பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்

author
241
0 minutes, 13 seconds Read
This entry is part 35 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

 

Silencing Pakistan’s Minorities
By HUMA YUSUF

(ஷபாஸ் பட்டி : இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைச்சர். கிருஸ்துவர்)

 

கராச்சியில், சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையில் நகரத்தின் முக்கிய தெருக்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் எரிந்துகொண்டிருந்தன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வெடித்தன. நான்கு பேர்கள் காயமடைந்தார்கள். காரணம் ஷியா ஆக்‌ஷன் கமிட்டி Shia Action Committee (S.A.C.) அமைப்புக்கும் போலீஸுக்கும் நடந்த சண்டை.

பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி என்ற அரசாங்க அமைப்பு, பாகிஸ்தான் ஷியா பிரிவினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறை நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு ஆவணப்படுத்தியிருந்த இணையப்பக்கத்தை தடை செய்ததற்காக  ஷியா ஆக்‌ஷன் கமிட்டி தெருவில் இறங்கி தடையுத்தரவுக்கு எதிராக போராடியது. இதனை கட்டுப்படுத்த போலீஸ் தெருவில் இறங்கியது. ஷியாக்களின் இணையதளத்தை தடுக்கும் இந்த அரசாங்க தடையுத்தரவு பாகிஸ்தானில் அதிகரித்துவரும் ஷியா பிரிவினர், மற்றும் இதர சிறுபான்மையினர் மீதான வன்முறையின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். 226 முஸ்லீம்கள் 63 நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய மதப்பிரிவுகளுக்குள் நடக்கும் சண்டையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலுச்சிஸ்தான் மாநிலத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட ஹஜாரா இனத்தவர்(இவர்களில் பெரும்பான்மையினர் ஷியாக்கள்) 2012 ஆண்டில் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2008இலிருந்து 2011 வரைக்கும் சுமார் 400 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

இந்த பயங்கரமான சூழ்நிலையில், பாகிஸ்தானின் மத சிறுபான்மையினர் இணையவெளியில் தங்களது துயரங்களை கொட்ட பின்வாங்கியிருக்கிறார்கள். இங்கே தங்களது உரிமைகளுக்கும், தங்கள் மீது நடக்கும் அட்டூழியங்களையும் ஆவணப்படுத்தவும் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த வெளியும் அவர்களுக்கு மூடப்படுகிறது.
பாகிஸ்தானின் அரசாங்க அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் இணையதளங்களை மூடுவதை சகட்டுமேனிக்கு செய்து வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று கூட சொல்வதில்லை. இதுவரை கணக்கிட்டதில் சுமார் 15000க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் “ஆபாசம், மதநிந்தனை” காரணங்களுக்காக தடை செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி, மத சிறுபான்மை பிரிவுகளின் இணையதளங்களையும் தடை செய்வதை அதிகரித்திருக்கிறது. சென்ற மாதம், அஹ்மதி முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்களின் தளங்களை தடை செய்தது. இந்த பிரிவினர் பாகிஸ்தானின் சட்டத்தின் படி முஸ்லீமல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மனித உரிமை குழுக்களும், இணையவெளியில் உழைப்பவர்களும், பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அத்தாரிட்டியின் இப்படிப்பட்ட தான் தோன்றித்தனமான கொள்கைகளை எதிர்த்து பேசி வருகிறார்கள். அரசாங்கத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களின் சிபாரிசு மூலமாகத்தான் இந்த தடையுத்தரவை நீக்க முடியும் என்று ஆகிவிட்டிருக்கிறது. சென்ற புதன்கிழமை பிரதம மந்திரியின் உள்துறை ஆலோசகர் ரஹ்மான் மாலிக், இந்த தொலைத்தொடர்பு அத்தாரிட்டியுடன் தொடர்பு கொண்டு ஷியா ஆக்‌ஷன் கமிட்டியின் இணையதளத்தின் மீது இருக்கும் தடையுத்தரவை நீக்க சொன்னார். ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறையை அழைத்து, அந்த இணையதளத்தில் உள்ள ”ஆட்சேபத்துக்குரிய செய்திகளை” நீக்கும்படியும், அந்த செய்திகளை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கட்டளையிட்டார்.

 

பயங்கரவாத குழுக்கள் எந்த வித தடையுமின்றி கட்டுப்பாடுமின்றி இணையதளத்தில் ஆட்டம் போட அனுமதிக்கப்பட்டிருப்பதை ஒப்பிடும்போது, சிறுபான்மையினர் நடத்தும் இணையதளங்கள் மீது நடக்கும் இப்படிப்பட்ட அடக்குமுறை இன்னும் மோசமாக பாகிஸ்தானை காட்டுகிறது. 2008இல் மும்பை மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் உறுப்பினரான அபு ஜிண்டால் பல இணைய தளங்களை நடத்தவும் ஒருங்கிணைக்கவும், செய்திகளை பரப்பவும் பயிற்றுவிக்கப்பட்ட பெரிய இணைய குழுவை இந்த பயங்கரவாத குழு வைத்திருப்பதாக இந்திய புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மற்ற வன்முறை பயங்கரவாத குழுக்களும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கிறார்கள்.

பலுச்சிஸ்தானில் ஷியா பிரிவு ஹஜாரா இனமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாங்களே  என்று லஷ்கர் ஈ ஜங்வி என்ற ஷியா எதிர்ப்பு பயங்கரவாத குழு ட்விட்டரில் அறிவித்தது சில வாரங்களுக்கு முன்னால் எனக்கு வந்தபோது நான் திகிலடைந்தேன். ஷியா பிரிவினரின் இணையதளம் முடக்கப்பட்டபோதும், லஷ்கர் ஈ ஜங்வியின் இணையதள செயல்பாடு தங்கு தடையின்றி நடந்து வந்தது.  இவர்கள் ஷியா பிரிவினர் மீது எச்சரிக்கை விடுத்ததும், விடுத்துகொண்டிருப்பதும் அச்சுருத்தலும் தங்கு தடையின்றி இன்னமும் நடக்கிறது. இந்த வருட ஆரம்பத்தில், லஷ்கர் ஈ ஜங்வி அமைப்பை சேர்ந்தவர் ஒருவர் இம்ரான் கான்(கிரிக்கட் வீரராக இருந்து அரசியல்வாதி ஆகி, இன்று பாகிஸ்தான் டெஹ்ரீக் ஈ இன்ஸாப் என்ற அரசியல் கட்சியை நடத்திவருபவர்) இந்த குழுவுக்கு எதிராக பேசியதால், அவரது உயிரை எடுப்போம் என்று பகிரங்கமாக ட்விட்டரில் எச்சரித்தார்.
ஆனால், டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி, இந்த விஷயங்களை “ஆட்சேபத்துக்குரியதாக” கருதுவதில்லை. இதே போல, பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய பேச்சாளர்கள் மற்றவர்கள் மீது வெறுப்பை கக்கும் பேச்சுக்களும், பயங்கரவாதிகள் கைதிகளது தலைகளை அறுத்து எடுக்கும் வீடியோக்களும் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால், மத சிறுபான்மையினர் முக்கியமாக அஹ்மதியாக்கள் பற்றிய செய்திகளை கண்டறிவது கூட கடினமாக இருக்கிறது.

சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களது இணையதளங்களை முடக்குவது, அடிப்படை கருத்துரிமையின் எதிர்காலத்தை பற்றி அச்சப்பட வைக்கிறது. இது பாகிஸ்தானின் மத சிறுபான்மையினர் மட்டுமே கவலைப்பட கூடிய விஷயமில்லை. யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லாத இந்த அதிகாரிகளின் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்ட அனைவரது கருத்துரிமைக்கு அச்சுருத்தலே. எதற்காக சென்சார் நடக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்று சொல்லும் இந்த அமைப்பு, இணையதளத்தை தடை செய்யும் தனது அதிகாரத்தை இன்னும் வலுப்படுத்திக்கொள்ளவே முயல்கிறது.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அத்தாரிட்டி தனது முயற்சியில் வெற்றியடையுமானால், பாகிஸ்தானின்  குடிமக்களில் நலிந்த நிலையிலுள்ளவர்கள் தங்களது குரலை வெளிப்படுத்த நிதர்சன உலகிலோ, அல்லது இணைய வெளியிலோ ஒரு வாய்ப்பும் இல்லாமல் போவார்கள். அதே நேரத்தில் இந்த சிறுபான்மையினரை அச்சுருத்தும், கொல்லும் பயங்கரவாத குழுக்கள் தங்களது வெறுப்பு பேச்சுக்களை எந்த தடையுமின்றி பரப்பிக்கொண்டிருப்பார்கள்.

——————————————————————————–
Huma Yusuf is a columnist for the Pakistani newspaper Dawn and was the 2010-11 Pakistan Scholar at the Woodrow Wilson International Center for Scholars in Washington.

Series Navigation2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவிதாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.
author

Similar Posts

241 Comments

  1. Avatar
    dharmaraj.A says:

    This type of threats are not new to the world.Who is ready to act against these things?. Most of the leaders are ready only to criticise.They are not ready to point out any deficiency in the religious faith.There is no transparency in communist countries.Democratic countries are lead only by majority.We can not expect more than what we have.Scientific developements are also unable to overcome these things.THE ONLY FINAL SOLUTION IS GOD(religion).

  2. Avatar
    தங்கமணி says:

    முகம்மது அலி ஜின்னா ஒரு சியா பிரிவை சார்ந்தவர். அவர் இறந்தபோது சியா பிரிவினரின் வழக்கப்படி ஓதினார்கள். அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், தேவபந்தி பிரிவை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் அரசின் சார்பாக ஓதி சவ அடக்கம் செய்தார்கள். இந்த ஷியா சுன்னி சண்டை அப்போதே ஆரம்பித்துவிட்டது.

    சுன்னி பிரிவினரும் ஷியா பிரிவினரும் அஹ்மதியா பிரிவினரும் அனைவருமே மிகத்தீவிரமாக பாகிஸ்தான் கோரினார்கள். அதன் பிறகு, அங்கிருந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் பகிரங்கமாக முஸ்லீமாக மாற்றினார்கள். காபிர்கள் என்று அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை கண்டு வருந்தினால் பேசாமல் முஸ்லீமாகிவிட வேண்டியதுதானே என்று எகத்தாளத்துடன் பொது மேடைகளில் பேசினார்கள்.

    இன்று அதே வார்த்தை ஷியாக்களை பார்த்தும் அஹ்மதியாக்க்களை பார்த்தும் சொல்லப்படுகிறது. சுன்னிகளாக மாறிவிட வேண்டியதுதானே என்று ஷியாக்களை பார்த்து சொல்கிறார்கள். பாகிஸ்தான் பிரிந்த போது இந்துக்களும் சீக்கியர்களும் யார் மாற்றினார்களோ அவர்களது பிரிவில் மாறினார்கள். ஷியா என்று கண்டார்களா அஹ்மதியா என்று கண்டார்களா சுன்னி என்று கண்டார்களா? இன்று இன்னொருமுறை “சரியான பிரிவுக்கு” மாற வேண்டுமாம்.

    ஜின்னாவின் வீடு பம்பாயில் இருந்தது. அந்த வீட்டை தன்னிடம் தரவேண்டும் என்று அவரது மகள் தினா வாடியா (நெவில் வாடியா என்ற பார்ஸியை திருமணம் செய்து பார்ஸியாக ஆனவர்) அந்த வீட்டை இந்து சொத்துரிமை சட்டப்படி மகளுக்கே வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார். ஜின்னா சார்ந்த இஸ்மாயிலி கோஜா பிரிவினர் இந்து சொத்துரிமை சட்டப்படியே நடந்துகொள்கின்றனர்.

    பொயட்டிக் ஜஸ்டிஸ்!

    1. Avatar
      Bala says:

      [அந்த வீட்டை இந்து சொத்துரிமை சட்டப்படி மகளுக்கே வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.]
      கேட்டார் ஆனால் கிடைக்கவில்லை. அந்த வீடு தனக்கே சொந்தம் என்று இந்திய அரசு வாதிட்டு வெற்றி பெற்றது.

  3. Avatar
    smitha says:

    This is for our dear kavya & Piriyan,

    Bustling with life till recently, the streets of Jacobabad in Pakistan’s Sindh province now wear a forlorn look.

    The town, which is home to 90 per cent of the country’s Hindu population, has witnessed families leaving in droves amidst a growing sense of insecurity and a prevailing fear psychosis arising out of reported persecution of minorities.

    “Almost 60 families have left Jacobabad because people are feeling insecure here, we have no one to support us, not socially and not at the government level,” a Hindu resident said.

    Festering since long, the issue hit headlines after over 250 Hindus belonging to the Balochistan and Sindh provinces crossed over to India this early month, amid reports of an exodus following the kidnapping of a Hindu girl.

    The community has been the target of extortions, kidnapping and forced conversions in these provinces.

    While many of the Pakistani Hindus, who have come to India on pilgrimage visas, are likely to stay on and seek asylum, most are under pressure from the Pakistani government to give written assurances ensuring that they would return.

    On record, they insist that are secure in their country and will go back to their farms and villages.

    “We are very happy where we stay, we are safe. We are going on a holiday as per our wish…we will come back in 30 days,” Om Prakash, a resident of Jacobabad, said.

    But that can hardly hide the apprehensions of a community which is fast becoming a soft target of Islamic extremism.

    There are only 3% Hindus in Pakistan and their numbers continue to dwindle.

    The mass migration of Hindus has also come as a major embarrassment for the Pakistani establishment, more so for the ruling Pakistani People’s Party (PPP) which prides itself on being secular and liberal.

    President Asif Ali Zardari, in fact, has constituted a three-member committee to meet the Hindu community across Sindh and express solidarity and instill a sense of security among them.

    However, the leaders of the community as well as rights activists say that the actions are a case of too little, too late.

    “I am Hindu, but I have read the Quran and am very impressed by the religion. But I am scared of saying out aloud that I am impressed by Islam, because I fear that if I tell someone that I am impressed by Islam, they might forcefully convert me to a Muslim,” Mangla Sharma, a Pakistani Hindu, said.

    The fear is not without reason.

    The conversion of Rinkle Kumari, a 19-year-old Hindu girl, to Islam a few months ago became a national controversy.

    Her parents alleged that she was forcefully kidnapped and converted but when the matter was taken up by the country’s Supreme Court, she chose to stay with her Muslim husband.

    There are suspicions, though, that she did so under duress.

    What’s worse, the man who organized her conversion and marriage among much fanfare is a powerful local leader belonging to the PPP.

    And this is where the problem lies – it’s not so much about the conversion of Hindu girls as it is about the apathy of the society at large towards the already-beleaguered minorities.

  4. Avatar
    smitha says:

    To dear kavya & Piriyan

    Madurai: The Madurai Bench of the Madras High Court has ruled that a young Muslim girl cannot be branded by the Jamath as an “illegitimate” child because her father had married two sisters one after the other despite a specific prohibition under the Mohammedan law, which permitted marrying another woman only after ‘talaq’.

    Dismissing a civil revision petition filed by the Nagercoil Jamath president, Justice S. Palanivelu said the act committed by the girl’s father was a curable irregularity and therefore the children born out of such marriage could not be called as illegitimate.

    A. Sohail Ahmed (name changed) was a member of the Mahan Tulkasha Olliyullah Darga Vadaseri Kuthba Pallivasal at Nagercoil in Kanyakumari district.

    He married two sisters and lived with both them.

    He had five children through the first wife and two daughters through her sister.

    In 1997, he filed a civil suit before the Principal Munsif Court at Nagercoil challenging his extermination from the Jamath.

    Even as the case was pending, a compromise was reached between him and the new office bearers of the Jamath in May 2006.

    In February this year, he applied for a No Objection Certificate from the Jamath to give the girl born out of his second marriage to a groom based in Chennai.

    But the Jamaths president refused to issue the NOC,a pre-requisite for conducting Muslim marriages.

    The judge directed the Jamath to issue a NOC forthwith to Ahmed so that he could conduct her marriage without any hitch in the lawful capacity of being her father.

    1. Avatar
      Kavya says:

      let me complete ur sentence.

      It is high time to have a common civil law in India application to all religions, castes etc. to uproot the occupation by birth theory also.

  5. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //முகம்மது அலி ஜின்னா ஒரு சியா பிரிவை சார்ந்தவர். அவர் இறந்தபோது சியா பிரிவினரின் வழக்கப்படி ஓதினார்கள்.//

    ஜின்னா ஷியா பிரிவை சேர்ந்ததனால்தான் ராஜாஜி ஜின்னாவோடு கை கோர்த்துக் கொண்டு இந்தியாவை துண்டாட முயற்சித்தாரோ. பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்திய பிரிவினைக்கு எதிராகவே இருந்தனர். எனவே தான் எல்லையில் இருந்த மாகாணங்கள் மட்டுமே பாகிஸ்தான் ஆனது. ஜின்னா கூப்பிட்டும் தேசப் பற்றின் காரணமாக இங்குள்ள எங்களின் முன்னோர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்.

    ஷியாக்களுக்கும் பிராமணர்களுக்கும் எந்த அளவு வரலாற்று ரீதியாக தொடர்பு உள்ளது என்பதை இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_18.html

  6. Avatar
    smitha says:

    Piriyan,

    Pls get the facts right. Majority of the muslims were in favour of a separate state. Many muslims who went to pakistan were driven abck to India & it was Nehru who allowed them back.

    Also, Rajaji warned Gandhi as early as in 1942 that partition is inevitable. Gandhi did not agree. Rajaji was branded anti national & he kept away from active politics.

    In 1947, after the partition & the bloodshed that followed, Gandhi admitted that he shud have listened to Rajaji.

    Till today, it can be seen what a grave blunder Nehru had committed. Muslims refuse to join the national mainstream, do not want to abide by the common civil code, openly indulge in anti national activities & still get away with it.

    3 lakh kashmiri pundits have been mercilessly driven out of Jammu & they live in camps in delhi.

    In assam today, hindus are being tortured, killed & driven away because of illegal muslim bangladesh immigrants.

    Please face the facts & do not rub salt into the wounds of the hindus.

    1. Avatar
      Kavya says:

      Refer the penultimate para starting “In assam today…”

      For such irresponsible and mischievous sms, the government has banned more than 200 accounts.

      The Boda leader clarified that their fight is with Illegal Bangladeshis, not with their own Muslim bros of Assam, India. (Puthiya thalaimurai tv on saturday)

      This truth is suppressed by Smita with the malicious intention to put Hindus against Muslims.

      Thinnai shd take care to censor such comments. Assam happenings are being abused by the religious bigots.

      Always say,

      “Bangladeshis who infiltrated into India and living illegally”.

      Not Bangladeshi Muslims. By referring to the religious identity, the ulterior motive is to creat religious strifes. We should nip this mischief in the bud.

      ILLEGAL BANGLADESHI IMMIGRANTS Vs INDIAN CITIZENS in Assam. Only this is correct. Take care.

  7. Avatar
    suvanappiriyan says:

    சகோ ஸ்மிதா!

    //Pls get the facts right. Majority of the muslims were in favour of a separate state. Many muslims who went to pakistan were driven abck to India & it was Nehru who allowed them back.//

    அவ்வாறு இரு தரப்பிலும் மக்கள் சென்று வந்தனர். அவர்கள் அனைவரும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள். தமிழகத்திலிருந்தோ, மற்ற தென் மாநிலங்களிலிருந்தோ எவரும் செல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பிரிவினை முஸ்லிம்களை இந்தியாவில் சிறுபான்மையினராக மாற்ற ஜின்னாவை வைத்து மேலும் சில முஸ்லிம்களை வைத்து இந்துத்வ வாதிகளால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் வரலாறு மாற்றி எழுதப்பட்டது.
    உங்கள் தலைவர் அத்வானியின் பூர்வீகமே பாகிஸ்தான்தான்.
    //Also, Rajaji warned Gandhi as early as in 1942 that partition is inevitable. Gandhi did not agree. Rajaji was branded anti national & he kept away from active politics.//

    பிரச்னை என்றவுடன் ராஜாஜியை அம்போ என்று கழட்டி விடுகிறீர்களே பார்த்தீர்களா?

    //3 lakh kashmiri pundits have been mercilessly driven out of Jammu & they live in camps in delhi.//

    அவர்கள் காஷ்மீரில் இருந்ததை விட சகல சௌகரியங்களோடு வாழ்ந்து வருகின்றனர் அரசு உதவியோடு. எனவே தான் நிலைமை சீராகியும் அங்கு செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. ஆனால் அவர்கள் திரும்பவும் அங்கு குடியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    //In assam today, hindus are being tortured, killed & driven away because of illegal muslim bangladesh immigrants.//

    கலவரத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள். அந்நியர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் வெளியேற்றுவதுதான் நேர்மையான செயல். ஆனால் பிஜேபி யோ இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்து முஸ்லிம்களை மட்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அங்கு குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது.

    சமீபத்தில் அங்கிருந்து அனுப்பிய அனைத்து எஸ்எம்எஸ்களும் இந்துத்வா வாதிகளுடையது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கொடுத்த செய்தியை பார்க்கவில்லையா?

    //Please face the facts & do not rub salt into the wounds of the hindus.//

    வெள்ளைக்காரன் முஸ்லிம்களை அரசு உத்தியோகம் கொடுத்து சிறப்பாகவே வைத்திருந்தான். எங்களின் முன்னோர்களுக்கு தேசபக்தி முற்றிபோய் அரசு வேலைகளை உதறினார்கள். ஆங்கில மொழியை வெறுத்தார்கள். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம். நாங்களும் பிராமணர்களைப் போல வெள்ளையனுக்கு சேவகம் செய்திருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமூகமாக முஸ்லிம்கள் இருந்திருப்பர்.

    So please face the fact & do not rub salt and chilly in the wounds of the Muslims..

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      வெள்ளையனுக்கு சேவகம் செய்திருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமூகமாக முஸ்லிம்கள் இருந்திருப்பர்.—> இந்திய முஸ்லீம்கள் அறிவு சார்ந்த நிலையில் இருந்ததில்லை… பாப்புலர் சொலவடையை இங்கு எழுத முடியாது ஆனால் உங்களுக்கு தெரியும்… மேலும் முஸ்லீம்களைவிட பிராமணர்களே சுதந்திரப் போராட்டத்தில் அதிகமாக இருந்தனர். முஸ்லீம்கள் அறிவாளிகளாக இருந்திருந்தால், ராமனுஜத்திற்கு பதில் ஹார்டியை ஒரு அப்துல்காதர் போய் பார்த்திருக்கலாம்… சர்.சி.ராமனை விட ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்டிருக்கலாம்… வட இந்தியாவில் எப்படியோ, தமிழகத்தில் மரியாதை – அறிவால் – கிடைக்கவில்லை என்று தான் மதம் மாறினார்கள்.. ஏன் அறிவை நிரூபித்திருக்கலாமே… கிறிஸ்துவர்கள் பள்ளி கட்ட அய்யர்கள் பாடம் நடத்த… அப்போது முஸ்லீம்கள் என்ன செய்தார்கள்…?

  8. Avatar
    மலர்மன்னன் says:

    வேட்டியில் கிழிசல் ஏற்பட்டுவிட்டால் இரண்டாகக் கிழித்துப் பயன்படுத்துவதுமேல் என்றுதான் 1941-42 ல் ராஜாஜி சொன்னார். சகோதரர்களிடையே மன வேற்றுமை வந்துவிட்டால் பாகப் பிரிவினை செய்வதுமேல் என்றும் சொன்னார். இது ஒரு தேசம். சொத்துப் பிரசினை அல்ல என்று அவரைக் கண்டிக்கவே செய்தோம். ராஜாஜி சொன்னதுபோல் கேட்டிருந்தால் லட்சக் கணக்கான உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் மானபங்கங்களும் நடக்காமலாவது சுமுகத் தீர்வு கிடைத்திருக்கும். காந்தியும் நேருவும் கடைசிவரை நாடகமாடிக் கழுத்தை அறுத்தார்கள்.
    அவசரப்படாதீர்கள், கொஞ்சம் பொறுமையாக இருந்தால் முழு ஹிந்துஸ்தானமே கைக்கு வந்துவிடும், மக்கள் தொகையைப் பெருக்குவோம் அதுவே போதும் என்று அபுல் கலாம் போன்ற ’தேசிய’ முஸ்லிம்கள், முக்கியமாக ஜின்னா அல்லாத ஷியா தலைவர்கள் சொன்னார்கள்.
    சமகால சரித்திரம் படிப்பீர்களாக!
    தமிழ் நாட்டிலிருந்து சில முஸ்லிம்களும் கேரளத்திலிருந்து நிறைய நிறைய காக்காக்களும் ஆசை ஆசையாய் தாருல் இஸ்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லவே செய்தார்கள். போனவர்களில் பலர் அவமானப்பட்டும் சூழல் ஒத்துக் கொள்ளாமலும் திரும்பினார்கள். சிலர் அங்கேயே தங்கினார்கள். பாகிஸ்தான் நகரங்களில் தேடிப் பார்த்தால் தமிழ் பேசும் நெல்லை- ராமநாதபுர முஸ்லிம்களையும் மலையாளம் பேசும் மாப்பிளாமார் களையும் இன்றும் சந்திக்கலாம். ஹுஸைனி பிராமணர்களைப் பற்றித் தெரிந்துகொண்டதுபோல் இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள் என் பிரியமானவரே, சுவனப்பிரியன்.
    -மலர்மன்னன்

  9. Avatar
    suvanappiriyan says:

    மலர்மன்னன்!@

    //அவசரப்படாதீர்கள், கொஞ்சம் பொறுமையாக இருந்தால் முழு ஹிந்துஸ்தானமே கைக்கு வந்துவிடும், மக்கள் தொகையைப் பெருக்குவோம் அதுவே போதும் என்று அபுல் கலாம் போன்ற ’தேசிய’ முஸ்லிம்கள், முக்கியமாக ஜின்னா அல்லாத ஷியா தலைவர்கள் சொன்னார்கள்.
    சமகால சரித்திரம் படிப்பீர்களாக!//

    அபுல் கலாம் இவ்வாறு சொன்னதற்கு ஆதாரத்தை தாங்கள் சமர்ப்பிக்க முடியுமா?

    //தமிழ் நாட்டிலிருந்து சில முஸ்லிம்களும் கேரளத்திலிருந்து நிறைய நிறைய காக்காக்களும் ஆசை ஆசையாய் தாருல் இஸ்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லவே செய்தார்கள். போனவர்களில் பலர் அவமானப்பட்டும் சூழல் ஒத்துக் கொள்ளாமலும் திரும்பினார்கள். சிலர் அங்கேயே தங்கினார்கள்.//

    ஒரு சிலர் நீங்கள் சொல்வது போல் போயிருக்கலாம். அவர்கள் மொத்த முஸ்லிம்களின் சதவீதத்தில் ஒரு சதவீதம் கூட தேற மாட்டார்கள். பாக்கி 99 சதவீதமான தென்னாட்டு முஸ்லிம்கள் பிறந்த மண்ணை விட்டு போகவில்லை. காரணம் இந்த மண்ணின் மீது உள்ள பற்றுதான். தேச பிரிவினை நிகழ்ந்தது எல்லையோர இரண்டு மூன்று மாநிலங்களே! ஒட்டு மொத்த இந்தியாவிலும் அல்ல. பாகிஸ்தானை விட இந்தியாவில்தான் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் அன்றும் இருந்தார்கள்: இன்றும் உள்ளார்கள். இதை அறியாதவரல்ல நீங்கள்.

    //வேட்டியில் கிழிசல் ஏற்பட்டுவிட்டால் இரண்டாகக் கிழித்துப் பயன்படுத்துவதுமேல் என்றுதான் 1941-42 ல் ராஜாஜி சொன்னார். சகோதரர்களிடையே மன வேற்றுமை வந்துவிட்டால் பாகப் பிரிவினை செய்வதுமேல் என்றும் சொன்னார்.//

    உடுத்தும் வேட்டியும் நாம் பிறந்த நாடும் ஒன்றுதானா உங்கள் பார்வையில். சகோதரர்களிடம் ஏதேனும் தகராறு வந்தால் அதனை சமரசமாக தீர்த்து வைப்பதுதான் நல்லோர்களின் செயல். அதை விடுத்து சிறிய சண்டையை தூபம் போட்டு வளர்த்து விட்டு பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை உருவாக்கி இன்று வரை நமது நாட்டுக்கு தலைவலியை உண்டாக்கியதில் ராஜாஜிக்கும் முக்கிய பங்குண்டு. ஜின்னா பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார். இஸ்லாத்தின் மீதோ இஸ்லாமிய சட்டங்களின் மீதோ எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியவர்தான் ஜின்னா. அவரால் சாமான்ய இஸ்லாமியனின் வலியை எவ்வாறு உணர முடியும்? இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்திருந்தால் என்றோ வல்லரசாகியிருப்போம். அதைக் கெடுத்தது ஜின்னா, ராஜாஜி கும்பல் எனறால் அது மிகையாகாது.

    1. Avatar
      மொட்டைபையன் says:

      சொந்த மண்ணின்மீது உள்ள பற்று (உங்களுக்கெல்லாம் பற்று எங்கே இருக்கபோகுது..??) அல்ல சுவனப்பிரியன் இந்த நாட்டையும் இஸ்லாம் மதத்திற்கு மாத்திடலாம்ன்னு நெனப்புதான் நீங்க எல்லாம் இங்கே தங்கியிருக்கீங்க…ஆனா ஆர்.எஸ்.எஸ். இருக்கும்வரை முடியாது

  10. Avatar
    மலர்மன்னன் says:

    சுவனப் பிரியரே, ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்வதில்லை என்பதை நீங்கள் இன்னமும் உணராதது என் துரதிருஷ்டமே. ஆனால் என்னிடமே ஏன் வேலை வாங்குகிறீர்கள். நீங்களும்தான் கொஞ்சம் சிரமப்படுங்களேன், ஹுசைனி பிராமணர்களை மெனக்கெட்டுத் தேடியதுபோல! நான் பழங் காலத்து ஆள். இக்காலத்தவர் போல் விரல் நுனியில் சுட்டிகளை வைத்திருக்க எனக்குத் தெரியாது. அபுல் கலாம் எழுத்துகள் என்று தேடுங்கள். கிடைத்துவிடும். பான் இஸ்லாம் என்று பேசியவர் அவர். ரொம்பப்பேருக்கு அவர் எழுதிய இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் மட்டும்தான் தெரிந்திருக்கிறது. ஈரானிலிருந்து வந்த பர்பமபரையைச் சேர்ந்த அவர் இங்கிருக்க விரும்பாமல் இடையில் மெக்காவிலேயே போய் இருந்துவிட்டு அங்கு சரிப்படாமல் திரும்பிவந்தவர்! நிறைய நிறையப் படிக்க வேண்டியுள்ளது நண்பரே!
    முதலில் தெற்கேயிருந்து முஸ்லிம்கள் எவரும் பாகிஸ்தானுக்குப் போகவே இல்லை என்றீர்கள். இப்போது சிலர் போயிருக்கலாம் என்கிறீர்கள். நானும் மொத்த தென்னாட்டு முஸ்லிம்களும் இடம் பெயர்ந்ததாகச் சொல்லவில்லையே! அப்படிப் பார்த்தால் வடக்கிலிருந்தும் எல்லா முஸ்லிம்களும் போய்விடவில்லை. இங்கேயே பத்திரமாக இருந்து கொண்டார்கள். அவர்களுக்கு காந்தி-நேருவின் பாதுகாப்பு இருந்தது. பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களுக்குத்தான் அத்தகைய வாய்ப்பு இல்லை. அதனால்தான் இன்று அங்கு ஹிந்துகக்ளின் சதவீதம் இரண்டு கூட இல்லை. அவர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் தோட்டி வேலை செய்வதற்காகப் பிடித்து வைத்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். சிந்து மாகாணத்தில் மட்டுமே சில நிலச் சுவாந்தாரர்களும் வியாபாரிகளும் மட்டுமே சொத்து பலவீனம் காரணமாகச் சமரசம் செய்துகொண்டும் சகித்துக் கொண்டும் காலந்தள்ளுகிறார்கள். இங்கேதான் முஸ்லிம்களின் ஜனத்தொகை பிரிவினைக்குப் பிறகும் தங்குதடையின்றி பெருகி வருகிறது. அதனால்தானே நீங்களே நம்நாட்டில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்ல முடிகிறது! இதையே காரணங் காட்டித்தான் அபுல் கலாம் ஆஸாத் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், தாஜ்மஹலையும் செங்கோட்டையையும் ஃபதேபூர் சிக்ரியையும் எதற்கு இழக்க வேண்டும் என்று கேட்டார்!
    வேட்டியில் கிழிசல் விழுந்துவிட்டால் இரண்டாகக் கிழித்துவிடலாம் என்று ராஜாஜி சொன்னார் என்றுதானே எழுதியிருக்கிறேன். அவர் சொன்னதை ஆதரித்தா எழுதியிருக்கிறேன்? பங்காளிகளுக்கிடையே பிரிவினை செய்ய இது ஒன்றும் சொத்து அல்ல, தேசம் என்று அவரைக் கண்டித்ததையும்தானே எழுதியுள்ளேன்? பாகிஸ்தான் கோரிக்கை நியாயமானது என்று அவர் சொல்லவில்லை. அப்படியொரு பிரிவினை கேட்கும் சூழல் உருவாகிவிட்டது என அவர் சுட்டிக் காட்டினார் என்பதையே நானும் சுட்டிக் காட்டியுள்ளேன் அவ்வளவுதானே? எதற்காக நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக நீங்களாகவே சொல்லி அதற்கு சிரமப்பட்டு பதிலும் எழுதிக்கொண்டிருக்கிறீர்க்ள்? உங்களிடம் உள்ள பிரச்சினையே அவசரப்பட்டு பதில் எழுத ஆரம்பித்துவிடுகிறீர்கள் எனலாமா?
    இதனால் அல்லவா நான் என் வேலையைக் கெடுத்துக்கொண்டு சொன்னதையே திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது? நிதானமாக்ச் சிந்தியுங்கள், அதன் பின் தேவைப்பட்டால் பதில் எழுதுங்கள். பாதிக் கிணறு தாண்டுதல் ஆபத்து. உங்கள் தளத்தி
    லேயே ஒரு புதிய தகவலைத் தந்தமைக்காக உங்களை வியந்து பாராட்டிப் பல பின்னூட்டங்கள் வந்த பிறகும் எனக்கே இப்போதுதான் தெரியும் என்று சொல்கிற அளவுக்குத்தான் உங்களுக்கு மனம் இருந்ததேயன்றி மலர்மன்னன் என்கிற கிழவன் சொல்லித்தான் ஹுசைனி பிராமணர் என்று ஒரு பிரிவு உள்ளது என அறிந்துகொண்டேன் என்று ஒப்புக்கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லையே! இதையேதான் அபுல் கலாம் விஷயத்திலும் கடைப்பிடிப்பீர்கள் அல்லவா? போயும் போயும் மலர்மன்னன் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பது அவமானம் அல்லவா? ஆகவே நீங்களே சிரமப்பட்டுத் தேடுங்கள், கிடைக்கப் பெறுவீர்கள்! நான் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு வரி விடாமல் துழாவி தகவலைச் சேகரிக்கிறேன். நீங்கள் நோகாமல் பிள்ளை பெற விரும்புகிறீர்கள்? என்னுடைய முதுமையில் இப்படிப் படுத்தலாமா? என்ன தான் காபிரான கிழவனாயினும் உங்களின் பாட்டனே அல்லவா நானும்?
    -மலர்மன்னன்

  11. Avatar
    மலர்மன்னன் says:

    சுவனப் பிரியரே, ராஜாஜிக்கு ரொம்பத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்! அவர் என்றுமே ஒரு பாப்புலர் தலைவராக இருந்ததில்லை! காங்கிரஸ் அவர் பேச்சைக் கேட்டதே இல்லை! கேட்டிருந்தால் ரத்த வெள்ளம் இன்றியே பிரிவினை நடந்திருக்கும் என்றுதான் வருந்துகிறோம். அது பிரிவினையை நியாயப்படுத்துவதாகிவிடாது! ராஜாஜி காங்கிரசிலிருந்து வேறு பல காரணங்களுக்காக விலகியபோதுதான் வேட்டி கிழிசல் சித்தாந்தம் பேசினார்! பங்காளிகளிடம் பிரிவினை வேண்டாம் என்று கடைசிவரை சமரசப் பேச்சு நடந்து கொண்டுதானே இருந்தது! ராஜாஜியிடம் இந்த விவகாரம் வரும் அளவுக்கு அவரை எவரும் முக்கியமாக எங்கே எடுத்துக்கொண்டார்கள்? அவர் போகும் இடமெல்லாம் உருகிய தார் வீச்சு, அழுகிய முட்டை வீச்சு என்றுதான் நடத்திக் கொண்டிருந்தார்கள்! ஜின்னாவை பகடைக்காயாக அல்ல, துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியவர்கள் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம்! ஜின்னா ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாதவர் அல்ல! சமயத்தை சரியாகப் பயன் படுத்திக்கொண்டவர்! முஸ்லிம்களை மயக்க திடீர் எனத் தலைக்குத் தொப்பியும் உடம்புக்கு ஷேர்வானி பைஜாமாவும் என வேடம் தரித்துக் கொண்டவர்!
    -மலர்மன்னன்

  12. Avatar
    மலர்மன்னன் says:

    அத்வானி பிறந்த போது பாகிஸ்தான் என ஒரு செயற்கை தேசம் உருவாகும் என்ற நினைப்பே இருக்கவில்லையே! அவர் வயது என்ன தெரியுமா? அவரைப் போய் பாகிஸ்தானில் பிறந்தார் என்கிறீர்களே! இளந் தலைமுறையினர் தவறான புரிதலைப் பெறச் செய்வதில் ஏனிந்த சந்தோஷம்?
    உடனே என் தலைவர் அத்வானி என்று சொல்ல ஆரம்பித்துவிடாதீர்கள். நீங்கள் அரசியலிலிருந்து விலகிக் கொள்வது உத்தமம் என்று முன்பே அவருக்குக் கடிதம் எழுதியவன் நான்! பிரிவினைக்கு முந்தைய ஸிந்து மாகாணம் என்று சொல்வது அல்லவா நாணயம்? நீங்கள் பாட்டுக்கு இந்தப் பிரிவினை முஸ்லிம்களை இந்தியாவில் சிறுபான்மையினராக மாற்ற ஜின்னாவை வைத்து மேலும் சில முஸ்லிம்களை வைத்து இந்துத்வ வாதிகளால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் வரலாறு மாற்றி எழுதப்பட்டது என்று கூசாமல் புதிய வரலாறு வேறு எழுதுகிறீர்கள்! விவாதத்தில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா? ஹிந்துத்துவர்களே ஹிந்துஸ்தானத்தைப் பிரிக்க ஏற்பாடு செய்ததாகக் கொஞ்சமும் தயக்கமின்றி எழுதுகிறீர்களே? பெற்ற தாயைக் கூறு போடுவதா ஹிந்துத்துவம்? உங்கள் புரிதல் இவ்வளவு பாமரத்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை!
    -மலர்மன்னன்

  13. Avatar
    suvanappiriyan says:

    திரு மலர் மன்னன்!

    //சுவனப் பிரியரே, ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்வதில்லை என்பதை நீங்கள் இன்னமும் உணராதது என் துரதிருஷ்டமே.//

    நான் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை என்பதாலேயே உங்களிடம் ஆதாரம் கேட்டேன். உங்களிடம் அபுல்கலாம் பற்றிய செய்திக்கு ஆதாரம் இருந்தால் தருவதில் என்ன சிரமம்?

    //ஹிந்துத்துவர்களே ஹிந்துஸ்தானத்தைப் பிரிக்க ஏற்பாடு செய்ததாகக் கொஞ்சமும் தயக்கமின்றி எழுதுகிறீர்களே? பெற்ற தாயைக் கூறு போடுவதா ஹிந்துத்துவம்? உங்கள் புரிதல் இவ்வளவு பாமரத்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை!//

    அடுத்து ஜின்னா முஸ்லிம் லீக் தொடங்கவும் நாடு பிளவுபடவும் காரணமாக அமைந்தது எதுவென்று நினைக்கிறீர்கள்?

    1917ல் ஆர்எஸ்எஸின் வீர சவர்க்கார் விடுத்த பிரகடனம் என்ன? ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்தவொரு எதிர்காலமும் இல்லை’

    R.N.AGARWAL THE DIALOGUE BETWEEN HINDUS & MUSLIMS

    இவ்வாறாக ஜின்னாவுக்கு முன்பே வீர சவர்க்கார் பாகிஸ்தானுக்கு அடித்தளம் இட்டார். இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஜின்னா காங்கிரஸிலிருந்து பிரிந்து முஸ்லிம் லீக்கை ஆரம்பிக்கிறார். அப்பொழுது நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரஸையே ஆதரித்தனர். அவர்கள் ஜின்னாவை நம்பவில்லை. ஜின்னா தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

    DR AYSHA JALAL – THE SOLE SPOKESMAN JINNAH, THE MUSLIM LEAGUE, AND THE DEMAND FOR PAKISTAN

    முதன் முதலில் பம்பாயில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் முதல்வராக நரிமான் எனபவர் வர வாய்ப்பிருந்தும் அவர் ஃபார்ஸி என்பதால் பி.ஜி.கர் என்பவரை வலுக்கட்டாயமாக திணித்து முதல்வராக்கினர். இதற்கு மறைமுக வேலை செய்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆட்சிக்கு வர உழைத்த ஒருவரை ஓரங்கட்டி விட்டு இந்துத்வா சிந்தனை உடைய பி.ஜி.கர்ரை முதல்வராக்கியது இனப்பற்றால் அல்லவா?

    பீகாரில் நடந்த மற்றொரு கவிழ்ப்பு வேலையை பார்ப்போம்: பீகார் காங்கிரஸ் என்றாலே டாக்டர் செய்யித் முஹம்மத் அவர்கள்தான் அனைவரின் ஞாபகத்திலும் வரும். அந்த அளவு காடு மேடு களுக்கெல்லாம் சென்று காங்கிரஸின் வெற்றிக்காக பாடுபட்டவர். காங்கிரஸின் பொதுக் செயலாளராகவும் இருந்தார். எனவே பீகாருக்கு வெளியிலேயும் பிரபலமாக இருந்தார். பீகாரில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க தயாரானது. எல்லோரின் எதிர்பார்ப்பும் டாக்டர் செய்யித் அஹமத் அவர்கள்தான் முதல்வராவார் என்று கணித்தனர். ஆனால் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஸ்ரீகிருஷ்ண சின்ஹாவும், அனுகிரஹா நாராயண சின்ஹாவும் பீகாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முதல்வராக்க தயார் செய்யப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். பிறகு ஸ்ரீகிருஷ்ணா முதல்வராக்கப்பட்டு டாக்டர் செய்யித் முஹம்மத் அமைச்சராக்கப்பட்டார். இதனை நேருவிடம் புகாராக சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்ளிடம் பிரசாரம் செய்ய ஜின்னாவுக்கு மிக தோதுவாகப் போனது.

    AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 17,18

    இதன் பிறகுதான் ஜின்னாவின் பேச்சை சில முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் அமோக வெற்றி பெறுககிறது. தனக்கு பாதகமான சூழ்நிலைகளையே சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஜின்னா இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

    கேபினட் மிஷன் பிளான் திட்டம பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன்படி இந்தியாவைப் பிரிக்காமல் சிறுபான்மையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்கிட வேண்டும். அதோடு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு ஒரு உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவானது. இதற்கு நடுவராக ஒரு வைசிராய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை முஸ்லிம் லிக்கும் காங்கிரஸூம் ஒத்துக் கொண்டது. இது நடந்தது 1946. நாடு பிளவுறுவது என்பது அப்போது நிறுத்தப்பட்டது.

    ஜின்னா முதற்கொண்டு அனைவரும் ஏற்றுக் கொண்ட இந்த அருமையான திட்டத்தை பம்பாய் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரு போட்டு உடைத்தார். ‘காங்கிரஸ் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. கேபினட் மிஷன் பிளானை ஏற்றுக் கொள்ள முடியாது ‘ என்று சொன்னது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் பிரிவினை கோஷங்கள் தலை தூக்கத் துவங்கின. இதைப் பற்றி அபுல் கலாம் ஆசாத் சொல்லும் போது ‘1946ல் காங்கிரஸ் தலைமைக்கு ஜவஹர்லால் நேருவை பரிந்துரைத்தது நான் செய்த பெருந் தவறு. மக்கள் விரும்பியதைப் போல் நானே நீடித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே வேறு விதமாக போயிருக்கும்’

    AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 164,165,166

    ‘திரு ஜின்னா அவர்களும் அன்று மாநில சுயாட்சியையே கேட்டார். அதனை ஏற்றுக் கெண்டிருந்தால் பாகிஸ்தானே உருவாகியிருக்காது’
    -கருணாநிதி
    தி டைம்ஸ் ஆஃப் இந்தியா(3-2-1996) பக்கம் 6

    ‘1937ல் நடந்த தேர்தலுக்கு பின்னரும் கூட ஜின்னா தனி நாடு பற்றி சிந்திக்கவில்லை’
    ஹெச்.எம்.சீர்வை(THE AUTHOR OF THE BOOK “PARTITION THE LEGEND AND REALITY ) PAGE 21.

    இவ்வாறு பாகிஸ்தான் உருவாக சவர்க்கர், நேரு, பட்டேல், ஜின்னா என்று பலரும் பங்கு வகிக்க இங்குள்ள முஸ்லிம்களை குறை சொல்வது என்ன நியாயம்? அடுத்து ஜின்னா ஒரு ஷியா முஸ்லிம். இஸ்லாமிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் ஒருவர். இங்குள்ள முஸ்லிம்கள் எவருமே இன்றுவரை இவரை ஒரு தேசத் தலைவராக மதிப்பதில்லை. அபுல்கலாமுக்கு இருந்த மரியாதை ஜின்னாவுக்கு அவர் வாழும் காலத்திலும் முஸ்லிம்களால் கொடுக்கப்படவில்லை. அவர் இறந்தும் அந்த மரியாதையை முஸ்லிம்கள் ஜின்னாவுக்கு கொடுக்கவில்லை.

  14. Avatar
    suvanappiriyan says:

    திரு மலர்மன்னன்!

    //ஜின்னாவை பகடைக்காயாக அல்ல, துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியவர்கள் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம்! ஜின்னா ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாதவர் அல்ல! சமயத்தை சரியாகப் பயன் படுத்திக்கொண்டவர்! முஸ்லிம்களை மயக்க திடீர் எனத் தலைக்குத் தொப்பியும் உடம்புக்கு ஷேர்வானி பைஜாமாவும் என வேடம் தரித்துக் கொண்டவர்!//

    உங்கள் வார்த்தைகளை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். வெள்ளையர்களின் சூழ்சசியும் சேர்ந்து ஜின்னாவை நன்றாக பலரும் பயன் படுத்திக் கொண்டனர். அவருக்கு இந்திய முஸ்லிம்களை பற்றிய கவலை கிஞ்சிற்றும் இல்லை. ரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை. தான் ஒரு நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது. இதில் நேருவும் ஜின்னாவுக்கு சளைத்தவர் அல்ல. இரண்டு பேரின் குடுமி பிடியால் பல ஆயிரக் கணக்கான மக்கள் ரத்தம் சிந்தியதுதான் மிச்சம்.

    //என்னுடைய முதுமையில் இப்படிப் படுத்தலாமா? என்ன தான் காபிரான கிழவனாயினும் உங்களின் பாட்டனே அல்லவா நானும்?//

    ஐயோ ……நான் உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை சார். எனது தாத்தாவின் ஸ்தானத்தில் உங்களை வைத்துள்ளேன் … ….. காஃபிர் என்றால் ஏதோ மரியாதை குறைவான வார்த்தை என்றே பலரும் நினைக்கின்றனர். காஃபிர் என்ற வார்த்தைக்கு ‘இறை மறுப்பாளர்’ என்ற பொருள் வரும். நீங்கள் இறைவனை ஏற்றுக் கொண்டவர்தானே! மற்றபடி இந்த கேள்விகளை கேட்டது எல்லாம் ஸ்மிதா! அவர் கேட்டு விட்டு பதில் தராது நகர்ந்து கொண்டார். அவர் சார்பில் நீங்கள் பதில் அளித்துக் கொண்டுள்ளீர்கள்.

    //ராஜாஜிக்கு ரொம்பத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்! அவர் என்றுமே ஒரு பாப்புலர் தலைவராக இருந்ததில்லை! காங்கிரஸ் அவர் பேச்சைக் கேட்டதே இல்லை!//

    காங்கிரஸ் சார்பாக மத்தியிலும் மாநிலத்திலும் பல உயர் பதவிகளை வகித்து சட்டத்தை செயல்படுத்தியரை பாப்புலர் தலைவராக இருந்ததில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைவரே நாட்டு பிரிவினையை பேசும் போது நாம் பேசினால் என்ன என்ற தைரியத்தை ஜின்னாவுக்கு கொடுத்தே ராஜாஜியின் நிலைப்பாடுதான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

  15. Avatar
    bala says:

    on BBC TODAY THERE IS A VIDEO COVERAGE AND NEWS OF SHIA SAINTS DHARGAS IN LIBYA SYSTEMATICALLY DESTROYED BY PURE SUNNI MUSLIMS BRANDING THEM IDOLATERS, WITH POLICE AS BY STANDERS. THEIR GRAVES WERE DESECRATED. LEAVE ALONE HINDU TEMPLES, ARE NAGORE, AJMER AND OTHER SUFI SHRINES WILL BE SAFE IN FUTURE.IS SOMNATH AS HAPPENED SOON AFTER INDEPENDENCE WHEN MINORITIES HAD A GUILTY MIND POSSIBLE IN TODAYS POLITICS. THERE IS AN ARTICLE ABOUT FINANCIAL IRREGULARITIES IN TESTA SETALVAD CONNECTED NGOS

  16. Avatar
    bala says:

    jinna a cotemprary of gandhi and nehru much junior to him was systematically side lined by congress, gandhi being a mute spectator, when jinna was heckeled by congress goons gandhi did nothing. hardliners like ali brothers were preferred, politics polticised with religion kilafat movement, jinna was agaist this. after chouri chora gandhi withdrew from agitation when muslim participation along with hindus were at peak. muslims felt led down by gandhi, a betrayal. all this are a factor for partion

  17. Avatar
    smitha says:

    Piriyan,

    Firts you said that no muslim from kerala & T.N went to pakistan. Now U say that some might have gone.

    Why this confusion?

    As regards rajaji, malarmannan has given a very detailed explaination.

    U still are unable to or do not want to understand the plight of hindus in pakistan, compared to the muslims increasing their population in India.

    U do not have an answer as to why muslims refuse to join the national mainstream & refuse to accept a common civil code.

    When mu.ka was CM & he passed an order that all marraiges should be registered, muslims protested.

    I will give even a more frivolous incident. Wallajah road in chennai was renamed babu Jagjivan ram road by mu.ka when he was CM. The function was attended by Meira kumar, present speaker & Jagjivan Ram’s daighter.

    The very next muslims protested, met the CM & demanded that the road name should be changed back to Wallajah.

    Mu.Ka for the sake of vote bank politics, immediately changed the name back to Wallajah.

    The problem is this – Islam as a religion is so dogmatic & its followers so fanatical that they are not able to see any change for the better.

    That is the pity.

  18. Avatar
    smitha says:

    வெள்ளைக்காரன் முஸ்லிம்களை அரசு உத்தியோகம் கொடுத்து சிறப்பாகவே வைத்திருந்தான். எங்களின் முன்னோர்களுக்கு தேசபக்தி முற்றிபோய் அரசு வேலைகளை உதறினார்கள். ஆங்கில மொழியை வெறுத்தார்கள். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம். நாங்களும் பிராமணர்களைப் போல வெள்ளையனுக்கு சேவகம் செய்திருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமூகமாக முஸ்லிம்கள் இருந்திருப்பர்.

    Muslims were patriotic & refused govt posts offered by the british?

    U have a great sense of humour, piriyan.

    1. Avatar
      Kavya says:

      Dont write like ‘U have a great sense of humor’ as if you dont possess that ! It is escapism. It s not debate to laugh at others.

      U shd post ur counter points against his point.

  19. Avatar
    Kavya says:

    //நானும் மொத்த தென்னாட்டு முஸ்லிம்களும் இடம் பெயர்ந்ததாகச் சொல்லவில்லையே! அப்படிப் பார்த்தால் வடக்கிலிருந்தும் எல்லா முஸ்லிம்களும் போய்விடவில்லை. இங்கேயே பத்திரமாக இருந்து கொண்டார்கள். அவர்களுக்கு காந்தி-நேருவின் பாதுகாப்பு இருந்தது. பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களுக்குத்தான் அத்தகைய வாய்ப்பு இல்லை. அதனால்தான் இன்று அங்கு ஹிந்துகக்ளின் சதவீதம் இரண்டு கூட இல்லை. அவர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் தோட்டி வேலை செய்வதற்காகப் பிடித்து வைத்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். //

    The above was a quote from Malarmannan.

    மொத்த தென்னாட்டு முசுலீம்களும் இடம் பெயரவில்லையென்று இப்போது சொல்கிறீர்கள். முதலில் எழுதியதைப்படித்த போது தென்னாட்டு முசுலீகளும் வடநாட்டவரைப்போல நகர்ந்தார்கள் அதிக அளவில் என்றுதான் புரிதல் வரும்.

    இப்போது வடக்கிலிருந்தும் எல்லா முசுலீம்களும் போகவில்லை என்றெழுதுகிறீர்கள்.
    குழப்பம்.

    சுவனப்பிரியன் கருத்தே ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது: வடக்கிலிருந்து பெருமளவிலும் தென்னாட்டலிருந்து சிலருமே சென்றார்கள்.

    சென்றார்கள் என்பது மாப்ளா மலையாளிகளுக்கு அவ்வளவு ஒத்துவராது. ஏனெனில் கராய்ச்சியில் பீடி சுற்றும் தொழிலில் அவர்கள் சுதந்திரத்துக்கு முன்பே ஈடுபட்டிருந்தார்கள் குடும்பம்குடும்பங்களாக. சுதந்திரத்துக்குப்பின் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை. காரணம் அவர்கள் ஏற்கனவே முசுலீம்கள்.

    சுதந்திரத்து முன், கராய்ச்சி இந்தியாதான் இல்லையா மலர்மன்னன்? ஏனெனின், அத்வானி இந்தியாவில் பிறந்தாரென்னும்போது மலையாளிகள் மட்டும் இந்தியாவில் பிறக்கவில்லையா? அத்வானிக்கு ஒரு ரூல், ம‌லையாளிக‌ளுக்கு இன்னொன்றா?

    இந்துக்களை மட்டும் தோட்டி வேலைக்கு பயன்படுத்தவில்லை. ஏராளமான முஹாஜீர் எனப்படும் இந்திய முசுலீகள் கராய்ச்சியில் வாழ்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் பெண்களும் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் பாகிஸ்தானை ஆதிநாடாகக்கொண்டோரால்.

    ஆக, இங்கு இன ஏற்றத்தாழ்வுக்கு இந்திய முசுலிம்களும், பாகிஸ்தானை ஆதிநாடாகக்கொண்ட இந்துக்களும் ஆளாக்கப்படுகிறார்கள்.

    இந்த உண்மை நைசாக மறைக்கப்படுகிறது மலர்மன்னனால்.

    இந்தியர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களால் கீழாகத்தான் மதிக்கப்படுகின்றார்கள். தென்னிந்தியரின் நிலை வடமாநிலங்களில் என்ன? குறிப்பாக தில்லியில்? தங்களை விட மட்டமானவர்கள் இவர்கள் என்று பேச்சிலும் வழக்கிலும் காட்டுகிறார்கள் இந்திக்காரர்கள். ரேசிசம் என்பது ஒவ்வொரு இந்தியனின் குருதியில் ஊறியிருக்கிறது என்றார் ஒரு நார்த் ஈஸ்டு முதலமைச்சர்.

    மேலை நாடுகளில் வெள்ளைக்காரன் இந்தியர்களைத்தீண்டத்தகாதவர்களாகப்பார்த்த போது, காந்தி என்ன சொன்னார் தெரியுமா? ‘வேண்டும் இந்தியருக்கு. தலித்துகளைத் தீண்டத்தகாதவராக நடத்தினாரே! இப்போது அவ்வுணர்வு எப்படியிருக்கும் எனப்புரியட்டும் இவர்களுக்கு!!” என்றார்.

  20. Avatar
    smitha says:

    Kandahar, Afghanistan: Fifteen men and two women were found beheaded in Afghanistan’s southern Helmand province on Monday, punishment meted out by Taliban insurgents for a mixed-sex party with music and dancing, officials said.

    The bodies were found in a house near the Musa Qala district, about 75 km (46 miles) north of the provincial capital Lashkar Gah, said district governor Nimatullah, who only goes by one name.

    “The victims threw a late-night dance and music party when the Taliban attacked” on Sunday night, Mr Nimatullah told Reuters.

    There were no immediate claims of responsibility.

    In ultra-conservative Afghanistan, men and women do not usually mingle unless they are related, and parties involving both genders together are rare and highly secretive affairs.

    For the Taliban, flirting, open displays of affection and the mixing of men and women are vehemently condemned.

    According to witnesses of a major attack that killed 20 near Kabul in June, Taliban gunmen stormed a high-end hotel demanding to know where the “prostitutes and pimps” were.

    The Taliban said it launched that attack on Qarga Lake because the hotel was used for “wild parties”.

    During their five-year reign, which was toppled by U.S.-backed Afghan forces in 2001, sparking the present NATO-led war, the Taliban banned women from voting, most work and leaving their homes unaccompanied by their husband or a male relative.

    Though those rights have been painstakingly regained, Afghanistan remains one of the worst places on earth to be a woman.

    Helmand governor spokesman Daud Ahmadi said a team had been sent to the site of beheadings to investigate.

    Islam oru Amaidhi Maargam!

  21. Avatar
    suvanappiriyan says:

    சகோ ஸ்மிதா!

    //Kandahar, Afghanistan: Fifteen men and two women were found beheaded in Afghanistan’s southern Helmand province on Monday, punishment meted out by Taliban insurgents for a mixed-sex party with music and dancing, officials said.
    The bodies were found in a house near the Musa Qala district, about 75 km (46 miles) north of the provincial capital Lashkar Gah, said district governor Nimatullah, who only goes by one name.//

    தாலிபான்கள் பெயரால் நடத்தப்படும் அனேக கொலைகள் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்க படைகளே காரணம் என்று தாலிபான் தலைவர் முல்லா உமர் கொடுத்த பெருநாள் செய்தியை படித்து பாருங்கள். ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ எனபதை உணர்ந்து கொள்வீர்கள்.

    5. The invaders not only have faced defeat in political, economical and military fronts but, at the moral front too, the public of the world have come around that the invaders do not know any human values. They have no warfare ethics; violate human rights and honor; they commit blasphemy against holy things; desecrate the corpses of the martyrs; perpetrate morally offensive acts against children and adolescents; raid houses at night and brutally kill women, old men and children similar to the gruesome incidents of Zangawat and Sajawand. They bombard villages, houses, cities, mosques, religious seminaries, schools, processions of funeral services and ceremonies of felicities. This is in a time that the invaders brazenly speak of human rights and humanity.

    7. During the past eleven years, the enemy tried its best to mobilize the Afghans in its favor by dent of its media. Praise be to Allah, they have failed (in their goal). This is because of the existing ground realities that the people and all the world can see. Thereby, their wicked conspiracies were foiled and the so- called independent media outfits which are, in fact, affiliated with their espionage agencies, have been exposed. Their exaggerated hypes and propaganda ultimately harmed their own reputation. Now they have no credibility in the eyes of the people. The public of the world look at their every report to be no more than a mere rumor, propaganda or a conspiracy against the Mujahideen. The people know that these media outlets hide the losses of those who provide them funds and portray the losses of Mujahideen several times more than what they are and are tight-lipped about the Mujahideen’s victories.

    8. The enemy tried to flare up chaos among the people through their cunning intelligence networks by capitalizing on the perversity and ignorance of a few young men. They wanted to face people with the same chaotic situation that gripped them in the 90s, following the ouster of the communist government. Praise be to Allah, this wicked conspiracy has failed while being at its earlier stages. Seeing their abhorrent activities, the people became more closer to the Mujahideen and more watchful about the covert conspiracies of the enemy.
    முழு செய்தியையும் தமிழில் படிக்க….

    http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html

  22. Avatar
    மலர்மன்னன் says:

    //தமிழ் நாட்டிலிருந்து சில முஸ்லிம்களும் கேரளத்திலிருந்து நிறைய நிறைய காக்காக்களும் ஆசை ஆசையாய் தாருல் இஸ்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லவே செய்தார்கள். போனவர்களில் பலர் அவமானப்பட்டும் சூழல் ஒத்துக் கொள்ளாமலும் திரும்பினார்கள். சிலர் அங்கேயே தங்கினார்கள். பாகிஸ்தான் நகரங்களில் தேடிப் பார்த்தால் தமிழ் பேசும் நெல்லை- ராமநாதபுர முஸ்லிம்களையும் மலையாளம் பேசும் மாப்பிளாமார்களையும் இன்றும் சந்திக்கலாம். //
    இதுதான் நான் முன்பு எழுதியது. பிரிவினைக்குப் பிறகும் கேரளத்திலிருந்து பலர் பாகிஸ்தான் சென்றார்கள். அவர்களைப் பற்றிக் கேரள இலக்கியத்தில் பல சிறுகதைகளும் வந்துள்ளன.
    சுவனப் பிரியன், உங்களிடம் குழப்பம் அதிகம் உள்ளது. ஜின்னாதான் முஸ்லிம் லீக் ஆரம்பித்தார் என்றெல்லாம் எழுதுகிறீர்கள். உண்மையில் 1906-ல் முஸ்லிம் லீக் தொடங்கப் பட்டது. அப்போது ஜின்னா காங்கிரஸ் மகாசபையில் இருந்தார். திலகருக்காக வழக்கில் ஆஜரானார்! பாலா தரும் தகவல்கள் சரியானவை. அரசியலில் மதத்தை நுழைத்தவர் காந்திதான். முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக நமக்கு சம்பந்தமே இல்லாத கிலாஃபத்தை ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைத்தார். ஜின்னா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். முல்லாக்களின் அதிகாரம் அரசியலில் வேரோடிவிடும் என்று எச்சரித்தார். கிலாஃபஃத் இயக்கத்தின் பின் விளைவுகள் பற்றி எழுதும் முயற்சியில் உள்ளேன். கிலாஃபத்தை திலகர் ஆதரித்தார் என்று கூறப்படுகிறது. தேசிய இயக்கத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தின் ஆதரவு அவசியம், அதைத் திரட்ட கிலாஃபத் பயன்படும் என்று காந்தி சொன்னார். அதுதான் நோக்கம் எனில் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் அது மதக் கோட்பாட்டினை வலியுறுத்துவதாக இருக்கலாகாது. உரிமை மீறல் என்ற கோணத்தில் கொண்டுபோக வேண்டும் என்று திலகர் சொன்னார். ஆனால் கிலாஃபத் தொடங்குவதற்கு முன்பே திலகர் மறைந்து விட்டார். அதன் விளைவுகளை அறியும் வாய்ப்பை இழந்துவிட்டார். ஆனால் அவர் அச்சப்பட்டதுபோலவே ஆயிற்று. மத அரசியலுக்கு வித்திடப்பட்டு அது மெல்ல மெல்ல பிரிவினைக்கு வழி செய்தது. பாகிஸ்தான் பிரிவினைக்கு சர்ச்சில் அளித்த ஊக்குவிப்பு (1940-44ல் அவர் பிரிட்டிஷ் பிரதமராகவும் பின்னர் எதிர்க் கட்சிக்காரராகவும் ஆனார்), காங்கிரஸ் மகாசபை, முஸ்லிம் லீக் ஆகிய மூன்றும் காரணம்.
    சுவனப்பிரியன், ராஜாஜி அறிவாளி என்று மதிக்கப்பட்டுப் பதவிகள் அளிக்கப்பட்டாரேயன்றி காங்கிரஸ் அவரை கறிவேப்பிலையாகத்தான் பயன்படுத்திக் கொண்டது. அவர் சேலம் முனிசிபல் தேர்தல் தவிர எதிலும் போட்டியிட்ட தில்லை. வெற்றியும் பெற்றதில்லை. அவர் வகித்த பதவிகள் எல்லாமே நியமனங்கள்தாம். அவர் காங்கிரசிலிருந்து விலகியிருக்கையில்தான் பாகிஸ்தான் பேச்சு வலுத்தது. 1946-ல் அவர் திரும்பவும் காங்கிரசுக்குள் வந்தபோது அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. காந்தியின் சிபார்சில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்! தமிழ் நாடு காங்கிரஸ் மூலம்தான் நியாயப்படிப் போயிருக்க வேண்டும். காமராஜரும் அவரது ஆதரவாளர்களும் ராஜாஜியின் வரவை விரும்பவில்லை. அதனால் காந்திஜி காமராஜர் குழுவை க்ளிஷே என்று வர்ணித்தார். ராஜாஜிதான் பாகிஸ்தான் கோரிக்கைக்குத் தூண்டுதல் என்று சொல்வது தவறு. பாலா சொல்வதே சரி என மீண்டும் உறுதி கூறுகிறேன்.
    சுவனப்பிரியன், நீங்கள் அரைக் கிணறு தாண்டுபவராகவே இருக்கிறீர்கள். சாவர்கர் ஹிந்து-முஸ்லிம் இருவேறு கலாசாரங்கள் அவை இணைய இயலாது என்றுதான் சொன்னார். அதே சமயம் ஹிந்துஸ்தானத்து முஸ்லிம்கள் ஹிந்துக்களாக இருந்தவர்கள், அவர்களை தனி தேசியமாக அடையாளப் படுத்தலாகாது என்றே சொன்னார். அவர் எழுதிய 1857 முதல் விடுதலைப் போர் என்ற நூலைப் படியுங்கள். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு அது, அதை இழந்துவிட்டோம் என்று அதில் கருத்துத் தெரிவித்திருப்பார். கோமளித்தனமாகக் குதிக்கும் அரைக் குடங்களிலிருந்து நீங்கள் வித்தியாசமானவர். ஆனால் அவசரப்பட்டு பதில் எழுத ஆரம்பித்துவிடுகிறீர்கள்.
    பாதி உண்மைகள் என்றும் ஆபத்தானவை.
    சுவனப் பிரியன், என்னிடம் ஆயிரக் கணக்கான ஆவணப் பிரதிகள் உள்ளன. தனித் தனித் தலைப்பிட்டுக் கோப்புகளாக வைத்துள்ளேன். இங்கு எழுதுவதெல்லாம் நினவிலேயிருந்து தான். ஆனால் எனக்கு இந்த விஷயங்களில் ஞாபக மறதி ஏற்படுவதில்லை. தற்சமயம் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்காக ஒரு புத்தகம் எழுதுவதில் முனைந்துள்ளேன். இப்போது என்னை வந்து பார்த்தால் என்னைச் சுற்றிலும் ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் சம்பந்தமான புத்தகங்களும் ஆவணங்களும் மட்டுமே இருப்பதைப் பார்ப்பீர்கள். கிழக்குப் பதிக்கம் எனது திராவிட இயக்க நூற்றாண்டு: புனைவும் புரட்டும் நூலை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிட்டுவிடும். ரிவிஷன் செய்து கொடுத்துவிட்டேன். அடுத்த ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜயந்தி ஆண்டு தொடங்குகிறது. அதையொட்டி வெளிவரும் நூல்களில் ஒன்றாக என்னிடம் எழுதச் சொல்லி யிருக்கிறார்கள். அதில் மூழ்கியிருக்கிறேன். சலிப்புத் தட்டும்போது மட்டுமே திண்னைப் பக்கம் ஒரு மாறுதலுக்காக வருகிறேன். நான் என்ன எழுதி வருகிறேன் என மின்னஞ்சல்கள் வருவதால் இதையே ஒரு வாய்ப்பாகக் கொண்டு தகவல் தெரிவித்துவிட்டேன்.
    மேலும் அபுல் கலாம் ஆசாத் கோப்பைத் தேடி எடுக்க அவகாசம் இல்லை. அதில் கவனம் செலுத்தினால் இப்போது முழு ஈடுபாட்டுடன் எழுதி வரும் நூலில் தொய்வு விழுந்துவிடும். எனக்கு உதவியாளர் வைத்துக்கொண்டு கோப்புகள் புத்தகங்களை ஒழுங்கு செய்ய வசதி இல்லை. அவர்களாக முடிந்த போது வந்து உதவி செய்பவர்களே உள்ளனர். அவர்களும் சில முக்கியமான புத்தகங்களையும் கோப்புகளையும் இட மாற்றம் செய்துவிட்டுப் போய்விடுகிறார் கள்! என் மீது உள்ள அன்பால் வருகிறார்கள். அவர்களைக் கோபித்துக்கொள்ள என்னால் இயலாது! கோப்புகளையெல்லாம் டிவிடிக்களாக மாற்ற வேண்டும். அதற்கெல்லாம் என்னிடம் ஏது பணம்?
    மறந்துவிட்டேன். ராஜாஜிக்குக் குலக் கல்விப் பட்டம் சூட்டியிருந்தீர்கள். செப்டம்பர் 2012 ஆழம் இதழில் எனது கட்டுரை மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு வெளிவருகிறது. அதில் குலக் கல்வி சமாசாரம் பற்றியும் எழுதியுள்ளேன். இதழ் வெளியான பிறகு மறு பிரசுரத்திற்காகத் திண்ணைக்கு அனுப்புகிறேன். அவர்கள் பிரசுரிக்கலாம் என முடிவு செய்தால் நீங்களும் விரும்பினால் படித்துப் பார்க்கலாம்.
    -மலர்மன்னன்

  23. Avatar
    தங்கமணி says:

    காவ்யா,

    //இந்துக்களை மட்டும் தோட்டி வேலைக்கு பயன்படுத்தவில்லை. ஏராளமான முஹாஜீர் எனப்படும் இந்திய முசுலீகள் கராய்ச்சியில் வாழ்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் பெண்களும் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் பாகிஸ்தானை ஆதிநாடாகக்கொண்டோரால். //

    http://www.youtube.com/watch?v=kv1lsfhb9uY

    இந்த இணைப்பை சொல்கிறீர்களா?


    சுவனப்பிரியன்
    //காங்கிரஸ் சார்பாக மத்தியிலும் மாநிலத்திலும் பல உயர் பதவிகளை வகித்து சட்டத்தை செயல்படுத்தியரை பாப்புலர் தலைவராக இருந்ததில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைவரே நாட்டு பிரிவினையை பேசும் போது நாம் பேசினால் என்ன என்ற தைரியத்தை ஜின்னாவுக்கு கொடுத்தே ராஜாஜியின் நிலைப்பாடுதான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

    //
    முஸ்லீம்கள் ஆட்சிக்கு வந்தால் வரலாறுகள் எப்படியெல்லாம் திரிக்கப்படும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு.
    பாகிஸ்தானில் சிந்து சமவெளியிலிருந்து நேரே கஜினியும் கோரியும் படையெடுத்து வந்து அங்கிருந்த பெண்களை கற்பழித்து ஆண்களை பெண்களை அடிமைகளாக்கி கூட்டிக்கொண்டு போனது “இஸ்லாமின் புத்தெழுச்சி” என்று வரலாறு எழுதுகிறார்கள்.
    அதற்கு இது பரவாயில்லை.

    1. Avatar
      Kavya says:

      The basic point in my mge s that there have been continual ethnic riots between the Indian origin muslims named Mujahirs and the Pakistan origin Muslims. Many many lives have been lost along with property. Mostly in Karachi.

      When that happened, no one cared. y thangamani ?

    2. Avatar
      Kavya says:

      தங்கமணி,

      வரலாறே உங்களுக்குத் தெரியவில்லை. அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள்.

      வரலாற்றில் மன்னராட்சிதான் இருந்தது. உலகமெங்கும். நவீன காலத்தில்தான் மக்களாட்சி வந்தது.

      மன்னராட்சியின் போது ஒவ்வொரு மன்னனும் பேரரசனாகத்தான் விரும்பினான். ஒருநாட்டைப் பொருது அம்மன்னனையும் அந்நாட்டு மக்களைச்சிறைப்படுத்தி, அவர்கள் பெண்களை வன்புணர்வது நம் மன்னர்களின் வாடிக்கை.

      பல்லவனுக்கும் சாளுக்கியனுக்கும் பழிக்குப்பழி போர்களை நாம் படிக்கின்றோம். காஞ்சி தீக்கிரையாகியது; மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்; பெண்களை மட்டும் விடுவார்களா?

      பழிக்குப்பழியாக, பல்லவன் வாதாபியைத் தீக்கிரையாக்கித் தரைமட்டமாக்கினான். மக்களை நாசப்படுத்தி எத்தனைப் பெண்களை அவன் வீரர்கள் வன்புணர்ந்தார்களோ நமக்குத் தெரியாது. வன்புணரவில்லையென்று டுபாக்கூர் வேலையை நாம் செய்ய முடியாது.

      இவை உதாரணங்கள். நம் பல்லவனை மாமல்லன் எனப்புகழ்ந்து காஞ்சித்தலைவன் என்று சினிமா எடுத்து மகிழ்கிறோம். நம் வரலாறு அவனைப்பெரிய தமிழ்நாட்டின் மானத்தைக்காத்தவன் என்றுதான் புகழ்கிறது. அதே வண்ணம், சாளுக்கிய புலிகேசியை மராட்டியர்கள் புகழத்தான் செய்வார்கள். எங்கே உண்மை ஓடியது? விருப்பு வெறுப்பின்றி நோக்குவோருக்குத்தான் தெரியும்: மன்னர்கள் என்பவர்கள் கொடியவர்கள் என்று.

      அப்படியிருக்கும்போது கஜினியும் கோரியும் மஹாத்மாக்களாகவா இருப்பார்கள்? அவர்களும் மன்னர்கள் செய்வதைத்தான் செய்வார்கள். இல்லையா?

      ஆக‌, எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள்தான். இசுலாமிய‌ர் கோரியையும் க‌ஜ‌னியையும் புக‌ழ்ந்து ம‌ற்ற‌ இந்து ம‌ன்ன‌ர்க‌ளை இக‌ழ்ந்தால் ம‌ட்டுமே த‌வறு. நீங்க‌ள் செல‌க்டிவாக‌ க‌ஜ‌னியையும் கோரியையும் எடுப்பீர்க‌ள் இல்லையா? அதே போல‌ அவ‌ர்க‌ளும் செய்கிறார்க‌ள்.

      1. Avatar
        தங்கமணி says:

        //மக்களை நாசப்படுத்தி எத்தனைப் பெண்களை அவன் வீரர்கள் வன்புணர்ந்தார்களோ நமக்குத் தெரியாது. வன்புணரவில்லையென்று டுபாக்கூர் வேலையை நாம் செய்ய முடியாது.
        //

        காவ்யா,

        இந்தியாவின் ஒழுக்க மதிப்பீடுகளை விழுமியங்களை நினைவில் கொண்டவர்கள் எப்போதுமே செய்யமுடியாத தவறுகளை செய்கிறீர்கள். இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் செய்த வரலாற்று தவறுகளை, அவை தவறுகள் அல்ல, எல்லோரும் செய்தார்கள் என்று பூசி மொழுக கிளம்பியுள்ளவர்களில் நீங்களும் ஒருவரே. இப்படிப்பட்டவர்களுக்கு உண்மை முக்கியமல்ல. நீயும் குற்றவாளிதான். ஆகையால் உன் பெண்டிரை கற்பழித்ததும் உன் மூதாதையரை கொன்றதும், நியாயமானதுதான், ஆகையால் அதனை பற்றி பேசாதே என்று வாயை அடைக்கும் பிரயத்தனம்.

        போரானாலும், பெண்களை வன்புணர்வதோ, சிறுவர்களையும் பெண்களையும் கொல்வதோ மாபெரும் குற்றம் என்பதை ராமாயணமும், மகாபாரதமும் சொல்கின்றன.

        இவையே இந்தியாவின் மன்னர்களுக்கு உதாரணமாகவும், மன்னர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மக்களிடமும் கொடுத்தன.

        இந்தியாவில் எத்தனை எத்தனையோ கல்வெட்டுகளும், சங்க பாடல்களும் இருக்கின்றன. ஒரு இடத்திலாவது சிறுவர்களை கொல்வதோ அல்லது பெண்களை போரில் வன்புணர்வதோ இருக்கிறதா?

        தேடி சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
        ஆனால், இஸ்லாமியர் எழுதிய ஆவணங்களிலேயே பெண்களை கற்பழித்ததையும் சிறுவர்களையும் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக பிடித்து சென்றார்கள் என்பதையும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனை பெருமையாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

        இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்தாலும், புரியாதமாதிரி நடிப்பதும் நீங்கள் செய்வதுதான். ஏற்கெனவே கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சென்றீர்கள். இப்போது சுவனப்பிரியனுக்கு எழுதும் பதிலில், சுவனப்பிரியன் சார்பாக எழுதுகிறீர்கள்.

        தன்னெஞ்சறிவது பொய்யற்க

        1. Avatar
          பூவண்ணன் says:

          பூவண்ணன்

          http://countrystudies.us/nepal/13.htm

          நம்ம ஹிந்டுத்வர்கள் இஸ்லாமிய ராஜாக்கள் தான் அண்ணன்,தம்பிய,அப்பாவ கொன்று,சிறையில் வைத்து ராஜாவானவர்கள் ,ஹிந்துக்கள் ரொம்ப நல்லவிங்க என்று நிறைய கதைகளை பரப்பியுள்ளனர்
          பல கோடி மக்களும் அதை நம்பி இன்றும் அவர்களின் காலங்களை பொற்காலம் என்று எண்ணி வாழ்கின்றனர்
          நேர்மையான புரிதல் இருந்தால் ஹிந்து ராஜாக்கள் அட்டூழியங்களில் மற்றவர்களுக்கு சிறிதும் சளைத்தவர்கள் இல்லை எனபது புரியும்
          குடும்பங்களை அழிப்பது,ராஜகுருவாக டம்மி ராஜாக்களை ஆட்டுவிப்பது ,இளம் மனைவியின் பேச்சை கேட்டு முந்தைய மனைவிகளையும் ,மகன்களையும் விரட்டுவது,கொல்வது என்று ஹிந்து ராஜாக்கள் ஆடாத ஆட்டமல்ல

          Under intense pressure from the aristocracy, the king decreed in January 1843 that he would rule the country only with advice and agreement of his junior queen, Lakshmidevi, and commanded his subjects to obey her even over his own son, Surendra. The queen, seeking support of her own son’s claims to the throne over those of Surendra, invited back from exile Mathbar Singh Thapa, who was popular in army circles. Upon his arrival in Kathmandu, an investigation of his uncle’s death took place, and a number of his Pande enemies were executed

          http://en.wikipedia.org/wiki/Anglo-Nepalese_War

          During the regency of Rani Rajendra Laxmi, towards the close of the 18th century, the hill country of Palpa was conquered and annexed to Nepal. The rajah retreated to Butwal, but was subsequently induced, under false promises of redress, to visit Kathmandu, where he was put to death, and his territories in Butwal seized and occupied by the Gorkhali.[6] Bhimsen Thapa, the Gorkhali prime minister from 1806 to 1837, installed his own father as governor of Palpa, leading to serious border disputes between the two powers.

  24. Avatar
    தங்கமணி says:

    லியாகத் அலிகான்
    1941இல் முஸ்லீம் லீக் சென்னையில் மாநாடு நடத்தியது

    When the twenty-eighth session of the League met in Madras on 12 April 1941, Jinnah told party members that the ultimate aim was to obtain Pakistan. In this session, Khan moved a resolution incorporating the objectives of the Pakistan Resolution in the aims and objectives of the Muslim League. The resolution was seconded and passed unanimously.[9]
    அதன் பின்னால் நடந்த தேர்தலில் சென்னை மாகாண முஸ்லீம்கள் பெருவாரியாக வாக்களித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக போராடிய முஸ்லீம் லீகுக்கு வாக்களித்தனர். சென்னை தேர்தலில் 1946இல் காங்கிரஸ் 163 இடங்களை பெற்றது.இரண்டாவதாக வந்த கட்சி பாகிஸ்தான் ஆதரவு முஸ்லீம் லீக். பெற்ற இடங்கள் 28
    அன்றைய சென்னை மாகாண முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று சொல்வது இமாலய பொய்.

  25. Avatar
    மலர்மன்னன் says:

    //1917ல் ஆர்எஸ்எஸின் வீர சவர்க்கார் விடுத்த பிரகடனம் என்ன? ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல- சுவனப்பிரியன்
    //
    இதுவும் குழப்பமடைவதன் விளைவு. 1917-ல் ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பே ஏற்படவில்லை. சாவர்க்கர் ஆர். எஸ் எஸ் ல் இருந்ததும் இல்லை. இதைவிட முக்கியம் 1917-ல் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்!
    தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்ற நிலையில் உள்ள சிலரின் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்துவிட வேண்டாம். எழுதுவத்ற்குமுன் என்ன எழுதுகிறோம் என்று யோசித்து நிதனமாக எழுதுங்கள். திண்ணை எங்கே போய்விடப் போகிறது? அரையுங் குறையுமாக எதையாவது படித்து அதையும் தவறாகவே புரிந்துகொண்டு உளறுபவர்கள் பின்னர் அவமானத்திற்கு உள்ளாவதுபோல் உங்கள் நிலை ஆகிவிடக் கூடாது. நீங்கள் விவரம் உள்ளவராக இருக்கிறீர்கள், பண்பு பிறழாமல் நாகரிகமாகக் கருத்தைச் சொல்பவராகவும் இருக்கிறீர்கள். அது சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் மனம் புண்படாமல் அதிகப் பிசங்கித்தனமாகக் குதிக்காமல் அமைதியாகக் கருத்துத் தெரிவிக்கிறீர்கள். எனவேதான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன் எனக்குப் போதிய அவகாசம் இல்லை என்றாலும். இஸ்லாம் மட்டுமல்ல, எல்லா மாரக்கங்களுமே அமைதி மார்க்கமாகவும் உள்நோக்கமற்ற தாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நல்ல உள்ளங்கள் விரும்பும். பிரபஞ்ச வெளியில் ஒரு தூசி அளவுகூட இல்லாத பூமியில் மனித இனம் என்கிற ஒரு சிறு துளியில் இத்தனை பூசலா என்று நினைவு வரும்பொழுது வெட்கமாகவும் சிரிப்பாகவும் உள்ளது. ஆனால் என்ன செய்ய இதுவும் மகாமாயையின் ஒரு நாடகம், அதி நமக்குக் கிடைத்துள்ள கதா பாத்திரத்தை ஒழுங்காக நடித்துவிட்டுப் போவோம் என்று சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. மிகவும் வலுக்கட்டாயமாகத் தான் தரைக்குப் பிடித்து இழுத்துக்கொண்டு வர வேண்டியுள்ளது!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      //எல்லா மாரக்கங்களுமே அமைதி மார்க்கமாகவும் உள்நோக்கமற்ற தாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நல்ல உள்ளங்கள் விரும்பும். பிரபஞ்ச வெளியில் ஒரு தூசி அளவுகூட இல்லாத பூமியில் மனித இனம் என்கிற ஒரு சிறு துளியில் இத்தனை பூசலா என்று நினைவு வரும்பொழுது வெட்கமாகவும் சிரிப்பாகவும் உள்ளது. ஆனால் என்ன செய்ய இதுவும் மகாமாயையின் ஒரு நாடகம், அதி நமக்குக் கிடைத்துள்ள கதா பாத்திரத்தை ஒழுங்காக நடித்துவிட்டுப் போவோம் என்று சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. மிகவும் வலுக்கட்டாயமாகத் தான் தரைக்குப் பிடித்து இழுத்துக்கொண்டு வர வேண்டியுள்ளது!//

      Good script! Interesting !!

    2. Avatar
      Kavya says:

      சாவர்க்கர்- ஆர் எஸ் எஸ் என்ற நிலையில் நின்று பதில் எழுதிவிட்டீர்கள். முடிந்ததா கதை மலர்மன்னன்?

      சுவனப்பிரியன் சொல்வதென்ன? இந்தியா என்பது ஒற்றைத் தேசமன்று என்று சாவர்க்கர் சொன்னார் என்பதுவே. ஆர் எஸ் எஸ்ஸில் இல்லை; அந்தமானில் சிறைபட்டுக்கிடந்தார் என்று சொன்னால் போதுமா? அவர் இந்தியா என்பது ஒற்றைத்தேசமன்று என்று சொன்னாரா இல்லையா என்பதைச்சொல்லுங்கள். தேவையில்லா விடயங்கள் எழுதிக்கொண்டே போகும் நீகும் கேள்விக்குப்பதிலைச்சொல்லிவிட்டு மற்றவற்றைப்பற்றி எழுதுங்கள். சாவர்க்கர் சொன்னாரா இல்லையா?

  26. Avatar
    மலர்மன்னன் says:

    முஸ்லீம்கள் ஆட்சிக்கு வந்தால் வரலாறுகள் எப்படியெல்லாம் திரிக்கப்படும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு – தங்கமணி//
    இப்போதே திரிக்கப்பட்டப் பட்ட வரலாற்றைத்தான் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். நடந்துவிட்ட தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வரலாற்றிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதுதான் வரலாறு கற்பிக்கப் படுவதன் நோக்கம். ஆனால் அமைதி குலைந்துவிடக் கூடாது என்று கற்பித்துக் கொண்டு வேண்டுமென்றே உண்மைகள் மறைக்கப் பட்டும் திரித்தும் எழுதப்படும் பாடங்கள்தான் நடத்தப் படுகின்றன. தில்லியில் அவுரங்க சீப் பெயரில் சாலை உள்ளது. பகதூர் ஷாவும் திப்புவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சித்திரிக்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட ஆட்சியில் அண்டப் புளுகுகளே உண்மையென எழுதப்படும் பாடங்களை நம் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      தில்லியில் தெருக்களுக்கு அவுரங்சீப்புக்கு மட்டுமன்றி, அக்பர், ஷாஜஹான், டூப்ளே (இப்பொது காமராஜ்), கிளைவ், கர்சன், என்றும், ஒரு ஆசுபத்திரிக்கு லேடி ஹேர்டிங் ஆசுபத்திரி என்றும் ஒரு கல்லூரிக்கு லேடி இர்வின் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பிடிக்காதவற்றை இந்துத்வாவை ஆதரிக்கும் பி ஜே பி அரசாண்டபோது ஏன் மாற்றவில்லை? ஏன் இன்னும் அஹமதாபாத்? மோடி அதை கிருஸ்ணாபாத் என்று ஏன் மாற்றவில்லை?

      தெருக்களுக்குப்பெயரிடுவது கட்டாயமாக தியாகிகளில் பெயர்தான் இடப்படவேண்டுமென்பதில்லை. இல்லாவிட்டால் ஏன் காலனி ஆட்சியாளரின் பெயர்கள் இன்னும் நிற்கின்றன? அவர்கள் பெயர்களையெல்லாம் எடுத்துவிட வேண்டுமென்றால், நாம் தாலிபாந்தான். வேறுபாடேயில்லை.

      ஏன் இன்னும் ஆங்கிலம்? பள்ளிகளிலிருந்து எடுத்துவிட்டு சமசுகிருதததைப்போதிக்கலாமே? ஆம், போதிக்கலாம் என்றால் ஏன் பிஜேபி செய்யவில்லை?

      நம் பள்ளிகளில் தவறான வரலாறு கற்பிக்கப்படுகிற‌தென்றால், இப்போது பிஜேபி, மற்றும் இந்துத்வா ஆதரவாளரான ஜெயலலிதாதானே ஆட்சியில் இருக்கிறார்? இந்துத்வாவினரையே வரலாற்று பாடப்புத்தகங்கள் எழுதச்சொல்லி தமிழ்நாட்டுக்குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாமே?

      கருநாநிதியின் செம்மொழிக்கவிதையை ஒரே இரவில் கிழிக்கச்செய்த ஜெயலலிதாவால், வரலாற்று நூல்களை இந்துத்வம் விரும்பும் வண்ணம் மாற்ற முடியாதா?

  27. Avatar
    bala says:

    the archives held by thiru. Malar mannan is too precious to loose. how much willit cost to convert into digital. a fund or many corporates will be interested may be NRIS.
    POINT ONE AFTER 1857 IT BECAME IMPERATIVE FOR BRITISH TO DIVIDE HINDU AND MUSLIMS. SIR SYED AHMAED PLAYED INTO THEIR SCHEME AND THE FIRST TO DECLARE HINDU AND MUSLIMS TWO NATIONS.

    POINT TWO CONGRESS MADE A GRAVE MISTAKE FOR ENMASSE RESIGNATION FROM GOVERNMENT AND LEGILATURES CREATING A POWER VACUUM COUPLED WITH ILL ADVISED QUIT INDIA MOVEMENT RESULTING IN CONGRESS LEADERS BEHIND BARS ANARCHY PREVAILED BRITISH QUELLED THE AGITATION EFFECTIVELLY. MUSLIM LEAGUE EXPLOTED THE SITUATION TO THE HILT CONSOLIDATED THEIR POSITION. SHRAWADY BECOMING PM OF BENGAL A RABID COMMUNALIST FANNED HINDU HATRED.
    POINT THREE FINANCE MINISTER LIAQUAT ALI TAXED BUSINESS HOUSES A SOCIALIST BUDGET OPPOSED BY CONGRESS IN FAVOUR OF POWERFUL BUSINESS HOUSES MAKING COALITION GONVERNMENT UNTENABLE AND STREGTHENED TWO NATION THEORY

  28. Avatar
    bala says:

    mountbatten a novice in politics replaced Lord Wawell, a seasoned administator unlike maverick mountbatten. mounbatten in all battles he faught was a failure and only propped up because of his blus blood. his mad rush in advancing independence with scant regard for consequences led to horrendous riots and mayhem.

  29. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //அதன் பின்னால் நடந்த தேர்தலில் சென்னை மாகாண முஸ்லீம்கள் பெருவாரியாக வாக்களித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக போராடிய முஸ்லீம் லீகுக்கு வாக்களித்தனர். சென்னை தேர்தலில் 1946இல் காங்கிரஸ் 163 இடங்களை பெற்றது.இரண்டாவதாக வந்த கட்சி பாகிஸ்தான் ஆதரவு முஸ்லீம் லீக். பெற்ற இடங்கள் 28
    அன்றைய சென்னை மாகாண முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று சொல்வது இமாலய பொய்.//

    ……..இதனை நேருவிடம் புகாராக சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்ளிடம் பிரசாரம் செய்ய ஜின்னாவுக்கு மிக தோதுவாகப் போனது.
    AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 17,18
    இதன் பிறகுதான் ஜின்னாவின் பேச்சை சில முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் அமோக வெற்றி பெறுககிறது. தனக்கு பாதகமான சூழ்நிலைகளையே சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஜின்னா இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்……..

    முதலில் ஜின்னாவை ஆதரிக்காத முஸ்லிம்கள் காங்கிரஸாரின் இந்து சார்பு நிலையை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் முஸ்லிம் லீக்குக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று நான் கூறியதை படிக்கவில்லையா தங்கமணி!

    இது போன்ற தேர்தல்களில் பாகிஸ்தான் பிரிவினைக்காகத்தான் சென்னை முஸ்லிம்கள் ஓட்டளித்து வெற்றி பெற வைத்தார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அடுத்த வருடம் பாகிஸ்தான் பிரிந்த போது சென்னை மாகாண முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்பதற்கும் உங்களின் பதில் என்ன? இப்பொழுது யார் இமாலய பொய்யை சொலகின்றனர் என்பது தெரிகிறதல்லவா?

  30. Avatar
    தங்கமணி says:

    // அடுத்த வருடம் பாகிஸ்தான் பிரிந்த போது சென்னை மாகாண முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்பதற்கும் உங்களின் பதில் என்ன?//
    இங்கே மலப்புரத்தில் மாப்ளாஸ்தான் உருவாகும். அங்கே போகலாம் என்று இருந்தார்கள்.

  31. Avatar
    Kavya says:

    பகதூர் ஷாவும் திப்புவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சித்திரிக்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட ஆட்சியில் அண்டப் புளுகுகளே உண்மையென எழுதப்படும் பாடங்களை நம் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!//

    The above is from Malarmannan.

    ம‌ன்ன‌ர்க‌ள் அனைவ‌ரும் கால‌னி அர‌சின் பேச்சைக்கேட்டு ந‌ட‌ந்த‌வ‌ர்க‌ள். எல்லாமே ச‌ரியாக‌ இருக்கும்போது வாரிசு ச‌ட்ட‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன்ன‌ர்க‌ளும், ம‌ற்ற‌ பிற‌வ‌ற்றால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன்ன‌ர்க‌ளும் சேர்ந்து அவ்வ‌ர‌சை எதிர்த்த‌தே 1857 புர‌ட்சி. சிப்பாய்க்க‌ல‌க‌ம் அவ‌ர்க‌ளுக்குத் தோதாய‌ அமைந்த‌து.

    இதே போல‌ எக்கார‌ண‌ங்க‌ளாலும் கால‌னி அர‌சை எதிர்த்த‌வ‌ர்க‌ளை இன்றும் தியாகிக‌ள் என்கிறோம். ச‌னாத‌ன‌ த‌ர்ம‌ம் ஆங்கிலேய‌னால் பாழ்ப‌டுகிற‌து என்று திருனெல்வேலி க‌லெக்ட‌ரை அவ‌ர் ம‌னைவி குழ‌ந்தைக‌ள் முன்னிலையிலேயே சுட்டுக்கொன்ற‌வ‌னை (வாஞ்சிநாத‌ன்) நாம் சுத‌ந்திர‌போராட்ட‌த்தியாகி என்ற‌ழைத்து நூல்க‌ளில் ப‌டிக்கிறோம்.

    ஆக‌, ஒரு உண்மை தெரிய‌வ‌ரும். கால‌னி அர‌சையோ, அவ்வ‌ரசு ஊழிய‌ர்க‌ளைக்கொன்ற‌வ‌ர்க‌ள‌ எல்லாருமே சுத‌ந்திர‌ப்போராட்ட‌த்தியாகிக‌ள்தான். அவ‌ர்க‌ளுள் ப‌ல‌ர் த‌ன்ன‌லமில்லா பொதுவாக‌ ந‌ம் நாட்டை நாமே ஆள‌வேண்டுமென‌ வேட்கையால் செய‌ல்ப‌ட்டோர். வ உ சி, சிவா, கும‌ர‌ன் போன்றோர். த‌ன்ன‌ல‌த்தோடு தன் ஆட்சிக்குக்கேடு வ‌ர‌க்கூடாதென்று வெள்ளைய‌ன் அர‌சை எதிர்த்தோர் ப‌ல‌ர்: ப‌ஹாதூர் ஷா, ராணி ஜான்சிபாய், த‌த்தியா தோப்பே, திப்பு சுல்தான்.

    த‌ன் ம‌த‌த்துக்குக் கேடுவ‌ர‌க்கூடாது என்று எதிர்த்தோர் சில‌ர்: மாங்க‌ள் பாண்டே போன்றோர்.

    த‌ன் வைதீக‌ ச‌னாத‌ன‌ ம‌த‌த்துக்கும் அக்க‌லாச்சார‌த்துக்கும் கேடுவ‌ருகிற‌தே இவ‌னால் என்று தீவிர‌வாதியாக‌ மாறிவர் சில‌ர்: வாஞ்சிநாத‌ன் போன்றோர்.

    அனைவ‌ருமே இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் தியாகிக‌ள்தான். அப்ப‌டியிருக்க‌ ம‌ல‌ர்ம‌ன்ன‌னுக்க் ப‌ஹ‌தூர் ஷா ச‌ஃபார், திப்பு மேல்ம‌ட்டும் ஏன் கோப‌ம்? ஜான்சி ராணி, த‌ன்தியா தோப்பேக்க‌ளை ஏன் விட்டுவிட்டார்?

    தியாகி ஆர்? என்ப‌த‌ன் விள‌க்க‌ம் சிம்பிள்: கார‌ண‌ம் எதாகாவாவ‌து இருக்க‌ட்டும். வெள்ளைய‌னை எதிர்த்தால், அவ‌னைக்கொன்றால், அல்ல‌து அவர்களால் சிறையில‌ட‌ப்ப‌ட்டால், அல்ல‌து தூக்கிலிட‌ப்ப‌ட்டால், அவ‌ர்க‌ள் தியாகிக‌ள்தான் என்று சொல்கிற‌து ந‌ம் வ‌ர‌லாற்று நூல்க‌ள். சிந்தித்துச்சொல்லுங்க‌ள் உண்மையா பொய்யா? வ‌ர‌லாறு என்ப‌து என்ன‌? நாம் எழுதிக்கொண்ட‌துதான். இல்லையா?

    அவ‌ர்க‌ளுள் இசுலாமிய‌ர் ம‌ட்டும் தியாகிக‌ள் கிடையாதென்று சொல்ல‌ விழைகிறார் ம‌ல‌ர்ம‌ன்ன‌ன். எப்ப‌டி நியாய‌மாகும்?

    எதையும் எழுதிவிடலாம். கேட்க‌ ஆளில்லையென்றால் என்று மலர்மன்னன் எழுதுவது ம‌லர்ம‌ன்ன‌னுக்கும் பொருந்தும். இவ‌ர் சொல்வ‌து என்ன‌வென்றால், அண்ட‌ப்புழுகுக‌ள் சொல்வ‌த‌ற்கு எங்க‌ளுக்கும் உரிமை தாருங்க‌ள் என்ப‌தே. Complete lack of integrity !

    1. Avatar
      Kavya says:

      தியாகிகள் என்றால் ஆர் ஆர்? சுதந்திரப்போராட்டத்தியாகி என்றால் அதன் இலக்கணம் யாது? இக்கேள்விகளுக்கு மலர்மன்னன் பதில் சொல்லட்டும்.

  32. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //I have posted my points. It is piriyan who is yet to respond.
    He also escapes like U do.//
    நான் எங்கும் ஓடி விடவில்லை. நான் அளித்த பதிலை என்ன காரணத்தினாலோ திண்ணை பிரசுரிக்கவில்லை.

    (திண்ணை நடுநிலையாக இருந்து இதனை பிரசுரிக்க வேண்டும். பிரச்னைக்குரியதை எடிட் செய்து கொள்ளுங்கள்.)

    //Piriyan,
    Firts you said that no muslim from kerala & T.N went to pakistan. Now U say that some might have gone.
    Why this confusion?
    As regards rajaji, malarmannan has given a very detailed explaination.//

    உங்கள் சார்பாக மலர்மன்னன் பதில் அளித்தது போல் என் சார்பாக காவ்யா மிக அழகாக பதில் அளித்துள்ளார். நான் சொல்வதை விட உங்கள் மதத்தை சேர்ந்த காவ்யா சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். படித்து தெளிவு பெறுங்கள்.

    //U do not have an answer as to why muslims refuse to join the national mainstream & refuse to accept a common civil code.//

    ஹா…ஹா…பொது சிவில் சட்டம் என்ற குரலானது முஸ்லிம்களையும் இந்து மத சட்டத்துக்குள் ஒன்றாக்கி கிறித்தவ, சீக்கிய, பவுத்த மதங்களை எவ்வாறு விழுங்கினீர்களோ அதுபோன்ற சூழ்ச்சி வலை என்பதை அறியாதவர்கள் அல்ல முஸ்லிம்கள். இன்று இந்துத்வா வாதிகள் என்ன சொல்கிறார்கள்? ‘எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதில் பிரச்னை? அவர்கள் இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களை எதிர்ப்பதை நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம்’ என்றுதானே சொல்கின்றனர்.

    அதாவது நீங்கள் மக்காவுக்கு செல்லலாம். அல்லாவை வணங்கிக கொள்ளலாம். அதோடு முருகனையும் வணங்க வெண்டும். பிள்ளையாரையும் வணங்க வேண்டும். கன்னி மேரியையும் வணங்கிக் கொள்ள வேண்டும். பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேர் இழுக்க வேண்டும். நாகூர் தர்ஹாவையும் கொண்டாட வேண்டும். திருமண சட்டங்கள் ஒன்றாக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்த சாதியாக இருப்போம். முஸ்லிம்களாகிய நீங்கள் நாடார், தேவர், கிறித்தவர், சீக்கியர் போன்று அடுத்த சாதியில் வர வேண்டும். இவற்றை எல்லாம் முஸ்லிம்கள் ஒத்துக் கொண்டால் இந்துத்வாவாதிகளான எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ இதுதானே நீங்கள் வைக்கும் பொது சிவில் சட்டம். அதாவது நேரிடையாக சொன்னால் உண்மை வெளிப்பட்டு விடும். எனவே மறைமுகமாக அனைவருக்கும் பொது சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து முஸ்லிம்களை வர்ணாசிரமக் குழியில் தள்ளப் பார்க்கிறீர்கள். இந்திய சிவில் சட்டம் என்பது வர்ணாசிரமத்தின் மறு பதிப்பு தானே! குர்ஆனை பின் பற்றும் எந்த முஸ்லிமும் தனது திருமணம் சொத்து பிரிப்பு போன்ற சிவில் சட்டங்களில் கை வைக்க ஒத்துக் கொள்ள மாட்டான். கிரிமினல் சட்டங்கள் இன்றும் எல்லோருக்கும் பொதுவாகவே உள்ளது. அதை முஸ்லிம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் சிவில் சட்டங்களில் முஸ்லிம்களின் தனியார் உரிமைகளில் தலையிடுவதை எந்த முஸலிமும் ஒத்துக் கொள்ள மாட்டார்.

    இவ்வாறு மதங்களுக்கு தனி சட்டம் வைத்து 50 வருடங்களுக்கு மேலாகிறது. இதனால் இந்தியாவின் ஒற்றுமைக்கு என்ன பாதிப்பு வந்து விட்டது? இது வரை இந்திய சட்டத்தை 50 முறைக்கு மேல் திருத்தி விட்டீர்கள். இனி வரும் காலங்களிலும் திருத்தப் போகிறீர்கள்.

    ஆனால் முஸ்லிம்களின் தனியார் சட்டம் என்பது இறைவனால் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டது. 1400 வருடங்களாக ஒரு இடம் கூட மாற்றமில்லாமல் அனைத்துலக முஸ்லிம்களும் பின் பற்றி வருகின்றனர். எந்த சட்ட சிக்கலும் இது வரை வந்ததில்லை. எந்த முஸ்லிம் நாட்டிலும் வந்ததில்லை. இனியும் வராது.

    எனது வக்கீலான இந்து நண்பன் குர்ஆனின் பாகப்பிரிவினை சட்டங்களை முதன் முதலாக படித்து விட்டு அசந்து போய் விட்டான். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப் புற அரபி எவ்வாறு இவ்வளவு அழகிய சட்டத்தை கொடுக்க முடிந்தது என்று இன்றும் வியந்து வருகிறான். எனவே வருடம் ஒரு முறை சட்டங்களை மாற்றும் உங்களுக்கு சிவில் சட்டம் ஒத்து வரலாம். விவாகரத்து பிரச்னையில் சமீபத்தில் கூட பெரும் பிரச்னை இந்து சட்டத்தில் உண்டானதை அறியலாம். இவ்வாறான ஒரு குழப்ப நிலை முஸ்லிம்களுக்கு என்றும் வந்ததில்லை.

  33. Avatar
    தங்கமணி says:

    //அதோடு முருகனையும் வணங்க வெண்டும். பிள்ளையாரையும் வணங்க வேண்டும். கன்னி மேரியையும் வணங்கிக் கொள்ள வேண்டும். பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேர் இழுக்க வேண்டும். நாகூர் தர்ஹாவையும் கொண்டாட வேண்டும். திருமண சட்டங்கள் ஒன்றாக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்த சாதியாக இருப்போம். முஸ்லிம்களாகிய நீங்கள் நாடார், தேவர், கிறித்தவர், சீக்கியர் போன்று அடுத்த சாதியில் வர வேண்டும். இவற்றை எல்லாம் முஸ்லிம்கள் ஒத்துக் கொண்டால் இந்துத்வாவாதிகளான எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ இதுதானே நீங்கள் வைக்கும் பொது சிவில் சட்டம்.//

    இப்படித்தான் முஸ்லீம் பேச்சாளர்கள் முஸ்லீம்களிடம் பயங்காட்டிக்கொண்டிருக்கிறார்களா?

    பாவம்.

  34. Avatar
    suvanappiriyan says:

    மலர் மன்னன்!

