சிவக்குமார் அசோகன் சுதாகர் மேற்கு மாம்பலம் ஸ்டேஷனில் வசந்தியைப் பார்த்து, அருகிலிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போய் அவனுடைய தோழி ஒருத்தியிடம் வசந்தியை அறிமுகம் செய்து வைத்தான். ”ரூம் எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க, அநேகமா ரெண்டு நாளுக்கு மேல நீங்க இங்கே தங்க மாட்டீங்கனு நினைக்கிறேன்!” ”இல்லை சுதாகர், அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். நான் என்ன அவ்ளோ பெரிய பணக்காரியா? ஓவரா பிகு பண்றதுக்கு?” ”ஓகே, சரியா ஒன்பதரை மணிக்கு ஆபீஸுக்கு வந்துடுங்க. அண்ணா நகர்ல இருக்கு, ஆபீஸ் […]
அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான திரு. லெ. முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் – புதிய புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் தலைமையில்நடைபெறும். சொல்ல மறந்த கதைகள்இலங்கை – தமிழக […]
க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8 1 drpanju49@yahoo.co.in ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இதற்குப் புலம்பெயர் வாழ்க்கை தந்த கூடுதலான் வாய்ப்புக்கள் ஒரு காரணம்.இத்தகைய வாய்ப்பைப் பெற்ற ஒரு கவிஞர் ஆழியாள்.ஆனால் ஆழியாள் கவிதை பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் போல் இல்லை என்பதை முத்ல் வாசிப்பிலேயே உணர […]
எஸ். ஸ்ரீதுரை துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின் குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது. தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று…. மறுபடியும் அதேமுகங்கள் – முறைக்கின்ற மாமியார்; குவார்ட்டரே வாழ்க்கையென குடிக்கின்ற புதுக்கணவன் அல்லது பழைய காதலன்; சுகமெதுவும் பார்த்ததில்லை; சூல்கொள்ளவும் மனமில்லை; இன்னொரு வாய்ப்பு….? அது ஆப்கானாயிருந்தாலும் சரி…. **** **** **** ****
ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற உள்ளது என கவியரங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார். விடுதலை எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்வு நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக ஈடிஏ […]
மதுரையில்… 17.08.2014 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: தருமபுர ஆதீனச் சொக்கநாதர் திருமண மண்டபம் வடக்கு மாசி வீதி, மதுரை தொடர்புக்கு: பொழிலன் 86080 68002 திருமலை தமிழரசன் 99621 01000 உமையர் பாகம் 92458 49999
இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது. இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும், அறிவுரை எண்ணத்தோடும் அவை வெளிப்பட்டுள்ளன கரையே( ற்)றுங் கருத்துக்கள் என்ற இந்நூலில்… இந்நூலின் கடை வரி:: இன்று புதிதாய் பிறந்தோம், நாளையும் புதிதாய் பிறப்போம் என்கிறது. இந்நம்பிக்கையை இந்நூல் முழுக்க பார்க்க முடிகிற்து. […]
ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டு வீசபட்டு இன்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. ஆண்டுகள் பல கழிந்தாலும் அந்த குண்டுவீச்சு பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. அக்குண்டுவீச்சு தவறானதே என அக்காலகட்டத்தை பற்றி அறியாத இளம் தலைமுறை நம்பிகொண்டிருக்கிறது. அதனால் அணுகுண்டுகள் வீசபட்டதற்கான காரணம், மற்றும் சூழலை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஹிரோஷிமா மேல் வீசப்பட்ட குண்டால் 80,000 முதல் 140,000 பேர் வரை பேர் மரணம் அடைந்தார்கள். நாகசாகியில் வீழ்ந்த குண்டால் 74,000 பேர் மரணம் அடைந்தார்கள். […]
செர்க்கான் எஞின் ஒருவரை ஒருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்கிறோம் காதலை அடித்து தள்ளாடிக்கொண்டு சுவர்கள் மட்டுமே நம் காமத்திற்கு இடையூறு ஈரமான எழுத்துக்களில் உன் வாய் ஆரம்பிக்கிறது. சிவப்பு பட்டாம் பூச்சி உன் முகத்தில் அமர்கிறது பார் கண்ணே, சிட்டுக்குருவிகள் என் நெஞ்சக்கூட்டில் படபடக்கின்றன உன் கனவுகளின் மெலிந்த இடங்களிலிருந்து சிட்டுக்குருவிகளால் முத்தமிட்டேன். உன் மார்பகங்கள் இரண்டு பூங்கொத்துக்கள் திடீரென என் வாயெனும் வானத்தில் பூக்கின்றன பின் உன் மார்பகங்கள் சிந்தனையிலாழ்ந்த ஆறுகள். என் வாயெனும் கடலில் ஓடுகின்றன […]
சிட்னியில் நடக்கவிருக்கும் சங்கத் தமிழ் மாநாட்டிற்கான விவரம். அன்புடன், அன்பு ஜெயா www.anbujaya.com http://tamilpandal.blogspot.com.au/