அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
அன்புடையீர்,
அனுபவப்பகிர்வு – தமிழ்க்கவிதை இலக்கியம்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான மூன்றாவது அனுபவப்பகிர்வு எதிர்வரும் 24 -5-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையில் மெல்பனில் – பிரஸ்டன்
Darebin Intercultural Centre மண்டபத்தில் ( 59 A, Roseberry Avenue, Preston -3072) நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு மற்றும் கவிதை இலக்கிய அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கவிஞர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
“தமிழில் கவிதை இலக்கியம்” என்ற தலைப்பிலான இந்த அமர்வில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
1) கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளில் ஏதேனும் ஒன்றை வாசித்தல் (5 நிமிடங்களுக்கு மேற்படாமல்)
2) “என்மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை” என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கவிதையைப் படித்துக்காட்டுதலும், அதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலும். (10 நிமிடங்களுக்கு மேற்படாமல்)
3) சங்க காலம் முதல் இன்றுவரை கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள
மாறுதல்கள்.
(அ) பாடு பொருளில்
(ஆ) உள்ளீட்டில்
(இ) வடிவத்தில்
இந்தத் தலைப்பில் குறிப்புரையும், கலந்துரையாடலும் இடம்பெறும்.
மேற்குறிப்பிட்டவாறு கவிதை வாசிக்கவோ, படிக்கவோ, அல்லது குறிப்புரை தரவோ விரும்புபவர்களும், மேலதிக விபரங்கள் தேவைப்படுவோரும்,
எதிர்வரும் 10.05.2014 ஆம் திகதிக்கிடையில் இந்நிகழ்ச்சியின்
ஒருங்கிணைப்பாளரான பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களைத் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி இலக்கங்கள்: (03) 9465 1319 – 0478 06 03 66
மின்னஞ்சல்: srisuppiah@hotmail.com
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.
செயலாளர்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
மின்னஞ்சல்: atlas2001@live.com
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- வீடு திரும்புதல்
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- தினமும் என் பயணங்கள் – 13
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- நட்பு
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- ’ரிஷி’யின் கவிதைகள்
- ரொம்ப கனம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை
பின்னூட்டங்கள்