சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’

This entry is part 8 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’ அவனுக்கென்றொரு பெயர் இருக்கிறது. ஆனால் அவனது வீட்டில், கிராமத்தில் எல்லோரும் சிறு வயதிலிருந்து ‘சின்னவனே’ என்றுதான் அவனை அழைக்கிறார்கள். பலகைகளால் ஆன குடிசையொன்றில் அவனும், அவனது விதவைத் தாயும், சகோதரியும் வசிக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சிறுவன் அக் குடிசையின் பலகைச் சுவரில் கரிக் கட்டியால் மூன்று + அடையாளங்களை இட்டு, அவை தானும், அக்காவும், அம்மாவும் என்கிறான். அச் சிறுவனால் சித்தப்பா என அழைக்கப்படும் ஒருவனால் அந்தக் குடும்பத்துக்கு அவ்வப்போது […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9

This entry is part 7 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

 மேடம் மோனிகாவின் வேடம்  (Mrs. Warren’s Profession)  நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்)  அங்கம் -2 பாகம் -9   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, […]

மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25

This entry is part 6 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts   பாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை.  Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று..  பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு […]

சீதாயணம் நாடக நூல் வெளியீடு

This entry is part 5 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சி. ஜெயபாரதன், கனடா இனிய திண்ணை வாசகர்களே, வையவன் நடத்தும் சென்னை  “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.  இந்த நாடகம்  2005 ஆண்டில் முன்பு  திண்ணையில் தொடர்ந்து வெளியானது. “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை […]

கள்ளிப் பூக்கள்

This entry is part 4 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கோவில், குளம், பூசைகள், வழிபாடுகள் என அனைத்தும் செய்து முடித்த தம்பதியருக்கு ஆண்டவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குலம் தழைக்க வந்த குழந்தையை தெய்வமாகக் கொண்டாடினார்கள். தவழுகிற பருவத்தில் தவழ்ந்து, பால் பற்களும் சரியான காலத்தில் முளைத்து, நடைபயிலும் பருவத்திலும், உணவு உண்ணும் பழக்கத்திலும் மற்ற குழந்தைகளைப் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் தம் இரண்டு வயதுவரை வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் […]

பூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?

This entry is part 3 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

  (கட்டுரை: 4) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் பாய்மரத் தீவுகள் காலக்ஸி ஒளிமந்தை ! வாயு முகில் குளிர்ந்து போய் மாயமாய் ஈர்ப்பு விசை சுருக்கி உஷ்ணம் பல மில்லியன் ஆகி உருண்டு திரண்டு ஒளிமந்தை விண்மீன்களாய் விழி சிமிட்டும் ! அகில வெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் இரு காலக்ஸிகள் மோதினால் கைச் சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! ஈர்ப்புச் சக்தியால் விண்மீனைச் […]

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்

This entry is part 2 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

MS விஸ்வாநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-ல Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப்பார்த்து விட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து தலயக்காட்டிட்டு போறார் சில படங்கள்ல :-)   […]

இடைச் சொற்கள்

This entry is part 1 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

திடீரென ஒன்றும் வரவில்லை. சொல்லிவிட்டுத்தான் வந்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன் சொல்லிக்கொள்ளாமலேயே போனவன் எவ்வளவோ அருகிலிருந்தும் கண்ணிலேயே படாதவன் இப்போது எவ்வளவோ தூரத்திலிருந்து வந்து கதவைத் தட்டுகிறான்.   கண்களை இடுக்கிக் காக்கை நகம் கீறினதாய்ப் படிந்த நயனச் சிரிப்பில் அவன் உள்ளத்தின் வெண்மை தெரிந்தது.   அவன் வாழ்வை மிகவும் மெதுவாகச் செதுக்கிக்கொண்டிருந்த விதி சில வருடங்கள் அவனையே மறந்துபோனதில் ஒதுங்கிக்கிடந்த நாட்களின் சூன்யத்தை புதிது புதிதான வார்த்தைகளில் என்னிடம் வடித்துக்கொண்டிருந்தான்.   சேர்ந்துகொண்ட நோய்களை […]