author

பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி

This entry is part 23 of 46 in the series 5 ஜூன் 2011

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய வசதிகளுடன் கண்களுக்குக் குளுமையாக உள்ளது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மாற்றியுள்ளது வியப்பாக உள்ளது. பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி விளக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆய்வுக்குறிப்பில் சேர்த்துக்கொள்ள […]

அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு

This entry is part 12 of 46 in the series 5 ஜூன் 2011

திண்ணையின் நீண்டகால வாசகர்களில் ஒருவன். வாராவாரம் திண்ணையை வாசித்து வருபவன். அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு அழகாக இருக்கிறது. இலக்கியப்பயணத்தில் திண்ணையின் பணி தொடர வாழ்த்துக்கள். அன்புடன் சு.குணேஸ்வரன்

ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

This entry is part 7 of 46 in the series 5 ஜூன் 2011

விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘இலக்கியப்பூக்கள்-2’ நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும். *நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது. அனுப்ப வேண்டிய முகவரி:R.MAHENDRAN. 34.REDRIFFE ROAD, PLAISTOW. LONDON, E 13 0JX   மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk. mullaiamuthan@gmail.com முடிவுத் […]

சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு

This entry is part 6 of 46 in the series 5 ஜூன் 2011

வணக்கம். திண்ணை இணையத்தில் தொடராக வந்த “ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி” மற்றும் சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு tamilwritersathyanandhan.wordpress.comவலைப்பூத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. நன்றி. அன்புடன் சத்யானந்தன்.

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி

This entry is part 35 of 43 in the series 29 மே 2011

சேதுபதி சேதுகபிலன் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன. மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிறது. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந. சேஷாத்திரி அவர்கள் தன் தாயார் ஸ்ரீ பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை […]

நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்

This entry is part 16 of 42 in the series 22 மே 2011

வணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ மீரான் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும், என்றும் மாறா அன்புடன் நந்திதா

ரீங்கார வரவேற்புகள்

This entry is part 1 of 42 in the series 22 மே 2011

சில பூக்கள் வண்டுகளின் ரீங்கார வரவேற்புகளில் பழகிவிடுகின்றன…   ரீங்கரிக்க மாட்டாத வண்டுகளுக்கு தேன் பரிமாற எந்தப் பூவும் விரும்புவதில்லை…   ரீங்காரங்களின் வசீகரங்களில் தொலைந்துபோகும் வண்டுகள் தேயும் தன் முதுகெலும்புகள் மேல் காலம்தாழ்த்தி கவனம் கொள்கின்றன…   எதற்கோ பிறந்துவிட்டு ரீங்கரிக்கவே பிறந்திருப்பதாய் காட்சிப்பிழை காணும் வண்டுகளுள் கூடுகளையும், கிளைகளையும் அடையும் வண்டுகளின் பாடங்கள் சுவாரஸ்யமானவை…     – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)  

l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்

This entry is part 20 of 48 in the series 15 மே 2011

  அனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம்.  நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் . இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை அறிக்கை ,விவசாயிகளின் பேட்டிகள் , ஒட்டன்சத்திரம் சந்தையின் தினசரி காய்கறிகள், பழ வகைகள் விலை விபரத்தினையும் அதனை நடத்தும் கடை முகவர்களின் தொடர்பு முகவரியினையும் அளிக்கிறது. மேலும் வாழ்நாள் கல்வியில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தகவல்களை அளிக்க மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை […]