உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

This entry is part 13 of 45 in the series 9 அக்டோபர் 2011

தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் 23 பேருக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கு.சி.பா.அறக்கட்டளையின் தலைவரும், செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி. ராமசாமி, பெங்களூர் மென்போருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ராம் கிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேளாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளார் கு.சின்னப்பபாரதி உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று ,எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில், பனிநிலவு நூலை எழுதிய லண்டனில் வாழும் இலங்கை எழுத்தாளர் ரா.உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு
இலக்கியப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள்
சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும்

பரிசு பெற்றவர்கள்
வெளிநாடு

1. வி. ஜீவகுமாரன்(டென்மார்க்)
2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)
3. சை. பீர்முகமது (மலேசியா)
4. நடேசன் (ஆஸ்திரேலியா)
5. தெணியான் (இலங்கை)
6. கே. விஜயன் (இலங்கை)
7. சிவசுப்ரமணியன் (இலங்கை)
8. தனபாலசிங்கம் (இலங்கை)
9. கலைச் செல்வன் (இலங்கை)
10. உபாலி லீலாரத்னா (இலங்கை)
11. புரவலர் ஹாசிம் உமர்
பரிசு பெற்றவர்கள்
தமிழ்நாடு

12. ஆர். எஸ். ஜேக்கப்
13. சுப்ரபாரதிமணியன்
14. ப. ஜீவகாருண்யன்
15. குறிஞ்சி வேலன்
16. மயிலை பாலு
17. லேனா தமிழ்வாணன்.
18. வெண்ணிலா
19. ஜீவபாரதி
பூங்குருநல் அசோகன்
20. டாக்டர். H. பாலசுப்ரமணியம் – டில்லி
21. என். சிவப்பிரகாசம்.

Series Navigationமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்குஜென் ஒரு புரிதல் – பகுதி-14
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *