Posted in

பொறுமையின் வளைகொம்பு

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014
பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி
வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன்
விட்டுவிடுவேனோ என்ற
பெரும் பயத்தில் மனது
துடிக்கிறது படபடத்து
விட்டுவிட்டேனென்றால்
வளைந்த கொம்பு
முழு வீரியத்துடன் எம்பி நிமிரும்
அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது..
விடக் கூடாதென்ற வைராக்கியம்
வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது
அழுத்திப் பிடித்திருப்பதால்
 தசைகள் வலிக்கிறது.. ரத்தமும் கசிகிறது
கை ரத்தக் கசிவால்
ஒருவேளை விட்டுவிட நேரலாம்..
 கூடாதென்ற பிடிவாதத்தில்
தொங்குகிறது மனம்
ஆனால் விடாமல் இருந்தால்
 மீண்டும் மீண்டும் நான்
ரணப்பட வேண்டி வரலாம்
முடியும்வரை பிடித்திருப்பேன்
முடியாதெனும் நிலையில்
விட்டுவிட்டு  எங்கேனும் போவேனொருநாள்
கைகள் துடைத்து

சேதங்கள் பற்றிய கவலையற்று..

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *