” ஸ்ரீ: ” நாயகிகள் வரும் முன்னே நாங்கள் வந்து காத்திருக்க வேண்டும் நாற்பது பேருக்கும் மொத்தமாய் மேக்கப் தொடை தெரிய வேண்டுமெனில் நாற்பது ஜோடித்தொடையும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் வேறு எந்த அங்கமாயினும் அப்படியே…. டைரக்டர், உதவி டைரக்டர், டான்ஸ் மாஸ்டர், காமிராமேன் எல்லோர் பார்வையிலும் ஓர் இளக்காரம் தெரியும் வழிகின்ற ஜொள்ளை மீறி…. எக்ஸ்ட்ராக்களுக்கான ஏஜெண்டு எல்லோருக்கும் அண்ணன் முறை, இடுப்பில் கை வைத்து இளித்தாலும்…. காதல் ஜோடியின் பின்புறமாக வெள்ளை தேவதைகளாய் […]
நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 22வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தைரியம், புத்தி, திறமை பற்றி சில சம்பவங்களை அடிப்படியாக வைத்து, பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசியிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றிய தொடரில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_22.html இந்த பேசாமொழி இதழில்: 1. கென்லோச் – யமுனா ராஜேந்திரன் 2. லத்தீன் அமெரிக்க சினிமா 3 […]
அன்புடையீர், வணக்கம். திரு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருதாக வழங்கப்பட்டு வருகிறது. இதுஉலக அளவில் வழங்கப்பட்டு வருவதால், வேற்று நாட்டு தமிழ் எழுத்தாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் பரிசு பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதனாலேயே இந்த விருது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. எதிர்வரும் அக்டோபர் 2, 2014 ம் தேதி இந்த அமைப்பின் 6-வது ஆண்டு விழா “இலக்கிய […]
மீனா தேவராஜன் ராஜேஷ்க்கு அன்று பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் தினச் சந்திப்பு. அவன் அப்பா அவனுடைய ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக முன்பே சொல்லியிருந்தார். அவனுடைய மனதில் அவரை நம் ஆசிரியரைச் சந்திக்க விடக் கூடாது என்ற எண்ணம் வலுத்திருந்தது. ராஜேஷ் உயர்நிலை பள்ளி ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவன். அவன் நண்பர்கள் அவனிடம் கேட்பாங்க, ‘ ஏன்டா ராஜேஷ் உங்க அப்பா மட்டும் பள்ளிக்கே வரமாட்கிறாரே, அத ஏன்டா? எங்க அப்பாவெல்லாம் ஒரு முறை […]
எஸ்.ஜயலக்ஷ்மி ஒப்பனை என்ற சொல்லுக்குப் பொதுவாக அலங்கரித்தல் என்ற பொருள் என்றாலும் வழக்கில் பெண்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும் நாடக நடிகர்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையுமே குறிக்கிறது. நாடகங்களில் இளைஞனை முதியவனாகவும், முதியவரை இளைஞனாகவும் காட்டுவது இந்த ஒப்பனைக் கலையால் தான். இன்னும் ஆணுக்குப் பெண் வேடம் போடு வதும் பெண்ணுக்கு ஆண் வேடம் போடுவதைம் இந்த ஒப்பனையால் தான்.. இன்னும் விரிவாகப் பார்த்தால் நடிகர்களை தேவர்களாகவும், தேவிகளாகவும். அசுரர்களாக வும் கூட மாற்றி விடுகிறார்கள் ஒப்பனைக் […]
ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் ஆச்சர்யம்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் வெஸ் எக்ஸ்டென்ஷனில் உள்ள பொக்கிஷம் புத்தக அங்காடியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை ஓர் மகத்தான வாசிப்பு அனுபவத்துக்கு நம்மைத் தயார்படுத்தியது. நோபல் பரிசு பெற்ற நாகிப் மாஃபஸ் எழுதிய “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தக கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்வின் போது நூலைப் பற்றி […]
செ.சிபிவெங்கட்ராமன், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். முன்னுரை: பழந்தமிழனின் ஆளுமைத் திறனறியும் ஒப்பற்றக் கலைக்களஞ்சியம், சங்கத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான புறநானூறாகும். இஃது பண்பாடு ,பழக்க வழக்கம், அரசியல், பொருளாதாரம் எனப் பன்முகத்தைத் தன்னகத்தே கொண்ட இலக்கியமாகும். ஆள்வோருக்கான அறிவுரைகள் இதனுள் நிரம்பக் காணப்ப்டுகிறது. அவற்றுள் சிலவற்றை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகின்றது அறமும் அரசின் வெற்றியும்: அக வாழ்வானாலும் சரி, புற வாழ்வானாலும் சரி, பழந்தமிழனின் வாழ்வில் அறமே முதலிடம் வகித்தது. அறம் […]
“ஒரு அரிசோனன்” (மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தச் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்ற எனது கற்பனையே இது.) “பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை!” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் […]
சோழகக்கொண்டல் கடலாழத்து நீருக்குள் இருக்கும் குடுவைக்குள் இருக்கும் நீருக்குள் மூன்று மீன் குஞ்சுகள் முதல் குஞ்சு அதே குடுவையில் பிறந்தது இரண்டாவது குஞ்சு அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட வேறொரு குடுவையில் பிறந்தது மூன்றாவது குஞ்சு குடுவைகளையறியாத பாறையிடுக்கில் பிறந்தது இந்த குடுவையின் அடித்தளத்தில் தொடங்கும் கடல் மிக நீண்டது – அதன் இருள் குடுவையின் இருளைப்போல பன்மடங்கு கரியது என்றது முதல்குஞ்சு நீண்டு பரந்த கடலின் ஒரு புள்ளியில் கிடக்கிறது ஒளி நுழையாத அடியாழத்தில் இந்த […]
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 1 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள். வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த ப+சாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் […]