author

இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை குறுக்கி கிறக்கும் கண்களும் முறுவல் புன்னகையுமாய் பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்.. வாசிக்கும் வாசகனின் கண்களிலும் மனத்திலும் இச்சைகளை கிளர்ந்தெளச் செய்கிறார்கள்…. பின்னொருநாள் அதே இதழின் வேறு பதிப்பின் பக்கங்களை புரட்டி பாதி கடந்திருந்த போது.. சாகசபட்சிகளால் எழுதப்பட்ட பெண்ணியக் கவிதையும் கட்டுரையும் ஏகத்துக்கும் எடுத்துரைக்கும் இதோபதேசம் அதே வாசகனின் மனத்தில் என்ன சிந்தையை வித்திட […]

ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன் மறுகரையில் இருப்பதாகச்சொல்லி செய்தியனுப்புகிறாய். நம்மிடையே நதியோடியிருந்த காலம் போய் வெகுநாட்களாகிவிட்டது. இப்போது நான் வந்து நிற்கும் கடலுக்கு எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள் என்று யாருக்குத்தெரியும்?

புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!   புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த […]

ப்ரதிகள்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ப்ரதிகள் பலநேரம் அசலைப் ப்ரதிபலிப்பதில்லை. முன்னம் கூட்டிசைந்த பலவற்றின் கூட்டுப் தொகுப்பாய் இருக்கின்றன. அசலின் முத்திரை ப்ரதிகளில் கருநிற அடையாளமாகின்றன. பல்வேறு பயணங்கள் சென்று திரும்பும் ப்ரதிகள் பெரும்பாலும் அசலை வெருட்டுகின்றன. குறுக்குக் கோடுகளோ மையெழுத்தோ முனைசிதைவோ இன்றிச் சிலவே வீடடைகின்றன. லட்சத்தில் ஒன்றின் ப்ரதி அட்சரசுத்தமாய் அச்சுஅசலாய் அசலின் ப்ரதிபிம்பமாய் அமைவதுபோல வேறு ஒன்றும் தலைகீழ்ப்ப்ரதியாய் ஆகிவிடுகின்றது. பரம்பரை சுழற்சியில் கூடுமாறும் எப்பிரதிகளையும் அசல்கள் தன்னுடையதாகவே இனம்காணுகின்றன.

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும் […]

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2 சிவக்குமார் அசோகன் மேனேஜர் அறையில் வசந்தி சீரியஸான முகத்துடன் பேசிக் கொண்டிருப்பதையும், மேனேஜர் ரெங்கராஜன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த போது குருவுக்கு சற்று கோபம் வந்தது. ‘இவள் என்ன லூஸா? ஸ்கூல் பிள்ளை மாதிரி புகார் சொல்லிக் கொண்டிருக்கிறாள்? சரி அல்லது வேண்டாம் அவ்வளவு தான். விஷயம் முடிந்தது. இதைப் போய் மேனேஜரிடம் சொல்ல வேண்டுமா? பைத்தியம் தான் இவள். இருந்தால் என்ன? இவள் எனக்குத் தான். என் […]

துவாரகா சாமிநாதன் கவிதைகள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

துவாரகா சாமிநாதன் என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின் வரிகளில் எனது எல்லா பிம்பங்களும் தெளிவாய்த் தெரிகின்றன. என்னை அப்படியே காட்டுகிறது மறைக்காமல் என் பிம்பங்களின் பிரதிபலிப்பில் இயற்கையும் அதனோடு கூடிய வாழ்வும் என்னுள் பனி படலமாய் கண்ணாடி விளிம்புகளில் புகையாய் நானே இயற்கையுமாய்…. […]

உறக்கம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.

துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை முதல்வர் மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமதி மீனா சிவராமன் வந்திருந்து வாழ்த்தினார். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட முதல்வர் நாகப்பன் பள்ளியின் சிறப்பு குறித்தும், வளர்ச்சி குறித்தும் இப்பணிக்கு கலிஃபோர்னியா தமிழ்க் […]

மையல்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன்  தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. காட்டில் தொலைவதற்கும் காடே தொலைவதற்கும் உள்ள வேறுபாட்டை யோசிக்க விடாமல் தற்பொழுதில் நின்று திரிகிறது காலம்.