பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)

This entry is part 21 of 26 in the series 26 ஏப்ரல் 2015

http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_balumahendra_2.php நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு எளிமையாக நடந்த இந்த விருது விழா இந்த ஆண்டு பல்வேறு கலைவிழாக்களுடன் சிறப்பாக நடக்கவிருக்கிறது. பாலுமகேந்திரா விருது இந்தியா முழுக்க தயாரிக்கப்பட்டுள்ள குறும்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மொழி கடந்து அகில இந்திய விருதாக இந்த விருது வழங்கப்படவிருக்கிறது. பரிசுத் தொகை: முதல் பரிசு: […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்

This entry is part 22 of 26 in the series 26 ஏப்ரல் 2015

அன்புடையீர், சித்திரைத் திருநாள்  நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 750 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்

This entry is part 23 of 26 in the series 26 ஏப்ரல் 2015

நஸார் இஜாஸ் வாசிப்பு வெறுமனே பச்சாதாபத்துக்காக மட்டும் இருக்கக் கூடாது. அது மனித மனங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தூர்ந்து போயிருக்கும் சமூகத்தின் விடியல் பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டும். அந்த வாசிப்பில் எதிர்காலத்தின் ஒளி தெரிய வேண்டும். அதற்கான உந்து சக்தியாகவே அது எப்போதுமே திகழ வேண்டும். ஹியாம் நௌர் உலகப் புகழ் பெற்ற கவிஞரும், எழுத்தாளரும் தலை சிறந்த ஊடகவியலாளருமாவார். தன்னுடைய எழுத்தக்கள் அத்தனையும் பதியமிடப்பட்ட சில கணங்களிலேயே சர்வதேசத்தின் காதுகளில் […]

அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்

This entry is part 24 of 26 in the series 26 ஏப்ரல் 2015

நஸார் இஜாஸ் வழமை போன்ற ஆரோக்கியத்துடன் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு தாயின் கர்ப்பச் சுருளிலிருந்து ஒரு பெண் குழந்தை மெல்ல வெளியுலகை எட்டிப் பார்க்கிறது. அப்போது அந்தத் தாய் வெறுமனே குழந்தையாகவே அவளை பார்த்திருக்கலாம். அது இவ்வுலகை மாற்றப் போகும் சக்தியாக இருக்கும் என்று தெரியாமல் இருந்திருக்கலாம். எழுத்தையும், போராட்டத்தையும் அடையாளமாகக் கொள்ளப் போகும் அற்புதம் அந்தக் குழந்தையின் அணுத் திறன்மங்களில் சேகரிக்கப்பட்டிருப்பதை அறியாமல் போயிருக்கலாம். கற்பனைத் திறன்களில் வெளிப்படும் எழுத்துக்களையும் தாண்டி யதார்த்தம் பளிச்சிடும் […]

சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்

This entry is part 25 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 நசார் இஜாஸ் அதிகாலையின் நடுங்கும் குளிரிலும் வழமை போன்று சில்வியா ப்ளாத் படுக்கையை விட்டு எழுந்து கண்களை மெல்ல திறக்கிருக்கிறாள். பனிக் காற்றுக்கு சில்வியா ப்ளாத் மீதிருந்த அதீத காதலில் ஒரு கணம் கூட தாமதிக்காது கண்களை வந்து காதல் காற்று ஒட்டிக் கொள்கிறது. அதைக் கூட பொருட்படுத்தாதவள் போல், அறைச்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்க்கிறாள். அப்போது நேரம் நான்கு மணியைத் தாண்டி கடிகார முள் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்தவள் சமயலறைக்குச் […]

ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.

This entry is part 1 of 26 in the series 26 ஏப்ரல் 2015

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1. பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை நிறைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இது எல்லா பயணிகளிடத்திலும் நிகழும் என்பதற்கு உறுதி கூற முடியாது. பல பயணமுகங்கள் மேலும் மேலும் இறுகிக்கொண்டே இருக்கும். பாதிப்பை எண்ணி எண்ணி சன்னலோரத்தில் அமர்ந்தாலும் கண்ணில் நீர் […]