வீடு திரும்புதல்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 ரவிந்திர நாத் தாகூர் தமிழில்- எஸ்ஸார்சி இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன்.அவனுக்கு ஒரு யோசனை.கிறுக்கு யோசனைதான்.இதோ இந்த ஆற்றங்கரை மண்திட்டு மீது கிடக்கிறதே ஒரு பெரிய மரம் அது ஒரு படகின் நடு த்தூணுக்கு எனத்தான் வைத்திருக்கிறார்கள் இதனை இந்த இடத்திலிருந்து உருட்டி உருட்டி விளையாடினால் என்ன.இந்த மரத்துக்கு உரிமைக்காரன் சண்டைக்கு வருவான். வரட்டுமே எல்லோருக்கும் அது சிரிப்பாயும் இருக்கும். அவனின் சக தோழர்கள் எல்லோரும் சரி என்றார்கள். மரத்தை உருட்டிவிட […]

’ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 3 of 25 in the series 20 ஏப்ரல் 2014

    1.  நுண்ணரசியல் கூறுகள்   அ]   உங்கள் எழுத்தை வெளியிட வேண்டுமா? கண்டிப்பாக கழுத்தின் நீளத்தைக் குறைத்துக்கொண்டுவிடுங்கள். உங்கள் படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டுமா? தரை மீது தலைவைத்து நடக்கப் பழகுங்கள்…. நீளும் நிபந்தனைகள். நுண்ணரசியலாளர்களின் கைகள் கட்டமைக்கும் நவ கொத்தடிமை வடிவங்கள்.   ஆ]   கழுத்தை நெரித்தால் தான் கொலை; வன்முறை. நாங்கள் படைப்பை நெரித்துக் குழிதோண்டிப் புதைப்போம் கருத்துச் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்தவாறே! உட்கட்சி ஜனநாயகம் வேண்டிப் பதைப்பதெல்லாம் உன்மத்தமல்லாமல் […]

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி. விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன் இரண்டாம் தரமானவனே என்றெல்லாம் விமர்சன வேலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையே பேசிக் கொண்டு, ஆனால் தொடர்ந்து தெளிவான ரசனை அனுபவம் கொண்ட ஒரு விமர்சகராகவும் இயங்கியவர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். ஏறத்தாழ அவருடைய விமர்சனக் கட்டுரைகள் […]

சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு.  அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும்.  அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள்.   குறிப்பு :  கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது.  அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன்.  )   ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம்.  அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ.  சூ […]

நட்பு

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

    அம்பல் முருகன் சுப்பராயன் என் பால்ய கால நண்பனை சந்திக்கிற போதெல்லாம் புன்முறுவலோடு முகத்தை திருப்பி கொள்கிறேன் பேசாமலேயே.. சண்டைக்கான காரணம் ஞாபகம் இல்லை அறிந்ததுமில்லை.. மௌனம் கலைத்தோம் முப்பது ஆண்டுகள் கழித்து… பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட உணவு துண்டை எடுத்தது போல மனம் லேசானது.. நாம் ஏன் பேசிக்கொள்வதில்லை என அவனும் கேட்ட போது..   ~அம்பல் முருகன் சுப்பராயன்

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 05.05.14 – 30.05.14 எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், […]

இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  நகரத்தாரின் இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும், வரலாற்று உண்மைகளில் ஒன்று. தொன்று தொட்டு இலக்கியம் வளர்த்த செட்டிநாட்டு அரசர்களின் கருணையில், இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு. லட்சுமணன் வழிகாட்டலில், மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய அரங்கில், கடைசி சனிக்கிழமை அன்று கூடும் இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம். தொடக்க காலத்தில், இங்கு வருகை தராத இலக்கிய பிரபலங்களே இல்லை எனலாம். ஆனால் அப்போது அவர்கள் பிரபலங்கள் இல்லை என்பது தான் நினைவில் […]

“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – தேனி மாவட்டமும், போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி” யை நடத்துகின்றன. இது குறித்த அறிவிப்பை இணைத்துள்ளோம். போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இதழில் வெளியிட்டு பரவலான வாசகர்களிடம் சென்றடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி. தோழமையுடன், மாவட்டக்குழு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேனி மாவட்டம்.

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_P04G1ObJm4 http://www.youtube.com/watch?v=_P04G1ObJm4&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LNW4-4uq2C8 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YL__UbPsPDg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D7iS95-wE_E http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t07Liw4Yb00 ++++++++++++++++++++++ பல பில்லியன் ஆண்டுகட்கு முன்பே சனிக்கோள் இப்போது இருப்பதை விட பளுவான வளையங்கள் மூலம் பேரளவு வடிவுள்ள துணைக் கோள்களை உருவாக்கி வந்துள்ளது.   சந்திரன்கள் வளையத்தின் விளிம்பில் உண்டாகும் போது, வளையங்கள் வலுவிழந்து விட்டன  என்று சொல்லலாம்.  பூர்வீகத்தில் வடிவான துணைக்கோள்கள்  பெரியதாக உருவாகியும், சனிக்கோளுக்கு அப்பாலும் தள்ளப் பட்டன. கார்ல் முர்ரே [பிரதமக் […]

அம்மாகுட்டிக்கான கவிதைகள்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

கைகளை ஊஞ்சலாக்கி நெஞ்சில் சாய்த்தபடி உனை அணைக்கிறேன்.. சில நிமிடங்களில் தூக்கம் உன் கண்களைத் தழுவ உனைத் தொட்டியிலோ படுக்கையிலோ இறக்கி வைக்க மனமின்றி ஆடிக் கொண்டேயிருக்கிறேன் முடிவிலி ஊஞ்சலாய்.. ———— கால்களையும் கைகளையும் மெதுவாய் வேகமாய் அசைத்து காற்றில் நீயெழுதும் எழுத்துக்களைச் சேர்த்து வாக்கியமாக்கி ஒழுங்குபடுத்தி வாசிக்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டேயிருக்கும் என்னை வெற்றிபெறச் செய்கிறாய் உன் புன்னகையால்… ————— தூக்கத்திலும் விழிப்பிலும் துளியளவும் வேறுபாடில்லை உன் புன்னகை செய்யும் மாயத்தில் —————- உனைத் தூங்க […]