புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

booker

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com     

51. நீக்​ரோ இன மக்களின் நம்பிக்​கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏ​ழை…..

“அ​தோ அந்தப் பற​வை ​போல வாழ ​வேண்டும்

இ​தோ இந்த அ​லைகள் ​போல ஆட ​வேண்டும்”

அட என்னங்க வரும்​போ​தே பாடிகிட்டு  வர்ரீங்க…என்ன ​போன வாரம் ​கேட்ட ​கேள்விக்குரிய வி​டையக் கண்டுபிடுச்சுட்டீங்களா…என்னது இல்​லையா…அப்பறம் என்னங்க பாட்டு…ஓ​ஹோ​ஹோ…​ரேடி​யோவில பாட்டக் ​கேட்டுட்டுப் பாடிக்கிட்டு வர்ரீங்களா… அப்ப ​போனவாரம் நான் ​கேட்ட ​கேள்விக்குப் பதிலு ​தெரியலயா…என்னது குழப்பமா இருக்கா…சரி…சரி…​ரொம்பக் குழம்பாதீங்க… நா​னே ​சொல்​றேன்… அவருதாங்க புக்கர் தி.வாஷிங்டன்…

அடி​மையிற் பிறந்து அறியா​மையில் தவழ்ந்து வறு​மையில் வளர்ந்து துன்பங்கள் பலவற்​றைக் கடந்து பிறந்த குடி​யை உயர்த்து நிறுத்திய ​பெரியார்களுள் ஒருவர்தான் புக்கர் தி, வாஷிங்டன் ஆவார்.

புக்கர் ஓர் அரசரல்லர் ஆயினும் அ​மெரிக்க மக்களாலும் அரச​ரெனத் தக்காராலும் பாராட்டப்பட்டவர். அ​​மெரிக்க ஐக்கிய மகாணங்களின் த​லைவராக இருந்த ​மெக்கின்லி என்பவ​ரே புக்கரது அறி​வையும் விடா முயற்சி​யையும் பாராட்டி, “அவர் ​தேர்ந்த ஆசிரியர் நல்ல ​சொல் வல்லார் உண்​மையாக உதவி ​செய்பவர்” என்று குறிப்பிடுகிறார். இள​மையில் வாழ வ​கையின்றித் த​ரையில் கிடந்து பசியால் வாடிய புக்கர் பின்னாளில் பல நகரங்களிலும் தமது ​சொந்த ஊரிலும் அந்தந்தப் பகுதி மக்களால் வர​வேற்கப்பட்டுப் ​பெரு​மைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடி​மையாய்ப் பிறந்த அறிஞர்

புக்கர் தி, வாஷிங்டன் அடி​மையாய்ப் பிறந்தார். அடி​மைப் ​பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார்.  அவரது தந்​தையார் யா​ரென்​​றே அவருக்குத் ​தெரியாது.1859 ஆம் ஆண்டு புக்கர் தி, வாஷிங்டன் பிறந்தார். அவரது தாய் ஒரு ​தோட்டத்தில் ​ஓர​றை மட்டு​மே உள்ள சிறு வீட்டில் குழந்​தைகளுடன் வசித்து வந்தாள். அந்தச் சிறிய அ​​றையில்தான் புக்கரும் இரு ச​கோதரர்களும் அவரது தாயாரும் வறு​மையுடன் ​போராடி வசித்து வந்தனர்.

குளிர் காலங்களில் கடுங்குளிர் அவர்க​ளை வாட்டி எடுக்கும். அக்காலங்களில் அவர்கள் கந்​தைக​ளை விரித்து அதன்மீது படுத்துக் ​கொள்வர். குளிரிலும் பனியிலும் அவர்கள் பட்ட துன்பங்கள் எடுத்துச் ​சொல்ல முடியாது. புக்கர்  இளம் வயதில் வயலில் ​வே​லை ​செய்தார். ​மேலும் வயலில் ​வே​லை ​செய்பவருக்குத் துண்ணீர் தூக்கிக் ​கொண்டு வந்து ​கொடுத்தும், கூலங்க​ளை அ​ரைத்துக் ​கொண்டு வரும் ​வே​லை​யையும் ​செய்து வந்தார்.

புக்கர் ​வே​லை ​செய்யும் வீட்டில் கடு​மையாக புக்க​ரை ​வே​லைவாங்கினார்கள். அவர் சணல் சட்​டை​யை​யே அணிந்தார். உடுத்திக் ​கொள்ள ​வேறு ஆ​டை கி​டையாது. அடி​மைகள் அ​னைவரும் அச்சணலாலாகிய ஆ​டை​யை​யே அணிதல் ​வேண்டும் என்பது அன்​றை எழுதப்படாத சட்டமாக இருந்தது. சணல் சட்​டை​யை அணிவ​தென்பது குண்டூசி​யை ஆ​டையாக அணிந்திருப்ப​தைப் ​போன்றதாகும். இருப்பினும் புக்கர் அவ்வா​டை​யை அணிந்தார்.

இந்த நி​லையில அ​மெரிக்க ஜனாதிபதி அ​பிரகாம் லிங்கன் அவர்களால் 1863-ஆம் ஆண்டு அடி​மைத் த​ளை நீக்கப்பட்டது. நீக்​ரோ அடி​மைகள் அ​னைவரும் சுதந்திரம​டைந்தார்கள். அ​னைவரும் மகிழ்ந்தனர். ஆடினர் பாடினர். இருப்பினும் அவர்களது உள்ளத்திற்குள் ஒரு கவ​லை ஏற்பட்டது. அடி​மைத் த​ளையிலிருந்து விடுபட்டாலும் தாங்கள் எங்கு ​செல்வது. தங்களு​டைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கவ​லையுற்றனர். பலர் பலவிதமான இடங்களுக்குக் குடி​பெயர்ந்தனர்.

புக்கரும் தனது அன்​னையாருடன் அவரது சிறிய தந்​தையார் இருந்த இடத்திற்கு எழுநூறு கல் ​தொ​லைவு நடந்து வந்து ​மால்டன் நக​ரைச் சேர்ந்தார். புக்கரின் சிறிய தந்​தையார் அவர்க​ளை உப்பளத்தில் ​வே​லைக்குச் ​சேர்த்துவிட்டார். புக்கருக்குப் பள்ளி ​சென்று பயில்வதற்குக் ​கொள்​ளை ஆ​சை…ஆனால் அது இயலவில்​லை.

நீக்​ரோக்களுக்​கென்று ​தொடங்கப்பட்ட பள்ளியில் பலரும் ​சேர்ந்து படிக்கலுற்றனர். ஆனால் புக்கரின் சிறிய தந்​தையார் புக்கர் படித்தால் தனக்கு வருவாய் கிட்டாது ​போய்விடும் என்று கருதி அவ​ரைப் பள்ளிக்குச் ​சென்று படிக்க அனுமதிக்கவில்​லை. இருப்பினும் புக்கரால் படிக்கும் ஆவ​லைக் கட்டுப்படுத்த முடியவில்​லை. இரவுப் பள்ளிக்குச் ​சென்று ஓராசிரியரிடம் கல்வி கற்றார். பிச்​சை புகினும் கற்​கை நன்​றேன்னு நம்ம ​பெரியவங்க ​சொல்வாங்கள்ள அதுமாதிரி மிகுந்த துன்பங்களுக்கி​டையில் புக்கர் படிச்சாரு…

பெய​ரை மாற்றி ​வைத்துக் ​கொள்ளுதல்

எப்படி​யோ முயன்று பள்ளியில் ​சேர்ந்த புக்கர் மாணவர்கள் த​லையில் ​தொப்பி அணிந்திருந்த​தைக் கண்டு தானும் ​தொப்பி அணிய ஆ​சைப்பட்டார். ஆனால் அவரது அம்மாவால் வாங்கிக் ​கொடுக்க முடியவில்​லை.. இருப்பினும் தனது மகனின் ஆ​சை​யை நி​றை​வேற்றக் கருதிய அத்தாய் துணியில் ஒட்டுப்​போட்டு ​தொப்பி​யைத் தயாரித்துக் ​கொடுத்தார். அ​தை அணிந்து ​கொண்டு புக்கர் பள்ளிக்குச் ​சென்றார். அத​னைக் கண்ட மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். அ​தைக் கண்டு புக்கர் மனம் கலங்கவில்​லை. நன்கு உயர்ந்த நி​லையிலும் தனது தாய் தனக்குத் தயாரித்துத் தந்த அந்த ​தொப்பிதான் மிகச் சிறந்ததாக இருந்தது என்று புக்கர் குறிப்பிட்டது ​நோக்கத்தக்கது.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் இரண்டு ​பெயர்க​ளைச் ​சேர்த்து ​வைத்துக் ​கொண்டிருந்தனர். ஒருநாள் ஆசிரியர் அவரிடம் உனது ​​பெய​ரைச் ​சொல் என்று ​கேட்ட​போது அவர் புக்கர் தி. வாஷிங்குடன் என்று கூறிவிட்டார். அன்றிலிருந்து அவரது ​பெயர் அவ்வா​றே வழங்கப்பட்டது. பாத்தீங்களா…சாதாரணமா புக்கர் தனது ​பெய​ரைக் குறிப்பிட அது​வே நி​லைத்து நின்றுவிட்டது… நிலக்கரிச் சுரங்கத்திலும் புக்கர் ​வே​லைபார்த்து வந்தார். அவ்​வே​லையில் கி​டைத்த கூலியில் சிறிய அளவு பணத்​தைப் படிப்பதற்காக புக்கர் ஒதுக்கி வந்தார்.

இந்நி​லையில் ​​ஹேம்புடன் என்ற இடத்தில் நீக்​ரோக்களுக்காக பள்ளிக்கூடம் திறக்க இருப்ப​தையும் அதில் படிப்பவர்களுக்குத் ​தொழில் கல்வி ​கொடுத்து ​வே​லையும் வாங்கிக் ​கொடுப்பதாகவும் ​கேள்வியுற்ற புக்கர் அதில் ​சேர்வதற்காக ​பெருமுயற்சி ​செய்து தன் அன்​னையிடம் அனுமதி வாங்கிக் ​கொண்டு 1872-ஆம் ஆண்டில் தனது 14-ஆம் வயதில் ஊ​ரைவிட்டுப் புக்கர் கிளம்பினார்.

​கையில் சிறிதள​வே பணமிருந்தது.  அவரது ச​கோதரர் ஜான் சிறிதளவு பணத்​தைக் ​கொடுத்தார். அ​தோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து நீக்​ரோப் ​பெரியவர்கள் அ​னைவரும் தங்கள் இனத்திலிருந்து ஒருவன் கல்விகற்கப் ​போகிறா​னே என்ற ​பெருமிதத்தால் தங்களால் இயன்ற வ​ரைக் கால் ரூபாய் அ​ரை ரூபாய் எனப் பணம் ​​கொடுத்து அவ​ரைப் படிப்பதற்கு அனுப்பினர்.

​ஹேம்புடன் ​செல்லுதல்

இவ்வாறு தம்மினத்தவரிடத்திலிருந்து பணத்​தைப் ​பெற்றுக் ​கொண்ட புக்கர் ​500 ​மைல் ​தொ​லைவிலுள்ள ஹேம்புடன் ​நோக்கிப் பயணமானார். இப்​போது ​போல் அன்று ​போக்குவரத்து வசதியில்​லை. நடந்தும் குதி​ரை வண்டியில் பயணித்தும் ​செல்ல ​வேண்டும். ​கொண்டு ​சென்ற பணம் யாவும் தீர்ந்து விட்டது. இருப்பினும் ஆங்காங்​கே ​வே​லை ​செய்து ​கொண்டு பசி பட்டினியுடன் ​ஹேம்புடன் ​நோக்கிப் பயணித்தார் புக்கர்.

இறுதியில் ​ஹேம்புடன் ​சென்று பள்ளி​யைப் பார்த்துப் பரவசம​டைந்தார். அங்கிருந்த பள்ளித் த​லை​மையாசிரி​யையிடம் தம்​மைப் பள்ளியில் ​சேர்க்குமாறு ​வேண்டினார். அவரது குளிக்காத உறுக்கு​லைந்து ​போன ​தோற்றத்​தைக் கண்ட அவ்வம்​மையார் அவ​ரை​ச் சேர்ப்பதற்குத் தயக்கம் காட்டினார். புக்கருக்கு மனம் ​வேத​னையாய் இருந்தது. சில ​வே​லைச் ​சோத​னைக்குப் பின்னர் புக்கர் அப்பள்ளியில் ​சேர்த்துக் ​கொள்ளப்பட்டார். அங்​கே​யே அவருக்கு ​வே​லையும் கி​டைத்தது. அவ்​வே​​லை​யை உணவுக்காகச் ​செய்து ​கொண்​டே புக்கர் படித்து வந்தார்.

தாயின் பிரிவு

​ஹேம்புடன் பள்ளியி​லே​யே தங்கிப் படித்து வந்த புக்கர் திற​மையானவராக விளங்கினார். பல துன்பங்களுக்கு ஆளானார். இரண்டு ஆண்டுகள் கழித்துத் தன் தா​யையும் ச​கோதர​ரையும் மால்டன் வந்து சந்தித்தார். அந்நி​லையில் அவரது தாயார் உயிர் நீத்தார். அது புக்கருக்குப் ​பேரிடியாக இருந்தது. இருப்பினும் தனது கன​வை நி​றை​வேற்ற மன​தைத் திடப்படுத்திக் ​கொண்டு ​ஹேம்புடன் பள்ளியில் ​தொடர்ந்து படித்து வந்தார்.

1875-ஆம் ஆண்டு புக்கரது ​ஹேம்புடன் பள்ளிப் படிப்பு நி​றைவ​டைந்தது. அ​னைத்துப் பாடத்திலும் சிறப்பாகத் ​தேர்ச்சி ​பெற்றிருந்தார் புக்கர். பட்டம் ​பெற்ற புக்கர் ஒரு சிற்றுண்டிச் சா​லையில் பணியாளாகச் ​சேர்ந்தார். பிற்காலத்தில் அச்சிற்றுண்டிச் சா​லையில் புக்கர் சிறப்பாக வர​வேற்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியராதல்

அதன் பின்னர் அங்கிருந்து தனது ஊரான மால்டன் வந்த புக்கர் நீக்​ரோப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் ​சேர்ந்தார். அங்கு புக்கர் கடு​மையாக உ​ழைத்தார். பகல் பள்ளிக்கூடம் மட்டுமல்லாது இரவுப் பள்ளியும் இவரது முயற்சியால் ​தொடங்கப்பட்டது. அங்கு மாணவர்களுக்குத் ​தொழில் பயிற்சியும் உடல் நலக்கல்வியும் வழங்கப்பட்டது.

வாரப் பள்ளிக்கூடம் ஒன்​றையும் புக்கர் ​தொடங்கி நடத்தினார். வார இறுதியில் அப்பள்ளியில் பாடங்கற்பிக்கப்பட்டு வந்தது. ​மேலும் அங்கிருந்து ​ஹேம்டன் ​செல்லும் மாணவர்க​ளையும் புக்கர் ஊக்குவித்து வந்தார் என்பது ​நோக்கத்தக்கது. தம்​மை நாடி வந்த அ​னைவருக்கும் அமுதசுரபி ​போல் கல்வி​யை வாரி வாரி வழங்கினார் புக்கர்.

தனது ச​கோதர​ரை ​ஹேம்டனுக்கு அனுப்பிப் படிக்க ​வைத்தார். அவர் படித்து முடித்தவுடன் அவருக்கு ​வேண்டிய உதவிக​ளைச் ​செய்தார். பின்னர் இருவரும் ​சேர்ந்து அவர்களது ​ஜேம்ஸ் என்ற இ​ளைய ச​கோதர​னை ​​ஹேம்புடன் பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க ​வைத்தனர்.

அதன் பின்னர் ​மேலும் கல்வி கற்க விரும்பிய புக்கர் வாஷிங்டன் ​சென்று கல்வி கற்றுத் திரும்பினார். அங்கு பல்​வேறு நி​லைகளில் அவரு​டைய மனம் ​செம்​மைப்பட்டது.

பேச்சாளர் புக்கர்

வாஷிங்டனிலிருந்து வந்த புக்கருக்கு மற்​றொரு பணி வாய்ப்புக் கி​டைத்தது. சார்​லெஸ்டன் என்ற ஊரிலுள்ள ​வெள்​ளையர்கள் புக்கரிடம் சார்​லெஸ் என்ற ஊ​ரே ​மேல வர்ஜினியாவின் த​லைநகராக ​வேண்டும் என்று ​பேசுமாறு கூறினார். அத​னை மனமுவந்து ஏற்ற புக்கர் ஊர் ஊராகச் ​சென்று உ​ரையாற்றினார். முடிவில் அவரது நாவன்​மையால் சார்​லெஸ் என்ற ஊ​ரே வர்ஜினியாவின் த​லைநகரமாக ஆயிற்று. மகிழ்வுற்ற அவ்வூரார் புக்க​ரை அரசியலில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். புக்கர் அத​னை மறுத்துவிட்டுத் தனது இனத்தாருக்கு கல்வி வழங்குவ​தை​யே தனது த​லையாய கட​மையாகக் கருதிச் ​செய்யலானார்.

பாத்துக்கிட்டீங்களா….?சுயநலமில்லாம ​பொதுநலத்​தோட புக்கர் நடந்துகிட்ட​தை. அவர் நி​னைச்சிருந்தா ​பேசாமல் தனது வாழ்க்​கைய​யை மட்டும் உயர்த்திக் ​கொண்டிருக்கலாம். ஏதுமற்ற நீக்​ரோ மக்களுக்கு ஏ​தேனும் ​செய்ய ​வேண்டும் என்ற உயரிய எண்ணம் அவரிடம் ​மே​லோங்கி இருந்ததால என் கடன் பணி ​செய்து கிடப்ப​தே என்பதற்​கேற்ப மக்களுக்குத் ​தொண்டாற்ற முயன்று அத​னைச் ​செவ்வ​னே ​செய்து வந்தார்.

புக்கரின் பணி​யைக் ​கேள்வியுற்ற ஆம்ஸ்ட்ராங்கு என்ற ​ஹேம்புடன் பள்ளிப் ​பெரியார் புக்க​ரை அப்பள்ளிக்கு உ​ரையாற்ற அ​ழைத்தார். அவரது உ​ரையில் மன​தைப் பறி​கொடுத்த அவர் புக்க​ரை அங்கு தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் ​கொடுக்குமாறு ​கேட்டுக் ​கொண்டார். புக்கரும் அங்கு தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் ​கொடுத்தார். எந்தப் பள்ளியில் ஆறு ஆண்டுகள் து​டைப்பத்​தைக் ​கொண்டு ​பெருக்கி ​வே​லை ​செய்து கல்வி கற்றா​ரோ அப்பள்ளியி​லே​யே ஆசிரியராகப் புக்கர் பணியாற்றியது அவரது உ​ழைப்பிற்குக் கி​டைத்த ​வெற்றியாகும்.

புக்கரின் பணிகள்

அலபமா என்ற இடத்தில் டஸ்கீகி என்ற ஊரில் நீக்​ரோக்களுக்காகப் பள்ளிக்கூடம் ​தொடங்க ​வேண்டும் என்று அவ்வூரார் விரும்பி அத​னை ஆம்ஸ்ட்ராங்கிற்குத்  ​தெரியப்படுத்தி உதவுமாறு ​வேண்டினர். ஆம்ஸ்ட்ராங்கும் புக்க​ரை அங்கு அனுப்பி பள்ளி​யைத் ​தொடங்கி நடத்துமாறு ​கேட்டுக்​​கொண்டார்.

அதன்படி புக்கர் டஸ்கீகி என்ற ஊருக்குச் ​சென்று 1881-ஆம் ஆண்டு ஜூ​லை மாதம் 4-ஆம் ​தேதி பள்ளி​யைத் ​தொடங்கினார். பலகாலும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி அப்பள்ளி​யை புக்கர் ​தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முப்பது மாணவர்க​ளைக் ​கொண்டு ​தொடங்கப்பட்ட பள்ளி நாளாக நாளாக வளர்ச்சிய​டைந்தது.

புக்கர் பள்ளிக்​கென்று தனிக்கட்டடம் ஒன்​றையும் தன்னு​டைய ​சொந்த முயற்சியால் கட்டினார். மாணவர்களுக்குக் கல்வியுடன் ​வேளாண்​மை உள்ளிட்ட ​தொழி​லையும் கற்பித்தார். மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் தா​னே ​தோட்டத்தில் இறங்கி ​வேளாண்​மைத் ​தொழி​லைச் ​செய்தார். அதனால் மாணவர்கள் தமது ஆசிரியரான புக்கரின் வழியி​னைப் பின்பற்றி அவர் கூறியபடி​யே கல்வி கற்றனர். நீக்​ரோக்களுக்கு பல்​வேறு வ​கைகளில் நல்ல பண்பட்ட வாழ்க்​கை மு​றை​யை புக்கர் கற்றுக் ​கொடுத்தார். உ​டைச் சுத்தம், இருப்பிடச் சுத்தம் உள்ளிட்ட நல்ல பழக்க வழக்கங்க​ளையும் மாணவர்களுக்குக் கற்றுக் ​கொடுத்து அவர்க​ளை வாழ்க்​கையில் உயர்த்தினார்.

மாணவர்களுக்காகக் கடன்வாங்கிப் பள்ளி​யைப் புக்கர் நடத்தினார். அவருக்கு ஒலிவியா என்ற ​பெண் ஆசிரியர் ​பேருதவி ​செய்தார். புக்கரும் ஒலிவியா அம்​மையாரும் ​சேர்ந்து பலரிடம் இரந்து ​பொருள் ​பெற்று மாணவர்க​ளைக்  ​கொண்டு பள்ளிக்கூடம் கட்டினர். உடல் ​பொருள் ஆவி அ​னைத்​தையும் புக்கர் இதற்காகச் ​செலவிட்டார்.

பலரிடமும் புக்கர் கடன்வாங்கிப் பள்ளி​யைக் கட்டினார். ஆம்ஸ்ட்ராங் புக்கர் கட்டும் பள்ளிக்குத் தான் ​சேமித்து ​வைத்திருந்த பணம் முழுவ​தையும் ​கொடுத்து உதவினார். டஸ்கீகியில் பள்ளி புக்கரின் முயற்சியால் புதுப் ​பொலிவு ​பெற்றது.

திருமணமும் ​தொடர்ந்த துயரமும்

இந்நி​லையில் புக்கர் 1882-ஆம் ஆண்டு ​பேனிஸ்மித் என்ற ​பெண்​ணை மணந்து ​கொண்டார். இப்​பெண்மணி புக்கருக்குப் பலவ​கையிலும் உதவி ​செய்து வந்தார். கணவரின் மனமறிந்து பல ​வே​லைக​​ளைச் ​செய்தார். இதனால் புக்கர் மகிழ்ச்சிய​டைந்தார். இவ்வில்லற மகிழ்ச்சியில் அவர்களுக்கு ​போர்ஷியா வாஷிங்குடன் என்ற ​பெண் குழந்​தை பிறந்தது. புக்கர் ​பெரு மகிழ்ச்சி அ​டைந்தார். இருப்பினும் அம்மகிழ்ச்சி நி​லைக்கவில்​லை.

அவ​ரையும் அவரது குழந்​தை​யையும் தவிக்கவிட்டுவிட்டு ​பேனிஸ்மித் 1884-ஆம் ஆண்டு இறந்து ​போனார். புக்கர் மன​மொடிந்து ​போனார். தனக்குப் பல்லாற்றானும் உதவியாய் இருந்த ம​னைவியார் மரித்துப் ​போனா​ரே என்று துயரத்திற்கு ஆளானார் புக்கர்.

இருப்பினும் மனந்தளராது தனது பணி​யைத் புக்கர் ​தொடர்ந்தார். ​செங்கல் சூ​ளை ​போட்டு அதன் மூலம் ​செங்கல் தயாரித்து விற்ப​னை ​செய்து அதன் வாயிலாகக் கி​டைத்த வருவா​யைப் பள்ளியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். இது​போன்​றே பல்​வேறு ​தொழில்களும் அங்கு பயின்ற மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அப்பள்ளி வளர்ந்து கல்லூரியாக உயர்ந்தது. பலரும் அங்கு வந்து அத​னைக் கண்டு வியந்தனர்.

அதிலும் குறிப்பாக புக்கருக்குக் கடன் ​கொடுத்த மார்ஷல் என்பவரும் முதன் முதலில் ​ஹேம்புடன் பள்ளியில் புக்கருக்கு து​டைப்பத் ​தேர்வு நடத்திகல்வி கற்பதற்கு இடங்​கொடுத்து உதவிய ​மேரி ​மேக்கி என்ற அம்​மையாரும் புக்க​ரை டஸ்கீகிக்கு அனுப்பிய அவரது வளர்ச்சியில் அக்க​றையு​டைய ஆம்ஸ்​டிராங்கும் வந்து கல்லூரியின் வளர்ச்சி​யைக் கண்ணுற்றுப் ​பெரிதும் மகிழ்ந்து புக்க​ரைப் ​போற்றினர்.

மாணவர் நலம் ​பேணிய மாண்பாளர்

மாணவர்களுக்கு உடுக்க உ​டையும் உண்ண உணவும் இருக்க இடமும் படுப்பதற்கு நல்ல படுக்​கையும் ​கொடுத்து அவர்க​ளை நன்கு ​தொழி​லோடு கல்வி​யையும் கற்கச் ​செய்தார் புக்கர். உலகம் வறு​மை​யை மன்னிக்கும் ஆனால் அழுக்​கை மன்னிக்காது என்பதற்​கேற்ப அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு நற்பழக்க வழக்கங்க​ளையும் வாழ்க்​கை மு​றைக​ளையும் புக்கர் கற்றுக் ​கொடுத்தார்.

மாணவ மாணவிகள் அதிகமாக அங்கு பயில்வதற்கு வந்ததால் அலபாமா ஹால் என்ற ஒன்​றை முன்பு​போலப் பலரிடமும் ​பொருளுதவி ​பெற்றுப் ​பெரும் முயற்சியால் புக்கர் கட்டி முடித்தார். இந்நி​லையில் டஸ்கீகி கல்வி நி​லையம் பணமு​டையால் தத்தளித்தது. புக்கரும் ஒலிவியா அம்​மையாரும் பல இடங்களுக்கும் ​சென்று ​பொருள் ​சேகரித்து தத்தளிப்​பைத் தடுக்க முயன்றனர்.

இத்த​கைய தருணத்தில் புக்கருக்கு ஹண்டிங்டன் என்ற ​பெரியார் புக்கரின் ​தொண்டி​னையும் அவரது தியாக உள்ளத்​தையும் உணர்ந்து ஐம்பதாயிரம் டாலர் ​கொடுத்து உதவினார். ம​ழையின்றி வாடிய பயிருக்கு ​வேரில் நன்னீர் ஊற்றிய​தைப் ​போல் அவ்வுதவி இருந்தது.

அலபாமா மண்டலம் முதலில் இரண்டாயிரம் நிதி உதவி அளித்து வந்தது. பின்னர் அவ்வுதவி​யை மூவாயிரமாக அதிகரித்துக் ​கொடுத்தது. இதற்குப் புக்கரின் கடும் உ​ழைப்​பே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நி​லையில் தமக்குத் ​தோ​ளோடு ​தோள் நின்று உதவிய ஒலிவியா அம்​மையா​ரை புக்கர் 1885-ஆம் ஆண்டு இரண்டவதாகத் திருமணம் ​செய்து ​கொண்டார். அவ்வம்​மையார் பள்ளிக்கும் வீட்டிற்கும் அரிய பல ​தொண்டுக​ளைச் ​செய்தார். அவர் இரு குழந்​தைக​ளைப் ​பெற்றுவிட்டு புக்க​ரையும் குழந்​தைக​ளையும் அநா​தைகளாக்கிவிட்டுவிட்டு 1889-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்​வை நீத்தார்.

புக்கருக்கு மீண்டும் துன்பம் ​நேர்ந்தது. அவற்​றைப் புக்கர் ​பொறுத்துக் ​கொண்டு தமது கட​மைக​ளைச் ​செய்தார். அட்லாண்டா மகாச​பையின் முன்னர் கவர்னர் புல்லட் த​லை​மையில் புக்கர் அரிய​தொரு உ​ரையாற்றினார். அவ்வு​ரையில் ​வெள்​ளையரும் நீக்​​ரோக்களும் இ​ணைந்து ஒற்று​மையுடன் வாழ ​வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது உ​ரை​யைக் ​கேட்ட அ​னைவரும் புக்க​ரைப் பாராட்​டினர்.

புக்கர் 1893-ஆம் ஆண்டு மார்க்க​ரெட் ​ஜேம்ஸ் என்ற ​பெண்மணி​யை மணந்தார். இவர் டஸ்கீகி கல்வி நி​லையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவராவார். இவ்வம்​மையார் பிஸக்(Fisk) பல்க​லைக்கழகத்தில் பட்டம் ​பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. புக்கர் இல்லாத சமயத்தில் இவரும் வாரன் ​லோகன் என்பவரும் ​சேர்ந்து கல்வி நி​லையத்தின் பணி​யைச் ​செவ்வ​னே ​செய்து வந்தனர். புக்கர் பல்​வேறு இடங்களுக்குப் பயணித்து டஸ்கீகி கல்விநிறுவனத்திற்கு நிதி ​சேகரித்து அத​னை மாணவர்களுக்குப் பயன்படுமாறு ​செய்தார். மாணவர் நலம் ​பேணும் மாண்பாளராகப் புக்கர் திகழ்ந்தார்.

ம​றைந்த மனித​நேயர்

இவ்வாறு மனித​நேயம் மிக்கவராகத் திகழ்ந்த புக்க​ரை ஐ​ரோப்பிய நாடுகள் அ​னைத்தும் தங்கள் நாடுகளில் சுற்றுப் பயணம் ​மேற்​கொண்டு உ​ரையாற்றுமாறு அ​​ழைத்தன. அவர் அந்நாடுகளில் உள்ளவர்களின் அ​ழைப்​பை ஏற்றுக் ​கொண்டு ஐ​ரோப்பிய நாடுகளுக்குப் பயணித்தார். அங்கு பல்​வேறு நிறுவனங்களில் எழுச்சியு​​ரையாற்றினார். நியுயார்க் நகரத்திற்குச் ​சென்றார். அந்நகரிலிருந்து 1899-ஆம் ஆண்டு ​மே மாதம் பத்தாம் நாள் புறப்பட்டார். பலரும் புக்க​ரை அன்​போடு வழியனுப்பி ​வைத்தனர். அவருடன் அவரது ம​னைவியாரும் பயணித்தார்.

1896-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் நாள் ஹார்வர்டு(Harvard) பல்க​லைக்கழகம் புக்கருக்கு எம்.ஏ பட்டத்​தை வழங்கிச் சிறப்பித்தது. இஃது புக்கரின் ​தொண்டி​னைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டமாகும். நீக்​ரோக்களுள் முதன் முதலில் இத்த​கைய ​கெளரவப் பட்டம் ​பெற்றவர் புக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அடி​மைச் சமுதாயத்திலுள்ள மக்க​ளை முன்​னேற்றுவதற்காக புக்கர் ஆற்றிய அரும்​பெரும் பணிகளுக்காக​வே இப்பட்டம் வழங்கப்பட்டது.

1898-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் நாள் அ​மெரிக்க ஐக்கிய மாகாணத்துத் த​லைவர் ​மெக்கன்லி என்பவரும் அவரது அ​மைச்சர்களும் டஸ்கீகி கல்வி நிறுவனத்திற்கு வரு​கைபுரிந்து அதன் ​செயல்பாடுக​ளைப் பார்​வையிட்டனர். இது அந்நிறுவனத்திற்கும் புக்கரின் அபரிமிதமான உ​ழைப்பிற்கும் கி​டைத்த ​பெரும்​பேறாகும்.

புக்கர் டஸ்கீகி பள்ளி​யைத் ​தொடங்கிய காலத்திலிருந்து இருந்து வந்த எதிர்பார்ப்பு ​மெக்கன்லி வரு​கையின்​போது நி​றை​வேறியது. பலரும் வரு​கைபுரிந்து இந்நிறுவனத்​தைப் பார்த்தல் ​வேண்டும் என்ற புக்கரின் விருப்பம் முழு​மை அ​டைந்தது. அ​னைவரும் புக்க​ரையும் அவரது கல்வி நிறுவனத்​தையும் பலவாறு புகழ்ந்தனர். அடி​மைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்விற்கு புக்கர் பட்ட பாடுகளின் ​வெளிப்பாடாக டஸ்கீகி கல்விநிறுவனம் விளங்கிய​தைக் கண்டு ​மெக்கன்லி உள்ளிட்​டோர் வியந்தனர்.

​மென்கன்லியின் வரு​கை நீக்​ரோ மக்களுக்குப் புத்துணர்ச்சி​யைத் தந்தது. அவர்கள் அந்நா​ளைச் சிறப்பானதாகக் கருதிக் ​கொண்டாடினர். அக்​கொண்டாட்டத்தில் ​வெள்​ளையினத்தனவரும் கலந்து ​கொண்டனர் என்பது சிறப்பிற்குரியதாகும். அவ்விழாவில் பங்​கேற்ற ​மெக்கன்லி புக்கருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றிக​ளைத் ​தெரிவித்தார்.

எந்த ஊரில் குடியிருப்பதற்குக்கூட சரியான இடமின்றி ​தோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் அடி​மையாக வாழ்ந்து வாழ்ந்து வந்தா​ரோ அந்த ஊர் மக்கள் அவ​ரை 1900-ஆம் ஆண்டு புக்க​ரை வர​வேற்று சிறப்பு​ரையாற்றுமாறு கூறினர். பாத்துகிக்ட்டீங்களா…நம்ம வள்ளுவப் ​பெருந்த​கை ​சொன்ன முது​மொழி ஒண்ணு ஒங்க ஞாபகத்துல வருதா….? என்னதுங்குறீங்களா…?

“மிகுதியான் மிக்க​வை ​செய்தா​ரை தாந்தன்

தகுதியான் ​வென்று விடல்”

அப்படீங்கற திருக்குறள்தாங்க… எங்க அடி​மை வாழ்வு வாழ்ந்தா​ரோ அந்த ஊர் மக்க​ளே அவ​​ரோட தகுதி​யையும் அறி​வையும் பார்த்து வியந்து அவ​ரை அ​ழைத்துப் பல்​வேறு சிறப்புக​ளைச் ​செய்து ​பெரு​மைப்படுத்திப் ​பேசச் ​சொன்னாங்கன்னா புக்கரு​டைய ​பெரு​மை​யை என்ன​ன்னு ​சொல்லறது…அறிவால புக்கர் சாதிச்சாரு….அறிவுதாங்க எல்லாவற்றிலும் மிகப் ​பெரியது…அறிவால சாதிக்க முடியாதத எதாலயும் சாதிக்க முடியாது…​தெரிஞ்சுக்​கோங்க… சரி புக்க​ரைப் பத்திச் ​சொல்​றேன்…

இப்படி உ​ழைப்பால தானும் உயர்ந்து தன்​னைச் சார்ந்தவங்க​ளையும் உயரச் ​செய்த புக்கர் தி. வாஷிங்டன் 1915-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் நாள் இவ்வுல​க வாழ்​வை நீத்து விண்ணுல​க வாழ்​வை எய்தினார். அவர் ம​றைந்தாலும் ஒடுக்கப்பட்ட அடி​மைப்படுத்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற த​லைவராக அவர்களின் ​நெஞ்சங்களில் வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்காரு…அவ​ரோட தியாகம் இன்று வ​ரை ஒளிர்ந்து ​கொண்​டே இருக்குது.

அவர் ஏற்றி ​வைத்த கல்வி விளக்கு உலக​மெல்லாம் பரவி ஒளிவீசிக்​ கொண்​டே இருக்குது. இத்த​கைய ​பெருந்த​கையாளரான புக்கரின் திருவுருவச் சி​லையானது டஸ்கீகி கல்விநி​லையத்தின் முன்பு நிறுவப்பட்டு அவரது தியாக உ​ழைப்​பை உலகிற்குச் ​சொல்லிக் ​கொண்டிருக்கின்றது. அச்சி​லையின் கீழ் “புக்கர் தி. வாஷிங்டன் 1858-1915 அவர் தமது சமூகத்தின்அறியா​மையாகிய முகமூடி​யை அகற்றிக் கல்வியாலும் ​கைத்​தொழிலாலும் முன்​னேற்றத்திற்குரிய வழி​யைக் காட்டி அழகுபடுத்தினார்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.

“அரு​மை உ​டைத்​தென்று அசாவா​மை ​வேண்டும்

​பெரு​மை முயற்சி தரும்”

என்ற திருக்குறளுக்கு உதராணமா வாழ்ந்தாரு புக்கர். அவ​ரோட வாழ்வு நமக்​கெல்லாம் ஒரு உந்து சக்திய தருதுல்ல…முயற்சியும் உ​ழைப்பும் இருந்தா இந்த உலகத்துல ​பெரிய ​​பெரிய சாத​னைக​ளைச் சாதிக்கலாம்…நாமும் உயரணும் நம்​மைச் சார்ந்தவங்க​ளையும் உயர்த்தணும்…அப்பத்தான் வாழ்க்​கை வசந்தமா இருக்கும்…என்ன புரிங்சுக்கிட்டீங்கள்ள…அப்பறம் என்ன ஒங்க​ளோட குறிக்​கோள அ​டைய ​பெருமுயற்சி பண்ணுங்க…உ​ழைங்க ​வெற்றி ஒங்களுக்குத்தான்….

பிறந்த சில வருடங்களில் தந்​தை​யை இழந்தார்….அடுத்து ச​கோதரன்….அடுத்து ச​கோதரி…இப்படித் ​தொடர்ந்த துர்மரணங்கள்…எங்கும் இருள்…இருள்…துன்பம்…இ​தைத் தவிர அவருக்கு எதுவும் இந்த உலகத்தில் ​தெரியவில்​லை….வாழ்க்​கை தந்த வடுக்களா​லே​யே அவர் தத்துவஞானியாகி விட்டார்….காதல் அவருக்குக் ​கை​கொடுத்தது…பல அறிஞர்களின் ​தொடர்பு அவருக்கு ஏற்பட்டது…அ​மெரிக்காவின் சிறந்த சிந்த​னையாளராகத் திகழ்ந்தார்….​”வெற்றியின் முதல் ரகசியம் தன்னம்பிக்​கையாகும்…” ”அடி​மைத்தன​மே இருக்கக் கூடாது. அதனால் தீண்டப்படும் ஒவ்​வொன்றும் நஞ்சாய் நாசம​டையும்” இப்படி​யெல்லாம் தத்துவங்கள் பலவற்​றைச் ​சொன்னாரு அவரு யாரு ​​தெரியுதா…என்ன ​யோசிக்கிறீங்க…சரி…சரி ​யோசிங்க…​யோசிங்க…அடுத்த வாரம் பார்ப்​போம்…(​தொடரும் …………52)

Series Navigationவாழ்க நீ எம்மான் (2)அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலிதொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்குமருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்ராதாதினமும் என் பயணங்கள் – 10திண்ணையின் இலக்கியத் தடம் – 28ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *