தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள்
This entry is part 19 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நான் வாழும்
உலகத்துக்குள்
மழையாய் நீ….

நீ வாழும்
உலகத்துக்குள்
மழலையாய் நான்….

வளர்ச்சி அற்று
போனாலும்
மகிழ்ச்சி உற்று
போவேன் உன்னால்..

கள்ளம் இல்லை
கபடம் இல்லை

என் பாச முல்லை
என் செல்ல பிள்ளை

உன்னை தவிர
எனக்கு யாருமில்லை

என்னை விட்டு
நீ பிரிந்தால்
உடலைவிட்டு
உயிர் பிரியும்….

உன்னை விட்டு
நான் பிரிந்தால்
உயிரை விட்டு
உடல் பிரியும்….

நிலவோடு பேசுகையில்
உன்னை கொஞ்சிய ஞாபகம்…
உன்னோடு பேசுகையில்
நிலவுக்கு கொஞ்சம் கோபம் …

தேய் பிறைலும் தேயாத
என் பால் நிலவே…
தேடினாலும் கிடைக்காத
உன் போல் உறவே…

என் தேவதை
நீயே…நீயே
என் தேவையும்
நீயே…நீயே

தெய்வம் தந்த
திருமகளே…
எனைத்தேடி வந்த
தேவதைமகளே..

இப்படிக்கு

ச. மணி ராமலிங்கம்

Series Navigationவாசிக்கஇயலாதவர்களுக்குபேசித்தீர்த்தல்

4 Comments

  1. Avatar GovindGocha

    இவ்வளவு லயிப்பு உள்ள நீங்கள் நிச்சயம், IAM SAM படம் பார்க்க வேண்டும். அது original rain…

    • Avatar mani

      i knew that… but i got feel from this tamil version.. already i have plan to visit I AM SAM soon… anyway tx for comments…

  2. Avatar charusthri

    Nalla layippu nalla kavidhainalla ennangal naanum indha padam paarthenREview ezhudhiyaachu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *