தி.ஜானகிராமனும்- சிக்மெண்ட் ஃபிராய்டும்

This entry is part 9 of 9 in the series 29 ஜூன் 2025

  -ஜெயானந்தன்.  ஒப்பற்ற தமிழின் படைப்பாக பார்க்கப்படும் மோகமுள் நாவல் வழியாக, நம் இதயங்களில் வந்தமர்ந்த  எழுத்து சிற்பி தி.ஜானகி ராமன்.  இவரின் படிப்பு முடிந்தவுடன், வேலை தேடுகின்றார். கடைசியாக, அவர் அகில இந்திய வானொலியில் பணியில் அமர்கின்றார்.  எல்லோரையும் போலவே, அவரது திருமணம், குடும்பம், குழந்தைகள்,  தினம்தினம் நாம் எதிர்கொள்ளும், வாழ்க்கைப்பிரச்சனைகள்.  டெல்லிவாழ்க்கை அங்குள்ள பிரச்சனைகள் ஏராளம். இது எல்லோருக்குமான வாழ்க்கை.  தீடீரென எங்கிருந்து குதித்தார்கள் பாபுவும்-யமுனாவும்.  எங்கிருந்து குதித்தது காவிரியும்-சங்கீதமும்.  எங்கிருந்து குதித்தது,  காம […]

சொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

This entry is part 8 of 9 in the series 29 ஜூன் 2025

லதா ராமகிருஷ்ணன் இன்று ‘THUGLIFE’ படம் குறித்து (ஆங்கிலத்தில் பெயர் வைத்தாலே படத்திற்கு ஓர் உயர்தர அந்தஸ்து ஏற்பட்டுவிடுகிறது என்ற காலங்காலமான நம்பிக்கை போலும்) காரசாரமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது குறிப்பாக, இலக்கியப் படைப்பாளிகள் – வாசகர்கள் மத்தியில். இப்படி எந்தவொரு குறிப்பிடத்தக்க எழுத்தாக்கமாவது திரை உலக முன்னணி மனிதர்களால் பொதுவெளியில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. என்றுமே. கமலஹாஸன் – மணிரத்தினம் combo வில் உருவான படம் என்பதாலேயே ஏன் அதற்கான உங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள் என்ற வாதத்தை […]

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

This entry is part 7 of 9 in the series 29 ஜூன் 2025

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) [*OUR SWEETEST SONGS ARE THOSE THAT TELL OF SAADEST THOUGHT என்று உலகம் புகழும் கவிஞர் SHELLEY எழுதியிருக்கிறார். இருந்தாலும், ஏன் எப்போதுமே துயரத்த்தில் தோய்ந்த கவிதைகளையே எழுதவேண்டும்? அப்பழுக்கற்ற சோகத்தை எழுதுவதைப்போல் ஏன் அப்பழுக்கற்ற சந்தோஷகணத்தை நாம் எழுதக்கூடாது என்று ஒரு கவிதைநூலுக்கான முன்னுரையில் வாசகர் விருப்பமாகக் கேட்டிருந்தேன். கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் அதுகுறித்து என்னைக் குற்றஞ்சாட்டுவதாக விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த இன்னொரு கவிஞர் ஆட்சேபம் […]

நிகரற்ற அன்பின் கரிசனம்

This entry is part 6 of 9 in the series 29 ஜூன் 2025

ரவி அல்லது “பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம்.” உம்மா சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தது. எது செய்யும்போதும் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி ஆரம்பிச்சா சைத்தான் ஓடிருவான். சொல்லலைன்னா இவர்களோடதான் நம்ம வேலைன்னு கூடவே இருந்திருவான் என்றார்கள்.பல முறை மறந்து போய்விடுகிறது. உம்மா வாங்கிய செருப்பு பண்ணு கணக்கா மெத்து மெத்துன்னு இருக்கு. நாளைக்கு பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர்கள் போட்டுப் பார்க்கிறேன் என்று கேட்பார்களோ என இப்போதே கவலையாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் போடக் கொடுக்கலாம் ரபீக்கு மட்டும் கொடுக்கக்கூடாது. அவனுக்கு […]

சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)

This entry is part 5 of 9 in the series 29 ஜூன் 2025

       -ஜெயானந்தன்  அவளுக்கு ரூம் கிடைக்கவில்லை. பிறகு, அவனது ரூமில்தான் தங்க நேர்ந்தது.  அவள் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை செய்வதால், அவளுக்கு அவனோடு அந்த இரவு தங்குவதில் சிரமமில்லை.  அவன் தான் நெளிந்தான். கையில் க்யூப் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.  அவள் நைட் ஆடையில் வந்தாள்.  பாத்ரூமில் அவளது உள்ளாடைக்கிடந்தது.  அவன் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  அவள் ஒரு மேனேஜ்மெண்ட் நாவலை கையில் வைத்துக்கொண்டு, அவனை நோட்டமிட்டாள்.  “அவன் ஒருமுறை பாத்ரூம் சென்றுவந்தான்”. அவன் […]

பணம்

This entry is part 4 of 9 in the series 29 ஜூன் 2025

பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை  எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல்  கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு அமீதாம்மாள்

ஒரு பெண்ணும், சில ஆண்களும்

This entry is part 3 of 9 in the series 29 ஜூன் 2025

அவளை அழைத்தார்கள்.  விளம்பர உலகின்  மாடலாக,  அவள் கைகள், கண்கள்  இடுப்பும், தொடையும்  வழியும் போதை  கண்களில் கண்டனர்  ஆண்கள்.  முதலில்  பியானோ மீது சரிந்தாள்  கைகளில், கால்களில்  தைலம் தடவினார் கேமிரா கண்களுக்கு  பொருந்தும் என்றனர்.  விழும் அருவியில்  குளியல், அவள் உடலில்  ஒட்டுத்துணிகள்  மறைக்க வேண்டியதை மறைத்து  கேமிராவை  சுழற்றி எடுத்தனர்.  அவளது மேனியில்  அருவியின் நீரில்  துடியென துடிக்கும்  இளமை என்றனர்.  சோப்பின் வாசத்தால்  அவளது வதனம்  அழகுற செய்ய  பலப்பல வித்தைகள்  […]

இரு கவிதைகள்

This entry is part 2 of 9 in the series 29 ஜூன் 2025

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம் கொள்கின்றன. சர்ப்ப மேனி ஜொலிக்க சதிராட்டம். நிலவு தெறிக்கிறது. ஒவ்வொரு  தீச் சர்ப்பத்திலும் ஒளிர்கிறது அது; உடுக்கை அடிக்கிறான  ஈசன். அண்ட சராசரங்கள் நடுங்குகின்றன. எல்லை கடந்த வெளி நிறைகிறது. துரிதம் கொள்கின்றன் தீச் சர்ப்பங்கள். ஆடு பாம்பே ஆடென்று அடிக்கிறது ஆலய மணி. திசைகளில்  ஓசைஅலை பரப்பி […]

  குயிலே நீ கூவாதே!       

This entry is part 1 of 9 in the series 29 ஜூன் 2025

                                     மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                    மாமரத்துக் குயில்  கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி  சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது.  அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி மாதத்துக் குளிர் பனிப்படலமாக விரிந்திருந்தது. அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த   விஸ்வத்தின் உறக்கம் கலைந்து போகும்  என்று விளக்கைப் போடாமலே உள்ளே வந்தாள். மெல்லிய நீல விளக்கொளியில் கனமான புத்தகம் ஒன்று  மார்பில் கவிழ்ந்திருந்தது. அதை மெதுவாக எடுத்து அருகிலிருந்த […]