கனவு இலக்கிய வட்டம் 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா திருப்பூரில் 21/8/16 ஞாயிறு குறும்பட விழா ” கனவு “ சார்பில் நடைபெற்றது .. ( இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி […]
சோம.அழகு உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம். இந்த கடாஃபியின் அதட்டலுக்கு பயந்து உள்ளே சென்ற சர்வர் சொற்ப நேரத்தில் உணவுகளோடு வந்தார். நூடுல்ஸ் போன்ற சீன சைவ உணவுகளும், இன்ன […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++ https://youtu.be/kcPM3-a_nSM https://youtu.be/Hoy2aBqvD68 https://youtu.be/jhhv16T8ha8 +++++++++++++++ பூமித்தாய் குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மக்கள் சடலமாய்ப் புதைந்தார் ! கடற்தட்டு கால் உதைத்தால் படை யெடுக்கும் சுனாமி அலைகள் ! அடித்தட்டு தொடை அசைந்தால் இடித்திடும் அதிர்வுகள் ! நிலம்நடுங்கி நடனமிடும் புவித்தளம் ! குடற் தட்டு கூத்தாடி உடல் […]
கவிநுகர் பொழுது தொடரின் எட்டாவது கட்டுரையாக ,செந்தில் பாலாவின்,’மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன்’,கவிதை நூல் குறித்து எழுதுவது மகிழ்ச்சி.ஏற்கனவே இந்நூல் குறித்து நிகழ்வொன்றில் பேசியதன் கட்டுரை வடிவம் என்று கூடச் சொல்லலாம். நூலின் பின் அட்டையில்,’இருட்டும் வெளிச்சமுமாய் பிரவாகிப்பவை அவரது கவிதைகள்.வாழ்வெதிர்வுகளில் உதித்த கவிதைகளும், ஓய்வுகளில் விழித்த ஓவியங்களும் அவருக்கு மட்டுமன்றி எல்லோருக்குமாய் பல்வேறு அனுபவங்களைச் சுமந்து நிற்கின்றன’ , என்னும் குறிப்பு இருக்கிறது. கவிதைகளை வாசிக்கும்போது, தொடக்கத்தில் சிறு சிரமம் இருந்தது.மொழியில் சற்று சிடுக்குகள் இருப்பது மட்டும் […]
ஸிந்துஜா “அழுவாச்சி வருதுங் சாமி ” சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும் மனிதர்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் தினமும் காணும் பூச்சிகள் , பொட்டுகள்தான். அவர்கள் லட்சிய தாகம் எடுத்து அலைகிறவர்களாகவோ தங்கள் தலைக்குப் பின் சுழலும் ஒளிவட்டங்களை அணிந்தவர்களாகவோ நடமாடவில்லை . சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்வது […]
அன்புடையீர் வணக்கம் வழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம கம்பன் கழகம், காரைக்குடி (புரவலர் திரு. எம்.ஏ.எம். ஆர். முத்தையா (எ) ஐயப்பன் செட்டிநாடு குழுமம்) அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க் கம்பன் கழக செப்டம்பர் மாதக் கம்பன் திருவிழா கவியரங்கமாக 3-9-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண […]