இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குள் இருக்கும் கோபாலை, அதாங்க நக்கீரனை நகர்த்திவிட்டு, படம் பாருங்கள். பிடிக்கும். இல்லையென்றாலும் பிடிக்கும், பைத்தியம். பெண்மையின் நளினம் கலந்த ஒரு நாயகன் ( வினய் ), ஆண்மையின் கம்பீரம் கலந்த (சில கோணங்களில் அவன் இவன் விஷால் போலவே இருக்கும் ) நாயகி (ஷர்மிளா மந்த்ரே). இவர்களை வைத்துக் கொண்டு, காமெடி பண்ணப் புகுந்தால், படம் மிரட்டல் போல இருக்கும். ஆனால் மிரட்டலாக இருக்காது. கதை பட்டு நூல் […]
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்றோ பார்த்து பாதிக்கப்பட்ட உணர்வுகள் இதயத்தில் ஆழமாகப் புதைந்து தங்கிவிடுகின்றன. அதன் எதிரொலி பிற்காலத்தில் வரலாம் அல்லது வராமலும் போகலாம். கல்லூரிப் படிப்பை முடிக்கவும் படித்த பள்ளியிலேயே வேலை கிடைத்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. அப்படியே தொடர்ந்திருந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகும்வரை நீடித்து அங்கேயே இருந்திருக்கலாம். பிள்ளைப் பருவம் முதல் ஓடி விளையாடிய பூமியில் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். காலம் என்னைப் […]
ஹரிணி 46. எரிக் நோவா தெரிவித்திருந்த கதை ஆர்வமூட்டுவதாக இருந்தது. என்ன படித்தாய்? எனக்கேட்டேன். Philology என்று எனக்கு விளங்காத சொல்லைக் கூறினான். உனக்கு சமூக உளவியல் தெரியுமா என்றேன். மென்றுகொண்டிருந்த ரொட்டி வாயிலிருக்க முகத்தை உயர்த்தி கீழிறக்கினான். அசைவற்றிருந்த வாயில் ரொட்டியையும் உமிழ்நீரையும் சேர்ந்தார்போல பார்த்தபிறகு தொடர்ந்து சாப்பிட எனக்கு ஒப்பவில்லை. தயவுசெய்து வாயிலிருப்பதை விழுங்கித்தொலை, நான் சொல்லவந்ததை முடிக்கிறேன் என்றேன். அவசரமாக விழுங்கினான். – சமூக உளவியல் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் […]
கூட்ட நெரிசலில், பனகல் பார்க் சமீபம் வரும்போது, அதிர்ஷ்டவசமாக, நின்றுகொண்டிருந்த என்னருகில் உட்காந்திருந்தவர், சட்டென்று எழுந்ததில், எனக்கு இடம் கிடைத்தது. அதற்கு முன்னால், முக்கால் மணிநேரம் லிபர்டி நிறுத்தத்தில், 12பிக்காக காத்திருந்த கால் வலிக்கு, இதமாக இருந்தது. பனகல் பார்க் நிறுத்ததில் இறங்கியவர்களோடு ஏறியவர்கள் அதிகம். மிசினில் மாட்டிய கரும்பு போல் கூட்டம் மொத்தமாக நசுக்கப்பட்டது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. “ அய்யோ! அய்யோ ! குரலுக்குச் சொந்தக்காரருக்கு ஒரு 70 வயதிருக்கும். கையில் உடைமைகள் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மண்ணின் மணம் பரப்பிய கவிஞர்கள் பாட்டு பாரதியின் கையிலும், பட்டுக்கோட்டையின் கையிலும் பண்பட்ட கருவியாக விளங்கியது. அக்கருவியை அவர்கள் கையாண்ட முறைமை இருவருக்கும் இலக்கியப் பெருமையை ஈட்டிக் கொடுத்தது. கவிஞர் இருவரின் கவிதைகளும் மெருகேறி நின்றமைக்குக் காரணம் அவர்களது பாடல்கள் நாட்டுப்புறத் தன்மையின் மீது வேர் கொண்டு நின்று மண் மணம் பரப்பியதே ஆகும். நாட்டுப்புற இலக்கியத்தின் சாயலையும் சார்பையும் தன்மயமாக்கிக் கொண்டு, […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கிண்ணியா மண்ணில் தங்களது நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களான ஏ.ஏ.எம். அலி, கிண்ணியா நஸ்புல்லாஹ், ஜே. பிரோஸ்கான், ஏ.கே. முஜாராத், ஏ.ஏ. அமீர் அலி, பாயிஸா அலி, ஜெனிரா கைருள் அமான் போன்றோர்கள் இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியினூடாக கவிஞர் எம்.சி. சபருள்ளாவும் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். முஹம்மது காஸிம் வெளியீட்டகத்தினூடாக, 110 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 46 கவிதைகள் […]
முகில் தினகரன் நீண்ட யோசிப்பிற்குப் பின் கிருஷ்ணன் அந்த யோசனையைக் கூற, சற்றும் தயக்கமின்றி அதை முழு மனதோடு ஆமோதித்தாள் பார்வதி. ‘நானே சொல்லலாம்ன்னு இருந்தேங்க….நீங்களே சொல்லிட்டீங்க…ரொம்ப சந்தோஷம்…தாராளமாச் செய்யலாம்” என்றாள். ‘ஆமாம் பார்வதி…..விதி அரக்கன் தன்னோட அகோர பசிக்கு நம்ம மகனோட உயிரை எடுத்துக்கிட்டான்…நாம அதையே நினைச்சு…நினைச்சு…உருகி…மருகிக் கெடக்கறத விட…நம்மோட அன்பையும் பாசத்தையும் கொட்டறதுக்காக…நம்மோட வயோதிக காலத்துல நமக்குன்னு ஒரு துணை தேவைப்படும்கறதுக்காக…முக்கியமா நாம இப்ப அனுபவிச்சிட்டிருக்கிற இந்த புத்திர சோகத்திலிருந்து விடுபட…ஒரு அனாதைக் குழந்தையை […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே […]
தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார்.அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது. அவனது நடைவேகத்துக்குக் காரணம் விடலைப் பருவ பையன்களின் கேலி.தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் சில மாதங்களாய் உணர்ந்து கொண்டு வந்தான்.தன்னை ஒத்த பிராயமுடையவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தன்னிலிருந்து வேறுபடுவதை எண்ணி அச்சம் கொண்டான். அரும்பு மீசை உதட்டின் மேல் வளர்ந்து, குரல் உடைந்து சற்றே கரகரப்பாக மாறிக் கொண்டிருந்த டீன் ஏஜ் […]
“If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying……!” Indira Gandhi. ”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” – மகாகவி பாரதி. நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் […]