This entry is part 33 of 35 in the series 29 ஜூலை 2012

சிறகுகளில் கூடுகட்டி
காத்திருந்த சிலந்தி
உணர்வுகளை உணவாக்கிய
பொழுதொன்றில்,
யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி
ஒதுங்க விளைந்த மனது,

நிராகரிப்பின் வலியொன்றில்
மலரெடுத்து சூடி வாழ்வியலின்
ஆரோகனிப்பை _அந்த
நாற்றத்துள் மறைத்துக்கொண்டு
இயங்கத்தொடங்கிற்று.

நிபந்தனைகளையும்
நிர்ப்பந்தங்களையும்
சபிப்புகளையும்
சம்பிரதாயங்களையும்
சடங்காகவே கொண்டு,
கவனிக்கப்படுதல் மீதொரு
கவனம்வைத்து
தன்னிலை மறந்து
அவதானிக்க தொடங்கியது……………….

பின் ,
தோற்றுப்போன பொழுதொன்றில்
ஆழிசூழ் ஆழத்தில்
முத்துக்களுக்கு பக்கத்தில்
பேச்சடங்கி கிடந்தது
கலைஞனின் குரல்.

ஆக்கம்:நேற்கொழு தாசன்

வல்வை
Series Navigationசொல்லும் சொல்லு செல்வதெங்கே…?வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்