    //பகதூர் ஷாவும் திப்புவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சித்திரிக்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட ஆட்சியில் அண்டப் புளுகுகளே உண்மையென எழுதப்படும் பாடங்களை நம் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!//

    82 வயதான பஹதூர் ஷா ஜாபர் தனது தள்ளாத வயதிலும் வெள்ளயைரின் ஆதிக்கத்தை வேரறுக்க எந்த அளவு முயன்றார் என்றால் புரட்சிக் காலத்தில் அவர் ஜெய்பூர், ஜோத்பூர், பிகானீர் போன்ற மன்னர்களுக்கு எழுதிய கடிதத்தில் வெள்ளயைர்களை இந்த நாட்டிலிருநது விரட்ட இந்திய மன்னர்களைக் கொண்ட கூட்டரசு ஒன்று அமையுமானால் அதற்காக தன் மணிமுடியையும் துறக்கத் தயார்’ எனக் குறிப்பிட்டார்.

    ஏ.ஜி.நூராணி ‘மறுக்கப்பட்ட நீதி’ தி இல்லஸ்டிரேட் வீக்லி ஆஃப் இந்தியா’ பிப்ரவரி 14, 1988,

    ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட பஹதூர் ஷா ஜாபர் தனது அந்திமக் காலத்தில் இயற்றிய கீழ்க்கண்ட கவிதை அவர் இந்திய மண்ணின் மீது வைத்திருந்த பாசத்துக்கு சான்று பகர்கிறது.

    ‘ஐயோ!….ஜாபருக்கு இப்படியும் ஒரு துரதிர்ஷ்டமா? தான் நேசித்த பாரத மண்ணில் புதை குழிக்கு இரண்டு கஜ நிலம் கூட அவருக்கு கிடைக்கவில்லையே’

    என்பதே அந்த கவிதை.

    பஹதூர்ஷா வின் புதல்வர்களான இளவரசர்கள் மிர்ஜா மொகைல், மிர்ஜா கிஜிர் சுல்தான், மிர்ஜா அபுபக்கர் ஆகியோர் ஆங்கில தளபதி ஹட்ஸனால் கைது செய்யப்பட்டு ஆடைகள் களையப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஆங்கிலேயனால் கொல்லப்பட்டனர்.

    தி இல்லஸ்டிரேட் வீக்லி பிப்ரவரி 14 1988

    பஹதூர் ஷா வரலாறாவது மறைக்கப்பட்டது. ஆனால் திப்புவின் சுதந்திர போராட்டத்துக்கு நேரிடையான ஆதாரங்கள் இன்றும் மைசூரில் உள்ளது. நேரிலேயே நான் பார்த்துள்ளேன். இதையும் மலர்மன்னன் மறுப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

    சுதந்திரத்திற்காக போராடிய இந்த இரண்டு பேரின் பெயரை நீக்கி விட்டு கோட்ஸேயின் பெயரை வைத்து விடுவோமா?.

    1. Avatar
      paandiyan says:

      adhu enna கோட்ஸேயின் ?? he fighted for Hindus only and he was also one of the real hero for Hindus. pesamal KASHAB பெயரை வைத்து விடுவோமா?.

  35. Avatar
    vedamgopal says:

    வடிவேலுவும் அவரது கூட்டாளிகளும் ஒரு படத்தில் ஒரு அரசி மண்டியில் உள்ள தராசுகல்லையும் தராசையும் தேட்டை போட்டுவிட்டு அதை காயிலாம் கடையில் கொடுத்து ரூபாய் 500 பெற்று திரும்புவார்கள். கடைகாரர் தராசு கல்லையும் தராசும் காணவில்லை என்று அலறிக்கொண்டு அவர்கள் வரும் பாதையில் எதிரே வந்து நீங்கள்தான் என்கடையில் கடைசியாக வந்தீர்கள் ரூபாய் 5000 மதிப்புள்ள பொருளை காணவில்லை என்றவுடன். ஆ அவ்வளவு மதிப்பா எங்களை காய்லா கடைகாரர் ஏமாற்றிவிட்டானா என்று பொருள் இழந்தவரை மதிக்காமல் காய்லாகடை நோக்கி ஓடுவார்கள். அப்படிதான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆட்டைபோடுவதற்கு தடையாய் இருந்த ஆங்கிலேயரை விரட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் பலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சூபிகள் வழிவந்த இஸ்லாமியர்கள் (ராமனையும் கிருஷ்னனையும் பாரதபூமியையும் நேசித்தவர்கள்) சிலர் இருந்தார்கள் இருக்கிறார்களா என்பது தெரியாது அதனால் இஸ்லாமியர்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது ஒரு ஏமாற்று வேலையே.

    1. Avatar
      Kavya says:

      இன்று வ உ சி கப்பலோட்டியத்தமிழன் என்றழைக்கப்பட்டு போற்றப்படுகிறார். தூத்துக்குடி துறைமுகத்துக்கு அவர் பெயரிடப்பட்டிருக்கிறது. எப்படிக் கப்பலோட்டினார்? அவர் என்ன மெகா பணக்காரரா? பணத்தைத் தேடி அலைந்தார். “வெள்ளைக்காரன் உம்மை மட்டும் உள்ளே போடுவானென்று நினைக்காதீர். எம்மையும் உள்ளே தள்ளி எங்கள் குடும்பங்களைச்சீரழித்து ஓட்டாண்டிகளாக்கி விடுவான்வே. எம்மிடம் வராதீர்1” என்று விரட்டினார்கள் தூத்துக்குடி பணக்காரர்கள்.

      பின்னர் ஆர்தான் துணிந்து வந்தது? ஆர் பணத்தை அவருக்குத்தந்து “துணிந்து செயல்படும்; வட்டியும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். நானும் பங்குதாரர் என நினைத்துக்கொள்ளும்வே!” என்று ஆர் முன் வந்து பணத்தைக் கொடுத்தது?

      வ உ சியின் வரலாற்றிலே இருக்கிறது. எதையும் மறைக்க முடியாது. அன்னாரின் பத்திரம் வ உ சிக்கு எதிரான வழக்கில் சாட்சியமாக அளிக்கப்பட்டது.

      வேதம் கோபாலுக்கு மனசாட்சியிருந்தால் அவ்வரலாற்றைப்படித்து அப்பணக்காரரின் பெயரை திண்ணை வாசகர்களுக்குச் சொல்லட்டும்.

      நான் ஏன் செய்ய வேண்டும்? த ஓனஸ் ஸ் அபான் த் அக்கூசர் டு ப்ரூவ் ஹ்ஸ் சார்ஜ். The onus is upon the accuser to prove his accusations. இசுலாமியருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள் செய்யட்டும்.

  36. Avatar
    vedamgopal says:

    Egypt to bring in law allowing man to have sex with dead wife :-
    Egypt’s new Islamist-dominated parliament is preparing to introduce a controversial law that would allow husbands to have sex with her deceased wives up to six hours after death. Known as the “farewell intercourse” law, the measure is being championed as part of a raft of reforms introduced by the parliament that will also see that minimum age of marriage lowered to 14 for girls. (Ref : Hindu voice June 2012 page 37)
    இப்படிப்பட்ட கீழ்தரமான பல மணிதநேயம் அற்ற கொள்கைகளை நிலைநாட்டும் சௌதி முஸ்லீம்கள் பாகிஸ்தான் முஸ்லீம்கள் இவர்களை பின்பற்றுவது இந்திய முஸ்லீம்களை அழிவிற்கே இட்டு செல்லும்.
    The Sufis are the men of the highest morality. They are the people who behave according to the need of the time. They are not bound by the shackles of rituals and customs. Religion for them is important only so long as it does not hinder spiritual progress. The greatest religion for them is the love for the humanity and not to hurt anyone’s feelings. Their objective being to evolve as a complete man by improving one’s character and conduct the principles and practices adopted by them revolve around these central ideas and are to be seen in this light.
    இப்படிப்பட்ட இந்திய முஸ்லீம் முன்னோர்களின் வழிவந்த இன்றைய முஸ்லீம்கள் மூதாதையர்களின் கொள்கை படி வாழ்வது தான் உண்மையான மணிதநேயம். இது மதசார்பின்மை நாடு இங்கே மதவெறிகொள்கைகளுக்கு இடம் இல்லை. மீறினால் இனம் அழிவதும் நாடுகடத்தபடுவதும் நிச்சயம் ஒருநாள் பாரதத்தில் நிகழும்.

  37. Avatar
    vedamgopal says:

    On 8th August ‘2012 in the parliament “ I warned the Central Government, I warned the honorable members here … if proper rehabilitation (of bangaldesh muslims) does not take place, you be ready for a third wave of radicalization amoung muslim youth. This was said not by a mulla but by MP Mr.Asadduin Owaisi.

    இந்தளவு ஒரு பிரிவினையை தூண்டும் வெறி பேச்சு அதுவும் பாராளுமன்ற அவையிலேயே பேசும் அளவிற்கு சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கொடுத்துள்ளது சரிதானா ? இதன் எதிரொலியாக 11 ஆம் தேதி ஆகஸ்ட் அன்று ராசா அகாடமியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஊர்வலத்தில் 1857 ஆண்டு நடந்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தை சின்னாபின்னம் படுத்தியுள்ளார்கள். அங்கேயே சிறுநீர் கழித்துள்ளார்கள். நடந்த கலவரத்தில் 58 போலீஸார் காயம் அடைந்துள்ளனர். சில பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டுள்ளனர் . செய்தி ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளது. ஏன் இந்த வெறி ஆட்டம் என்று விளங்கவில்லை. மயன்மாரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதற்கும் அஸ்சாமில் அத்துமீறி குடிபுகுந்த இஸ்லாமியர்கும் ஆதரவாக இங்கே உள்ள இஸ்லாமியர்கள் ஏன் போராடவேண்டும். ஆனால் இதே முஸ்லீம்கள் மற்ற இஸ்லாமிய (மலேசியா சைளதி ஈரான் பாகிஸதான் ஆப்கானிஸதான் போன்ற) நாடுகளில் முஸ்லீம்கள் தாக்கப்படும் போது மௌனம் சாதிப்பது ஏன் ? பங்களாவிலிருந்து இந்தியாவை தவிற பல இஸ்லாமிய நாடுகளுக்கு அனுமதியின்றி பல முஸ்லீம்கள் குடியேறினார்கள். ஆனால் அந்த நாடுகள் அவர்களை வலுகட்டாயமாக திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் இங்கே உள்ள தேசதுரோக முஸ்லீம்களை என்ன செய்வது ????

  38. Avatar
    smitha says:

    Piriyan,

    Your post on the common civil code clearly shows the regidity of the indian muslims. You have assumed many things about the common civil code & linked it to hindutva.

    That is your problem.

    What is your take on registration of marraiges? No answer.

    குர்ஆனை பின் பற்றும் எந்த முஸ்லிமும் தனது திருமணம் சொத்து பிரிப்பு போன்ற சிவில் சட்டங்களில் கை வைக்க ஒத்துக் கொள்ள மாட்டான்.

    Is it? Then the muslim terrorists who kill people also swear by Koran.

    It is not an utopian world, piriyan. Realise that.

    எனது வக்கீலான இந்து நண்பன் குர்ஆனின் பாகப்பிரிவினை சட்டங்களை முதன் முதலாக படித்து விட்டு அசந்து போய் விட்டான். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப் புற அரபி எவ்வாறு இவ்வளவு அழகிய சட்டத்தை கொடுக்க முடிந்தது என்று இன்றும் வியந்து வருகிறான்.

    Very good, if it is so. The pity is it is only on paper.

    1. Avatar
      Kavya says:

      //Then the muslim terrorists who kill people also swear by Koran.

      It is not an utopian world, piriyan. Realise that
      //

      The realisation from your part too is seriously wanting.

      If some ppl abuse a common thing, which was purportedly madeg for the common weal, will that thing per se get perverted?

      Likewise, if internet is abused by some to mount pornography or child sex, or creating troubles in society, if Thinnai itself abused by some miscreants, will these things per se get perverted? Will you spew ur venom on them?

      If some bajrang bali activities and extremist Hindus pounce on a catholic nun using the cry: Jai Bajrang Bali, Jai Hanuman, Jai Shri Ram, and rape her (a case which went to SC), If some similarly burn alive a priest with his young children together, using the same cry: Jai Hanuman (the killers were hanged by the court), can we say that the Jai Hanuman, Jai Sri Ram, get perverted? If some mad terrorst plant a bomb saying ‘AllaahoAkbar’ in a public place to kill ppl, will Islam stand perverted? If Devanathan abuses a temple for his activities, can we throw the whole lot of Hinduism into the Bay of Bengal?

      குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது பிய்ச்சித்தான் போடும். அதற்காக கோயில் முன் பூமாலைகளே விற்கக்கூடாதென்றால் எப்படி தாயீ? கொஞசம் யோசித்து எழுதப்படாதா!

  39. Avatar
    bala says:

    In the mapla rebellion an issue between british and muslims that too in a foreign country, mapllas killed and raped hindu women who are in no way responsible for the issue. the action is pre determined., but wait for an excuse any excuse.. read lamb wolf story. shias must thak that they are in INDIA.look at their fate in PAKISTAN. BUT SADLY THEY DO NOT REALISE THIS. A LIBYA IS WAITING TO HAPPEN IF IT GOES UNCHECKED AND CHALLENGED. SUFISM MUST BE SAFEGUARDED AT ALL COSTS. ASKk.r. rahman for his experience. once a hindu

  40. Avatar
    suvanappiriyan says:

    //இது மதசார்பின்மை நாடு இங்கே மதவெறிகொள்கைகளுக்கு இடம் இல்லை. மீறினால் இனம் அழிவதும் நாடுகடத்தபடுவதும் நிச்சயம் ஒருநாள் பாரதத்தில் நிகழும்.//

    ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்’

    பாரத தேசத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். வர்ணாசிரமக் கொடுமை தாளாமல் இஸ்லாத்தை நோக்கி ஓடியவர்கள் என்று யாராவது வேதம் கோபாலுக்கு பாடம் எடுங்களேன்.

    //இப்படிப்பட்ட இந்திய முஸ்லீம் முன்னோர்களின் வழிவந்த இன்றைய முஸ்லீம்கள் மூதாதையர்களின் கொள்கை படி வாழ்வது தான் உண்மையான மணிதநேயம்.//

    முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டி குர்ஆன் இருக்கிறது. அந்த கவலை வேதம் கோபாலுக்கு தேவையில்லை.

    முதலில் இந்நாட்டு பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்டவர்களை மனித நேயத்தோடு நடத்துங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும். சில வாரங்களுக்கு முன்பு கூட ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்ததர்க்காக கோவிலையே பூட்டியுள்ளது கிராம நிர்வாகம். உங்கள் சீர்திருத்தத்தை அங்கிருந்து ஆரம்பிக்லாம்.

  41. Avatar
    suvanappiriyan says:

    //Egypt to bring in law allowing man to have sex with dead wife :-//

    ஹிந்து பத்திரிக்கையோ எகிப்திய அரசோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டி அல்ல. ஹிந்து வெளியிட்ட இந்த செய்தியில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்பதும் கேள்விக்குறியே!

    குர்ஆன் தான் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். குர்ஆனை வைத்துதான் எந்த சட்டத்தையும் ஆராய முடியும். தனிப்பட்ட முஸ்லிம்களோ, ஒரு அரசோ செய்வது இஸ்லாத்தை கட்டுப்படுத்தாது.

  42. Avatar
    suvanappiriyan says:

    திரு காவ்யா!

    //இசுலாமியருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள் செய்யட்டும்.//

    வேதம் கோபாலுக்கு உண்மை தெரிந்தாலும் இங்கு சொல்லவா போகிறார்? அதை நான் சொல்கிறேன்.

    கப்பலோட்டிய தமிழனை மக்களுக்கு தெர்யும். கப்பலோட்டிய தமிழனுக்கு உதவிய வள்ளல் பக்கிர் முஹம்மதை மக்கள் அறிவார்களா ? மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! ஆனால் வள்ளல் பக்கிர் முஹம்மத் அவர்கள் கப்பலோட்டியத் தமிழன் வ உ சி க்கு பத்துலட்சம் ரூபாய் கொடுத்து அவருக்கு கப்பல் வாங்க உதவினார். இந்த செய்தியை எந்த வரலாற்று புத்தத்திலாவது பதிவு செய்துள்ளர்களா ? இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

    கப்பலை ஓட்டிய மாலுமியின் வாரிசுகள் ஐ.ஏ.எஸ் ஆகவும், ஐ.பி.எஸ் ஆகவும் முடியுமாம் ? கப்பலை வாங்கிக் கொடுத்த வள்ளலின் வாரிசுகள் பாலர் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல், ஒருவேளை உணவைப் பெறமுடியாமல், இரண்டு ஆடைகளைப் பெறமுடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாம் ?

    ‘ பாக்கியமிகுந்த பக்கிரி முஹம்மதை
    வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான்
    வணிகர் பலரையும் வருத்தி அவனிளம் துணிவோடு
    சுதேசிய நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்”

    என்று பாடிவிட்டு கப்பல் கம்பெனிக்குத் துணிவுடன் முதலில் பொருள் தந்தது பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கிர் முஹம்மது என்று அடிக்குறிப்பாக கூறியுள்ளார்.

    (ஆதாரம் வ. உ. சி. சுயசரிதை பக் :4950)

    காவ்யா போன்ற நடுநிலைவாதிகள் நம் தமிழகத்தில் பரந்து இருக்கும் வரை வேதம் கோபால் போன்றோரின் பொய் புரட்டுகள் அம்பலத்தில் ஏற வாய்ப்பில்லை.

    நன்றி காவ்யா!

  43. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //What is your take on registration of marraiges? No answer.//

    திருமணங்களைப் பதிவு செய்யும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிக நம்பகமான முறையிலும் சந்தேகத்துக்கு இடம்மில்லாத வகையிலும் பதிவு செய்யப்பட்டு அவை பாதுகாத்தும் வைக்கப்படுகிறன. சிலநுறு வருடங்களுக்கு முற்பட்ட பதிவேடுகள் கூட இன்றும் உள்ளன.
    தேவைப்படும் நேரங்களில் மஸ்ஜிதுகள் அல்லது காஜிகள் மூலம் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் போதுமானவையாகவும், அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களாவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

    பிற பதிவுகளை விட முஸ்லிம் களின் நடைமுறையில் உள்ள பதிவு முறை பாதுகாப்பானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமாகும். ஏனெனில் மணமகள் அல்லது மணமகள், தான் வசிக்கும் ஊர் ஜமாஅத்தின் திருமண அனுமதிச் சீட்டு பெறாவிட்டால் அவர்களுக்கு எங்குமே நிகாஹ் செய்து வைக்கப்படுவது இல்லை , நிகாஹ் புத்தகம் கூட தரப்படுவதில்லை என்பதே உண்மைநிலை, இதன் காரணமாக, திருமணம் நடைபெற்று பதிவு செய்யப் பட்ட பின் கணவன் உயிருடனிருக்கும் நிலையில் அவனுடைய மனைவி வேறு எங்கும் சென்று திருட்டுத்தனமாக நிகாஹ் செய்து கொள்ளமுடியாது. மாறாக ரிஜிஸ்டர் திருமணம் செய்பவர்கள் பல்வேறு இடங்களில் பல திருமணங்கள் செய்து ரிஜிஸ்டரும் செய்கிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வெளிவருவதைப் பார்க்கிறோம்.

    முஸ்லிம்கள் நடைமுறை படுத்தி வரும் பதிவில் எவ்வித முறைகேடும் குறைபாடும் இல்லை அதே சமயம் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தால் குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை. எங்கோ நடக்கின்ற ஒருசில தகாத நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஏற்கெனவே ரிஜிஸ்டர் முறை இல்லாத சமூகங்களுக்கு இந்த சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளட்டும்.

    ஒரு கல்விச் சான்றுக்கோ இறப்புச் சான்றுக்கோ 10 முறை அலைய விட்டு கையூட்டும் பெற்றுக் கொள்ளும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் கணவனும் மனைவியும் வந்து ரிஜிஸ்டர் செய்தால் அது நகைப்பிற்குரியதாகி விடும். இன்று வரை ஜமாத்துகள் நடத்தி வரும் திருமணத்தில் எந்த குழப்பமும் வந்ததில்லை. வருங்காலத்திலும் வராது. ஏனெனில் அதில் வரும் சிக்கலை தீர்க்க எங்களிடம் குர்ஆன் உள்ளது.

  44. Avatar
    தங்கமணி says:

    //பாரத தேசத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். வர்ணாசிரமக் கொடுமை தாளாமல் இஸ்லாத்தை நோக்கி ஓடியவர்கள் என்று யாராவது வேதம் கோபாலுக்கு பாடம் எடுங்களேன்//

    இல்லை

    தற்போது மதம் மாறும் தமிழர்களை தவிர்த்து பெரும்பாலான தமிழ் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்லர்.

    மரைக்காயர்கள் அரபியர்கள். ராவுத்தர்கள் துருக்கர்கள்.
    லெப்பைகளில் கீழக்கரையில் இருப்பவர்கள் அரேபியா, ஏமனிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். மற்ற லெப்பைகள் கெய்ரோவிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள்.

    இத்தகைய ஆண்கள் தமிழகத்து பெண்களுடன் கலப்பு மணம் புரிந்திருக்கலாம். ஆனால் வம்சாவளியில் அவர்கள் தங்களை அரபியர்களாகவும் துருக்கியர்களாகவுமே கருதிக்கொள்கிறார்கள்.

    எனக்கு இதிலெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை. வெறும் ஆவணத்துக்காக மட்டுமே.

  45. Avatar
    தங்கமணி says:

    //குர்ஆன் தான் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். குர்ஆனை வைத்துதான் எந்த சட்டத்தையும் ஆராய முடியும். தனிப்பட்ட முஸ்லிம்களோ, ஒரு அரசோ செய்வது இஸ்லாத்தை கட்டுப்படுத்தாது.//

    ஹதீஸ் கட்டுப்படுத்தாதா?

    ஆனால் இந்த பத்வா கொடுத்தவர் குரானிலிருந்துதான் ஆதாரம் தருகிறார்
    http://www.moroccoboard.com/news/5238
    The Imam, whose name is Zamzami Abdelbari, said that marriage remains valid even after death, which does not cancel the marriage link. He took as evidence a Koranic verse which says that Muslims believers will go to Paradise with their wives…

    Sheikh Zamzami said that the husband has the right to have sex with his dead wife. He added that the husband may wash the body of his dead wife and have sex with her.

  46. Avatar
    suvanappiriyan says:

    வேதம் கோபால்!

    //சூபிகள் வழிவந்த இஸ்லாமியர்கள் (ராமனையும் கிருஷ்னனையும் பாரதபூமியையும் நேசித்தவர்கள்) சிலர் இருந்தார்கள் இருக்கிறார்களா என்பது தெரியாது//

    உங்களைப் போன்றவர்கள் வஹாபியத்தை எதிர்ப்பதற்கும் சூஃபியிசத்தை ஆராதிப்பதற்கும் என்ன காரணம் என்பதை உங்கள் எழுத்தாலேயே காட்டிக் கொண்டமைக்கு நன்றி!

    ஒரு பாரத தேசத்தவன் பாரத நாட்டை மதிக்க வேண்டும். அதன் சட்டங்களை மதிக்க வேண்டும். இங்கு வாழும் மக்களை நேசிக்க வேண்டும். அது வரை ஓகே.

    ராமனையும் கிருஷ்ணனையும் பாரத நாட்டையும் ஏன் ஒன்றாக்குகிறீர்கள். ராமனும் கிருஷ்ணனும் நீங்கள் கடவுளாக நம்புகிறீர்கள். அதற்கு முஸ்லிம்களை ஏன் அழைக்கிறீர்கள்? முதலில் உங்கள் இந்து மதத்திலேயே பிராமணர்களைத் தவிர வேறு எந்த சாதி ராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக்குகின்றனர்? பெரும்பான்மையான மக்களுக்கு காளியும், சுடலைமாடசாமியும் மாரியம்மா என்று பல கிராம கடவுள்கள்தானே இன்று வரை கடவுள்?

    உங்களவர்களே ஒத்துக் கொள்ளாத சித்தாந்தத்தை முஸ்லிம்கள் மேல் திணிக்க நீங்கள் யார்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?

  47. Avatar
    தங்கமணி says:

    /முதலில் உங்கள் இந்து மதத்திலேயே பிராமணர்களைத் தவிர வேறு எந்த சாதி ராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக்குகின்றனர்? பெரும்பான்மையான மக்களுக்கு காளியும், சுடலைமாடசாமியும் மாரியம்மா என்று பல கிராம கடவுள்கள்தானே இன்று வரை கடவுள்?//

    கொடுமையடா சாமி!
    இதுவும் இஸ்லாமிய பிரச்சாரரகர்கள் பேசும் உளறலோ என்னவோ!
    தலித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அவரது அப்பா ஏன் அப்படி பேர் வைத்தார் என்று சுவனப்பிரியன் அவரை அடிச்சிட்டு வந்துவிடுவார் போலிருக்கிறது.
    அம்பேத்காரது ஒரிஜினல் பெயர் பீமாராவ் என்று பீமன் பெயரை வைத்ததற்கு அவரது அப்பாவுக்கும் ஒரு அடி!

    காளியும் சுடலைமாடசாமியும் மாரியம்மாவும் எல்லாமே தெய்வங்கள்தான். பிராம்மணர் உள்பட பல குலத்தினருக்கும் இவர்கள் குலதெய்வம். ராமசாமி, கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்த மற்றசாதியினரை அவர் பார்த்ததில்லை போலிருக்கிறது. ஆமாம் அவருக்கு என்ன தெரியும்? அரபியாவில் எந்த வரலாறு எப்படி , எந்த குலம் எப்படி என்றால் தெரியும். தமிழ்நாட்டை பற்றி அவருக்கு என்ன தெரியும்? தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

    1. Avatar
      Kavya says:

      காளியும் சுடலைமாடசாமியும் மாரியம்மாவும் எல்லாமே தெய்வங்கள்தான். பிராம்மணர் உள்பட பல குலத்தினருக்கும் இவர்கள் குலதெய்வம்//

      கொள்ளைய‌டிப்ப‌தும் ஒரு க‌லை என்று ஒரு திரைப்ப‌ட‌த்தில் வ‌ச‌ன‌ம் வ‌ரும். திண்ணையில் பொய் சொல்வ‌தும் ஒரு க‌லையாகி விட்ட‌து.

      பிராம‌ண‌ர் என்ப‌து ஒரு ஜாதியின் பெய‌ர‌ன்று. என‌வே த‌ங்க‌ம‌ணி சொல்வ‌து முத‌ற்பொய். த‌மிழ்ப்பார்ப்ப்ன‌ர்க‌ள் என்ப‌தே ச‌ரியான‌ ப‌த‌ம்.

      இவ‌ர்க‌ளுக்குக் குல‌தெய்வ‌ங்க‌ள் உள‌. அவ‌ர்க‌ளுள் அய்ய‌ங்கார்க‌ளுக்கும் உண்டு. ஆனால் அவர்களுக்குக் குல‌தெய்வ‌ம் வைண‌வ‌த்தெய்வ‌மாக‌த்தான் இருக்க‌வேண்டும். ஆனால் மாரிய‌ம்ம‌னைக்குல‌தெய்மாக‌க் கொண்டு ப‌ல‌ர் வாழ்கிறார்கள். பிற‌ த‌மிழ‌ரின் ப‌ழ‌க்க‌த்தின் தாக்க‌ம். போக‌ட்டும். இந்த‌ பார்ப்ப்ன‌ர்க‌ளுக்கு மாரிய‌ம்ம‌னோ அல்ல‌து ப‌ல‌ பெய‌ர்க‌ளின் ப‌ல‌விட‌ங்க‌ளில் வ‌ண‌ங்க‌ப்ப‌டும் அம்ம‌ன்க‌ள், பிள்ளையார் (சுப்பிர‌ம‌ணிய‌ம் சுவாமியின் குல‌தெய்வ‌ம் பிள்ளையார்ப்ப‌ட்டி பிள்ளையார்), முருக‌ன், அல்ல‌து வைண‌வ‌த்தெய்வ‌ங்க‌ள் (ஜெயேந்திர‌ர் (பிற‌ப்பால் அய்ய‌ர்) த‌ன் குல‌தெய்வ‌ம் திருப்ப‌தி பாலாஜி என்றார் ஒரு பிர‌ச்சினை பேச‌ப்ப‌ட்ட‌ போது) இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ள் குல‌தெய்வ‌ங்க‌ள்.

      எவ‌ருக்கும் மாட‌சாமி, கொம்ப‌ன், மூக்க‌ன், கருப்பசாமி, மதுரை வீரன், சுட‌லைசாமி, இச‌க்கி, பேய்ச்சி குல‌தெய்வ‌ம் கிடையாது. எவ‌ருக்குமே மாட‌ சாமி என்று பெய‌ர் கிடையாது. இவை த‌மிழ‌ர்க‌ளின் கிராம‌த்துத் தேவ‌தைக‌ள். இன்று ந‌க‌ர‌ங்க‌ளிலும் உண்டு. இத்தெய்வ‌ங்க‌ளை ந‌கையாடியும் இழித்துப்பேசியும் கால‌ங்கால‌மாக‌ வாழ்ந்து வைதீக‌த்தெய்வ‌ங்க‌ளையும் மிக‌வும் பாப்புல‌ரான‌ பிற‌தெய‌ங்க‌ளையும். அல்ல‌து அப்ப‌டிப்பாப்புல‌ரான‌ தெய்வ‌ங்க‌ளை, வைதீக‌த்தெய்வ‌ங்க‌ளாக‌ மாற்றியும் வ‌ழிப‌ட்டுவ‌ந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ்ப்பார்ப்ப‌ன‌ர்க‌ள்.

      எவ‌ராவ‌து மாட‌சாமி ஐயர், க‌ருப்ப‌சாமி அய்ய‌ங்கார் கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா?

      (க‌ரு மாணிக்க‌ம் அய்ய‌ங்கார் உண்டு. ஏனெனில், அது திருமாலுக்கு ந‌ம்மாழ்வார் இட்ட‌ திருநாம‌மென்ப‌தால். ‘கருமாணிக்கமே என்று பரவசமாகப்பாடுவார் அவர்)

      அதே வேளையில், க‌ருப்ப‌சாமிக்கோணார், க‌ருப்ப‌சாமித்தேவ‌ர், க‌ருப்ப‌சாமிச் செட்டியார், என்று எங்கும் காண‌லாம்.

  48. Avatar
    suvanappiriyan says:

    //ஆனால் இந்த பத்வா கொடுத்தவர் குரானிலிருந்துதான் ஆதாரம் தருகிறார்//

    ஏன் பொய் சொல்கிறீர்கள்? குர்ஆனின் எந்த வசனம் இறந்த மனைவியை புணரச் சொல்கிறது என்று நீங்கள் நிரூபித்து விட்டால் நான் திண்ணைக்கு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன். இஸ்லாத்தை கருத்தால் சந்திக்க திராணியற்று இது போன்று பல யூதர்கள் முஸ்லிம்களாக நடித்து பல ஃபத்வாக்களை கொடுப்பது பல நாடுகளில் நடக்கிறது. அவை எல்லாம் குர்ஆனால் சரி காணப்பட்டு குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளது. வேறு ஏதாவது முயற்சிக்கவும் தங்கமணி.:-) இதெல்லாம் பழைய கதை.

  49. Avatar
    தங்கமணி says:

    அய்யா சுவனப்பிரியன்,
    அதனை பத்வா கொடுத்தவரிடம் தானே கேட்கவேண்டும்? என்னிடம் கேட்டால்?
    He took as evidence a Koranic verse which says that Muslims believers will go to Paradise with their wives…

    இதுதான் அவர் கொடுக்கும் ஆதாரம். செத்தபின்னால், மேலே சுவனத்துக்கு மனைவியுடன் போவார்கள் என்று குரான் சொல்லுகிறதாம். அதனால், இறந்தாலும் மனைவி மனைவிதான் என்கிறார். அதனால், இறந்த மனைவியோடு சுவனத்தில் உறவுகொள்ளலாம் என்றால், இங்கேயும் இறந்த மனைவியோடு உறவு கொள்ளலாம் என்கிறார்.

    இது எனக்கும் விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஆனால், விசித்திரத்துக்கு பஞ்சமில்லாத மார்க்கமாயிற்றே அது.

    இது விசித்திரமான லாஜிக் என்று நினைக்காதீர்கள். இதனை விட விசித்திரமான காமெடி லாஜிக்கையெல்லாம் நீங்களே எழுதுகிறீர்களே

    “வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்”
    -குர்ஆன் 16:77என்று முகம்மது சொல்லுகிறார்

    இந்த வசனம் சொன்னதும் உலகம் அழிய ஆரம்பிக்கிறது என்று எங்கே இருக்கிறது?

    இதிலிருந்து மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி என்று எப்படி எழுதினீர்கள்?

    இணையம் முழுவதும் உங்களை கிண்டல் பண்ணுகிறார்கள். போய் அவர்களுக்கு பதில் சொல்லுங்கள்.

    உங்களோட லாஜிக்கெல்லாம் பார்க்கும்போது இவர் சொல்ற லாஜிக் சூப்பர் லாஜிக்தான் இல்லையா?

  50. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //ராமசாமி, கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்த மற்றசாதியினரை அவர் பார்த்ததில்லை போலிருக்கிறது.//

    ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் அவரது பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. அதற்காக அவர் ராமரை வழிபடுவதாக என்னை நம்ப சொல்கிறீர்களா? முருகனுக்கு தழிழகம் முழுவதும் கோவில் இருக்கிறது! ராமருக்கு எங்காவது கோவிலை பார்த்திருக்கிறோமா? இலங்கை வரை வந்த ராமருக்கு தமிழகத்தில் ஏன் கோவில் இல்லை என்பதற்கு உங்களின் பதில் என்ன?

    //அரபியாவில் எந்த வரலாறு எப்படி , எந்த குலம் எப்படி என்றால் தெரியும். தமிழ்நாட்டை பற்றி அவருக்கு என்ன தெரியும்? தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.//

    தமிழக வரலாறு என்ன பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூடிய வகையிலா இருக்கிறது.

    நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது.

    • புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.
    • ‘பார்த்தால் தீட்டு’ என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது “எட்டிப்போ” என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.
    • நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
    • ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
    • ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
    • பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
    • பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
    • திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
    • குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
    • தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
    • செருப்பு அணியக்கூடாது.
    • படிக்கக்கூடாது.
    • பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
    • இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.

    பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட மனுதர்மத்தின் கோட்டையாக இருந்த திருவிதாங்கூரில் நடந்த கொடுமைகள் தான் இவை அனைத்தும். கன்னியாகுமரியில் இந்து சமயம் செய்த அடிமைத்தனத்திற்கு சாட்சியாக திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.

    இந்த கொடுமைகளை நிகழ்த்தியது யார்? ஆங்கிலேயர்களா? மிசனரிகளா? மொகலாய மன்னர்களா? யார் செய்தார்கள்? யார் செய்தது என்பதை என்னை விட நீங்களே நன்கு அறிவீர்கள்.

    இந்த வரலாற்றை எல்லாம் தெரிந்து எனது வாழ்வில் என்ன முன்னேற்றம் வந்து விடப் போகிறது தங்கமணி! இதற்கு பதில் அந்த வரலாறுகள் மண்ணோடு மண்ணாகட்டும்.

    1. Avatar
      vedamgopal says:

      Dr.K.S.Lal examines in some detail and refutes conclusively the oft-repeated theory that the Hindu cast system was responsible for conversion to Islam. He points out that the countries in the Middle east, Central Asia and North Africa had no cast system yet they succumbed rapidly and completely to the onslaught of Islam.

      Because of cast discrimination Hindus converted to Islam is a false statement. At the time of Islam rule the war salves are sold outside Indian or given a chance of conversion or death.

      He has also done a detailed study about the continued discrimination even after conversion.

      After the Muslim rule the conversion has almost stopped. Even to-day due to cast discrimination a few Hindus either become atheist or convert to Christianity and not Islam. Fear of God is completely vanished from younger generation, current Christian conversions are purely for monetary gain. Even for monetary gain no Hindu wants to convert Islam.

  51. Avatar
    தங்கமணி says:

    /ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் அவரது பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. அதற்காக அவர் ராமரை வழிபடுவதாக என்னை நம்ப சொல்கிறீர்களா? //
    உங்களை யார் நம்பச்சொன்னார்கள்? உங்களிடம் உண்மையை சொன்னால் ஒத்துகொள்ளவா போகிறீர்கள்? இதுவரையில் தவறாக சுட்டிக்காட்டியதை ஆமாம் தவறு என்று ஒத்துகொண்டிருக்கிறீர்களா? அந்த இடத்திலிருந்து காணாமல் போவதுதானே உங்கள் வழக்கம்?

    தமிழகம் முழுவதும் ராமர் கோவில்கள் இருக்கின்றன. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலிலிருந்து, பூசலாங்குடி கிராமத்தில் ராமர் கோவிலிலிரிந்து தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் என்று ஊர் ஊராக இருக்கின்றன. உங்களிடம் சொன்னால் ஒத்துகொள்ளப்போகிறீர்களா?

    நாயுடு நாயக்கர்கள் நெற்றியில் நாமம் போட்டு பார்த்ததில்லையா? நெற்றியில் நாமம் போடுபவர்கள் வைணவர்கள் என்று வழங்கப்படுகிறார்கள். அவர்கள் கிருஷ்ணன், ராமன் என்று அவதரித்த விஷ்ணுவை வணங்குகிறார்கள். தெரிந்துகொள்ளுங்கள்.


    அதன் பெயர் இந்து சமய கொடுமை அல்ல. சாதிக்கொடுமை.
    அரபியாவில் கூட இந்த மாதிரி கொடுமை இருக்கிறது. அதனையும் இஸ்லாமிய கொடுமை என்று சொல்லலாமா?
    உங்களுக்கு அரபியா பற்றி தெரியாமல் இருக்காது. இருந்தாலும் சொல்லுகிறேன்.

    http://en.wikipedia.org/wiki/Al-Akhdam

    அல் அக்தும் என்ற தீண்டத்தகாத ஜாதி அரபிய தீபகற்பத்தில் இன்னமும் இருக்கிறது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை அடிமைகளாகவும், தெருப்பொறுக்கவும், கழிவறைகளை சுத்திகரிக்கவும் அரபியர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
    http://ezhila.blogspot.com/2011/06/blog-post_11.html

    நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதம்.

    1. Avatar
      Kavya says:

      ராமர் தெய்வமாக வணங்கப்படுகிறார் இல்லையென்று ஆரும் சொல்லவில்லை. சுவனப்பிரியன் சொன்னது கோயில்களைப்பற்றி.

      இராமருக்குக்கோயில்கள் என்பது எங்கெங்கெல்லாம் நாயுடுக்கள், நாயக்கர்கள், அய்யங்கார்கள் இருக்கிறார்களோ அங்கும் உருவாக்கப்படும் அவர்களால். சுவனப்பிரியன் அவர்களைச்சுட்டிக்காட்டிப்பேசவில்லை. தமிழக கிராமத்து மக்கள் இராமரை வழிபடவில்லை. எனவே இராமருக்கு அவர்களால் கோயில்கள் கட்டப்படவில்லை என்பதுதான். தெலுங்கர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கும் இராமர் கோயில்கள் உண்டு.

      தமிழகத்தில் வடமாநிலங்களில் இராமர் கோயில்கள் கிராமங்களிலும் உண்டு. ஆயினும் மேற்சொன்னவர்களால் மட்டுமே எழுப்பபட்டவை. ஆங்கும் கிராமத்துத்தேவைதைகளை வழிபடுவோர் கணிசம். அவர்களால் இராமருக்குக்கோயிலகள் இரா.

      சுருங்கச்சொன்னில், இராமர் வழிபாடு தமிழகத்தில் பரவலாக இல்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில். திருனெல்வேலியில் எங்கேயிருக்கிறது என்று தேடிப்பாருங்கள். இந்து முன்னனியினர்தான் கன்யாகுமரியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் இராமரை தமிழர்களிடையே பரப்புவதாகும். ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் இராம‌ர் கோயில்க‌ள் உண்டு.

      ஆனால் இராமரைப்பற்றித்தெரியா தமிழர் கிடையாது. இராமாயணம் கேட்கப்படுகிறது. சிலரால் படிக்கவும் படுகிறது. ஆனால் இராமர் கோயில்கள் உளவா என்பதுதான் கேள்வி.பதில், உண்டு. எங்கெங்கெல்லாம் தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் வைணவர்கள், தமிழ்பார்ப்பனர்கள் (அய்ய்ரகள் – இவர்கள் வழக்கம் சிவனுக்கோ, முருகனுக்கோ கோயில்கட்டினால், அங்கு ஒரு இராமர் சன்னதியோ திருப்பதி சன்னதியோ கட்டி வழிபடுவது. எல்லாச்சாமிகளும் வேண்டுமென்பதே இவர்கள் கொள்கை) கணிசமாக வாழ்கின்றாரோ ஆங்கு. கிராமத்து மக்களிடையே இல்லை.

  52. Avatar
    suvanappiriyan says:

    //தமிழகம் முழுவதும் ராமர் கோவில்கள் இருக்கின்றன. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலிலிருந்து, பூசலாங்குடி கிராமத்தில் ராமர் கோவிலிலிரிந்து தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் என்று ஊர் ஊராக இருக்கின்றன. உங்களிடம் சொன்னால் ஒத்துகொள்ளப்போகிறீர்களா?//

    இப்படி தமிழகத்தில் தேட வேண்டிய நிலையில்தான் ராமர் கோவில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன், பழனி முருகன், சிதம்பரம் நடராஜர், திருத்தணி முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி என்று ஒரு முஸ்லிமான எனக்கு உடன் ஞாபகம் வருகிறது. ஆனால் ராமனின் கோவிலை தேட வேண்டிய நிலையில்தான் உள்ளது. ஏனெனில் இந்த ராமனே வட நாட்டுக் கடவுள். ஆரியர்கள் இந்திய உப கண்டத்தில் நுழையும் போது ஆப்கானிஸ்தானத்தையும் அதை ஒட்டிய ஈரான் அடங்கலான பகுதிகளையும் ஆட்சி செய்த மன்னனை திராவிட கடவுளாக உருமாற்றினர். ஆதி கால தமிழர்களிடம் இந்த சாதி பாகுபாடு கிடையாது. என்று ஆரியர்கள் இந்த மண்ணில் காலடி வைத்தார்களோ அன்று பிடித்தது சனியன் இந்த நாட்டுக்கு. அதற்கு முன்னால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற உயரிய கொள்கையில்தான் எனது முன்னோர்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்கள். ஆரியர்களின் வரவுக்குப் பிறகுதான் சாதி பாகுபாடுகளே தலை தூக்க ஆரம்பிக்கிறது.

    //அல் அக்தும் என்ற தீண்டத்தகாத ஜாதி அரபிய தீபகற்பத்தில் இன்னமும் இருக்கிறது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை அடிமைகளாகவும், தெருப்பொறுக்கவும், கழிவறைகளை சுத்திகரிக்கவும் அரபியர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்//

    பொய்களை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். இங்கு அரபு நாடுகளில் நீங்கள் சொன்ன வேலைகளை செய்வதெல்லாம் வெளி நாட்டு ஒப்பந்த பணியாளர்கள். குறிப்பாக பங்களாதேசை சேர்ந்தவர்கள். அதிலும் மனிதர்களை கொண்டு மலம் அள்ளும் பழக்கம் இந்தியாவை மனதில் வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். :-) இங்கு அந்த வேலைகளை எல்லாம் இயந்திரங்களே செய்கின்றன. மலமும் தண்ணீரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அந்த தண்ணீரையும் வீணாக்காமல் வயல்வெளிகளுக்கு பயன் படுத்துகிறார்கள்.குழாய்கள் நிலத்தின் அடியில் செல்வதால் நாற்றமும் வருவதில்லை. மலத்தை உரமாக டின்களில் அடைக்கப்பட்டு வயல் வெளிகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த தொழிற்சாலையை நானே நேரில் சென்று பார்த்துள்ளேன். நாற்றமோ ஒரு அசூசையோ அங்கு வேலை செய்யும் இடத்திலோ வேலை செய்பவர்களிடமோ தென்படாது. தொழுகை நேரம் வந்தால் பெரும் செல்வந்தர்களுக்கு மத்தியில் அந்த வேலையாட்கள் நின்று தொழும் அழகை பார்க்க கண்கோடி வேண்டும்.

    இவ்வாறு தெரு கூட்டுபவர்களை இழிவாக நினைக்கக் கூடாது என்று அரசே சில டாகுமெண்டரிகளை வெளியிடுகிறது. சில தனியாரும் வெளியிடுகின்றனர். ஒரு சவுதி நாட்டவர் ஒரு நாள் முழுக்க பங்களாதேசிகளோடு வேலை செய்து உழைப்பின் உயர்வை உணர வைத்துள்ளார். அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவையும் பாருங்கள்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/07/blog-post_23.html

    //நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதம்.//

    அது இஸ்லாம் வருவதற்கு முன் 1400 வருடங்களுக்கு முந்தய நிலை.

    இஸ்லாம் வந்த பிறகு………

    ”அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)

    இதுதான் இன்றைய நிலை.

  53. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    நீங்கள் முஸ்லீம். உங்களுக்கு இந்தியாவில் உள்ள கோவில்களில் யார் யாரை கும்பிடுகிறார்கள் என்று ஏன் அக்கறை?
    //ராமருக்கு எங்காவது கோவிலை பார்த்திருக்கிறோமா? இலங்கை வரை வந்த ராமருக்கு தமிழகத்தில் ஏன் கோவில் இல்லை என்பதற்கு உங்களின் பதில் என்ன? //
    இல்லை என்று சொன்னீர்கள். இருக்கிறது என்று காட்டினேன். ஆயிரம் கோவிலை காட்டினாலும், “தேடத்தான் வேண்டியிருக்கிறது” என்று கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் தேடலில் வெற்றியடய வாழ்த்துகிறேன்.
    //ஏனெனில் இந்த ராமனே வட நாட்டுக் கடவுள். //
    இன்னொரு பிதற்றல். உங்களுக்கு தெரியாத விஷயத்தில் வாயை விடுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும்.
    மூவாயிரம் நாலாயிரம் வருடத்துக்கு முந்தைய சங்கப்பாடல்களில் ராமன் புகழ் பாடப்படுகிறது.நீங்கள் ஒத்துகொள்ளவேண்டும் என்று ஒரு தேவையும் இல்லை. சந்தோஷமாக சொல்லிகொள்ளுங்கள்.

    //ஆதி கால தமிழர்களிடம் இந்த சாதி பாகுபாடு கிடையாது. என்று ஆரியர்கள் இந்த மண்ணில் காலடி வைத்தார்களோ அன்று பிடித்தது சனியன் //

    வார்த்தை தடுமாறுகிறதா அல்லது மனதில் உள்ளது வெளியே வருகிறதா? ஆரியர் வருகை, ஆக்கிரமிப்பு எல்லாமே ஆதாரமற்றவை, புளுகுகள் என்று பலமுறை இங்கேயே நிரூபித்துவிட்டிருக்கிறேன். பல ஆய்வாளர்கள் கூறிவிட்டார்கள். திரும்பத்திரும்ப கூறியதையே கூறிவருகிறீர்கள். திரும்பத்திரும்ப கூறியதையே கூறினால் முட்டாள்கள் நம்பலாம். ஆனாலும் அவை உண்மையாகிவிடாது.
    //இவ்வாறு தெரு கூட்டுபவர்களை இழிவாக நினைக்கக் கூடாது என்று அரசே சில டாகுமெண்டரிகளை வெளியிடுகிறது. //ஆச்சரியமாக இருக்கிறதே. 1400 ஆண்டுகளாக இஸ்லாமில் மூழ்கி திளைத்து இருக்கும் அரபிகளிடம் இன்னமும் தெருக்கூட்டுபவர்களை இழிவாக நினைக்கு பழக்கம் இருக்கிறதா? 1400 ஆண்டுகளாக இஸ்லாமால் மூளைச்சலவை செய்யப்பட்டு குண்டு கட்டிக்கொண்டு தற்கொலை செய்ய தயாராக இருப்பவர்களுக்கு அடுத்த மனிதனை எந்த தொழில் செய்தாலும் மதிக்க வேண்டும் என்று புரியவைக்க முடியவில்லையா?

    அல் அக்தம் பற்றி
    //அல் அக்தும் என்ற தீண்டத்தகாத ஜாதி அரபிய தீபகற்பத்தில் இன்னமும் இருக்கிறது//
    http://www.countercurrents.org/hr-marguerite250404.htm
    1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்ல, 2004 இல் எழுதப்பட்ட கட்டுரை. ஆங்கிலத்தில் இருக்கிறது. யாரேனும் அரபியில் மொழிபெயர்த்து சொன்னால், சுவனப்பிரியன் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

    //நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதம்.//

    அது இஸ்லாம் வருவதற்கு முன் 1400 வருடங்களுக்கு முந்தய நிலை//
    உங்கள் நிலையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.அது 2004இல் எழுதப்பட்ட கட்டுரை. படியுங்கள்.

    இன்னமும் இருக்கிறது என்றால் தமிழில் என்ன பொருள் என்று தெரியுமா? தமிழ் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இன்னமும் இருக்கிறது என்றால் இன்னமும் அந்த நிலையில் வாழ்ந்துவருகிறார்கள் என்றுதான் பொருள். அந்த பிரிவினரும் இன்னும் இந்த நாளிலும் இழிவான நிலையில்தான் வாழ்ந்துவருகிறார்கள். மேலும் நீங்கள் காட்டிய ஹதீஸ் யூதர்கள் அரபிய வேஷம் போட்டு எழுதியதில்லை என்று நன்றாக பார்த்துவிட்டீர்களா? நிறைய முஸ்லீமகள் இப்போது எல்லா ஹதீஸையும் கொளுத்து என்று சொல்லிகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவை எல்லாமே 350 வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட கட்டுக்கதைகள் என்கிறார்கள்.

    இரண்டு இணைப்புகள் கொடுத்தேன். படித்து பார்க்கலாம். மனதில் கோபமும் ஆற்றாமையும் இருக்கும்போது படிக்கும் பொறுமை இல்லை போலிருக்கிறது.

    தமிழ்தான் தெரியாது போலிருக்கிறது.
    அரபியில் இருக்கும் வீடியோவையாவது பாருங்கள்.
    http://www.youtube.com/watch?v=sbyb9xZqz-k
    http://www.youtube.com/watch?v=5FvTM-mfwuQ
    http://www.youtube.com/watch?v=-3MqjbkwVEI
    ஏமனின் தீண்டத்தகாத பிச்சையெடுக்கும் அல் அக்தும்
    நீங்கள் நம்பக்கூடிய அல் ஜஜீரா தொலைக்காட்சி வீடியோ
    http://www.youtube.com/watch?v=ioprld4eVn4

    பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. அரபியில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இதற்கு சமமான அரபி மொழியை யாராவது தெரியப்படுத்தினால் சுவனபிரியனுக்கு ஒருவேளை புரியலாம்.

    1. Avatar
      பூவண்ணன் says:

      நீங்க சிந்துசமவெளி/சரஸ்வதி எல்லாம் ஆரியரது தான் ,மத்தவங்க எல்லாம் நாகரீகம் இல்லாதவங்கன்னு சொல்றீங்களா
      .இல்லை ஆரியர் திராவிடர் என்று பிரிவே இல்லை என்று கூறுகிறீர்களா

      அந்தமான்ல இப்ப இருக்கறவங்க /நாகலண்டுல இருக்கறவங்க/காஷ்மீர்ல இருக்கற குஜ்ஜர்/தமிழ்நாட்டுல இருக்கற தோடர்/கள்ளர்/மள்ளர் /பிராமணர் எல்லாம் ஒண்ணா தெரிகின்றார்களா .இல்லை வேற வேற குழுக்கள் இருந்தது
      ஆனா சிந்துசமவெளி/சரஸ்வதி எல்லாம் ஆரியரது தான் என்று கூறுகிறீர்களா
      இப்பவும் காஷ்மீர்ல இருந்து கன்யாகுமரி வரை இருக்கின்ற பிராமணர்கள் ஒரே மாதிரி கோத்ரம் வெச்சு முனிவர்களை தங்கள் மூதாதையர் ஆக வழிபடுகிறார்களே ஆனால் மற்றவர்கள் எல்லாரும் ஏன் சிவ கோத்ரா /விஷ்ணு கோத்ரா என்று காந்தி ஹரிஜன் பேர் வெச்ச மாதிரி ஒரே கோத்ரத்தின் கீழ் வருகின்றனர்.
      அந்தமானில் இருப்பவர்களுக்கும் பாரத்வாஜ காஷ்யப கோத்ரம் இருக்குமோ
      ஜ்ஹர்க்ஹாந்து மாநிலத்தில் கோத்ரம் என்று வருவது என்ன என்று பாருங்கள்
      http://www.tribalstuff.in/2011/04/oraons-the-gotra-system-part-i/

      இப்போது யார் யாரெல்லாம் சிந்து/சரஸ்வதிக்கு உரிமை கொண்டாடலாம்.இந்தியரா/பாகிஸ்தானியாரா/பர்மா நாட்டுகாரரா
      வேறு வேறு முறையில் திருமணம்/இறந்தவர்களை அடக்கம் செய்தல்/இறைவனை வணங்குதல்/அவனுக்கு படைக்கும் உணவுகள்/பேசும் மொழி கொண்ட பல குழுக்களில் யார் இதற்க்கு சொந்தம் கொண்டாடலாம்

      இரு பிரிவினரின் இடையே இருக்கும் பிரிவுகள் எப்படி உருவாகி இருக்கும் என்பதை ஊகிக்கும் retrospective ஆராய்சிகள் தான் ஆரியர் படையெடுப்பு /திராவிட மொழிகள் ,வடமொழி கலப்பு/அசுவமேத யாகம்/குதிரை அறியாத குழுக்கள் போன்ற முயற்சிகள்
      வெள்ளைக்காரன் ஒரு நோக்கத்திற்காக ஒன்றை பிடித்து கொண்டான் என்றால் இப்போது அவர்கள் இடத்தை பிடித்து கொண்ட குழு அவர்களின் நோக்கத்திற்காக மற்றொன்றை திணிக்கிறது.நாளை மாயாவதி அனைத்திலும் தம்மத்தை ஆதராபூர்வமாக நிரூபிப்பார்.
      வரலாற்றில் எழுதப்பட்ட விஷயங்கள் கிடைக்கும் காலத்தில் வாழ்ந்த ராஜராஜ சோழன் எந்த சாதி என்று சொல்லுங்களேன்.தமிழ்நாட்டில் மட்டும் நூறு சாதிகள் நாங்கள் தான் ராஜராஜனின் வழிதோன்றல்கள் என்று கத்தி கொண்டு திரிகின்றன .அது முடியுமா
      மலையாளமும் தமிழும் எப்படி பிரிந்தது என்று சொல்ல முடியுமா.அதை சொல்லும் ஒரு தியரி சூழ்ச்சி /அதை முறியடித்து ஆதாரபூர்வ தியரி உள்ளது என்று கூப்பாடு போடுவதால் அது உண்மையாகி விடுமா
      ஆப்கானிஸ்தான் ,ரஷ்ய எல்லைகளில் வாழும் மக்கள் வேறு ,இங்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை(வட கிழக்கில் எது வரை எடுத்து கொள்ளலாம் என்று ஆதாரத்துடன் பேசுபவர்கள்/ புத்தகம் எழுதுபவர்கள் கூறுகிறார்கள்)இப்போது வசிக்கும் மக்கள் ஒன்று தான் என்கிறீர்களா

  54. Avatar
    smitha says:

    முதலில் இந்நாட்டு பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்டவர்களை மனித நேயத்தோடு நடத்துங்கள்.

    Piriyan,

    There are innumerable caste (sect) classes which results in deaths amongst muslims. First you put your own house in order before advising others.

  55. Avatar
    smitha says:

    Piriyan,

    You have given a very detailed account of the registration formalities amongs muslims. Fine.

    The question is how many of them really follow it? Accepting that evertone does, there is no harm in following a Govt. rule. It does not make sense to make a rule only for certain communities.

    ஒரு கல்விச் சான்றுக்கோ இறப்புச் சான்றுக்கோ 10 முறை அலைய விட்டு கையூட்டும் பெற்றுக் கொள்ளும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் கணவனும் மனைவியும் வந்து ரிஜிஸ்டர் செய்தால் அது நகைப்பிற்குரியதாகி விடும்.

    I & many of my friends have done. We have not undergone any such humiliation.

    It only shows that muslims in trying to find ways & means to not go with thre grain.

    This rigid attitude is the bane of your community.

    It is a pity that even the so called learned ones of your community are not willing to change.

  56. Avatar
    smitha says:

    Kavya,

    காவ்யா போன்ற நடுநிலைவாதிகள்

    Piriyan feels so.

    Even you must be shocked.

    :-)

    1. Avatar
      Kavya says:

      அதன் இறைச்சி (உள்ளுறை பொருள்) என்னவென்றால், நான் இசுலாமியனும் அன்று, கிருத்துவனும் அன்று; இந்துவும் அன்று இங்கே திண்ணையில். தனிநபர் வாழ்க்கையில் எனக்கு மதம் இருக்கலாம். மேலும், நான் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கையாளன். அதே சமயம், நாத்திகருக்கென்று உரிமைகள் உள. அவை அவருக்குக் கொடுக்கப்படவேண்டும். இயேசு ஜீவிக்கிறார்; அல்லாவே ஏக இறைவன்; சிவத்துக்கு மேல பதமில்லை; என்றெல்லாம் நீங்கள் சொல்லமட்டுமா செய்கிறீர்கள். ஊரெங்கும் சுவர்களில் எழுதிப்போட்டு, தட்டி போர்டுகள் வைத்து, டிவி சானல்களில் பணம் கொடுத்து விளம்பரம் போட்டு, மக்களை நிம்மதியாகத்தூங்கவிடாமல் பண்ணுகிறீர்கள். நாத்திகர் ஒரு தட்டிபோர்டு வைத்தால் உங்களுக்குப்பற்றிக்கொண்டு வருகிறது. எனவே நாத்திகர் உரிமைக்காகவும் சேர்த்து எழுதிக்கொண்டிருப்பதால் “இவனொரு அன்கிளப்பபுல் மேன்” (He is an unclubbable man!) என்பதே அவர் சொற்றொடரின் இறைச்சியென நினைக்கிறேன். நீங்க எப்படி ?

  57. Avatar
    Rama says:

    Mr தங்கமணி , Hats off to you. When cornered Mr SP will switch to another topic. Taqya or whatever they call it in Islam.Question to Mr Sp. Do you still subscribe to this White man invented Aryan invasion theory? A simple yes or no please.No monologue or quoting unproven sources.

  58. Avatar
    vedamgopal says:

    hinduvoicemumbai.blogspot.com/

    என்ற வலை தளத்திற்கு சென்று பாருங்கள். அரபு தேசங்களான பெஹரின், இரான், குவட், ஓமன், கடார், சைவூதி அரேபியா, துருக்கி, அரபு எம்ரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை.

    இந்த அரேபிய இஸ்லாமியர்கள் 10ஆம் தேதி ஜூலைமாதம் 2012 இல் ”சர்வ தர்ம சுரூப சாயி” என்ற தலைப்பில் அவரது உன்னத கோட்பாடுகளான சத்தியா, தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்பதை உள் அடக்கி ஒரு பெரிய கீர்தனை கச்சேரியே அரங்கேற்றினார்கள். ஆனால் விதிவசமாக இந்த கொள்கைகளுக்கு எதிர்பதமான பல கொள்கைகள் குர்ரானிலும், ஹாதீத்திலும் பரவிக்கிடக்கின்றன. அதனால்தான் உலகில் பலவிதமான கொடூரமான தீவிரவாத செயல்கள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த தவறான கொள்கைகள் முஸ்லீமே முஸ்லீமை கொன்றுகுவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    ஆனால் இந்த செக்யூலர் பாரதத்தில் இது ஒரு பத்திரிகை செய்தியாக வெளிவராது.

  59. Avatar
    smitha says:

    Piriyan,

    Your confusion is evident in your posts on Ramar temples. if you are cornered, you start talking about unrelated topics like Manu dharma. You go out of your way to justify inhuman acts committed by your muslime clergy.

    Your desperation shows.

    The point is this – Koran may say a 100 things. The fact is that it is interpreted in different ways & this leads to confusion.

    It does not matter that if this senseless violence (like the wars between shias & sunnis which happen every 3rd day is confined only to your religion.

    Neenga adhichindu ssavunga – no ones cares.

    But do not kill others in the name of islam.

    After all this, do not say – islam is an amaidhi maargam.

  60. Avatar
    paandiyan says:

    சுவனப்பிரியன்,
    நீங்கள் முஸ்லீம். உங்களுக்கு இந்தியாவில் உள்ள கோவில்களில் யார் யாரை கும்பிடுகிறார்கள் என்று ஏன் அக்கறை?
    — Perfect question. சுவனப்பிரியன் and CO., main job is divide hindus based on false informations and then convert it happily and they are doing successfully in this job past 50 years… i can also paste lot of documents rearding Muslims Jathi verri in other countries but let him answer all the questiosn posted by தங்கமணி first.

  61. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //1400 ஆண்டுகளாக இஸ்லாமில் மூழ்கி திளைத்து இருக்கும் அரபிகளிடம் இன்னமும் தெருக்கூட்டுபவர்களை இழிவாக நினைக்கு பழக்கம் இருக்கிறதா?//

    அந்த டாகுமெண்டரி இழிவுக்காக எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு சம்பளம் அரசு சிறப்பாக கொடுத்தாலும் காண்ட்ராக்டர்கள் சரியாக கொடுப்பதில்லை என்றும் உழைப்பின் அருமையை தெரிந்து கொள்ளவுமே இந்த படம். தொழும் போது ஒருவரின் தோள் மற்றவரோடு ஒட்ட வேண்டும் என்பது சட்டம். சில துப்புறவு தொழிலாளர்கள் மசூதிக்கு சீருடையோடு வரும் போது பெரும் கோடீஸ்வரர்களான சவுதிகளும் தொழ வருவர். அவர்கள் பக்கத்தில் நிற்க சங்கோஜப்பட்டுக் கொண்டு தயங்கும் பங்காளிகளை அந்த செல்வந்தர்களே புன்னகையோடு அவர்களை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்வதை தினமும் பார்க்கலாம். ஏனெனில் இங்கு வேதத்துக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்கள்..

    //1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்ல, 2004 இல் எழுதப்பட்ட கட்டுரை. ஆங்கிலத்தில் இருக்கிறது. யாரேனும் அரபியில் மொழிபெயர்த்து சொன்னால், சுவனப்பிரியன் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.//
    ஏமனின் தீண்டத்தகாத பிச்சையெடுக்கும் அல் அக்தும்//
    நீங்கள் நம்பக்கூடிய அல் ஜஜீரா தொலைக்காட்சி வீடியோ//

    ஒரு நாட்டில் வறுமையானவர்களும் செல்வந்தர்களும் இருப்பது இயற்கை. எல்லோருமே பணக்காரர்களாக இருக்க முடியாது. ஏமனில் அந்த மக்கள் தங்களின் வறுமையை போக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கிறார்கள். அரசு இவர்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறது. ஆனால் இந்த மக்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்கவோ அல்லது தீண்டாமை பராட்டப்படுகிறது என்றோ குரல் எழுப்பவில்லை. குர்ஆனும் தீண்டாமை பாராட்டவில்லை.

    http://www.youtube.com/watch?v=9HCg5TSis0M&feature=related

    பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் புரளும் கீழ் சாதி மக்கள். போன வருடம் நடந்தது. இந்தியா ஒரு வல்லரசாகப் போகிறது என்று கனவு வேறு கண்டு வருகிறோம்.

    இநத அளவு ஒரு சமூகத்து மக்களை சிந்தனை அற்று சுய மரியாதை இழக்க வைத்ததுதான் தங்கமணியின் மார்க்கம்.

    திலிபனாக இருந்து பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய நம் இசைப்புயலை எவரது காலிலாவது விழுந்து பார்த்திருக்கிறீர்களா? அந்த அளவு சுயமரியதையை புகட்டுவது இஸ்லாம்.

    http://www.youtube.com/watch?v=PqkC7afcmxo

    இந்த காணொளியில் ஒரு பிராமணர் எந்த அளவு மற்ற மக்களை கீழ்த்தரமாக நினைக்கிறார், அதற்கு ஆதாரமாக வேதங்களை துணைக்கழைக்கிறார் என்பதை பாருங்கள். தமிழக கிராமங்களில் செருப்பு போட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க இன்றும் தடை உள்ளது. அதையும் இந்த காணொளியில் பாருங்கள்.

    நான் எழுதிய தமிழ் புரியவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த மொழியான சமஸ்கிரதத்தில் யாரையாவது மொழி பெயர்க்க சொல்லி அனைத்தையும் தெரிந்து கொள்ளவும். :-)

    .

    1. Avatar
      தங்கமணி says:

      //ஏனெனில் இங்கு வேதத்துக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்கள்..//

      வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஒரிஜினல் அரபுகளுக்கு தெரிகிறது. டூப்ளிகேட் அரபுகளுக்குத்தான் தெரியமாட்டேன் என்கிறது.

      http://www.youtube.com/watch?v=uz4i8FYJQyA

      குரானில் அரபுகளை உயர்த்தி வைத்தோம் என்று முகம்மது அல்லாஹ் சொன்னதாக சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அல்லது அப்படி புரிந்துகொள்கிறார்களோ என்னவோ. ஒரு பங்களாதேஷி முஸ்லீமை ஒரிஜினல் அரபு முஸ்லீம் நடத்தும் இஸ்லாமிய பாங்கை பாருங்களேன். இந்த மாதிரி அரபு வாயால் திட்ட ஒரு முஸ்லீமுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுவனப்பிரியன் புல்லரித்தால் இங்கே யாரும் அதிர்ச்சியடைய மாட்டார்கள். உங்களது அரபு விசுவாசம் உலகம் அறிந்த்தாயிற்றே.

      //ஒரு நாட்டில் வறுமையானவர்களும் செல்வந்தர்களும் இருப்பது இயற்கை. எல்லோருமே பணக்காரர்களாக இருக்க முடியாது. ஏமனில் அந்த மக்கள் தங்களின் வறுமையை போக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கிறார்கள். //

      ஏழ்மையில் வாடுவது குடும்ப ரீதியாகத்தான் இருக்க வேண்டும். இன ரீதியாக இருந்தால் அது கொடுமை! பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கலாம். ஆனால் எல்லா பார்ப்பனர்களுமே ஏழைகளாக இருந்தால் அது கொடுமை. தலித்துகளில் ஏழைகள் இருக்கலாம். ஆனால் எல்லா தலித்துகளுமே ஏழைகளாக இருந்தால் அது கொடுமை.

      இங்கே அல் அக்தும் என்ற இனமே மலம் அள்ளவும், துப்புறவு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டால், அவன் தொட்ட பாத்திரைத்தை உடைத்து போடு என்று மற்றவர்கள் அவர்களை நடத்தினால் அது தீண்டாமை!

      1400 ஆண்டுகளாக இவர்களுக்கு விடிவு வரவில்லை என்றால், அது அமைப்பு ரீதியான ஒடுக்குமுறை.

      //திலிபனாக இருந்து பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய நம் இசைப்புயலை எவரது காலிலாவது விழுந்து பார்த்திருக்கிறீர்களா?//
      அது சரி. அவரை இஸ்லாம் மதம் மாறியதற்காக இந்துக்கள் யாரும் கொல்லவில்லைவில்லை அல்லவா? இதுவே பாகிஸ்தானில் ஒரு பாடகி பவானியை போற்றி பாடியதற்காக கொலை மிரட்டல் விடப்பட்டாரே.

      அப்படிப்பட்டவர்கள் இச்லாத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்று நீங்களும் காவ்யாவும் சொன்னீர்கள். எப்படி போக முடியும் என்று கேட்டதற்கு மட்டும் இன்னும் பதில் இல்லையே!

      முதலில் உங்கள் அரபு நாட்டில் அல்-அக்தும் ஜாதியினருக்கு 1400 ஆண்டு கால இஸ்லாமிய தீண்டாமையை ஒழித்துவிட்டு வாருங்கள். அட்லீஸ்ட் இந்தியாவில் தீண்டாமை இல்லை என்று யாரும் புளுகுவதில்லை. ஒரு தலித் ஜனாதிபதி ஆகிவிட்டார் என்பதால் முழுக்க முழுக்க தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று ஆடுவதுமில்லை.

  62. Avatar
    vedamgopal says:

    why my earlier comment is omitted. It is good news about religious harmony that Muslims from Arabian countries assembled at Satyasai Baba place and performed Kirtana and Bajan’s.

  63. Avatar
    பூவண்ணன் says:

    இப்போதும் அந்தமானில் பழங்குடியினர் வசிக்கின்றனர். சில மைல்கள் தொலைவில் உள்ள தீவுகளில் பல்வேறு பிரிவினர்,வேறு வேறு மொழிகள்,பழக்க வழக்கங்கள்.இப்போது அவர்களை விட அங்கு சென்ற வங்காளிகளும் தமிழர்களும் தான் அதிகம்.இவர்கள் அனைவரும் ஒன்று தான் அதாம் ஏவாள் இல் இருந்து வந்தவர்கள் என்கிறீர்களா .அனைவருக்கும் ஒரே கலாசாரம் தான் இருந்தது வெள்ளையரும்/இஸ்லாமியரும் வருவதற்கு முன் என்கிறீர்களா
    அசைக்கமுடியாத ஆதாரம் /சூழ்ச்சிகளை முறியடித்த உடலையும் தலையையும் சேர்த்த தரவுகள் எதை காட்டுகின்றன.இருக்கும் வித்தியாசங்களுக்கு காரணம் என்ன /எப்படி உருவானது என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஒன்று தான் எனபது தான் ஆராய்ச்சியின் முடிவா.

    இப்போதும் ரஷ்யாவில் அகழ்வாராச்சியில் கிடைத்த 4000 ஆண்டு முற்பட்ட ஆர்யர்களின் கிராமம் என்று வருகிறதே.அது எல்லாம் சூழ்ச்சியின் தொடர்ச்சியா .ரஷ்யர்களுக்கு இந்த சூழ்ச்சியால் என்ன பயன் http://articles.timesofindia.indiatimes.com/2010-10-04/europe/28241450_1_aryan-settlements-aerial-photography

    அலெக்சாண்டர் போருஸ் மீது போர் தொடுத்தார்.அவருடைய படை வீரர்கள் பலர் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்
    சந்திரகுப்தா மௌரியர் செளுகிஸ் என்று அலேசேண்டேருக்கு பின் வந்த அரசனை வென்று அவர் மகளை மனம் முடித்தார் என்று எல்லாம் படித்தோமே
    இப்போது மரபணுக்களில் வித்தியாசம் இல்லை என்பதால் அது எல்லாம் பொய்யா.இப்போது இருப்பவர்கள் எல்லாரும் கலப்பு என்று கூறுவதால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை எனபது அர்த்தமா

    பிரியங்கா காந்தியின் குழந்தைக்கும் தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக்கும் மரபணுவில் வித்தியாசம் ஒன்றும் இருக்காது.அதை வைத்து சோனியா வெளிநாட்டவர் என்ற வாதம் பொய் என்று வாதிடலாமா
    மரபணு ஆராய்சிகள் இன்று யாரும் நாங்கள் தான் ஆரியர் நாங்கள் தான் திராவிடர் என்று சொல்ல முடியாது. எல்லாம் கலந்து விட்டன என்று தான் கூறுகின்றன
    ஆர்யர் ,திராவிடர்,மொகலாயர் என்ற பிரிவே இல்லை,யாரும் படை எடுத்தோ ,இல்லை மாடு மேய்த்து கொண்டோ வரவில்லை என்று கூறவில்லை,கூறவும் முடியாது.

    அது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.
    நானும் பொழுது போவாம bharat matrimony இல இருக்கிற தமிழ் BC /SC /ST சாதிகள்,வட மாநில சாதிகள் /அண்டை மாநில சாதிகள் கோத்திரம் என்னன்னு பார்த்தா சிவா கோத்திரம்/விஷ்ணு கோத்திரம் தான் இல்ல கோத்திரம் காலியாக உள்ளது . ஒன்னு ரெண்டு பேர் ஊர் பேரு ,மிருகம் பேரு ன்னு ஏதாவது வருது.
    கோத்திரம் எல்லாம் வேதத்திலேயே கூட இருக்குதாமே.அது எப்படிங்க சூத்திரன்/பஞ்சமன் எல்லாருக்கும் ஒரே கோத்திரம் இல்லே பழங்குடி நாய்,பூனை,பன்றி,மீன் ஆனா எந்த மூலையில,எந்த மொழி பேசினாலும் பிராமணர்களுக்கு மட்டும் ரிஷிமூலம் ஒண்ணா இருக்குது.
    ஒரு வேலை இதுவும் maxmuller சூழ்ச்சியோ

    1. Avatar
      bala says:

      many of the higher caste vaishnavites in and around MANDYA and MYSORE are said to have commonality with IRANIANS, PERSIANS on account of muslim marauders conquest of south karnataka. it may be falsehood . only historians can clarify. they are very fair complexioned and have iranian features and not typical south indian dark skin.

  64. Avatar
    பூவண்ணன் says:

    மரபணு ஆராய்ச்சியை வைத்து முஹலாயர் படையெடுப்பு,டச்சு,கிழக்கிந்திய,பிரெஞ்சு படையெடுப்புகளை நடந்ததா /இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா.சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இவற்றையே கண்டுபிடிக்க முடியாத போது ஆர்யர் பற்றி அசைக்க முடியாத ஆதாரம் கிடைத்தது போல் பேசுவதை கண்டு தான் மரபணு பற்றி தெரிந்தவர் சிரிப்பார்.ஆங்கிலோ இந்தியர் என்ற இனமே உருவாகி இன்றும் இருக்கிறது.அவர்கள் மரபணுவும் மற்றவர் மரபணுவுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை தானே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மக்களிடையே வித்தியாசம் காட்டும் மரபணுக்கள் கிடைக்கவில்லை என்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன
    இப்போது யாரையும் இவர் ஆர்யர் ,திராவிடர்,மொங்கோலியர் என்று வகைபடுத்த முடியாத அளவில் அவை கலந்து விட்டன என்று சில ஆராய்சிகள் தெரிவிக்கின்றன
    இப்போதும் ஒரு ஆராச்சி மத்திய ஆசியாவில் வசிப்பவர்,ரஷ்யாவில் வசிப்பவர் காஷ்மீர் பண்டிட்,வட இந்திய சதுர்வேதி ,கன்யாகுமரி சானார்,பள்ளர்,தோடர் போன்றோரை வைத்து ஆராய்ச்சி செய்தால் மத்திய ஆசியாவில் இருப்பவரோடு தொடர்பு இருக்கும் சாத்தியங்கள் காஷ்மீர் பண்டிதருக்கு/சதுர்வேதிக்கு அதிகமா இல்லை தென்னிந்திய சாதிகளுக்கு அதிகமா எனபது தெரிந்து விட போகிறது.

  65. Avatar
    bala says:

    the educated joining extrimists group may be on account of frustration real or imagined. so education or upliftment will draw away youth from terrorism is a myth. i do not want to single out muslims in this even other communities educated youth are lured by violent means such as maoism , even college professors are. we must control social injustice unbriddled corruption, a just civil society. see in NORWAY HOW NEO NAZI YOUTH IS UNREPENTANT EVEN AFTER SENTENCING. HE IS STILL PROUD OF HIS ACT

  66. Avatar
    K A V Y A says:

    The Hindu orgns shd come together and ask India to take all Pak Hindus. The Hindu orgns based in TN and Karnataka shd volunteer to bring them to settle in Karnataka and TN. Similarly, the Malaysian Hindus may be encouraged in Kanyakumari and Tuticorin districts coastal villages to neutralize the Xian population.

  67. Avatar
    bala says:

    one of the questions and paradigm,riddle not answered is majority of muslims almost in entirety did not migrate to PAKISTAN for want of wherewithal like economic condition even though they wholeheatedly supportd voted for the erstwhile undivided muslim league of JINNAH and forced to remain in INDIA. the second and third generations real state of mind is not known now. unlike jews majority of them migrated to ISRAEL THAT IS NOT THE CASE WITH PAKISTAN VOTORIES AND AVID SUPPORTES.How they reconciled to the harsh realities and come to terms with present situation. The recent developments in Karnataka will lead to further ghettoisation of muslims and further isolation although it bodes dark days ahead , and not desirable in an egalitarian , cosmopolitan, south indian mindset.

  68. Avatar
    suvanappiriyan says:

    முதலில் நான் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுகின்றேன். எனக்கு மொழி வெறியோ, சாதி வெறியோ, இன வெறியோ, மத வெறியோ என்றுமே இருந்ததில்லை. இஸ்லாமோ முகமது நபியோ எனக்கு அதனை போதிக்கவும் இல்லை. உலக மூல மொழிகள் அனைத்தும் இறைவனே உண்டாக்கியதாக குர்ஆன் சொல்கிறது. அதே போல் உலகில் உள்ள ஆண் பெண் அனைவரும் ஆதாம் ஏவாளிலிருந்து பல்கிப் பெருகியதாக குர்ஆன் கூறுகிறது. இன்றைய அறிவியலும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மூலமே என்று கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் சாதி பாகுபாடு, இன, மொழி பாகுபாடு காட்டுவது ஒரு இஸ்லாமியனின் செயல் அல்ல.

    இன்று இஸ்லாமிர்களிடமும் அன்சாரிகள், குரைஷிகள் என்ற குலப்பெயர், கோத்திரப் பெயர்கள் உள்ளதை மறுக்கவில்லை. இவை அனைத்தும் மனிதர்களை இன்னார் என்று அடையாளப் படுத்திக் கொள்வதற்காக நாமாக வைத்துக் கொண்ட பெயர்கள். இந்த இனம் உயர்ந்தது இந்த இனம் தாழ்ந்தது என்று குர்ஆனில் எங்குமே உங்களால் காண முடியாது. அதே போல் தங்கமணி கொடுத்த சாதிப் பட்டியலையும் குர்ஆனில் காண முடியாது.காயல்பட்டினம் போன்ற கடற்கரை தமிழக கிராமங்களில் உள்ள இஸ்லாமியர்களில் பலரின் மூதாதையர் அரபு வணிகர்களாக இங்கு வந்து தமிழக பெண்களை மணமுடித்து இந்த நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இன்று இவர்களிடம் சென்று மரபணு ஆராய்சி செய்தால் அரபுகளின் மரபணுக்களை காணுவது சிரமம். அதனால் அரபு வணிகர்களின் வியாபாரமோ திருமண கலப்போ நடைபெறவில்லை எனறு கூற முடியுமா?

    அதுபோல் இந்துக்களிலும் பல சாதிகள் கோத்திரங்கள் சமூக அமைப்பில் இருப்பதில் தவறில்லை. பிரச்னை எங்கு வருகிறது? நான் நெற்றியில் பிறந்தேன். நீ காலில் பிறந்தாய். நான் சாப்பிட்ட எச்சில் இலையில் புரண்டு எழுந்தால் உனக்கு மோட்சம் கிட்டும். எனது அக்ரஹாரத்தில் நுழைந்தால் காலில் உள்ள செருப்பை கழட்டி விட வேண்டும். கோவிலில் சாமியை வழிபட உனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிற்க வேண்டும். அதை மீறி வரக் கூடாது. வேதத்தை நீ ஓதினால் உன் நாக்கை அறுப்பேன்’ என்று நம் சகோதரர்களை இழிவு படுத்துவதுதான் பிரச்னை..

    அது அந்த காலம். தற்போது நாங்களெல்லாம் திருந்தி விட்டோம் என்று தங்கமணியும், வேதம் கோபாலும், மலர் மன்னனும், ஸ்மிதாவும் அநியாயத்துக்கு சாதிப்பார்கள். ஆனால் நான் மேலே கொடுத்த சுட்டியில் ஒரு பிராமணர் ‘நாம் நடப்பதற்கு காலைத்தான் பயன் படுத்த வேண்டும். அதற்கு தலையை பயன் படுத்த முடியுமா? எனவே சூத்திரர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பதுதான் நல்லது’ என்று தனது காலை சுட்டிக் காட்டி தைரியமாக பேட்டியும் கொடுக்கிறார். இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் பெரியார் அம்பேத்கார் போன்றவர்களின் அயராத உழைப்புக்குப் பின்னும் இப்படி ஒருவர் பேட்டி கொடுக்கிறார். அதற்கு ஆதாரமாக வேதத்தையும் காட்டுகிறார்.

    அப்படி என்ன நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்து விட்டீர்கள்? ஒரு அக்ரஹாரத்தில் ஒரு தலித் மாணவனை 20 வருடம் வளர விட்டால் இன்றுள்ள பிராமணர்களை விட சிறப்பாக படித்து முன்னுக்கு வருவான். அதே ஒரு தலித் சேரியில் ஒரு பிராமண மாணவனை 20 வருடம் விட்டுப் பாருங்கள். அவனது நிறம், குணம், அறிவு அனைத்திலும் அநேக மாற்றங்களை காண முடியும். அக்ரஹாரத்தில் வளர்ந்த ஒரு முஸ்லிமான அப்துல் கலாம் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக மாற வில்லையா? ஒரு மனிதனின் அறிவு ஜீன்களால் குறைந்த சதவிதமே கடத்தப்படுகிறது. அதிகமான மாற்றங்கள் அவனது சுற்று சூழல்களாலேயே ஏற்படுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

    ‘நீ ஒரு முஸ்லிம். உனக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி?’ என்று தங்கமணியும், ஸ்மிதாவும் கேட்கலாம். ஒரு காலத்தில் எனது முன்னோர்களும் ராமசாமியாகவோ கந்த சாமியாகவோதான் இருந்துள்ளார்கள். எனது முன்னோர்களின் மார்க்கம் இந்த அளவு சீர் கெட்டிருக்கிறதே என்ற ஆற்றாமையினால்தான் கேட்கிறேன்.

    அதிலும் ஸ்மிதா தானாக முன் வந்து ‘சுவனப்பிரியனையும், காவியாவையும் இந்த பதிவில் ஏன் காணவில்லை?’ என்று கேட்டதாலேயே சில விபரங்களை சொல்ல வேண்டியதாகி விட்டது. :-)

    அடுத்து ஆரிய படைபெடுப்பு பற்றி சகோதரர் பூவண்ணன் அவர்கள் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு ஆதாரங்களோடு தங்கமணி பதிலை தருவார் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்..

  69. Avatar
    venkates says:

    behold here, thou art ,bharatha MATHA,how your sons:the holy soldires,in the gentle form of DIALOQUE, drives away evils’amateur designs,attempting to rule our fertile land,and mind,whence thou art reignth.and also see how they ignore those clowns influenced by old thatchinamoorthy&co’s dirty stories.

  70. Avatar
    மலர்மன்னன் says:

    //மலர்மன்னன் says:
    August 27, 2012 at 3:48 pm
    சுவனப்பிரியன், நீங்கள் அரைக் கிணறு தாண்டுபவராகவே இருக்கிறீர்கள். சாவர்கர் ஹிந்து-முஸ்லிம் இருவேறு கலாசாரங்கள் அவை இணைய இயலாது என்றுதான் சொன்னார். அதே சமயம் ஹிந்துஸ்தானத்து முஸ்லிம்கள் ஹிந்துக்களாக இருந்தவர்கள், அவர்களை தனி தேசியமாக அடையாளப் படுத்தலாகாது என்றே சொன்னார். அவர் எழுதிய 1857 முதல் விடுதலைப் போர் என்ற நூலைப் படியுங்கள். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு அது, அதை இழந்துவிட்டோம் என்று அதில் கருத்துத் தெரிவித்திருப்பார். கோமளித்தனமாகக் குதிக்கும் அரைக் குடங்களிலிருந்து நீங்கள் வித்தியாசமானவர். ஆனால் அவசரப்பட்டு பதில் எழுத ஆரம்பித்துவிடுகிறீர்கள்.//

    மேலே உள்ளது ஆகஸ்ட் 27 அன்றே நான் எழுதியான விளக்கம். இதையே செப்டம்பர் 3 அன்றும் நான் விளக்க வேண்டும் என்று வற்புறுத்துவற்குத்தான் ”கோமளித்தனமாகக் குதிக்கும் அரைக் குடங்களிலிருந்து…” என்று சொல்வது.
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      // ஹிந்து-முஸ்லிம் இருவேறு கலாசாரங்கள் அவை இணைய இயலாது என்றுதான் சொன்னார். அதே சமயம் ஹிந்துஸ்தானத்து முஸ்லிம்கள் ஹிந்துக்களாக இருந்தவர்கள், அவர்களை தனி தேசியமாக அடையாளப் படுத்தலாகாது என்றே சொன்னா//

      1. ஹிந்து-முஸ்லிம் இருவேறு கலாச்சாரங்கள்; அவை இணைய இயலா.
      2. ஹிந்துஸ்தானத்து முசுலீம்கள் ஹிந்துக்களாக இருந்தவர்கள்.

      இவ்விரு வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று முரண் என்பதுமட்டுமன்றி, அவற்றுக்கிடையே என்ன தொடர்பு என்றும் புரியவில்லை.

      Malarmannan may explain.

  71. Avatar
    Rama says:

    Quote”LONDON: Russian archaeologists have unearthed some ancient and virtually unknown settlements which they believe were built by the original Aryan race about 4000 years ago.”
    This piece is from TOI, based on article from a London newspaper.
    I read the whole article.Please note the term used here ” they BELIEVE”. It is just a belief and nothing more. It does not say how they came to the conclusion that a race called ” Aryans” existed. Their assumption is that there was an ” Aryan Race” in the past.Everything is based on this assumption. Mr SP and his cohorts of admirers wants us to take this as ” evidence” that such a race called ” Aryans” existed. More than likely, Bharath nation extended upto Russia 4000 years ago. SP and Co can Google on that.
    What is next? “Martians remains” discovered in the backyard of some Ukrainian household is a definite proof of their existence ? Kazakhstan natives apparently saw some Pigs flying in the sky recently? Any takers on that?

    As someone noted, TOI is now known as ” Toilet paper of India”. With good reason, I think.

  72. Avatar
    அ-அர்வி says:

    //அப்படி என்ன நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்து விட்டீர்கள்? ஒரு அக்ரஹாரத்தில் ஒரு தலித் மாணவனை 20 வருடம் வளர விட்டால் இன்றுள்ள பிராமணர்களை விட சிறப்பாக படித்து முன்னுக்கு வருவான். அதே ஒரு தலித் சேரியில் ஒரு பிராமண மாணவனை 20 வருடம் விட்டுப் பாருங்கள். அவனது நிறம், குணம், அறிவு அனைத்திலும் அநேக மாற்றங்களை காண முடியும். அக்ரஹாரத்தில் வளர்ந்த ஒரு முஸ்லிமான அப்துல் கலாம் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக மாற வில்லையா? ஒரு மனிதனின் அறிவு ஜீன்களால் குறைந்த சதவிதமே கடத்தப்படுகிறது. அதிகமான மாற்றங்கள் அவனது சுற்று சூழல்களாலேயே ஏற்படுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.//

    சுவனப்பிரியனின் இந்த கூற்றை நான் ஆமோதிக்கின்றேன். அவருக்கு தனது மத விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் புத்தி நன்றாக வேலை செய்கிறது. இஸ்லாம் என்ற விஷயத்தில் தான் அவருக்கு அறிவுக்குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது.

    1. Avatar
      punaipeyaril says:

      அக்ரஹாரத்தில் வளர்ந்த ஒரு முஸ்லிமான அப்துல் கலாம் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக மாற வில்லையா? —> நல்ல வேளை அவர் அங்கு வளர்ந்தார்… இல்லாவிட்டால்… நினைக்கவே பயமா இருக்கு…

  73. Avatar
    பூவண்ணன் says:

    the stories/studies on aryan dravidian keeps getting repeated

    its a retrospective study to understand two different groups with different practises and various theories are attempted

    there exists tamil and malayalam.Are they different or the same

    The gothra of a kashmiri brahmin or gujarathi brahmin or bengali brahmin remains the same while those of sudras have no resemblance with that or with their counterparts across the country

    I am surprised that people beleive, somehow certain people across the country got knowledge of vedas and sanskrit without any migration or movement.
    The so called aryans have been proud of their roots,gothras,practises and had written about the similar gothra origins found in afghan and central asia
    when subramania swamy claims that he is kashyapa gothra and has more rights than a kashmiri muslim on kashmir he is proud of his connection with kashyapa muni.a nadar or pallar or kallar has nothing similar to that
    Are the aryans willing to say that there rishi gothras and practise of avoiding marriage in the same gothra are hoax and they have no connection with those of the same gothra who live in different parts and speak different languagesஅது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.

    http://en.wikipedia.org/wiki/Datt

    Gotra

    Datts claim descent from Rishi Bharadwaja and derive their gotra from his name. Some consider Gaj Bhavan, the grandson of Bharadwaj to be the real founder of their clan. All Datts are Saraswat Brahmins of Punjab

    rajdeep sardesai from goa is a saraswat brahmin and there exists bharadwaja gothra in TN too.if they are from the same ancestry how did they reach different parts of india without migration

    which is nearer to kashmir?

    afghanistan or kanyakumari

  74. Avatar
    பூவண்ணன் says:

    https://www.trsiyengar.com/id272.shtml

    The Kambojas are a very ancient Kshatriya tribe of the north-western parts of the Indian subcontinent, of what now forms north-eastern Afghanistan and southern parts of Tajikstan. Upamanyu was one such Rishi of Kamboja lineage who finds frequent mention in ancient Indian texts like Rig Veda, several Puranas and the epic Mahabharata.

    Upamanyu is the name of a Vedic Rishi who finds reference in Book I, Hymn 102. 9 of the Rig Veda [4], Siva Purana, Linga Purana, Kurma Purana and also in Adi Parava [7] as well as in Anushasana Parava of epic Mahabharata [8] [9]

    the brahmanas,kshatriyas and vaishyas have gothras while the sudras,panchamas,tribals have none of it
    if the word aryan,dravidian is annoying we can use gothrawallahs and nongothrawallahs

    People who where proud of being called aryans a century back and wrote extensively about aryans but when democracy and its one man one vote made things tough for them to succeed unlike monarchy and godmen days,they made an aboutturn and started the aryans are hoax theories

  75. Avatar
    suvanappiriyan says:

    திரு அ. அர்வி!

    //சுவனப்பிரியனின் இந்த கூற்றை நான் ஆமோதிக்கின்றேன். அவருக்கு தனது மத விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் புத்தி நன்றாக வேலை செய்கிறது. இஸ்லாம் என்ற விஷயத்தில் தான் அவருக்கு அறிவுக்குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது.//

    இஸ்லாத்தை நான் பின் பற்றுவதால் எந்த வகையில் எனது அறிவில் குறைவு வந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? எனது மூதாதையர் முன்பு பின் பற்றிய இந்து மதத்தை விட எந்த வகையில் இஸ்லாம் தாழ்ந்து விட்டது என்பதை ஆதாரத்தோடு விளக்கினால் எனது அறிவில் உள்ள குறைபாட்டை என்னால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். எனக்கு உதவி செய்வீர்களா?

    //Are the aryans willing to say that there rishi gothras and practise of avoiding marriage in the same gothra are hoax and they have no connection with those of the same gothra who live in different parts and speak different languagesஅது எப்படிங்க காஷ்மீர பிராமணரோ ,ஒரிய பிராமணரோ ,இல்லை சரஸ்வத் பிராமணரோ .இல்லை ஐயன்காரோ இல்லை மைதிலி,பட் என்று இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் காஷ்யப பாரத்வாஜ அகஸ்தி என்று ஒரே மாதிரி ரிஷி பேர் கோத்திரம் வருகிறது.//- சகோதரர் பூவண்ணன்!

    //rajdeep sardesai from goa is a saraswat brahmin and there exists bharadwaja gothra in TN too.if they are from the same ancestry how did they reach different parts of india without migration
    which is nearer to kashmir?
    afghanistan or kanyakumari//- சகோதரர் பூவண்ணன்!

    சகோதரர் பூவண்ணன் அவர்கள் வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார். தங்கமணி, ஸ்மிதா, வேதம் கோபால் எல்லாம் எங்கே? அட….மலர் மன்னனாவது வந்து ஏதாவது ஒப்பேத்தலாம்ல….நானும் ஆவலோடு ஒவ்வொரு முறையும் திண்ணைக்கு வந்து ஏமாற்றத்தோடு அல்லவா திரும்புகிறென்.

    1. Avatar
      தங்கமணி says:

      நானும் கேட்ட கேள்விகள் உங்களிடம் நிறைய பாக்கியிருக்கிறதே. அவற்றுக்கு பதிலளித்து என் ஏமாற்றத்தை துடைக்கலாமே?

      சகோதரர் பூவண்ணன் உங்கள் மாதிரி. உங்களுக்காவது பதில் சொன்னால் புரிந்துகொள்ளக்கூடிய மாதிரி தோன்றுவீர்கள். அவர் சுத்தம். இங்கே பதில் சொன்னாலும் உங்களை போலவே மூன்று நாள் கழித்து அதே கேள்வியை கேட்பார்.

      எதற்கும் பூவண்ணனுக்கும் எனக்குத் தெரிந்த பதில் சொல்கிறேன்.

      எல்லா இந்துக்களும் பூணூல் போட வேண்டும். பார்ப்பனர்களும் ஆச்சாரிகளும், சில சத்திரிய குலங்களும் மட்டுமே பூணூல் போடுவதால், மற்றவர்களுக்கு ஏன் பூணூல் இல்லை என்று கேட்பதை போன்ற கேள்வி இது. நீங்கள் போடவில்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள்? திருமணம் நடத்தும் போது எல்லோருக்கும்தான் பூணூல் அணிந்து திருமணல் செய்விக்கிறார்கள். தொடர்ந்து போட்டு வழக்கத்தை பின்பற்றவில்லை என்றால், பார்ப்பனர் என்ன செய்யமுடியும்?

      அதே போல எல்லோருக்கும் கோத்திரம் உண்டு. கோத்திரம் மறந்தவர்களுக்குத்தான் சிவகோத்திரமும் விஷ்ணு கோத்திரமும்.

      1. Avatar
        Kavya says:

        பூணூல் மட்டுமன்றி; காயத்திரி மந்திரம், சந்தியாவந்தனமும் பார்ப்பனர்களால் அனுஸ்டிக்கப்படுகின்றன. அவர்கள் விட்டுவிடவில்லை. இல்லையா? ஏன் அவர்கள் விடவில்லை? மற்றவர்கள் விட்டார்கள்?

  76. Avatar
    suvanappiriyan says:

    //அக்ரஹாரத்தில் வளர்ந்த ஒரு முஸ்லிமான அப்துல் கலாம் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக மாற வில்லையா? —> நல்ல வேளை அவர் அங்கு வளர்ந்தார்… இல்லாவிட்டால்… நினைக்கவே பயமா இருக்கு…//

    அதற்குத்தான் படிப்பு கேட்கிறோம். அரசு வேலை கேட்கிறோம். 3.5 சதவீதம் பத்தாது அதனை ஐந்து சதமாக உயர்த்தி கேட்கிறோம். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து விட்டால் சில சமூக விரோதிகள் தரும் சில பணங்களுக்காக குற்ற செயல்களில் ஈடுபடும் சில ரோட்டோர இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்வு மேம்படும் அல்லவா?

    ஓ….அப்படி செய்து விட்டால் இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்று நினைக்கிறோர்களோ? அதுவும் சரிதான். :-)

    1. Avatar
      தங்கமணி says:

      சுவனப்பிரியன்,

      //அதற்குத்தான் படிப்பு கேட்கிறோம். அரசு வேலை கேட்கிறோம். 3.5 சதவீதம் பத்தாது அதனை ஐந்து சதமாக உயர்த்தி கேட்கிறோம். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து விட்டால் சில சமூக விரோதிகள் தரும் சில பணங்களுக்காக குற்ற செயல்களில் ஈடுபடும் சில ரோட்டோர இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்வு மேம்படும் அல்லவா//

      படிக்க விரும்பினால், படிப்பதற்கு இந்தியாவில் எந்த தடையும் இல்லை. கிறிஸ்துவர்கள் தங்களது மக்கள்தொகை விகிதத்தை விட அதிக விகிதத்தில் படித்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்து பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இருக்கும் கட்டுப்பாடுகள் முஸ்லீம், கிறிஸ்துவ பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இல்லை. முஸ்லீம்களில் செல்வந்தர்களுக்கும் குறைவில்லை. தலித்துகளில் பெருமளவில் செல்வந்தர்கள் இல்லை. ஆகவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர்க்கப்பூர்வமானது. எந்த விதத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தர்க்கப்பூர்வமானது?

      அது உங்கள் வாதப்படியே வைத்துகொள்வோம். படிப்பறிவு பெற்று வேலையில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடமாட்டார்களா?

      இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், ஈராக், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, மலேசியா, துருக்கி, மாலத்தீவுகள், பங்களாதேஷ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம் இளைஞர்கள் மெத்த படித்தவர்கள். டாகடர்கள், என்ஜினீயர்கள்.
      இந்த மெத்த படித்தவர்கள்தான் உங்களது அரபுமததின் மீது சேற்று வாரி வீசுகிறார்கள்.

      அது சரி, இணையத்தில் யாரோ கேட்டமாதிரி, ஏன் காபிர்களிடம் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்? அரபி அல்லாஹ் போதுமானவன் இல்லையா?

  77. Avatar
    suvanappiriyan says:

    //இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், ஈராக், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, மலேசியா, துருக்கி, மாலத்தீவுகள், பங்களாதேஷ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம் இளைஞர்கள் மெத்த படித்தவர்கள். டாகடர்கள், என்ஜினீயர்கள்.//

    இந்துத்வ பயங்கரவாதிகளுக்கு ஆர்.டி.எக்ஸ் சப்ளை செய்த புரோகித் எந்த இனத்தை இனத்தை சேர்ந்தவர்? மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளது. 2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்க வைக்கப் பயன் படுத்தப் பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.

    அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

    அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency – NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

    இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.

    “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.

    Source : Article titled ‘Hindu Terror – Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)

    http://www.outlookindia.com/article.aspx?266145

    இந்த வழக்குகளில் முதலில் கைது செய்யப்பட்டது முஸ்லிம்களே! அதன் பிறகு தான் உண்மை வெளி வந்தது. இதில் சம்பந்தப்பட்ட பலர் அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள். எந்த இனம் என்பதும் நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரியும். எனவே தங்கமணி இதை காரணமாக வைத்து தனது இனத்தவர்களை அரசு உத்தியோகம் பார்க்கக் கூடாது என்று சொல்லப் போகிறாரா?

  78. Avatar
    suvanappiriyan says:

    //இந்த மெத்த படித்தவர்கள்தான் உங்களது அரபுமததின் மீது சேற்று வாரி வீசுகிறார்கள்.//

    அமெரிக்காவில படித்த முஸ்லிம்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற சமீபத்திய அறிக்கையை பார்த்து விடுங்கள்.

    NEW YORK—In more than six years of spying on Muslim neighborhoods, eavesdropping on conversations and cataloguing mosques, the New York Police Department’s secret Demographics Unit never generated a lead or triggered a terrorism investigation, the department acknowledged in court testimony unsealed late Monday.
    http://www.mercurynews.com/breaking-news/ci_21360607/nypd-muslim-spying-led-no-leads-terror-cases

    நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?

    நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)

    நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.

    முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.

    கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.

    டெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.

    முஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்டு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

    கடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.

    அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.

    இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.

    1. Avatar
      தங்கமணி says:

      2010இல் டைம்ஸ் ஸ்குயரில் வெடிகுண்டு வைக்க முயன்று தோற்ற நன்றாக படித்த பைஸல் ஷ்ஜாத்

      http://en.wikipedia.org/wiki/2010_Times_Square_car_bombing_attempt
      //Faisal Shahzad was born in Pakistan in 1979 to a wealthy, well-educated family.[72][73][74] His father, a former Pakistan Air Force Vice Marshal, is deputy director general of the Civil Aviation Authority of Pakistan.[75][76] Shahzad attended primary school in Saudi Arabia, and then studied in Pakistan//

      நல்ல வேளை இவர் அமெரிக்காவில் கைது செய்தார்கள். இந்தியாவாக இருந்தால், மதானியை விட சொல்லி ஊர்வலம் போன மாதிரி, இவருக்கும் ஊர்வலம் போயிருப்பீர்கள்.

      இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். கண்காணிக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தாலே பலர் வாயை மூடிகொண்டிருப்பார்கள். அதனால் குற்றம் குறையத்தான் செய்யும்.

      அதுசரி, இங்கே நிறைய கேட்டிருக்கிறேனே. ஒன்றுக்கும் பதில் சொல்லாமல், கட் அண்ட் பேஸ்டாக பண்ணிகொண்டிருக்கிறீர்களே?

  79. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    பரவாயில்லை. இந்தியாவில் நடந்த அனைத்து இந்து பயங்கரவாத செயல்களையும் பட்டியலிட்டு விட்டீர்கள். உங்களால் முடிந்துவிட்டது. என்னாலோ மற்றவர்களாலோ, இஸ்லாமிய பயஙக்ரவாத செயல்களை பட்டியலிட்டு மாளாது.

    ஆமாம் இதே காங்கிரஸ் அரசுதானே, இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் கைது செய்கிறது? அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் எப்படி அப்பாவியாகிவிடுகிறார்கள்?

    கைது செய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள் அப்பாவிகள், குற்றமற்றவர்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால், எந்த இந்து இயக்கம் (ஆர் எஸ் எஸ் உட்பட) குற்றமிழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஊர்வலமோ அல்லது கலவரமோ செய்யவில்லை. குற்றமிழைத்திருந்தால் தண்டனை கொடுங்கள். சட்டத்தில் தலையிடமாட்டோம் என்று விலகிகொண்டுவிட்டார்கள்.


    அது சரி நான் எப்போது முஸ்லீம்கள் அரசு உத்தியோகம் பார்க்கக்கூடாது என்று சொன்னேன்?

    //அதற்குத்தான் படிப்பு கேட்கிறோம். அரசு வேலை கேட்கிறோம். 3.5 சதவீதம் பத்தாது அதனை ஐந்து சதமாக உயர்த்தி கேட்கிறோம். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து விட்டால் சில சமூக விரோதிகள் தரும் சில பணங்களுக்காக குற்ற செயல்களில் ஈடுபடும் சில ரோட்டோர இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்வு மேம்படும் அல்லவா?
    //
    என்று ஏதோ வேலையில்ல்லாத முஸ்லீம் இளைஞர்களை சமூக விரோதிகளாக இருக்கும் சில முஸ்லீம்கள் பணம் கொடுத்து குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள். இவர்கள் படித்துவிட்டு வேலைக்கு போய்விட்டால், இஸ்லாமின் மீது சேறு வீச இடமிருக்காது என்று எழுதினீர்கள்.
    படித்த வேலையிலிருக்கும் முஸ்லீம்கள்தானே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு வழக்கம்போல கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்கிறீர்கள். நான் கேட்டதற்கும் நீங்கள் எழுதியதற்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

    படித்தவர்கள்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னேனா? அப்படி சொல்லியிருந்தால் நீங்கள் இப்படி பதில் கேட்கலாம்.

    படித்த முஸ்லீம்கள் வேலை பார்க்கும் முஸ்லீம்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பது போல நீங்கள்தான் சொன்னீர்கள். நான் சொல்லவில்லை.

    நான் முஸ்லீம்களில் படித்தாலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னேன். அதற்கு சம்பந்தம் இல்லாமல் கட் அண்ட் பேஸ்ட் வேறு.

  80. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //எல்லா இந்துக்களும் பூணூல் போட வேண்டும். பார்ப்பனர்களும் ஆச்சாரிகளும், சில சத்திரிய குலங்களும் மட்டுமே பூணூல் போடுவதால், மற்றவர்களுக்கு ஏன் பூணூல் இல்லை என்று கேட்பதை போன்ற கேள்வி இது. நீங்கள் போடவில்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள்? திருமணம் நடத்தும் போது எல்லோருக்கும்தான் பூணூல் அணிந்து திருமணல் செய்விக்கிறார்கள். தொடர்ந்து போட்டு வழக்கத்தை பின்பற்றவில்லை என்றால், பார்ப்பனர் என்ன செய்யமுடியும்?//

    பரவாயில்லையே! அப்போ நம்ம கிராமங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் பூணூல் போட்டு அழகு பார்க்கலாமே! சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சியுங்களேன். அப்படியே அவர்களை அர்ச்சகர்களாகவும் ஆக்கி விட்டால் தீர்ந்தது பிரச்னை. ஜெயேந்திரரிடம் பேசி ஆவண செய்யுங்கள்.

    //ஒரு பங்களாதேஷி முஸ்லீமை ஒரிஜினல் அரபு முஸ்லீம் நடத்தும் இஸ்லாமிய பாங்கை பாருங்களேன். இந்த மாதிரி அரபு வாயால் திட்ட ஒரு முஸ்லீமுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுவனப்பிரியன் புல்லரித்தால் இங்கே யாரும் அதிர்ச்சியடைய மாட்டார்கள். உங்களது அரபு விசுவாசம் உலகம் அறிந்த்தாயிற்றே.//

    அந்த பங்களாதேஷியை ஏன் அந்த அரபி அடிக்க வேண்டும்? சவுதி நாட்டையும் அந்த மன்னரையும் இழிவாக பேசியதாலும் சவுதி அமெரிக்காவுக்கு பயந்து கொள்கிறார்கள் என்று சொன்னதாலும் அடி வாங்கினான். பிழைக்கப் போன இவனுக்கு அந்த நாட்டு அரசியலைப் பற்றி அரபிகளிடம் ஏன் வம்பளக்க வேண்டும்? ஒரு சவுதி நாட்டுக்காரனே தனது அரசரை இழிவாக பேசினால் அடிக்க வந்து விடுவான். அந்த அளவு விசுவாசமாக மன்னர் நடக்கிறார். மக்களும் மதிக்கிறார்கள். எனவே முதல் தவறு பங்களாதேஷியுடையது. அதற்காக அவனை அடித்தது சவுதியின் தவறு. தவறு செய்தால் காவல் துறையிடமே ஒப்படைத்திருக்க வேண்டும்.

    என்னதான் இருந்தாலும் எச்சில் இலையில் புரள்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நீங்க எப்படி? இலையில் புரள்வதை ஆதரிக்கிறீர்களா?

    //அப்படிப்பட்டவர்கள் இச்லாத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்று நீங்களும் காவ்யாவும் சொன்னீர்கள். எப்படி போக முடியும் என்று கேட்டதற்கு மட்டும் இன்னும் பதில் இல்லையே!//

    இஸ்லாத்தில் சேரவோ வெளியேறவோ சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இல்லை. ஏக இறைவனை வணங்கி முகமது நபியை கடைசி தூதராக ஏற்றுக் கொண்ட அனைவரும் முஸ்லிம்கள். இதனை ஏற்காத அனைவரும் முஸ்லிம் அல்லாதவர். இது மதம் அல்ல. மார்க்கம்.

    ‘இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது’
    -குர்ஆன் 2:256

    1. Avatar
      தங்கமணி says:

      //இஸ்லாத்தில் சேரவோ வெளியேறவோ சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இல்லை. //
      திரும்பவும் பொய்கள்!
      வெளியேற சடங்குகள் இல்லை என்பது உண்மைதான். ஏனென்றால் வெளியேறியவனை தீர்த்து கட்டு என்றுதானே முகம்மது சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் உள்ளே வர சடங்கு இருக்கிறதே. கலிமா சொன்னால்தானே இஸ்லாமியனாக ஆகிறார் ஒரு மனிதர்.

    2. Avatar
      தங்கமணி says:

      //பரவாயில்லையே! அப்போ நம்ம கிராமங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் பூணூல் போட்டு அழகு பார்க்கலாமே! சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சியுங்களேன். அப்படியே அவர்களை அர்ச்சகர்களாகவும் ஆக்கி விட்டால் தீர்ந்தது பிரச்னை. ஜெயேந்திரரிடம் பேசி ஆவண செய்யுங்கள்//

      மீண்டும் இந்துமதத்தை பற்றி தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறீர்கள் என்று தெளிவு படுத்துகிறீர்கள்.
      தலித்துகள் பூணூல் போட்டால் அதனை தடுக்க இந்தியாவில் சட்டம் ஏதும் இல்லை. தலித்துகளில் சுவாமி சகஜானந்தர் போன்று ஏராளமான ஆன்மீக துறவிகள் இருந்திருக்கிறார்கள். அஹமதியாக்கள் தங்கள் மசூதியை மசூதி என்று சொல்லக்கூடாது என்று நீங்கள் சட்டம் போட்டு தடுத்துகொண்டிருப்பதை போல இந்து மதத்தில் இன்று எந்த சட்டமும் இல்லை.

      தலித்துகளே கோவில் கட்டிகொள்ளவோ, அதன் பூசாரிகளாக தலித்துகள் தங்களை நியமித்துகொள்ளவோ எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு இன்று இல்லாதது செல்வம் மட்டுமே. அவர்களுக்கு செல்வம் நிறையும்போது அவர்களது கோவில்களும் பிரம்மாண்டமாக எழும்.

      இன்று அரசாங்கத்தில் பிரச்னையில் இருப்பவை பாரம்பரிய உரிமை கொண்ட கோவில்கள். ஒரு சில குடும்பங்கள், பிரிவுகளே அவற்றின் பூசாரிகளாகவோ, அர்ச்சகர்களாகவோ முடியும் என்று வழமுறை இருக்கிறது. அதனை எதிர்த்து தமிழக அரசு கோர்ட்டுக்கு சென்றிருக்கிறது. அது உச்ச நீதிமன்றங்களில் தோற்றிருக்கிறது. ஏனெனில் பாரம்பரியம், வழமுறை ஆகியவற்றுக்கு இந்திய அரசாங்கம் பாதுகாப்பளிக்கிறது. அதே காரணத்தால்தான் டெல்லி ஜூம்மா மசூதி புகாரியிடம் இருக்கிறது.

  81. Avatar
    Rama says:

    Mr Thangamani, you are wasting your time.Waiting for proper and APPROPRIATE answers from the likes of SP is like waiting for our diminutive PM MM to speak out against the Italian Mafiosi!

    1. Avatar
      Kavya says:

      Mr Thangkamani,

      தலித்துக்கள் அவர்களிருப்பிடங்களில் கோயில்கள் கட்டிக்கொள்ள உங்களிடம் அனுமதி பெறவேண்டுமென்பது போலவும், நீங்கள் தாராளமனப்பான்மை கொண்டு அனுமதி தேவையில்லையென்று எழுதுகிறீர்கள்.

      அவர்கள் கோயிலைக்கட்டிக்கொள்ள எவர் அனுமதியும் தேவையில்லை. பிரச்சினை அவர்கள் கோயில்களில் இல்லை. மற்ற ஜாதிக்காரர்கள் கட்டிய கோயில்களிலும் இல்லை. நீங்கள் கட்டச்சொன்ன கோயில்களில்தான். நான் ஏற்கனவே சொன்னது போல, நீங்கள் கட்டி எல்லாரையும் அழைத்து, தலித்தை மட்டும் உள்ளே நுழையவிடாமல் தடுத்தது உண்மையா பொய்யா? 1947 சுதந்திரத்துக்குப்பின் தானே ஆலயப்பிரவேசம் நடத்தினார் வைத்தியநாதர்! உண்மையா பொய்யா? அம்மக்களை ஏன் தடுத்தீர்கள்? சொல்லுங்கள்.

      ‘பாரம்பரிய உரிமைக் கோயில்கள்’ எவை? நைசாகப்பேசுவதாக நினைப்பா? அக்கோயில்கள் எவரின் பாரம்பரிய உரிமைகள்? மதுரை மீனாட்சியும், சிரிரங்கநாதரும், கபாலீசுவரரும் எவரின் பாரம்பரிய உரிமைகள்?

      பிறப்பிலே ஜாதியுண்டு என்றுதானே பார்ப்பனர்கள் அர்ச்சகர்கள் ஆகிறார்கள்? அதற்கு ஆகம விதிகளைக்காட்டிக்கொண்டுதானே சமாளிக்கிறீர்கள்? உண்மையா பொய்யா?

      தலித்து ஏன் பூணூல் போட்டு பிராமணானன பின் அர்ச்சகராக வேண்டும் அவர்கள் கோயில்களிலேயே? தேச‌முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் அவ‌ர்க‌ள் கோயில். அங்கிருன்த‌ பூஜாரிப்பையன் பூணுல் போட‌வில்லை த‌லித்தான‌தால். அவ‌னைக்கூப்பிட்டு, பூனூல் போட்டு பிராம‌ணாக்குகிறேன் அப்போதுதான் உன‌க்குப் பூஜாரியாக‌ த‌குதி வ‌ருமென்று சொன்ன‌வ‌ர் ஆர்?

      மற்றவர் பொய்கள் புனைகிறாரென்று சொல்லிக்கொண்டே நீங்கள் உண்மைகளை நைசாக மறைக்கிறீர்கள். இந்து சமூகத்துக்கு எதிராக என்று எழுதுகிறீர்கள். அந்த சமூகம் நீங்களும் உங்கள் ஜாதியும் மட்டுமா? இந்து சமூகம் என்பது எது ? ஆரின் சார்ப்பாக நீங்கள் சொல்கிறீர்கள்? எழுதுகிறீர்கள்? சுவனப்பிரியன் மேல் பாயும் நீங்கள் சுமிதா ‘எங்கள் ஜாதிக்கே உயர் குணங்கள் உண்டு என்றபோதும், மலர்மன்னன் குணவர்க்கங்கள் பார்ப்பனருக்கே என்றும் எழுதும்போதும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். நான் எதிர்த்தால் இந்து சமூகம் எதிர்க்கப்படுகிறதா அல்லது ஒரு ஜாதி எதிர்க்கப்படுகிறதா? இந்து சமூகம் என்று சொல்லும் நீங்கள் மலர்மன்னனை எதிர்க்காதது ஏன்? சாதிகள் உண்டென்றால் ஏற்றத்தாழ்வுகள் வரும். வந்தால் பாதிக்கப்பட்டோர் வேறு மதங்களுக்குத்தாவுவது சகஜம். இஃதெல்லாம் இந்து சமூகத்துக்குச் செய்யும் துரோஹமில்லையா? அப்போது உங்கள் கவலை எங்கே போனது?

      சுவனப்பிரியன் இந்துமதத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள் எதுவும் புதுமையாந்தன்று. அவை திராவிடக்கட்சிகளினதுமல்ல. பன்னெடுங்காலமாக பலரால் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்தவைதான். அவர்களெல்லாரும் இந்துசமூகத்து துரோஹிகள். எங்கள் எச்சில் உருண்டு புரண்டால் புண்ணியம் என்று சொல்லும் பிராமணர் என வேடமிட்டலைவோர் இந்துசமூகத்து துரோஹிகள் அல்லவே அல்ல.

      மேக்ப‌த் நாட‌க‌த்தில் முத‌ற்காட்சியிலேயே மூன்று பிசாசுக‌ள் இப்ப‌டிச்சொல்லி ஆடும்:

      Fair is foul. Four is fair.

      திண்ணையில் இதுதான் ந‌ட‌க்கிற‌து. பேயாட்ட‌ம்.

      1. Avatar
        தங்கமணி says:

        காவ்யா,

        இஸ்லாமை விமர்சிப்பவர்கள் தலித் விரோதிகள் என்பது போல மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயற்சிக்காதீர்கள்.

        //அவர்கள் கோயிலைக்கட்டிக்கொள்ள எவர் அனுமதியும் தேவையில்லை.//
        அதனைத்தான் நானும் சொல்கிறேன்.
        //1947 சுதந்திரத்துக்குப்பின் தானே ஆலயப்பிரவேசம் நடத்தினார் வைத்தியநாதர்! உண்மையா பொய்யா? அம்மக்களை ஏன் தடுத்தீர்கள்? சொல்லுங்கள்.
        //
        நானா தடுத்தேன். என்னை ஏன் வைத்தியநாதர் போன்றவர் பக்கம் வைத்து பார்க்கக்கூடாது? என்னை ஏன் தடுத்தவர்கள் பக்கம் வைத்து பார்க்கிறீர்கள்? மீண்டும் தலித் விரோதி என்று ஒருவருக்கு பட்டம் கட்டும் முயற்சி

        //தலித்து ஏன் பூணூல் போட்டு பிராமணானன பின் அர்ச்சகராக வேண்டும் அவர்கள் கோயில்களிலேயே? //
        தேவையே இல்லை. திருச்சிக்கு பக்கத்தில் ஒரு முஸ்லீம் பெண்மணி மாரியம்மனுக்கு கோவில் கட்டி பூசாரியாக இருக்கிறார். அந்த கோவிலுக்கு இந்துக்கள் சந்தோஷமாக போய் வருகிறார்கள். சுன்னி முஸ்லீம்கள் அஹ்மதியா பிரிவினரை முஸ்லீம் அல்ல என்று சொல்லி அவரது மசூதிகளை இடிப்பது போல, யாரும் அவரை “நீ இந்து அல்ல. நீ எப்படி கோவில் கட்டலாம்” என்று கேட்கவில்லை.

        / சுமிதா ‘எங்கள் ஜாதிக்கே உயர் குணங்கள் உண்டு என்றபோதும், மலர்மன்னன் குணவர்க்கங்கள் பார்ப்பனருக்கே என்றும் எழுதும்போதும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.//
        அப்படி எழுதியிருந்தால் அது மடத்தனம்.
        //சுவனப்பிரியன் இந்துமதத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள் எதுவும் புதுமையாந்தன்று. அவை திராவிடக்கட்சிகளினதுமல்ல.//
        அந்த விமர்சனங்கள் இந்து சமூகத்தை இடித்துரைக்கின்றன. அது நல்லது. அதே போல இஸ்லாம் மீது வைக்கும் விமர்சனங்கள் இன்றைய புதுமையானவை. இணையமே இந்த விமர்சனத்தை சாத்தியமாக்கியிருக்கிறது.

  82. Avatar
    paandiyan says:

    suvanappiriyan — what is your concern here. why you mroe worry about Bhramin rather than hindus? as usual you people are nicely doing split concept within hindus. you should be ashamed by doing this. you are not a real muslim. kasukku aall poudikkum koolikara muslim.

  83. Avatar
    பூவண்ணன் says:

    தங்கமணி அண்ணே
    அது எப்படி அண்ணே பல கோடி மக்கள் இந்துவாக இருந்தும் ரிஷிமூலத்தை மறந்து விட்டார்கள்.
    கோத்திரம் என்று மூலத்தை வெளிப்படுத்தும் ஒன்று எல்லாருக்கும் இருக்குது.
    ஜ்ஹர்க்ஹாந்து மாநில பழங்குடிகள் கோத்திரம்,சாட் இனத்தவருக்கு கோத்திரம்,குஜ்ஜர் இனத்தவருக்கு கோத்திரம் எல்லாம் இன்றும் இருக்கிறது .அந்த கோத்திரங்களுக்கும் பழங்குடியினரின் குடும்ப பெயர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .குஜ்ஜரின் கோத்திரத்துக்கும் அருந்ததியருக்கும்
    ,முதலியாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா.ஆனால் ராஜச்தானை சார்ந்த பிராமணனுக்கும் கன்யாகுமரியை சார்ந்தவருக்கும் அதே கோத்திரம் இருக்கிறதே
    சோரேன் மீன் கோத்திரதொடு இப்போது ஊட்டியில் அல்லது டார்ஜீலிங்கில் மக்கள் இருந்தால் அவர்கள் இங்கிருந்து அங்கோ,அல்லது அங்கிருந்து இங்கோ புலம் பெய்ரந்தவர்கள் என்று எண்ணுவது தவறா .அதே தானே சப்த ரிஷி கோத்திரங்களுக்கு
    குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தானே சப்த ரிஷிகள் கோத்திரம்.அவர்கள் இடம் பெயராமல் எப்படி இந்தியா முழுவதும் பரவினர்
    தமிழன் மலேசியா ,பர்மா சென்றான்,வெள்ளைகாரனால் தென்ன்னாப்ப்ரிகா,ஜமைகா ,பிஜி என பல தேசங்களுக்கு அழைத்து செல்லப்பட்டான் .அங்கு தமிழ் பேசுபவர்கள் இருந்தனர்,இருக்கின்றனர்.
    ஆனால் வடமொழி பேசுபவர் ,அதில் புலமை பெற்றவர் இந்தியா (மத்திய கிழக்கு நாடுகள் ஆப்காஅநிச்டான் முதல் கடல் எல்லைகள் வரை)முழுவதும் சுயம்பாக முளைத்தனர் என்று நம்புவது நகைச்சுவை
    இப்போது அந்தமானில் இருக்கும் பழங்குடிகளுக்கு,வடகிழக்கில் வாழும் பழங்குடிகளுக்கு வட மொழி வேதங்கள் ,தெரியுமா .ரிஷிமூலம் கொண்டவர்கள் சென்றிருந்தால் தெரியும்.இங்கு அவர்கள் வந்ததால் தெரிகிறது
    கேரளாவை சேர்ந்த ஏன் நண்பன் பெயரோடு அவர்கள் வீட்டு பெயர் உண்டு. தமிழகத்தில் எங்களோடு வேலை செய்த தோழியின் கணவர் பெயரிலும் அதே வீட்டு பெயர் .இருவரும் கடந்த தலைமுறைகளை ஞாபகபடுத்தி பார்த்தால் தொடர்பு ஏதும் இல்லை .அதற்கு முன்பான தொடர்பின் காரணமாக அதே பெயர் தொடர்ந்து வருகிறது

    1. Avatar
      தங்கமணி says:

      நல்ல கேள்விதான். ஆனால், 1000 வருடங்களாக இந்தியாவில் முஸ்லீம் அரசர்களும், பிரிட்டிஷ் ஆட்சியும் இருந்திருக்கிறது, பெரும் போராட்டத்தின் மத்தியில் இந்து சமூகம் நின்றிருக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று கருதுகிறேன். பெரும் மக்கள் தொகை இடம் விட்டு இடம் பெயர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி இந்துவரை சிந்து நதி பக்கம்ஓடி வந்தார்கள். பிறகு அங்கிருந்தும் ஓடி இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த கொடிய வரலாற்றில் நிகழ்வுகளை அங்கும் இங்கும் பிய்த்து, அதில் ஏன் அது இல்லை, இதில் ஏன் இது இல்லை என்று இந்து சமூகத்தை கேவலப்படுத்த ஒரு கும்பலே கிளம்பியிருக்கிறது. ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வேலை செய்கிறீர்கள். செய்யுங்கள்.

    2. Avatar
      vedamgopal says:

      எந்த கோத்திரம் எந்த வேதத்தை எந்த சாகையை எந்த சூத்திரத்தை பின்பற்றுகிறார்கள் என்று வரிசையில் வரும். சூத்திரத்தை எழுதியவர்களில் நாலாம் வர்ணத்தவரும் உண்டு. கலியின் ஆரம்பத்திலேயே பலர் கோத்திர பரம்பரையையும் வர்ணாசிரம தர்மத்தையும் தொலைத்து விட்டார்கள். 5000 ஆண்டுகள் கழித்து எனக்கு கோத்திரம் தெரியவில்லை என்றால் அது காலத்தின் கோலம். கட்டுபாடு குலைந்தால் எல்லாமுமே காணாமல் போகும்

      1. Avatar
        பூவண்ணன் says:

        கோபால் சார்
        அந்தமானில் இருக்கும் பழங்குடிகள்,வட கிழக்கில் இருக்கும் பழங்குடிகள் அனைவருக்கும் பாரத்வாஜ ,காஷ்யப கோத்திரம் இருந்தது.மறந்து விட்டார்கள் என்று கூறுகிறீர்களா
        இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக இல்லை

        க்ஷத்ரியர்களுக்கு கோத்திரம் ,வம்சம் உண்டு.விச்வகர்மாக்களுக்கு வேறு முனிகள் பேரில் கோத்திரம் உண்டு
        ஜ்ஹர்க்ஹாந்து பழன்குகிகளுக்கு மீன்,பன்றி ,புலி என பல ஆண்டுகளாக வரும் கோத்திரம் உண்டு

        குஜ்ஜார்களின் கோத்திரத்திற்கும் பள்ளி,பள்ளர்களுக்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா

        ஆனால் காஷ்மீரை சார்ந்த பிராமணருக்கும் கன்யாகுமரியை சார்ந்த பிராமணருக்கும் ஒரே கோத்திரம் இருப்பது எதை காட்டுகிறது

        இருவரும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றவர்கள் என்பதை தானே.இங்கிருந்து அங்கு சென்றார்களா அல்லது அங்கிருந்து இங்கு வந்தார்களா என்ற வாதத்தை பிறகு வைத்து கொள்வோம்
        அரக்கபரம்பில் ஜோசப் என்று அமெரிக்காவில் இருப்பவரும் கேரளாவில் இருக்கும் அரக்கபரம்பில் அந்தோனியும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்வது தவறா.ஜோசெபின் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தது என்பதில் தவறு உள்ளதா

  84. Avatar
    அ-அர்வி says:

    ‘இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது’
    -குர்ஆன் 2:256

    Suvanappiriyan is lying (or it might have been mohammed who lied through his teeth). See this statement by a mouslem cleric:

    “NRK, a Norwegian broadcaster, showed a clip in which Bukhari stated: “If a person doesn’t fast during Ramadan, he is mocking Islam. And if the person is in a Muslim state, the authorities must behead him.”

    http://www.ibtimes.com/articles/377249/20120824/norway-threat-911-ansar-al-sunna-muslim.htm

    In all islamic societies there is compulsion. Women are compelled to wear hijab. Men, Women and Children are compelled to observe fast. Non mouslems are compelled to follow islam….. the list is endless.

    Here, suvanappiriyan quotes a verse which directly contradicts the happenings in their societies.

  85. Avatar
    பூவண்ணன் says:

    தங்கமணி அண்ணே
    சீக்கிய மதம் இந்து மதத்தில் ஒரு பிரிவு தான்,இந்திய மதம்னு பெருமைபடுற குழுவாச்சே நீங்க
    அவங்க செய்த கொலைகளை பட்டியல் போடவா
    சீக்கிய தீவிரவாதத்தை நீங்கள் மன்னித்து ,மறந்து மறைப்பதன் காரணம் என்ன
    அமெரிக்கா,கனடாவில் வாழும் சீக்கியர் தான் பெருமளவில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்தது,உலகளவில் காலிஸ்தான் பிரட்சினைகளை பரப்பியது.
    பேருந்தில் இருந்து சீக்கியரை இறக்கி விட்டு விட்டு மொத்த ஹிந்துக்களையும் சுட்டு கொன்றதை எல்லாம் மறந்து மன்னித்து விட்டீர்களே
    பஞ்சாபில் பல மாவட்டங்களில் பஞ்சாபி ஹிந்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததை கூட கண்டும் காணாமல் விடும் நல்ல குணம்
    இஸ்லாமியரை பார்க்கும் போது மறைவது ஏன்
    இன்று வரை இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகளுக்கு பலியான மக்களின் எண்ணிகையை விட பல மடங்கு அதிகம் சீக்கிய தீவிரவாதிகளின் கொலைகளால் இறந்த மக்களின் எண்ணிக்கை

    இருவது ஆண்டுகளுக்கு முன் டெல்லிக்கு சென்றிருக்கிறீர்களா
    ஹோட்டல்கள் ஏழரைக்கு மூடப்படும்.மேல ஒரு மணி நேரம் எட்டரை வரை இருக்க கட்டணம் நூறு ரூபாய் வசூலிப்பர்.தீவிரவாதிகளின் பயம் காரணமாக எட்டரைக்கு அனைத்து கடைகள்,உணவகங்கள் மூடப்படும்.மதுவிலக்கு இருக்கும் குஜராத்,மணிப்பூர் மாநிலங்களில் கூட இரவில் மது கிடைத்து விடும்.ஆனால் டெல்லியில் வாய்ப்பே இல்லை.கஷ்டப்படவனுக்கு தான் தெரியும் அப்ப இருந்த டெல்லியின் நிலை .இப்ப கூட கனடாவில் காலிஸ்தான் ஆதரவாக விளையாட்டு போட்டிகளின் போது கொடிகள் தென்பட்டது
    சீக்கியர் மேல இவ்வளவு பரிவு காட்டற நீங்க இஸ்லாமியர் மேல எங்க குரோதமா இருக்கிறீங்க

    http://www.indianexpress.com/news/dont-allow-antiindia-activities-in-canada/639440/

    It also comes close on the heels of the 25th anniversary of the bombing of Air India plane ‘Kanishka’ in 1985 which claimed the lives of 329 people in which some Khalistani extremists living in Canada were believed to be involved.

    1. Avatar
      தங்கமணி says:

      //இன்று வரை இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகளுக்கு பலியான மக்களின் எண்ணிகையை விட பல மடங்கு அதிகம் சீக்கிய தீவிரவாதிகளின் கொலைகளால் இறந்த மக்களின் எண்ணிக்கை //
      அப்படியா? ஆதாரத்துடன் பேசுகிறீர்களா அல்லது வழக்கம்போல அள்ளிவிடுகிறீர்களா?
      இந்துக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து உருவான வாளாக எழுந்த சீக்கிய பிரிவை இந்துக்கள் மீதே திருப்பி விட்ட பாகிஸ்தான் ராணுவ அமைப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது.
      அதற்கென்ன இப்போது?

  86. Avatar
    Kavya says:

    ஏன் தலித்துக்கள் கோயிலலுக்குள் அனுமதிக்கப்படவில்லை? ஏன் தீண்டாமை? ஏன் தலித்து இளைஞர் ஒரு அம்மன் கோயில் பூஜாரியாக இருந்த போது பாரதியார் அவனை பூனூல் போட்டுப்பிராமணனாக்கினார்? பூனூல் போடாமல் பூஜை பண்ணமுடியாதா? ஏன் பிராமணன் மட்டும்தான் பூஜை பண்ணலாமென்கிறார் மலர்மன்னன்.தங்கமணி? வெர்ட்டிக்கல், ஹரிசான்டல் கதைகளெல்லாம் வேண்டாம்

  87. Avatar
    venkates says:

    wearing religious articles,sporting sacred thred,physical worship are not monitoring rules for hindus.hinduism does not want its devotees to show circus.hindu worship involves in three ways:MANA,MOLI,MEY.A mature devotee resorts to the first,he enjoys absolute freedom,not surrendering to any earthly dictation.why should sp recommend hindus to be bonded devotees?

  88. Avatar
    suvanappiriyan says:

    ஆத்தூர்: ஆத்தூர் தலைவாசல் அருகே ஏடிஎம் காவலாளியைத் தாக்கி விட்டு கொள்ளை அடித்ததாக வெங்கடேஸ்வரன் என்ற பாலிடெக்னிக் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=541860

    இன்றைய செய்தி தங்கமணி பார்வைக்கு….

    இதன் மூலம் நான் சொல்ல வருவது குற்ற செயலில் ஈடுபடுபவனுக்கு அவன் சார்நத மதத்தை அடையாளப்படுத்தக் கூடாது என்பதே. தவறு செய்பவர்களும், நல்லவர்களும் எல்லா மதங்களிலும் மார்க்கங்களிலும் கலந்தே உள்ளனர். இதை புரிந்து கொண்டு சிறந்த பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்தால் பல குற்றங்கள் குறையும்.

    —————————————————————

    கோவை குண்டு வெடிப்பில் ‘வெடிகுண்டு ஆயிஷா’ என்று 10 வருடங்களுக்கு முன் பரபரப்பாக செய்தியில் அடிபட்டவரை பலர் மறந்திருக்க முடியாது. வெடி குண்டை உடலில் கட்டிக் கொண்டு வீடு வீடாக வருவதாக நமது பத்திரிக்கைகள் கதை கட்டி காசு பார்த்தன. இவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இஸ்லாத்தை ஏற்றதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத அப்பாவி. 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது விடுதலையாகி உள்ளார். அவரது அனுபவங்களை கேளுங்கள். சாதாரண விசாரணை கைதியாக இத்தனை காலம் சிறையில் வைத்து விட்டு குற்றமற்றவர் என்று விடுதலையாக்கியுள்ளது அரசு தரப்பு. இழந்து போன இவரது கடந்த கால வாழ்வை திருப்பிக் கொடுப்பது யார்?

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2jZ3zy8mKL4

    எனது இந்திய நாட்டுக்கு எதிராக செயல்பட்டவன் முஸ்லிமாக இருந்தாலும் அவனை தூக்கிலும் போடுங்கள். அதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்கும் போக்கை இனியாவது கை விடுங்கள். தற்போது நமது நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு இது மிக அவசிய தேவையாகிறது…..

  89. Avatar
    suvanappiriyan says:

    திரு அர்வி!

    //Suvanappiriyan is lying (or it might have been mohammed who lied through his teeth). See this statement by a mouslem cleric:
    “NRK, a Norwegian broadcaster, showed a clip in which Bukhari stated: “If a person doesn’t fast during Ramadan, he is mocking Islam. And if the person is in a Muslim state, the authorities must behead him.”//

    இங்கு யாரும் பொய் சொல்லவில்லை. உங்களின் புரிதலில்தான் குறைபாடு உள்ளது.

    இந்த வசனம் ”இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை – கட்டாயம் இல்லை” என்ற ஒரு கருத்தை மட்டும் சொல்லவில்லை. ”இது வழிகேடு” என்றும் ”இது நேர்வழி” என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிகேட்டிலிருப்பதும், நேர்வழிக்குத் திரும்புவதும் அவரவர் விருப்பத்திற்குட்பட்டது. இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இஸ்லாம் அவரை நிர்ப்பந்திக்காது – கட்டாயப்படுத்தாது – வற்புறுத்தாது.

    வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் ஒருவரை வற்புறுத்தி இஸ்லாத்திற்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை.

    வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது.

    ஒருவன் இஸ்லாத்தில் இருந்து கொண்டு எனக்கு வசதியான சட்டங்களை மாத்திரம் பின்பற்றுவேன் என்று சொல்ல முடியாது. ‘இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’ என்று முஸ்லிம்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான். விருப்பமில்லாதவர்கள் இந்த இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடலாம். அதனால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த சங்கடமும் இல்லை.

    எனவே நீங்கள் குறிப்பிட்ட வசனம் முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் இஸ்லாத்தை அரைகுறையாக பின் பற்றுபவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.

    1. Avatar
      தங்கமணி says:

      /“If a person doesn’t fast during Ramadan, he is mocking Islam. And if the person is in a Muslim state, the authorities must behead him.”//
      //
      //எனவே நீங்கள் குறிப்பிட்ட வசனம் முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் இஸ்லாத்தை அரைகுறையாக பின் பற்றுபவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.//
      ரம்ஜான் சமயத்தில் மாற்று மதத்தவர் சாப்பிட்டால், தலையை எடுப்பீர்களா?
      இது மனித உரிமைக்குரலா?
      இது போன்றவை காவ்யாக்களுக்கோ, பூவண்ணன்களுக்கோ உறுத்தல் தருவதில்லை!

      1. Avatar
        பூவண்ணன் says:

        திரு டோண்டு அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

        இஸ்லாம் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் காஷ்மீர் .அங்கு இஸ்லாமியர் பிராமண சாதி பெயர்களுடன் உலா வருவார்கள்.முடி வெட்டுபவர்,பழங்குடியினர் அனைவரும் அவரவர் சாதி பெயரோடு அதே சாதியில் தான் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்வார்கள்.பழங்குடியினர் உண்மையான இஸ்லாமியர் அல்ல என்றும் கீலாநிக்கள் கூவுவார்கள்.
        மதத்தின் பெயரால் பிரிந்த பாகிஸ்தான் மொழியினால் இருவதியிந்து ஆண்டுகளுக்குள் துண்டானது எதை காட்டுகிறது.மதமும் சாதியும் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.மதம் மாறுவதால் சாதி அழியாது.புது மதம் வந்தால் சில,பல சாதிகள் ஒன்றாகி வலுவாக்கி கொள்ள கூடும்.
        எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது தனித்துவம் வாய்ந்த பழக்கங்கள்,பெருமைகள் இல்லாத சாதிகளிடம் சாதிபிரிவினை குறைந்து அல்லது அழிந்து விடும்.அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.
        கர்நாடகவிற்க்கு நானூறு ஆண்டுகள் முன் சென்ற அய்யங்கார்களோ அல்லது ஒரிஸ்ஸா எல்லையில் வாழும் பிராமணர்களோ பல நூற்றாண்டுகளாக அதே சாதியாக தான் உள்ளார்கள்.ஆனால் மற்ற சாதிகள் அங்குள்ள சாதிகளோடு ஐக்கியமாகி விடும்.
        நாயர்,எழவ சாதிகளோடு ஐக்கியமான தமிழ் சாதிகள் பல.அதே போல் தெலுங்கு பேசும் மக்களோடு புலன் பெயர்ந்து சென்றதால் தெலுகு சாதியில் ஐக்கியமான தமிழ் சாதிகள் பல உண்டு.
        தனித்து காட்டும் பழக்க வழக்கங்கள்,அதில் கொள்ளும் பெருமை தான் சாதியை தக்க வைத்து கொள்கிறது.
        பர்மாவில் வாழ்ந்து அங்கேயே தங்கி விட்ட தமிழர்களோ ,வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கோ இரண்டு தலைமுறைகளுக்குள் அங்கே உள்ள குழுக்களோடு உறவுகள் ஏற்பட்டு அவர்களில் ஒருவராகி விடுவது தான் நடக்கிறது.
        பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்து தமிழகத்தை விட்டு பல நூறு,ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ தொடங்கியவர்களில்,அங்கேயே வீடு வாங்கி குடிபெய்ரந்தவர்களில் பிராமணர்களை தவிர்த்து மற்றவர்கள் சாதியை தொலைப்பது எளிது.

      2. Avatar
        பூவண்ணன் says:

        மற்றும் ஒரு பின்னூட்டம்.எந்த மதத்தையும் தூக்கி பிடிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை

        http://dondu.blogspot.in/2012/02/blog-post_13.html

        சாதி வலுவிழக்க மேற்கூறப்பட்டுள்ள அனைத்தையும் விட முக்கிய காரணம் பெண் விடுதலை,பெண் கல்வி,குடும்ப கட்டுபாட்டு முறைகளால் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மேல் குழந்தைகள் இல்லாத குடும்பங்கள் .இங்கே இஸ்லாம் அடிபட்டு போகிறது.ஹிந்துக்களில் சாதி மறைந்தாலும் இஸ்லாமியர் இடையே சாதி நீடிக்க கூடிய வாய்ப்பு இதனால் உண்டு.படித்து கணினி பொறியாளர்,கலெக்டர்,மருத்துவர்,ராணுவ போலீஸ் அதிகாரி ,விமான பணிப்பெண்,நடிகை யாரும் கண்ணை மூடி கொண்டு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணமுடித்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுடன் படித்த ,வேலை செய்பவர்களில் மனதுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
        சாதி,மதம் இரண்டும் ஆணாதிக்கத்தின் வேர்.பெண் விடுதலை அதை வெட்டாமல் அதன் இலக்கை அடைய முடியாது.பாலியல் தொழில் செய்யும் பெண்ணை கல்லால் அடிப்பதை காப்பாற்றும் நிறுத்தும் கடவுள்கள் தான் உண்டே தவிர பல பெண்களிடம் செல்லும்/திருமணம் செய்யும் ஆணை ஓரமாக நிற்க சொல்லும் மதமோ,சாதியோ ஒன்று கூட கிடையாது.அப்படி இருந்திருந்தால் அது அக்பரின் தீன் இல்லாஹி போல ஒரு தலைமுறை கூட தாண்டாது.
        கலெக்டர் ஆக,போலீஸ் ஆக,அரசியல்வாதியாக இருக்கும் ஆண் தன ஒரு மகளோ,இரு மகள்களோ தன்னை போல் ஆக வேண்டும் என்று தான் விரும்புகிறான்.ஐந்து ஆண் ஐந்து பெண் குழந்தைகள் இருந்த போது பெண்களை பள்ளியோடு நிறுத்தி திருமணம் செய்த முறை அடியோடு ஒழிந்து வருகிறது.இருக்கின்ற ஒரிரண்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்பது தவறு என்ற எண்ணமும் வலுப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களும் இப்போது அதிகம்.அந்த குழந்தைகளும் தன பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டுமானால் காதல் திருமணம் அவர்களுக்கு கை கொடுக்கும்.பெற்றோர் பார்த்து வைக்கும் ஒரே சாதி திருமணங்கள் பெற்றோருக்கு முழு டாடா காட்டி விட்டு செல்ல தான் செய்யும்.
        திருமண முறையின் புதிய மாற்றங்களான ஒத்த வயது உள்ளவர்களிடையே(நான்கு,ஐந்து வயது வித்தியாசங்களுக்கு மேல் இப்போது பெற்றோர் பார்த்து சொன்னாலும் எந்த பெண்ணும் ஒத்து கொள்வதில்லை) மணமுடிக்கும் பழக்கமும்,வயதானாலும் பரவாயில்லை,படித்து வேலை கிடைத்த பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்,இருவரும் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையும் சாதிக்கு சாவுமணி அடித்து விடும்.போலீசோ,விமான பணிப்பென்னோ கோவிலில் வேலை செய்பவரை திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.அதே வேலை /அதோடு சம்பந்தப்பட்ட வேலை /அவளோடு பணிபுரிபவரை திருமணம் செய்தால் தான் நல்லது,புரிந்து கொண்டு வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம் என்று நினைப்பார்கள்.
        ஒத்த வயது,படிப்பு,வேலை என்று வரும் போது இருபாலருக்கும் அதே சாதியில் துணை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.பெண் குழந்தை சுமை என்று எண்ணியதால் குறைந்த பெண்களின் சதவீதமும் ஒரு காரணம்.

  90. Avatar
    suvanappiriyan says:

    திரு பாண்டியன்!

    //suvanappiriyan — what is your concern here. why you mroe worry about Bhramin rather than hindus? as usual you people are nicely doing split concept within hindus. you should be ashamed by doing this. you are not a real muslim. kasukku aall poudikkum koolikara muslim.//

    இந்த வர்ணாசிரம அநீதியை எதிர்த்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதற்கு முழு காரணமானவர்கள் பார்ப்பனர்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? அதை சொன்னால் உங்களுக்கு ஏன் மூக்கில் வியர்க்கிறது?

    இனி வரும் காலங்களிலாவது மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுக்கு எல்லோரும் வர வேண்டும் என்பதே என் அவா.

    எனக்கு கௌரமான வேலை இருக்கிறது. பணத்துக்காக ஆள் பிடித்து கொடுக்கும் அளவுக்கு நான் வறுமையிலும் இல்லை. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

    1. Avatar
      தங்கமணி says:

      சுவனப்பிரியன்
      //இந்த வர்ணாசிரம அநீதியை எதிர்த்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்//

      வாய்ப்பே இல்லை.

      இது இந்தகால முஸ்லீம் பிரச்சாரம். சற்றே 100 வருடங்களுக்கு முன்னால் கூட இப்படி ஒரு முஸ்லீமும் பேசியதில்லை.

      உங்களது முன்னோர்கள் நிச்சயமாக வர்ணாசிரமத்தை எதிர்த்து இஸ்லாமுக்கு போகவே இல்லை.
      அதற்காகத்தான் மதம் மாறினார்கள் என்று வரலாற்று ரீதியாக ஆதாரம் காட்டமுடியுமா?
      20ஆம் நூற்றாண்டு பாண்டே வேண்டாம். 7 ஆம் நூற்றாண்டு ஆவணம் வேண்டும்.
      தாருங்கள் பிறகு பேசலாம்.
      ஆனால், உங்கள் மூதாதையர்கள் அரபியர்கள், இங்கே பாண்டியர்களிடமும் சேரர்களிடமும் சேவகம் செய்தவர்கள் என்பதற்கு ஆதாரம் நான் தருகிறேன்.

      முதலில் நீங்கள் ஆதாரம் தாருங்கள்.

    2. Avatar
      paandiyan says:

      now we have proved here that ISLAM also doing lot of caste politics and people in muslim doing violence around the world based on ISLAM and you also coverted not becuase of ISLAM but few reason in Hindu relegion so what you will do in the future. convert again …..do you still feel that coverted to ISLAM is biggest mistake you people done..

    3. Avatar
      paandiyan says:

      during MGR Period, one of the village in Madurai District (earlier only one district was there..), few groups are converted into muslim — do you know?? how many bhramin were lived or living now in that village??? what was the reason for them to convert??? dont tell lie.

  91. Avatar
    suvanappiriyan says:

    திரு பாண்டியன்!

    //as usual you people are nicely doing split concept within hindus.//

    ஆரிய திராவிட பிரச்னை என்பது இன்று தோன்றியதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருவது. மதுரைக்கு பக்கத்தில் கல் வெட்டு ஆதாரத்தோடு 12 ஆம் நூற்றாண்டில் பிராமணர்களுக்கு எதிராக தமிழர்கள் சங்கம் வைத்து போராடிய நிகழ்வை கீழே தருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே இதில் இஸ்லாமியர்களின் பங்கு ஒன்றும் இல்லை.

    மதுரை – பழங்காநத்தம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் பைபாஸ் மேம்பாலத்திலிருந்து இடது புறமாக சிறிது,பெரிதுமான வீதிகளை கடந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தொலைவில் வருகிறது மாடக்குளம் கண்மாய்.கண்மாய் கரையோரத்தில் ஸ்ரீஈடாடிஅய்யனார் கோவில், கோவிலையொட்டிய பாதையில் கண்மாயின் உட்புறமாக சென்றால் சமீபத்தில் பெய்த மலையால் பசுமையான கண்மாயில் 3அடி உயரத்தில் கல் ஒன்று தெரிகிறது. கண்மாயில் நீர்நிறைந்திருக்கும் போது முழ்கிவிடுவதால் அந்த கல்லில் உள்ள எழுத்துக்கள் சற்று தெளிவாக இல்லை. அந்த கல்லை சுத்தபடுத்திய பிறகு,கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் அந்த கல்லின் வரலாற்றை பேச துவங்கிய போது பிரமிப்பாகதான் இருந்தது. அந்த கல் 12அல்லது 13 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறினார். ”மாடக்குளத்தின் கீழ் மதுரை” என பழந்தழிழ் இலக்கியங்கள் சொல்லும் அளவுக்கு மாடக்குளம் என்ற கிராமம் பெயர்பெற்றிருந்தது .அந்த கல்லின் வரலாறு மிக முக்கியமானது என்கிறார் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம். 12ம் நூற்றாண்டில் அரசர்கள்,பார்பனர்களுக்கு எதிராக விவயாயிகளும், வணிகர்களும் ஒன்று திரண்டு சங்கம் வைத்திருந்தாகவும், அப்போது விவசாயிகளுக்கு உதவியாக மாடக்குளம் கண்மாயை தூர்வாரி,புணரமைத்து கொடுத்தற்காக நிறுவப்பட்ட கல்தான் தேவடியாகல். சாந்தலிங்கம் நடுகல் என்று மட்டுமே சொன்னார், நண்பர் ஒருவர் அந்த கல்லுக்கு தேவிடியாகல் என்று பெயர் இருப்தை சொன்ன போது நம்ப முடியவில்லை.ஆனால் அப்பகுதி விவசாயி ஒருவரை விசாரித்த போது உண்மைதான் என்பதை உணரமுடிந்தது.அதற்கான காரணம் அவருக்கு தெரியவில்லை, தன்து பாட்டன் காலத¢திலிருந்து அப்பெயர் இருப்பதாக சொல்கிறார். அந்த கல்லுக்கு சற்று தொலைவில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த சற்று உயரமான இரட்டைக் கல் காணப்படுகிறது. அதற்கு குத்துக்கல் என்று அழைக்கிறார்கள். கண்மாயின் நீர்மட்டம் அறிவதற்காக நடுப்பட்டகல் அது.

    http://indrayavanam.blogspot.com/2012/09/blog-post.html

  92. Avatar
    vedamgopal says:

    A comment by Mr.Govindan in Vijayavani site

    Enough records are available to prove that atrocities against the so-called Sudhras started by Muslims. Irrespective of any cast ( Bhramins, kshatriyas, Vysas and Sudras), those who refused to convert were either killed or forced to do menial jobs, like stitching chappals, which were worn by muslims(Hindus usually walked barefoot or the wel-off one donned only wooden sandals). Some of them were made to carry human excreta on their head. The Muslim ‘jenanas’ were ‘protected’ and were never allowed to venture out into the open to answer natures calls, unlike the Hindu women who always used the open space outside in those days. So we can infer that carrying the human excreta was started during the Mughal period, and became more prevalent during the British rule.
    Those Sudras who were carrying human excreta is considered untouchable because they were doing the most dirtiest job in the world. It is Muslims and British who are responsible for the plight of the scavengers and other menials. The British constructed service toilets in their colonies and used Indians to carry human excreta. Despite the fact that Septic tank was invented in France in 1860, the British made no effort to convert the service toilets to septic tank. This conversion work started only after Independence(Transfer of Power) in 1947. Full details can be obtained from the book “Present Dalit (Scavengers).

    Those who are talking about atrocities against Sudras are not able to give the number of cases which took place in the past. Is the number of people affected in India due to the so-called caste system more than during the atrocious slavery in America ,Witch hunt in Europe and Bolshevik revolution ? People talking against Hinduism will never compare and talk of the atrocities committed by Christians, Muslims and Communists in Europe and other countries where Christians and Muslims are in majority.

  93. Avatar
    paandiyan says:

    ஆரிய திராவிட பிரச்னை — have given enough explanation that these are biggest flase info. if you are paste some junk info here and want to proff whatever you say true then no point to argue.. better happily do all and mimimum brain activity. dont read whatever we say and try to understand other part of world…

  94. Avatar
    சீனு says:

    /////
    //3 lakh kashmiri pundits have been mercilessly driven out of Jammu & they live in camps in delhi.//
    அவர்கள் காஷ்மீரில் இருந்ததை விட சகல சௌகரியங்களோடு வாழ்ந்து வருகின்றனர் அரசு உதவியோடு. எனவே தான் நிலைமை சீராகியும் அங்கு செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. ஆனால் அவர்கள் திரும்பவும் அங்கு குடியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    /////

    அப்ப இங்க இருக்குற முஸ்லீம்களையும் சகல வசதிகளோடு பாகிஸ்தான் அனுப்பிடலாம். நிறைய பிரச்சினை தீரும்.

    இந்த அளவு கேவலமாக பேச முடியாது, சுபி-யை தவிற.

    //ஜின்னா ஷியா பிரிவை சேர்ந்ததனால்தான் ராஜாஜி ஜின்னாவோடு கை கோர்த்துக் கொண்டு இந்தியாவை துண்டாட முயற்சித்தாரோ. பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்திய பிரிவினைக்கு எதிராகவே இருந்தனர். எனவே தான் எல்லையில் இருந்த மாகாணங்கள் மட்டுமே பாகிஸ்தான் ஆனது. ஜின்னா கூப்பிட்டும் தேசப் பற்றின் காரணமாக இங்குள்ள எங்களின் முன்னோர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்.//

    அடிச்சாரு பாரு அந்தர் பல்டி.

    //உடுத்தும் வேட்டியும் நாம் பிறந்த நாடும் ஒன்றுதானா உங்கள் பார்வையில். சகோதரர்களிடம் ஏதேனும் தகராறு வந்தால் அதனை சமரசமாக தீர்த்து வைப்பதுதான் நல்லோர்களின் செயல். அதை விடுத்து சிறிய சண்டையை தூபம் போட்டு வளர்த்து விட்டு பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை உருவாக்கி இன்று வரை நமது நாட்டுக்கு தலைவலியை உண்டாக்கியதில் ராஜாஜிக்கும் முக்கிய பங்குண்டு. ஜின்னா பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார்.//

    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

    //அதாவது நீங்கள் மக்காவுக்கு செல்லலாம். அல்லாவை வணங்கிக கொள்ளலாம். அதோடு முருகனையும் வணங்க வெண்டும். பிள்ளையாரையும் வணங்க வேண்டும். கன்னி மேரியையும் வணங்கிக் கொள்ள வேண்டும். பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேர் இழுக்க வேண்டும். நாகூர் தர்ஹாவையும் கொண்டாட வேண்டும். திருமண சட்டங்கள் ஒன்றாக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்த சாதியாக இருப்போம். முஸ்லிம்களாகிய நீங்கள் நாடார், தேவர், கிறித்தவர், சீக்கியர் போன்று அடுத்த சாதியில் வர வேண்டும். இவற்றை எல்லாம் முஸ்லிம்கள் ஒத்துக் கொண்டால் இந்துத்வாவாதிகளான எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ இதுதானே நீங்கள் வைக்கும் பொது சிவில் சட்டம்.//

    மறை கழன்று விட்டது. இதுக்கு மேல் படிக்கவே விரும்பவில்லை.

  95. Avatar
    suvanappiriyan says:

    //ரம்ஜான் சமயத்தில் மாற்று மதத்தவர் சாப்பிட்டால், தலையை எடுப்பீர்களா?
    இது மனித உரிமைக்குரலா?//

    அப்படி எந்த வசனம் எந்த நபிமொழி சொல்கிறது என்று ஆதாரத்தோடு சொல்லுங்கள்.

    தனி மனிதனாக ஒரு இஸ்லாமியனே அவ்வாறு சொல்லியிருந்தாலும் அவன் இஸ்லாத்தின் மற்றும் மனித குலத்தின் விரோதியே!

    1. Avatar
      தங்கமணி says:

      உங்களுக்கு நீங்கள் எழுதியதை விளக்குவதே எனக்கு பெரிய வேலையாக இருக்கிறது.
      http://puthu.thinnai.com/?p=13832#comment-9039

      இது ஆர்வி கொடுத்த மேற்கோள்
      /“If a person doesn’t fast during Ramadan, he is mocking Islam. And if the person is in a Muslim state, the authorities must behead him.”//
      //
      அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம்
      //எனவே நீங்கள் குறிப்பிட்ட வசனம் முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் இஸ்லாத்தை அரைகுறையாக பின் பற்றுபவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.//

      நீங்கள் இஸ்லாமிய விரோதியா, மனித குல விரோதியா?

  96. Avatar
    மலர்மன்னன் says:

    மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வைத்திய நாத ஐயர் ஆலயப் பிரவேசம் நடத்தியது 1939 ஆம் ஆண்டு! அவருக்குத் துணை நின்றவர் முத்து ராமலிங்கத் தேவர்! ஆமாம், தேவர்தான்! அப்போது நடைபெற்றது ராஜகோபாலாச்சாரியார் ஆட்சி!

    மனம் போன போக்கில் இஷ்டத்துக்கு ஆளாளுக்கு அளப்பதைக் கண்காணிக்கவே தனியாக ஒரு ஆளைப் போட வேண்டியிருக் கும் போலிருக்கிறது!
    -மலர்மன்னன்

    1. Avatar
      பூவண்ணன் says:

      சார் வெள்ளைக்காரன் தான் இந்தியாவிற்கு விடுதலை பெற்று கொடுத்தான் என்பதற்கும் வைத்தியநாத ஐயர்,முத்துராமலிங்க தேவர் தான் தீண்டத்தகாத சாதிகளின் கீழ் வந்தவர்கள் கோவிலுக்குள் நுழைய வழி செய்தார்கள் ,போராடினார்கள் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
      பாத்து ஆண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர் கோவில் நுழைவு போராட்டத்தை ஆரமபித்து விட்டார். இந்த போராட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று அதனை கை கழுவி இந்து மதத்தில் இருக்க மாட்டேன் என்று சூளுரைத்த வருடம் 1935
      தனி தொகுதி போராட்டம்,வைக்கிறோம் போராட்டத்தின் விளைவாக திருவன்கோரே அரசரின் ஆலய நுழைவு பிரகடனம் எல்லாம் வந்த பிறகு வேறு வழியில்லாமல் நடத்தப்பட்ட கண் துடிப்புகளுக்கு பெரிய வரலாற்று நிகழ்வு போல இடம் அளிப்பது சரியா

      அம்பேத்கர் எழுத்துக்களை படித்தால் காந்தியின் ஆலய நுழைவுக்கான வேண்டுகோள்களை ,கெஞ்சல்களை அவர் கடுமையாக தாக்குவது தெரியும்
      போராடும் மக்களை ஒதுக்கி விட்டு,உய்ரசாதியினரே பெருந்தன்மையாக நடந்து கொள்வதை போல நடத்தப்படும் நாடகங்களை அவர் திட்டி பல வருடங்களுக்கு பிறகு நடந்த நாடகம் மதுரை கோவில் நுழைவு

  97. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //உங்களது முன்னோர்கள் நிச்சயமாக வர்ணாசிரமத்தை எதிர்த்து இஸ்லாமுக்கு போகவே இல்லை.
    அதற்காகத்தான் மதம் மாறினார்கள் என்று வரலாற்று ரீதியாக ஆதாரம் காட்டமுடியுமா?
    20ஆம் நூற்றாண்டு பாண்டே வேண்டாம். 7 ஆம் நூற்றாண்டு ஆவணம் வேண்டும்.
    தாருங்கள் பிறகு பேசலாம்.//

    1929 ல் 69 ஆதி திராவிடர்கள் இன இழிவு நீங்க இஸ்லாத்தை ஏற்ற போது தந்தை பெரியார் ஆற்றிய உரை:
    ‘இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.
    ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’

    தமிழகத்தில் இஸ்லாம் வளர்ந்ததற்கான காரணத்தை தந்தை பெரியார் அழகாக விளக்குகிறார். எனவே தங்கமணியை பெரிது படுத்தத் தேவையில்லை. இன்று அந்த 69 பேரும் ‘வாங்க பாய்’ என்று மரியாதையாக பார்ப்பணர்களே அழைக்கும் அளவுக்கு அவர்களுக்கு சுய மரியாதை கிடைத்திருக்கும்.

