காண்ப தறிவு

This entry is part 15 of 46 in the series 5 ஜூன் 2011

ஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா? நண்பனா? அல்லது இரண்டும் இல்லையா? சர்க்கரை சிநேகிதனானால்  விடுதலையே கிடையாதா? மாரியப்பாவின் மருத்துவர் இப்படிச் சொன்னார் ‘நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது விலகாது. உன்னோடுதான் வாழும். விரட்டுவது கடினம். சேர்ந்து வாழப் பழகிக் கொள். தாகம் வரும். தண்ணீர் குடி. நிறைய. அதிகமாகப் பசிக்கும். புசி. இரவில் இரண்டு மூன்று […]

அம்மாவின் மனசு

This entry is part 1 of 46 in the series 5 ஜூன் 2011

அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம்.       அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி? சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்? கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2

This entry is part 42 of 43 in the series 29 மே 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா    “ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் – பைபிள் இல்லை.”   ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)   “வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது.”   ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)   “வறுமைப் பற்றி ஒருவர் போதிப்பதை விட்டுவிட்டு அதை ஒழிக்க முற்பட வேண்டும்.” […]

சில மனிதர்கள்…

This entry is part 40 of 43 in the series 29 மே 2011

லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, “உஸ், அப்பாடா, என்ன வெயில்” எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, “என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?” எனக் கேட்டாள். “ம், பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன்! பர்மிஷன் நேரம் முடியறத்துக்குள்ள ஆஃபீஸ் வரணுமேன்னு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்தேன், யாராச்சும் என்னைத் தேடினாங்களா?” என வினவினாள். “ஆட்டோவில் எப்படி ஓடி வந்தே?” என்று கிண்டலடித்த கல்பனா, ‘மானேஜர் இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கார், இன்னும் […]

செல்வி இனி திரும்பமாட்டாள்!

This entry is part 38 of 43 in the series 29 மே 2011

அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம்!   கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது. அங்கே இன்றைக்கு அவள் வகுப்புக்கு தமிழாசிரியர் ட்யூஷன் வகுப்பு நடத்துகிறார். அந்த சாக்கில்தான் செல்வி […]

ராக்கெட் கூரியர்

This entry is part 15 of 43 in the series 29 மே 2011

அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என  மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு “ஸ்..அப்பாடா..என்னா வெய்யில்..” என்றவரை “ என்ன இன்னிக்காவது அந்தக் கூரியர்காரன் ஏதாவது சொன்னானா? “எனக்கேட்டவாறு தண்ணீர் டம்ப்ளருடன் வந்தவளிடம் “ கிழிச்சானுங்க, திரும்ப திரும்ப கிளிப்பிள்ள சொல்ற […]