புதியமாதவி, மும்பை
நான் பறவையைக் காதலித்தேன்
அது தன் சிறகுகளில்
என்னை அணைத்து
வையகமெங்கும்
வானகமெங்கும்
பறந்து திரிந்தது.
விட்டு விடுதலையானக்
காதலின் சுகத்தை
அப்போதுதான் அனுபவித்தேன்.
நான் ஆமையைக் காதலித்தேன்
அவசரப்படாமல் அருகில் வந்தது.
தேரில் பவனிவரும்
மதுரை மீனாட்சியைப் போல
அதன் ஒடுகளே சிம்மாசனமாய்
கம்பீரமாக அசைந்து நடந்தேன்.
கடல் அலைகளில்
பாய்மரக்கப்பலாய்
பவனி வந்தேன்.
நேற்று
கோபியர் கூட்டத்தில்
நானும் நுழைந்தேன்.
அப்பத்தைப் பங்குவைத்த
பூனையின் கதையாய்
காதலைக் கூட
கண்ணா.. நீ
பங்கு வைத்தாய்
எப்படியும்
என்முறை வந்தே தீருமென
காத்திருந்தக் காலத்திலும்
காதல் என்னுடன் வாழ்ந்தது.
நான் காதலில் வாழ்ந்தேன்.
அப்போதெல்லாம்
நானும் என் காதலும்
இணைப்பிரியாமல்
இருந்தோம்.
இப்போது
என்னைப் போலவே
மண்ணில் வாழும்
மனிதா
உன்னைக் காதலித்தேன்.
காதல் என் னைக் கொலைசெய்தது.
தானும் தற்கொலை செய்து கொண்டது.
மறுநாள் பத்திரிகையில்
காதலின் முகவரி
சாதி அட்டையிலும்
கடவுளின் கட்டைவிரல்
அடையாளத்திலும்
பத்திரமாக
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருந்தது.
————————————————–
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை
என்ன செய்வது? மனிதன் மட்டும் தானே ஆறறிவு கொண்டவனாகப் பிறந்து விட்டான்! அதிலும் அடுத்தவனை அழிப்பதன் மூலமாக உலகை ஆள நினைக்கிறானே!
Good one which reflects the reality in our society . When can it be changed? who will come forward to tie the bell to the cat?.
Good one madam. Keep writing .
Best Regards
Mariner .Vasanthakumar.