    வாதததுக்காக தங்கமணி வார்த்தைபடி இஸ்லாமியர் அனைவரும் அரபு நாட்டு இறக்குமதி என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன தவறு? இங்கு வந்த அவர்கள் தமிழக இந்து பெண்களை திருமணம் முடித்து இந்த நாட்டு பூர்வீக ரத்தத்தில் ஐக்கியமாகி விட்டார்களே! தமிழக கலாசாரமான ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ ‘யாதும ஊரே யாவரும் கேளீர்’ எனபதற்கேற்ப உலக முஸ்லிம்களுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளனரே! மதினா பல்கலைக்கழகத்தில் தமிழக அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீனின் இஸ்லாமிய கட்டுரைகளை ஆராயும் அளவுக்கு தமிழனின் பெருமை பறை சாற்றப்படுகிறதே!

    ஆனால் பார்ப்பணர்களாகிய உங்களின் நிலை என்ன? என்று இந்த நாட்டுக்கு வந்தீர்களோ அன்றிலிருந்தே பூர்வீக குடிகளை ஒதுக்கியே வாழ்ந்தீர்கள். தொட்டால் தீட்டு: உங்களுக்கென்று தனி அக்ரஹாரம்: தமிழ் மொழியையே உடைத்து ‘அவாள், இவாள்’ என்ற புது மொழியை உங்களுக்காக உண்டாக்கிக் கொண்டீர்கள். பேசும் மொழியிலும் கூட ஒரு மேட்டுமைத்தனம் தெரிய வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு. திருமண பந்தத்தை பூர்வீக தமிழர்களோடு வைத்துக் கொள்வதை அறவே தவிர்த்தீர்கள். இதைப் பார்த்து அவர்களும் உங்களை வெறுக்க ஆரம்பித்தனர். இன்று ‘ஐயோ..ஐயோ…வடை போச்சே…எங்களை மட்டும்தானே விமரிசிக்கிறீர்கள்: இஸ்லாத்தை விட்டு விடுகிறீர்களே…’ என்று வயிற்றெரிச்சலில் புலம்புகிறீர்கள்.

    இன்று காவ்யாவும் பூவண்ணனும் இஸ்லாத்தை ஏன் விமரிசிப்பதில்லை என்று தங்கமணி வருத்தப்படுகிறார். சாதி வெறியை சாதி திமிரை ஒடுக்குவதற்கு எந்த வன்முறையும் இல்லாமல் அழகிய முறையில் தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு மார்க்கமான இஸ்லாத்தை அவர்கள் வாழ்த்தவே செய்வார்கள்.

    உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு பார்ப்பணர்களாகிய உங்களோடும் காவ்யாவும் பூவண்ணனும் கை கோர்ப்பார்கள்.

    1. Avatar
      தங்கமணி says:

      பெரியார் சொன்னதுதான் ஏழாம் நூற்றாண்டு ஆவணமா?

      நான் கேட்கும் கேள்விகள் ஒன்றுக்கும் பதில் சொல்ல முடியாமல் இன்னொரு திசை நோக்கி தாவுகிறீர்கள்?

      பார்ப்பனர் பற்றி இன்னொரு வாந்தி. இந்த வாந்தியை எத்தனை முறை எடுப்பீர்கள்? இப்படி வாந்தி எடுத்ததும் அள்ளிகொள்ள காவ்யாக்களும் பூவண்ணன்களும் வருவார்கள்.

      இவற்றுக்கு பதில் சொன்னாலும் அதனை புரிந்துகொள்ளவோ, அல்லது திருத்திகொள்ளவோ இயலாத முடியாத சூழ்நிலை உங்களுக்கு. ஆகையால் பதில் கூறுவது வேஸ்ட்.

      ஒரே ஒரு கேள்வி. எந்த இடத்தில் நான் பார்ப்பனன் என்று எழுதினேன்? அப்படி நான் என்னை பார்ப்பனன் என்று குறிக்காதபோது “பார்ப்பனரான உங்களை” என்று எழுதுவது தவறுதானே?

      நான் பார்ப்பனன் இல்லை.

      1. Avatar
        Kavya says:

        எழுத வேண்டிய தேவையில்லை. சொல்ல வேண்டிய தேவையுமில்லை. உணர்ச்சிகள் எப்போது பெருக்கெடுக்கின்றன; எவருக்காக? என்று மட்டும் பார்த்தாலே எல்லாம் தெரிய வருமன்றோ? 3 விகித மக்கள்; 97 விகித மக்கள். மூவருக்காக மட்டுமே உணர்ச்சிகள் பொங்குகின்றன. ‘சீ வெட்கமாகயில்லை?” என்றெல்லாம் எழுதி தங்கள் சாயத்தை வெளுத்துவருவது தெரியக்கூடாதென்று இந்துமதப்போர்வை, தேசியப்போர்வையெல்லாம் தேவையாகிறதே? (ஜாதியம் வளர்க்க தேசியம் பேசுகிறார்கள் என்றார் க நா சு! இல்லையா !!) எவர் பார்ப்பனர் பற்றி ‘வாந்தி’ (உங்கள் சொல்) எடுக்கிறார்கள் என்று மட்டும் நோட்டமிட்டு அவரைக்கண்டனம் செய்ய ஓடிவருபவர்கள் மற்ற 97 விகத மக்களுக்கு உங்களைப்போன்றோர் ஓடிவரவில்லையென்பதைப்பார்க்கும்போது, எனவே பார்ப்பனரோ என்ற ஐயம் வருவது இயற்கைதானே? அந்த 97 பேர்களாலே இந்துமதம் வாழும் என்பதை மறுத்துப்பாருங்கள்.

  98. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //ஒரே ஒரு கேள்வி. எந்த இடத்தில் நான் பார்ப்பனன் என்று எழுதினேன்? அப்படி நான் என்னை பார்ப்பனன் என்று குறிக்காதபோது “பார்ப்பனரான உங்களை” என்று எழுதுவது தவறுதானே?
    நான் பார்ப்பனன் இல்லை.//

    நான் எழுதுவது ஒரு குறிப்பிட்ட தங்கமணிக்காக மட்டும் அன்று. வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் ஒட்டு மொத்த பர்ப்பனர்களுக்காகவும்தான். பார்ப்பனர்கள் சார்பாக நீங்கள் தான் வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்மிதாவும் மலர்மன்னனும் வேதம் கோபாலும் பதில் இல்லாததால் வர மாட்டார்கள் என்பதும் தெரியும்.

    இசையமைப்பாளர் இளையராஜா ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். ஆனால் இன்று இந்து மதத்தின் சட்டங்களை தன்னுள் உள் வாங்கி ஆன்மீக பாதையில் நுழைந்துள்ளார். அதாவது பிராமணியத்தை சுவீகரித்துள்ளார். அவர் பின்பற்றும் இந்து மத வர்ணாசிரம சட்டங்களை எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தார் என்றால் என் பார்வையில் இளையராஜாவும் பார்ப்பனரே!

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      சுவனப்பிரியன், தெளிவா நிதானமா உரையாடும் – விவாதிக்கும் நீங்க எதுக்கு “இந்து மதத்தின் சட்டங்களை தன்னுள் உள் வாங்கி”-ன்னு தடாலடியா அள்ளி விடறீங்க ?

      இந்து மதத்தில் யாரு எப்படி எந்த ஆன்மீக பாதைய பின்பற்றணும்னு அப்படி எந்த சட்டமும் இல்லைங்க. அவரு சிறுதெய்வ வழிபாட்ட உட்டுட்டு பெருந்தெய்வ வழிபாடு செய்வதை அப்படி சொன்னீங்க-ன்னா, மன்னிக்கணும், ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவங்க பெருந்தெய்வ வழிபாடு செய்யறதையோ “ஒடுக்குறவங்க” சிறு தெய்வ வழிபாடு செய்யறைதையோ யாரும் எந்த வழிபாடும் செய்யாம நாத்திகரா இருக்கறதையோ இந்து மதம் தடுப்பதே இல்லை.

      அவரவருக்கு ஏற்ப அவரவருக்கு பிடித்தமான – இசைவான வழியில் ஆன்மீக பயணம் செய்யலாம். யாரும் தடுக்க இயலாது. யாருக்கும் அந்த அதிகாரத்தை யாரும் பட்டா போட்டு கொடுத்துடலை.

      எனக்கு என் கணிப்பொறி ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும்னா நா அதையே கடவுள்-னு கூட வணங்கலாம். சிவலிங்க சிலையை பேப்பர் வெய்ட்-ஆகூட பயன்படுத்தலாம்.

      1. Avatar
        Kavya says:

        சுவனப்பிரியனாவது இசுலாமியர். ஆனால் நீங்கள் ஹிந்து. ஆனால் பாதி உண்மையைச்சொல்லி அதே முழுவுண்மையென்று சொல்வதேன்?

        1.எவரும் எப்படியும் எக்கடவுளரையும் தொழலாம்.
        2.இவர் இப்படித்தான் இக்கடவுளைத்தான் தொழலாம்.

        மேற்கூறிய இரு சொற்றொடர்களுள் உண்மையெது? உங்கள் கணிப்பின்படி முதலே. அதை வைத்து என் கணிப்பொறியையும் கடவுளாக நான் வணங்குவேன் என்கிறீர்கள்.

        இரண்டாவதும் உண்மையே. முதல் மட்டுமே என்றால் பாதி உண்மை. இரண்டாவது மட்டுமேயென்றாலும் பாதி உண்மையே.முதல் பாத சேவனம். இரண்டாவது அர்ச்சனம்.

        ஆக இரண்டும் உண்டென்பதும் ஏற்கப்பாலதும் என்பதே முழு உண்மையாகும்.

        எனினும் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வியும் உண்டு.

        பலர் பாத சேவனததைத் தேர்ந்தெடுக்க சிலர் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுத்தார். ப‌ல‌ர்? ஏனெனில், பாத‌ சேவ‌ன‌ம் ப‌ல‌ரை உள்ள‌ட‌க்கி ம‌கிழும். (Inclusion) அர்ச்ச‌ன‌ம் சில‌ரை உள்ள‌ட‌க்கி ப‌ல‌ரை வெளித்தள்ளும். (Exclusion or elitism) வெளித்த‌ள்ள‌ப்ப‌ட்டோரில் தீண்டாமைக்குள்ளாகிய‌வரும் உண்டு. இர‌ண்டாவ‌து வேண்டாமென்றால் கோயில்க‌ளும், கோயில் ஒழுகும், ஆக‌ம‌ங்க‌ளும், வேத‌மோதுத‌லும் தேவையில்லை. ஐய‌ரில்லா சுய‌ம‌ரியாதைக்க‌லியாண‌ம் போல‌ ஆகி விடும் இந்தும‌த‌ம் :-(

  99. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள சுவனப்பிரியன்,

    கடுமையான உளறல்கள். ஆனால் ஆச்சரியம் இல்லை! இந்து ஆன்மீகம் வேறு. வர்ணாசிரமம் வேறு. ஸ்ருதி, ஸ்மிருதி ஆகியவைகளுக்கெல்லாம் பல முறை பலர் விளக்கம் கொடுத்துவிட்டார்கள். இருந்தாலும் கூலிக்கு மாரடிப்பது போல பழைய வாந்தியையே எடுத்துகொண்டிருக்கிறீர்கள். இதிலே இளையராஜா என்றெல்லாம் உங்கள் அறிவுஜாலத்தை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். பாவம் அவருக்கு தெரியாததெல்லாம் உங்களுக்கு தெரிகிறது. வழக்கம் போல verbal diarrhea. கொஞ்சம் இருங்கள் காவ்யாக்களும் பூவண்ணன்களும் வந்து உங்கள் டயரியாவில் குளிப்பார்கள்.

    நான் வர்ணாசிரம ”சட்டங்களை” தூக்கிப் பிடித்தேன் என்று எழுதுகிறீர்கள். எங்கே தூக்கி பிடித்தேன்?
    ”இந்து மதத்தின் சட்டங்கள்” என்று எழுதுகிறீர்கள். இந்து மதத்துக்கு சட்டம் கிடையாது.
    மனுஸ்மிருதிகள் போன்ற ஸ்மிருதிகள் காலப்போக்கில் மாறுபாடு அடைபவை. அவைகளுக்கு நிரந்தர தன்மை கிடையாது. காவ்யாவே இதனை உங்களுக்கு சொல்லிகொடுத்துவிடுவார். இன்றைக்கு நடப்பது அம்பேத்கார் ஸ்மிருதி என்று ஒரு இந்து ஆன்மீக பெரியவர் சொன்னார். அதிலும் ஒவ்வொரு பாராளுமன்றத்திலும், சட்டத்திருத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஸ்மிருதிகள் காலத்துக்கேற்ப மாறுபவை.
    இந்து மதத்தில் சட்டம் என்று ஏதும் இல்லை. உண்மையை சொல், அறத்தை ஒழுகு போன்ற நெறிமுறைகள் இருக்கின்றன.
    தாடிவைப்பது கட்டாயமா, இல்லையா, இத்தனை இஞ்ச் தாடிக்கு குறைவாக இருந்தால் இத்தனை சவுக்கடி என்றெல்லாம் சட்டம் கிடையாது.
    நான் பார்ப்பனர்கள் சார்பாக வாதிடவில்லை. சொல்லப்போனால் வாதிடவே இல்லை. உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டிருக்கிறேன். நீங்கள் பதில் சொல்லாமல், உன் கண்ணில் தூசு இருக்கிறது அதனால் என் கண்ணில் உத்தரம் பரவாயில்லை என்று சொல்லிகொண்டிருக்கிறீர்கள்.
    அது தூசு என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே அதுவும் பொய் என்று சொல்லிவிட்டு போகிறேன். அவ்வளவுதான்.

  100. Avatar
    மலர்மன்னன் says:

    ஒருவர் ஜின்னா முஸ்லிம் லீகை ஆரம்பித்தார் என்கிறார். இன்னொருவர் தத்துப் பித்தென்று இஷ்டத்துக்கு உளறிக் கொட்டுகிறார். மற்றொருவர் குலம் கோத்திரம் சாதி வர்ணம் பற்றிய அடிப்படைகள் எல்லாம் அறிந்தவர்போல் கதைக்கிறார். சிலருக்கு எத்தனை தடவை சொன்னாலும் மனதில் பதிவதில்லை. திரும்பத் திரும்ப நினைவூட்டச் சொல்கிறார்கள். சிலருக்கு அப்படியும் ஏறாமல் கேள்வி என நினைத்துக்கொண்டு அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள். பிழைகளைச் சுட்டிக் காட்டிய பிறகு பிழையாகச் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் அடுத்த உளறலுக்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள்! இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வேறு! பதிலுக்குத் தகுதியில்லாத கேளவியைக் கேட்டுவிட்டு பதில் இல்லை என்று இளக்காரம் செய்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை! இந்த ரீதியில்தான் விவாதங்கள் தொடரும் என்றால் விதண்டா வாதம் செய்வோரே அவற்றில் பங்கு கொள்ள முடியும்! சும்மா கிடக்கிற சங்கை ஊதுகிற மாதிரி இந்த வெ. சா. வேறு உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கீறார்!
    -மலர்மன்னன்

  101. Avatar
    paandiyan says:

    ஒன்று மட்டும் இங்கு நன்றாக புரிகின்றது. கிறிஸ்துவர்களில் எப்படி நாடார் கிறிஸ்துவர் என்று இருகின்றாகளோ , சுவனப்பிரியன் போன்றவர்கள் பிராமின் முஸ்லிம் போல அங்கு ..

  102. Avatar
    பூவண்ணன் says:

    ஹை ஹிந்து மதம் பெருந்தன்மையான மதமா
    தினம் டஜன் கணக்கில் பெண்களை வேறு சாதியில் காதலித்து விட்டார்கள்,ஒரே சாதியாக இருந்தாலும் ஒரே கோத்திரத்தில் காதலித்து விட்டார்கள் என்று பெற்றோர்,கூட பிறந்தவர்கள்,உற்றாரையே கொலைகாரர்கள் ஆக்குவது மதம் மற்றும் அது சார்ந்த நம்பிக்கை தானே
    சித்தப்பா பெண்ணை காதலித்து விட்டான் என்றால் ஹிந்துக்களாக இருந்தால் வெட்டுவார்கள் ஆனால் இஸ்லாமியராக இருந்தால் திருமணம் செய்து கொண்டு விடலாம் என்பதால் இஸ்லாம் சிறந்த மதம் என்பீர்களோ
    பல கடவுள் நம்பிக்கை பெருந்தன்மையை காட்டவில்லை.அது மேலே கூறியுள்ள எடுத்துகாட்டு போல மதத்தில் உள்ள அனுமதிகளில் ஒன்று
    கீழ்சாதியினரின் உணவான மாட்டு கறியை ஏன் தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறீர்கள்
    பெருந்தன்மையாக அவர்களின் பழக்கம் என்று ஹிந்து மத தலைவர்கள்,தொண்டர்கள் விட வேண்டியது தானே
    ஒருத்தனுக்கு மாடு ஒருத்தனுக்கு பன்றி
    எல்லாம் ஓர் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
    ஆனால் அதிலும் இந்துக்கள் பசுவை மட்டும் தான் போச்சிப்பார்கள்.எருதை வெட்டி பலி கொடுப்பார்கள்
    மாட்டில் கூட உயர்சாதி ,கீழ்சாதி கண்டுபிடித்து ஒன்றை தெய்வமாக ஆக்கியவர்கள்

    1. Avatar
      தங்கமணி says:

      பூவண்ணன்,
      நீங்கள் இந்து இல்லையென்றால் பரவாயில்லை. ஆனால், விமர்சிக்கும் முன்னர் படித்துவிட்டு விமர்சியுங்கள். உங்களையும் யாரும் கிண்டல் செய்யமாட்டார்கள். பதில் சொல்லுபவருக்கும் நேரம் மிச்சம்.

      எந்த நெருங்கிய உறவுக்குள்ளும் திருமணம் செய்வது தவறு என்று ஸ்மிருதிகள் சொல்லுகின்றன. ஆனால், இந்தியாவில் நெருங்கிய உறவில் திருமணம் செய்கிறார்கள். இந்தியாவின் வழக்கத்தின்படி சித்தப்பா சித்தி வகை உறவினர்களுடன் திருமணம் செய்வது சகோதர உறவுமுறை. அதே போல நாட்டின் பல பகுதிகளில் ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்வது சகோதர உறவாக பார்க்கப்படுகிறது. இது இந்து மதம் சொல்லி செய்யவில்லை. சமூக வழக்கம். ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு வழக்கம். இது கூட தெரியாமல் இந்து என்று பெரும் ஜனத்திரளை, சமூகங்களின் சமூகத்தை ஒற்றைப்படையாக பார்த்து உளறுவதற்கு முன்னால் ஒன்று, இந்தியாவெங்கும் பிரயாணம் செய்து பார்க்க வேண்டும். அல்லது மானுடவியல் புத்தகங்களையாவதுபடித்து புரிந்துகொள்ள வேண்டும்.

      மாடு விஷயத்துக்கு வருவோம். திண்ணையில் ஒரு கட்டுரை தொடர் வந்தது. அது பின்னர் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
      http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40107151&format=print&edition_id=20010715
      பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் என்ற மார்வின் ஹாரிஸின் புத்தகம்.
      படிப்பது தவறில்லை. படியுங்கள்.

      1. Avatar
        பூவண்ணன் says:

        தங்கமணி சார்
        இந்தியாவில் பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாழ்ந்திருக்கிறேன் .என் பெற்றோர் இன்றும் இந்துக்கள் தான்

        கோர்க்காக்கள் தசசெராவிர்க்கு ஒரே வெட்டில் கோழி,ஆடு ,எருமை எல்லாம் வெட்டும் போது பங்கு பெற்றிருக்கிறேன்
        கருப்பாக இருப்பதால் எருமைகள் பலி கொடுக்கப்படலாம்,அதை சாப்பிடுவது நல்லதா

        http://articles.timesofindia.indiatimes.com/2002-06-27/india/27309221_1_kamakhya-animal-sacrifice-temple-committee

        Panchabali – a ritual involving the sacrifice of a buffalo, a goat, a sheep, a pigeon and a duck – is a common practice in this temple, a high seat of tantra .
        சில காலம் முன் வரை உலகின் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று நாட்டு மக்களால் நம்பப்பட்ட மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது
        கடைசி மன்னர் பதவியேற்ற போது கூட இந்தியாவில் காமக்ய கோவிலில் மாடுகள் பலி கொடுக்கப்பட்டன

        சொந்தத்தில் திருமணம் செய்யும் தென்னிந்திய இந்துவை பார்த்து சாட் இனத்தவர் ஒத்து கொள்ள வேண்டியது தானே
        அவனவன் பிறந்த சாதி வழக்கப்படி தான் நடக்க வேண்டும் எனபது கொடுமை இல்லையா
        அதை பெருந்தன்மையாக எழுத எப்படி மனம் வருகிறது
        இந்துக்களில் ஒரு பிரிவினர் உறவில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது,அதனால் பரவாயில்லை என்ற எண்ணம் வருகிறதா
        பிறப்பால் வந்த சாதி சார்ந்த வழக்கத்தை மாற்ற முடியாத மதம் என்ன மதம்.எல்லாவற்றையும் பிறப்பு தான் முடிவு செய்யும் என்ற கேவலத்தை மாற்ற முடியாததை விட கேவலம் உண்டா
        உன் சாதி வழக்கத்தை மீற கூடாது,மீற முடியாது என்பதில் பெருந்தன்மை எங்கே வருகிறது

        1. Avatar
          தங்கமணி says:

          அன்பின் பூவண்ணன்

          திருமண வழக்கம் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொன்றாக இருக்கிறது. யாரும் யாருடைய வழக்கத்தையும் ஒப்புகொள்ள என்ன தேவை?

          ஆனால் ஒரு தேவை இருக்கிறது. சொந்தத்த்தில் திருமணம் செய்தவர்களது குழந்தைகள் ஊனமாக பிறப்பதை நீண்ட நெடுங்காலமாக அறிந்தவர்கள் கூடாப்பாலுறவு என்று வைத்திருக்கிறார்கள். சகோதரர்களை திருமணம் செய்ய தடை பெற்றோரை திருமணம் செய்ய தடை ஆகியவை எல்லாம் இது போல கூடாப்பாலுறவு ஆனதற்கு biological காரணங்கள் இருக்கின்றன.
          ஏன் டால்பின்கள், திமிங்கிலங்கள் கூட கூடாப்பாலுறவு என்று வைத்திருக்கின்றன. சகோதரிகளையோ அல்லது பெற்றோரையோ கூடுவதில்லை. இது பற்றி தேடிப்பாருங்கள் கிடைக்கும். இது போல ஒவ்வொரு பழங்குடிகளிலும் கூடாப்பாலுறவு (taboo) என்பன உண்டு. அவர்களிடம் போய் நீங்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, சகோதரர் மகளை மணந்துகொள்ள வேண்டும். சகோதரரை மணந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ உரிமை கொடுக்கமாட்டேன் என்கிறாய், மனித உரிமை மீறல் என்று பேசுவீர்களா?

          இந்தியாவில் முஸ்லீம்கள் சித்தப்பா மகளை மணந்துகொள்கிறார்கள். ஓகே என்று சட்டம் போட்டு இந்தியாவில் அங்கீகரித்த்து தானே வைத்திருக்கிறார்கள்? அவர்கள் ஏதோ செய்துகொள்கிறார்கள் என்று விட்டுவிட்டார்கள்தானே?

          பிரச்னை எங்கே வருகிறது என்று புரிந்திருப்பீர்கள். சுவனப்பிரியன் போன்றவர்கள் தங்களுடைய வழக்கங்கள் எல்லாம் ரொம்ப லாஜிக் மாதிரியும் மற்றவர்களது வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கை மாதிரியும் “சீர்திருத்த” கிளம்பும்போதுதான் என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு பதிலளிக்கிறார்கள்.

          1. Avatar
            பூவண்ணன் says:

            ஒரு சிறிய பிரிவினரை தவிர அனைவரும் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ராஜபுத்திரர்கள் அதே வம்சத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்
            கோத்திரம் என்பதே தந்தையை வைத்து வருவது தான்.தாயின் கோத்திரங்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது.இது பெரிய விக்ஞானமா
            அதை மகளை திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் சித்தப்பா மகளை செய்து கொள்ள கூடாது என்பதில் எந்த மருத்துவ ஞானமும் இல்லை
            சித்தப்பா மகள்,மகன் என்றால் ஒன்றாக வசிப்பவர்கள் என்ற வழக்கத்தினால் தடை வந்திருக்கலாம்.

            கோத்திரம் எனபது படித்து வாங்கிய பட்டம் என்றால் ஏன் சகோத்திர திருமணங்கள் சாஸ்த்ரிகளால் எதிர்க்கபடுகினறன
            பல சாதியினர் படிக்கும் பொறியியல்,மருத்துவ கல்லூரி போல தான் கோத்திரம் (மதுரை மருத்துவ கல்லூரியில் படித்தவன் என்ற அடையாளம் போல )என்றால்
            அதே கோத்திரத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்ய கூடாது எனபது ஏன்

            பிறந்த சாதியின் பழக்கங்கள் தான் முக்கியம் என்றால் மதம் எதற்கு.அதே மதத்தில் இருக்கும் வேறு சாதியினர்,பகுதியில் வாழ்பவர் முறைகளை கூட பிடித்திருக்கிறது என்றால் கூட பின்பற்ற முடியாது என்றால் அது என்ன மதம்
            நீ எந்த சாதியோ அது தான் உன் உணவு,திருமணம்,செய்யும் வேலை,இறப்பு சடங்குகள் போன்றவற்றை தீர்மானம் செய்யும்.அதை மாற்றவே முடியாது என்றால் அதை விட கொடூரமான மதம் உண்டா

          2. Avatar
            தங்கமணி says:

            பூவண்ணன்,
            இதே மாதிரிதான் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் கேட்டுகொண்டிருந்தார்கள். ஏன் சகோதரியை கல்யாணம் பண்ணக்கூடாது? ஏன் கல்யாணம் பண்ணனும் ஒரே கூட்டா பாலுறவு பண்ணலாமே என்றெல்லாம் கேட்டார்கள்.
            இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டார்கள். உங்களை போன்ற விடலைகளைத் தவிர.
            ஒரு வழக்கம் மதம் சாராமல், பழக்க வழக்கம் சார்ந்து இருக்கிறது என்றால் மதிக்க வேண்டும். ஏனெனில் அதற்கான ஒரு சமூகவியல் அல்லது மானுடவியல் பொருளாதாரவியல் காரணங்கள் இருக்கலாம். அது உங்களுக்கு இப்போது தெரியாமல் இருக்கலாம்.

            ஆண் ஜீன் சார்ந்து வருவதற்கும் பெண் ஜீன் சார்ந்து வருவதற்கும் வேறுபாடு இருக்கிறது. x y என்ற இரண்டில் அவை எங்கேயிருந்து வருகின்றன என்று உங்களுக்கும் எனக்கும் இன்று தெரியவில்லை. எதிர்கால விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தலாம்.

            உதாரணத்துக்கு சில சொல்லுகிறேன்.

            பெண்களில் மூளை வளர்ச்சி குறைவாக பிறப்பவர்கள் எண்ணிக்கை, ஆண்களில் மூளை வளர்ச்சி குறைவாக பிறப்பவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு குறைவு.

            காரணம் “இது பெரிய விஞ்ஞானமா?” என்று கேட்ட நீங்கள் சொல்லுங்களேன்.

            சித்தப்பா மகளை கல்யாணம் பண்ணும் முஸ்லீம் குடும்பங்களில் மனவளர்ச்சி குன்றியவர்களின் எண்ணிக்கை, அத்தை, மாமி மகள்களை திருமணம் செய்யும் இந்து குடும்பங்களில் மனவளர்ச்சி குன்றியவர்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம்.

            சித்தப்பா போன்ற நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்யும் முஸ்லீம்களால் இங்கிலாந்து அரசுக்கு ஏக மருத்துவ செலவு என்று புலம்பி ஒரு கட்டுரை கூட வந்தது.

            தேடி பாருங்கள். கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள். ஆதாரம் தருகிறேன்.

            ”இது பெரிய விஞ்ஞானமா?” என்று கேட்ட நீங்கள் இதற்கும் காரணம் தருவீர்கள் என்று கருதுகிறேன்.

          3. Avatar
            பூவண்ணன் says:

            தங்கமணி சார்
            அடிச்சு விடறீங்க
            ஆணுக்கு XY .பெண்ணுக்கு XX

            இதில் ஆண் குழந்தை என்றால் ஆணிடமிருந்து Y மற்றும் பெண்ணிடமிருந்து X
            பெண் குழந்தை என்றால் இருவரிடம் இருந்தும் X தான்

            அத்தை மகனின் X தாயிடம் இருந்து தான் வருகிறது.மணந்து கொள்ளும் பெண்ணின் X தந்தையிடம் இருந்து வந்தது. இரண்டும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த X தான் இதற்கும் சித்தப்பா மகனுக்கும் என்ன வித்தியாசம் வருகிறது.
            அத்தையின் கணவன்,சித்தப்பாவின் மனைவி வேறு குடும்பத்தவர் .இரண்டு வாரிசுகளுக்கும் வித்தியாசம் கிடையாது

            நான் வேறு சாதியில்,மதத்தில் திருமணம் செய்து கொண்டவன்.அதனால் ஒரே சாதியில் திருமணம் செய்து கொண்டவர்கள் வாரிசுகள் முட்டாளாக இருப்பார்கள் என்று ஏளனம் செய்வது சரியா
            ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பழக்கம்.அது தவறு என்றால் அதை சொல்ல வேண்டும்.அறையும் குறையுமாக அத்தை மகன் பரவாயில்லை,சித்தப்பா மகன் மருத்துவ ரீதியாக தவறு ,வியாதிகள் உள்ள வாரிசுகள் பிறக்கும் என்பதற்கு எந்த வித சான்றும் இல்லை
            மனநல குறைவான குழந்தைகள் பிறக்க பல காரணங்கள்.அதில் முக்கியமானது பிரசவ கால தாமதங்கள்,அடுத்தது போதை மருந்து பழக்கம்,மது பழக்கம் ,thyorid சுரப்பி குறைபாடுகள் .அதற்கு பிறகு நெருங்கிய தொடர்பில் திருமணங்கள்.இதில் அத்தை,சித்தப்பா இடையே வேறுபாடு கிடையாது

  103. Avatar
    Kavya says:

    மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வைத்திய நாத ஐயர் ஆலயப் பிரவேசம் நடத்தியது 1939 ஆம் ஆண்டு! அவருக்குத் துணை நின்றவர் முத்து ராமலிங்கத் தேவர்! ஆமாம், தேவர்தான்! அப்போது நடைபெற்றது ராஜகோபாலாச்சாரியார் ஆட்சி!

    மனம் போன போக்கில் இஷ்டத்துக்கு ஆளாளுக்கு அளப்பதைக் கண்காணிக்கவே தனியாக ஒரு ஆளைப் போட வேண்டியிருக் கும் போலிருக்கிறது!
    -மலர்மன்னன்

    போன மாதம் விஜய் டி வியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சி நாமக்கல் பள்ளித் தாளார்களுக்கும், பத்திரிக்கையாளர் சிலர், மனதத்துவ மருத்துவர் / கவுன்சிலர், மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணாக்கர் சிலருக்குமிடையே மோதல். அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தாளாளர்கள் தள்ளாடினார். எப்படி கவனத்தை திருப்புவது என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில், பத்திரிக்கையாளர் கடற்கரை, ‘மஃபியா கேங்’ என்ற சொல்லைவிட‌, தாளாளர்கள் அதைப்பிடித்துக்கொண்டு வெளியேறத்தொடங்கினார். அச்சொல் திரும்பப்பெற வேண்டும் என்றார். கடற்கரை சொன்னார்: ‘நான் சொன்னவை நூற்றுக்கணக்கான சொற்கள். வாக்கியங்கள். அவற்றுள் கருத்துகள் நிறைய. அவைகளை எதிர் நோக்க அஞ்சி, இவர்கள் என் கடைசிச் சொல்லைப் பிடித்து நான் சொன்ன அனைத்தையும் அமுக்கப்பார்க்கிறார்கள்’ என்றார்.

    அதேதான் இங்கும். என் கருத்துக்கள் பல. அதில் ஒன்றுதான் ஆலயப்பிரவேசம். அது சுதந்திரக்குப்பின் நடந்தது என்றேன். அதைப்பிடித்துக்கொண்டு வரலாறு வகுப்பு நடத்தி, பிற கருத்துக்களைப் பின் தள்ளப்பார்க்கிறார். போகட்டும். அப்போது இராஜாஜி என்ற பார்ப்பனர்தானே ஆட்சி நடாத்தினார்? வெள்ளைக்காரனில்லையே? மதுரை பூஜாரிகள் ஏன் போலீசை அழைத்தார்கள்? ஏன் வைத்தியநாதர் சிறையிலடைக்கப்பட்டார்? ஏன் அதற்குமுன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் கோயில்களுள் தடுக்கப்பட்டார்? ஏன் பூரி சங்கராச்சாரியார்: “தலித்து ஒருவன் எழுதியதாலேயே நம் இறையாணமைச்சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். அதை ஒரு பிராமணன் எழுதியிருக்க வேண்டும்?” என்றார்? ஏன் அம்பேத்கரின் ப்யூன் அவர் மேல் ஃபலைத்தூக்கியெறிந்தான்? ஏன் ஜெகஜீவன் ராம் வந்து சென்றவுடன் பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமாணாக்கர் அவர் வந்து சென்ற இடத்தை சுத்திப்பரிகாரம் வேத முழக்கத்துடன் பண்ணினார்? ஏன் இங்கே சுமிதா பார்ப்ப்னர்களுக்கென்றே நல்ல குணங்கள் இருப்பதால் அவர்களே பூஜாரிகளாக முடியுமென்று சொல்ல சந்திரமவுளி சரியென்றார்? ஏன் மலர்மன்னன் வருணகுணவர்க்கங்கள் அவர்களுக்கு மட்டும்தான்; மாற்றார் நுழையக்கூடாதென்று மிரட்டல் தொனியில் கட்டுரை வரைகிறார்? கேள்விகள் ஏராளம். தவறுகள் பலபல நடந்தேறி விட்டன. அவற்றை ஒப்புக்கொண்டு திருந்தப்பார்க்கணும். 1947 அன்று 1939 என்பதிலே ஒன்றும் தேறாது. இன்றும் மடசேனா நடக்கிறது. அதற்கு இவர் என்ன சொன்னார். ஒன்றுமே சொல்ல மாட்டார். பார்ப்பனருக்கு மட்டுமன்றி. தேவமார்களையும் இவர் தூக்கிப்பிடிக்கிறார். ஏன் இவருக்குத் தலித்துகள் மேல் காண்டு?

    எல்லாவற்றையும் அமுக்கி மறைத்துவிட்டால் அவை காணாமல் போய்விடுமா? போகா. ஒரே வழி. அவை இருக்கின்றன; இருந்தன என்று ஏற்றுக்கொண்டு அவர் இனியும் நேரவிடக்கூடாதென்றால் மட்டுமே இந்துமதம் வளரும். ஆனால் மலர்மன்னன் கேட்ட பாடில்லை.

    அல்லேலுயாதான். ஆமன்தான். சாம் செல்லத்துரையும் பெர்க்மான்சும் தூக்கிக்கொண்டு போவார். சுவனப்பிரியன் காட்டில் செம மழை பெய்யட்டும்.

    1. Avatar
      Paramasivam says:

      Smitha said that only Brahmins have good conduct to become Archagars.Yes.Today I have read about the chief of SERC who have sent a research paper on “A probability model for the growth of corrosion pits in aluminium alloys”to a renowned journal published from Netherlands.But,alas.It was found out that paper was written by two Americans(R,B.Wey&G.Harlow)in 1998 and the same was published in the same journal.Demand for expulsion of the concerned is being suppressed by vested interests.Very good conduct by a scientist.Is it not?

  104. Avatar
    மலர்மன்னன் says:

    உளறல்களுக்குப் பெயர் கருத்துகளா? ஆச்சரியமாக இருக்கிறது!
    திண்ணை பொது மேடைதான். யார் வேண்டுமானாலும் தங்கள் அறியாமையை பகிரங்கப்படுத்திவிட்டு சபை நடுவே நெடும் பனைபோல நிற்கலாம். தப்பில்லை!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப்பதில்கள் சொன்னாமல் தப்பித்தால் எப்படி? பிராமணன் எச்சிலில் புரண்டால் தோல் நோய்களை சுப்பிரமணியர் குணப்படுத்துவார். இது புரட்டா இல்லையா?

  105. Avatar
    suvanappiriyan says:

    சகோ பூவண்ணன்!

    //ஒருத்தனுக்கு மாடு ஒருத்தனுக்கு பன்றி
    எல்லாம் ஓர் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்//

    முஸ்லிம்கள் பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி சாப்பிடுபவர்களை குறை கூறி திரிய மாட்டார்கள். வட நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் மாட்டை உணவுக்காக அறுத்ததற்காக நான்கு தலித்துகளை அடித்தே கொன்றுள்ளது ஒரு கூட்டம். இதைத் தான் மற்றவர்கள் விமரிசிக்கின்றனர்.

  106. Avatar
    தங்கமணி says:

    //ஆனால் அப்படி சாப்பிடுபவர்களை குறை கூறி திரிய மாட்டார்கள். //
    ஆனால் கைது செய்வார்கள்!
    http://www.emirates247.com/news/region/two-women-tried-to-sell-pork-in-saudi-arabia-2011-06-28-1.405034

    Two women tried to sell pork in Saudi Arabia
    By

    Staff

    Published Tuesday, June 28, 2011

    Saudi Arabia’s religious police arrested two Filipina women for selling pork, which is prohibited in Islam, a newspaper reported on Tuesday.

    Acting as a customer, a member of the Commission for the Promotion of Virtue and Prevention of Vice bought 10 kg of pork from the two women, which were selling the meat in King Fahd neighbourhood in Riyadh.

    “After they were paid, other Commission members jumped on the two and arrested them… they will be investigated to know the source of the meat before they are referred to court,” Sabq Arabic language daily said.

    இந்த பெண்களுக்கு மரணதண்டனை கொடுத்தார்களா என்று தெரியாது.

  107. Avatar
    suvanappiriyan says:

    திரு மலர் மன்னன்!

    //ஒருவர் ஜின்னா முஸ்லிம் லீகை ஆரம்பித்தார் என்கிறார். இன்னொருவர் தத்துப் பித்தென்று இஷ்டத்துக்கு உளறிக் கொட்டுகிறார். மற்றொருவர் குலம் கோத்திரம் சாதி வர்ணம் பற்றிய அடிப்படைகள் எல்லாம் அறிந்தவர்போல் கதைக்கிறார்.//

    முஸ்லிம் லீக் யார் ஆரம்பித்தது என்பதல்ல இங்கு நடந்த விவாதம். இந்திய பிரிவினைக்கு மூல காரணம் யார் என்பதே முன்பு நடந்த விவாதம். நான் பிறப்பதற்கு முன்னால் கிடைத்த இந்திய சுதந்திர வரலாறுகளில் சில தவறான புரிதல்கள் இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொண்டு விடப் போகிறோம்.

    //பிழைகளைச் சுட்டிக் காட்டிய பிறகு பிழையாகச் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் அடுத்த உளறலுக்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள்!//

    முஸ்லிம் லீக்கை ஜின்னா ஆரம்பித்ததாக நான் தவறாக பதிந்ததை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். போதுமா!

    “கோயில்களுள் தடுக்கப்பட்டார்? ஏன் பூரி சங்கராச்சாரியார்: “தலித்து ஒருவன் எழுதியதாலேயே நம் இறையாணமைச்சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். அதை ஒரு பிராமணன் எழுதியிருக்க வேண்டும்?” என்றார்? ஏன் அம்பேத்கரின் ப்யூன் அவர் மேல் ஃபலைத் தூக்கியெறிந்தான்? ஏன் ஜெகஜீவன் ராம் வந்து சென்றவுடன் பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணாக்கர் அவர் வந்து சென்ற இடத்தை சுத்திப் பரிகாரம் வேத முழக்கத்துடன் பண்ணினார்? ஏன் இங்கே சுமிதா பார்ப்ப்னர்களுக்கென்றே நல்ல குணங்கள் இருப்பதால் அவர்களே பூஜாரிகளாக முடியுமென்று சொல்ல சந்திரமவுளி சரியென்றார்? ஏன் மலர்மன்னன் வருண குண வர்க்கங்கள் அவர்களுக்கு மட்டும்தான்; மாற்றார் நுழையக்கூடாதென்று மிரட்டல் தொனியில் கட்டுரை வரைகிறார்? இன்றும் மடசேனா நடக்கிறது. அதற்கு இவர் என்ன சொன்னார்.”

    என்ற வரிசையான காவ்யாவின் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

    மழுப்பலான பதிலை கொடுத்து விட்டு நகர்ந்தால் கிறித்தவத்தையும் இஸ்லாத்தையும் நோக்கி ஒடுக்கப்பட்டவர்கள் நகர்வதை தடுக்க முடியாமல் போய் விடும். இதன் மூலம் இந்து மதத்துக்கு உங்கள் கைகளாலேயே குழி வெட்டிக் கொள்கிறீர்கள்..

  108. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //“After they were paid, other Commission members jumped on the two and arrested them… they will be investigated to know the source of the meat before they are referred to court,” Sabq Arabic language daily said.

    இந்த பெண்களுக்கு மரணதண்டனை கொடுத்தார்களா என்று தெரியாது.//

    சவுதி அரேபியாவுக்குள் நீங்கள் வேலை நிமித்தமாக நுழையும் போதே ‘சவுதி அரசின் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டே வேலை செய்வேன்: அதனை மதித்து நடப்பேன்’ என்று ஒப்புதல் கொடுத்து கையெழுத்து இட்டு விட்டே வேலைக்கு வருகிறீர்கள். சவுதி வந்தவுடன் அந்த ஒப்பந்தத்துக்கு மாற்றமாக பன்றி கறியை விநியோகித்தது அந்த பிலிப்பைன் நாட்டவரின் தவறல்லவா?

    பன்றிக் கறியில் அதிகம் கொழுப்பு உள்ளது. வேக வைத்தாலும் அந்த கறியில் உள்ள புழுக்கள் இறப்பதில்லை. பன்றிக்கறி சாப்பிடுவதால் பல நோய்கள் தொற்றுகின்றன என்ற மருத்துவ அறிக்கையையும் படித்துப் பாருங்கள்.

    1. Avatar
      தங்கமணி says:

      //ஆனால் அப்படி சாப்பிடுபவர்களை குறை கூறி திரிய மாட்டார்கள்.//
      என்று சொல்லிவிட்டு அடுத்த பதிலிலேயே பன்றிக்கறி தின்பதை குறைசொல்ல ஆரம்பித்துவிட்டீர்களே..!

      அது சரி, ஒரு சவுதிநாட்டு குடிமகன் விற்றால் தண்டனை இருக்காதா? சவுதி நாட்டு குடிமகன்கள் பலர் கிறிஸ்துவர்களாக மாறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களில் சிலர் பன்றிக்கறி தின்றால் சட்டம் ஒன்றும் செய்யாதா?
      அதுசரி, ஏன் பன்றிக்கறி தின்பதை சவுதி அரசு தடை செய்கிறது? இஸ்லாம் தடைசெய்கிறது என்பதால்தானே? ஆக இந்தியாவில் மத ரீதியாகவோ, பழக்க வழக்க ரீதியாகவோ உணவுப்பொருட்களை தடை செய்வது தவறு. ஆனால், சவுதி அரேபியாவில் தடை செய்வது சரி!

    2. Avatar
      பூவண்ணன் says:

      வேக வைத்தாலும் புழுக்கள் இறப்பதில்லை என்று அடித்து விட கூடாது
      இப்போது பன்றி கறி உண்ணுவதால் neurocysticercosis வருவதை விட காய்கறி salad மூலம் அதிகம் வரும் வாய்ப்பு உண்டு
      பச்சையாக உண்ணும்,சரியாக வேகவைக்கபடாத உணவால் தான் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு
      http://www.fsis.usda.gov/FACTSheets/Parasites_and_Foodborne_Illness/index.asp

      How to prevent Taeniasis
      Cook all raw beef and pork steaks, chops, and roasts to a minimum internal temperature of 145 °F as measured with a food thermometer before removing meat from the heat source. For safety and quality, allow meat to rest for at least three minutes before carving or consuming. For reasons of personal preference, consumers may choose to cook meat to higher temperatures.

      வேற எதுவால எல்லாம் நோய்கள் வர கூடும் என்றும் பாருங்கள்

      How do people get cysticercosis?
      People get cysticercosis the following ways:

      By consuming food or water contaminated with the eggs of T. solium (pork tapeworm). Worm eggs hatch and the larvae then migrate to various parts of the body and form cysts called cysticerci. This can be a serious or fatal disease if it involves organs such as the central nervous system, heart, or eyes.
      By putting anything into your mouth that has touched the stool of a person infected with T. solium.
      Some persons with intestinal tapeworms may infect themselves with eggs from their own feces as a result of poor personal hygiene.

  109. Avatar
    தங்கமணி says:

    அட. நான் கேட்ட கேள்விக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிவிட்டது போல காவ்யா கேட்ட கேள்விக்கு இன்னொருவர் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறீர்கள்.

    சரி அதற்கும் பதில் சொல்லுகிறேன்.
    உங்களது இஸ்லாமில் ஆயிரத்தெட்டு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் ஷியா ஒருவர் பேசியதற்கு தீவிரவாத வஹாபியான உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? அல்லது தாலிபானிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?

    நீங்கள் அவனை தீர்த்துக்கட்டு என்று சொல்லலாம். இந்துக்கள் அப்படி சொல்லமாட்டார்கள். காலப்போக்கில் அவர்களது குணம் மாறும், கருத்துக்கள் மாறும், கருத்துக்களை மாற்ற முயற்சி செய்வோம் என்று சொல்வார்கள்.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவன் அப்படி செய்தானே என்று இன்றைய இந்து ஒருவரிடம் கேட்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் காலம் மாறுகிறது, சட்டங்கள், நியதிகள் ஒழுக்க மதிப்பீடுகள் மாறுகின்றன. இந்து ஆன்மீகம் அப்படியே இருக்கிறது.
    ஆனால், முஸ்லீமிடம் கேட்பதில் பொருளிருக்கிறது. ஏனெனில் உங்களது சட்டம் நீங்களே சொல்வது போல மாறாத சட்டம். அப்படிப்பட்ட இஸ்லாமில் ஏன் அல் அக்தும் சாதியினரை தீண்ட்த்தகாதவர்களாக 1400 வருடம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதில் பொருளுண்டு. அதனை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

  110. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //ஆனால், முஸ்லீமிடம் கேட்பதில் பொருளிருக்கிறது. ஏனெனில் உங்களது சட்டம் நீங்களே சொல்வது போல மாறாத சட்டம். அப்படிப்பட்ட இஸ்லாமில் ஏன் அல் அக்தும் சாதியினரை தீண்ட்த்தகாதவர்களாக 1400 வருடம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதில் பொருளுண்டு. அதனை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்//.

    நான் முன்பே கூறி விட்டேன். குர்ஆனிலோ நபி மொழிகளிலே தீண்டாமை கிடையாது. அதற்கு எதிரான கருத்துக்களே உள்ளதாக கூறியுள்ளேன். நீங்கள் குறிப்பிடும் அல் அக்தும் என்ற பிரிவினரின் மூதாதையர் இஸ்லாத்துக்கு முன் அடிமைகளாக அரபு நாடுகளுக்கு ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டவர். முகமது நபி காலத்தில் இவர்கள் விடுதலையாக்கப்பட்டு சுதந்திரமானவர்களாக ஆகி விட்டனர். இவர்கள் பள்ளியில் தொழ எந்த தடையும் இல்லை. பெருநாட்களில் மற்ற அரபிகள் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிக்காட்டுவர். அரசு பல திட்டங்களை தீட்டி அவர்களின் முன்னேற்றத்துக்கு பல வழிகளையும் செய்தே வருகிறது. புதிதாக கட்டிய வீடுகளை விட்டு சேரி போன்ற பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அப்படி வாழ்வதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர்.

    1. Avatar
      தங்கமணி says:

      ஏமனில் ஜாதி முறை
      http://www.countercurrents.org/hr-marguerite250404.htm
      அவர்களது தட்டுக்கள் கூட தீண்டத்தகாதவை. நீங்கள் அவர்களை கட்டித்தழுவி அன்பை வெளிக்காட்டுகிறார்கள் என்று அள்ளுகிறீர்கள். உங்களது பிரச்சார எழுத்துக்களுக்கு ஒரு அளவு இல்லையா?
      Even their plates are considered dirty. “Don’t eat with the Akhdam because worms come out of their plates,” the saying goes.
      அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொழில் தெருக்களை சுத்தம் செய்வது.

      Today, the most common job for male Akhdam is street cleaning. They also work as porters, foot soldiers and shoemakers. Women and children beg.

      http://www.nytimes.com/2008/02/27/world/africa/27iht-yemen.1.10463399.html?_r=1
      //புதிதாக கட்டிய வீடுகளை விட்டு சேரி போன்ற பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அப்படி வாழ்வதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர்//

      இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? அடேங்கப்பா. அரபியர்களுக்கு அல் அக்தம் மீது இருக்கும் வெறுப்பும் தீண்டாமையும் உங்களுக்கும் தொற்றிவிட்டது போலிருக்கிறது.

  111. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //Even their plates are considered dirty. “Don’t eat with the Akhdam because worms come out of their plates,” the saying goes.//

    இந்த மக்கள் இஸ்லாம் வருவதற்கு 600 வருடங்களுக்கு முன் எத்தியோப்பியாவிலிருந்து ஏமனுக்கு வந்தவர்கள். பல ஆண்டுகள் ஏமனில் வாழ்ந்த ஒருவர் இவர்களைப் பற்றி சொல்வதைப் பாருங்கள்:.

    “One common critique of the Akhdam from Yemenis is that they have done nothing to fight for change within society, or to improve their own lives. Some think that many have appropriated a collective ‘helpless’ status, simply accepting their banal lives and fetid living situations.”

    தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள எந்த முன்னேற்பாடும் செய்து கொள்வதில்லை. ஏற்கெனவே அரபுலகில் ஏமன் வறிய நாடு. அந்த நாட்டு அரசு சொந்த மக்களையே சிறப்பாக வைத்திருக்கவிலலை. ஏனெனில் பொருளாதாரத்தில் வளம் குன்றிய நாடு. இவர்கள் வந்தேறிகளை முன்னேற்றுவதில் எவ்வாறு அக்கறை செலுத்துவார்கள்.

    அந்த எத்தியோப்பிய வழி வந்த முஹம்மது அமூதி சவுதி அரேபியாவில் எவ்வாறு உள்ளார் என்பதை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    Son of a Saudi father and Ethiopian mother, Mohammed Al Amoudi started investing in Sweden in the 1970s. He made his initial fortune in construction in Saudi Arabia.

    http://www.forbes.com/profile/mohammed-al-amoudi/

    இதே எத்தியோப்பிலிருந்து வந்த முஹம்மது அமூதியின் தாய் சவுதி அரேபியரை திருமணம் முடித்தார். அதன் பிறகு முஹம்மது அமூதி சவுதியில் பல தொழில்களிலும் முன்னேறி இன்று தனது தாய் நாடான எத்தியோப்பியாவிலும் பல தொழில்களை தொடங்கியுள்ளார். உலக கோடீஸ்வரர்களில் நம் அம்பானி, முகேஷோடு போட்டி போடுகிறார். சவுதி மன்னரை விட அதிக சொத்துகள் இந்த ஆப்ரிக்க வழி வந்தவரிடம் குவிந்துள்ளது. இவரை யார் தடுத்தது? 12.5 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக உள்ளார்.

    http://www.thepatrioticvanguard.com/spip.php?article6654

    ஒரு ஆப்ரிக்க கருப்பினத்தவர் இறந்தவுடன் எந்த அளவு மரியாதையோடு மற்ற முஸ்லிம்களால் அவரது உடல் புதைக்கப்பட்டது என்பதை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    எனவே எமனில் எத்தியோப்பிய நாட்டவர் வறுமையில் உழல்வது ஏமனின் பொருளாதாரத்தாலும், அந்த மக்களின் சோம்பலாலும் தானே யொழிய இதற்கு இஸ்லாம் காரணமாகாது.

    இங்கு நானும் எனது பாஸூம் (சவுதி) சில நேரம் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். ஆப்ரிக்கர்கள் சுத்தமில்லாமல் அழுக்குடன் இருக்கும் போது ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட எவருக்கும் மனது வருமா? அவர்கள் தங்களின் வாழ்வு முறையை சுத்தமாக்கிக் கொண்டால் அனைத்து முஸ்லிம்களும் அமர்ந்து சாப்பிடுவர்..

    உங்களைப் போல் நீங்கள் சாப்பிட்ட எச்சில் தட்டில் தலித்களை புரள சொல்வது போல் புரள சொல்ல மாட்டோம்.

    Would it be permissible to eat from the same plate as a non-Muslim, provided that the food in it self is halal? What if the non-Muslim has eaten something unlawful earlier and I fear that he/she has not washed their hands, causing some haram from their hands to mix with the halal food?

    Walaikum assalam wa rahmatullah,

    I pray that this finds you well, and in the best of health and spirits. May Allah grant you all good and success in this life and the next.

    It is permitted to eat from the same plate as a non-Muslim. The basic assumption of purity isn’t lifted by mere possibility. However, it is recommended to exercise precaution when possibilities are based on reasonable fears–rather than mere misgivings.
    And Allah alone gives success.
    Faraz Rabbani

    http://www.youtube.com/watch?v=YA_zUxi4T2g

    http://www.youtube.com/watch?v=4rKePkKXqyM

    http://www.youtube.com/watch?v=rp_KBONLYZI&feature=related

    நாடு இனம் மொழி அனைத்தும் கடந்து ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்தில் அமர்ந்து அனைவரும் சாப்பிடும் அழகைப் பாருங்கள். நமது நாட்டில் இது சாத்தியப்படுமா? இன்னும் எச்சில் இலையில் அல்லவா புரண்டு கொண்டிருக்கிறோம்.

    1. Avatar
      தங்கமணி says:

      கொடுமையடா சாமி.
      சிரியானா படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு சவுதி சவுதி அல்லாத ஒருவனை பார்த்து கூட சேர்ந்து சாப்பிடுவான். அந்த சவுதி அல்லாதவன் புல்லரித்துப்போய்விடுவான். பிறகு அந்த சவுதி அவனிடம் போதித்து, குண்டுகட்டிவிட்டு தற்கொலைப்படையாக அனுப்புவான். அவனும் போய் வெடித்து சாவான்.

      உங்களுடைய மேனேஜர் உங்களோடு சாப்பிடுகிறார் என்று புல்லரிக்கிறீர்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும்.

      நீங்கள் காட்டிய சுட்டியில் படத்தில் எல்லோரும் கருப்பினத்தவராகத்தான் இருக்கிறார்கள். இஸ்லாமிக் பிரதர்ஹூட் என்றால் ஐந்து கருப்பினத்தவர் தன்னந்தனியாக தூக்கிக்கொண்டு போவதுதானா?
      சரி இதில் ஏதோ உங்களுக்கு புல்லரிக்க இருக்கிறது. இருந்துவிட்டு போகட்டும்.
      அதே போல உங்களது சவுதி இளவரசர் ஒரு கருப்பினத்தை சேர்ந்த வேலையாளை இங்கிலாந்து ஹோட்டலில் அடித்தே கொன்றதும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அதனை இங்கே புல்லரிக்க உபயோகப்படுத்தமுடியாதே.

      அது சரி, காபிர்கள் எல்லாம் நஜஸ், அதாவது தீண்டத்தகாதவர்கள் என்று கருத்து இருக்கிறதே. அதனை பற்றியும் விளக்கலாமே?


      ஆனாலும், ஒரு ஜாதியினரை கீழே தாழ்த்தி, அவர்களது நிலைக்கு அவர்களே காரணம் என்று சொல்வதுதான் என்னைப் பொறுத்த மட்டில் உச்சகட்ட கொடுமை, அடக்குமுறை தீண்டாமை.

      திருந்தப்பாருங்கள். உங்கள் சவுதி அரேபியா செய்வதெல்லாம் உங்களுக்கு ரொம்ப சரியானதாக இருக்கலாம். அதனை வெளியே சொல்லி அசிங்கப்பட்டுகொள்ளாதீர்கள். இந்த மாதிரி உங்களது வக்கிர புத்தியை காட்டினால், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் காவ்யா போன்றவர்கள் கூட ஓடிவிடுவார்கள்.

  112. Avatar
    மலர்மன்னன் says:

    சுவனப் பிரியன், ஹிந்துக்கள் மாற்று மதங்களுக்கு மாறிவிடக் கூடாது என்பதில் உங்களுக்கு இருக்கும் கவலையைப் பாராட்டுகிறேன். என்னதான் இருந்தாலும் பழைய பாசம் விட்டுப் போகுமா? ஆனால் உங்கள் இஷ்டத்துக்குக் குரான் வாசகங்களுக்கு விளக்கம் அளிப்பதால் இப்போதே உங்கள் மதத்தவர் பலர் உங்கள் மீது சீற்றம் கொண்டுள்ளார்கள். இப்போது ஹிந்து மதத்தவர் மீது உங்கள் பழைய பாசம் உங்களையும் அறியாமல் பீறிட்டெழுகிறது. சவூதியில் இருப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறீர்கள். நீங்கள் சிறிது முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது! புரி சங்கராசாரியார் பேச்சைக் கேட்பவர்கள் எத்தனைபேர்? ஜகஜீவன் வந்துபோனதற்காக எவராவது சுத்தி சடங்கு செய்திருந்தால் அதற்கு நாங்கள் எல்லாரும் எப்படிப் பொறுப்பாவோம்? இஸ்லாத்தில் உள்ள ஃபத்வா வசதி எல்லாம் இங்கே கிடையாது! இம்மாதிரியான அபத்தமான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? உங்கள் நிலைமை எவ்வளவு கீழே போய்விட்டது பார்த்தீர்களா? இதற்குத்தான் சேரிடம் அறிந்து சேர் என்பது! என்னிடமிருந்து ஹுசைனி பிராமணர்கள் சமாசாரம் மாதிரி எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தும் வெட்டிப்பேச்சில் நான் இறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டீர்களே! தவறான தகவல் தந்தமைக்குப் போனால் போகிறது என்கிற தொனியில் காலங் கடந்து, அதுவும் நான் சுட்டிக் காட்டிய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவிக்கிறீர்கள்! உங்களைப் பற்றி எனக்கு இருந்த மதிப்பீடு மளமள வெனக் கீழே போக நீங்களே காரணமாகிறீர்களே! என்னதான் நான் சாதாரண ஆள் என்றாலும் நீங்களே என்னை உங்கள் பாட்டனாக ஏற்றுக் கொண்டிருப்பதாக வாக்கு மூலம் அளித்திருப்பதால் பாட்டனின் அபிப்ராயத்தில் ஒரு பேரன் கீழே சரியலாமா? இனியாவது சட்டென விலகி வந்து விடுங்கள். சகவாச தோஷத்தால் ஏற்கனவே நீங்கள் இடும் எதிர் வினைகள் அபத்தமாகி வருகின்றன!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      – மலர் மன்னன் !

      – இந்த் ட்ரிக்ஸ் வேலையெல்லாம் வேண்டாம். அவர் எழுதுவதை தடுத்துவிட்டால் எல்லாம் மறைந்து விடுமென நினைக்கிறீர்கள். சுவனப்பிரியன் போனபின் கவனப்பிரியன் வந்து சேர்வார். நீங்கள் எழுதுங்கள்; அவரும் எழுதட்டும். படிப்பவர்கள் அவர்களே தீர்மானிக்கட்டும்

      – இந்துவில் தீவிர இந்து என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் மட சேனா இல்லையென்கிறீர்களா? அஃது ஒவ்வொரு ஆண்டும் நடப்பது தெரியாதா? கருநாடகா பார்ப்பன அமைச்சர் ஆச்சாரியா அதைச் சரியென்று சொல்லி தடை செய்யமுடியாதென்றது தெரியாதா? சாதிகள் என்றால் தலித்து வந்து சேருவான் என்று தெரிந்தேதானே சாதிகள் அவசியமென்கிறீர்கள்? உங்கள் ஜாதியாரை மலம் அள்ளச்சொல்லியிருந்தால் சாதிகள் உண்டென்பீர்களா? தனக்கு வந்தால்தானே தலைவலியும் திருகுவலியும்! சாதிகளைச்சரியென்பவர், ஜெகசீவன்ராம் வந்து போனவுடன் செய்யப்பட்ட சுத்திப்பரிகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லையென்றால் எப்படி?

      – சத்தியமேவே ஜெயதே நிகழ்ச்சியில் ஒரு சமசுகிருத பேராசிரியைச் சொல்லிச்சொல்லி அழுதததை இந்தியா முழுவதும் பார்த்ததே! நீங்கள் பார்க்கவில்லையா? மனம் நோகாமல அப்படியென்ன கல்மனசு உங்களுக்கு? அப்பெண் என்ன பத்துதலைமுறைகளுக்கு முன்னவரா? நம்மிடையேதானே வாழ்கிறார்?

      – பூரி சங்கராச்சாரியார் சொன்னதை விட்டுத்தள்ளிவிட்டு காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதைப்போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? தெய்வத்தின் குரல் என்ற அவர் நூலில் பரப்பப்படும் சாதீயக்கொள்கையை இங்கு விரித்தால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லையென்பீர்களா? (வருணம் வேறு; சாதி வேறு என்ற உட்டான்ஸ் வேண்டாம். தலித்தை கோயிலுக்குள் நுழையாதே என்று அன்று சொன்னதும், இன்று எங்களைத் தவிர வேறு ஆரும் பூஜாரி ஆகக்கூடாது ஒன்றே. இன்று வருணம் சாதி என்ற வேறுபாட்டை பாமரன் உணரந்து புரிவதன்று; அவன் புரியாததே உங்கள் ஜாதியாருக்கு இனிப்பு. ஏனெனில் புரியப்பட்டால் அவ்வேறுபாட்டின்படி இன்று எவனும் தன்னைப்பிராமணன் என அழைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் பிராமணன் என்றுதான் எழுதி ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பாமரன் புரிந்தால் உங்கள் கதி? சமநிலைதான். கசக்கும். பூனுல் கிடையாது. ஆவணி அவிட்டமும் கிடையாது. பூனூல் போட்டு இருபிறப்பாளர் என்ற கதையெல்லாம் விட முடியாது. இன்று எவரும் பிராமணன் கிடையாது.

      – என் கருத்து:

      – “அன்று… இன்று… அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்றெல்லாம் நீங்கள் சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள். நீங்கள் சாதிகளையும் புரட்டுக்களையும் சரியென்று திண்ணையில் விதவிதமாக எழுதிக்கொண்டுவருபவர். என் கருத்துக்களுக்கும் எனக்கு நேராகப் பதில் சொல்ல உங்களால் முடியவில்லையே ஏன்?

  113. Avatar
    suvanappiriyan says:

    //அது சரி, காபிர்கள் எல்லாம் நஜஸ், அதாவது தீண்டத்தகாதவர்கள் என்று கருத்து இருக்கிறதே. அதனை பற்றியும் விளக்கலாமே?//

    சும்மா அள்ளி விடக் கூடாது. எந்த குர்ஆன் வசனம். அல்லது எந்த நபி மொழி. ஆதாரம் தரவும்.

  114. Avatar
    மலர்மன்னன் says:

    //சார் வெள்ளைக்காரன் தான் இந்தியாவிற்கு விடுதலை பெற்று கொடுத்தான் என்பதற்கும் வைத்தியநாத ஐயர்,முத்துராமலிங்க தேவர் தான் தீண்டத்தகாத சாதிகளின் கீழ் வந்தவர்கள் கோவிலுக்குள் நுழைய வழி செய்தார்கள் ,போராடினார்கள் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.-பூவண்ணன்//

    நான் வருடம் பற்றிய ஒரு பிழையான தகவலைத் திருத்தினேன் அவ்வளவுதானே? நான் ஏதோ எவரையோ இதில் முன்னோடிகள் என்று சொன்னதைப்போல் இல்லாததை இருப்பதாக பாவித்துக்கொண்டு ஏன் சிரமப்பட்டு பதில் சொல்லி கால விரையம் செய்கிறீர்கள்? மேலும் என்னிடம் அம்பேத்கர் உரை, எழுத்து முழுத் தொகுப்பும் உள்ளது. என் சம்பாத்தியம் எல்லாம் புத்தகங்கள் வாங்குவதற்கே சரியாகப் போய்விடும்! அம்பேத்கர் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தது என்னவோ 1935-ல்தான். ஆனால் வெளியேறியது இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் 1956-ல் தான்! ஏன் அவ்வளவு இடைவெளி? யோசிக்க வேண்டாமா? இன்னொரு தகவல்: டாக்டர் அம்பேத்கர் வீர சாவர்கர் தாழ்த்தப் பட்டோருக்காகக் கட்டிய பதித பாவன நாராயாணர் கோயிலுக்கு வருகை புரிந்து சாவர்கரைப் போற்றினார். மஹர்கள் அம்பேத்கர் தலைமையில் நடத்திய சமுதாயக் கட்டுப்பாட்டை மீறிக் குளத்தில் இறங்கும் போராட்டத்தை சாவர்கர் ஆதரித்தார். ரத்னகிரி ஊர் எல்லையவிட்டு வெளியேறக் கூடாது என்று ஊர்ச் சிறை வைக்கப்பட்டிருந்ததால் சாவர்கரால் அந்தப் போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. சாவர்கர் போன்றவர்களால் ஹிந்து சமூகம் வழி நடத்தப்படுமானால் அதிலிருந்து வெளியேற மாட்டேன் என்று அம்பேத்கர் சொன்னார்!
    பூவண்ணன், நீங்கள் மிகவும் விவரம் தெரிந்தவராக இருப்பது எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பது இவற்றின் தரத்தை மேம்படுத்தும். குலம் கோத்திரம் பற்றித் தனியாக ஆதாரப் பூர்வமாக ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். முதலில் என்னிடம் கட்டுரை கேட்கும் பத்திரிகை எதிலாவது பிரசுரித்துவிட்டு அதன் பிறகு மறு பிரசுரம் செய்யுமாறு வேண்டித் திண்ணைக்கு அனுப்புகிறேன். ஏனென்றால் எனக்குச் சோறு போடுவது எழுத்துதான். அதில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதம் எனது செலவுகளுக்கு வைத்துக்கொண்டு எஞ்சுவதைப் பல நற்பணிகளுக்குக் கொடுத்து வருகிறேன். இதைச் சொல்லக் காரணம், சந்நியாசி என்று சொல்லிக் கொள்கிறவனுக்கு வருமானம் ஒரு கேடா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்! இன்றைய கால கட்டத்தில் பவதி பிட்சாந்தேஹி என்று போவது மற்றவர்களுக்குச் சுமையாகத்தானே இருக்கும்?
    சிந்தனையாளர் ராமலிங்கர் என்ற தலைப்பில் சென்னை 24 பிரேமா பிரசுரத்துக்காக வள்ளலாரை ஒரு சமுதாயச் சீர்திருத்தவாதி என்ற கோணத்தில் எழுதத் தொடங்கி யிருக்கிறேன். நீங்கள் உங்கள் திருமணம் பற்றிச் சொன்னதால் இதைச் சொல்லத் தோன்றியது. இதே கோணத்தில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்காக சுவாமிஜியின் டாக்டர் சீடர் என ஒரு புத்தகம் எழுதிக் கொடுத்தாகிவிட்டது. நீங்கள் என் சஹ்ருதயராகத் தெரிகிறீர்கள். ஆகவே இதையும் சொல்லத் தோன்றியது.
    -மலர்மன்னன்

  115. Avatar
    மலர்மன்னன் says:

    பூவண்ணன், இன்னொரு சங்கதி. சமஸ்க்ருதத்தில் பசு என்றாலே மிருகம் என்றுதான் பொருள். பசு வதைக்குத் தடை கோருவது பொதுவான அர்த்தத்தில் சொல்லப்படும் பசு மாட்டை மட்டுமல்ல. நாட்டின் கால் நடைச் செல்வங்களைக் காக்க வேண்டியதன் அவசியம் வேண்டி, நம் நாட்டில் சட்ட விரோதமாகக் கேரளத்திற்கு அடிமாடுகளாகக் கடத்தப்படும் பசு எருது எருமை மாடுகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளோம். நாம் பேசுவது மதத்தின் நோக்கில் அல்ல, பொருளாதார வளம் பற்றிய கண்ணோட்டத்துடன்தான். சில ஆண்டுகளுக்கு முன் மங்களூர் வழியாகக் கால்நடைகள் காசர்கோடுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க ஏற்பாடு செய்தேன். நீங்கள் விரும்பினால், உங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால் ஸ்க்ரிப்டை அனுப்பித் தருகீறேன். ஓவ்வொரு ஆண்டும் எத்தனை லட்சம் கால்நடைகள் முதுமை அடைவதற்கு முன்பே கொல்லப்படுகின்றன என்பதை ஆதரப் பூர்வமாக நிரூபித்திருக்கிறோம். படித்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்!
    -மலர்மன்னன்

    1. Avatar
      பூவண்ணன் says:

      சார் மீன் பிடிப்பது போல கறிக்கு ஆடு,கோழி,முயல்,பன்றி ,பால்மற்றும் கறிக்கு எருமை, பசு வளர்ப்பது ஒரு தொழில்.
      அவற்றை கறிக்கு விற்க கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது

      மீன் வளம் பெருக குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடிக்க கூடாது எனபது போல சில கட்டுப்பாடுகள் வந்தால் தவறு ஏதுமில்லை
      ஆனால் குறிப்பிட்ட மிருகம் உயர்ந்தது,அதனால் அதை உண்ண கூடாது எனபது சரியா
      புலால் உண்ணாமை பற்றிய பிரசாரத்தை யாரும் குறை கூறவில்லை

      கோத்திரங்களை பற்றிய கேள்விகள் வினாக்கள் மட்டுமே.

      தமிழ் மொழி ஓரிடத்தில் பேசப்பட்டு அதை பேசுபவர்களால் பல இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கும்.இல்லை பலர் இங்கு வந்து அதை பேச கற்று கொண்டிருப்பார்
      அதே தானே வட மொழிக்கும்,வேதங்களுக்கும்.இந்தியா முழுவதும் சுயம்பாக தோன்றியது என்று நம்ப முடியுமா

  116. Avatar
    மலர்மன்னன் says:

    பூவண்ணன், கால்நடைச் செல்வம் நம் நாட்டுக்கு மட்டுமல்ல, பொதுவாக உலகச் சுற்றுச் சூழலுக்கே மிகவும் அவசியம். இயற்கை வேளாண்மைக்கும் அவசியம். கிராமப் புறங்களில் அது மிகப் பெரிய துணை. நான் முன்பே குறிப்பிட்டு விட்டேன். இதில் மதக் கண்னோட்டம் இல்லை, பசு என்றால் பொதுவாக நினைக்கப்படுவதுபோல பசு மாடு மட்டும் இல்லை என்று எழுதியதைப் படிக்கவில்லையா? இது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். டீஸல் தேவைக்கு அவசியம் குறைவதோடு, உரம், பயோவாயு எனப் பல பயன்பாடுகளுக்குக் கால்நடைகள் அவசியம். இறைச்சி உண்பதற்குத் தடை விதிக்க முடியாது. கால்நடைகளைக் கொல்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடை விதிக்க முடியும். பல விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன என்பதால் அவற்றை வேட்டையாடவோ கொன்று தின்னவோ தடை விதிக்கப்படுகிறது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.
    எப்படியோ, கோத்திரங்கள் பற்றி எழுதுவதற்குத் தூண்டு கோலாகிவிட்டீர்கள். இங்கு உங்களை முன்னிட்டு எனது எதிர்வினையில் கோத்திரம் பற்றிக் குறிப்பிட்டதைப் படித்துவிட்டு அதைப்பற்றி எழுதச் சொல்லி மின்னஞ்சல்கள் வருகின்றன!
    வடமொழி என்பது சரியல்ல. ஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அது உருவாகி வந்துள்ளது. சமஸ்க்ருதம் என்று அதற்குரிய பெயரைச் சொல்வதே சரி. திசைகளை வைத்து மொழியைக் குறிப்பிடுவது சரியல்ல. ஒரு திசையில் பல மொழிகள் வழங்கப் படலாம். மேலும் சமஸ்க்ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருந்ததற்குச் சான்று இல்லை. ஆனால் அது பல மொழிகளில் கலந்துள்ளது. பல மொழிச் சொற்களுக்கு சமஸ்க்ருதச் சொற்கள் வேர்ச் சொற்களாக அமைந்து உதவியிருக்கின்றன. ஒரு பொது மொழியை உருவாக்கும் உத்தேசத்துடன் பல திசைகளையும் சேர்ந்த மொழி இயல் நிபுணர்கள் சேர்ந்து சம்ஸ்க்ருதத்தை உருவாக்ககியதாகவே தோன்றுகிறது. ஏனெனில் முக்கியமான பல துறைகள் சார்ந்த சாத்திரங்கள் சமஸ்க்ருதத்திலேயே இயற்றப் பட்டுள்ளன.
    ஆ, வேதங்கள்! அவை தவயோகிகளால் உள்வாங்கப்பட்ட தத்துவம் வாய் வழியே வெளிப்பட்டு மற்றவர்களால் செவிகள் வாயிலாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரிகள். திருமந்திரம் போலவே மேலோட்டமான பார்வையில் ஒரு பொருளையும் ஆழ்ந்து கவனிக்கையில் அரிய பொருளையும் தருவன. வரி வடிவங்களில் அவை அமையாத காரணம் பற்றியே சுயம்புவாகத் தோன்றியதாகச் சொல்லப் படுகின்றன. மற்றபடி எந்த ஒன்றுக்கும் ஒரு புராணம் கற்பிக்கப்படுவதுபோலத்தான் இதுவும். நாம் அதைப் பெரிது படுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. தத்துவங்களுக்கு நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டியது புராணக்கதைகள், நம்பிக்கைகளை அல்ல. புராணங்களின் தேவை வேறு. அவற்றைத் தூக்கி எறிந்துவிடவும் கூடாது. அவற்றை வேறு வகை ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேதங்கள் பலவற்றுக்கு ஊற்றுக் கண்ணாக இருப்பவை. இறைவன் அவற்றை பல நபர்கள் வழியாக இறக்கினான் என்பதெல்லாம் கிடையாது. பக்குவப்பட்ட மனதில் தோன்றும் ஆழ்ந்த ஞானம் விதிகளாகவும் விளக்கங்களாகவும், கருத்துகளாகவும் வெளிப்படுகின்றன. அவை சிறந்து விளங்குவதால் புனிதமானவை எனப் போற்றப் படலாயின. உள்மனதில் நமக்குத் தோன்றுவதை இறைச் சக்தியின் கட்டளையாகவே உணர்கிறோம். அதுபோலத்தான் இதுவும். இதோ இப்போது உங்களுக்கு எழுதுவதும்கூட இறைச் சக்தியின் கட்டளையாகத் தோன்றுவதால்தான் மெனக்கெட்டு வலியைப் பொறுத்துக் கொண்டு விரிவாக எழுதுகிறேன். பூவண்ணன் இவற்றை ஏற்கலாம், ஏற்காமலும் போகலாம். ஆனால் வேறு எவருக்காவது இவை ஏற்கத் தக்கவையாகவும் அறிவுக்கு உணவாகவும் அமைந்து விடலாம். ஆக பூவண்ணன் நிமித்தமாக அவருக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்காகவும் இவை எழுதப்படுகின்றன.
    -மலர்மன்னன்

    1. Avatar
      பூவண்ணன் says:

      பல பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஒரு பொது மொழியை தயார் செய்வது இன்று கூட சாத்தியமல்ல
      அப்படி இருக்கும் போது நீங்கள் பல தேசங்கள்,பல திசைகளை சார்ந்த கடல் கடக்காத பலர் கூடி சமசுகிரிதத்தை உருவாக்கி இருப்பார்கள் என்று நம்புவது ஆச்சரியமாக உள்ளது
      இன்றும் எழுத முடியாத பேச்சு மொழிகள் பல வழக்கில் உள்ளன .அவற்றை வட கிழக்கில் ஆங்கிலத்தில் எழுதி பத்திர்க்கையாக கூட நடத்துகிறார்கள்
      எழுத்து வடிவம் உள்ள மொழியான சமசுகிரிததில் அதே போல பல துறைகள் சார்ந்த சாத்திரங்கள் சமசுகிரிடஹ்தில் எழுதப்பட்டிருக்கலாம்

      ஜோசப்,முஹம்மத் என்ற பெயர்கள் சுயம்பாக உலகம் முழுவதும் வந்திருக்குமா,அதே தானே காஷ்யப,பாரத்வாஜ,கௌடின்ய

  117. Avatar
    மலர்மன்னன் says:

    பூவண்ணன், தீண்டாமை எதிர்ப்பு அம்பேத்கர் காலத்துக்கும் முன்னரே ராமானுஜர் காலத்திலேயே செயல் வடிவில் தொடங்கிவிட்டது. அதற்கும் முன்பே முயற்சி நடந்தமைக்கும் சான்று உண்டு. அம்பேத்கர் காலத்தில் அரசியல் சமுக அமைப்பு சாதகமாக அமைந்ததால் சட்டம் இயற்ற முடிந்தது. ஆனால் மக்களிடையே மன மாற்றம் ஏற்பட்டாலன்றி இதை முற்றிலுமாகக் களைய இயலாது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      பூவண்ணன் says:

      குரங்கிலிருந்து மனிதனான போதே கூட தீண்டாமை எதிர்ப்பு சிலருக்கு இருந்திருக்கலாம்.அதனால் மாற்றங்கள் வந்ததா எனபது தானே முக்கியம்
      சட்டம் போட்டு அனைத்து வேலைகளிலும்,ஆட்சியிலும் பங்கு என்று வரும் போது தான் மாற்றம் வருகிறது,வேகமாக வருகிறது
      தீண்டத்தகாத சாதிகள் என்று இருந்த சாதிகளில் இருந்து தேவதாசிகள் இருந்ததும் பல நூற்றாண்டாக இருந்த ஒன்று தான்.அதை புரட்சி என்று சொல்லலாமா
      அனுலோமா திருமணங்களுக்கு தடை என்றும் இருந்தது இல்லையே.அதை கூட ராமானுஜர் புரட்சி போல எடுத்துகாட்டாக கூறலாமே
      பிரதிலோமா திருமணங்கள் புதிதாக தீண்டதாகாதவர்களையும் உருவாக்கியது தானே ராமானுஜர் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னும் நடை பெற்று வந்தது

  118. Avatar
    Kavya says:

    மலர்மன்னன்!

    என்று வருணாஷ்ரம் எழுதப்பட்டதோ அன்றிலிருந்து தீண்டாமை தொடங்கியது. அப்போது நாமிருந்தோமா எப்படிச்சொல்கிறாய் என்றால், இப்படிச்சொல்லலாம்: வருணாஷரம் நான்கு வருணத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது. நான்கிலும் வாரா மக்களே தீண்டத்தகாதவராயினர். ஏனெனில் அவர்களுக்கு இந்துமதத்தில் இடமில்லை. அக்காலத்தில் அனைவரும் இந்துமதமே. பின்னாளில்தான் சமணமும் பவுத்தமும் இவ்வருணக்கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கின. மதவழியாக வந்ததுதான் தீண்டாமை. பின்னர் சமூகத்தில் நச்சுக்காற்றாய்ப் பரவியது. மக்களில் ஒரு சாரார் இக்கொடுமைக்காளாகினர். இதை எவரும் மறுக்கவில்லை.

    நல்லோர் எக்காலத்திலும் உண்டு. இன்று ஒரு அப்பாவியைப்போட்டு நால்வர் அடித்தால் அவனுக்காக ஆயிரத்தில் ஒருவராவது வருவாரன்றோ? அப்படித்தான் தீண்டாமை தோன்றிய காலத்திலும எதிர்ப்புக்குரல்கள் எழுந்திருக்கும். அவை வரலாற்றில் பதியப்படவில்லை.

    இராமனுஜர் காலத்தில் அவர் தன் மதத்தின் உள்ளின்றுதான் தீண்டாமையை எதிர்த்தார். அதாவது மதத்தில் சீர்திருத்தம் வேண்டுமென்றார். செய்தும் காட்டினார். தலித்துகளுக்கு அனுமதி கொடுத்தார் கோயில் சென்று வண்ங்க. ஆயினும் அவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய தீண்டாமையை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தலித்துகள் ஊருக்கு வெளியேதான் வைக்கப்பட்டனர். ஊருக்குள்ளே நுழையும்போது அவர்கள் ஆரென்று காணிபிக்க பல அடையாளங்களை அவர்கள் காட்டவேண்டும்.. இவற்றையெலலாம் இராமனுஜரால் தடுக்க வியலாது. அவர் வெறும் மதச்சீர்திருத்த வாதி மட்டுமே.

    அப்போதிருந்த சமூகத்தலைவர்கள் செய்திருக்க முடியும் செய்யவில்லை. ஏனென்று எனக்குத் தெரியாது. ஒருவேளை மன்னராட்சியினாலே.

    அம்பேத்கர் காலம் நம் காலம். வெள்ளையன் கற்றுக்கொடுத்த ஜனநாயம் வந்தததனாலேயே தீண்டாமையைச் சட்டம் போட்டு தடுக்க முடிந்தது. எனினும் நடக்கிறது. தலித்துப்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் பல மாநிலங்களில்.

    ஆக, நீங்கள் சொன்ன கருத்தின்படி, ஆதிகாலத்தில் தீண்டாமை எதிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் வெற்றி பெறாமல் உங்கள் வருணக்கொள்கை தடுத்தது. இராமனுஜரையும் தடுத்தது. உங்களை எதிர்த்து வெற்றி கண்டார் மதத்தில் மட்டும். பார்ப்பனர்கள் அவரைத் தூடனை பண்ணியது வரலாற்றில் அவர்களாலேயே எழுதப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் வெள்ளையனாலாயே வெற்றிகண்டார்.

    மக்கள் மனம் மாறுகிறதோ இல்லையோ, இந்து மதம் தன்னை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். அது வருணக்கொள்கையை உதறிவிட வேண்டும். ஹரிசண்டல், வெர்ட்டிக்கல் என்றூ நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு தலித்துகளை சமமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் செய்தால் மற்ற மக்கள் உங்களைப்பார்த்து திருந்தமாட்டார்களா என்ன? எங்கிருந்தோ வந்த ராஜீக்களையும் போற்றத்தெரிந்த நீங்கள் ஆதிகாலத்திலிருந்து தமிழ்மக்களிடையே வாழும் தலித்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதா என்ன? ஏற்றுக்கொள்வதென்றால், நோ வருணாஷ்ரதர்மம் என்று பொருள் !

  119. Avatar
    smitha says:

    171 Hindus arrive from Pakistan, seeking refugee status

    A batch of 171 Hindus today have arrived in Jodhpur from Pakistan after a three-month long arduous journey with leader of the group saying they were seeking a refugee status in India for the sake of “self-respect”, religious freedom and children’s future.

    They have been accommodated temporarily in a temple campus until proper arrangements are made.

    “We have intimated the chief minister about this, who was in Jodhpur today and expect him to direct the administration to make some arrangements for them,” said Singh Sodha, president of Seemant Lok Sangthan, an organisation fighting for the rehabilitation of Hindu migrants.

    “The exodus of Hindus from Pakistan on account of religious, financial and social persecution, is not a new phenomenon but this largest ever migration after the fencing on the Indo-Pak border, is a testimony that the conditions for the Hindu families in Pakistan continue to be intolerable and humiliating,” said Sodha.

    The group is led by Chetan Ram, who has been a sarpanch of his village.

    All of them have come incognito, not disclosing their departure even to their relatives.

    “If the news that we were planning or preparing to leave for India had spread, the masters, whom we serve, would have made it difficult or almost impossible for us to leave Pakistan driven by a fear that they will lose their labourers,” said Chetan.

    So as a strategy, all these families left their houses about 3 months back and kept changing their locations so as to do away with any suspicion to our masters or landlords.

    “And on Friday, we left for India leaving all our belongings back in Pakistan,” Chetan said.

    Islam oru amaidhi margam – correct, piriyan & kavya?

    1. Avatar
      Kavya says:

      I know only English with Tamil, Hindi and a slight Marati. Arabic s unknown to me.

      Why don’t u translate it into Sanskrit which may benefit more ppl?

      Thinnai Editorial board shd censor comments which r mainly written with malice towards individuals. It s their responsibility to keep the place free from personal attacks. Discuss and debate w/in the confines of decency and decorum in public place.

  120. Avatar
    பூவண்ணன் says:

    விஜயவாணி கட்டுரை செம காமெடி

    கட்டுரை சாதி எனபது தனி தனி வட்டம் போல இருந்ததாக அவரவர் அவரவர் பிறந்த சாதியின் தொழில் புரிந்து கொண்டு சாதிக்குள்ளேயே மணம் செய்து கொண்டு வாழ்ந்தது போல காட்டும் முயற்சி இப்போது சில ஆண்டுகளாக சாதி ஆதரவாளர்கள்@ஹிந்டுத்வர்களால் முன்னெடுக்கபடுகிறது
    இதை விட பெரிய பொய் கிடையாது

    சாதி என்பதே செய்யும் வேலைகளை குறிக்கும் சொல்.பிறப்பால் இவன் இன்ன தொழில் தான் செய்ய முடியும்,இன்ன செய்ய தகுதியில்லாதவன் எனபது தான் சாதியின் அடிப்படை.மருத்துவர்,பொறியாளர்,முடி திருத்துபவர்,பூஜை செய்பவர்,வணிகம் செய்பவர்,கணக்கு பார்ப்பவர்,போர் வீரர்,சலவையாளர்,மயான தொழிலாளி,ஆடை தைப்பவர் போன்றவற்றின் அடிப்படையில் உருவானது பிரிக்கப்பட்டது சாதி .

    ஒரே சாதிக்குள் திருமணம் எப்படி சாதிக்கு/வர்ணத்துக்கு முக்கியமோ(அது கூட ராஜாக்களுக்கும் ராஜகுருக்களுக்கும்,ஆண்களுக்கும் கிடையாது.நம்பூதிரிகள் வர்மா இன பெண்களை மணந்தாலும் அவர்களின் வாரிசுகள் கோவில் பணி செய்யலாம்.அவர்கள் நம்பூடிரிகலாக தான் கருதப்படுவார்கள்.ஆனால் வேறு வர்ண பெண்களை மணந்தால் அவர்கள் தாயின் வர்ணத்தை சேர்ந்தவர்கள்.தந்தையின் வர்ணத்தை மூன்று,ஐந்து,ஏழு தலைமுறைக்கு வழுவாமல் பின்பற்றினால் தந்தையின் வர்ணத்தை பெறலாம் என்று இருந்தது.ஒரே வர்ணத்துக்குள் திருமணம் என்பதில் பெரிய தடை கிடையாது.ஆண் தனக்கு கீழே உள்ள வர்ணத்தில் உள்ள பெண்ணை திருமணம் செயாவோ,வைத்து கொள்ளவோ தடை கிடையாது.பெண் செய்தால் அவர்களின் வாரிசுகள் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரில் தான் சேர்த்தி )

    சாதிக்கு
    முக்கியம் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தொழில்.
    அதை விட முக்கியம்
    யார் யாருக்கு கீழே
    யார் சொல்லை யார் கேட்க வேண்டும்
    குழப்பம் வரும் போது யார் சொல்லும் முடிவு இறுதியானது

    இப்படி இருக்கும் போது எல்லா சாதிகளும் பிரட்சினைகள் இல்லாமல் சமமாக வாழ்ந்து வந்தன என்று காட்டும் முயற்சிகள் முழு பசுமாட்டை அது போடும் சாணியில் மறைப்பது போல தான்

  121. Avatar
    பூவண்ணன் says:

    பல நூற்றாண்டுகளாக சாதிக்குள்ளயே திருமணங்கள் நடந்தது போல பலர் பேசுவது வியப்பளிக்கிறது
    அந்த வழக்கம் வெறும் உயர்சாதி பெண்களுக்கு மட்டும் தான்
    தன வர்ணத்திற்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்தவர்களை ஆண்கள் மணந்து கொள்ள எந்த தடையும் இருந்தது இல்லை
    தனக்கு கீழ் உள்ள சாதிகளில் இருந்து பெண்களை மூன்றாவது தாரமாக,இல்லை வைத்து கொள்வதோ சில வருடங்கள் முன் வரை சாதாரணமான வழக்கம்

    ஜெமினி கணேசனும் கலைஞரும் உறவினர்கள்.ஜெமினியின் தாத்தா புதுகோட்டை திவான் மனைவி இறந்ததும் கலைஞரின் அத்தையை குழந்தைகளை பார்த்து கொள்ள வைத்து கொண்டார்.அவர் மகள் தான் தேவதாசி தடை சட்டத்திற்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    எந்த சாதி பெண்ணை வேண்டுமானாலும் வைத்து கொள்வது உயர்சாதியினருக்கு மிகவும் சுலபமாக இருந்த ஒன்று

    இசை மூவர் என்று அழைக்கப்பட்ட மூவரில் D K பட்டம்மாள் பற்றி படியுங்கள்.

    damal krishnasamy pattammaal /madurai shanumugavadivu subbulakshmi /madras lalithaangi vasanthakumaariPattammal was born in an orthodox Brahmin family in Kancheepuram of Tamil Nadu, India.[4] She was named as Alamelu, but fondly called “Patta” as a child prodigy.[5][6] Her father, Damal Krishnaswamy Dikshithar, who was deeply interested in music, inspired her to learn Carnatic music.[7] Her mother, Kanthimathi (Rajammal), although a talented singer herself, was not permitted to sing even for friends or relatives in line with strict orthodox tradition.[7] Despite her orthodox background, Pattammal sang and showed considerable music talent at an early age.[4]

    மெட்ராஸ் லலிதாங்கி /மதுரை சண்முகவடிவு /முத்துலட்சுமி ரெட்டி எல்லாம் சம காலத்தவர்.அவர்களின் தந்தை பிறந்த சமூகத்திலா அவர்கள் வந்தனர்.
    இவர்கள் பெரிய கலைஞராக விளங்கிய அதே காலததவரான DK பட்டம்மாள் அவர்களின் தாயார் பாட கூட அனுமதியில்லாத நிலை ஏன்.
    திராவிட இயக்கம் வந்ததால் இவர்களின் தந்தை என்று google செய்தால் ஒரு பெயர் வருகிறது.
    மதுரை ஷண்முக வடிவுவின் தாயார் அக்கம்மாள் என்று தானே எவ்வளவு google செய்தாலும் வருகிறது

    திரு எம் எஸ் அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தாரே அவர் எந்த சாதியில் வருவார்

  122. Avatar
    பூவண்ணன் says:

    http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

    எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
    அவர் தந்தை சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
    அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.
    One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்

    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்
    சாதியை விட்டு விலக்கப்பட்டாலும்,ஊரை விட்டு ஒதுக்கப்பட்டாலும் அவருக்கு கீழ் சாதியில் பெண் கிடைப்பது எளிது தான்

    இது தான் சாதி
    சாதி என்பதே அடக்குமுறை தான்
    உயர்ந்த சாதி தனக்கு கீழ் உள்ள சாதிகளை அடிமைகளாக நடத்தும் உரிமை உள்ளது
    அதற்கான சட்டங்களும் அன்று இருந்தன

    1. Avatar
      தங்கமணி says:

      இது போன்ற பழக்க வழக்கங்களை மிகவும் ஆழமாக பல வரலாற்றாய்வாளர்கள் குறித்திருக்கிறார்கள். சாதிகளின் நெகிழ்வுத்தன்மை, சாதிகளின் இறுகிய தன்மை, பல குலங்கள் சேர்ந்து சாதிகளாக ஆனது, அந்த சாதிகளும் பொதுவாக ஒரு சாதிப்பெயரின் கீழ் வந்தது ஆகியவை anthropological ஆய்வுகளுக்கு உரியவை.

      இவைகளை ஆராய்வது சரியானதுதான். ஆனால் அவைகளை வைத்து இன்று தனக்கு உகந்த அரசியல் செய்து கொள்வது என்பதும் மற்றொன்று. அரசியல் என்று ஆகிவிட்டால், அவற்றில் உண்மைத்தன்மை கீழே இறக்கப்பட்டு, எதை வைத்து அரசியல் செய்யமுடியுமோ அது மட்டுமே மேலோங்கும் நிலை வந்துவிடும்.
      சாதிகள் இருக்கின்றன, சாதிக்கொடுமை இருந்தது, இன்றும் இருக்கிறது என்பதை யாரேனும் மறுக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி மறுப்பவர்கள் சுவனப்பிரியன் மாதிரியான மதவெறியர்களாகத்தான் இருக்கமுடியும். அவருக்குத்தான், கண் முன்னே இருக்கும் அல் அக்தும் சாதியினர் மீது நடத்தப்படும் கொடுமைகளை பூசி மொழுகி அரபு அரசர்களுக்கும் ஷேக்குகளுக்கும் வக்காலத்து வாங்க வைக்கும் அளவுக்கு மதவெறி.

      அது மாதிரி நிலை இந்துக்களுக்கு வரக்கூடாது.

      1. Avatar
        பூவண்ணன் says:

        தங்கமணி சார்

        சாதிகள் ஏதோ ஏற்ற தாழ்வுகள் இல்லாத ஒரே அலுவலகத்தில் இயங்கும் பல பிரிவுகள் போன்ற ஒன்று,அவசியமானது என்று எழுதும் போது,சாதிக்கும் போது எதிர்வினையாக சாதியின் கொடுமைகளை பட்டியலிடுவது தவறா
        உயர் சாதி ஆணுக்கு பெண்களை தூக்கி செல்ல சாதி தடை கிடையாது எனபது சாதி உருவாகிய காலத்தில் இருந்து உண்டு.

        பல தார மணம்(நாலு ,ஆறு என்று எந்த வித கட்டுப்பாடு கூட கிடையாது )என்பதும் வெகு சமீபத்தில் தான் அம்பேத்கர் புண்ணியத்தில் தவறு என்று ஹிந்டுத்வர்கள் எதிர்ப்புகளை மீறி சட்டத்தில்
        சேர்க்கப்பட்டது
        திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக வைத்து கொள்வது (இப்போது தான் நீதி மன்றங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் உரிமைகள் உண்டு,குழந்தைகள் திருமணமாகாமல் பிறந்தவர்களாக இருந்தாலும் உரிமை உடையவர்கள் என்று தீர்ப்பு வழங்க துவங்கியுள்ளன )உயர்சாதி ஆண்களுக்கு சாதி வழங்கிய உரிமை

        கேப்மாரி,சூரமாரி,பறையன்,பல்லன்,பள்ளி,சாணான்,பங்கி .சக்கிலியன்,கள்ளன் போன்ற சாதி பெயர்கள் உயர்சாதியினரால் வசவு சொற்களாக பயன்படுத்தப்பட்டவை ,பயன்படுத்தபடுகிரவை .
        இப்படி இருக்கும் போது எல்லா சாதியையும் ஒன்று தான்,ஏற்ற தாழ்வு இல்லை என்று எழுவது தவறல்லவா

  123. Avatar
    suvanappiriyan says:

    திரு காவ்யா!

    //I know only English with Tamil, Hindi and a slight Marati. Arabic s unknown to me.
    Why don’t u translate it into Sanskrit which may benefit more ppl?//

    இவர்களிடம் பதில் இல்லாத போது இது போன்று திசை திருப்பல்களைச் செய்வது புதிதல்லவே! :-)

    மேலும் இந்தியனின் பின்னூட்டத்தில் உள்ள சுட்டியை அரபியில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமாக சகோ பூவண்ணனின் விளக்கத்தையும் அரபிமொழியில் மொழி பெயர்த்தால் வெளங்கிடும். இந்தியர்கள் என்றால் கொஞ்சம் மரியாதை அரபுகளிடம் உண்டு. இதனை எல்லாம் மொழி பெயர்த்து இணையத்தில் விட்டால் இந்தியர்கள் அனைவரும் முக்காடு போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். நம் நாட்டில் நடந்த இன்றும் நடந்து கொண்டிருக்கிற இந்த வர்ணாசிரமக் கொடுமைகளை எல்லாம் தயவு செய்து யாரும் அரபியில் மொழி பெயர்த்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் மண்ணிலேயே இவைகள் மடியட்டும்.

    ஸ்மிதாவும், தங்கமணியும், மலர் மன்னனும் சகோ பூவண்ணனின் பின்னூட்டத்துக்கு தக்க பதிலை தந்து இந்தியர்களின் மானத்தைக் காப்பார்களாக! :-)

  124. Avatar
    Indian says:

    SP, you have never answered questions posted by Mr Thangamani. You should be the last person who should worry about this non response. I also feel it is a waste of time to answer to the likes of பூவண்ணன்s who still believe in the discredited theory of Aryan Invasion of India.When cornered, he either disappears from the scene or switch to unrelated topics.I never bother to read his diatribes. Kavya,relax. I will learn this great Sanskrit language and fulfill your WISH one day.

  125. Avatar
    பூவண்ணன் says:

    the responses are to the article in vijayvaani quoted by you. i read all the comments since i lack the intelligence to differentiate intelligent,true comments from stupid ones unlike you

    i neither disbeleive nor beleive any theory.

    ambedkar too has rejected the aryan invasion theory and even annadurai in his book aryamaayai says that aryans captured power by deceit and instilling fear and wrath of gods if they are disobeyed and not by war

    http://www.ambedkar.org/ambcd/

    There
    is another reason why the evidence of the Dharma Sutras that the Shudras are non-Aryans
    should not be accepted. In the first place, it is contrary to the view taken by Manu. In
    the decision of the issue whether the Shudra was an Aryan or a non-Aryan, the following
    verses from Manu require to be carefully considered :

    “If
    a female of the caste sprung from a Brahmana and a Shudra female, bear (children) to one
    of the highest castes, the inferior (tribe) attains the highest caste within the seventh
    generation.”

    “(Thus)
    a Shudra attains the rank of a Brahmana and (in a similar manner) a Brahmana sinks to the
    level of a Shudra; but know that it is the same with the offspring of a Kshatriya or of a
    Vaishya.”

    “If (a doubt) should arise, with whom the pre-eminence (is, whether)
    with him whom an Aryan by chance begot on a non-Aryan female, or (with the son) of a
    Brahmana woman by a non-Aryan;”

    The
    decision is as follows : ‘He who was begotten by an Aryan on a non-Aryan female, may
    become (like to) an Aryan by his virtues; he whom an Aryan (mother) bore to a non Aryan
    father (is and remains) unlike to an Aryan.’ ” [f54]

    Verse
    64 from Manu is also to be found in Gautama Dharma Sutra (uv.22). There seems to be some
    controversy as to the correct interpretation of this verse. In summing up the different
    interpretations, Buhler says:

    “According to Medh., Gov., Kull., and Ragh., the meaning is that, if the
    daughter of a Brahmana and of a Shudra female and her descendants all marry Brahmanas, the
    offspring of the sixth female descendant of the original couple will be a Brahmana. While
    this explanation agrees with Haradatta’s comment on the parallel passage of Gautama, Nar.
    and Nan. take the verse very differently. They say that if a Parasava, the son of a
    Brahmana and of a Shudra female, marries a most excellent Parasava female, who possesses a
    good moral character and other virtues, and if his descendants do the same, the child born
    in the sixth generation will be a Brahmana. Nandana quotes in support of his view,
    Baudhayana i. 16.13-14 (left out in my translation of the Sacred Books of the East, ii, p.
    197)… ‘(offspring) begotten by a Nishada on a Nishadi, removes within five generations
    the Shudrahood; one may initiate him (the fifth descendant); one may sacrifice for the
    sixth.’ This passage of Baudhayana the reading of which is supported by a new MS from
    Madras clearly shows that Baudhayana allowed the male offspring of Brahmanas and Shudra
    females to be raised to the level of Aryans. It is also not impossible that the meaning of
    Manu’s verse may be the same, and that the translation should be, ‘if the offspring of a
    Brahmana and of a Shudra female begets children with a most excellent (male of the
    Brahmana caste or female of the Parasava tribe), the inferior (tribe) attains the highest
    caste in the seventh generation.”

  126. Avatar
    பூவண்ணன் says:

    நீங்க சரின்னு சொல்லும் போது தலை ஆட்டனும்
    இல்ல தப்பு ன்னு சொல்லும் போது உடனே அதுக்கும் தலையாட்டனும்
    என்னா ஞாயம்பா இது

    கோத்திரம் எல்லாம் ஊரை ஏமாத்தருதுக்காக போட்டதுன்னு ஒத்துகிட்டா,கன்னியாகுமரில இருக்கிற பிராமனுணுக்கும் கஷ்மீரில இருக்குரவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது சும்மா உட்டாலக்கடியா சேர்த்திகிட்டதுன்னு சொன்னா கை தட்டி தான் வரவேற்போமே தவிர இல்ல இல்ல
    நீங்க காஷ்யப கோத்திரமா தான் இருக்கணும்னு சொல்ல மாட்டோம் http://www.ambedkar.org/ambcd/

    The
    mischief done by the Brahmin scholars to historical research is obvious. The Brahmin scholar has a two-fold interest in the
    maintenance of the sanctity of this literature. In the first place being the production of
    his forefathers his filial duty leads him to defend it even at the cost of truth. In the
    second place as it supports the privileges of the Brahmins,
    he is careful not to do anything which would undermine its authority. The necessity of
    upholding the system by which he knows he stands to profit, as well as of upholding the
    prestige of his forefathers as the founders of the system,
    acts as a silent immaculate premise which is ever present in the mind of the Brahmin scholar and prevents him from reaching or
    preaching the truth. That is why one finds so little that is original
    in the field of historical research by Brahmin
    scholars unless it be a matter of fixing dates or tracing genealogies. The non-Brahmin
    scholar has none of these limitations and is therefore free to engage himself in a
    relentless pursuit of truth. That such a difference exists between the two classes of
    students is not a mere matter of speculation. This very book is an illustraton in point. It contains an exposure of the real
    character of the conspiracy against the Shudras,
    which no Brahmin scholar could have had the
    courage to present.

    Having noted the phenomenon in the Arctic region, Mr. Tilak proceeds to argue
    that :

    “If
    a Vedic description or tradition discloses any of the characteristics mentioned above, we
    may safely infer that the tradition is Polar or Circum-Polar in origin, and the
    phenomenon, if not actually witnessed by the poet, was at least known to him by tradition
    faithfully handed down from generation to generation. Fortunately there are many such
    passages or references in the Vedic literature, and, for convenience, these may be divided
    into two parts; the first comprising those passages which directly describe or refer to
    the long night, or the long dawn; and the second consisting of myths and legends which
    corroborate and indirectly support the First.”

    Mr.
    Tilak is satisfied that the description of natural phenomenon and the myths and legends
    contained in the Vedas tally with the natural phenomenon as it exists near the North Pole
    and concludes that the Vedic poets i.e., the Vedic Aryans must have had the Arctic region
    as their home.
    This
    is of course a very original theory. There is only one point which seems to have been
    overlooked. The horse is a favourite animal of the Vedic Aryans. It was most intimately
    connected with their life and their religion. That the queens vied with one another to
    copulate with the horse in the Ashvamedha Yajna [f11]
    shows what place the horse had acquired in the life of the Vedic Aryans. Question is : was
    the horse to be found in the Arctic region? If the answer is in the negative, the Arctic
    home theory becomes very precarious.

  127. Avatar
    பூவண்ணன் says:

    http://www.hindubooks.org/sudheer_birodkar/hindu_history/practices2.html

    Gotra Originated as the Common Cowpen or Cow Shed During the Tribal Aryan Past

    The origin of this concept of Gotra also seems to lie in a tribal ethos and is linked to the system of common ownership of property. The word Gotra literally means cowpen or cowshed and is derived from “Go” meaning cow.

    With the domestication of animals, cattle became an important source of meats and milk. With the rearing of cattle, hunting as the principal source of subsistence lost its importance and the lifestyle became less nomadic as compared to the earlier days when hunting was the main activity of sustenance. With the coming of a pastoral way of life it was possible to have individual ownership of the means of subsistence which was impossible during the days of hunting.

    But the older practice of holding property in common could not die out abruptly. Even in a pastoral society the principle means of subsistence – cattle – continued to be held as common property. The members of a tribe had one object for solidarity and this was the cattle they held in common. While in a society of hunters, the prisoners of wars and other fellow travellers could either be sacrificed or absorbed into the tribe so as to increase the strength of the hunt party; the pastoral society ruled out such absorption of new members who would only be additional mouths to feed. The tribe henceforth became an endogamous clan which kept outsiders out and insiders in.

    Sa-Gotra (Marriage Within a Gotra) was the Norm Originally

    But the endogamous clan still retained some features of the tribal way of life like common ownership of property (and promiscuity). This new solidarity that emerged from the common ownership of cattle, acquired the name Gotra from its very nature. But then the Gotra which was the foundation of life and livelihood also became its limit.Sexual pairing was limited to member of a Gotra. This form of pairing was termed Sagotra. Our Present day prohibition on marriage within one Gotra is a later development.

    The shift from pairing within a Gotra to prohibition on marriage between two members having the same Gotra must be a result of a variety of factors.

    As long as promiscuity survived, society must have been matriarchal as the mother would have been the only identifiable parent. But with the rising productivity and gradual emergence of individual holding of property, this way of life had to make way for another.

    The title to the increasing hoard of wealth was held by male members of a clan due to their being the physically dominant sex. It was the efforts of the more powerful males that won for the clan the property of other clans and also enabled defense of their own property from being grabbed by other clans. With the gradual increase in productive power, the acquisition of slaves etc. The title to property also changed from being collective to individual. This change in the title to property from communal to individual must have been the result of evolution over hundreds of years. But why did this change have to prohibit the established practice of marriage within a Gotra?

    The answer perhaps lies in Human Social Evolution. Primitive promiscuity as it exists among the lower animals, also existed among humans to begin with. Later on came monogamous marriage. Simultaneously, with the rise in the productive power of human beings there came about accumulation of property initially in the form of cattle. The common ownership of this object of wealth made essential marriage only within members of the clan that held the wealth so as to prevents outsiders from claiming a share of it. But while this solidarity was based on the common ownership of wealth there still existed a commonality in the title to that wealth. And this commonality was first disturbed with the removal of promiscuous matriarchy which did take place with the passage of time. In matriarchy and its earlier form, promiscuity, there existed no bar on members of a clan (Gotra) whether they be the progeny of the same mother, the father not being an identifiable parent.

    But with the eclipse of matriarchy and the coming of individual ownership and monogamy, the father became an identifiable parent and strains of patriarchy appeared. The ethic of matriarchal society that allowed marriage between the progeny of one mother or between paternal cousins now came to be frowned upon as these progeny were now the sons and daughters of one (identifiable) father or of one grandfather. This encouraged marriage outside the clan (Gotra). The prohibition on marriage outside a Gotra was made irrelevant by individual ownership of property and the custom of inheritance whereby property passed from father to son. As the title to property was individual and private and the transfer of this title to property was also fixed, there was no reason why a female member of one Gotra should not be tied in wedlock with a male member of another Gotra. Thus while formerly marriage within a Gotra was the rule, later marriage outside a Gotra became one.

    Today it is difficult to imagine that marriage within one Gotra between members who were the progeny of one mother or were immediate maternal cousins by virtue of having the same grandmother could have once been a solemn custom. But the later rigid injunction against marriage within a Gotra itself implies that once the practice of marrying within one Gotra must have existed.

    Thus as Sa-gotra marriage was once the norm, there arose the need for its prohibition. Something that has never existed need not be prohibited. Hence the existence of prohibition on Sagotra marriage itself is one evidence of its existence sometime in the past. With the disappearance of a pastoral society and also the clan ownership of cattle (Gotra as ‘cowpen’), the emergence of monogamy and ownership of property and later urban civilization and with it a much wider social unit of human existence, the Gotra as an institution and a consideration for matchmaking vanished and marriage outside one’s Gotra became the rule. But even afterwards the custom of prohibition on marriage within a Gotra continued. Today this prohibition is still observed as a matter of ritual and custom when even the original connotation of the term Gotra is generally not known.

  128. Avatar
    பூவண்ணன் says:

    இன்றைய தேதியில் இந்தியா முழுவதும் (ஏன் உலகம் முழுவதும் )எந்த மூலைக்கு சென்றாலும் மலையாள செவிலியர்களை பார்க்கலாம்
    அது மட்டுமன்றி வீட்டில் நோயாளிகளை பார்த்து கொள்ள வேண்டும் என்றால் கேரளாவில் இருந்து படிக்காத ஆனால் செவிலியர் போல் பார்த்து கொள்ள பயிற்சி பெற்ற பெண்களை வேலை செய்ய பலர் வைத்திருப்பது பல ஆயிரக்கணக்கான வீடுகளில் நடைமுறையில் உள்ள ஒன்று
    அதே போல தானே மந்திரம் ஓதுவதில் ,பயிற்சி பெற்ற குழுவினர் பல ஊர்களில் கோவில்களில் வேலைக்கு வந்திருக்க வேண்டும்

    சிவாஜி சூத்திரன் என்பதால் பட்டம் கட்ட மறுக்கப்பட்டார்.அதற்க்கு ஒப்பு கொள்ளும் பிராமணரை பல ஊர்களில் தேடி பிடித்து அழைத்து வந்து பட்டம் சூட்டி கொண்டார்
    வேறு சாதியினரின் கையால் பட்டம் கட்டி கொண்டிருந்தால்
    ஏற்று கொண்டிருக்க பட்டிருக்க மாட்டார்
    அவரும் சில துர்நிகழ்வுகளால் பயந்து சூத்திரன் மாதிரி சடங்குகள் நடத்தவும் ஒத்து கொண்டார்.நடத்தினார்
    தோஷ நிவர்த்திக்காக பிராமணர்களுக்கு பல தானங்கள் வழங்கினார்
    பிராமணன் தான் கோவிலில் மந்திரம் ஓத வேண்டும் ,இல்லாவிட்டால் சுனாமி தூக்கி விடும் என்ற பயம் ,வதந்தி பரவிய பிறகு தேடி சென்று பிராமணர்களை அழைத்து வருவது கடினமான ஒன்றா
    பிராமண கோத்திரங்கள் ஆப்கானிஸ்தான் ,மத்திய ஆசிய நாடுகளில் இருந்து தோன்றியவை அல்லது கன்னியாகுமரியில் இருந்து தோன்றியவையாக இருக்க வேண்டும்.
    ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு இடம் பெயராமல் எப்படி கோத்திரம் பரவி கிடக்க முடியும்

  129. Avatar
    smitha says:

    Piriyan,

    U keep only harping on the caste differences in hinduisn. Why do U keep mum on the “casteism” rampant in islam or for that matter, christianity?

    U may be wary to using the word ‘caste” here. For your consolation, let us use ‘sect” here.

    U immediately quote from the Koran, but face the reality. Why are shias & sunnis killing each other often?

    Why are only some sects in islam (like shias) allowing women to pray in mosques & others do not?

    Do some introspection into your religion, piriyan.

    Kavya will not dare to criticise any other religion,save hinduism. It is understandable since he is an hardcore EVR follower. So, we cannot expect that from him.

    Atleast you can try.

    Instead of digging deep into the koran & trying to justify the “Jehads” & the “fatwas” issued by your leaders (who ironicallY quote the same Koran), do some self introspection.

    Latest, we hear of even divorces being handed out over phone & internet by your dear muslim brethen & worse, that being accorded sanction by the clergy.

    Question that, if U dare.

    If you expect a salman-rushdie like situation, then forget it.

  130. Avatar
    smitha says:

    Film sparks violent protests at US missions in Egypt, Libya; one American official dead

    Cairo: Protesters angered over a film that ridiculed Islam’s Prophet Muhammad fired gunshots and burned down the U.S. consulate in the eastern Libyan city of Benghazi, killing one American, witnesses and the State Department said. In Egypt, protesters scaled the walls of the U.S. Embassy in Cairo, tore and replaced the American flag with an Islamic banner.

    Tuesday’s attacks were the first such assaults on U.S. diplomatic facilities in either country, at a time when both Libya and Egypt are struggling to overcome the turmoil following the ouster of their longtime leaders, Moammar Gadhafi and Hosni Mubarak in uprisings last year.

    The protests in both countries were sparked by outrage over a film ridiculing Muhammad produced by an American in California and being promoted by an extreme anti-Muslim Egyptian Christian campaigner in the United States. Excerpts from the film dubbed into Arabic were posted on YouTube.

    U.S. Secretary of State Hillary Rodham Clinton confirmed that one State Department officer had been killed in the protest at the U.S. consulate in Benghazi. She strongly condemned the attack and said she had called Libyan President Mohammed el-Megarif “to coordinate additional support to protect Americans in Libya.”

    Clinton expressed concern that the protests might spread to other countries. She said the U.S. is working with “partner countries around the world to protect our personnel, our missions, and American citizens worldwide.”

    “Some have sought to justify this vicious behavior as a response to inflammatory material posted on the Internet,” Clinton said in a statement released by the State Department. “The United States deplores any intentional effort to denigrate the religious beliefs of others. Our commitment to religious tolerance goes back to the very beginning of our nation. But let me be clear: There is never any justification for violent acts of this kind.”

    In Benghazi, a large mob stormed the U.S. consulate, with gunmen firing their weapons, said Wanis al-Sharef, an Interior Ministry official in Benghazi. A witness said attackers fired automatic weapons and rocket-propelled grenades at the consulate as they clashed with Libyans hired to guard the facility.

    Outnumbered by the crowd, Libyan security forces did little to stop them, al-Sharef said.

    The crowd overwhelmed the facility and set fire to it, burning most of it and looting the contents, witnesses said.

    One American was shot to death and a second was wounded in the hand, al-Sharef said. He did not give further details.

    The violence at the consulate lasted for about three hours, but the situation has now quieted down, said another witness.

    “I heard nearly 10 explosions and all kinds of weapons. It was a terrifying day,” said the witness who refused to give his name because he feared retribution.

    Hours before the Benghazi attack, hundreds of mainly ultraconservative Islamist protesters in Egypt marched to the U.S. Embassy in downtown Cairo, gathering outside its walls and chanting against the movie and the U.S. Most of the embassy staff had left the compound earlier because of warnings of the upcoming demonstration.

    “Say it, don’t fear: Their ambassador must leave,” the crowd chanted.

    Dozens of protesters then scaled the embassy walls, and several went into the courtyard and took down the American flag from a pole. They brought it back to the crowd outside, which tried to burn it, but failing that tore it apart.

    The protesters on the wall then raised on the flagpole a black flag with a Muslim declaration of faith, “There is no god but God and Muhammad is his prophet.” The flag, similar to the banner used by al-Qaida, is commonly used by ultraconservatives around the region.

    The crowd grew throughout Tuesday evening, with thousands standing outside the embassy. Dozens of riot police lined up along the embassy walls but did not stop protesters as they continued to climb and stand on the wall – though it appeared no more went into the compound.

    The crowd chanted, “Islamic, Islamic. The right of our prophet will not die.” Some shouted, “We are all Osama,” referring to al-Qaida leader bin Laden. Young men, some in masks, sprayed graffiti on the walls. Some grumbled that Islamist President Mohammed Morsi had not spoken out about the movie.

    A group of women in black veils and robes that left only their eyes exposed chanted, “Worshippers of the Cross, leave the Prophet Muhammad alone.”

    By midnight, the crowd had dwindled. The U.S. Embassy said on its Twitter account that there will be no visa services on Wednesday because of the protests.

    A senior Egyptian security official at the embassy area said authorities allowed the protest because it was “peaceful.” When they started climbing the walls, he said he called for more troops, denying that the protesters stormed the embassy. He spoke on condition of anonymity because he was not authorized to speak to reporters.

    The Cairo embassy is in a diplomatic area in Garden City, where the British and Italian embassies are located, only a few blocks away from Tahrir Square, the center of last year’s uprising that led to the ouster of Hosni Mubarak. The U.S. Embassy is built like a fortress, with a wall several meters (yards) high. But security has been scaled back in recent months, with several roadblocks leading to the facility removed after legal court cases by residents.

    The Egyptian Foreign Ministry promised in a statement to provide the necessary security for diplomatic missions and embassies and warned that “such incidents will negatively impact the image of stability in Egypt, which will have consequences on the life of its citizens.”

    One protester, Hossam Ahmed, said he was among those who entered the embassy compound and replaced the American flag with the black one. He said the group has now removed the black flag from the pole and laid it instead on a ladder on top of the wall.

    “This is a very simple reaction to harming our prophet,” said another, bearded young protester, Abdel-Hamid Ibrahim.

    In Washington, State Department spokeswoman Victoria Nuland said Egyptian police had removed the demonstrators who entered the embassy grounds.

    Muslims find it offensive to depict Muhammad in any fashion, much less in an insulting way. The 2005 publication of 12 caricatures of the prophet Muhammad in a Danish newspaper triggered riots in many Muslim countries.

    A 14-minute trailer of the movie that sparked the protests, posted on the website YouTube in an original English version and another dubbed into Egyptian Arabic, depicts Muhammad as a fraud, a womanizer and a madman in an overtly ridiculing way, showing him having sex and calling for massacres.

    The website’s guidelines call for removing videos that include a threat of violence, but not those that only express opinions. YouTube’s practice is not to comment on specific videos.

    Sam Bacile, an American citizen who said he produced, directed and wrote the two-hour film, said he had not anticipated such a furious reaction.

    “I feel sorry for the embassy. I am mad,” Bacile said.

    Speaking from a telephone with a California number, Bacile said he is Jewish and familiar with the region. Bacile said the film was produced in English and he doesn’t know who dubbed it in Arabic. The full film has not been shown yet, he said, and he said he has declined distribution offers for now.

    “My plan is to make a series of 200 hours” about the same subject, he said.

    Morris Sadek, an Egyptian-born Christian in the U.S. known for his anti-Islam views, told The Associated Press from Washington that he was promoting the video on his website and on certain TV stations, which he did not identify.

    Both depicted the film as showing how Coptic Christians are oppressed in Egypt, though it goes well beyond that to ridicule Muhammad – a reflection of their contention that Islam as a religion is inherently oppressive.

    “The main problem is I am the first one to put on the screen someone who is (portraying) Muhammad. It makes them mad,” Bacile said. “But we have to open the door. After 9/11 everybody should be in front of the judge, even Jesus, even Muhammad.”

    For several days, Egyptian media have been reporting on the video, playing some excerpts from it and blaming Sadek for it, with ultraconservative clerics going on air to denounce it.

    Medhat Klada, a representative of Coptic Christian organizations in Europe, said Sadek’s views are not representative of expatriate Copts.

    “He is an extremist … We don’t go down this road. He has incited the people (in Egypt) against Copts,” he said, speaking from Switzerland. “We refuse any attacks on religions because of a moral position.”

    But he said he was concerned about the backlash from angry Islamists, saying their protest only promotes the movie. “They don’t know dialogue and they think that Islam will be offended from a movie.”

    Islam oru Amaidhi maargam – correct, piriyan & kavya?

    1. Avatar
      bala says:

      YOU WAIT FOR AN OPPORTUNITY, AND ANYTHING IS AN AN EXCUSE TO FLARE UP ANY LOCALISED INCIDENT HARDLY NOTICED BY ANYBODY, SPREAD IT THROUGH OUT THE WORLD BY SOCIAL NETWORK SMS, FRIDAY PRAYERS AND VENT OUT YOUR ANGER ON TRADITIONAL ENEMIES BE IT INDIAN POLICE OR AMERICANS, HINDU NON BELIEVERS(KAFIRS).AMERICA WILL REMAIN A RUMBLING SLEEPING GIANT. PROVOKE IT AT YOUR OWN PERIL. SEE CONSEQUENCES OF PEARL HARBOUR. THE MULTITUDE SCORES OF DEATH DESTRUCTION IN AFPAK.

  131. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \மேலும் சமஸ்க்ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருந்ததற்குச் சான்று இல்லை.\

    க்ஷமிக்கவும். ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய, இதற்கு மாற்றுக்கருத்து சங்கதம் தளத்தில் பதிவான வ்யாசத்தில் காணலாம். பார்க்க சுட்டி

    http://www.sangatham.com/articles/sanskrit-common-mans-language.html

    1. Avatar
      K A V Y A says:

      இன்று சமசுகிருதத்தின் நிலையென்ன? எங்கு எவரால் பேசப்படுகிறது? பள்ளிகளில் வடநாட்டில் திணிக்கிறார்கள். மதிப்பெண்கள் அதிகம் கிடைக்குமென்றெல்லாம் சொல்லி மாணாக்கர்களைச் சேர்க்கிறார்கள். என்ன இலாபம்? 40 விகித மார்க்கில் செயின்ட்ஸ் ஸ்டீவன்ஸில் இடம் கிடைக்குமென்றால் அது சமசுகிருதம் ஹானர்ஸ் வகுப்பில்தானே? மற்ற படிப்புக்களில் சேர 90 விகதத்க்குமேல் மதிப்பெண்கள் வாஙக வேண்டும்.

      அம்மொழியைப்படிப்பதால் எவருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. கோயிலகளின் இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். காலங்காலமாக வந்தால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். சல்வார் கமீசை ஏற்றுக்கொண்டார்கள். பேண்ட் சர்ட்டை ஏற்றுக்கொண்டார்கள்.. இப்படி.

      சமசுகிருதத்தின் இந்நிலைக்குக் காரணம் பார்ப்ப்னர்களே. அவர்களே இம்மொழியை மக்களிடமிருந்து விலக்கிப் பண்டிதர்கள் கற்கும் நூலக மொழியாக்கி, அல்லது தேவ பாஷையாக்கி அல்லது இரகசிய பாஷையாக்கி சமசுகிரததைக்கொன்றவர்கள்.

  132. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ க்ருஷ்ணகுமார், சான்று இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆனால் நமது மொழிகள் அனைத்திலுமே அது பின்னிப் பிணைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளேன். மிகச் சாதராண மக்கள் வெகு அனாயாசமாக சமஸ்க்ருதத்திலேயே முழுக்க முழுக்க உரையாடிக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. கர்நாடகத்தில் இது சாத்தியமாகியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். காரணம் நமது மொழிகளில் சமஸ்க்ருதம் ஏற்கனவே நன்கு பரிச்சயமானதுதான். எல்லா மொழிகளிலும் இந்த அளவுக்கு ஆளுமையுள்ள ஒரு மொழி பேச்சு வழக்கில் மிக எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். அப்படியிருக்க அது எங்கேனும் ஓரிடத்திலாவது பேச்சு வழக்கில் தொடர்ந்து இருந்து வந்திருக்க வேண்டாமா? நீங்கள் சொல்வதுபோல் மக்கள் மொழியில் இருந்த இலக்கியம் பின்னர் இதிகாசமாகியிருக்கிறது. அவ்வாறு இதிகாசம் ஆகிறபோது அனைத்து வட்டாரப் படிப்பாளிகள் தரப்பினரும் சுவைக்கும் பொருட்டுப் பொது மொழியான சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். வேத காலத்தில் சமஸ்க்ருதத்திற்கு முந்தைய தொல் சமஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இருந்திருக்கக்கூடுமா?
    இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். குப்பு சாஸ்த்திரி ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்டிற்கு (ராயப்பேட்டை நெடுஞ் சலை சென்னை 600 014)உங்களால் ஆன நிதி உதவியை வழங்கி என்னை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
    -மலர்மன்னன்

  133. Avatar
    மலர்மன்னன் says:

    நம் நாட்டிற்குப் பொதுமொழியாக இருக்க எல்லாத் தகுதிகளும் வாய்ந்தது சமஸ்க்ருதம் என்று சொன்னவர் அம்பேத்கர். காரணம் அது எல்லா மொழிகளிலும் கணிசமாக இடம் பெற்றிருப்பதோடு ஒரு குறிப்பிட்ட வட்டார மக்களுக்கு மட்டுமே உரித்தானதாக இல்லை. அதனால் எந்தவொரு வட்டார மக்களும் சமஸ்க்ருதத்தைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள வாய்ப்பின் காரணமாக மற்ற வட்டார மக்களைவிட முன்னுரிமை பெறவோ எளிதாக வாய்ப்புகள் பெறவோ இயலாது!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      பீஹாரில் சமசுகிருதம் பள்ளிகளிலும் கல்லூரிகளும் படிப்போரில் தலித்துக்களே அதிகம். பார்ப்ப்னர்கள் இல்லை. காரணம் பிழைக்கும் வழி அஃதில்லையாதலால். நான் ஒரு தலித்து ஜாதியைச்சேர்ந்த‌ பேராசிரியை சத்யமேவே ஜெயதே என்ற அமீர் கான் நடத்தும் நிகழ்ச்சியில் தனக்கும் தன்குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட தீண்டாமைச் சொல்லி அழுதார் என்றேன். அவர் ஒரு பீஹாரி. தில்லிப்பலகலைக்கழகத்தில் சமசுகிருத பேராசிரியை. பீஹாரில் பாட்னா பலகலைக்கழகத்தில் சமசுகிருத துறைத்தலைவரே ஒரு தலித்து.:-(

      இஃதொரு கான்ஸ்பிரசியாகத்தான் தோன்றுகிறது. தலித்துக்கள் எங்கு வேலை வாய்ப்புகள் அதிகமோ அதைத்தான் படிக்கவேண்டும். பார்ப்ப்னர்கள் சமசுகிருதம் படிக்கவே மாட்டார்கள். ஆங்கிலம் படித்து ஆங்கிலேயரின் மனதுக்கினியவர்களாதலால், பாரதியாரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்.

      எவர் கண்டித்தாலென்ன பிழைக்கும் வழியெதுவோ அதை நோக்கிப்போவதே வாழ்க்கை வெற்றியின் இரகசியம். தலித்துக்கள் பார்ப்ப்னர்களிடமிருந்த அதைக்கற்றுக்கொள்ள வேண்டும்.

      கருனாநிதி தமிழ் வாழ்க என்று சொல்லிக்கொண்டே தன் பேரக்குழந்தைகளுக்கு இங்கிலீசு மீடியத்தில் போடுகிறார். அன்புமணி இராமதாசு தமிழ் வாழ்க வென்று தன்மகள்களை மான்ட்போர்டு ஸ்கூலில் போடுகிறார்.

      ஆக, எல்லாரும் பிழைத்துக்கொள்கிறார்கள். தலித்துக்களே ஜல்தி..ஜல்தி…நீங்களும் பிழைத்துக்கொள்ளுங்கள்.

      1. Avatar
        bala says:

        TRUE . IN TAMILNADU THE FIRST ONE TO DISCARD VEDIC GURUGULA EDUCATION, SHUN ANCIENT HINDU CULTURE AND SHAMELESSLY EMBRACED ENGLISH MACAULAY education for opportunities is tamil brahmins. FIRST IT IS NOT PERIAR who CUT THE TUFT OF BRAHMINS, IT IS BRAHMINS THEMSELVES. it is said by senior sankracharya himself

      2. Avatar
        punaipeyaril says:

        தலித்துகள் பிழைக்க வேண்டுமானால் மூளையை தீட்டச் சொல்லுங்கள்.. அத்து மீறு அடி என்றால் திருப்பி அடிக்க முன்னேறிவன் கூலிக்கு ஆள் பிடித்து வருவான். தலித்துக்களை யாரும் இங்கு படிக்க வேண்டாம், நாகரீக வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லவில்லை. திருமாவளவனின் அரசியல் தரமே சாட்சி… ஒரு பக்கம் ஈழக்கண்ணீர் மறுபக்கம் அக்கண்ணீரால் ராஜ்பாக்‌ஷே காலை கழுவுதல் என்ற நிலை.. ஆனால், சுப்ரமணிய சாமி, சோ, போன்றோர் தடுமாறா நிலைப்பாடு….

  134. Avatar
    மலர்மன்னன் says:

    க்ருஷ்ணகுமார், குப்புஸ்வாமி சாஸ்த்ரி இன்ஸ்டிடியூட் என்று இருக்க வேண்டும். சான்று என்றால் இன்ன வட்டாரத்தில் இன்றளவும் பேச்சு வழக்கில் இருப்பதாகக் காட்டுவதேயன்றி ஆய்வு ரீதியில் கருத்துத் தெரிவிப்பது அல்ல என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?
    -மலர்மன்னன்

  135. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!
    //Piriyan, U immediately quote from the Koran, but face the reality. Why are shias & sunnis killing each other often?//

    பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் ஷியா சன்னி குண்டு வெடிப்புகள் நடக்க முக்கிய காரணம் மொசாத்தும், சிஐஏயும். ஏனெனில் தங்களின் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு மக்களை பிரிப்பது அவசியமாகிறது. நம் நாட்டில் இந்து முஸ்லிம் கலவரங்களை உண்டு பண்ணி வெள்ளையர்கள் ஆளவில்லையா? பாகிஸ்தானில் அமெரிக்க அரசு சம்பளத்தில் பல கள்ள முல்லாக்கள் வேலை செய்வதை எனது பாகிஸ்தானிய நண்பன் உறுதி செய்தான். அதிகமாக அமெரிக்கர்களை சீண்டினால் பாகிஸ்தானின் தலைமைக்கும் ஆபத்து. எனவே கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது பாகிஸ்தானிய அரசாங்கம்

    //Why are only some sects in islam (like shias) allowing women to pray in mosques & others do not?//

    பெண்கள் மசூதிக்கு வருவதை யாரும் தடை போட முடியாது. முன்பு பெண்களகவே வருவதை தவிர்த்தனர். தற்போது விளக்கி சொல்லிய வுடன் தமிழகத்தில் பல மசூதிகளில் பெண்கள் அதிகம் வருவதால் இடப் பற்றாகுறையே ஏற்படுகிறது.

    http://www.supportimrankhan.org/Islam/women-in-mosque-by-dr-zakir-naik-7.aspx

    http://seasonsali.blogspot.com/2010/11/should-muslim-women-be-allowed-to-pray.html

    இங்கு சென்று படங்களையும் ஆதாரங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

    //Instead of digging deep into the koran & trying to justify the “Jehads” & the “fatwas” issued by your leaders (who ironicallY quote the same Koran), do some self introspection.//

    எத்தனை முல்லாக்கள் தவறான ஃபத்வாக்கள் கொடுத்தாலும் எங்களிடம் குர்ஆன் இருப்பதால் அதை கொண்டு சரி செய்து கொள்வோம். விளங்குவதற்கு மிக எளிதானது குர்ஆன்.

    1. Avatar
      punaipeyaril says:

      சு.பி புள்ளி வச்சு புள்ளி வச்சு : எழுதிறுகிலே நீங்க தான் புள்ளி ராஜாவா…?

  136. Avatar
    Indian says:

    Thanks பூவண்ணன். You have proved my point that you are nothing but a hard core EVR ” Bhakthan” in your diatribe against Hindus/Parpans. It will be a waste of time to answer to people like you, who with head stuck in sand with brain (!) and mind pickled in hatred for anything Hindu or Brahmin. Good luck and carry on if it makes you feel better about yourself.

    1. Avatar
      Kavya says:

      The spelling you used to refer to Paarppnars s objectionable and condmenable. I, as a matter of principle, use the word Paarppnars. U dont need to have such scruples; hence, u can freely write Brahmins.

      I also object to making Parpnars synonymous with Hindu religion. They r one among the many and shd be treated so, in the larger interests of the religion. If not, the charge against the religion that it favours them against all others stands noisily :-)

    2. Avatar
      பூவண்ணன் says:

      அன்பு தோழரே
      பெரியாரின் பக்தன் என்று கூறப்படுவது பெருமை தான்
      அவரால் அதிகம் பலனடைந்தது ஹிந்து மதமும்,பிராமணர்களும் தான்
      இன்று இஸ்லாமை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு,கிண்டல் செய்யும்,பழிக்கும் நிலைக்கு ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பேசும் நிலையை உருவாக்கியது அம்பேத்கரும் பெரியாரும் தான்
      அவர்கள் அடித்த அடியில் தான் தன பழமைவாதங்களை,பிற்போக்குத்தனங்களை,பெண்களை விலங்குகளை,அடிமைகளை விட கேவலமாக நடத்துவதை ஹிந்து மதம் விட்டு விட்டது
      அவருக்கு முன்னால் லட்சக்கணக்கில் நாடார்கள்,வன்னியர்கள்,கள்ளர்கள்,மீனவர்கள்,உடையார்கள் என்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் கிருத்துவத்திற்கு மாறினர்
      அவர்கள் அனைவருக்கும் சுயமரியாதையை உருவாக்கியதால்,எதிர்க்கும் சக்தியை தந்ததால் தான் மத மாற்றங்கள் நின்றன
      இங்கு வந்த மிச்சிஒனரிகள் அளவிற்கு வட மாநிலங்களில் இருந்திருந்தால் அவை முற்றிலுமாக மாறியிருக்கும்.பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நாராயண குரு அவர்களின் பிராமணர்களை ஒதுக்கிய ஹிந்து மத வழிப்பாடுகள் வந்ததால் கூட பாதி தான் மத மாற்றம் இல்லாமல் தப்பித்து
      பெரியாரால் தான் இங்கு மத மாற்றங்கள் தடுக்கப்பட்டன.கடவுள் இல்லை, இல்லவே இல்லை
      கடவுளை நம்புபவன் முட்டாள் எனபது தான் மத மாற்றங்களை தடுத்தது

      இங்கிருக்கும் பிராமணர்களையும் மற்ற மாநிலங்களில் (பக்கத்து மாநிலங்கள் உட்பட)உள்ளவர்களையும் ஒப்பிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பெரியாரால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் புரியும்
      கடல் தாண்டினால் ஒதுக்குதல்,நன்கு படித்தவர்கள் கூட பெண்களை பதினெட்டு வயதில்,அதற்கு முன் திருமணம் செய்தல்,பெண்களை,விதவைகளை மிகவும் இழிவாக நடத்துதல் ,சாதி கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடித்தல் என்று 1930 லேயே பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
      இந்தியாவிலேயே சிறந்து விளங்குபவர்கள் தமிழக பிராமணர்கள் தான்.பிராமண பெண்களில் நல்ல பதவியில்,கலைகளில்,எந்த துறை எடுத்து கொண்டாலும் சிறந்து விளங்குபவர்களில் பெரும்பான்மையானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்
      பெரியாரின் சாதி மறுப்பு திருமணங்களை பெருமளவில் ஆதரிப்பவர்கள் அவர்கள் தான்

  137. Avatar
    punaipeyaril says:

    innocence of muslims – படத்தை தொடர்ந்து அமெரிக்க கான்சுலேட்டுகள் தாக்கப்படுகின்றன். யூ ட்யூபில் இருக்கிறது இப்படம். முஸ்லீம்கள் பிற மதங்களை இழிவாக விமர்சிக்க தொடங்கி இப்போது அதே புத்தி பிறருக்கும் வந்தது சரியா…? நாம் எல்லோரும் ஒவ்வொரு மதத்தை மதித்து நடக்க முடியாதா…

  138. Avatar
    paandiyan says:

    முஸ்லிம்களை பற்றி ஒரு கட்டுரை வந்தால இஸ்லாம் வேறு முஸ்லிம் வேறு என்று ஒரு சப்பை கட்டு கட்டி , சம்பந்தம் இல்லமால் ஹிந்துமதம் , பிராமின் என்று இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது. ஒருவர பல பல பெயர்களில் ஆதாரம் ஏதும் இல்லாமல் கருது போடுவது இதுதான் இப்போது நான் திண்ணையில் பார்ப்பது . இது பல இணையதளங்களில் நடந்த விஷயம்தான் . என்ன அந்த மாதரி இணயதளங்கள்க்கு இப்போது அட்வேர்டிசெமென்ட் கொட்டுவதால் இப்போது பெரிய முக்கியத்துவம் கொடுப்பது இல்லை இந்த மாதரி கற்பனை கருத்துகளை. நிற்க —விவதாம் தலைப்பு இப்போது எல்லோருக்கும் (வெற்றிதான் — முஸ்லிம்களுக்கு இங்கு..) மறந்து இருக்கும். இதுதான் தலைப்பு — பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்!!!!!!

  139. Avatar
    Mathi says:

    குரானை படித்துப்பாருங்கள், அதில் பிற மதங்களை முகமது எப்படி திட்டுகிறார் என்று தெரியும். ஆனால், இவர்களை விமர்சித்தால் இவ்வளவு வன்முறை.

    நமது ஊரில் இருக்கும் ஜிகாதிகளும் இதையே பின்பற்றுகிறார்கள். எந்த ஊரில் இஸ்லாமிய பிரச்சாரம் நடந்தாலும், பிற மதத்தை விமர்சிப்பதையே பிழைப்பாக வைத்துக்கொள்ளுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை இஸ்லாமியர்கள் கூட விமர்சித்தாலோ, எதிர்த்து பேசினாலோ கடுமையான வன்முறையே பதிலாக கிடைக்கிறது.

    என்னதான் அமைதி மார்க்கமோ?

  140. Avatar
    smitha says:

    Piriyan,

    எத்தனை முல்லாக்கள் தவறான ஃபத்வாக்கள் கொடுத்தாலும்

    எங்களிடம் குர்ஆன் இருப்பதால் அதை கொண்டு சரி செய்து கொள்வோம். விளங்குவதற்கு மிக எளிதானது குர்ஆன். – When is the question? So, far U have not.

    One hopes U will, atleast in future.

  141. Avatar
    smitha says:

    Piriyan,

    பெண்கள் மசூதிக்கு வருவதை யாரும் தடை போட முடியாது. முன்பு பெண்களகவே வருவதை தவிர்த்தனர். தற்போது விளக்கி சொல்லிய வுடன் தமிழகத்தில் பல மசூதிகளில் பெண்கள் அதிகம் வருவதால் இடப் பற்றாகுறையே ஏற்படுகிறது.

    Is it? Read this

    Storm over Indian women’s mosque

    By Soutik Biswas
    BBC News Online correspondent in Pudukkottai, Tamil Nadu

    Daud Sharifa is meeting a group of distressed Muslim women – business as usual at her red-brick office in sleepy Pudukkottai, in India’s southern state of Tamil Nadu.

    The shy women tell in low voices stories of how they have been divorced, abandoned and mistreated by their husbands.

    Sharifa, a 39-year-old single woman who runs a 3,000-strong network to help Muslim women, gives advice.

    The audience listens to her impassioned plea for women to build their own place of worship and be involved in community rulings on marriage, divorce, domestic abuse and child custody.

    “Would having a place of worship of your own help? Would a jamat [community elders at mosques who adjudicate on family matters] of women be more sympathetic to your cause?” asks Sharifa.

    The women nod in unison.

    Rising complaints

    Sharifa, an unlikely feminist in India’s traditionally male-dominated southern heartland, has caused a storm by leading the movement for the women’s mosque.

    “We want our space to meet, talk, discuss our grievances and pray. We want to have a say in community rulings,” Sharifa told BBC News Online.

    In India, Muslim women mostly pray in buildings adjoining mosques; in some big mosques there are separate prayer enclosures.

    “The majority of mosques do not allow women to pray,” says Badar Sayed, a Chennai-based lawyer and chairwoman of Tamil Nadu’s Waqf Board.

    Waqf boards are elected bodies of Muslim theologians.

    Ms Sayed says it is extremely important for women to be a part of a mosque congregation.

    “Sometimes the sermons relate to women. Women should be present, listening in and finding out what they are all about,” she says.

    Sharifa says the idea of a women’s mosque was motivated by the rising number of complaints from local Muslim women against what they see as partisan rulings by the jamat.

    Last year, she received over 100 petitions from women against jamat rulings in matters of dowry, divorce and domestic violence.

    “The mosque will be a symbol of our awakening. Men are welcome to come and pray, but women will manage the affairs and be on its jamat,” says Sharifa.

    Badar Sayed agrees that the “male-dominated jamats” are often biased in rulings that affect women.

    “Women are oppressed. The jamat does rule against them most of the time,” she says.

    “Men are sitting in judgment. Jamats should accept women into their fold.”

    Compromise

    But Mohammed Sikkandar, secretary of Chennai’s Purasawalkam mosque, says the jamats are “by and large fair”.

    “In matters of family dispute, we take our decision after talking to the affected women. Nothing is hastily decided,” he says.

    Mr Sikkandar says that of the 40 family dispute cases that came to his mosque in the past year, all but five were settled with a compromise.

    He says jamats have even given away hefty compensation packages to women, citing the example of a 400,000-rupee ($8,800) award his jamat paid to a woman divorcing her abusive husband.

    But this does not deter Sharifa, who says that there “might be a few good men, and a few good jamats”, but the system is stacked against women.

    She has toured villages and towns, collecting 9,000 rupees ($200) towards building the mosque. She will need $55,000.

    Rashida Begum, a 21-year-old teacher and divorcee, is one of the Pudukkottai women supporting her.

    “We are confined to our homes. Our thoughts are pent up. Our mosque will help us to get together and vent our feelings,” Ms Begum says.

    Rajitha Begum, 37, whose husband abandoned her, says a mosque would help women who have “nobody to go to”.

    “You don’t realise how helpless women are. We have no fallback, no opportunities to decide our fates. Our mosque will show the way,” she says.

    The point we are all making here to all islamists is this – try to be flexible & tolerant to other religions & set your own house in order, instead of trying to defend your actions.

    Your intolerant & rigid attitude is the reason for all the sufferings & killings.

    U may shout from the roof tops that the Koran does not say this, that etc., – but is it followed? Is it interpreted in the way it should be?

    That should be the question U must try to find answers to instead of indulging in senseless killings.

  142. Avatar
    smitha says:

    Piriyan,

    There are exceptions, however. Read this

    Mixing in Mosques: An Influence of Neighborhood Norms
    Nov 29th, 2011 by Colin

    A few days prior to my departure from India in August, I ventured south from Hyderabad to the old French colony of Puducherry (Pondicherry), situated on the Bay of Bengal.

    I had a few minutes before my overnight bus journey back to Hyderabad and I decided to take a quick tour around the neighborhood to get a flavor of the area.

    Upon turning the corner of an old Hindu temple and noticing posters of Hindu gods transitioning to signs in Urdu and other objects marking the Muslim section of the neighborhood, I came across a typical 3-story white and green mosque.

    It was time for dhuhr prayer as the sun was high, and many local Muslims were continuously flowing in and out of the mosque.

    But something was drastically different.

    I was immediately struck by the fact that both men and women were entering and exiting the mosque.

    In Tamil Nadu, like most other places in India, temples, mosques, gurdwaras, and churches can provide insight into local cultural patterns, often reflecting the mores of the area.

    Any generalization about cultural and religious patterns in South Asia is dubious at best, but it is safe to say that in the overwhelming majority of small, local South Asian mosques, women do not attend.

    Aside from prepubescent girls accompanying their fathers, uncles, cousins, and grandfathers, most mosques do not even have a dedicated prayer space for women, with some refusing female entry at all times.

    South Asia stands out compared to other world regions in terms of women’s agency, which is much more nuanced than the overarching assessment of “gender oppression” often posited by first-time visitors from the west.

    Yet three of the top four worst places for women in the world are there (Afghanistan, Pakistan, and India). Many South Asian Muslims, accustomed to strict gender norms, actually believe that certain cultural practices related to gender are religious in origin.

    Similar beliefs around women in the public space can be seen to varying degrees within most religious communities within India.

    Despite the gender discrimination that dominates much of South Asia, the Puducherry mosque did not reflect the “standard” South Asian mosque etiquette that precludes women from praying in a public space.

    Since Puducherry lies within Tamil Nadu, one of the more educated, economically stable, and socially progressive states in India, I shouldn’t have been surprised that this Tamil mosque operates differently from that of most others in South Asia.

    I saw little boys and girls sitting next to each other, learning the Qur’an together—a distinctly unfamiliar site in South Asia.

    Aside from entering the men’s prayer area, women moved freely within the mosque, and seemed to carry themselves with the same degree of comfort and confidence as any other public space.

    The list of historical examples of gender equity within Islam is long and can be best traced back to the life and time of the Prophet Muhammad.

    The Prophet’s first wife, Khadijah, was a successful businesswoman, many women owned property, and both sexes prayed together in congregation.

    Good or bad, it is the cultural norms of areas where Muslims live that have shaped much of how Islam manifests itself around the world.

    And so even in conservative South Asia, there are pockets where the Islamic principle of gender equity is reinforced by the cultural norms of the area.

    The last para reinforces your point that Islam promotes gender equality.

    But the ground reality is different.

    That is the point we are making.

  143. Avatar
    punaipeyaril says:

    THOSE PEOPLE WHO SUPPORTED THAT SO CALLED GREAT ARTIST HUSSAINI FOR WHAT HE DID WITH THE HINDU GOD , SHOULD SUPPORT NOW THIS “INNOCENCE OF MUSLIMS” FILM MAKER CALLING HIM ALSO AS A GREAT ARTIST. AND CONDEMN THE ATTACKING OF USA CONSULTATES. LONG LIVE AMERICA

  144. Avatar
    Indian says:

    punaipeyaril, well said. Now, you can see the PEACEFUL RELIGION,in action, in full glory, against USA in the middle east.Burning, killing etc are Islam’s peaceful ways. Sp will of course deny Islam has anything to do with this and will quote ad nauseam verses from Koran. Pity they have not heard about something called ” Peaceful protests”.For that matter, I cannot recall ever seeing a peaceful protest by any Islamic group.
    Wait and see,expect to be bombarded with stories of peaceful protests by Muslims!!

  145. Avatar
    smitha says:

    Piriyan,

    We have been seeing in the last few days, how Muslims (of all places, chennai)have indulged in protests against an english film whom nobody has evene heard of. The best (or the worst) part is that muslim college students who took part in the protest said that they had not even seen the clips on internet.

    Today, we see that more such protests are planned.

    The muslim leaders have even justified the action.They say that the violence was spontaneous & not planned.

    I was all along thinking that the muslims (atleast in tamilnadu)were comparatively “saadhvk” compared to their brethen in other states.

    I realise I am terribly wrong.

    Chennai is the only place in India where a prayer meeting was held in a dargah in mount road for Osama Bin Laden after his demise.

    Islam oru amidhi maargam.

    As usual we cannot expect an reply from kavya on this.

    1. Avatar
      bala says:

      they cannot touch the ultra racist pastor or the lunatic egyption coptic christian or the american jew responsible for the film third rate largely ignored with contempt it deserved brought to world wide attention thanks to muslin zealots. now who is responsible for the highlight of shameful depiction of PROPHET MUHAMMAD, peace be upon him

  146. Avatar
    பூவண்ணன் says:

    உலகத்துல இருக்குற எல்லா தீவிரவாதிகளில் சோப்லாங்கிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான்
    சீக்கிய தீவிரவாதிகள் பிரதமர்,முதல்வர்,ராணுவ தளபதி,பல மந்திரிகள்,காவல் துறை அதிகாரிகள் என்று அவர்களுக்கு எதிராக இருந்த பலரை கொன்றார்கள்
    தமிழ் தீவிரவாதிகள் இலங்கை பிரதமர்,இந்திய பிரதமர் ,தலைவர்கள்,மந்திரிகள்,ராணுவ அதிகாரிகள் என்று அவர்கள் எதிராக நினைத்தே பலரை கொன்றார்கள்

    ஹிந்து தீவிரவாதிகள் காந்தியையே தூக்கினார்கள்,வெள்ளைய அதிகாரிகளையும் கொன்றார்கள்
    இஸ்லாமிய சொப்லாங்கிகள் பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவரையும் தொட மாட்டார்கள்.
    புஷ் முதல் ருஷ்டி வரை கோல்ப் ஆடி கொண்டும் பல கல்யாணம் செய்து கொண்டும் இருப்பார்கள்
    அவர்களால் முடிந்தது அப்பாவி மக்கள் மற்றும் கார்டூன் வரைந்தவன்,பள்ளி கூட ஆசிரியன் ,பத்திரிக்கையாளன்,கார்டூனை பார்த்தவன் என்று எப்பை சாப்பைகளின் மீது வீரம் காட்டுவார்கள்

    அவர்களை நேரடியாக எதிர்த்தவன்,பல லட்சம் பேரை கொலை செய்தவனை ஒன்றும் செய்ய மாட்டார்கள்,செய்யவும் சக்தி கிடையாது
    சம்பந்தம் இல்லாத இடத்தில குண்டு வைப்பது ,தொடர்பே இல்லாத நாட்டில்,இடத்தில் கலவரம் செய்வது ,ஏமாந்தவன் யாரவது மாட்டினால் அவன் கையை வெட்டுவது
    இந்த சினிமா விஷயத்திலும் இதே தான் நடக்கிறது

    இன்னொரு அமரிக்க தூதரகத்தின் மீது கை வைத்தால் அமெரிக்கா இன்னும் சில இஸ்லாமிய நாடுகளின் மீது போர் தொடுத்து இன்னும் சில லட்சம் பேரை கொல்லும்.அது தான் நடக்க போகிறது

    1. Avatar
      சான்றோன் says:

      ஆனாலும் உங்களுக்கு ஓவர் குசும்பு பூவண்ணன்…..பாத்து …உங்களையும் தூக்கீறப்போறாங்க….. நாமும் அதே மாதிரி ஆளுங்க தானே?

    2. Avatar
      bala says:

      failure of kilafat movement A BRITISH WESTERN ACTION IN WINDING UP OTTOMAN EMPIRE, POOR HINDUS IN MAPLA DISTRICT IN kERALA HAS TO PAY DEARLY. LIKE WISE POOR TAMIL LADY CONSTABLE IN cHENNAI WHO HAS NEVER HEARD OF THE FILM WAS CRITICALLY INJURED AFTER FRIDAY PRAYERS. I HOPE SPINSTERS AWAIT FOR THE SOULS OF THESE COLLEGE STUDENTS. WHAT LOGIC

  147. Avatar
    suvanappiriyan says:

    //Piriyan,
    We have been seeing in the last few days, how Muslims (of all places, chennai)have indulged in protests against an english film whom nobody has evene heard of. The best (or the worst) part is that muslim college students who took part in the protest said that they had not even seen the clips on internet.//

    இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அமைதியான முறையில் நம் எதிர்ப்பை ஒரு போராட்டமாக ஆள்வோருக்கு காட்டலாம். ஆனால் இதை சாக்காக வைத்து சில சமூக விரோதிகள் கூட்டத்தில் புகுந்து இது போன்ற காலித் தனங்கள் செய்வதை நானும் வெறுக்கிறேன். இஸ்லாமும் வெறுக்கிறது.

  148. Avatar
    punaipeyaril says:

    அது என்ன சில சமூக விரோதிகள்…? முஸ்லீம் இனம் சேர்ந்த சில சமூக விரோதிகள் என்று போடுங்கள்… இப்போ “ஜார்ஜ்” வ்ந்தாச்சு… அவர் யார் என்று தெரியும் என்று நினைக்கிறேன்.. அது தான் நேற்றே இமாம் சொல்லிட்டாரு, “போராட்டம் வேண்டியதில்லை “ என்று. தடி எடுத்தவன் தடியால் சாவான். மிரட்டி எதுவும் இங்கு செய்ய முடியாது. காவல்துறை இந்த மாதிரி ஆட்களை என்கவுண்டர் செய்ய வேண்டும். பயந்து பலநாள் வாழ்வதை விட வீரனாய் சில நாள் வாழலாம். ஒரு நாட்டில் ஒருவனின் கலைச் சுதந்திரத்தில் – அது தானுங்க புத்தர் சிலை இடித்ததைப் போல- ஒரு நாடு எப்படி பொறுப்பாக முடியும். அப்படி முடியுமெனில், முதலில் இந்து கடவுள்களை கலை எனும் பெயரில் கேவலமாக சித்தரித்தவனுக்கு குடியுரிமை தந்த அந்த முஸ்லீம் நாடு மேல் தான் இவர்கள் தாக்க வேண்டும், குரான் பிற மதத்தை புண்படுத்தக்கூடாதென்று புள்ளி ராஜாக்கள் சொல்வது உண்மையெனில் அதைச் செய்யுங்கள் முதலில். அமெரிக்க தூதரகத்திற்கு அரசு முழுப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த தாக்குதலை கண்டித்து அனைவரும் எழுத வேண்டும்.

  149. Avatar
    smitha says:

    Fearing backlash over anti-Islam film, J&K govt blocks internet, imposes curfew

    Jammu and Kashmir Government has directed internet and telecom service providers to take all measures, including blocking ‘Youtube’ and Facebook’ if needed, to ensure that a controversial film deemed offensive to Islam is not accessible to subscribers in the state.

    The order to this effect was issued by the state Home Department, invoking the powers conferred under section 5(2) of the Indian Telegraph Act 1885.

    “In the interest of public safety and for maintaining public order, the government directed all licensed Telecom Service Providers and Internet Service Providers to make arrangements to ensure that their subscribers in Jammu and Kashmir should not be able to download or upload the contents” with regard to the video, the order says.

    “If necessary, due to technical reasons, the Fully Qualified Domain Names shall be blocked viz http://www.youtube.com, http://www.facebook.com etc,” the order reads.

    As a precautionary measure, all internet services in the state have been blocked since midnight.

    Besides this, educational institutes in the valley are closed today in view of protests that could gain momentum over the controversial film.

    Curfew like restrictions have been imposed in old town of Srinagar.

    ISLAM ORU AMAIDHI MARGAM

  150. Avatar
    smitha says:

    Kolkata: 20,000 people have gathered outside the American consulate in Kolkata to demonstrate against the anti-Islam film that has triggered protests across the world.

    The American Consulate has closed.

    More details are awaited.

    Islam oru amaidhi maargam

    1. Avatar
      Kavya says:

      Demonstration is a fine democratic exercise given to ppl.

      Kinds of demonstration, like black flag waving, raising slogans, taking street procession with banners and placards, or silent procession as the Muslim in Germany took last week and similar kinds, and recently, a curious kind has become popular in India which was demonstrated by the ppl of MP against raising Omkeshwar dam – they stood neck deep in the River to show their protest – which kind was imitated in KKNP protest at Idinthakarai, where the agitators stood neck deep in sea – and also, they buried themselves neck-deep in the beach sand, the day b4 y’day, VAIKO did the same in Idinthakarai – he buried himself next deep in the sand – all these are most welcome in a democracy.

      PPl shd be encouraged to follow such methods to show their disagreement/anger/unhappiness with a view to make authorities/powers/or the general public to know their minds. Adikka adikka ammiyum nakarum.

      The founder of their religion has been insulted. The Muslims all over the world feel the pain. They shd demonstrate their pain to us, all of us. Otherwise, how to know what they feel? Sumita can tell us how.

      In Madurai last Monday, in Tuticorin and in Tveli b4 that, Muslims had demonstrated in a peaceful way. Only in Chennai, the police bungled; and rightfully, the govt punished the Police chief for that, by transferring him to a sinecure – there cant be a more excruciating pain that to be posted in a sinecure.

      Sumitha, b democratic, and allow others to b so.

  151. Avatar
    smitha says:

    Kavya,

    No one is saying that the protests are wrong.

    But to say that the violence happened only because poolice bungled is foolhardy. The muslims indulged in violence without provocation.

    Then suddenly they stopped, did namaz in the middle of the road & started again.

    Do you know how many people were affected because of the traffic jam on that day that too in mount road which is a main thorogh fare? 2 ambulances could not even get to the hospital.

    If similar protests had been done by the hindus, then U secularists would have raised a hue & cry.

    Face the truth – U guys just do not have the guts to criticise any other religion but hinduism. We have seen that enough in your comments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *