அர.வெங்கடாசலம் (விளம்பரக் கட்டுரை) என் நண்பன் மிகவும் கொதித்துப் போயிருந்தான். ”எவ்வளவு தூரம் அவனை நம்பி இருந்தேன். இப்படிச்செய்துவிட்டானே. அவனுடைய அப்பா அம்மா எல்லாம் எவ்வளவு நல்லவர்கள். அவர்களுக்குப்போய் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையா? நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டானே.” என்றெல்லாம் மற்றொரு நண்பனைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தான் அவன். “எனக்கொரு சந்தேகம் அவன் உண்மையில் அத்தாய் தந்தையருக்குப் பிறந்தவனா அல்லது ஏதாவது தத்து எடுத்த பிள்ளையா?” அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த என்னை அவன் கேட்ட கேள்வி தூக்கி வாரிப்போட்டது. […]